Tuesday, May 31, 2011

ரணில் என்ன டில்லியின் அணிலா?

அணில் அன்றைய காலத்தில் ராமர் பெருமானுகாக, இந்திய--இலங்கை பாலம் போட, மணல் துகள்களை முதுகில் எடுத்துச் சென்றதாம். இது ராமாயணக் கதை. இந்தியாவை ஆளும் வட இந்தியர்களுக்கும், தமிழ் ஆன்மீகப் பெரு மக்களுக்கும், நம்பிக்கை புராணம். அதனால் " சிங்களம்" அத்தகைய கதை தனது நாளுக்கு பயன்படும் என்றால் பயன்படுத்தத்தானே செய்யும்? ரணில் விக்கிரமசிங்கே முன்னாள் இலங்கலையின் பிரதமர். இந்நாள் இலங்கலையின் எதிர்க் கட்சித் தலைவர். அவர் "இனவெரிப்போரை நடத்திய" மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து டேஹ்ர்தலில் களம் கண்டவர். ஆனாலும் மகிந்தாவுடன் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் " சிங்களம்" வெல்ல வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.


அந்த ரணில் இந்தியா வந்துள்ளார். டில்லி செல்வடஹ்ர்கு முன்பு செனைஒயில் இரவு வந்து இறங்குகிறார். விமான நிலையத்திலேயே நேர்காணல் கொடுக்கிறார். அதற்கான ஆவசியம் யாருக்கும் தெரியாது. அதில் " ராஜபக்சேவை போர் குற்றவாலி என கூண்டிலேற்ற முடியாது" என்று " கொளுத்திப் போட்டுவிட்டு" போய்விடுகிறார் அது பற்றி எரியும் என்பது அவரது எண்ணம். " இலங்கை தமிழர்களது மறு குடியமற்ப்புக்கு, இந்தியா உதவப் போகிறது" என்ற மாயையும் மீண்டும் அரங்கேற்றினார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்றார். டில்லி செல்கிறேன் என்றார். ரணிளது நடவடிக்கைகள், இலங்கையில் அவரது நடவடிக்கைகளைக் காட்டிலும் மோசமா ஒன்றாக தெரிகிறது. இலங்கையில் அவர் கட்டாயமாக மகிந்தா அரசாங்கத்திற்கு எதிராக பேசவேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்து அங்கே கிடைக்கும். தவிர அங்கே ராஜபக்சே அணிலது நண்பர் பொன்சேகாவை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்.


அதனால் ரணில் இந்திய அரசு பேசச் சொன்னதை எல்லாம் இலங்கையில் பேச முடியுமோ என்னவோ, இந்தியாவில் பேசலாம் என்பதால்தானோ என்னவோ, சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பேசியிருக்கிறார். இன்று அதிகாலை டில்லி செல்பவர் என் இரவிலேயே விமான நிலையத்தில் ஊடகவியலாலட்களிடம் பேச வேண்டும்? அதுவும் தமிழ் மக்கள் "ராஜபக்சேவிற்கு போர் குற்ற விசாரணை நடக்கப்போகிறது" என்று நம்பிக்க் கொடிருக்கும் வேளையில் பேச வேண்டும்? அந்தப் பேச்சில் என் " தமிழ்மக்களின் அந்த நம்பிக்கையை உடைக்கும் ரீதியில் பேச வேண்டும்? ஏதோ சட்ட விளக்கத்தை அளிப்பதுபோல, " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்" ராஜபக்சேவை கூடிலேற்ற முடியாது ஏறு என் சொல்லவேண்டும்? அதுவும் ஒரு " அனைத்து நாட்டு விதியை " சுட்டிக் காட்டி என் சொல்லவேண்டும்?

அனைத்து நாட்டு நீதிமனரத்திர்கான" அனைத்து நாட்டு ஒப்பந்தத்தில் இலங்கை கைஎழுத்துய் போடவில்லை என்பது, இப்போது சொல்வதால், ராஜபக்சேவை காப்பாற்றுகிறோம் என்பது ரணிலுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் தனது எதிரி ராஜபக்சேவை காப்பாற்ற என் அப்படி பேச வேண்டும்? இவாறு ராஜபக்சேவை காப்பாற்றும் நோக்கம் இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் இந்திய அரசுதான் ரணிலுக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதன்மூலம் இந்திய அரசு, தமிழகச் சூழலில் எழும்பியிருக்கும் ஒரு நம்பிக்கையான " ராஜபக்சே கூடிலேற்றப் படுவார்? எண்பதை சிதைப்பதற்கு உதவும் என்று மத்திய அரசு நினைக்கலாம். அதன்மூலம் அத்தகைய முழக்கத்தை எழுப்பிய செல்வி.ஜெயலலிதாவை திசை திருப்பி அவர் கேட்ட, " அனைத்து நாட்டு நீதிவிசாரணை மூலம் மத்திய அரசு தன்னை நிரூபிக்க வேண்டும்" என்ற முழக்கத்திளிருந்து தமிழக முதல்வரை திசை திருப்பிவிடலாம்.


மேற்கண்ட முயற்சிகள் அணிலை அடையாளம் காட்டிவிட்டன. டில்லிக்கு அணில் எப்போதுமே விசுவாசமான ஆள் என்பதில் சந்தேகமில்லை. டில்லியில் இரண்டு நாள் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் செல்வி.ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுக்க அழைக்கப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. அணில் கூறிய, " அனைத்து நாச்ட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தந்த்தில் இலக்கை கையெழுத்துப் போடவில்லைதான். கையழுத்துப் போடாத ஒரு நாடு தான் அந்த குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தானகவே ஒரு நீதிவிசாரனைக்கும் வரலாம். இலங்கை அப்படி வராது என்பது அறிந்த செய்தி. அலல்து ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளேயே அந்த குற்றங்களுக்கான விசாரனையி நடத்துகிறேன் என்று கூறலாம். அதை இலங்கை கூறிவிட்டது. அதை உலக நாடுகள் நம்புவதை இல்லை.



ஐ.சீ.சீ. என்ற " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்துப் போடவில்லை. ஆனால் " ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை" அது கையெழுத்துப் போட்டுள்ளது. அதை " ஐ.சீ.எ. சீ." என்ற அந்த ஒப்பந்தத்தில் கையழுத்துப் போட்ட இலங்கை அதிலேயே குற்றம் சாட்டப் படலாம். அதுபோல, ஐ.சீ.எக.சோ.க.ரை. என்ற, " அனைத்து நாட்டு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்" என்ற ஒப்பந்த்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அதைவைத்து, " இனச் சுத்திகரிப்பு" செய்யும் அரசை குற்றம் சாட்டலாம். பவுத்த பண்பாடுகளை, சைவ பண்பாடுகளின் மீது திணிப்பதை குற்றம் சாட்டலாம்.ஆகவே ஒன்றில் தப்பினாலும், இன்னொன்றில் பிடிபடலாம். தவிர, ஐ.சீ. சீ.பொ ரை" என்ற " அனைத்து நாட்டு குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், " சுய நிர்ணய உரிமை பற்றி" பேசுகிறது. அதுவே " தமழர் உரிமைகளை மீட்டெடுக்க உதவ" முடியும்.


அதேசமயம் தமிழக முதல்வர் ஜெயலலிதா " இன அழிப்பில் ஈடுபட்டதாக மத்திய அரசு மீது ஒரு சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதை வலுப்பெறச் செய்கிற பாணியில் மத்திய அரசு செயல்படக் கூடாது " என்று கூறியுள்ளார். " ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு கூண்டிலேற்ற மத்திய அரசு முயலவேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்காக " பொருளாதார தடைகளையும் கூட இலங்கை மீது விதிக்கலாம்" என்றும் கூறியுள்ளார். இவை எல்லாமே, மேற்கண்ட இலங்கை கைஎழுதிட்டுள்ள , ஒப்பந்தங்களின் மூலமாக செய்யமுடியும். ஆகவே " குற்றம் இழைத்த இந்தியா அரசே, நீ உன் முகத்தை மாற்றி அமைத்துக் கொள்" என்று ஜெயலலிதா டில்லியை கேட்பதுபோல உள்ளது. ஆகவே அவர் இந்த ரணில் மூலம் டில்லி செய்ய நினைக்கும் " அணில் வேலையால்? பதிக்கப் படுவாரா என்று தெரிய வில்லை. இந்தய ராசும், இலங்கை அரசும் செய்யும் " தமிழர் விரோத சாதிப் பாலம்" கட்ட ரணில் ஒரு அணில் போல அனுப்பப் பட்டுள்ளாரா?

Saturday, May 28, 2011

முள்ளிவாய்க்கால் ஆவிகள் மு.க.வை சுற்றுமா? அறிவாலயம் அலறல்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலைகளை நடத்தி, இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. நிராயுத பாணியான தமிழர்களை, " போராளிகள்" என்று ராஜபக்சே அவ்ர்நிக்கும் போதே, அவர்களை படுகொலை செய்வதற்காகத்தான் அப்படி சொல்கிறான் என்று தமிழ்நாட்டில் இருந்த பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகம் கூறியது. அதேபோல உடனடியாக மனித உரிமை கண்காணிப்பு என்ற ஆசியா அளவிலான ஆர்வலர்கள் கூறினார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு கேட்காமல் இல்லை. அனைத்தையும் கேள்விப்பட்டும், டில்லிக்காரர்களிடம் அதுபற்றி கேட்கவில்லை. மாறாக எங்கள் கழகத்திற்கு எவ்வளவு அமைச்சரவை தருவீர்கள்? எந்த, எந்த அமைச்சரவை தருவீர்கள்? என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் என்று இப்போது அறிவாலயம் எண்ணிப் பார்க்கிறது.

மனித உரிமையாளர்கள் கூறியபடியே ராஜபக்சே அப்பாவி தமிழர்களை, நிராயுத பாணியான முதியவர்களை, குழந்தைகளை, பெண்டிரை, வரிசையாக படுகொலை செய்தான். உலக அரங்கில் போர்களில் தடை செய்யப்பட்டுள்ள, " கொத்துக் குண்டுகளை" தமழ் மக்கள் மீது எறிந்தான். பயன்படுத்தவே கூடாத " ரசாயன குண்டுகளை" தமிழரை அழிக்க மட்டும் பயன்படுத்தினான். இந்த சிங்க கொடியவனின் கர்ண கொடூரமான " இன அழிப்பு" போரை கண்டு கொள்ளாமல், காங்கிரஸ் அரசிடம் வாதாடி, நமது " குடும்பத்திற்கு" எந்த, எந்த அமைச்சரவையை ஒதுக்குவார்கள் என்றே எனிஒம் என்று இப்போது அந்த குடும்பத் தலிவன் எண்ணிப் பார்க்கிறார்.

" கொள்ளை அடிப்பதற்கு" தகுந்த அமைச்சரவையை பெற்றுவிடத் துடித்த அப்பனும், மகளும், இப்போது அதுபற்றி எண்ணிப் பார்க்க நேரம் கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்குல்லேயே அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து விட்டது. என் என்றால் "ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடா" என்ற மொழிப்படி, பகுத்தறிவு பேசுவதும், பெரியார் பேசுவதும் தொண்டர்களை, தமிழர்களை ஏமாற்றத்தானே தவிற, தான் பின்பற்ற அல்ல, தனது குடும்பம் பின்பற்ற அல்ல என்று தெளிவாக அந்த குடும்பத் தலைவன் இருந்தார். அதனால்தான் இன்று, அதே " முள்ளிவாய்க்கால் படுகொலை நாளான" மே 18 கடந்து இரண்டே நாளில் இருபதாம் நாள், தனது மகள் " கனிமொழி" க்கு கைது நடவடிக்கை வந்தவுடன் ஆடிப்போய் விட்டார் அந்த "பகுத்தறிவு பகலவன்" இது " ஆவிகளின் ஆட்டம்தான்" என்று அறிவாலத்தார் அலற வழி வகுத்தது.


அதே நாளில் , இன்னொரு நிகழ்வு. ஜாபர் செட் என்ற ஒரு பெரும் அதிகாரி. அந்த மனிதர் இந்த உளவுத் துறை அதிகாரி, தமிழ்நாட்டில் " முட்டை ரவி, மணல் மேடு சங்கர், குற நடராஜ்" போன்ற பல கைதிகளை " மோதல் சாவுகள் " என்ற பெயரில் படுகொலைகள செய்தவர். அதே " ரத்த வெறியோடு" ராஜபக்சே செயல்படும்போது, இவர் தனது கூட்டாளியை அங்கே இனம் கண்டுகொண்டார். முள்ளிவாய்க்கால் ப்டுகொளைகளை அரங்கேற்றிய இந்திய அரசின் ஆலோசகர்களான " எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேநோனும்" இந்த ரத்த வெறியில் நேரடி பங்குதாரர்கள் என்பதால், அவர்களது கைப்பாவையாக இந்த ஜாபர் செட் மாறினார். இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு தமிழ்நாட்டில் எதிரொலி வரக் கூடாதே என்று சிரமப்பட்டு, அதை அடக்கி ராஜபக்சே-கலைஞர்-சோனியா கும்பலிடம் நற்பெயர் பெற்றுக் கொண்டவர் இந்த ஜாபர் செட்.


ஜாபரின் கனவுகளை பொய்யாக்க " முத்துக் குமார்" உயிராயுதம் ஏந்தினார். அதனால் ஏற்படப்போகும் கிளர்ச்சியையும் அடக்குவதில் ஜாபர் வென்றார். அதற்காக இலங்கையின் "ஹம்சாவிடம்" பெறுவதை பெற்றுக் கொண்டாலும், தமிழ்நாட்டில் அதன் பலன் களை எதிர்பார்த்து நின்றவர்.அந்த "கொடிய ஜபருக்கும்" புதிய ஆட்சியல் கிடைத்த " மாற்றல் உத்தரவு" அதே மே 18 இல் தான் அரங்கேறியது.அதனால் " மஞ்சள் துண்டு வகையறாக்களுக்கு" கிலி பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது வேண்டுமானால், " ஆண்டவனே, உனக்கு கண்ணே இல்லையா" என்று மஞ்சள் துண்டுகளை தூற எறிந்திருக்கலாம். ஆனால் என் இந்த குறிப்பிட்டா நாள் " மகளுக்கும், ஜபருக்கும்" ஒரே மாதிரி திருப்பி அடிக்கிறது என்று அந்த "குடும்பம்" கலங்காமல் இல்லை. ஏற்கச்னவே குசும்பமே பகுத்தறிவு பேசுபவரை புறந்தள்ளி, கோவிலுக்கு சென்று வந்த கதைகளும், திருவாரூர் கோவில்களுக்கு விசேடங்களை செய்து வந்த கதைகளும் ஏராளமாக இருக்க இப்போது மட்டும் இந்த குறிப்பிட்ட நாள் நின்று அடிக்கிறது என்று என்ன மாட்டார்களா என்ன?
.

இதை " அறிவாலயத்தின்" மொழிகளில் சொல்;லப் போனால், " முள்ளிவாய்க்கால் ஆவிகள்" நின்று அடிக்கிறது. துரத்தி, துரத்தி அடிக்கிறது என்றுதான் எண்ணுகிரார்கலாம். சரியான பகுத்தறிவு குடும்பம் அய்யா.

நளினி மூன்றெழுத்து, கனிமொழி நாலெழுத்து.

கனிமொழிக்கு " பிணை" விடுதலை வேண்டும் என்பது இன்று அவரது வழக்கறிஞரும், அதற்கான வியாக்கியானம் செய்யும் களிஞரும் எடுத்து வைக்கும் வாதங்களை சற்று கவனியுங்கள்." கனிமொழி ஒரு பெண்"" கனிமொழி படித்தவர்" " கனிமொழியின் மகன் சிறிய வயது கொண்ட ஆதித்யா." "மகனை கவனிக்க தாய் வெளியே இருக்க வேண்டும்" " கனிமொழி பொது வாழ்க்கையில் பல நன்மைகளை மக்களுக்கு செய்துவருபவர்." இத்தனை காரணங்களை கண்கலங்கி பேசுகிறார் கலைஞர்.


இதே கலைஞர் தமிழக முதல்வராக இருக்கும் போது, " நளினி விடுதலை" பற்றி மக்கள் மத்தியல் ஆர்வலர்கள் கூச்சல் போட்டார்கள். கலைஞர் அதுபற்றி தனக்கு சம்பந்தம் இல்லததுபோல நடந்துகொண்டார். நளினி தன்னை விடுவிக்கும்படியும், தான் சிறை புகுந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் சொல்லி வேண்டுகிறார். அவரது " மரண தண்டனை"கூட சோனியா மனது வைத்து எழுத்டியதால் " ஆயுள் தணடனையாக" குறைக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு ஆயுள் தண்டனை கைத்டியகா இருக்கும் நளினியை விடுவிக்க வேண்டியது மாநில அரசு. நன்னடத்தை காரணமாக சிறைத்துரையின் அப்பிப்பிராயத்தை பெற்று, மாநில முதல்வர் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் அவரை கலைஞர் விடுதலை செய்யவில்லை.

" நளினி ஒரு பெண்", " நளினி சிறையிலேயே மேலும் படித்தவர்" " நளினி தனது தாயின் மூலம் ஒரு செவிலியர் வாழ்கை எவ்வளவு சமூக சிந்தனைகளை பெற்றிருப்பார்? நளினிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆதிரை அவரது பெயர். அப்பாவும், அம்மாவும் அவருக்கு வெளியே இல்லை. சிறையில் இருவரும் இருக்கிறார்கள். நளினியின் நிலைமை கனிமொழி நிலைமையை விட கொடியது. கனிமொழிக்காவது மகன்தான். நளினிக்கு மகள். இந்த நிலையில் நளினியின் நிலைமை, கனிமொழியின் நிலையை விட கொடியது. ம்தல்வராய் இருந்த கலைஞர் கைக்கு அந்த ஆவணம் வந்த பொது, அவர் நளினிக்கு விடுதலை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். நளினி மூன்றேழுத்துதானே, கனிமொழி நாலெழுத்து என்று நினைக்கிறாரோ..

Friday, May 27, 2011

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவர்.

கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் " இலவசங்களில்" பிரபலமானது, " இலவச வண்ண தொலைக் காட்சி".அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு எண்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் { என் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர்} எல்லா "ரேஷன் அட்டைதாரர்களுக்கும்" என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது.


அந்த காட்சி ஊடகங்களில் தங்கள் ஊடகத்தின் " மானாட, மயிலாட" பார்ப்பார்கள் என்று தலைவர் நினைத்ததில் தவறில்லை. ஆனாலும் கையில் திருப்பு கருவியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழனும், மற்ற காட்சி ஊடகங்களையும் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதுவும் குடும்பத்திற்குள்ளேயே இருந்து கொண்டு " போட்டி டி.வி. நடத்தும் " சகோதரர்கள் தாங்கள் எதிர்காலத்திலும் " நடுநிலை" டி.வி. என்று பெயர் வாங்குவதற்காக " ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த்" என்று எதிர்க்கட்சி காரர்களின் நேர்காணல்களையும் வெளியிடத்தொடங்கினார்கள். அதன் விளைவாக மக்களுக்கு எல்லா செய்திகளும் போய் சேர்ந்தது. அதிலும் " ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், ஈழத் தமிழின அழிப்பு, இன அழிப்புக்கு கலைஞர் கொடுத்த ஆதரவு அல்லது மௌனமான ஆதரவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இப்படி எல்லாமே அன்றாடம் மக்களிடம் போய் சேர்ந்தது.


தீர்ப்பு எழுதும் போது, இதுவரை ஐந்து ஆண்டுகளாக அவர்கள் கேள்விப்பட்டதை, கண்ணால் கண்டதை, அதற்கான காரணத்தை எப்படி மக்கள் மறந்து போக முடியும். எல்லாமே அந்த இலவச வண்ண தொலைக் காட்சிகள் மூலம்தானே போய் சேர்ந்தது? இதைத்தான் கிராமத்தில் " சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவன்" என்று குறிப்பிடுகிறார்கள்.

Thursday, May 26, 2011

அருந்ததி ராய், இந்தியாவின் கருத்துரிமை அடையாளம்.

மீண்டும் எதிர்க்கப்பட்டார் அருந்ததி ராய். ஒருவாரம் முன்னாள் டில்லியில். மே-20 ஆம் நாள்." இந்தியா ஹபிடட் மையம்" - புது டில்லியில் ஒரு புத்தக வெளியீடு. " உடைந்த குடியரசு" என்பது அந்த புத்தகத்தின் பெயர். ஏற்கனவே உடைந்த ஒரு குடியரசை எப்படி வெளியே சொல்லலாம் என்று அந்த கிளர்சிகாறாக்கள் கொபபட்டிருகலாம். அதைவிட எழுதியவர் " அருந்ததி ராய் " என்பதாலேயே அவர்கள் கோபப்பட்டிருக்கலாம் " அருந்ததி ராய்" பெயர் அந்த அளவுக்கு, கருத்துரிமை மறுப்போருக்கு, பிற்போக்காளர்களுக்கு, இந்துத்துவா சக்திகளுக்கு, .மக்கள் விரோதிகளுக்கு, " அச்சத்தை" சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது.


ஏற்கனவே " காஷ்மீர்" பற்றி அவர் பேசியதற்கே அந்த " சுதந்திரத்தின் எதிரிகளுக்கு" தாங்க முடியவில்லை. கலாட்ட செய்தார்கள். இப்போதெல்லாம் இந்தியாவில் " கருத்துகளுக்கே" போப்படுகின்ர ஒரு ஆளும் கும்பலை சந்திக்கிறோம.அதனால் தான் அவர்களது " முதல் எதிரியாக" அருந்ததி ராய் தோன்றுகிறார். " எழுத்தும், பேச்சும் " ஒரு நாட்டில் ஆள்வோரால் தாங்க முடியவில்லை என்றால், அந்த நாட்டின் இழி நிலை அங்கே படம் பிடித்து காட்டப்படுகிறது. ஆயுதம் தாங்கிய போரை அல்லது போராட்டத்தை ஆள்வோர்கள் எப்போதுமே அதைவிட பெரிய, பெரிய ஆயுதங்களை வைத்து அடக்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் அதாவது பிற்போக்காளர்கள் பயப்படுவது, " மக்கள் சக்திக்கு" தான். அந்த மக்கள் சக்தியை புரிய வைப்பது, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது, அந்த மக்களை தட்டி எழுப்புவது, அந்த மக்களை அணிதிரட்டுவது, அனைத்துமே அந்த மக்களை எட்டக்கூடிய " செறிவான கருத்துக்களால்தான்" என்பது ஆள்வோருக்கு எப்போதுமே புரிகிறது. அதனால்ற்ற்ஹான் அவர்களது குறி" அருந்ததி ராய்" எழுத்துக்கள் மீதும், பேச்ச்சுக்கள் மீதும் போய் விழுகிறது.


அப்படி என்ன இந்த புதிய புத்தகமான, " உடைக்கப்பட்ட குடியரசு" என்பதில் எழுதியுள்ளார்? இது இந்தியாவின் இதயப் பகுதியில் " மாவோவாதிகள் செயல்பாடும், அரசின் நிலைமையும்" பற்றியது. அதில் அருந்ததி உண்மையை சொல்கிறார். எப்படி பிற்போக்குவாதிகள் உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்? " முதலில் அவர்கள் காவல்துறையை பயன்படுத்தினார்கள். தோல்வியை தழுவினார்கள்.அடுத்து அவர்கள் சல்வா சுடும் என்ற கூலிப் படையை பயன்படுத்தினார்கள். அதிலும் வெற்றி பெற வில்லை. அதையும் அடுத்து அவர்கள் துணை ராணுவத்தை பயன்படுத்தினார்கள். அதிலும் மாவோவாதிகளை அவர்களால் வெள்ள முடிய வில்லை. அடுத்து இப்போது ராணுவத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ராணுவம் அதற்கு யோசிக்கிறது. " சிறப்பு ஆயுத படை அதிகாரம்" என்ற கண்டால் சுட, கண்டவரை சுட அதிகாரம் வேண்டும் என்று அது கேட்கிறது".


ஏற்கனவே வட கிழக்கு மாநிலங்களில் பயன்படுத்துமந்த கொடூர சட்டத்தை பயன்படுத்த அவர்கள் இதயப் பகுதியிலும் தயாராகிறார்கள். முதலில் நாம் சொல்லிவந்த ," சுரங்கங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பாதுகாக்க, அரசாங்கம் "பச்சை வேட்டையை" நடத்துகிறது" எண்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அருந்ததி ராய் எழுதியிருப்பதால் அவர்கள் அந்த புத்தக வெளியீட்டிலேயே கலாட்ட செய்தார்கள். அவர்கள் " பரத மாதா கி ஜெய்" என்று முழக்கமிட்டார்கள். இப்போதுதான் நமக்கு புரிய வேண்டும். அந்த பாரத மாதா அவர்களது நலன் காக்கும் தாய் என்பது. அதாவது இந்திய " பழங்குடி மக்களுக்கு" எதிரான ஒரு தாய்தான் பாரத மாதா என்பது இப்போது தெளிவாக புரிகிறது.

நீரா ராடியா, பர்காதத் ஆகியோர் கைதாக மாட்டார்களா?

கனிமொழி கைதிற்கு பிறகு அரங்கேறும் காட்சிகள், வேடிக்கையை ஏற்படுத்தி வருகின்றன. கனிமொழி கண்ணீரை துடைக்க, திடீரென அவர்கள் வீட்டில் உள்ள பல பெண்களும் டில்லி செல்ல, அவர்கள் கனிமொழியை நீதிமன்றத்தில் சந்தித்து "குசலம்" விசாரிக்க, " இது என்னடா புதிய சோதனை" என்று கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மையார் அதிர்ச்சியடைந்து விலகி நிற்க, அந்த காட்சிகள் " ஆறுதல்" தேர்வைப்படும் கனிமொழிக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம். ஆனால் என்ன " சதியை" மனதில் வைத்துக் கொண்டு இந்த " வில்லிகள்" வந்தார்கள் என்று ராஜாத்தி எண்ணுவது தவிர்க்க முடியாதது.


கனிமொழிக்கு " ஜென்ம விரோதிகள்" என்று அறியப்படும் அந்த " சன் டிவி. குழுமம்" தனது தொடர் நாடகங்களில், ஒவ்வொரு வீட்டிலும் " பெண் வில்லிகள்" இருப்பதாக பல ஆண்டுகளாக கதைகளில் சொல்லி வருகிறது. அந்த " குழுமமே" இப்போது அப்படி புதிய "வில்லி" பாத்திரத்தில் நடிக்க தொடங்கி உள்ளதா என்று ராஜாத்தி சந்த்தேகிக்கலாம். என் என்றால் இந்த " தாவும், கலாவும்" தங்கள் "வணிக போட்டிக்காக" கலிஞர் டி.வி.யை முடக்கிப் போட, "சரத்குமார் ரெட்டி" யை வீட்டில் போய் அடிப்பதும், இப்போது சிறையில் தள்ளுவதும் செய்தார்கள என்பது யாருக்கு தெரியாது? இப்போது அவர்களது " தாயார் மல்லிகா" டில்லி சேறு கனிமொழியை பார்ப்பது நம்பக் கூடியதா? " செல்வி" தான் தனது தனத்தை களிஞரிடம் இந்த இரண்டாவது மகளுக்கு எதிராக இதுவரை வாதாடி வருபவர். இப்போது அவர் சென்று பார்ப்பது நம்பக் கூடியதா?


" அந்த சின்னப்பொன்னு இந்த குடும்ப மானத்திற்காக கம்பி என்னுது. அது வாயை திறந்தாள் நீங்க எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும். நீங்க எல்லா பெண்களும் இங்க நிம்மதியா இருக்கீங்க" என்று தாத்தா கொடுத்த அடியில் இப்படி போய் பார்கிறார்களா? எது எப்படி இருந்தாலும், உண்மையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமான அமைச்சர் பதிவியை ஆ.ராஜாவிற்கு வாங்கித்தர வாக்குறுதி கொடுத்த, " நீரா ராடியாவும்,, பர்கா தத்தும்" குற்றப் பத்திரிகையிலும் வரவில்லை. கைது செய்யவும் படவில்லை.

ஒருவர் "டாட்டா" வின் பிரதிநிதி. இன்னொருவர் "சோனியாவின்" பிரதிநிதி. ஓஹோ. சீ.பி.ஐ. என்றால் இதுதானா? இப்படித்தான் உலகம் கேட்கிறது.

Wednesday, May 25, 2011

கே.பி. ஐ வைத்து அரசியல் செய்த இந்திய பிழைப்புவாதிகள்.

கே/பி. என்னமோ ராஜபக்சே கையில் சிக்கிதிலிருந்து , சிங்கள இனவெறி அரசியலுக்காக பயன்படுத்தப் படுகிறார் என்றால், எங்கேடா எழவு விழும் என்று காத்திருக்கும் " கழுகுகளாய்" இங்கே சில " அநாமதேயங்கள்" அலைகின்றன. ஏற்கனவே கே.பி. மலேசியாவில் கைது செய்யப்பட்டதற்கே இந்திய வெளிவிவகாரத் துறையின் உளவுத் துறையான " ரா" தான் காரணம் என்ற உண்மைகள் இருக்கின்றன. "ராஜீவ் கலையில்" கே.பி. தான் முக்கிய குற்றவாளி என்று இதே சக்திகள் ஏற்கனவே சொல்லி, சொல்லி வந்தன. அதற்கு " கே.பி.தான் புலிகளின் அனைத்து நாட்டு வேலைகளை கவனித்தார்" என்றும், " புலிகளின் அணித்துநாட்டு உறவில் ஆயுதங்களை வாங்கி வந்தவர்" என்றும் விளக்கமும் கொடுத்து வந்தனர். அதை அவ்வப்போது, " ரா" அமைப்பு கசிய விட்டு வந்தது.இப்போது அந்த " வழக்கை" திசை திருப்பி விடலாம் என்று ஆலோசனை கூறி இப்படி பேச வைக்கிறார்களா என்று தெரியவில்லை.


டில்லிக்காரர்களுக்கு இப்போது இருக்கும் கவலை எல்லாம் " எப்படி ராஜபக்சே அரசை காப்பற்ற்ய்வது? " என்பதுதான். அதனால் அவர்கள் " தமிழ்நாட்டிலிருந்து" அழுத்தம் வரக்கொடாது என்று எண்ணுகிரரகள். அதற்கு தமிழக முதல்வர் " ஜெ" ஐ எப்படியாவது " ஈழத் தமிழர் எதிர் நிலைக்கு" கொண்டு போக திட்டமிடுகிறார்கள். அதற்காக கே.பி.ஐ பேச வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த கதை பற்றி, அந்த சீ.என்.என்--ஐ.பி.என். சிலரை பேட்டி காண்கிறது. அதில் இரண்டு " பிழைப்புவாதிகள்" தன்கள் கருத்தை கூறியிருக்கிறார்கள். ஒருவர் " ராஜபக்சே வின் ஆலோசகர் என்றும், " ரா" விற்காக ராஜபக்சேவிடம் கலந்து ஆலோசிப்பவர்" என்றும் பெயர் பெற்ற ஊடகவியலாளர் போர்வை பொத்திய "என். ராம்" . இவர் புலி எதிர்ப்பாளர் எனபது நாடறிந்த செய்தி.


அந்த என்.ராம், " புலிகள் தலைவர் திமுகவின் திராவிட கருத்தியலால் செல்வாக்கு செலுத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்பாளர் என்றும், ஜெயலலிதாவை கொள்ள புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்றும் " ரா" பாடத்தை ஒப்புவித்து விட்டார். இந்த மனிதர் முழுமையாக தேர்தலுக்கு முன்பு கருணாநிதி ஆதரவாளராக செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். அதை மாற்றி எழுதி, அம்மாவிடம் நற்பெயர் பெற இந்த சந்தர்ப்பத்தை கூட அவர் பயன்படுத்துவார். அதனால்தான் மறுநாளே முதல்வர் அம்மாவை சென்று பார்த்து, பூச்செண்டு கொடுத்து விட்டார்.


அடுத்த நபர், உலக மகா யோக்கியர் என்ற பட்டம் பற்ற " சுப்பிரமணிய சாமி" இவர் தேர்தல் நேரம் அம்மாவிடம் ஓட்ட, " ஜெயா டி.வி." நேர்காணல் மூலம் கருணாநிதி எதிர்ப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழல் எத்ரிப்பு என்று பேசி, " பதினைந்து சீட்" கொடுப்பார்களா என்று வினவி, கிடைக்காது என்று டேஹ்ரிந்த பின், திமுக தான் வெற்றி பெரும் என்று வெட்கமில்லாமல் சொல்லி வந்தவர். இவரைப் பொறுத்தவரை அவரது " அமெரிக்க எஜமானர்களுக்கு" சேவை செய்வதே வேலை. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உண்மையான குற்றவாளியான அமெரிக்காவை காப்பாற்ற புலிகள் மீது பழி சுமத்த பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இன்னொரு நபரான " மணி சங்கர் அய்யர்" தனது நேர்காணலில், திமுக " பார்ப்பன எதிர்ப்பு " கிடையாது என்றும், " பார்ப்பன பெரிய அதிகாரிகளது" ஆலோசனைகளை பெற்று செயல்படும் கட்சி என்றும் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.


ஆகவே கே.பி. நேர்காணல் என்பது எந்த வகையிலும் " தமிழின எதிரிகைன் சதித் திட்டங்களுக்கு" உதவி புரிய வில்லை. அதை மீண்டும் எடுத்து, முதல்வர் ஜெயலலிதாவிடம் கீட ஊடகத்தாருக்கு அவர் கொடுத்த பதிலில், " இது ஒன்றும் புதிய செய்தியல்ல" என்று கூறியிருக்கிறார்.அதாவது "புலிகள் தன்னை குறி வைத்தார்கள்" என்ற செய்தி ஒன்றும் புதிய செய்தி அல்ல என்கிறார். அதாவது அதற்காக எந்த ஒரு புதிய முடிவும் சாத்தியமல்ல என்று பொருள்படும். நமக்கு கலைஞர் போல பல பழைய விசயங்கள் நினைவுக்கு வருகிறது. அதாவது எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்து வந்த காலத்தில், செல்வி. ஜெயலலிதா எம்.ஜி.ஆரால், ராமநாதபுரம் கூட்டத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்குபோய், " புலிகள் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலையை பெற்றுத் தர முடியும்" என்று ஜெயலலிதா பேசினார்.

அதற்கு பிறகு, ராஜீவ் கொலைக்கு பிறகு, " பிரபாகரனை பிடித்துவரவேண்டும்" என்றும் சட்டமன்றத்தில் பேசினார். பிறகு தனக்கு புலிகள் குறி வைத்துள்ளார்கள் என்றும் பேசினார். பிறகு, தந்து சென்ற ஆட்சியில், உள்துறை மைச்சர் சிவராஜ் பட்டீல் அனுப்பிய கடிதத்திற்கு, " புலி என்று இல்லாத கிளையை கிளப்பாதீர்" என்றும் முதல்வர் ஜெயலலிதா பேசினார். இவை எல்லாமே இப்போதுள்ள சூழலுக்கு சம்பந்தமில்லாதவை. இப்போது ஐ.நா. நிபுணர் குழு " ராஜபக்சேவை" போர் குற்றவாளி என்று அறிக்கை அவித்துள்ள நிலையில், அவரே " ராஜபக்சேவிற்கு பன்னாட்டு நீதிமன்ற விசாரனையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்" என்று பேசிவருகிறார். அதை எந்த டில்லி கொம்பனும் அசைக்க முடியுமா என்பதே இப்போதைய கேள்வி.

Tuesday, May 24, 2011

கே.பி. யார் கையில்? ராஜபக்சே கையிலா? "ரா"கையிலா?

கே.பி. என்ற நபர் மலேசியாவில் பிடிபட்ட நேரத்திலிருந்து, உலகத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டவர். இப்போது அப்படிப்பட்ட ஒரு நபர் சொன்னார் என்று, சீ.என்.என்.-ஐ.பி.என். என்ற தனியார் காட்சி ஊடகம் ஒரு நேர்காணலை நேற்று வெளியிடுகிறது. அதை எடுத்து இந்திய ஏடுகள் இன்று வெளியிடுகின்றன. அதில் அங்கு சுற்றி, இங்கு சுற்றி, கடைசியாக, ஜெயலலிதாவிற்கு எதிராக "புலிகளை" நிறுத்துவது எனபதில் போய் முடிக்கிறார்கள். இப்போது இது யார் கை என்பது சொல்லாமலேயே புரியும். எந்த நேரத்தில் எந்த செய்தியைஎப்படி வேல்யிடுகிரரகள் எனபதை வைத்துதான் நாம் இந்த " காய் நகர்த்தும் கதாநாயகர்களை " புரிந்து கொள்ள முடியும்.


திடீரென கே.பி. அதாவது, " குமரன் பத்மநாப" பிரபாகரன் பற்றி ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? கே.பி. இப்போது " ராஜீவ் கொலைக்கு" ஒரு புதிய அர்த்தம் கண்டுபிடிப்பது யாருடைய " கதை வசனம்"? திமுக வின் " திராவிட கருத்தியலில்" பிரபாகரன் செல்வாக்கு செலுத்தப்பட்டார் என்ற இன்றைய கே.பி. வாதம் ஒரு பச்சையான திசை திருப்பல். ஏன் என்றால் பிரபாகரன் என்றைக்கும் 'திராவிடக் கருத்தியலை' ஏற்றதில்லை.இந்தியாவையே நம்பிவந்தார். உதாரணமாக பிரபாகரன் ஒரு 'சிறந்த ஆன்மீகவாதி'. அதுமட்டுமின்றி, 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' வழியை பின்பற்றும் கருத்துக் கொண்டவர். அப்படிப்பட்டவர் எப்படி ' பிராமண எதிர்ப்பாளராக' கே.பி. சொல்வது போல இருந்திருக்க முடியும்?.


கே.பி. சொல்வதுபோல, பெரோஸ் காந்தி என்ற பார்சி சாதியை சேர்ந்தவரின் மகனான ராஜீவ் காந்தி எப்படி பார்ப்பனராக இருப்பார்?. அவரை பார்ப்பனர் என்பதற்காக புலிகள் கொலை செய்தார்கள் என்று கே.பி. கூறுவது, ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் பாணி. இந்த கருத்தியல் எப்போதுமே இந்தியாவில் திமுக விற்கு எதிராக வழக்கமாக, குற்றம் கூறும் சக்திகள் சொல்லிவரும் குற்றச்சாட்டு. அதை எந்த விதத்திலும் 'புலிகளுக்கு' எதிராக பயன்படுத்த முடியாது. ஏன் என்றால் தொடக்கம்முதல், இறுதி வரை பிரபாகரனும், புலிகளும், எம்.ஜி.ஆரின் விசுவாசிகள். ஆதரவாளர்கள். இது கே.பி.க்கும் தெரியு. ஆனாலும், மேலிருந்து உளவுத் துறையினர் எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் ஐன்றைய கே.பி.யின் நிலைமை?


பிரபாகரன் தனது வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையான தனது திருமணத்தை, ஒரு கோவிலில் வைத்து நடத்தினார். அதை " அய்யர்" வைத்துதான் நடத்தினார் என்பதும், அங்கு இதே கே.பி. இருந்தார் எனதும் நாடர்ந்த கதை. அப்படி இருக்கையில் பிரபாகரனையும், புலிகளையும், "பார்ப்பன எதிர்ப்பாளர்கள்" என்று முத்திரை குத்துவது எப்படி சரி?
இவ்வாறு " கிழிந்துபோன கந்தல் துணி" போல ஒரு அறிககையை இந்த உளவு நிறுவனங்கள் தயார் செய்து கே.பி. பெயரில் வெளியிட்டால் யார் நம்ப முடியும்? அதேபோல " ஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்று அவரையும் புலிகள் கொலை செய்ய முனைந்ததாக" அடுத்த கதையையும் கே.பி.யை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள்.



இதேபோல, ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, 2005 ஆம் ஆண்டில், மத்திய அரசில் அப்போது ஆட்சியில் இருந்த இதே ஐ.மு.கூ. வின் முதல் தவணை ஆட்சியில், உள்துறை அமைச்சர்கா இருந்த சிவராஜ் பட்டீல், " தனது ஆண்டறிக்கையில் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் இருப்பதாக " அறிவித்தார். அதற்கு முதல்வர் "ஜெ" அப்போதே பதிலடி அறிக்கை வெளியிட்டார். அதற்குபிறகு இன்னொரு கடிதத்தை முதல்வருக்கு, உள்துறை அமைச்சர் எழுதினர். அதில் " இரண்டு புலிகளின் பெண் தற்கொலைப் படையினர்" பனப்பாக்கம் வந்து இறங்கியிருப்பதாகவும், முதல்வர் "ஜெ" கொலை செய்ய வந்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதற்கும் அன்றைக்கே " புலி கிளியை கிளப்பாதீர்" என்று உள்துறையின் பொய்யுரையை அம்பலப்படுத்தி, இரண்டு அரை அமனி நேர நிகழ்ச்சிகளில், நானே பதில் கொடுத்திருந்தேன். அதுவும் அந்த நேரத்தில், முதல்வராக செல்வி.ஜெயலலிதா இருக்கும்போதே, " ஜெயா டி.வி." யில் ஒளிபரப்பப்பட்டது. இப்போது அதே சக்திகள் அதேபோல ஒரு போய் கூற்றை உண்மையாக்க தங்கள் கைகளில் கைதியாக உள்ள ஒரு கே.பி.யை பயன்படுத்துகிறார்கள்


இன்று டில்லிக்கும், அதன்மூலம் கொழும்புக்கும் பிரச்சனையே ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்ததுதான். ஏன் என்றால் அவர்கள் இருவரும் கருணாநிதி ஆட்சி இருக்கும்வரை கவலை இல்லாமல் இருந்தனர். பெரும் அளவில் ஜெயலலிதா அணி வந்தபின், அதுவும் முதல்வர் ஜெயலலிதா வேற்றுபெற்ற பின்பும்கூட, ஈழப்பிரச்சனையில் " தமிழர்களுக்கு " சாதகமாக " ராஜபல்செவை" அனைத்து நாட்டு விசாரணைக் கூண்டில் என்ற்றவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருப்பது கண்டு இந்த இரண்டு நாடுகளின் தலைமையும் நடுங்கிக் கொண்டு இருகின்றன. அதனால் அவரை அதாவது "ஜெ".வை ஈழப் பிரச்சனையில் கலைத்து விட முயல்கின்றனர். அதுதான் " கே.பி." பெயரில் அவர்கள் எடுக்கும் முயற்சி. அதற்காக " கோத்தபாயே ராஜபக்செடும், பசில் ராஜபக்சேயும்", கடந்த வெள்ளிக்கிழமை இரவு டில்லி வந்து கலந்து பேசியதும், தாங்கள் கொழும்பில் இருந்த முன்னாள் இந்திய தூதர் அலோக் பிரஷாந்தின் மகன் நிதின் பிரஷாந்தின் திருமணத்திற்கு வந்ததுபோல காட்டிக்கொண்டதும், அதன்மூலம் "டில்லி ஆலோசனையின்" பேரில், எப்படியாவது "ஜெ"வை சமாதனப்படுத்த முயல வேண்டும் என திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. அதன் அடுத்த " காய் நகர்த்தல்" தான் இந்த கே.பி. நேர்காணலும், அதற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும்.

மரியம் பிச்சை வெற்றிக்காக உயிரை பறித்த பெருமான் யார்?

அமைச்சர் மரியம் பிச்சை, தள்ளுவண்டியில், காய்கறி வணிகம் செய்து வந்த ஒரு நல்ல எம்.ஜி.ஆர். பக்தர்.அதை தொடர்ந்து ஜெ விசுவாசியாக மாறிய நல்ல மனிதர். அவரது மறைவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடகை கற் ஓட்டுனர் தவறா? முன்னாள் சென்ற கண்டைனர் வாகன தவறா? அல்லது ஓரண்டுபெரும் சேர்ந்து செய்த சதியா? இது புலனாய்வில் உள்ள விவகாரம். ஏன் அவர் " பதவி ஏற்பு" அன்று சரியாக மரணம் அடையவேண்டும்? இது "பதிவி ஏற்பு" நிகழ்வையும் உடைக்க உள்ள சதியா? இத்தனை சதி செய்ய " பெரிய இடம்" திட்டமிடாமல் முடியுமா?

ஏற்கனவே இது போன்ற " லார்ரி ஏற்றி" கொலை செய்வதற்கான முயற்சி, ஜெயலலிதா மீதே மதுராந்தரத்தில் நடந்ததே? அப்போதே ஒரு முக்கிய திமுக கையின் பினாமி, "அப்பு"டியே சந்தேகப்பட்டியலில் இருந்தாரே? அவர்தானே " சங்கரராம ஐயர்" கொளைவழக்கில்பிடிபட்டவர். அவர் முன்பு கலைஞர் வந்துபோன " ஆலிவர் சாலை" வீட்டில் தனி அரை கொடுக்கப்பட்டு இருந்தாரே? சங்கராச்சரியுடன் சிக்கிய பின் பிணையில் வந்து, அமைச்சர் ஆற்காட்டார் வீட்டில் இருந்தாரே? சென்ற ஆட்சியில் அனைத்தையும் மறுபடி அனுபவித்தாரே? " ஓலை நடந்த பாணி" என்றுபார்த்தால் இத்தனை சந்தேகமும் வருகிறதே?

கொலைக்கான கானம் எதுவாக இருக்கும்? அப்போதுதான் " வெல்லப்பட முடியாதவர்" என்று இருந்த ஒரு பெரும் பண்ணையாரை அவரது தொகுதியிலேயே வென்று இருக்கிறார். இது அந்த பெருமானுக்கு கோபத்தை வரவழைக்கும் என்பது உண்மைதான்? நடந்தது போக்குவரத்தில் நடந்துள்ளது. போக்குவரத்து துரையின் ஓட்டுனர்கள் சமயபுரம் வரை வந்துள்ளனர். அதற்கு பிறகு தனியார் வாடகை வாகனம், வாடகை ஒட்டி. அதுவு முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. தமிழ்நாடு உழுக்க " போக்குவரத்து துறை" யை கையில் வைத்திருந்தவருக்கு, ஒவ்வொரு வாடகை கார் நிறுவனமும், அதுவும் குறிப்பாக திருச்சியில் உள்ள தனியார் நிறுவனங்களை தெரியாமல் இருக்காது. அவரது தம்பிக்கு அதைவிட தாயகமாகவே தெரிந்திருக்கும். ஆகையால் விசாரணை, மரியம் பிச்சையால் தோற்கடிக்கப் பட்ட கே.என்.நேரு மீதும் திரும்பத்தானே செயும்? பெரோஸ் காந்தி மரணத்தில் , ஜவஹர்லால் நேருவையே சந்தேகப்பட்டார்களே? இந்த நேரு எம்மாத்திரம்?

தயா நடிப்பு கொஞ்சம் ஓவர்

தன் சம்பந்தி ஏட்டில், அதாவது " தி ஹிந்து" ஏட்டில் தனது ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட, விக்கிலீக்ஸ் கசிவான, கலைஞர் பற்றிய தனது கருத்தை, அமெரிக்க தூதர் ஹூபரிடம் கூறியதை எப்படி ஆராயாமல் வெளியிடலாம் என்று கோபபடுவது போல ஒரு நடிப்பு. அதற்கு ஒரு மறுப்பு வேண்டுதல். இல்லாவிட்டால் மான நட்ட வழக்கு ஐந்து கோடி கேட்டு என்று ஒரு வக்கீல் நோட்டிஸ். ஆஹா. இந்த நடிப்பை தமிழ்மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? என்ன?

ஒருபுறம் கலைஞரை மிரட்ட, அந்த உண்மையை வெளியிடுவதும், மறுபுறம் அதையே மறுத்து கலைஞருடன் ஓட்டிக்கொள்வதும், மின்னொரு புறம் " ஜெ" யை தான் கலைஞர் விரோதி என்று ஏமாற்றுவதும், எப்படி இந்த சகொதரர்கலாலா நடிக்க முடிகிறது?

Monday, May 23, 2011

தயாநிதி விஸ்வரூபம் இப்போது தெரிகிறதா?

கழகம் ஒரு குடும்பம் என்றார் தலைவர். குடும்பமே கழகம் என்றார் பின்னால். குடும்பத்திற்குள்ளும், கோடலிக்காம்பு இருக்கும் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டு அத்ஜை அடையாளம் கண்டுகொண்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். முழுமையாக வனுக எண்ணம் கொண்டவர்கள், திமுக விற்கு பொருந்துமா? திமுக கொள்கை சார்ந்த கட்சியாக இருக்க விரும்பினால், வணிகர்கள் கைக்கு அதை போகவிடலாமா? இது போன்ற கேள்விகளை திமுக வின் நண்பர்கள் சிலர் எழுப்பிக்கொண்டுதான் இருந்தார்கள். அந்த நண்பர்கள் எல்லோரும் " தமிழ் மையம்" அமைப்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை அடையாளம் கண்டு கொண்டது வணிக கும்பல். அதற்கு பிறகும் அவர்களது பின்னணிகளை தோண்ட மாட்டார்களா?


தனக்கு நெருக்கமாக இருக்கும் இந்திய ஆளும் கும்பலின் தலைமைப் பீடமான " சோனியா" கும்பலை கையில் போட்டு செயல்படாதா வணிக கும்பல்? அதுதான் "ஸ்பெக்ட்ரம் ஊழல்" வெளியே வார, அதை வைத்து வணிகர்களின் எதிரிகள் உள்ளே செல்ல, வழி எளிதாகி விட்டதாக வணிகர்கள் நினைத்தால், அதையும் தடுக்க ஒரு " குடும்பத் தலைவர்" இருக்கிறாரே? சரி. நமக்கு இனி திமுக சரிப்பட்டு வராது என்று எண்ணிய வணிக கும்பல், தங்களுக்கும், திமுக தலைமைக்கும் உள்ள முரண்பாட்டை, சண்டையை, பகையை பகிரங்கப் படுத்த நேரம் வந்துவிட்டது என்று இப்போது எண்ணுகிறார்கள். அதனால்தான் ஒரு முக்கிய " ரகசிய செய்தியை" இந்த நேரத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து இன்று காலையில் வெளியிட்டு விட்டார்கள்.


இன்று காலை வணிகர்களில் இளையவர் பெண் எடுத்த வீட்டிலிருந்து வெளிவரும் அந்த " ஆங்கில பிரபல நாளேட்டில்" தங்களுக்கும், " குடும்பத் தலைவருக்கும்" உள்ள முரண்பாட்டை வெளியிட்டுவிட்டார்கள். அதாவது இன்று காலை ஆங்கில ஏடான " தி ஹிந்து" வில் முதல் பக்கத்திலேயே அந்த " அதிர்ச்சி" செய்தி. அடுத்து உள் பக்கத்தில் அடுத்த " அதிர்ச்சி" செய்தி. இவை இரண்டும் ஏன் ஒரே நாளில் வெளியிடப்படவேண்டும்? முதல் பக்கச் செய்தி, " தயாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க் தூதராக இந்தியாவில் இருந்த " ஹூபர்" வசம் சொன்ன செய்தி என்று அது வெளியாகி உள்ளது. அதில் " திமுக தலைமை அதிகாரத்திற்கு வந்தவுடன் ஊழல் செய்யத் தொடங்கி விட்டார்கள்" என்று அந்த அமெரிக்க அதிகாரியிடம் தயாநிதி மாறன் கூறியது வெளியாகி உள்ளது.


விக்கி லீக்ஸ் இணைய தளத்திற்கு கசிந்துள்ள இந்த செய்தியை, "தி ஹிந்து" எடுத்து போட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த ஏடு விகிலீக்ஸ் கசிவுகளை பல நாட்களாக வெளியிட்டு வருகிறது. அதில் எல்லாமே அதிர்ச்சி செய்திகள்தான். பல செய்திகள் திட்டமிட்டு அமெரிக்கா தலைமை கசிய விடச் சொல்கிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த செய்தி, " தயாநிதிக்கு" எதிரான செய்திபோல தோன்றினாலும் எந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது எண்பதை அவித்தே யாருக்கு சாதகமான வெளியீடு என்று கணிக்க வேண்டும். இப்போது திமுக வில் தயாநிதி தனக்கு போட்டியாக டில்லி பிரதிநிதியாக வரும் கனிமொழியையும், ஆ.ராஜாவையும், ஊடகப் போட்டியாக வரும் சரத்குமார் ரெட்டியையும், திகார் சிறைக்குள் தள்ளுவதில் வெற்றி அடைந்துவிட்டார்.அடுத்த டில்லி திமுகஅதிகாரபூர்வமான பிரதிநிதி என்ற பதக்கத்தை பெறவேண்டிய சூழல்.


ஆனால் " தாத்தா" அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாறாக " டி.ஆர்.பாலு" வை அந்த இடத்திற்கு அனுப்பி, ஐ.மு.கூ.வின் இரன்டாவது ஆட்சியில் கூட்டணி கட்சி திமுக சார்பாக " தயாநிதி கிடையாது. பாலுதான்" என்று பதிவு செய்து விட்டார். டில்லியில் இதுவரை " தயா" கிளப்பி வந்த வதந்திகள் எல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டன. திமுக என்றால் ஆங்கிலத்தில் "தயாநிதி மாறன் கழகம்" என்று பலரிடம் டில்லியில் சொல்லி, அதில் தானும், தன் மாமா ஸ்டாலினும்தான் தலைமையில் இருப்போம் என்று உறுதிபட சொல்லிவந்தார். அதற்கு இப்போது அடி விழுந்து விட்டது. அதுவும் நேற்று அதாவது இருபத்தொன்றாம் நாள் காலை கோபாலபுரம் வீட்டிடில் கூடிய உயர் மட்ட தலைவர்களுடன் " குடும்பத் தலைவரை" கலப்பதில் "தயாநிதி"யும் இருந்தார். கனிமொழி கைது விவகாரத்தில் காங்கிரஸ் மீது கலைஞர் எவ்வளவு தூரம் கோபம் கொண்டுள்ளார் எண்பதை தயா நேரடியாக அறிந்துவிட்டார். இனி தனக்கும் டில்லி திமுக தலைமை கிடைக்காது என்றும் அனுமானித்து விட்டார். பாலுவும் ராஜாத்தி குழுதான் என்பது தயாவின் பார்வை.


இனி தான் செள்ளவேர்ந்டிய இடன் சொநிஆவிடம்தான் எபதில் தெளிவாகி விட்டார். அதை தானே பகிரங்கமாக செய்தால், கழகத்தில் உள்ள தனது அணியை கலைக்க முடியாது என்று எண்ணுகிறார். ஆகவே அதை ஒரு வித்தியாசமான முறையில் செய்ய தலைப்பட்டார். தனது " சம்பந்தி" ஏட்டின் மூலம் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் அமெர்க்க அதிகாரியிடம் கூறியதை விகிலீக்ஸ் மூலம் எடுத்த் அந்த "தி ஹிந்து" ஏட்டில் இன்று வெளியிட வைத்தார். அதில் " ராகுல் தலைமைதான்" சரியானது என்று தயா கொர்ரியதும் வெளியாகி உள்ளது. உள்ளே அதை விட மோசமாக, கருணாநிதியை கிழித்துள்ளார். காங்கிரசுக்கு எதிராக கலைஞர் எடுக்கும் " அஸ்திரம்" " ஈழத் தமிழர்" பிரச்சனை எனபது காங்கிரசுக்கும், தயாவிற்கும் டேஹ்ரியும். ஆகவே அதுபற்றி தான் கூறிய மொன்ன்றாண்டு முன்னுள்ள கருத்துக்களையும் வெளியிட வகை செய்து ள்ளார்.


அதில் 2008 ஆம் ஆண்டில், அதாவது "வ்ன்னிப் போர்" நடக்கும் போது,கருணாநிதி இருந்த பட்டினிப் ஓர் உட்பட, " நாடாளுமன்ற உறுப்பினர்கள்" ராஜினாமா என்ற இலங்கை தமிழர் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டது அனைத்துமே ஒரு " திசை திருப்பும் நாடகம்" என்று பகிரங்கமாக அந்த அமெரிக்க தூதர் ஹூப்பர் வசம் " தயாநிதி " தெரிவித்தார் என்பது வெளியாகி விட்டது இப்போது கலைஞர் வசமாக மாட்டிக் கொண்டார். அம்பலப்பட்டு உலகத் தமிழர் மத்தியில் நிற்கிறார். " தயாநிதி" இனி அழியும் திமுக வில் தனக்கு வேலை இல்லை என்ற நிலை எடுத்து விட்டார்.

Sunday, May 22, 2011

சின்னக்குத்தூசி உடல் எரியூட்டப்பட்டது.

ஒரு பிரபல எழுத்தாளன் உடல் இன்று மாலை ஐந்தரை மணிக்கு மயிலாப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. நக்கீரன் அலுவலகத்தீலிருந்து புறப்பட்ட "இறுதி ஊர்வலத்தில்" , முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இந்நாள் மேயர் மா.சுப்பிரமணியம், தி.க.தலைவர் கி.வீரமணி, மதிமுக மல்லை சத்தியா, நக்கீரன் கோபால், காமராஜ், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பெரியார் திக. விடுதலை ராஜேந்திரன், மற்றும் கட்சி எல்லைகளைத் தாண்டி பல பெரியார் தொண்டர்கள், நடந்து வந்தனர். மயிலாப்பூர் இடுகாடு வரை வந்த அனைவரும், சின்னக் குத்தூசியின் " அர்ப்பணிப்பை" பற்றியே பேசிக் கொண்டு வந்தனர்.


ஆண்ட திமுக தலைவரான முதல்வருக்கு மிக, மிக, நெருக்கமாக் இருந்தும்கூட, ஒரு சிறிய துரும்பைக் கூட தனக்காக பெற்றுக் கொள்ளாத பெருந்தகை என்பதையே எல்லோரும் கூறினர். பல ஊடகவியலாளர்கள் அவரது " அறையை" " நூல் நிலையமாகவும்" " ஆவண காப்பகமாகவும்" பாவித்ததை நினைவு கூறினர்.சின்னக் குத்தூசியின் " நினைவாற்றலை" பயன்படுத்தி, அவரிடம் வரலாற்று செய்திகளை கற்றுக் கொண்டவர்கள் அங்கே பரிமாறிக் கொண்டனர். பெரியார் பெருந்தொண்டர் என்று குறுஞ்செய்திகள் அவர் பற்றி பறந்தன. நக்கீரன் இதழ் சார்பாக, இரண்டு வித சுவரொட்டிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தின. " தினமணி", "தினமலர்" ஏடுகளுக்கு பதில் கொடுக்க, அவர்களை " பார்ப்பனர்கள்" என்று திட்டுவதற்கு, கடந்த ஓராண்டாக முதல்வர் கலைஞருக்கு, சின்னக் குத்தூசியின் எழுத்துக்கள் பயன்பட்டன என்றும் அதற்காகவே " முரசொலியில்" அவரது கட்டுரைகள் எழுதப்பட்டன என்றும் ஒரு மொத்த பெரியார் தொண்டர் எடுத்துச் சொன்னார்.


வருகிற மே 29 ஆம் நாள், " மாலை ஐந்தரை மணிக்கு, "பெரியார் திடலில்" சின்னக் குத்தூசிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும், அவ்வமயம் அவரது படத்திறப்பும் நடைபெறும் என்று நக்கீரன் கோபால் அறிவித்தார்.

கலைஞர் வருந்தினால் தாங்காமல் உயிர் நீத்த நண்பர் சின்னகுத்தூசி.

இன்று காலை அந்த மாபெரும் எழுத்தாளர் திடீரென மாரடைப்பு வந்து மறைந்துபோனார். மருத்துவமனையில் ஓராண்டாகவே படுக்கையில் இருந்தாலும், ஒவ்வொரு நாளும், தவறாமல் "முரசொலிக்கு" கட்டுரைகள் எழுதிக் கொண்டே இருந்தார் சின்னக் குத்தூசி அய்யா. அய்யாவின் இயற்பெயர் "தியாகராஜன்" அவர் கலைஞரின் பால்ய கால நண்பர். அவரது ஊர்காரர். கலைஞர் மீதான அவரது ஈடுபாடு அளவற்றது. கலைஞரின் குடும்பத்திலோ, கழகத்திலோ இந்த அளவுக்கு அய்யா சின்னக் குத்தூசி வைத்த அளவுக்கு கலைஞர் மீது பாசத்தை, நேசத்தை, வைத்திருப்பவர் உண்டா என கேள்வியே கேட்கலாம்.


அப்படிப்பட்ட " சின்னக் குத்தூசி" மறந்துவிட்டார். அவர் முரசொலியில், " கொக்கிரகுளம் சுல்தான் முகமது" என்ற பெயரிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். பெரியார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, திமுக வின் வரலாற்றை மனதில் கொண்டு, அவர் கலைஞர் எடுக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஆதரித்து எழுதி வந்தவர். கலிஞரின் " பகுத்தறிவு" கொள்கையை கடைசிவரை நம்பி வாழ்ந்துவந்தவர். கலைஞருக்கு யார் கேள்வி எழுப்பினாலும், கலைஞருக்கு யார் பதில் கொடுத்தாலும், சின்னக் குத்தூசி அய்யாவின் எழுத்தாணி அவர்களை, மறுநாளே "முரசொலியில்" பதம் பார்த்துவிடும்.

அந்த " சின்னக் குத்தூசியால்" கலைஞர் இப்போது பெற்ற மாபெரும் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடிகிறதா எண்பதை விட, அந்த தோல்வி கலைஞரை பாதிக்குமோ என்ற கவலை சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். கனிமொழி கைது செய்யப்பட்டது பாதித்திருக்குமா என்பதைவிட, கனிமொழி கைது கலைஞரை பாதித்து விட்டதே என்று, சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். அதுவே அவருக்கு, " மாரடைப்பாக" வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி கலைஞர் மீது " பாசம்" ம்ட்டுமே வைத்திருந்த ஒரு உண்மை நண்பர் சின்னக் குத்தூசி தனக்கு என்று திமுக ஆட்சியிலோ, கலைஞர் குடும்பத்திலோ பெற்றதில்லை.


அவரது எழுத்துக்களை வெளியிட்டு வந்த " நக்கீரன்" ஏடுதான் அவரது வாழ்க்கையை அதாவது உணவு, மருத்துவ செலவு என்ற அடிப்படை தேவைகளுக்கு பார்த்துக் கொண்டது. இப்போது அவரது உடலையும் நக்கீரன் அலுவலகம்தான் தாங்கி வருகிறது. திருமணம் செய்து கொள்ளாத சின்னக் குத்தூசி, ஒரு சிறிய அறையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். அவரை பல, பல ஊடகவியலாளர்கள் சென்று எப்போதும் சந்தித்து பல செய்திகளை கேட்டவண்ணம் இருப்பார்கள். பல ஊடகவியலாளர்களுக்கு வரத்தான் ஆசான் என்றால் சரியாக இருக்கும். தனது அறையில் எப்போதுமே பல பத்தாண்டுகளாக வெளிவந்த "செய்திகளை" ஆவண காப்பகம் போல வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்து நிறைய பேருக்கு வரலாற்றை புள்ளி விவரத்துடன் கொடுப்பார்.

அந்த "சின்னக் குத்தூசி" ஒருமுறை கலைஞருடன் சிறிய மாறுபாடு கொண்டபோது, கோபத்தில் கலிஞர் அவரி வராதே என்று கூறிவிட்டாராம். அது நண்பர்களுக்குள் நடக்கக் கூடிய ஒரு ஊடல்தான். ஆனால் அதை வெளிப்படுத்திய கலிஞர் என்ன சொன்னாராம் தெரியுமா? அந்த "பாப்பானை" என்று திட்டினாராம். ஆமாம், சின்னக் குத்தூசி பிறந்தது பார்ப்பனக் குடும்பத்தில்தான். ஆனால் அவர் அந்த குடும்பத்துடன் வாழாமல் தன்னை கலைஞரது அரசியலுக்காக, அதாவது கலைஞரின் " பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்காக" அர்ப்பணித்துக் கொண்டவர். அப்படிப்பட்டவரை இப்படி திட்ட யாரால் முடியும். கலைஞர் கோடுள்ள " மனப்பான்மையால்" மட்டுமே முடியும்.

தயாவின் ஆசையில் மண் போட்டாரா கலைஞர்?

தயாநிதியைப் பொறுத்தவரை, ஆ.ராஜாவை உள்ளே தள்ளியாச்சு. அரசியல் போட்டியாக தாத்தாவால் கொண்டுவரப்பட்ட கனிமொழியையு, உள்ளே தள்ளியாச்சு. சோனியா வகையராக்களிடமும், நற்பெயர் எடுத்தாச்சு. திமுக வின் ஆங்கில அர்த்தமே, "தயாநிதி முன்னேற்ற கழகம்" என்று தான் காங்கிரஸ்காரர்களிடம் கூறியதையும் வலுப்படுத்தியாச்சு. கோபப்பட்ட தாத்தாவிற்கு மனம் மகிழ, "ஹெட்லைன்ஸ் டுடே" யில் கருத்துக் கணிப்பு என்ற பெயரல் பொய்யையும் வெளியிட்டாச்சு. இனி எல்லாமே தான்தான் என்று இருக்கும் போது, இந்த "சீ.என்.என்.--ஐ.பி.என். தனது வெளியீட்டில் அடுத்து வரும் "ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில்" தயாநிதி பெயரும் வர இருக்கிறது என்று போடுவது கண்டு தயாநிதி கோபப்பட்டாராம்.


அந்த காட்சி ஊடக பொறுப்பாளரிடம், தொலைபேசி, திட்டினாராம். எஸ்.சீ.வி. யில் சீ.என்.என். ஐ காட்டமாட்டோம் என்றாராம். அவரும் வெட்டிவிடுங்கள், நாங்களும் உங்கள் பங்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன எண்பதை வெளியிடுகிறோம் என்றாராம். இப்போது திமுக தலைவர் தனது மகள் கைது ஆனபின்பு, அதிக மனவருத்தத்தில் இருக்கும்போது, ஐ.மு.கூ. அரசின் ஆண்டு விழாவிற்கு யார் போவது அல்லது போகாமலிருப்பது என்று முடிவு செய்வதற்கான "ஆலோசனை" கலைஞர் வீட்டில் நடந்தது. அதில் தாவும், ஸ்டாலினும் எதிர்பார்த்தது போல, " தயாநிதி மாறன் ஐ.மு.கூ. ஆண்டு விழாவிற்கு செல்லேண்டும்" என்ற கருத்து எடுபடவில்லை.



காங்கிரஸ் செய்த "துரோகம்" விவாதிக்கப் பட்டது. அதனால் ஐ.மு.கூ. அரசின் ஆண்டுவிழாவிற்கு திமுக சார்பாக யாரும் செல்லக் கூடாது என்று கலைஞருக்கு சார்பான கருத்துக்கள் வந்தன. தயாவும்,ஸ்டாலினும் வற்புறுத்தி, காங்கிரசை இந்த நேரத்தில் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசனை கூறிய பிறகு, குடும்பத் தலைவர் செவி மடுக்கிறார். ஒரு பிரதிநிதியை திமுக, ஐமுகூ ஆண்டுவிழாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகிறது. தன்னை அனுப்புவார்கள் என்று தயா எதிர்பார்க்கிறார். அதன்மூலம் தனது கனவை நனவாக்கலாம் என்று எண்ணுகிறார்.


ஆனால் "குடும்பத் தலைவருக்கு" அந்த சூழ்ச்சியும் தெரியும். ஆகவே கழகத்தின் ஒரே பிரதிநிதியாக, டி.ஆர்.பாலுவை அனுப்ப முடிவு செய்கிறார். அதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார். டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக கட்சித் தலைவர் என்ற கோதாவில் சென்று கலந்து கொள்ளட்டும் என்கிறார். மாட்டார் திமுக மத்திய அமைச்சர்கள் எல்லோரும் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கிறார். தான் டில்லி சென்று கனிமொழியை சிறையில் பார்க்க கழகத்த்தலைவர் விரும்புகிறார். அதற்கான பயணம், திங்கள் கிழமை என்கிறார். அப்போது சோனியாவை சந்திக்க மாட்டேன் என்கிறார்.

சோனியா தான் சீ.பி.ஐ. மூலம் தனது குடும்ப உறுப்பினர்கள் மேல் கைதுகளை ஏவி விடுபவர் என்ற உண்மை, கழகத்தளைவருக்கு தெரியும். அதேநேரம் கூட்டணியில் குழப்பமில்லை என்று கூறுவதும் அவருக்கு தெரியும். அதே பாணியை தானும் எடுத்து இந்த முடிவை எடுக்கிறார். சோனியாவிற்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உதவி செய்துவருபவர் தயாநிதிதான் என்பதும் கலைஞருக்கு தெரியும். இப்போது " தயாநிதியால் பாதிக்கப்பட்ட டாட்டா, தனது ஆட்களை உள்ளே அனுப்பிய தயாநிதியையும் உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்வதும் தாயாவிற்கு தெரியும். இப்ப எப்புடி இருக்குது?

Saturday, May 21, 2011

கனிமொழி கைது, தயாநிதிக்கு வெற்றியா?

கனிமொழிகைதுஎன்பது,கருணாநிதிக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததா, இல்லையா என்பது செய்தியல்ல. ஆனால் அந்த கைதை செயல்படுத்த, நடந்த " பின்சதிகள்" எங்கிருந்து ஏவப்பட்டன என்பதே செய்தி. அதை இந்திய ஊடகங்கள் வெளியிட தகுதி இருக்கிறதா என்பது அதைவிடப் பெரிய செய்தி. நடந்த ஸ்பெக்ட்ரம் கதை ஒரு கார்பரேட் மோதல். அதவாது மக்களது வரிப்பணத்தையும், சந்தையையும் வளைத்துப் போட்டு, அதில் சிக்கிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வைத்து, சீ.பி.ஐ. மூலம், கைகளை நகர்த்தி, ஒரு "செஸ்" விளையாட்டு இங்கே நடைபெற்று வருகிறது.

கைபேசிகளில் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஆரம்பத்தில் கேட்பாரற்று கிடந்தது. அது 2001 ஆம் ஆண்டும், அதற்கு முந்திய ஆண்டுகளும் காட்டும் படம். அதற்குபிறகு, சிறிது, சிறிதாக நமது நாட்டு மக்களும், கைபேசியில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். அதனால் அது சந்தையில் எடுபடத் தொடங்கியது. முதலாளிகள், பெரு முதலாளிகளாக மாறி, அவர்களும் பன்னாட்டு முதலாளிகளாக, காற்பரேட்களாக மாறிவரும் காலகட்டத்தில், " சந்தையைப்" பற்றி ஒரு தீர்க்கமான பார்வை அந்த நிறுவனகளுக்கு கிடைக்கத் தொடங்கின. இந்தியாவில் இதுபோன்ற புதிய வளரும் தொழில்களில், போட்டி போடும் நிலையில், டாடாவும், ரிலையன்சும், சுனில் மிட்டலும், முதன்மையாக நிற்பதும் தெரிந்த செய்திதான்.

திடீர் பணக்காரனாக ஆகவேண்டும் என்று எண்ணிய, முரசொலி மாறன் வாரிசுகள் கலாநிதியும், தயாநிதியும், மத்திய அமைச்சரவையில் புகுந்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் அது. தனத்தை மாறன், தோஹா உலக வர்த்தக அமைப்பின் மாநாடு சென்று, இந்திய வணிக அமைச்சர் என்ற கோதாவில், கையெழுத்திட்டு, அந்நிய ஏகபோகங்க நிறுவனங்களை " தாரளமயமாக்கல்" மூலம் இந்த நாட்டிற்குள், கண்டபடி இறக்க ஏற்பாடு செய்தார். அதை நன்கு கவனித்த வாரிசு மாறன்கள் அதன் பலனை பற்றிக் கொள்ள திட்டமிட்டார்கள். அதற்காக மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் துடித்தார்கள்.

முரசொலி மாறனின் மறைவுக்காக காத்திருந்த கருணாநிதி, உடனடியாக பி.ஜே.பி. கட்சி உறவை தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரசுடன் கை சேர்த்தார். இதற்கான ஏற்பாட்டையும் கார்பரேட்கள் கற்றுக் கொடுக்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்பில் இருந்த முரசொலி மாறனின் மைந்தர்கள் போட்ட திட்டம்தான் என்று அப்போது கலைஞருக்கு தெரியவில்லை. அமெரிக்க பி.ஜே.பி.யைவிட காங்கிரசை கையாள்வது எளிது என்ற எண்ணம் கொண்ட நாடு. பி.ஜே.பி.யுடன் கூட்டணியில் இருந்த அல்லது அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஒரு அமெரிக்க எதிரி என்ற கருத்தே அமெரிக்காவிற்கு மேலோங்கி இருந்தது.

அவரும் அவ்வாறே நடந்துகொண்டார். இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய 1991 இல் ராஜீவ் கொலைக்கு பிறகு வந்த நரசிம்மராவ் ஆட்சியே காரணம் என்று ஜார்ஜ்கூறிவந்தார். அமெரிக்க பொருளாதார கொள்கைகளை அந்த ஆட்சி அனுமதித்ததால்தான் இந்திய பொருளாதாரம் கேட்டுவிட்டது என்று ஜார்ஜ் பரப்புரை செய்து வந்தார்.

ஆகவே ஜார்ஜ் தலைமையிலான என்.டி.ஏ. என்ற " தேசிய ஜனநாயக கூட்டணியை" விட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே தங்களுக்கு சாதகமானது என்று அமெரிக்க கருதியர்கு, திமுக எப்போதுமே அமேரிக் சார்பு நிலை எடுக்கும் கட்சி என்பதால், அவர்கள் காங்கிரஸ் தலைமயிலான கூட்டணியையே விரும்பினர். தவிர தோஹா புகழ் முரசொலி மாறனின் மைந்தர்கள், தந்தையின் உணர்ச்சிமிகு பி.ஜே.பி. உறவை அறுத்தெறிந்து, சோனியா காங்கிரஸ் உறவை எடுக்க, கலைஞரைவற்புறுத்தினர்.அதனால் யு.பி.ஏ. என்றஐக்கியமுற்போக்கு கூட்டணியில் திமுக சேர்ந்தது. நியுயார்கை சார்ந்து வணிக உறவுகளை பலப்படுத்தி வந்த கலாநிதி அதையே விரும்பினார். .


அதனாலேயே தங்குதடையின்றி தயாநிதி முக்கிய அமைச்சர் பதவியை பெறமுடிந்தது. அதற்கும், அன்றே டில்லி சென்ற மு.க. மூன்று நாள் உட்கார்ந்து, தயாநிதி கெட்ட, ஐ.டி.அமைச்சரவையை விடாப்பிடியாக போராடி பெற்றது நினைவுக்கு வரவேணும். அந்த அளவுக்கு அந்த அமைச்சகத்தில் உள்ள "கொள்ளை வாய்ப்புகளை" தயா அறிந்தே வைத்திருந்தார். அதனால்தான் அதையே கலைஞரிடம் முரண்டு படித்து வாங்கினார். அதற்கு தங்களது தொழிலான " காட்சி ஊடகம்" சம்பந்தப்பட்டது என்று போய் கூறினார். கலைஞரும் அதை நம்பிவிட்டார். தன்னிடம் கொடுக்கப்பட்ட அந்த ஐ.டி. அமைச்சகம் மூலம், ஒரு புறம் ஸ்பெக்ட்ரம் வணிகமும், மறுபுறம் டி.ஆர்.ஏ.ஐ.மூலம் ஊடக இத்து விளையாட்டுகளையும் தயா நடத்தத் தொடங்கினார். அனைவரும் அவரது காட்சி ஊடக சார்பு சித்து விளையாட்டுகளையே கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர் சிறிது, சிறிதாக " ஸ்பெக்ட்ரம்" பெரும் அளவில் கொள்ளையடிக்க ஏதுவான தொழில் என்பதைப் புரிந்து அதன் உரிமங்களை, கார்பொரேடகளுக்கு பழைய அடிமாட்டு விலையில் விற்கத் தொடங்கினார். அதற்காக பிரதமர் மன்மோகனை தன் கையில் போட்டுக் கொண்டார்.


சோனியாவை " அத்தை" என்றும், மன்மோகனை " மாமா" என்றும் தயாஅழைக்கத் தொடங்கினார். இளம் " தயா" வின் அந்த அங்கில அழைப்பிலேயே அவர்கள் மயங்கிவிட்டனர். அமைச்சரவை ஒப்புதல் என்று கூறி, பழைய 2001 ஆம் ஆண்டு விலைக்கே உரிமங்களை அவர் விற்றதையாரும்கண்டுகொள்ளவில்லை. கிடைக்கும் லாபங்களில், சோனியா குழுவினரையும் கவனித்து வந்தார்.


இந்தியாவில் பாரம்பரிய முதல்லை "டாடா". அவர் எந்த புதிய தொழில் வந்தாலும் அதை ஆக்கிரமிக்க எண்ணுவார். மிகவும் தாமதமாக புரியப் பட்ட, கைபேசி தொழிலின், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அவரும் வேண்டினார். ஆனால் புதிய திடீர் பணக்காரர் " ரிலயன்ஸ் அதில் நுழிந்து போட்டியிட்டது. அம்பானி சகோதரர்கள் " எதை கொடுத்தாலும்" அதிக கமிசன் கொடுத்து உரிமம் வாங்குவதில் கெட்டிக்காரகள். அதனால் அவர்கள் "தயா" வை பிடித்துவிட்டார்கள். சுனில் மிட்டல் தயாவிற்கு வேண்டியவரானார்.


"டாடா" விற்கும், "தாயா"விற்கும் தகராறு ஏற்பட்டது. அதை ஊடக வணிக முரண்பட்டுஎன்று அப்போது தமிழகத்தில் வர்ணித்துக்கொண்டார்கள்.அது ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்டது என்பது அப்போது அமபலத்திற்கு வரவில்லை.


உரிமம் கிடைக்காமல் கோபமடைந்த "டாடா" , திமுக குடும்ப "தாத்தா"வை தொடர்புகொள்ள ஆரம்பித்தார். அப்போதே உதவியவர் "நீரா ராடியா". அவர் தனது முதலாளிக்கு விசுவாசமாக "அரசியலில் தரகு வேலை" செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். அதனால் "டாடா" சார்பாக மு.க.விற்கு, "தயா"வை ஓரங்கட்ட "அறநூறு" கோடி கொடுக்கப்பட்டது. அதை வாங்கிய கலிஞர், " ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் வரையில், வாடி இருக்குமாம் கொக்கு" எண்பதை உணர்ந்தவர்.


அவருக்கும் சாதகமாக் நிகழ்வுகள் வந்தன. "தினகரன்"ஏட்டின் "கருத்து கணிப்பின்" மூலம், மூத்தவன் அழகிரிக்கும், கே.டி. சகோதரர்களுக்கும், சண்டை மூண்டது. கே.டி. சகோதரர்களின் "வைக்கோல் கன்னுக்குட்டி" போல இளையவர் ஸ்டாலின் செயல்பட்டு வந்தார். அதனால் அப்படி ஒரு கருத்துகணிப்பின் மூலம், ஸ்டாலினுக்கு நிறைய மதிப்பெண் என்றும், அழகிரிக்கு இரண்டு அம்திப்பேன் என்றும் "தயா" போட்டுவிட்டார். அப்போதே "கருத்து கணிப்பு" மூலம் "கருத்துருவாக்கம்" செய்யும் அமெரிக்க கலையை "சகோதரர்கள்" அமுல்படுத்தி வந்தனர்.இன்றுவரை, "ஊடகங்களை" அவ்வாறு தவாறாக பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளனர்.


காத்திருந்த கருணாநிதி, தயாவை குறிப்பிட்ட மைச்சகத்திளிருந்து கழட்டுவதர்ககவே, கட்சியிலிருந்தும், அதையொட்டி மத்திய அமைச்சரவியிளிருந்தும் கழட்டினார். குடும்பத்திற்குள், " ராஜாத்தி" எதிர்ப்பில், "தயாளுவின் பிள்ளைகளான "அழகிரியும், ஸ்டாலினும்" ஒன்றாக இருந்துவந்தனர். ஸ்டாலினுக்கு "தயா" ஆதரவு என்பதால் பதிக்கப்பட்ட அழகிரி, புதிய கூட்டணியை" கனிமொழி"யுடன் கட்டிக் கொண்டார். '


மீண்டும் "தாத்தா"வுடன் சேர்வதற்காகவும் , மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகவும் "தயா" தயாளு மூலம் ஒரு அறநூறு கோடியை " தட்சிணையாக" செலுத்தினார். அதற்குள் "டாடா" மூலம், "தாத்தா"விற்கு அந்த செய்தி போய் சேர்ந்தது. 2004 முதல் 2007 வரை, ஸ்பெக்ட்ரம் ஊழலில், "தயா" அடித்த கோடிகள் பற்றிய செய்தி "குடும்ப தலைவர் " வசம் போய் சேர்ந்தது. அந்த ஸ்பெக்ட்ரம் ஆசை அவரையும் தொற்றிக் கொண்டது.


திமுக தலைவர் ஏற்கனவே மருமகன் "முரசொலி மாறனிடம்" " கரையடிமையாக " அதாவது பினாமியாக இருந்த ஆ.ராஜாவையே தேர்ந்தெடுத்தார். ஐ.டி. அமைச்சகம் மீண்டும் திமுக விற்கு வேண்டும், அதுவும் தனது பினமிக்கே வேண்டும் என்பது தலைவரின் ஆசை. அதுதான் ராஜாவிடம் அது வந்து சிறந்த கதை. அடஹ்ர்கு முழுமையாக பயன்பட்டவர்" ராஜாத்தி அம்மையார்". அவர் தனது மகளையும் அதற்கு பயன்படுத்திக் கொண்டார்.


இலக்கியத்திலும, பெண்ணுரிமையிலும் லயித்துவந்த கனிமொழியை, மெல்ல, மெல்ல கருணாநிதி, "அரசியலுக்கு" இழுத்து கரைக்க தொடங்கினார். "தாய்--தந்தையின்" அழுத்தத்தில் மகள், ஒழ்ழல் அரசியலில் கரையத்தொடங்கினார். "டாடா" அந்த மன்னர் குடும்பத்தின் முழு ஓத்துழைப்பாளராக மாறினார். அதுவே " சாத்தான்குளம் தைடேனியும் திட்டத்தில் எதிரொலித்தது. அந்த தைடேனியும் கொண்டு வர, கலைஞர் பட்ட பாடு நாடு அறியும். அதில் வர வெற்றிபெற வில்லை.


இப்போதும் "டாடா" கொடுத்த "வோல்டாஸ்" நிலம், அண்ணாசாலையில் குடும்பத்தின், சீ.ஐ.டி. காலனியை ஆட்டுவித்து வருகிறது. அதுவே கனிமொழி மீது இன்னொரு வழக்காக வரும். "டாடா:விற்கு "தாத்தா" கொடுக்கும் சலுகைகள், "ராஜா" மூலம் வலுப்பெற்றன. இப்போது "டாடா" ஆட்கள் "நீரா", ராஜா"," மும்பை பால்வா", கனிமொழி" என்று வரிசையாக மாட்டிக்கொண்டார்கள். அவர்களும் திஹார் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். இடையில் "அழகிரியை" சமாதானம் ஆனபிறகு, தன்வசம் இழுத்துக் ஒண்டார் "தயாநிதி" அதுவே " ராஜாத்தி--ராஜா-கனிமொழி" கும்பலுக்கு எதிராக இன்றுவரை அழகிரியை நிறுத்திவிட்டது.


" தயா"வின் எத்ரிகள் இப்படி வரிசையாக மாட்டினால், அதை 2007 ஆம் ஆண்டில், தான் ஏமாற்றப்பட்ட போது, தனது "தினகரன்" நாளேட்டிலும், "சன்" காட்சி ஊடாத்திலும், முதலில் மபலப்படுத்தியது, தயாநிதிதான் எண்பதை யார் மறப்பார்கள்? அந்த "சதி" தாத்தாவிற்கும் தெரியும், ராஜாவிற்கும் தெரியும், கனிமொழிக்கும் தெரியும், ராஜாத்திக்கும் தெரியும், டாடாவிற்கும் தெரியும். அதனால் அவர்களும் பதிலடி கொடுக்காமல் விடப்போவதில்லை.

Thursday, May 19, 2011

காஞ்சியில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்.

மே 18 . "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" ஏற்பாட்டில், காஞ்சிபுரம் நகரில் மாலையில், "முள்ளிவாய்க்கால் போர்குற்ற நாள்" என்ற தலைப்பில் பெரியார் தூண் அருகே வீரச்சாவடசிந்த தியாகிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தி, மலரஞ்சலி மூலம் இரண்டாவது ஆண்டு நினைவை கடைப்பிடித்தார்கள். த.வி.ராகவராஜ், " தமிழர் உலகம்" சார்பாக தலைமை தாங்க, தமிழினியன், காஞ்சி அமுதன், வழக்கறிஞர் சந்தோஷ், ஆகியோர் உரையாற்றினர்.சென்னையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் சரஸ்வதி, வழக்கறிஞர் பாண்டிமாதேவி, டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் விளக்க உரைகளை நிகழ்த்தினர்.

வழக்கறிஞர் பாண்டிமாதேவி, தனது உரையில், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறிய செய்திகளை ஆழமாக புட்டு, புட்டு வைத்தார். போர் நேரத்தில் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடங்களில் குண்டு பொழிவது விதி மீறல் எனபதுதான் பொதுவாக பார்க்கப்படுகிறது என்றார். ஆனால் இந்த அறிக்கை, அதையும் தாண்டி,பல விசயங்களை எழுதியிருக்கிறது என்றார். போர் நேரத்தில் அப்பாவி மக்கள் பட்டினி கிடக்கும்போது, அவர்களுக்கு உணவளிக்கவேண்டியதும் அரசின் கடமை. அதை ராஜபக்சே அரசு செய்ததா எண்பதை அறிக்கை ஆராய்கிறது. மூன்றரை லட்சம் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாட்டிக்கொண்டார்கள் எனும்போது, வெறும் பத்தாயிரம் பெற்ற்தான் இருப்பதாக இலங்கை அரசு, ஐ.நா.விற்கு கூறியுள்ளது, என்றார்.


அதன்மூலம், ஐ.நா.உதவியில், உலக உணவு பாதுகாப்பு மையம் மூலம் ராஜபக்சே அரசு எவரும் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே உணவு பெற்றது. அதனால் மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதற்கும், அதில் பல முதியோரும், குழந்தைகளும் பசியால் இறந்து போகவும் இலங்கை அரசு காரணமாக இருந்திருக்கிறது என்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். அவை எல்லாமே போர்விதி மீறல்கள்தான் என்றார். அதேபோல மருத்துவமனைகள் மீது குண்டு மழை பொழிந்த்ததை மட்டுமே போர் குற்றமாக நாம் பார்க்கிறோம். ஆனால் மருத்துவமனைகளில் இருந்த அல்லது இல்லாத அடிபட்ட பொதுமக்களுக்கு, அதிலும் வயோதிகர், பெண்கள், குழிகள் ஆகியோருக்கு டேஹ்வையான மருந்துகளை வழங்காமல், அதுபற்றிய தேவைகளை அனைத்துநாட்டு அரங்கில் கூறாமல்,இலங்கை அரசு இருந்ததால்தான், பலர் போதிய மருந்து இல்லாமல், அம்ருத்துவ சிகிச்சை இல்லாமல், இறந்துவிட்டார்கள் என்ற அந்த அறிக்கை செய்தியை, சுட்டிக் காட்டி அதுவும் போர்விதி மீறல்தான் என்று வ்ழக்கறிஞர் வாதிட்டார்.


டி.எஸ்.எஸ்.மணி பேசும்போது, உலக வரலாற்றில் எந்த டேஹ்சிய இனமும், தமிழ்த்தேசிய இனம் போல, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவு, போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தனதாக்கிக் கொண்டு வளரவில்லை என்றார். அது தந்தை பெரியாரின் சாதனை என்றார். அதேபோல பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான், பெண் புலிகளை களத்தில் இறக்கிவிட்டு, துவக்கு ஏந்திய பான் புலிகள் மூலம், பாலின சமத்துவத்தை நடைமுறையில் படைத்த ஒரே இயக்கம் என்றார். அடுத்து, உலக சரித்திரத்தில் ஒவ்வொரு டேஹ்சிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்ட கட்டத்திற்கு வளர்த்தெடுத்த போது, கொரில்லா போர்களை நடத்தியுள்ளார்கள்: தரைப் படையை அக்ட்டியுல்லார்கள். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மட்டும்தான்," வான்புலிப் படையையும், கடல் புலிப் படையும்" கட்டியவர் என்ற சாதனையை குறிப்பிட்டார்.

இத்தகைய சாடஹ்னைகளை ஏற்ற தமழினம் தினரவேண்டிய அவசியம் இல்லை. திகைத்து நிற்க வேன்ம்டியதில்லை. அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை. உலக நாடுகளை மிரட்டும் அளவுக்கு தமிழ் தேசிய இனம் எழுந்து நிற்கிறது.அது முன்னேரிச்செல்வதைத்தவ்ற வேறு வ்ழியே இல்லை.என்றார். அடுத்து நிறைவாக பேசிய பேராசிரியர் சரஸ்வதி, நாடு அக்டந்த தமிழீழ அரசாங்கம் எப்படி தோற்றுவிக்கப் பட்டது எனபதை விளக்கினார். ஆயுதப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு தஹ்ர்கலைக்க பின்னடைவு வந்தபோது, அதுவே அரசியல் நகர்வுகளுக்காக, அனைத்து நாட்டு அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்


அத்தகைய உலக அரசியல் நகரவுகளில், நாடு கடந்த தமிழீழ அரசு, டேஹ்ர்கு சூடன் ஆரசால் ஆண்கீகரிக்கப் பட்டுள்ளது என்றார். அடுத்து பல நாடுகளின் அங்கீகாரம் பெற்று, ஐ.நா.வின் அங்கீகாரமும் பெரும் என்றார். ஐ.நா. நிபுணர் குழு அறிகையின் மீது, அணித்து நாட்டு விசாரணை குழுஅமைக்க வலியுறுத்தி,பலலட்சம்கையெழுத்துக்களை தமிழ்நாட்டில் பெருவதர்கு தங்கள் அமைப்பு செயல்பட்டு அவ்ருகிறது என்றார். அதற்கான எண்பத்து ஏழாயிரம் கைஎழுத்துக்களை வாங்கி தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உரத்திற குமாருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். அவை ஐ.நா. வசம் ஒப்புவிக்கப்படும் என்றார். புலிகளின் தாகம் மட்டும் "தமிழீழ தாயகம் அல்ல அது இன்று உலகத் தமிழர்கள் அனைவரின் தாகம்" என்றார்.

Wednesday, May 18, 2011

மே-17 சென்னை மீனவர், முஸ்லிம் தமிழர் கூட்டம்.

" நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம்" சென்னையில் மே 17 ஆம் நாள், " முள்ளிவாய்க்கால் படுகொலை கண்டனப் பொதுக்கூட்டம்" ஒன்றை நடத்தினர். நடத்திய இடம் சென்னையில் பெருந்திரளாக மீனவ மக்கள் வாழும் "வட சென்னை--காசிமோடு " பகுதி. ஏற்பாடு செய்தவர்கள் " இந்திய மீனவர் சங்கம் " என்ற மீனவர் அமைப்பு. "தோழமை மையம்" சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு இத்தகைய கூட்டங்களை நடத்தத்தொடங்கி உள்ளனர். கூட்டத்தின் முக்கிய நிகழ்வு, அதில் " ராமநாதபுரம் " சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, " ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ". கலந்து கொண்டு முழங்கியது.இவர் " மனித நேய மக்கள் கட்சி"யின் ஒருங்கிணைப்பாளர்.இந்த இயக்கம், அதன் மூல இயக்கமான, " தமிழ்நாடு முஸ்லிம் முன்ன்ற கழகம்" என்ற மைப்புடன் சேர்ந்து, பெரும் அளவில் அவர்களது கொடிகளுடன், ஏப்ரல்-30 ஆம் நாள் சென்னையில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம்" நடத்திய மாபெரும் பேரணியில், சென்னை கடற்கரை சாலையில் கலந்து கொண்டவர்கள்.

அந்த பேரணியிலேயே, முஸ்லிம் தமிழர், இந்து தமயொழர், கிறித்துவ தமிழர், அனைவரும் தமிழர்களே என்று முழக்கம் எழுப்பியவர்கள் இவர்கள். ஆகவே அவர்களது தலைவர், தான் சட்டமன்ற உறுப்பினராக டேஹ்ர்ந்தேடுக்கப்பட்ட பிறகு, கலந்துகொள்ளும் முதல் கூட்டமே இதுதான் என்று அறிவித்த போது, கைதட்டல் எழுந்ததில் ஆச்சர்யமில்லை. தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட " ஜவாஹிருல்லா" முள்ளிவாய்க்கால் பற்றி கூறும்போது, அங்கே நடந்தது ஒரு " தமிழின அழிப்பு" என்று அழுத்தம், திருத்தமாக தெரிவித்தார். அந்த இனப்படுகொலையை, ஆடஹ்ரித்து நடத்தியவர்கள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்றார். அதனுடன் கூட்டணி சேர்ந்துள்ள திமுக அந்த இன அழிப்பில் பங்காளி என்றார். அன்றைய முதல்வர் கருணாநிதி, உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடி, ராஜபக்சேக்கு ஒத்துழைத்தார் என்றார்.


ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவால், தோற்கடிக்கப்பட்ட " அசன் அலி" என்ற முன்னாள் எம். எல்.ஏ. ராஜபக்சேவின் நண்பர் என்று பெருமையாக தன்னைப்பற்றி சொல்லிக்கொள்பவர் என்பதையும் சுட்டிக் காட்டினார். அதனால் அந்த தொகுதியில் ராஜபக்சேவை தோற்கடித்து ஜவாஹிருல்லா வெற்றி பெற்றிருக்கிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர், ஏப்ரல் 2 ஆம் நாள் கடலுக்கு சென்ற போது, அவர்களை பிடித்து சிங்கள கப்பல்படை " உலக கோப்பை மட்டைப்பந்து " விளையாட்டில் படுகொலை செய்ததை அவர் சுட்டிக்காட்டி, அந்த கொலைகளை மறைத்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றார். அதை சட்டமன்றத்தில் எழுப்புவேன் என்றார். படுகொலைகளை தேர்தல் நேரத்தில் மறைத்துவிட்டு, அதற்கு நட்ட ஈடு மட்டும் ஒன்பது நாட்களில் எப்படி அறிவிக்க முடிந்தது என்று கேட்டார்.

எம்.எல்.ஏ. கெட்ட அந்த கேள்வியை ஏற்கனவே அந்த கூட்டத்தில் மீனவர் தலிவர்கள் தயாளன், ரூபேஷ், மகேஷ் ஆகியோர் கேட்டிருந்தனர். அடுத்து " இந்திய தவ்ஹித் ஜமாஅத் " தலைவர் எஸ்.எம். பாக்கர் அதேபோல முழங்கினார். முஸ்லிமா, கிருத்துவா, இந்துவா என்பதல்ல, எல்லோரும் "தமிழர்கள்" என்றார்.அந்த கூட்டத்தில் " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம் " அமைப்பாளர் பேரா.சரஸ்வதி பேசினார்.அவர் நாடு கடந்த அரசை பற்றியும், தோழமை மையம் பற்றியும் செயல்பாடுகளை விளக்கினார். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, ஊடகவியலாளர்களான அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, மே 17 இயக்க திருமுருகன், மீனவப்பென் வள்ளியம்மாள், தியாகு, மோகனவேலன் ஆகியோரும் உரையாற்றினர். மே 18 ஆம் நாள் " தோழமை மையம்" காஞ்சிபுரத்தில் தனது பொதுக்கூட்டத்தை, பெரியார் தூண் அருகே "தமிழர் உலகம்" அமைப்பின் தமிழினியன் ஏற்பாட்டில் நடக்க இருக்கிறது.

Monday, May 16, 2011

மோடி, நாயுடு, அஜித்சிங், பரதன் எல்லாம் ஒரே அணியா?

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவர் எப்படி வரலாம்? மதவெறிக் கொலைகள் செய்தவர் என்ற குரல் எழும்பியுள்ளது. ஆனால் அவர் சிபியை யின் டி.ராஜாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அது தவிர சிபிஐ யின் அகில இந்திய பொதுச்செயலாளரான ஏ.பி.பரதன் வந்திருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் முதல்வரும், தலைவருமான, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் அஜித்சிங் வந்திருந்தார். இப்படி பிரபல அகில இந்திய தலைவர்கள் வந்திருந்தார்கள்.

மோடி வந்ததால், பிஜேபி யுடன் அம்மா போகப்போகிறார் என்றால், நாயுடு வந்ததால் மூன்றாவது அணியுடன் போகப்போகிறார் என்றும், பரதன் வந்ததால் மூன்றாவது அணிதான் என்றும், அஜித்சிங் வந்ததால் காங்கிரசுடன் போகலாம் என்றும் கூறிக் கொள்ளலாம் அது அரசியல் தெரியாதவர்களின் கூற்றாக மாறிவிடும். கலைஞர் தனதுமுக்கிய நிகழ்வுகளுக்கு, சொநிஆவையும், மன்மோகனையு அழைக்கும்போதே, எடியூரப்பாவையும் அழைத்தார் அல்லவா, அதுபோன்ற அரசியல் இது. இன்னமும சொல்லப்போனால், அந்த கலிஞரின் முயற்சிக்கு இந்து பதில் என்றும் கூறலாம். கலைஞர், பிஜேபி தலைவர் இல.கணேசன் வீட்டிற்கு சென்று, பிறந்த நாள் வாழ்த்து கூறினார் ல்லவா, அதற்கு இது பதில் என்றும் சொல்லலாம்.

இதுதான் ஆளும்வர்க்க பாணி. எம்.ஜி.ஆர் எப்படி கேபிடலிசம், சோசலிசம், எல்லாம் சேர்ந்து அண்ணாயிசம் என்று கூறினாரோ, அந்த பாணி. ஜெக்கு எப்படியாவது கலைஞருக்கு பதில் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் சோனியாவுடன் தேநீர் என்ற புதிய பாணி. கலைஞருக்கும் அப்படியே.

,.

செம்மொழி நிறுவனம் ஏன் துள்ளி குதிக்கிறது?

இன்று " செம்மொழி நிறுவனம்" அதன் " நூலகத்துடன்"புதிய ஆட்சி வந்தபிறகு, பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அகற்றப்பட்டு, " கட்டி முடிக்கப்படாத" புதிய வளாகத்தில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளது .அங்கு இன்று ஒரு அழைப்பிதழை விநியோகம் செய்தார்கள். அதில் வருகிற வெள்ளிக் கிழமை ஒரு கருத்தரங்கிற்கு " கனிமொழி" அழைக்கப்பட்டுள்ளார் என்றும், { கனிமொழிக்கு டில்லி சிபியை நீதிமன்றத்தில் பினைக்கான வழக்கு அன்றுதான் வருகிறது} " பெரிய கண்ணகி சிலையும்" அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஏன் இப்படி அந்த பேராசிரியர் ராமசாமி செய்கிறார்?

கல்வெட்டு கட்டினீர், கட்டிடத்தை முடித்தீரா?

ஐயோ. புதிய தலைமை செயலக கட்டிடத்தை, வளாகத்தை விட்டு,விட்டு பழைய தலைமை செயலக கட்டிடத்தையே, பயன்படுத்துவதா? ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் என்னாவது? என்று மிகுந்த அக்கறையுடன், அரசுக்கு நட்டம் ஏற்படுத்த விரும்பாத உள்ளங்கள், திமுக பக்கத்திலிருந்து மிகுந்த ஆதங்கத்துடன் குரல் எழுப்புகிறார்கள். நியாயமான குரல் போல தெரிகிறதே? என்று நாமு வினவினோம். அந்த " சொல்லப்படும் புதிய தலைமை செயலகம்" கட்ட ஒப்பந்தம் எடுத்த கீழக்கரை ஈ.டி.ஏ.முதலாளி சலாலுதீன், திமுக தலைமைக்கு மன்னிக்கவும் மன்னர் குடும்பத்திற்கு எவ்வளவு கையூட்டுடன் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்? இப்படி ஒரு " ஊழல்" [ஆற்றிய விசாரணை தேவைப்படுகிறதே? அப்படி விசாரணையை தூண்டிவிடத்தான் ஒருவர் நீதிமன்றத்தில், " எப்படி மாற்றலாம் தலைமை செயலகத்தை" என்று வழக்கு போட்டிருக்கிறாரா?

இந்த " சலாலுதீன்" , ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? என்று சிபிஐ யை கேட்க வேண்டியிருக்கிறதே? அதுமட்டுமின்றி, வானளாவிய அளவில் புகழப்பட்ட " கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்த " சலாலுதீன்" கையில்தானே கொடுக்கப் பட்டுள்ளது? இப்படி பிரபலமடைந்த " ஊழல் மன்னரின்" கட்டுமானங்களை பயன்படுத்தினால், அதுவும் புதிய அரசின் அனைத்து தலைமை காரிடங்களுக்கும் பயன்படுத்தினால், நாளை சிபியை விசாரணை வரும்போது, அதாவது இந்த கட்டிட விசயமாக வந்துவிட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டியதும் " புதிய அரசுதானே"? இது எதற்குடா வம்பு என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ?


ஆமாம். ஏதோ கட்டி முடித்துவிட்ட கட்டிடத்தை பயந்படுத்தவில்லைஎநப்துபொல இந்த மனிதர்கள் பேசுகிறார்களே? இன்னமும் பாதி கூட கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை எப்படி " புதிய தலைமை செயலகம்" என்று ஆளும் கும்பல் அறிவித்து " திறப்பு விழா" கொண்டாடினார்கள்? அதற்கும் இந்த நாட்டின் பிரதமர், ல்கன்கிராஸ் தலைவர், கர்நாடக முதலைமைச்சர் ஆகியோர் வந்தார்கள்? திறப்பு விழா நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஏன் இன்னமும் முடிக்கப்படவில்லை அந்த கட்டிடம்? அதில் எதாவது ஊழல் இருக்கிறதா? கட்டப்படாத கட்டிடத்தை " கட்டிய கட்டிடம் போல" திரைப்பட கலைஞரை வைத்தூ " தோட்டா தாரணி" செட் போட்டு சினிமா போல அந்த முதல்வர் செய்தாரே? அது எல்லாம் எந்த கணக்கில் வரும்? அந்த செலகிகளை யார் ஏற்றுக்கொள்வது?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல்லாயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்த " குடும்பம்" அந்த மக்கள் பணத்தை விரயம் செய்ததற்கு " நட்ட ஈடாக" திரும்ப செலுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்க மாட்டார்களா? புதியா ஆட்சியாளர்களுக்கு, ஊழலை எத்ரித்து வாக்களித்த மக்கள், எப்படி இந்த " ஊழல்கள் மிகுந்த" கட்டப்படாத கட்டிடத்தை பயன்படுத்துவதை ஏற்பார்கள்? மாகளது விருப்பத்தை, புதிய ஆட்சியாளர்கள் மத்தித்தால், உடனடியாக இந்த " கட்டப்படாத கட்டிட" செங்கல்களை எண்ணுவதற்கு விசாரணை ஆணையம் போடவேண்டும். அந்த கட்டிடத்தில் சட்டமன்றத்தை, தலைமை செயலகத்தை நடத்தாமல் மட்டும் விட்டால் போதாது. " கல்வெட்டு கட்டிய முதல்வர், கட்டிடத்தை முடிக்காதது ஏன்" என்று விசாரணை ஆணையம் அமைத்து சோதிக்க வேண்டும்.

Sunday, May 15, 2011

சாதிக் கட்சிகள் சாதித்தனவா?

இந்தமுறை சட்டமன்ற தேர்தலில், பெரும் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளுக்கு எதிராக," சாதிக் கட்சிகள்" சிலவும் போட்டியிட்டன. அப்படி போட்டியிட்டதில் குறிப்பிட்டு சொல்லப்போனால் " பச்சமுத்து உடையார் தலைமையிலான "இந்திய ஜனநாயக கட்சி", " தேவநாதன் தலைமையிலான " யாதவ மகா சபா" போன்றவற்றை குறிப்பிடலாம். முதலாமவர் தனது உடையார் சாதியை நம்பி, நின்றார். அவர் அமைத்த கூட்டணியில், ஜான்பாண்டியன், சிவகாமி ஆகியோரும் உண்டு. அவரது கூட்டணி 84 இடங்களில் நின்றது. தேவநாதனின் அமைப்பு, 53 யிடங்களில் நின்றது.அவர்களது எதிர்பார்ப்புக்கு ஒப்ப, ஒவ்வொரு தொகுதியிலும் 10000 என்றும், 20000 என்றும் வாங்கிவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் 2000 எனவும், 4000 எனவும்,வாங்கியிருக்கிறார்கள்.

இதேபோல, தேவா கட்சியும் 2000 வாக்குகளை மட்டுமே சில தொகுதிகளில் பெற முடிந்திருக்கிறது.ஆனால் தேவநாதன் தான் நின்ற " நாங்குநேரியில்" 12000 வாக்குகள் பெற்று வென்ற கட்சிக்கும், தோற்ற கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒத்த வாக்குகள் பெற்றுள்ளார். ஏன் எதிர்பார்த்த அளவு " சாதி கட்சிகள்" சாதிக்க வில்லை? எல்லாம் " அலை" தான் காரணம். " இலை கட்சிக்கு இந்த முறை வீசியது அலைதானே?

Saturday, May 14, 2011

கலைஞரின் வாழ்நாள் சாதனை.

கலைஞர் கருணாநிதி, தனது வாழ்நாளில், தான் வாழும் நாளிலேயே, ஒரு மாபெரும் சாதனையை சாதித்துள்ளார். அண்ணாவால் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கமான " திராவிட முன்னேற்ற கழகத்தை" தனது வாழ்நாளிலேயே, கழகத்தின் வாழும் நாளிலேயே, ஒரு பெரும் இழுக்குக்கு உள்ளாகியுள்ளார். தானும் அரசியல் சாணக்கியத்தனத்தால் இந்திய அரசையே நிர்ப்பந்தம் செய்யும் அளவுக்கு " தகுதி" பெற்று இருக்கும் போதே, தனது கழகத்தை ஒரு குடும்பம் என்று வர்ணித்து வந்த கலைஞர் அதையே சற்றமாற்றி, தனது "குடும்பமே கழகம்" என்று நிரூபித்த காரணத்தால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாற்று சிந்தனைக்கு வித்திட்டு இருக்கிறார்.

அதன்மூலம், திமுக என்ற மாபெரும் இயக்கத்தை, தமிழ்நாட்டு மண்ணிலேயே, " சட்டப் பேரவையில் எதிர்க் கட்சி " தகுதி" யில்கூட இருக்க விடாமல் செய்த சாதனை அல்லவா செய்திருக்கிறார்? இது ஒரு " வாழ்நாள் சாதனையல்லவா?".

சாதி,மதங்களை தாண்டியது ஜெயலலிதாவின் வெற்றி.

தேர்தல் கட்சிகள் தாங்கள் வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு பெற்ற சாதிகளை சேர்ந்த வேட்பாளர்களையே அந்தந்த பகுதிகளில் நிறுத்துவார்கள். இது வழமையான ஒன்றுதான். இந்த நடைமுறையில் " சாதி மறுப்பு" பேசும் எந்த கட்சியும் மாற்றி சிந்திப்பதில்லை தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே " சாதி மறுப்பு " அதிகமாக பேசுவார்கள். பேசுபவர்கள் எல்லாம் செய்பவர்கள் இல்லை என்று நீங்கள் கூறலாம்.. ஆனால் தமிழ்நாட்டில் " அதிகம் பேசுகிறார்களே". எப்படி சொல்லாமல் இருப்பது?


அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வழக்கமாக எல்லா தொகுதிகளைப் பற்றிய நிலைமையை கணிக்கும் போதும " அந்த சாதி வாக்குகள் இவர்களுக்கு" என்பதாக கணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே கணிக்க முடியாமல், எல்லா சாதிகளையும், மற்றும் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் செல்வி.ஜெயலலிதாவிற்கு அதாவது அவர்களது கூட்டணிக்கு வாகளித்திருக்கிரார்கள். இது பல தொகுதிகளின் ஆய்வில் தெளிவாக தெரிகிற உண்மை. அதற்கு தாரணம் வேண்டும் என்றால், தென் மாவட்டங்களில் குறிப்பாக, விருதுநகர் மற்றும் தூத்திக்குடி மாவட்டங்களில், நாயுடு சாதி மக்கள் அதாவது கம்மா நாயுடு சாதி மக்கள், தேவர் சாதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, கோவில்பட்டி மற்றும் சாத்தூர் தொகுதிகளில், அதே கம்மா நாயுடு சாதி மக்கள், தேவர் சாதியை சேர்ந்த அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள்.


கோவில்பட்டியிலாவது நின்ற அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராசு, உள்ளூர்காரர். அவரை எதிர்த்து வேலை செய்தது, தேவர் சாதியில் அந்த பகுதியில் பிரபலமான கடம்பூர் ஜமீன் என்று அழைக்கப்படும் அதேகட்சியான அதிமுகவை சேர்ந்த கடம்பூர் மாணிக்க ராஜ்தான். அவர் ம.நடராசன் குழு என்பது வேறு விஷயம்.ஆனால் கம்மா நாயுடு மக்கள் கடம்பூர் ராஜுக்கு வாக்களித்து வெற்றிபர வைத்துள்ளார்கள். சாத்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தேவர் என்பது மட்டுமல்ல, அவர் சிவகங்கையை சேர்ந்தவர், மதுரையில் வாழ்பவர், என்றாலும் அவருக்கு கம்மா ஆண்யுடு சாதி மக்களும் சேர்ந்து வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள்.


அதேபோல " தேவேந்திர குல வேளாளர்கள்" குறிப்பாக தென்மாவட்டங்களில் "தேவர் சாதி" வேட்பாளர்களுக்கோ, அதேபோல "தேவர் சாதி" மக்கள், " தேவேந்திர குல வேலாலர்களுக்கோ" சம்மீப காலமாக உறுதியாக வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, "புதிய தமிழகம்" அதிமுக கூட்டணியில் சேர்ந்தவுடன், அவர்கள் இவர்களுக்கும், இவர்கள் அவர்களுக்கும் முழுமையாக வாக்களித்துள்ளார்கள். அதே மாதிரி, வடக்கு மாவட்டங்களில், வழமையாக " அதி திராவிடர்கள்" வன்னியர் சாதி" வேட்பாளர் களுக்கும், " வன்னியர் சாதி" மக்கள், " அதி திராவிடர் வேட்பாளர்களுக்கும்" வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, " பாமகவும், விசிகவும் சேர்ந்து நிரபதால், இருவரும் இருவருக்கும் வாக்களித்து, திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள் என்ற கலைஞரின் தந்திரம் தோற்று, பதிலாக இரண்டு சாதி கட்சிகளின் வாக்குகளும், தேமுதிக என்ற விஜயகாந்த் கட்சிக்கும், அதிமுக விற்கும் விழுந்துள்ளது என்ற உண்மை, சாதிகளை தாண்டி மக்கள் சிந்தித்திருப்பதையே காட்டுகிறது.



இப்படியாக் தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதாவின் கூட்டணிக்கு அளித்துள்ள வாக்குகள், உள்ளபடியே " மன்னர் குடும்ப ஆட்சியை" வீழ்த்த வேண்டும் என்ற வெறியையே மக்கள் கொண்டிருததை காட்டுகிறது. அதற்கான அலை வீசியதையே தெளிவாக்குகிறது. இந்த அலைக்கு முன்னால் சாதியாவது, மதமாவது?

Thursday, May 12, 2011

விடுதலைப் புலிகள் தலைவர் படம் வைத்து வாக்குகேட்ட இயக்கம்.

தமிழ்நாட்டில் ஒரு மாத காலமாக் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் தங்களது பரப்புரைகளில், பல தலைவர்களது படங்களை போட்டு விளம்பரங்கள் செய்வதும், சுவரொட்டிகள் ஒட்டுவதுமாக இருந்தனர். அத்ய்தகைய கட்சிகளில், இயக்கங்களில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றும், அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்ப்பட்ட கட்சிகள் என்றும் தேர்ர்தலில் நின்றன. சில அமைப்புகள் பதிவு செய்யப்படாத நிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, தேவநாதன் யாதவ் தலைமையிலான," யாதவ் மகா சபா". அதனால் அவர்கள் ஜார்கண்டில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்சாவிடம் அவர்களது சின்னமான " வில் அம்பு" பெற்று அதையே தங்களது சின்னமாக பயன்படுத்தி தேர்தலில் நின்றனர்.

அதேசமயம் எல்லா கட்சிகளையும் போல அவர்களுக்கும், பல தலைவர்களின் படங்களை போட்டு விளம்பரம் செய்யவேண்டிய கட்டாயம் வந்தது. அதில் காமராஜ், அம்பேத்கர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், அழகு முத்து கோன், சுந்தரலிங்கம், என்று பல தலைவர்கள் படங்களை போடும்போது நினைவாக " தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் படத்தையும்" போட்டு விளம்பரங்கள் செய்தனர். சுவரொட்டிகளையும் "பிரபாகரன்" படத்துடன் ஒட்டினர். தமிழ்நாட்டில் நடந்த டேஹ்ர்தலில் இந்த ஒரே இயக்கம்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை தாங்கள் நின்ற 53 தொகுதிகளிலும் ஒட்டி, விளம்பரப்படுத்தி பணி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தமிழின ஆரவல்ர்களால் பாராட்டப்[டுகிறது..

சிபிஎம் தலைமையில் மாறுதலை உருவாக்கும் தேர்தல் முடிவுகள்.

மேற்கு வங்கமும்,, கேரளாவும், சிபிஎம் மிற்கு பெரும் கோட்டைகள் என்று கருதப்படுகின்றன.ஆனால் அங்கெல்லாம் கட்சி எந்த நிலையில் உள்ளது என்பது வேறு விஷயம். சிபிஎம் இன் "அரசியல் தலைமை" குழுவில் [போலித் பீரோவில்] போது செயலாலரகா பிரகாஷ் கரந்த் வந்ததிலிருந்து அவருக்கும், புத்தாதேவ் தலைமையிலான் மேற்கு வணக்க அணிகளுக்கும் இடையேதான் பெரும் சர்ச்சையே எழும்பி வந்தது கரந்த் எடுத்த காங்கிரஸ் எதிரப்பு நிலைப்பாட்டை புத்தாதேவ் கும்பல் மறுத்து வ்ந்தது வகுப்புவாத பிஜேபிக்கு எதிராக கணிரசை அவ்வப்போது அனுசரணையாக பார்க்க வேண்டும் எனபது புத்தாதேவ் வழி. இதை இடது ஜனநாயக சக்திகளை திரட்டும் பிரகாஷ் கரந்த் மறுத்து வந்தார்.

இப்போது மேற்கு வங்கம் சிபிஎம்மை தூக்கி எரிவதால், புத்தாதேவ் வழி கடும் சர்ச்சைக்கு உள்ளாகும். அவரது குழுவினர் தனிமைப்படுவர். கரந்த் கைகள் ஓங்கும். கண்கிஅரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் எனபது கரந்த் வழி. அந்த வழி கட்சிக்குள் செல்வாக்கு பெரும். இது வணக்கம் தரும் பாடமாக் மாறும். அதேசமயம் கேரள இன்னொரு பாடத்தை தர வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அங்கே வி.எஸ்.அச்சுதனந்ததிற்கு கட்சிக்குள் ஆதரவு பெருகும். அவரது ஜென்ம விரோதியாக மாறிவிட்ட, கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் தனிமைப் படுத்தப்படுவார் அதுவும் கட்சியின் "அரசியல் தலைமைக்குழு " வில் சில மாற்றங்களை கொண்டு வரும்.


அச்சுதானந்த்ததிற்கு எதிராக, பினராய் விஜயனுக்கு ஆதரவாக இருக்கும்பளரும், இனி வி.எஸ்.ற்கு அதரவாக இறங்குவார்கள். அது சிபிஎம் இன் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை சற்று மாற்றி அமைக்க உதவலாம். அதன்மூலம் ஒரு புதிய சக்தியாக "மூன்றாவது அணி" எனபது வலுவாக உருவாகும்.


.. .

புத்தாதேவ் ஏன் விரட்டப்படுகிறார்?

மேற்கு வங்கத்தில், இடது சரிகள் ஆட்சி என்ற பெயரில் நடந்துவரும் புத்தாதேவின் சிபிஎம் ஆட்சிக்கு மக்கள் வழியனுப்பு விழா நடத்த தயாராகி விட்டார்கள். எல்லா ஊடக கருத்து கணிப்புகளிலும், தேர்தலுக்கு பின் எடுத்த கணிப்புகளிலும் அதவே மிகுந்து நிற்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டு, புத்தாதேவ் ஆட்சி விரட்டப்படப் போகிறது என்பது பச்சையாக் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ஏன் இந்த மாற்றம்? மேற்கு வங்க மக்கள் இடதுசாரி சிந்தனைகளிலிருந்து விடுதலை பெற்று விட்டார்களா? மம்தாவிற்கு வாக்களிப்பது என்பது, காங்கிரசை ஏற்ற்க்கொண்டதாக் பொருளா? முதலாளிகளுக்கு சாதகமாக் மக்கள் மேற்கு வங்கத்தில் போய்விட்டார்கள் என்று இந்த வரப்போகும் தேர்தல் முடிவை சொல்லலாமா?

அய்யா. சொல்லமுடியாது. ஏன் என்றால் முதலாளிகளுக்கு சாதகமாகத்தான் புத்தாதேவ் ஆட்சி புரிந்து வ்ந்தார்.அவரை விரட்டுவது முதலாளிகளுக்கு சாதகமானது என்று கூறுவது தவறு. முதலில் மேற்கு வணக்கத்தில் ஜோதிபாசு நடத்திவந்த சிபிஎம் ஆட்சி, அம்ன்னிக்கவும் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி எனபது, முதலாளிகளுக்கு சாதகமாக த்தான் செயல்பட்டது அதாவது இங்கிலாந்து அம்ற்றும், பிர்லாவிற்கு சாதகமாக செயல்பட்டது என்பது நக்சல்பாரிகளின் விமர்சனம். ஆகேவே இந்த நாடாளுமன்ற இடதுசாரிகளை நாம் முதலாளிகளுக்கு எதிர்ப்பு என்று சொன்னால் உண்மையாக இருக்காது. அடுத்தூ புத்தாதேவ் ஆட்சியில்தான்"சிங்கூரும், நந்திகிராமும் நடந்தன" அந்த ஊர்களில் பசுமை நிலங்களை, விவசாயிகளின் விலை நிலங்களை அவர்களிடம் கேட்காமல் பன்னாட்டு நிறுவனகளுக்கு தாரை வார்க்க எண்ணி புத்தாதேவ் செய்த ஒப்பந்தம்தான் பெரும் போராட்டமாக வெடித்தது.


ஆகவே மேற்கு வங்க அரசு மக்களுக்கு விரோதமாக செய்த அணித்து நடவடிக்கைகளும் இப்போது சேர்ந்து அடிக்கிறது. சிபிஎம் வழக்கமாக செய்யும் வன்முறையை திருணாமல் காங்கிரசிடமும் காட்டியபோது, அதற்கு பதிலடியை மாவோவாதிகள் கொடுத்தார்கள். திரினாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்கும் மக்கள் இடது சாரி எதிர்ப்பாளர்கள் என்றால் அவர்கள் ஏன் மாவோவாதிகளை ஆதரிப்பதாக சிபிஎம் புலம்பவேண்டும்? மாவோவாதிகள் திரினாமுல் காங்கிரசை ஆதரிக்கிறார்கள் என்று இடதுசாரிகள் ஏன் கலங்க வேண்டும்? ஆகவே இடது சாரி பேசிக்கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தும் புத்தாதேவ் ஆட்சிக்கு எதிராக திரளும் வாக்குகள் நிச்சயமாக இடது சாரி கருத்துகளுக்கு எதிரான வாக்குகள் அல்ல.

மாவோவாதிகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் எல்லாம் அதிகப்படியான வாக்குகுகள் பதிவாகி உள்ளன எண்பதை சில ஏடுகள், மக்கள் ஆயுதப் பாதை என்ற மாவோவாத பாதையிலிருந்து திரும்பி தேர்தல் ஜனநாயக பாடஹிக்கு வந்து விட்டார்கள் என்று எழுதுகிறார்கள். இது சிரிப்புக்கு உள்ளான ஒரு க்தை. மாவோவாதிகள் இந்த தேர்தலில், சிபிஎம் அம்ற்றும் நாடாளுமன்ற இடது சாரிகளை தோற்கடிக்க எவ்ண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். அதற்காக இருக்கும் ஒரே மாற்றான திரினாமுல் காங்கிரசுக்கு தானே போடுவார்கள்? இந்த உணமியை கூட புரியாதவர்கள் ஊடகங்களில் எழுதுகிறார்கள். இதே செயல்தந்திரத்தை ஆந்திராவில், நக்சல்பாரிகள், தெலுங்கே தேசம் கட்சிக்கு எதிராக ககிரசுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததும், அதில் கூட்டணியாக இருந்த டி.ஆர்.எஸ். என்ற அமைப்பை ஆதரித்தார்கள், அதனால் அவர்களது செயல்தந்திரப்படி இப்போது, மாவோவாதிகள் சிபிஎம் மிற்கு தேர்தல் அரசியலிலும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள்.

தோற்றுப்போனவரா உள்துறை அமைச்சர்?

இன்று அதிமுக போதுச்ச்யலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதா கொட்த்துள்ள அறிக்கை ஒரு உண்மையை பட்டவர்த்தனமாக்கி உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வைத்துள்ள வேண்டுகோளில், இந்த முறை வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும்போது, சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது விடப்பட்ட ஒரு பிழையை சரிசெய்யும்படி கேட்டுள்ளார். அது சிவகங்கை நாடாளுமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது ஏற்பட்ட கோளாறு. அதாவது இந்தியாவையே இப்போது ஆள்வதாக படம் காட்டிக்கொண்டு இருக்கும் ப.சிதம்பரத்தின் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட கோளாறு.


ப/சிதம்பரத்தை எதிர்த்து அப்போது சிவகனகை நாடாளுமன்ற தேர்தலில் 2009 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டிபோட்டது ராஜா கண்ணப்பன். அப்போது வாக்கு எண்ணிக்கையில் வழக்கம் போல, என்னும்போதே ஒவ்வொரு பாகத்திலும் எண்ணி முடிந்தவுடன், இரண்டு அல்லது போட்டியிடும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தனகுள்ளு வந்த வாகுகளை குறித்துக் கொண்டே அவ்ருவார்கள். கடைசியாக அனைத்து பாகங்களின் வாக்குகளையும் சேர்த்து தேர்தல் அதிகாரி அதாவது வாக்கு எண்ணிக்கை அதிகாரி, தொகுத்து மொத்தம் குறிப்பிட்ட வேட்பாளர் எத்தனை வாக்குகள் வாங்கினார் என்று சொல்வார். எல்லா வேட்பாளர்களின் ஏஜெண்டுகளும் தாங்கள் குறித்துவைத்த எண்ணிக்கையையும் கூட்டி, சரி பார்ப்பார்கள். இந்த இடத்தில் சிதம்பரம் பெற்ற வாக்குகளை, கண்ணப்பனுக்கும், கண்ணப்பன் பெற்ற வாக்குகளை சிதம்பரத்திற்கும் கூட்டி பாத்து, சிதம்பரம் வெற்றி என்று அறிவித்து விட்டார்கள் என்பதே அந்த அம்மையார் இப்போது கூறியிருக்கும் குற்றச்சாட்டு. அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்கிறார் ஜெயலலிதா.


அதேபோல இப்போதும் நடந்து விடக்கூடாது.என்பதுதான் அவரது கோரிக்கை. இதில் சிதம்பரம் எப்படி வென்றார் எனபது நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. நம் பங்குக்கு நாமும் ஒரு உண்மையை சொல்லிவைப்போம். விடுதலை சிறுத்தை கட்சியின் ஒர்வே சட்டப் பேரவை உறுப்பினராக கடைசி வரை இருப்பவர் எழுத்தாளர் ரவிக்குமார். இவர் முதல்வர் கருணாநிதியின் செல்லப் பிள்ளை என்று பெயர் பெற்றவர். இவர் ஒரு சமயம் முதல்வர் களிஞரிடம், " இந்த சிதம்பரத்தை, தொற்றுப்ப்னவரை நீங்கள்தான் வெற்றிபெற வைத்தீர்கள். அவர் நமக்கு இப்போது தொல்லை கொடுத்து வருகிறார்" என்று கூறியிருக்கிறார். அதற்கு கலிஞர்," நான் இல்லப்பா. அது ஏன் பையன் செய்தது" என்று கூறினாராம். மதுரை பையன் தொலைபேசியில் பேச, தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சி தலைவர் எழுந்து நின்று போன் பேச, சரி அய்யா என்று கூறியவர், ஏற்காணவே தான் அறிவித்திருந்த கண்ணப்பன் வெற்றியை மாற்றிபோட்டு, சிதம்பரம் வெற்றி என்று கண்ணப்பனிடம் கூறிய கதையை ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படியோ, நாட்டுக்கு பின்புற கதவு வழியாக, மக்களை சந்தித்து வாக்குகள் வாங்காத ஒருவர் பிரதமராக இருக்க, தேர்தலில் தோற்றுப்போன ஒருவர் உள்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது, " நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு" நல்ல பெயரைக் கொடுக்குமல்லவா?

ஒரு இளவரசர் உருவாக்கப்படுகிறார்.

ராகுல் காந்தி கைதானார். பெரிய செய்தியாக முதல் பக்கத்தை நாடு பூரா நிறைத்தது. அதுதானே அவர் எதிர்பார்த்தது. உத்திரப் பிரதேசத்தில், விவசாயிகள் போராடுகிறார்கள். எதற்காக? அரசு நிலநகளை கையகப்படுத்தும்போது, சதுர அடிக்கு 800 ரூபாய் வரை, கொடுக்கவேண்டும் என்று போராடுகிறார்கள்.நொய்டா டில்லி அருகே யமுனை நதிக்கரையில் உள்ள உத்திரப பிரதேச மாநிலப் பகுதி. எப்போதுமே நொய்டாவில் நடக்கும்எல்லா பிரச்சனைகளும், டில்லியின் பாதிப்புகளால் உருவானாலும், அது உத்திரப் பிரதேச அரசைத்தான் பாதிக்கும். " சிறப்பு பொருளாதார மண்டலம்" நொய்டாவில் தொடங்கி, செயல்படுத்த டில்லியின் அரச குடும்பங்கள் அதாவது ஆட்சியாளர்கள் எப்போதுமே விரும்புவர். அந்த அளவுக்கு அதிகமான வாய்ப்பும், வசதியும் நிறைந்த பகுதி அது.

டில்லியின் அரசியல்வாதிகளுக்கு நினைத்தால் நொய்டாவில் நல்லதும் செய்யமுடியும், கேட்டதும் செய்யமுடியும்.dilliyin அதிகாரிகளுக்கு நொய்டா ஒரு சொர்க்க பூமி. அங்கேதான் குழந்தைகளை கொலைகள் செய்த கொடூரக் காட்சிகளும் அரங்கேறியது. அப்போதும் மாயாவதி அரசுதான் பழியை சுமந்தது. நொய்டா டில்லியின் நிழலில் எல்லாவடரியும் அனுபவித்துக்கொள்ளும்.ஆனால் சட்டஒழுங்கு பிரச்சனை வந்துவிட்டால், பதில் சொல்ல வேண்டியது, உத்திரப் பிரதேச அரசு என்று ஆகிவிடும் உத்திரப் பிரதேசத்தின் தலைநகரில் இருந்து நோய்டாவை கவனிப்பதை விட, டில்லியில் உள்ளோர் நன்றாக கவனிக்க முடியும். அதனால் டில்லி அரசியல்வாதிகள் நொய்டாவில் விளையாடும் விளையாட்டு, உத்திரப் பிரதேச அரசின் ஆள்வோரால் எப்போதுமே தாக்குப் பிடிப்பது கடினம். இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது.

மாயாவதி ஆட்சி ஒருபுறம் முலாயம்சிங் கூட்டத்தால் எதிர்க்கப்படுகிறார். மறுபுறம் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கப்படுகிறது. தலைகீழாக நின்று பார்த்தாலும், உத்திரப் பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சி எழ முடிய வில்லை.இளவரசர் ராகுலை எப்படியாவது உத்திரப் பிரதேச மக்களிடம் செல்வாக்கு பேரா வைத்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலை பிரும்ம பிரயத்தனம் எடுக்கிறது. அதன் முதல் நாடகம்தான், ராகுல் தலித் மக்களின் வீடுகளில் போய் தங்கினார்.ஊடகங்கள் அதை பெரிதாக பெரு புரட்சியே நாட்டில் நடந்ததுபோல வெளிப்படுத்தினார்கள். தலித் வீட்டில் இந்த இளவரசர் போய் தங்கிவிட்டால் போதுமா? அதன்மூலம்தான் தலித் மக்களது வாழ்கையை பற்றி தெரிந்துகொள்ள போகிறார் என்றால், அதாவது அவர் மூலம் ஆள்வோர் தலித் மக்களது வாழ்கை பற்றி தெரிந்துகொள்ள கொள்ள போகிறார்கள் என்றால் , இதுவரை தெரியவில்லையா?.

அறுபத்தி இரண்டு ஆண்டு காங்கிரஸ் கட்சி, நாட்டையே ஆண்டபிறகு, அத்தனை ஆண்டுகளாக உத்திரப் பிரதேசத்தையும் ஆண்ட பிறகுதானே தலித் மக்களது நிலைமை இப்படி மொடமாக இருக்கிறது என்று மக்களுக்கு தெரியாதா? அதை இந்த பட்டத்து இளவரசர் போய் தங்கி பார்த்த பிறகுதான் தெரியவர வேண்டுமா? அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுனாலேதானே அவர்கள் காங்கிரசை தோற்கடித்துவிட்டு, மாயாவதியை கொண்டு வந்திருக்கிறார்கள்? தலித் மக்களுக்கு இந்த இளவரசர் ஏதாவது புதிய திட்டங்களை கொண்டுவந்து, அவர்களது வாழ்க்கை செப்பனடைய அத்தகைய மத்திய திட்டங்கள் மூலம் அறிமுகமாகி இருந்தால் கவனிப்பார்கள். வெறும் " தங்கியிருக்கும்" நாடகம் அந்த மக்களை ஏமாற்ற போதுமானதா? அந்த இரண்டு ஆண்டு நாடகத்திற்கு பிறகு, இளவரசருக்கு வழிகாட்டிகளாக உள்ள, பன்னாட்டு மூலதன நிறுவனகள் வேறு மாதிரி புதிதாக சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

இப்போது உத்திரப் பிரதேச விவாசாயிகள் போராட்டத்தில் யாராவது, விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று குரல் கொடுக்கிறார்களா? பசுமை நிலங்களை எப்படி எடுக்கலாம் என்று தட்டி கேட்கிறார்களா? ராகுலும் அப்படிப்பட்ட கோரிக்கையை புதிதாக கிளப்ப தயாரா? சரி. அதுதான் இல்லை. நிலங்களை கையகப் படுத்தும் போது, கொடுக்க வேண்டிய நட்ட ஈட்டை, அதிகப்படுத்தி கொடுக்க மத்திய அரசு ஏதாவது சட்டத்தை கொண்டுவந்துள்ளதா? அப்படி உத்தேசமாவது இருக்கிறதா? இவையெல்லாம் இந்த அரச குடும்பம் ஆளும் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை ஆயிற்றே? அதை மக்களுக்கு தெரியவிடாமல் செய்வதில் இவர்களது கெட்டிக்காரத்தனம் இருக்கிறதா? அப்படியானால் ஆழமான கோரிக்கையை வைக்காத ராகுலின் கைது ஒரு நாடகம்தானே?


மாநில அரசு தனது வரையறைக்கு உட்பட்டு அதிக நட்ட ஏஅடு கொடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்தார்களா? ஆக்கபூர்வமான வழியில் விவசாயிகளுக்கு உதவ என்னினால்தானே இவர்கள் அப்படி செய்வார்கள்? விவசாயிகள் போராட்டம் காவல்துறையால் அடக்கப்பட்டபோது, மேலும் கொந்தளித்தது. அப்போது அஜித்சிங் வந்தார். அவர் காங்கிரஸ் ஆதரவுதான். விவசாயிகளின் போராட்டத்தை கலவரமாக ஆகியதற்கு பிரியங்காவின் கணவர் வதேராதான் கரணம் என்று ஊடகங்களில் செய்திவருகிறது. அதேபோல " ராகுல் ஏன் நொய்டா செல்லவில்லை என்று ஊடகங்களில் கேள்வி எழும்பியது. அஹையோட்டித்தான் அய்யா நேற்ற்யதிகாலை மோட்டார் சைக்கிளில் நொய்டா சென்றார். தர்ணா செய்தார். கைதானார். இந்த நாடகம் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

ஒரு அரசு தனக்கு அடுத்த தலைவர்களைவரை உருவாக்க என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு பல வரலாருகளிருக்கின்றன.ஒரு இளவரசரை உருவாக்க பல முயற்சிகள் செய்வார்கள். அவரது பெயரை மதிப்புள்ளவராக ஆக்குவதற்கும் பல முயற்சிகள செய்வார்கள். அதில் ஒன்றுதான் இந்த அதிகாளி மோட்டார் சைக்கிள் சவாரியும் கைதும். இதில் அவர்கள் சாதித்தது என்ன? ராகுலை ஒரு அக்கறையுள்ள, விவாசயிகள் மீது பற்றுள்ள அரசியல்வாதியாக காட்டி விட்டார்கள். அவரது இளமையை மோட்டார் சைக்கிள் மூலம் காட்டிவிட்டார்கள். அதற்காக ராகுல் ஏன் வரவில்லை என்று முந்திய நாளே ஊடகங்களில் கிளப்பி விவாதமாக்கி விட்டார்கள். இதன்மூலம் அவர் தலைமையிலான காங்கிரஸ் விவசாயிகளின் நண்பனாகி விடும் என்று நம்புகிறார்கள்.

இதற்காக் அவர்கள் சார்ந்திருப்பது, அனுபவம் உள்ள பன்னாட்டு நிறுவனகளின் ஆலோச்டனையை. விளம்பரம் செய்வதில் அரசியல்வாதிகளுக்கு எப்படி விளம்பரம் செயவது, அரசியல் பிரமுகர்களை எப்படி வளர்பப்து என்ற தேர்ச்சி உள்ள பன்னாட்டு விளம்பர் நிறுவனகளின் ஆலோசனைப்படி இந்த இளவரசர் உரூவாக்கப் படுகிறார். .

Wednesday, May 11, 2011

கேரள தேர்தல் முடிவில், சாதியும், மதமும் செல்வாக்கு செலுத்தியதா?

கேரள முற்போக்கு மாநிலம். அங்கே சிவப்பு சிந்தனைகள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன எனற கருத்து நாடு முழுவதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் அல்லது இடதுகள் என்றுதான் அங்கே மாறி, மாறி வெற்றிபெறும். அதனால் நிரந்தர முற்போக்கு மாநிலம் என்பது உணமியல்ல.ஆனால் சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல் அதை மேலும் கூடுதலாக கேள்விக் குள்ளாக்கியுள்ளது. நாயர்கள் சாதியின் சங்கம் தனது வாக்குகள் வி.எஸ்.அச்சுதானந்தத்திற்கு எதிராக போடப்பட்டுள்ளது என்று சீ.பி.எம்.ற்கு எதிராக பேச, உடனே சிபிஎம் காரர்கள் "நாயர் சங்கங்களை" மாநிலமெங்கும் உடைக்க, அதிலிருந்து பலர் வெளியேறி வர,ஒரே களேபாரம். என்.எஸ்.எஸ். என்று சொல்லப்படும் நாயர் சமூக சேவை நிறுவனம்தான் அப்படி களேபாரத்தில் சிக்கியுள்ளது. அவர்களுக்கு என்ன அப்படி செல்வாக்கு? என்று கேட்கவேண்டும். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளாக இந்த என்.எஸ்.எஸ். அமைப்பு சிபிஎம் என்ற இடது சாரி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு அதன் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.

பிறகு என் இந்த முரண்பாடு? பாலகிரிஷா பிள்ளை என்ற ஒரு காங்கிரச்காறரை, " பாம் ஆயில் " வழக்கில் வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளே தள்ளினார் அல்லவா? உச்சநீதிமன்றம் வரை சென்று அதை சாதித்தார் அல்லவா? அதை யாரை எல்லாம் எதிர்த்து செய்தார் தெரியுமா? முதலில் அந்த வழக்கை தொடரக்கூடாது என்று சிபிஎம் மாநில செயலாளர் பினராய் விஜயன் உட்பட கூறியும், அதை எதிர்த்து முதல்வர் அச்சுதானந்தன் அதை சாதித்தாரே? அது நாயர் சங்க தலைவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கி விட்டது. ஆனாலும் நாயர்கள் சிபிஎம் ற்கு எதிராக காங்கிரசுக்கு வாக்கு அளிக்கவில்லை என்று இப்போது தெரிகிறது. அவர்கள் பிஜேபி க்கு தங்கள் வாக்குகளை அளித்ஜ்ததால் பிஜேபி ஒரு நாலு இடத்தில் வெற்றிபெறும் என்கிறார்கள். அதனால் சிபிஎம் ற்கு நட்டமாகும் வாகுகள் போட்டியாளர் காங்கிரசுக்கு போய்சேரவில்லை.காங்கிரஸ் கட்சி பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாக ஒரு முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன் புகார் எழுப்பினார். இது காங்கிரசுக்கு இருந்த மரியாதையை கெடுத்து விட்டது. ஏன் என்றால் புகார் எழுப்பியவர் சோனியா வரை காசு வாங்கி விட்டதாக கூறிவிட்டார். ஏற்கனவே ரமேஷ் சென்னிதாலாவுக்கும், ஊமன் சாண்டிக்கும் ரொம்ப நல்ல பெயர் பாருங்கள்.

அடுத்து சமீபத்திய இரு பத்தாண்டுகளாக, இடது சாரிகள் வரக்கூடாது என்பதற்காக பிஜேபி நிற்காமல், விஎஹ்பி காரர்கள் நேரடியாக காங்கிரசுக்கு வேலை செய்வார்கள். அதன்மூலம் காங்கிரஸ் வெற்றி பெரும். ஆனால் இந்த முறை, பிஜேபி பல இடங்களில் நின்று இடதுகளுக்கு எதிராக வரும் இந்துத்துவா வாக்குகளையும் காங்கிரசுக்கு வரவிடாமல் செய்துவிட்டனர். இது நாடாளுமன்றத்தில் பல விசயங்களில் ஏற்பட்ட ஒரே நிலைப்பாடா என்று தெரியவில்லை.அதேசமயம் வி.எஸ். நிற்கும் மலம்புழாவில் பிஜேபி தனது வேட்பாளரை திரும்ப பெற்றுவிட்டது. அதேபோல கிறித்துவர் வாக்குகளை நம்பித்தான் காங்கிரஸ் கேரளாவில் தொடர்ந்து வெற்றி பெறும். இந்த முறை ஊமன் சந்தியும, ரமேஷ் சென்னிதாலாவும் தங்களை கலந்து கொள்ளாமல் வேட்பாளர்களை நிறுத்தியதாக கிறித்துவ பாதிரியார்கள் புகார் சொல்லி ஒரு பதினாலு தொகுதிகளில் வாக்குகளை திருப்பி விட்டார்கள்.அதனால் காங்கிரசுக்கு விழும் பாரம்பரிய கிறித்துவ வாக்குகள் விழ வாய்ப்பில்லை.

முஸ்லிம் வாக்குகளை பொறுத்தவரை, வழமையாக மதானி குழு மட்டும் சிபிஎம் ஆதரவாக இருக்கும். பாபுலர் பிரண்டு ஆப் இந்தியா கான்க்கியர்சுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் இந்த முறை ஆருக்கு மேற்பட்ட இடங்களில் அவர்களது எஸ்.டி.பி.ஐ. என்ற புதிய அரசியல் கட்சி நின்று வாக்குகளை பிரித்திவிட்டது. அதனால் காங்கிரசுக்கு நட்டம். தவிர ஜமாதி இஸ்லாம் { ஹிந்த்} என்ற பிரபல பாரம்பரிய சமூக மைப்பு வழமையாக காங்கிரஸ் உறவில் உள்ள "இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு" தான் வாக்களிக்கும். இந்தமுறை குன்ஜாலன்குட்டி ஐஸ்க்ரீம் பார்லர் வழக்கில் சிக்கி அசிங்கப்பட்ட பிறகு, ஜமாதி குழுவின் ஆதரவு சிபிஎம் ற்கு போய்விட்டது. அதுவேறு இடதுகளுக்கு புதிய லாபம். இவை எலாவற்றிலும் வி.எஸ்.அச்சுதானதம் உயர்ந்து நிற்கிறார். அவரை வீழ்த்த நினைத்த " பின்றை விஜயன்" என்ற சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் தோற்று வருகிறார்.


வி.எஸ்.ற்கு பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஊழல்களை கட்சி செயலாளர் செய்தாலும் வி.எஸ். எதிர்கிறார் என்ற பெயர் இருக்கிறது. பாம் ஆயில் வழக்கில் அகில இந்திய அளவில் சீ.வி.சீ. தலைவராக நியமிக்கப்பட்டவரையே காலி செய்தவர் வி.எஸ். தவிர கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு கிராமத்திலும் வீட்டு மனை இல்லாதவர்களுக்கு வீட்டு மனையும், வீடும் கட்டிகொட்த்த ஆட்சி என்றும், ஆடு, மாடு வாங்கி கொடத்த ஆட்சி என்றும் நற்பெயர் இருக்கிறது. வேறு அவ்ழியே இல்லாமல் சீ.பி.எம். தலைமை, பின்றை சொல் கேளாமல், வி.எஸ். ஐ ஆடஹ்ரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதனால் இடது சாரிகள் கூட்டணி வெற்றி பெற்றாலும், அது வி.எஸ். இன் வெற்றியே தவிர வேறல்ல. அவர் ஊழலுக்கு எதிரானவர் என்ற கருத்தில் கேரள மக்கள் இருக்கிறார்கள்.

Tuesday, May 10, 2011

தேர்தல் முடிவை முன்கூட்டி கணிப்பதில், ஊடகங்களின் போட்டியா? அரசியல்வாதிகளின் சதியா?

மே பத்தில் மேற்குவங்க தேர்தல் முடிவடைந்தது. அதனால் அதற்கு பிறகு உங்கள் ஊடகங்களின் கருத்து கணிப்புகளை வெளியிடலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் யார்க்கும் ஏற்பட்டுவிடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதையே "சாக்காக" கொண்டு "ஹெட்லைன்ஸ் டுடே " சீ.என்.என்-ஐ.பி.என்., நியூஸ் எக்ஸ், சீ.வோட, என்று ஆளாளுக்கு ஆங்கில காட்சி ஊடகங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், என்று தேர்தல் முடிந்த இடங்களில் யாருக்கு வாக்களித்தார்கள் என்று ஒரு புள்ளிவிவரக் கணக்கை எடுத்துள்ளனர்.


இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஹெட்லைன்ஸ் டுடே தவிர யாருமே திமுக வெற்றிபெறும் என்று கூறவில்லை. சிஎன்என்- ஐபிஎன் நை பொறுத்தவரை, அதிமுக கூட்டணி மொத்தமே 132 இடங்களை பிடித்து ஆட்சியை அமைக்கும். ஆனால் நியூஸ் எக்ஸ், மற்றும் சீ வோட்டை பொறுத்தவரை, அதிமுக என்ற தனிக்கட்சி மட்டுமே 133 இடங்களை பிடிக்கும். அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தத்தில் 176 க்கு மேல் தொகுதிகளை பிடிக்கும். இவ்வாறு எங்கோ வடக்கே உள்ள அந்த இரண்டு நிறுவனங்களும் கணிக்க வேண்டிய அவசியம் என்ன? ஹெட்லைன்ஸ் டுடே யை பொறுத்தவரை, அவர்கள் நல்ல தொகைக்கு கலாநிதியை சார்ந்து வாழ் வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது புரிகிறது. அந்த கணிப்பை "கலைஞர் டி.வி. தனது கட்டாயத்தில் வெளியிட்டால், ஏன் அதையே "சன் டி.வி". வெளியிடவில்லை? அவர்களுக்கு இந்த தேர்தலை விட, தங்கள் வியாபாரம்தான் முக்கியம். தங்கள் வணிகத்தில் நேயர்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டியது அவர்களுக்கு கட்டாய தேவை. போய் செய்தியை தேர்தல் முடிவுகளில் வெளியிட்டு விட்டு, பிறகு எந்த முகத்தோடு நேயர்களிடம் செல்வது? என்பது அவர்களது கேள்வி.

மற்ற வட இந்திய ஊடகங்கள் சரியாகவே கணித்ததால், அதிமுக, மற்றும் அதன் கூட்டணியின் ஏகபெரும்பான்மை வெற்றி இங்கே அறுதியிடப்பட்டு விட்டது.அதேசமயம் தங்கள் ஆதரவு தமிழ் ஏடு மூலம் திமுகவும் தனது விருப்பங்களை வெளியிட்டு ஊரை ஏமாற்றுகிறது. தமிழ்நாடெங்கும் பெரும் அலை ஒன்று அதிமுகவிற்கு சாதகமாக அடித்துள்ளது என்பது மீண்டும் இங்கே உறுதியாகிறது.

காஸ்ட்ரோவை, கிலானி தாண்டினால், இருவரையும் சாம்ஸ்கி தாண்டுகிறார்.

நோம் சாம்ஸ்கி ஒரு அமெரிக்க குடிமகன். ஆனால் உலகில் ஒவ்வொரு மூலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் மனித உரிமை ஆர்வலர். அவரது தொழிலில், "மொழியியலில் " உலகத்திற்கே மாபெரும் வழிகாட்டி. இந்த உலகில் எந்த நாட்டில் மொழியியல் வல்லுனர்கள் உருவானாலும், அவர்கள் நோம் சாம்ஸ்கியை அல்லது அவரது புத்தகங்களை குருவாக ஏற்றுக் கொண்டுதான் அந்த மொழியியல் பற்றி, அதன் கட்டமைப்பு பற்றி கற்றுக் கொள்ள முடியும். " மொழி" எப்படி ஒரு அடிப்படை கருவியாக ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இருக்கிறதோ, அதேபோல உலகளாவிய மொமொழிகளின் அடிப்படை கட்டமைப்பு, வரலாற்று ரீதியான " மானுட வளர்ச்சியின்" அடிப்படை எண்பதை நோம் சாம்ஸ்கி விளக்கினால் கேள்விகேட்காமல் புரிந்து கொள்ளும் நிலையில் இந்த உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மகத்தான மார்க்சிய அடிப்படை கொண்ட, மனித உரிமை ஆர்வலர் அவர்.


அந்த நோம் சாம்ஸ்கி, அமெரிக்காவால் பின் லேடன் கொலை செய்யப்பட்டது குறித்து தெரிவத்துள்ள கருத்துக்கள் சாட்டையால் அமெரிக்க் வல்லரசின் மனஹ்சாட்சியை அடித்தது போல தெரிகிறது. " ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு அதிரடி படை, திடீரென அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜ் புஷ் வீட்டிற்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, அவரது உடலை அட்லாண்டிக் கடலில் வீசி எறிந்தால், அமெரிகராகிய நாம் தாங்கி கொள்வோமா?" என்று அந்த நோம் சாம்ஸ்கி வினவுகிறார். இவரது கேள்விகள் வெள்ளை மாளிகையின் பளிங்குகளில் படிந்த்ள்ள கரைகளையும், காயங்களையும், இரத்தங்களையும் காட்டுவதாக உள்ளது. அதனால்தான் காஸ்ட்ரோ கூற்றை, கிலானி மிஞ்சி விட்டாரே என்று நாம் நினைத்தால், அதையும்கூட நோம் சாம்ஸ்கி தாண்டி விட்டார்.

சிதம்பரம் செய்த தமிழர் விரோத துரோகம் அமபலமாகிறது.

வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய கையூட்டு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார். சிதம்பரம் பொறுபேற்றுள்ள "உள்துறை" அதை செய்ய அவருக்கு பெரிதும் உதவியுள்ளது.


இதற்காக மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார். அந்த கூட்டு நிறுவனத்தை, சிதம்பரம் மனைவி நளினி, மலேசியா சென்று, அங்கே அந்த நிறுவத்தை தொடங்கி, அதன் மூலம் மகிந்தாவிடம் பேசி, அதற்கான ஒப்பந்தத்தை வாங்கி பிறகு அதையே சீனாவிற்கு விற்றிருக்கிறார. நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசியல்வாதிகள் யாருமே சிங்கள அரசத்தலைவர் மகிந்தாவிற்கு, சும்மா உதவிடவில்லை. வேண்டிய அளவில் பணம் பெற்றுக் கொண்டு, வணிக ஒப்பந்தங்களை பெற்றுக் கொண்டுதான் அவர்கள் சிங்கள அரசின் தமிழின அழிப்பு போருக்கு உதவி செய்துள்ளனர்.


சிதம்பரமும், நளினியும் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் என்பதால், நாம் இனி வட இந்தியர்களை குறை சொவதற்கு லாயக்கற்றவர்கள் ஆகிறோம். அதேபோல நம்முள் பலர், இந்தியாவிற்கு எதிராக சீனாவிற்கு, மகிந்தா பல ஒப்பந்தங்களை கொடுத்திருக்கிறார் என்று கோபமாக கூறுவதும் இந்த இடத்தில் அடிபட்டு போகிறது. நளினி சிதம்பரம் சிங்கள அரசிடம் பெற்ற ஒப்பந்தத்தை சீனாவிற்கு விற்றிருப்பது இப்போது அம்பலத்திற்கு வந்திருப்பதால், இதில் இந்திய அரசியல்வாதிகளுக்கும், சீன அரசிற்கும், வேறுப்பாடு இல்லாமல் வணிகம் செய்யும் மகிந்தா ராஜபக்சேவும், இந்த "சீன போட்டி" என்ற மோடி வேலையை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கும், இந்திய அரசின் உளவுத்துறையும் இங்கே அமப்லமாகி உள்ளன.


இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

ஏகபோகம் தமிழ்நாட்டில் மட்டுமா? இந்தியா பூரா?

சன் காட்சி ஊடக குழுவினரின் ஏகபோகம், ஊடகத்துறை தவிர, திரைத்துறை தவிர, திரையரங்குகள் தவிர, விநியோகத்தர் தவிர, எங்கும் நீடிக்கிறதே என்று பலரும், பல தொழில் செய்பவர்களும் தமிழ்நாட்டில் அதிர்ந்து போவதும் அவர்களே அதற்காக தேர்தலில் மாற்று வாராதா என்று என்குபவர்கலாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் வருகின்ற செய்திகளை தாமதமாக கண்கானித்தால், அதாவது ௨௦௦௯ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததை கணக்கெடுத்தால், அந்த கலாநிதி மாறன் வகையறா, இந்தியா முழுவதும், இந்தி பேசும் மாநிலங்கள் உட்பட தனது ஊடக வலைப்பின்னலை விரிவாக்கி தனது கையில் போட்டுவருகிறார் எனபது புரியும்.


கிடைத்திருக்கும் தகவல்களின் ஆதாரப்படி, எப்.எம்.என்று அழைக்கப்படும் " ரேடியோ" வலைப்பின்னலில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என்ற தென்னிந்திய மாநிலங்கள் தவிர, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய வட மற்றும் மேற்கு மாநிலங்களிலும் தனகளது "சேவைகளை" விரிவு படுத்தியுள்ளனர். ரெட் எப்.எம். என்றுஅழைக்கப்படும் அந்த "ரேடியோ வலைப்பின்னல்" பொருளாதார பிரச்னைக்கு உள்ளான போது, அவர்களுக்கு நூறு கோடி கொடுத்து, அந்த அலைவரிசைகளில் அதாவது நிறுவனங்களில் 48 .9 விழுக்காடு பங்கை, கலாநிதி மாறன் வாங்கிவிட்டார். அதுதவிர அந்த நிறுவனத்தின் சிறுபான்மை பங்குகள் ஹைதராபாத்தை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்திற்கும், என்.டி.டி.வி. என்ற இருபத்திநாலு மணிநேரமும் ஒளிபரப்பப்படும் அலைவரிசையான காட்சி ஊடகத்திற்கும், மலேசியாவில் உள்ள அனந்த கிரிஷ்ணனுக்கு சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும் சொந்தமாக உள்ளன.


இப்போது மேற்கண்ட பெரும் ஊடக நிறுவனகளுக்கு, சன் குழுமத்துடன் உள்ள வணிக உறவுகள் ஒன்றுக்குள், ஒன்று என்பது புரியப்பட முடியும். இந்த என்.டி.டி.வி. காட்சி ஊடகம்தான், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் பெயர் உச்சநீதிமன்றத்தில் சிக்கிக் கொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் வாய் போல செயல்படும் ஊடகம் என்பதால் சில சித்து வேலைகளை செய்தது. அதாவது கபில் சிபில் என்ற வழக்காடும் வல்லமை பெற்ற மத்திய அமைச்சரை, பர்கா தத் என்ற ஊடகவியலாளர் மூலம் கேள்விகளை துளைத்து கேட்கச் சொல்லி, அவற்றிக்கு திறமையாக கபில் சிபல் பதில் கூறினார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் முகத்தை காப்பாற்ற பகீரத முயற்சி எடுத்துக்கொண்டனர். இ[பொது சோனியா குழுவில், ஊடகபெருந்தலை, தாயநிதிக்கு இருக்கும் செல்வாக்கு புரிய முடியும்.


இந்த ரெட் எப்.எம்.என்ற வலைப்பின்னலில் உள்ள ரேடியோக்களை, 93 .5 என்ற மெகா ஹெற்சில் கேட்கலாம். அது, மும்பை, கொல்கத்தா,கான்பூர், ஜாம்ஷெட்பூர், போபால்,ஜபல்பூர், இன்டோர், நாசிக், ஔரந்கதாபாத், நாகபுரி, பெங்களூரு, மைசூர்,மகளூர்,குல்பர்கா, கொச்சி, திருவனத்தபுரம், திருச்சூர்,கண்ணனூர், கோழிக்கோடு, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், வாரங்கல், ராஜமுந்திரி, திருப்பதி, அகமதாபாத்,வடோதரா, லக்னோ,ஐஸ்வால், அலகாபாத், வாரணாசி, ஜெய்பூர், புவனேஸ்வர், அசன்சால், சிலிகுரி, கான்க்டக், கவ்ஹதி, சில்லாங் ஆகிய உட்பட நாற்பது ரேடியோக்களை கட்டுப்படுத்துகிறது. அவை முதலில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை எழு ஆண்டுகள் கழித்து அதன் நலிவு நேரத்தில் நூறு கோடிகளை விட்டெறிந்து சன் குழுமம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பங்குகள்" இந்தியா டுடே" நிறுவனத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு பல சிறு நிறுவனகளால் வாங்கப்பட்டது. அதில்பெரும் பங்கை சன் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிவிட்டது.

இதே காரணம்தான் அந்த "இந்திய டுடே" நிறுவனத்தின் "ஹெட்லைன்ஸ் டுடே" யில் இப்போது ஒரு போய் கருத்து கணிப்பை வெளியிட்டு முதல்வரை திருப்தி படுத்தும் வேலையையும் தயாநிதி பார்க்க முடிந்தது. 2009 ஆம் ஆண்டு அகஸ்ட் 14 இல் "சூரியா எப்.எம்." இந்த ரெட் எப்.எம். இற்குள் கொண்டுவரப்பட்டது. 38 நகரங்களில் அது தனது ஒளிபரப்பை செய்யத் தொடங்கியது. முதலில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் , இருந்த அந்த ஒலிபரப்புக்கள், முழுமையாக இந்தி ஓயல்பரப்பாக மாற்றப்பப்ட்டன. அவை இசை, திரப் பாடல்கள் என்று ஒலிபரப்பிவருகின்றன. தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களிலும், இது "ரெட் எப்.எம். என்ற பெயருடனே இயங்கிவருகிறது. அதன் முதலாளிகளாக கலாநிதி மாறனும், ஹன்ஸ்ராஜ் சக்செனாவும், அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் தொலை தொடர்பு என்று சன் கேபிள் விசனும், சன் டி.டி.எச்.உம அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இன்றைய உண்மை கதை. ஆகவே சன் குழுமத்திடம் எந்த இந்திய அரசியல்வாதியும் தப்ப முடியாது. அந்த அக்டோபஸ் முன்னால் அடங்கிப் போயி ஆகவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்கிறார்கள். இது எப்புடி? .

காஸ்ட்ரோ 8 அடி பாய்ந்தால், கிலானி 16 அடி........,

அமெரிக்காவின் மாபெரும் சாதனை என்று பீற்றிக் கொள்ளும், அபோதாபாத்தில் ஒரு வீட்டில் இறங்கி சிலரை சுட்டுக் கொன்றது என்பது இருக்குமானால், அப்படி ஒரு ஐ.நா.வின் உறுப்பு நாடு ஒன்றில், இன்னொரு உறுப்பு நாடு இறங்கி திடீரென ஆய்தத் தாக்குதலை நடத்துவது, அமெரிகாவில்வர இருக்கும தேர்தலுக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மானுடத்திற்கு, அது பின்பற்றிவரும் கொள்கைகளுக்கு, உலக நாடுகளின் இறையாண்மைக்கு, பிரிதொரு நாட்டிற்குள் தலையிடாமை என்ற கொள்கைக்கு, நிராயுதபாநியரை கொள்ளக் கூடாது என்ற அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு, மனைவி,மக்கள்முன்பு ஒருவரை கொல்வது சரியா என்ற கேள்விக்கு, மாபெரும் தோல்வி என்றுதான் கொள்ளவேண்டும்.


காஸ்ட்ரோ எழுதியதில் இருந்த நியாயத்தை ஏற்கனவே பார்த்தோம். இப்போது கொலை நடந்து சில நாட்கள் கழித்து, பாகிஸ்தான் அதிபர் கிலானி, பேசுகிறார். அவர் உலக சமூகத்தை சிறிது பின்னால் சென்று பார்கச்சொல்கிறார். கடந்த 90 ஆம் ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருகிறார். சீ.என்.என். மூலம் ஆவணமாகி உள்ள அந்த செய்திகளை கவனத்திற்கு கொண்டு வருகிறார். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க உயர் அதிகாரிகள் நின்று கொண்டு, அவர்களே உதவி செய்து, இஸ்லாத்தின் பெயரிலும், நாட்டு பற்றின் பெயரிலும், "புனிதப் போர்" நடத்த வீடுகளுக்கும், மசூதிகளுக்கும் செல்லுங்கள் என்று அனுப்பப்பட்ட நிகழ்வுகளை கோடிட்டு காட்டுகிறார். அரேபியா தொண்டர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி "புனிதப் போரை" நடத்தவைத்ததை குறிப்பிடுகிறார்.அதன்மூலம் ஒசாமா பின்லாடேனையும், அல் கொய்தா இயக்கத்தையும் அமெரிக்கா தோற்றுவித்தது என்கிறார் கிலானி.


அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆகியவற்றால் கோபமும், விரக்தியும் அடைந்துபோன மக்களை பயன்படுத்தி, எப்படி ஒசாமா பின்லேடன் உலக அரங்கில் "பயங்கரவாதத்தை" நிகழ்த்தினார் என்றும் கூறுகிறார். அந்த கோபமும், விரக்தியும் இன்னமும் பதில் சொல்லப்படாமலே இருந்தால், அதுவே இன்னொரு வடிவில் வெடிக்கும் என்கிறார். சீனாவிற்கு ஆறுதல் தந்ததற்கான நன்றியை சொல்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யையும் மட்டுமே குறை கூறுவதை கேள்வி கேட்கிறார் கிலானி. உலக உளவுத்துறைகள் அனைத்துமே தோற்றுவிட்டன என்பதுதான், அபிதாபாத்தில் பின்லேடன் இருந்த செய்தி காட்டுகிறது என்கிறார். கிலானியின் இந்த பாய்ச்சல் அமெரிக்காவின் கொடு முகத்தை மப்லப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Monday, May 9, 2011

பிடல் காஸ்ட்ரோ கூறுவதால் ஏற்றுக்கொள்வார்களா?

அமெரிக்கா தான்" பயங்கரவாதத்தை எதிர்த்த போரை" நடத்தி வருவதாக கூறிவருகிறது. அதில் ஒன்றுதான் பாகிஸ்தானுக்கு உள்ளே புகுந்து, நிராயுத பாணியாக இருந்த ஒரு பெரியவர் பின் லதனை சாய்த்து விட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறார்கள். அது பற்றி, கியூபா நாட்டு போராளித்தலைவர் " பிடல் காஸ்ட்ரோ" எழுதுகிறார். அவர் ஏற்கனவே அமெரிக்காவால், அதன் உளவு துறையால், அதன் சீ.ஐ.ஏ.வால் "பலமுறை" படுகொலை செய்யப்படுவதற்காக இலக்காகி ஒவ்வொரு முறையும் தப்பியவர். அமெரிக்காவிற்கு அருகே ஒரு நாட்டில் அமெரிக்காவின் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்காத காரணத்தால், கியூபாவும், அதன் சிற்பியான பிடல் காஸ்ட்ரோவும் தொடர்ந்து அமெரிக்காவால் குறி வைக்கப் பட்டவர்கள். அவர் இந்த பின்லேடன் கொலை பற்றி எழுதுவதால் அது கவனிக்கத் தக்கது.

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த 9 / 11 தாக்குதல் நேரத்தில் கியூபா உடனடியாக அதில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிக்கும், மனிதாபிமான ரீதியாக உதவி செய்தது என்கிறார். அதுமட்டுமின்றி உடனடியாக அமெரிக்கா முக்கிய விமானப் படைக்கு அந்த நாட்டில் உடனடியான பாதுகாப்பு கேள்விக்குரியானதால், கியூபா நாட்டில் அவை தரையிறங்க உதவிகள் செய்ஹ்டுள்ளோம் என்கிறார். அதுதான் தக்க சமயத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்து செய்யும் உதவிகள். ஆனால் இப்போது அமெரிக்கா கொலை செய்துள்ள பின் லேடன், ரசியாவிற்கும், சீனாவுற்கும் எதிராக, செயல்பட்டவர். அவருக்கு அப்படி செயல்பட அமெரிக்கா நிதி உதவி, ஆயுத உதவி, ஆயுத பயிற்சி ஆகியவற்றை அளித்தது என்றும் குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட பின்லாடனை இன்று பாகிஸ்தான் என்ற 25 கோடி முஸ்லிம் மக்கள் கொண்ட ஒரு நாட்டில் அந்த மக்களுக்கும் அரசுக்கும் தெரியாமல், பின்லேடனின் மனைவி, மகள் முன்பே, நிராயுடாத பாணியான அவரை சுட்டு கொன்று கொலை செய்துள்ளது.என்று எழுதுகிறார்.அது மட்டுமின்றி, மனித உரிமைகளுக்கு சிறிதும் மதிப்பு கொடுக்காமல் இப்படி அவர்களது சுற்றத்தார் முன்னிலையிலேயே படுகொலை செய்த அமெரிக்காவின் செயல் எந்த வகையில் நியாயம் என்று வினவுகிறார்.

யாழில் சிங்களவன் நடத்தியதை சென்னையில் தமிழன் நடத்தினால்?

முள்ளிவைகால் இறுதி போரில் பலாயிரகனகான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவ கொடியவர்களை, தமிழர்கள் அல்லாத உலக மனித உரிமை ஆர்வலர்கள், ஐ.நா. நிபுணர் குழு மூலம் அம்பலப்படுத்தியிருந்தனர். அதாவது பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களர்கள். பாதிக்கப்பட்ட தமிழர்கள் சாத்வீக வழியில், தங்கள் கோரிக்கைக்கு ஒரு அடிப்படையாக ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள " போர்குற்ற அறிககையை" வைத்துக்கொண்டு அதை அமுல்படுத்துங்கள் என்று தமிழ்நாடு முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் கையெழுத்து வாங்குகின்றனர். ஆயுதம் தூக்கி, எதிரியை ஓட, ஒட விரட்டிய கரங்கள் இன்று கைகளில் தாள்களை ஏந்தி, கையெழுத்து வாங்கும் நிலைக்கு தங்களை இறக்கிகொண்டுள்ளனர். அதை கோழைத்தனம் என்று சிங்கள வெறியர்கள் எண்ணிவிட்டார்கள் போலும்.

உலகம் முழுக்க உள்ள தமிழன் கோழைகளாக சிங்கள வெறியன்களுக்கு, பட்டிருக்கிறது போலும். அதனால் பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள வெறியர்கள், தாங்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கோபம் கொந்தளிக்க பேசிவருகிறார்கள். அதுமட்டுமின்றி ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வாங்கும் வேலையையும் தொடங்கி இருக்கிறார்கள். தங்கள் சொந்தப் பகுதியான தென்னிலங்கையை விட்டு, பாரம்பரிய தமிழர் பகுதியான "யாழ்பாணத்தில்" போய் இறங்கி, அங்கே தமிழர்களை அடித்து, துன்புறுத்தி, அதிலும் கத்தோலிக்க அருள் தந்தையை கூட விடாமல், துரத்தி சென்று தமிழர்களுக்கு எதிராக வலுக்கட்டயமாக கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்திய "சிங்களம்" தனது குண்டர் படை மூலம் இதை செய்யுமானால், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர்கள் எதை செய்யவேண்டும் என்று வரலாறு எதிர்பார்கிறது?

இந்தியாவிலும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தமிழர்கள், அந்தந்த பகுதியில் உள்ள சிங்களர்களை, நல்ல எண்ணத்தோடு அணுகி, சிங்கள போர்வெறியர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை கோரி, சிங்கள அப்பாவி மக்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பதைத்தான் உலகமும், அதன் வரலாறும் எத்ரிர்பார்கின்றன என்பது நமக்கு புரிகிறது. அப்படி ஒரு அமைதி புரட்சியை, சிங்கள மக்களும் விரும்புவார்கள் என்பதால், எங்கெங்கு சிங்களர்கள் கண்களுக்கு தென்படுகிரார்களோ, அங்கெல்லாம் சென்று அவர்களது மனிதாபுமான் சிந்தனை மீது நம்பிக்கை கொண்டு அவர்களை நெருங்கி அணுகி, தமிழர்கள் கையெழுத்து வாங்கி அதை விரைவில் ஐ.நா.விற்கு அனுப்பிவைக்கவேண்டும் என்பதுதானே சரியான் கோரிக்கையாக இருக்கும்.