Thursday, February 24, 2011

சிதையின் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் எழு தமிழா.

பார்வதியமால் மரணமடைந்தார். அவர் துவக்கு எடுத்து போராடிய பெண் போராளி அல்ல. அவர் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ஜ்தாக இனவெறி அரசால் வழக்கு போடப்பட்டவர் அல்ல. சந்தேகத்தின் பெயரில் இலங்கைலோ, இந்தியாவிலோ, போராளிகளுடன் தொடர்பு கொண்டவர் என்பதற்காக சிறையிடப்பட்டவர் அல்ல. இன விடுதலை போராளிகளுக்கு ஆதரவாக மேடை பேச்சு பேசியவர் கூட அல்ல. தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்று கருத்து சொல்லிக்கொண்டிருந்தவரும் அல்ல. ஊடகங்களில் தமிழின விடுதலைக்காக அல்லது அதை ஆதரித்து எழுதியவரும் அல்ல. ஆனால் லட்சக்கணக்கான தமிழர்களை போர்க்களத்தில் இறக்கிவிட்ட ஒரு விடுதலை வீரரை பெற்ற தாய்.

சிங்கள இனவெறி கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக எப்போதும் இருந்துவரும் மாவீரனை பெற்றெடுத்த தாய். தமிழீழ தேசிய தலைவராக இன்று வரை உலகெங்கும் உள்ள தமிழர்களால் போற்றப்படும் ஒரு கலப்போராளியை கருக்கொண்ட சூலை கொண்ட தாய்.அதற்காக அந்த தாய் தனது எண்பத்து ஒன்றாம் வயதில் வயோதிகத்தில் தாய் தமிழ்நாட்டில் சிகிச்சைக்கு வார முயன்றும் தடுக்கப்பட்டார்.திருப்பி அனுப்பபட்டார்.சிகிச்சை சரியாக கிடைக்காத ஒரே காரணத்தால் தனது சொந்த கிராமமான மீனவக்கிராமம் வல்வட்டிதுறையிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். கடந்த இருபதாம் நாள் அதிகாலையில் காலமானார்.அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் என்பதால் இயல்பாகவே தமிழர்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று விருப்பப்படுவதும், அவரது உடலை காணவேண்டும் என்று துடிப்பதும் உலகின் கண்களுக்கு பரியமுடியும்.ஆனால் இந்திய அரசின், இலங்கை அரசின் கண்களுக்கு மட்டும் வேறு விதமாக புரிந்து விட்டது.

அதனால்தான் பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்ச்சிக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரபாகரனின் தாயார் என்ற வாசகங்களை கண்ட சிங்கள இன வெறி ராணுவம் அதை கிழித்தெறிந்துள்ளது என்ற செய்திகள் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றின.அதை எதிர்த்து போராடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அடித்து துரத்தப்பட்டனர். அதுவே யாழ்ப்பாண நிலைமையை உலகுக்கு படம் பிடித்து காட்டியது. அடுத்து தமிழ்த்தாயின் இறுதி அஞ்சலிக்காக வாகனகளில் செல்ல முயன்ற தமிழர்கள் தடுக்கப்பட்டனர். அப்போதும் நடந்து சென்ற ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிங்கள இனவெறிக்கு இத்தகைய ஒடுக்குமுறைகள் மாட்டுமே போதுமானதாக இல்லை.

பார்வ்தியம்மாளின் இறுதி நிகழ்வ்ஹவ்ஹிகள் முடிவடைந்து அவரது பூத உடல் எரிதழலில் இடப்பட்டது. நாளிரவில் அங்கு தோன்றிய சிங்கள இனவெறி ராணுவம் அந்த சிதையில் மிஞ்சி இருக்கும் சாம்பலை பொறுக்காமல் அதன்மீது தனது ராணுவ வாகனத்தை செலுத்தி சிதறடித்துள்ளது. அதை எதிர்த்து கொலைத்த நாய்கள் மூன்றை அங்கேயே சுட்டுகொன்ற ராணுவம் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளது. இதுதான் இந்திய அரசின் நட்பு நாடான டில்லியால் மதவராச்சி வரை ரிவி போட்டு உதவப்படும் சிங்கள மகிந்தா அரசின் செயல். அப்படியானால் டில்லிக்கு தெரியாமலேயே எல்லாம் நடக்கிறதா? டில்லியின் ஆலோசனைப்படி நடக்கிறதா? மூதாட்டி பார்வதி அம்மாளை அவரது மறைவை, அவரது இறப்பிற்கு பிறகு அவரது சாம்பல் உள்ள சிதையை கூட கண்டு அஞ்சும் ஒரு இனவெறி இருக்குமானால் அது உலகின் வேறு எங்காவது காணப்பட முடியுமா?

பார்வதி அம்மாளின் சாம்பலில் இருந்து திர்ஹமிழா நீ பீனிக்ஸ் பறவையாய் எழு. உனக்கு கரும்புலிகள் கொடுத்த தைரியத்தை, புலிப்படை கொடுத்த மன உறுதியை, தமிழீழ தசியத்தலைவர் கொடுத்த மாவீரன் உரையை இனி பார்வதி அம்மாளின் சிதையும், சாம்பலும் கொடுக்கும். அதுவே உனது தார்மீக அடையாளமாக சிங்கள இனவெறியர்களால் ஆக்கப்பட்டுவிட்டது.வருகிற மார்ச் ஏழாம் நாள் அந்த தமிழ்த்தாயின் காரியம் செய்யும் நாள்.பதினாறாம் நாள்.நாம் நாத்திகர்களாக, கிருத்துவ நம்பிக்கை உள்ளவர்களாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாக, சைவத்தை ஏற்காதவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த அம்மையார் சைவத்தை நம்பியவர்கள். பதினாறாம் நாள் காரியம் அவரது நம்பிக்கை. அந்த நாளில் அவரது பெயரைச்சொல்லியே நாம் உலக தமிழரை தட்டி எழுப்பும் நிகழ்வுகளை நடத்தலாம். பார்வதி அம்மாளின் சிதையின் சாம்பல்கூட பீனிக்ஸ் பறவையாய் தமிழன் எழ ஒரு உந்து சக்தியாக ஆகிவிட்டது. அது தமிழீழம் என்று மட்டுமே பாடும்.

Wednesday, February 23, 2011

சோனியா-கருணா-டக்லஸ் சதியில் பாலுவின் படகு.

பிரவரி மாதம் இருபத்தி மூன்றாம் நாள் நியு இந்தியன் எச்ப்ரஸ் ஆங்கில ஏடு ஒரு செய்தியை அம்பலப்படுத்தி உள்ளது.சமீபத்தில் தமினாட்டை குலுக்கிய நிகழ்ச்சியான நூற்றாறு நாகப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணத்தில் பிடித்துவைத்தது பற்றியா செய்தி அது. ஆனால் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி ஒவ்வொருவரும் ஏன் இப்படி ஈழத்தமிழ் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புதிய முரண்பாடு தோன்றுகிறது என்று வியந்து கொண்டிருக்கும் போது, அதற்கான அடிப்படை எப்படி திட்டமிடப்பட்டது என்று அந்த ஆங்கில நாளேட்டு செய்தி விளக்குகிறது. தடை செய்யப்ப்பட்ட மீன்பிடி வலைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதும், அதை ஈழ மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்துவந்ததும், அந்த முரண்பட்டு இந்த அளவுக்கு வெடித்ததா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இழுவலை பயன்படுத்தி வரும் இந்திய மீனவர்களும், இழுவலையை பயன்படுத்தாத ஈழ மீனவர்களும், சந்திக்கும் முரண்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு சென்றதா என்றும் விவாதித்தோர் உண்டு.
ஆனால் அதற்குபிறகு, ஈழ மீனவர்களை வைத்து இந்திய தூதரக வாயிலில் போராட்டம் நடத்தியவர்கள் அரசியல் சூழ்ச்சிகள் செய்பவர்கள் என்று புரிய வேண்டி வந்தது. இதற்காகவே அங்கு அமைச்சராக இருக்கும் டக்லஸ் தேவானந்தா செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.அப்படியானால் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் உள்ள எருபாடுகளை பயன்படுத்தி டக்லஸ் நுழைந்துவிட்டார் என்றும், அதுவே அவர் ராஜபக்சேவிற்கு செய்யும் விசுவாச வேலை என்றும் ம்ட்டுமே எண்ண வேண்டியிருந்தது .இப்போது அதையும் தாண்டி கதை செல்கிறது. அதாவது அங்கே யாழ் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க இழுவளைகளுடன் கூடிய படகுகளை அனுப்பியது அந்த படகுகளின் முதலாளி தி.மு.க.எம்.பி. டி.ஆர்.பாலு என்று தெரிய வந்துள்ளது.இது பயங்கர அதிர்ச்சி செய்தியாகும்.. ஏன் என்றால் தற்செயலாகவோ, அல்லது இயற்கையில் இருக்கின்ற முரண்பட்டு காரணமாகவோ எழுந்த ஒரு தகராறை சிங்கள அரசும், அவர்களின் அடிவருடி அமைச்சரான டக்ளசும் சேர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் உள்ள பகையாக ஆக பார்க்கிறார்கள் என்பதே நமது புரிதலாக இருந்த நேரத்தில், அந்த நாடகத்தில் தி.மு.க.தலைமையின் விசவாச எம்/பி உள்ளே நுழைந்து குட்டையை குழப்பியுள்ளார் என்பது பெரும் அத்ர்ச்சிதானே?
இந்த நாடகம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று இப்போது தெரிந்துவிட்டது. அதுமாத்திரம் இன்றி இந்த நாடகத்தில் இந்திய அரசும், தமிழக அரசியல்வாதிகளும் ஈடுபட்டிருப்பதும் இப்போது வெளியே வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை கவலைப்படாமல் வெறும் கடிதம் எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்து வந்த ஒரு முதுபெரும் அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இப்போது மட்டும் ஏன் தெருவுக்கு வந்து போராட தன் மகள் உட்பட பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்களை இறக்கிவிட்டார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே இருந்துவந்தது. இப்போது அதற்கும் பதில் கிடைத்திவுட்டது. அவரே எழுதி, அவரே நடித்த நாடகத்தில் கதாபாத்திரங்களாக பாலுவும், கனிமொழியும், நடித்திருக்கிறார்கள் என்பதும், அந்த தீவிலிருந்து அந்த நாடகத்தில் நடித்தவர் டக்லஸ் என்ற இலங்கை அமைச்சர் எனபதும் புரிந்துவிட்டது.
ராஜபக்சே என்ற அரச தஹ்ளைவரின் பதவியை காப்பாற்ற டக்லஸ் என்ற அவரது நண்பரும், கருணாநிதி என்ற இன்னொரு நண்பரும் ஏற்பாடு செய்த நாடகமா என்று கேள்வி எழுந்துள்ளது. என்னதான் ராஜபக்சேவிடம் பல வெகுமதிகளை பெற்றாலும், டக்ளசும், கருணாநிதியும் அப்படி தங்களை இழந்து அல்லது தாங்கள் அமபலப்பட்டு நண்பே ராஜபக்செவிர்க்காக இத்தகைய இழி செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் இருவருமே அரசியலில் பழத்தை தின்று கோட்டையை போட்டவர்கள்.தங்களுக்கு லாபம் இல்லாமல், தங்காளின் நலன் முதன்மையாக இல்லாமல் இந்த இருவருமே எந்த தொழிலிலும், அல்லது நாடகத்திலும் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கும் போது டக்ளசுக்கு இதில் எண்ண பலன்? அவர் மீது தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள பிடி வாரண்டு ரத்து செய்யப்படவேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதியின் தயவு வேண்டும். அதற்காக அவர் கருணாவின் எந்த நாடகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்பது புரிகிறது.
அப்படியானால் தமிழக முதல்வர்தான் நாடகத்தின் கதை-வசன கர்த்தாவா? எதற்க்காக அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இரு நாட்டு தமிழ் மீனவர்கள் மத்தியில் கருணா என்ற முதல்வர் விளையாட வேண்டும்? சமீபத்தில் தமிழக கரையோரம் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், அதை ஒட்டி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் கூடிவருவதும் முதல்வர் கருணாவிற்கு தெரியவந்தது. அதற்கு எண்ண வழி என்று டில்லியை அவர் கேட்டால் அவர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டு போல, கடலிலே எல்லையை கடக்க கூடாது என்று மட்டுமே கூறிவருகின்றனர். கடலிலே எல்லை கிடையாது என்பதும், குறிப்பாக மீன்வர்களுக்கு கடலில் மீன் பிடிக்க எல்லை கிடையாது என்பதும் பகிரங்கமாக மீனவர்கள் மைப்புகளால் முன்வைக்கப்படுவதும் அந்த உண்மை தெரிந்தால் இந்திய அரசின் வாதம் அம்பலமாகும் என்பதால் அந்த உண்மையை உடைக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில உலவுத்த்ரைகள் எண்ணின.

அதற்கு அவர்கள் இருநாட்டு மீனவர்கள் மத்த்டியில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்த திட்டமிட்டனர்.ஆனால் அவர்களுக்கு அத்ரிச்சி தரும் விதத்தில் இருநாட்டு மீனவர்களும் இணைந்து கடலில் இருநாட்டு மீனவரும் இருநாட்டு எல்லைகளிலும் மீன் பிடிக்க உரிமை உண்டு என்று அறிவித்தனர். இன்றுவரை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களுக்குள் சமாதானமாக போய்விட்டால் இரு நாட்டு அரசுகளுக்கும் தலைமை ஆதிக்கம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் அந்த வேறுபாடுகளை பயன்படுத்த அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தமான இழுவளையுடன் யாழ் கரைக்கு வரவேண்டாம் எனபதையே மீற ஒரு திட்டம் போடப்பட்டது. அதை நிறைவேற்ற டி.ஆர்.பாலுவின் படகுகள் முதலாளியின் கட்டளையுடன் பயன்படுத்தப்பட்டன என்பதே இப்போது வடக்கு இலங்கையின் பாதிரியார் வெளியிட்டிருக்கும் தகவல். டி.ஆர்.பாலு என்பவர் சிறிய கப்பல்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடித்து அதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்துவருபவர். அந்த மனிதரின் படகுகள் சில நாகப்பட்டினம் பகுதியில் இந்த வேளையில் ஈடுபட்டது இப்போது அம்பலமாகி உள்ளது.
அதனால்தான் தி.மு.க.தலைமை திடீரென அந்த பிரச்சனையில், பதினாலு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் மக்களை வாகனங்கள் ஏற்பாடு செய்து அழைத்துவந்து, இலங்கை எத்ரிப்பு என்பதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பதும் இப்போது தெரிந்துவிட்டது.

Tuesday, February 22, 2011

இயற்கையும் , செயற்கையும், ஈழத்தமிழரை வதைப்பதால் கிளர்ச்சி எழும்.

இலங்கை முழுவதும் பலத்த மழை. முதல் மழை பொய் இரண்டாம் மழை மேலும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு மாவட்டங்களில் அந்த தீவு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் இழந்து தவிக்கிறார்கள். அதில் சிங்கலரும், ஈழத்தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால் பதினெட்டு மாவட்டங்களில் மூன்றே மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்பு. அந்த மூன்று மாவட்டங்களும் முறையே மாட்டகிலப்பு , அம்பாறை, திருகோணமலை ஆகியவையே. அவை மூன்றும் கிழக்கு மாகாணத்தில் வருகின்றன. அதாவது தமிழர் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டவை. அதிக சேதம் நடந்துள்ள அந்த மாவட்டங்களை சிங்கள் இன வெறி அரசு கவனிக்கவே இல்லை.
பாதிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கு சென்ற அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, தமிழர் பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மொத்தம் பதிமூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு மொத்தம் நூறு கோடி ரூபாயை இதர்த்க்காக நிவாரத்தொகையாக ஒதுக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பதிமூன்று லட்சம் மக்களுக்கும் இந்த நூறு கோடி ரூபாய் பணம், பிரித்துக்கொடுத்தாலே ஆளுக்கு நூறு ரூபாய் கூட வராது. ஒரு நாளைக்கு நூறு ரூபாய் பணத்தில் மூன்று வேலையும் சாப்பிடவேண்டும். இந்திய பணத்தில் அது முப்பது ரூபாய்க்கு சமம். அதை வைத்துக்கொண்டு எப்படி அரைவயிறை கூட நிரப்பமுடியாதே?அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசு அங்கே இருக்கிறது. அதிலும் மூன்று கிழக்கு மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களான முஸ்லிம்களும், இந்துக்களும், கிறித்துவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முகாமில் குறைந்தது இரநூற்றைம்பது குடும்பங்கள் தங்கியுள்ளனர். அதாவது ஆயிரம் தமிழர்கள் தங்கி உள்ளனர். அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்தே இருக்கின்றனர்.போர் நேரத்தில் தமிழர்களாக இருக்கும் முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் பியாவை ஏற்படுத்துவதில் வெற்றிபற்றிருந்த சிங்கள அரசு இப்போது இயற்கையின் பேரழிவால் இந்துக்களும், முச்ளிம்க்களுமாக இருக்கும் தமிழர்கள் மத்தியில் ஒரே முகாமில், ஒன்றாக தங்கி ஒன்றாக உணவு உண்டு ஒன்றாக பேசி பழகி வாழ்ந்துவரும் நிலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. போர்தான் தமிழர்களை கொடுமையாக பதித்தது என்றால், சுனாமி தான் இடையில் பெரும் பாதிப்பை தமிழர்களுக்கு ஏற்படுத்தியது என்றால், அதைவிட இப்போது பெய்த இந்த மழை மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் மூவாயிரம் தமிழர்களின் நிலைதான் உள்ளதிலேயே அதிக கடினப்பாட்டுடன் இருக்கிறது. அவர்கள் மத்தியில் மக்கள் சார்பு அமைப்புகள் தான் உதவிகளை செய்து வருகின்றன. அதில் கிழக்கு மாகாண வெள்ள அனர்த்த முகாமைத்துவ குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு அனுப்பபடுகின்ற நிதிகளை அது பொருள்கள் வாங்கி கொடுத்து இடம் பெயர்ந்துல்லோரை கவனித்து வருகிறது. அதில் கணிசமாக முஸ்லிம் ஆர்வலர்களும் செயல்படுகின்றனர். சிங்கள சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட முஸ்லிம், இந்து சகோதரர்கள் இங்குதான் சேர்ந்து உதவிகளை செய்வதும், சேர்ந்து அமர்ந்து உண்பதுமான இணக்கம் ஏற்பட்டுவருகிறது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இடரை பயன்படுத்தி தமிழ் இனத்தை மேலும் அழிக்க சிங்கல பேரினவாத அரசு திட்டமிட்டுவருகிறது.
அதேசமயம் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் இலங்கைக்கு அதிகமாக வரத்தொடங்கிவிட்டன. அப்படி வருகின்ற நிருவனகளை தங்களுடைய தென்னிலங்கை பகுதியில் இறங்கவைத்து சிங்களர்கள் வசிக்கும் தென்னிலங்கையை வளமாக்க வேண்டும் என்று ஆள்வோர் இனி செயல்படத்தொடன்கினர். ஆனால் அந்த பன்னாட்டு மூலதன நிறுவங்கள் அந்து இறங்கும்போதே அவர்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் சிங்கள மக்களை, அப்பாவி மக்களை, ஏழை மக்களை இடம் பெயரச்செய்யவேண்டியதாயிற்று. இதுவே சிங்கள ஏழை, எளிய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. அந்த எதிர்ப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்று இலங்கை அரசு இந்திய அரசிடமும், பன்னாட்டு மூலதன நிருவங்களிடமும் ஆலோசனை கேட்டது. அதற்கும் அந்த வல்லாண்மை சக்திகள் ஆலோசனை வழங்கினார்கள்.
அதாவது இலங்கை தீவில் சிங்களர் வசிக்கும் பகுதியான தென்னிலங்கையில் ஜே.வீ.பி. என்ற ஜனதா விமுக்தி பெரமுன என்று அழைக்கப்படும் ,'மக்கள் விடுதலை முன்னணி' அமைப்பு அல்லது கட்சி இருக்கிறது. இது மஹிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சிக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒரு கட்சி. அதாவது இந்த ஜே.வீ.பி. கட்சி மகிந்தா முதல் முறை ஆட்சிக்கு வரும்போது, அவருடைய கூட்டணியில் இருந்தது. அதன்பிறகு அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த தன் பக்கம் இழுக்க தொடங்கிய பிறகு மஹிந்த எதிர்ப்பு கட்சியாக மாறிவிட்டது. அந்த கட்சி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்புரட்சியை இலங்கை தீவி நடத்தியது.சிங்களர் இளைஞர்கள் மத்தியில் இருந்த வறுமை, வேலையில்ல திண்டாட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அந்த கட்சி அப்போது சே குவேரா வழியில் ஆயுத கிளர்ச்ச்சியை நடத்தியது.அதில் சிங்கள ராணுவம் செய்த கொலைகளில் வீட்டுக்கு ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அவ்வாறு கோளை செய்யப்ப்பட்ட சிங்கள புரட்சியாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக இருப்பார்கள். அந்த கட்சி மீண்டும் இந்த பன்னாட்டு மூலதன நிறுவங்களின் உள்நுழைவை எதிர்த்து, இடம் பெயர்ந்து தவிக்கும் சிங்கள ஏழை மக்களை பயன்படுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சியை நட்த்திவிடக்கூடாது என்று வள்ளன்மை சக்திகள் மஹிந்த அரசுக்கு ஆலோசனை கூறின.
அதையொட்டி நஹிந்த அரசு புதிய தந்திரம் செய்தது. அதுதான் தென்னிலங்கையில், கட்டாயமாக இடம் பெயர் வைக்கப்பட்ட அப்பாவி சிங்கள மக்களை, வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் கட்டாய குடியமர்த்தல் என்ற முறையை அமுல்படுத்த தொடங்கிவிட்டது. அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, வடக்கு-கிழக்கு தமிழர் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மை அல்லது தமிழர்கள் மாட்டுமே வாழ்கிறார்கள் என்ற நிலைமையை மாற்றி அங்கும் சிங்களவர்களை கணிசமான அளவில் கொண்டுபோய் குடியமர்த்தி, அதன்மூலம் கலப்பு இனமாக அந்த வட்டார மக்களை மாற்றிவிட்டால், தமிழின எழுச்சியை, தமிழின விடுதலை உணர்வை, தமிழர் வாழும் பகுதி என்ற அடையாளத்தை மாற்றிவிடலாம் என்று சிங்கள பேரினவாத அரசு இப்போது மனப்பால் குடிக்கிறது.அதன்விளைவே மட்டகிளப்பு பகுதியிலும், அம்பாறை மாவட்டத்திலும் ஏற்கனவே செய்ததுபோல, திரிகோணமலையில் கணிசமாக சிங்களரை குடியமர்த்தியத்தை போல, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும், மன்னாரிலும், முல்லைத்தீவிலும் இப்போது சிங்கள மக்களை கொண்டு சென்று குடியமர்த்திவருகிறது. அதேநேரம் சிங்கள ராணுவ வீரர்களின் குடும்பங்களையும் அந்த வடக்கு மாகான பகுதிகளில் குடியமர்த்தி வருகிறது.
ஆனால் சூழ்ச்சிகள் மூலம் தமிழின சுத்திகரிப்பை நடத்திவரும் சிங்கள பேரினவாத அரசான ராஜபக்சே அரசு, சிங்கள மக்களின் கோபத்திற்கும் உள்ளாகி, அந்த மக்களே தமிழின பெரும்பான்மை மக்களின் சுய நிர்ணய போராட்ட்டத்திற்கு ஆதரவாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒத்துழைக்கும் ஒரு புதிய எழுச்சிக்கு வித்திடலாம் எனபதும் வரலாறு தெரிந்தவர்களுக்கு விளங்கி க்கொள்ளமுடியும்.

திருமாவை திருப்பி அனுப்பியது கொழும்பா? டில்லியா?

பார்வதியமாளின் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு சென்னையிலிருந்து இலங்கை செல்ல நெடுமாறனின் உதவோயாளர்கள் இருவர் செல்ல இருந்ததாகவும், அவர்களை இலங்கை அரசின் ராணுவம் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் வைகோ சென்னை இரங்கல் கூட்டத்தில் கூறினார். அப்போதுகூட திருமாவும், நண்பர்களும் செல்லவதை இலங்கை அனுமத்தித்துவிட்டது என்றுதான் செய்திகள் வெளிவந்தன. அதற்கு காரணம் அவர்கள் தமிழக முதல்வரின் நெருக்கத்தில் இருப்பதால் என்று பலரும் எண்ணினார். ஆனால் இப்போது இங்கிருந்து சென்று கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய திருமாவையும், நண்பர்களையும் கொழும்பின் ராணுவ தலைமை திருப்பி அனுப்பியுள்ளது. இதை செய்தது யார்?
சென்ற முறை தமிழக முதல்வருக்கு இலங்கை அரசத்தலைவர் ராஜபக்சே அனுப்பிய கடிதத்தை ஒட்டி, கலிஞர் ஏற்பாட்டில் அனுப்பப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் திருமாவும் சென்றார். அப்போது அதை ஏற்றுக்கொண்டிருந்த இலங்கை அரசு இப்போது ஏன் இப்படி நடந்து கொள்ளவேண்டும்? இலங்கையில் இப்போது எல்லாமே அரசத்தலைவர் பணிப்படைதான் [பிரசிடன்ஷியல் டாஸ்க் போர்ஸ்] என்றும்,அதற்கு கொத்தபாஎதான் தலைமை தாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. அவர்தான் இத்தகைய முடிவை எடுத்திருக்கவேண்டும். அந்த கொத்தபாயே இந்திய மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதையும் அவர்களது ஆலோசனைப்படி நடப்பதாகவும் தெரிகிறது. அப்படியானால் காங்கிரஸ் தலைமையிலான நடுவண் அரசு இத்தகைய உத்தரவை கொடுத்துள்ளதா? டில்லி சொல்லித்தான் திருமாவை கொழும்பு திருப்பி அனுப்பியதா?
டில்லி ஏன் அப்படி செய்யவேண்டும்? ஏற்கனவே டில்லி சம்மதத்துடன் தானே கலைஞர் பத்து எம்பிக்களை இலங்கை அனுப்பினார்? இப்போது என்ன வந்துவிட்டது? வந்துவிட்டதே? தமிழக தேர்தல் வந்துவிட்டதே? அதில் தி.மு.க தலைமை காங்கிரசை ஓரங்கட்ட பா.மா.க.விற்கு முப்பத்தொரு தொகுதி என ஒதுக்கிவிட்டதே? அதனால்தானே காங்கிரஸ் வழிகாட்டலில், சீ.பி.ஐ. அன்புமணியின் உதவியாளரை குறிவைத்து சோதனை செய்து மிரட்டுகிறது? அடுத்து தி.மு.க. தலைமையின் நெருக்கத்தில் உள்ள திருமாவை திருப்பி அனுப்பி தி.மு.க.விற்கு மைமுக தொந்தரவை அல்லது அவமானத்தை கொடுக்க இப்படி ஒரு உத்தியா? இதுதான் இப்போது எழும் கேள்விகள்.

பார்வதியம்மாள் மரணம் தரும் பாடம்?

ஒரு மூதாட்டி போதுமான மரஐத்துவ உதவி கிடைக்காமல் விரைந்து மரணம் நோக்கி பயணம் ஆனது இந்த உலகிற்கு புதிய செய்தியல்ல. ஒரு உயிர் போர் நடந்த ஊரில் சரியான வைத்தியம் இல்லாததால் விரைந்து மரணத்தை தழுவியதும் செய்தியல்ல. இனவெறி பிடித்த நாட்டில் நோயாளியான ஒரு தாய், அரசு உதவி இன்றி மரணம் அடைந்தார் என்பதும்கூட புதிய செய்தியல்ல. ஒரு போராளியின் தாய்க்கு அடக்குமுறை அரசு அலட்சியம் காட்டி மரணத்தை விரைவு படுத்தியது என்பதும் இந்த உலகிற்கு புதிய செய்தியல்ல. ஒரு விடுதலை வீரரின் அன்னைக்கு இப்படி இழைக்கப்பட்டதும் புதிய விசயமல்ல. ஒரு இனத்தின் தலைவனை பெற்றெடுத்த தாய்க்கே இப்படி நிலைமையா என்றால் உலகில் பல இடங்களில் அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிகழ்வு தமிழீழ தசிய தலைவரின் தாய்க்கு நிகழ்ந்ததால் தமிழ் உணர்வாளர்களுக்கும், உலகம் தழுவிய தமிழருக்கும் நெஞ்சில் ஈட்டி குத்தியதுபோல இருக்கலாம். ஆனால் இங்கே நடந்தது மேற்கண்ட நிகழ்வுகளில் ஒன்று என்று எப்படி கூறமுடியும்?
ஈழத்தமிழர்கள் உலகம் தழுவிய அளவில் வசிக்கும் தமிழர்களான ஒன்பது கோடியில் ஒரு அங்கமாக இப்போது இனம் காணப்படுபவர்கள். அவர்களுக்கு இனச்சொந்தங்களாக அருகே இருக்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அத்தகைய நாட்டில் தேர்தல்கள் மூலம் தாங்கள் விரும்பியவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதாக இந்த உலகம் நம்புகிறது. அப்படிப்பட்ட இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சிதான் அங்கே ஆளுகிறது. அதற்கு தமிழர்கள் மத்தியில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாழ்வதாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். அத்தைகைய சூழலில் இந்த தாயாரின் மரணம் சம்பவித்துள்ளது. அப்படியானால் அததகைய வாய்ப்புகளை நம்பாமல் அல்லது பரிசீலிக்காமல், அல்லது பயன்படுத்தாமல் இந்த மூதாட்டி இருந்துவிட்டாரா?
பார்வதியம்மாள் சிகிச்சைக்காக சிங்கபூர் சென்றவர் அவரது கடைசி விருப்பத்திற்கு இணங்கவும், நண்பர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சிகிச்சை பெறவும் தமிழ்நாட்டிற்கு வார விரும்பினார். அதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம மூலம் விசா பெற்றுக்கொண்டு சென்னை வந்து இறங்கினார். அப்போதே விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பபட்டார். இந்திய ஹை கமிஷன் கொடுத்த விசாவையே ஏற்காமல் அவரை திருப்பி அனுப்ப முடிவு செய்த புண்ணியவான்கள் யார் என்ப்வதே உலக தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. தமிழக முதல்வர் கலைஞரை பொறுத்தவரை அவருக்கு பார்வதியம்மாள் திருப்ப அனுப்பட்டபிறகு ஊடகங்களின் செரிதிமட்டுமே தெரியும் என்றி சொல்லிவிட்டார். ஒரு முதலமைச்சரை பொய் சொன்னார் என்று நாம் எப்படி குற்றம் சாட்டமுடியும்? ஏனென்றால் பார்வதியமாலை துரித மரணத்திற்கு தள்ள காரணமாக இருந்த அந்த சென்னை விமான நிலைய நாடகமான திருப்பி அனுப்பியது என்பது உலக தமிழர்கள் மத்தியில் கழுவப்பட முடியாத ஒரு பெரும் கரையாக பதிந்துவிட்டது.அத்தகைய குற்றத்தை கலைஞர் செய்தார் என்று நாம் கூசாமல் சொல்லக்கூடாது அல்லவா?
நடந்த நிகழ்வுகள் ஒரு முடிவுக்கு நம்மை தள்ளுகின்றன. மேற்கண்ட நிகழ்வுகளால் இப்போது ஏற்பட்டிருக்கும் பார்வதியம்மலின் மரணம் என்பது ஒரு கொலைதான் என்பதும், அதை செய்தா காரணமானவர்கள் கொலைக்குற்றவாளிகல்தான் என்றும் உலக தமிழர்களின் வரலாறு பதிவு செய்யும். ஆகவேதான் இதற்க்கு நாம் யாரையும் காரணமானவர்கள் என்று உடனடியாக முடிவு செய்ய முடியாது.இன விடுதலை போர் நடக்கும் போது நடந்த போர்க்குடர்ந்களுக்காக பலரும் இன்று உலக மக்கள் மத்தியில் குற்றவாளிகளாக நின்று கொண்டு இருக்கிறார்கள். அதிலும் சிலர் இந்திய மண்ணில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பட்டியளிடப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைவிட ஒரு தனிப்பட்ட உயிரை மருத்துவ சிக்கிச்சை இடிக்காமல் செய்து கோளை செய்வது என்பது கொடிய மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம். ஆகவேதான் நம்மால் அதற்கு காரணம் என்று யாரையும் உடனடியாக குற்றம் சொல்லமுடியவில்லை.
ஆனாலும் வரலாறு என்பது ஒரு நாள் உணமையான குற்றவாளியை பகிரங்கப்படுத்தவே செய்யும. சென்னை விம்மான நிலையத்திற்கு சென்று நூறு காவல் படைகளுடன் பார்வதியம்மலை திரும்ப அனுப்ப காவல்துறை ஆணையர் ஜாங்கிட் ஈடுபட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. அவர் அமுலாக்குபவராக இருக்கலாம். அவருக்கு அந்த உத்தரவை கொடுத்தவர்கள் யார்? முதல்வர் கலைஞர் தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். அப்போது உணமியான குற்றவாளி யார் எனப் அதை இன்றைய தமிழ்நாட்டு தேர்தல் நேரத்தில் கண்டுபிடித்து தடனை வழங்கவேண்டிய போயிருப்பில் முதல்வர் கலிஞர் இருக்கிறார். அதையே உலக தமிழினமும் கேட்கிறது.

Friday, February 18, 2011

அமபலப்படுத்தலிலும் ஆணாதிக்கமா?

கலைஞர் டி.வீயில் சோதனை நடத்தியது சீ.பி.ஐ. சரி இது செய்தி. அதையே ஒரு ஏடு தனது எதிர்ப்பு உணவிலிருந்து தி.மு.க. ஆபீசில் ரைடு என்று போட்டது. அதுகூட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் டி.வீ. இருப்பதால் அப்படி படுவதற்காக தங்கள் காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும் பார்க்கலாம். அல்லது ஆச்சர்ய செய்தி, அதிர்ச்சி செய்தி,என்ற வணிக நோக்கு என்று கூறிவிடலாம். ஆனால் அந்த டி.வீ.யில் அறுபது பங்கு மூலதம் தயாளு அம்மையார் பெயரிலும், இருபது விழுக்காடு பங்கு மட்டுமே கனிமொழி பெயரிலும் ஒப்புக்கொள்ளும் ஊடகங்கள் எதற்க்காக குறைவான பங்கை கோடுள்ள கனிமொழியை மட்டுமே ஓரங்கட்டி செய்தி வெளியிடுகிறார்கள்?
கலைஞரின் இன்றைய அதிகாரபூர்வமான மனைவி தயாளு என்பதாலும், துணைவிதான் ராஜாத்தி என்பதாலும், இந்த பாரபட்சம் காட்டப்படுகிறதா? ஆனாலும் உண்மைக்கு மாறாக இத்தகைய பாரபட்சம் காட்டுவது ஆணாதிக்கம் இல்லையா? அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஸ்டாலின், அழகிரி ஆகியோரது தாயார் என்பதால் எல்லா ஊடகங்களும் வலைகின்றனவா? அதுகூட ஆணாதிக்கம் இல்லையா? கனிமொழி ஒரு ஆணாக இருந்தால் வேறு மாதிரி நடக்குமா? அலல்து முதல் மனைவிக்கு கொடுக்கும் மரியாதையை ஆணாதிக்க சமூகம் இரண்டாவது மனைவிக்கு கொடுக்க கூடாது என்று சொல்வதால் வந்த விளைவா? அல்லது எல்லாவற்றிற்கும் காரணமான தயாநிதி தங்கள் குடும்பத்தைவிட இன்னொரு குடும்பமான ராஜாத்தி மீது மட்டுமே அனைத்து இழிவும் பொய் செற்றட்டும் என்று எண்ணுகிறாரா? ஊடகங்கள் குறி வைப்பதும்கூட ஆணாதிக்க பார்வையிலா? அவங்க வீட்ல அவங்க கட்சில, அவங்க கூட்டணில ஊழல் செய்வதில் ஆணோ, பெண்ணோ வேறுபாடு காட்டுவதில்லையே? அப்புறம் அதை அம்பலப்படுத்துவதில் மட்டும் என்ன பால் வேறுபாடு?

கடலில் கழிவுகளை கிருஷ்ணா கவ்வுவாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக மீனவர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அதாவது மீனவர்கள் இந்திய எல்லையை கடலில் கடக்காமல் கவனமாக இருக்கவேண்டுமாம். ஏய் கிரிஷ்ணாவே உமக்கு கடலில் இந்திய எல்லை என்றால் என்ன என்று தெரியுமா? யோவ், நீங்க தமிழ்நாட்டு கரையில் வந்து என்ன நிலைமை என்று பார்த்திருக்கீங்களா? ஏய் நீரு டில்லில உட்கார்ந்துகிட்டு ராஜபக்ஷேவை திருப்தி படுத்த ஏதாவது உளருகிரீரா? தமிழ்நாட்டு கடல்கரைக்கும் இலங்கை கடல்கரைக்கும் உள்ள தூரம் வெறும் பதினெட்டு மைல்கல்தான் என்பது உமக்கு தெரியுமா? அதிலும் நாட்டு படகுகள் பல பாரம்பரியமாக மீன் பிடித்து வருபவர்கள் கடலில் உள்ள முதல் ஐந்து கடல் மைல்கல்தான் செல்லமுடியும் என்பது தெரியுமா? அதற்குமேலும் சென்று நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க விரும்பினாலும் உங்கள் ஆட்சியின் திட்டத்தால் விசைப்படகுகள் இறக்கிவிடப்பட்டுள்ளதால், கடலில் எங்கள் பாரம்பர்ய மீனவர்களின் நாட்டு படகுடன் போட்டி போட்டு இந்த விசை படகுகள் அடிக்கடி சண்டை போட்டு வருவது உமக்கு விளங்குமா?
அதனால் சமாதானத்தை இங்கே தமிழ்நாட்டு மீனவர்களுக்குள் செய்யும்போது, முதல் ஐந்து மைகளுக்குதான் நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்கவேண்டும் என்று ஒவ்வொரு கடலோர மாவட்டங்களிலும் ஒப்பந்தம் செய்து மீன் பிடித்துவருவது குளிர்சாதன அறையில் இமர்ந்திருக்கும் உமக்கு விளங்குமா? அதனாலேயே விசை படகு மீனவர்கள் அதையும் தாண்டிதான் மீன் பிடிக்க கடலில் இறங்க வேண்டும் என்பதாவது உமக்கு சொன்னார்களா? அப்படி செல்லும்போது ராம்ச்வரம் பகுதியில் பத்து மைல்கள் வரை பாறை இருப்பதை உங்களுக்கு நாகல் புரியவைக்கமுடியுமா? அதையும் தாண்டித்தான் விசை படகுகள் மீன் பிடிக்க செல்லவேண்டும் எனபது உங்கள் அமைச்சகத்திற்காவது தெரியுமா? அதற்கு பெயர் இந்திய எல்லையை தாண்டுவது என்று உங்கள் விளக்கம் கூறினால் நீங்கள் மீன் பிடி தொழில் பற்றி அறியாமையில் உள்ள மூடன் என்பதை யாரவது உங்களுக்கு சொன்னார்களா?
இதுவரை சொல்லாவிட்டாலும் இப்போதாவது சொல்கிறோம் கேட்டுக்கொள்ளுங்கள். கடலில் மீனவனுக்கு எல்லைகள் கிடையாது. இல்லாத எல்லையில் [போடமுயலும் கிரிஷ்ணாவே, உங்கள் புத்தி இப்படி மழுங்கி பொய் இருப்பது தொடருமானால் தமிழக மீனவர்களின் போராட்டம் உங்களை நோக்கி திரும்பாதா? உங்கள் ஆட்சி செய்த லட்சணம் கடலோரம் முழுவதும் கழிவுகளை கக்கும் கம்பனிகளை கட்டியிருக்கிறீர்கள். அந்த கழிவுகளை பிடிக்க கடலில் இறங்க சொல்கிறீர்களா? கிரிஷ்ணாவே நீங்கள் அந்த கடல் கழிவுகளை கவ்வுவீர்களா?

மழை, வெள்ளத்தால் மூழ்கும் ஈழத்தமிழர்கள்

இலங்கை முழுவதும் பலத்த மழை. முதல் மழை பொய் இரண்டாம் மழை மேலும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு மாவட்டங்களில் அந்த தீவு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள்;ஐ இழந்து தவிக்கிறார்கள். அதில் சிங்கரும், ஈழத்தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால் பதினெட்டு மாவட்டங்களில் மூன்றே மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்பு. அந்த மூன்று மாவட்டங்களும் முறையே மாட்டகிலப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியவையே. அவை மூன்றும் கிழக்கு மாகாணத்தில் வருகின்றன. அதாவது தமிழர் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டவை. அதிக சேதம் நடந்துள்ள அந்த மாவட்டங்களை சிங்கள் இன வெறி அரசு கவனிக்கவே இல்லை.
பதிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கு சென்ற அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, தமிழர் பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மொத்தம் பதிமூன்று அச்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு மொத்தம் நூறு கோடி ரூபாயை இதர்த்க்காக நிவாரத்தொகையாக ஒதுக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பதிமூன்று லட்சம் மக்களுக்கும் இந்த நூறு கோடி ரூபாய் பணம், பிரித்துக்கொடுத்தாலே ஆளுக்கு நூறு ரூபாய் கூட வராது. அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசு அங்கே இருக்கிறது. அதிலும் மூன்று கிழக்கு மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களான முஸ்லிம்களும், இந்துக்களும், கிறித்துவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முகாமில் குறைந்தது இரநூற்றைம்பது குடும்பங்கள் தங்கியுள்ளனர். அதாவது ஆயிரம் தமிழர்கள் தங்கி உள்ளனர். அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்தே இருக்கின்றனர்.
இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் மூவாயிரம் தமிழர்களின் நிலைதான் உள்ளதிலேயே அதிக கடினப்பாட்டுடன் இருக்கிறது. அவர்கள் மத்தியில் மக்கள் சார்பு அமைப்புகள் தான் உதவிகளை செய்து வருகின்றன. அதில் கிழக்கு மாகாண அனர்த்த பாதிப்பு முகாமைத்து குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு அனுப்பபடுகின்ற நிதிகளை அது பொருள்கள் வாங்கி கொடுத்து இடம் பெயர்ந்துல்லோரை கவனித்து வருகிறது. அதில் கணிசமாக முஸ்லிம் ஆர்வலர்களும் செயல்படுகின்றனர். சிங்க சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட முஸ்லிம், இந்து சகோதரர்கள் இங்குதான் சேர்ந்து உதவிகளை செய்வதும், சேர்ந்து அமர்ந்து உண்பதுமான இணக்கம் ஏற்பட்டுவருகிறது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இடரை பயன்படுத்தி தமிழ் இனத்தை மேலும் அழிக்க சிங்க பேரினவாத அரசு திட்டமிட்டுவருகிறது.

Thursday, February 17, 2011

தி.மு.க. போராட்டத்தால் சோதனையை தள்ளிபோட்டனரா?

இப்போது பூனை கடைசியாக பையை விட்டு வெளியே வந்துவிட்டது. நள்ளிரவில் தொடக்கி கலைஞர் டி.வீ. அலுவலகம் சி.பி.ஐ.யால் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்காகத்தான் அந்த மீனவர் போராட்டத்தை மன்னர் குடும்பம் நடத்தியதா? என்று இப்போது கேட்கிறார்கள். கலைஞருக்கு இரண்டு நாள் முன்பே இப்படி ஒரு சீ.பி.ஐ. சோதனை கலிஞர் டி.வீ.க்கு வரப்போவது தெரியும். அதனால்தான் 106 மீனவர்கள் இலங்கையில் பிடிபட்டதை பயன்படுத்தி, ஒரு போராட்ட நாடகத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை இறக்கிவிட்டு, அதன்மூலம் மத்திய அரசை பயமுருத்ஜ்த முயன்றார். ஆனால் அதுகூட காங்கிரஸ் அரசை அச்சப்படுத்தவில்லை. அவர்கள் ஒரு இரபத்தி நாலு மணி நேரம் கழித்து தாங்கள் எண்ணிய சோதனையை சீ.பி.ஐ. மூலம் நடத்திவிட்டனர்.
வழக்கமாக கருணாநிதி தனக்கு பிடிக்காத கூட்டணி கட்சியினரை தொகுதி கொடுத்து விட்டு, பிறகு உள்ளடி வேலை செய்து தோற்கடிப்பார். ஆனால் சோனியாவோ, மக்கள் மத்தியில் கலைஞரை தோற்கடித்தது விட்டு பிறகு கூட்டணி கட்டுகிறார்கள். ஏட்டிக்கு போட்டியாக எல்லாம் நடக்கிறது.

Wednesday, February 16, 2011

நிலமுதலைகளுக்கு, கடல் சார் பழங்குடி பற்றி தெரியுமா?

இரட்டை மடி மற்றும் சுருக்கு வலை என்ற தடை செய்யப்ப்பட்ட வலைகளை மீன் பிடிக்க பயன்படுத்த கூடாது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து நாட்டளவிலேயே அமுலில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் பிடித்த மீனவர் அல்லாத மீன்வளத்துறையின் அதிகாரிகள் தங்கள் பனிக்காலத்திர்க்குள் எவ்வளவு ச்ய்ருட்டலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் கை நிறைய காசை வாங்கிக்கொண்டு அத்தகைய தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். கடலிலே இருக்கும் சூழலை பற்றியோ, கடலின் நீரோட்டங்கள் பற்றியோ, மீன்களின் வளர்ச்சி பற்றியோ, மீன்களை பிடிப்பதில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, மற்றும் விதிகள் பற்றியோ, வெவ்வேறு வகை மீன்களை வெவ்வேறு காலத்தில் பிடிப்பதற்கான வெவ்வேறு வகையான வலைகளை பற்றியோ எந்த அறிவும் இல்லாத அதிகாரிகள், மீன் வளத்துறையை ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல மீன்வளம் பற்றிய, மீன் பிடித்தல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அரசியல்வாதிகளும், இந்த நாட்டில் கடற்கரை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக, மற்றும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அநேக காலங்களில் கடலை பற்றிய அறிவே இல்லாத மீனவர் அல்லாத மாற்று சமூகங்களை சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட அமைச்சர்களாக வந்துவிடுகிறார்கள். சிலநேரம் மீனவர் சமூகத்தை சேர்ந்த மனிதர்களே அமைச்சர்களாக வந்தாலும் அவர்கள் விவரம் தெரிந்தவர்ஹளாக இருந்தாலும், தவறான அறிவியலுக்கு எதிரான வழிமுறைகளை கையாண்டு அதிகமான லாபத்தை சுரண்டலாம் என்ற லாப வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் ஒரு அமைச்சர் இப்போது தமிழ்நாட்டு அமைச்சரவைக்கு கிடைத்துள்ளார்.
இவ்வாறு நிலம் சார்ந்த மனிதர்களுக்கோ, அதிலும் நிலம் சார்ந்த முதலாளிகளுக்கும், அதாவது நிலம் சார்ந்த முதலைகளுக்கு, கடல் சார்ந்த மக்களான மீனவர்கள் என்ற கடல் சார் பழங்குடிகள் பற்றிய அறிவே இருப்பதில்லை. அறிவு இருந்தாலே அதில் எப்படி ஊழல் அதிகமாக செய்து சொத்து சேர்க்கலாம் என்ற புத்தி கொண்ட இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில், இயற்கை விதிகள் பற்றிய அறிவே இல்லாவிட்டால் எந்த மனச்சாட்சி உரத்தால் கூட இல்லாமல் இந்த முதலைகள் தவறு செய்கின்றன. அப்படித்தான் இங்கே கடல் சார் உலகத்தை இவர்கள் கொடுமை படுத்துகிரரகள். உதாரணமாக மீன் பிடித்தலில் பொதுவாக உலகம் முழுவதும் கில்நெட் வலையை பயன்படுத்துவார்கள். ஆனால் லாப வெறி பிடித்த தன்னலவாதிகள் இந்த தொழிலில் நுழைந்த பின், டிராலர் முறையை அறிமுகப்படுத்தி கொள்ளை அடிக்க தொடங்கினார்கள். இந்த டிராலர் முறை எல்லா மீனவர்களாலும் எப்போதும் எதிர்க்கப்படும் முறை. ஆனால் இன்றைய சாக்கடை அரசியலின் விளைவாக, ஊழல் பெருச்சாளிகள் அதிகாரிகளாக இருப்பதன் விளைவாக இந்த டிராலர் முறை பயன்படுத்தப்படுகிறது.
இலங்கை தீவில் தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் டிராலர் முறையை பயன்படுத்துவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். கேரளாவில் கடற்கரைகளில் டிராலர் முறையை பின்பற்றுவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொடங்கி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என்று எல்லா ஊர்களிலும் டிராலர் முறையை பின்பற்றி மீன் பிடிக்கிறார்கள். இந்த டிராலர் முறை என்பது கடலுக்குள் அடியாழம் வரை கருவி மூலம் வலையை கொண்டு சென்று, அரித்து எடுக்கும் தன்மை கொண்டது. இதுவே மீன்வலனகளை அடுத்த மீனவனின் தேவைக்கு ஏற்று கிடைக்கவிடாமல் கடலை உடனடியாக காலி செய்யும் தன்மைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களை சந்திக்க வந்திருந்த இலங்கை மீனவர்களான தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் இங்குள்ள விசைப்படகு மீனவர்களுடன் இது பற்றி ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்கள் டிராலர் முறையை விட்டுவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.
அதன்பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் டிராலர் முறையில் இன்னும் எழுபது நாட்களுக்கு அதாவது இந்த ஆண்டிற்கு இந்த சீசன் காலத்தில் வேண்டுமானால் விடமுடியவில்லை என்பதால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் அதாவது இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்கு [ கடல் மைல்கள்] அப்பால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதேநேரம் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகைய டிராலர் பயன்படுத்தும் முறையை கைவிட்டு விடுங்கள் என்பதே வர்களது கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதை இங்குள்ள விசைப்படகு மீனவர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திட்டனர். அதன்பிறகு சமீபத்தில் கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களிடம் இதை ந இணைவு படுத்தி டிராலர் வேண்டாம் என்று அறைக்கொவல் விடுத்து வந்தனர். அதன்பிறகும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் மீன்வளத்துறை அற்ற்ஹைகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளான ஆளும் கட்சிக்காரகளின் ஒத்துழைப்பில், அமைச்சரின் பங்களிப்புடன் இந்த சட்டவிரோத மீன்பிடிக்கும் முறை தொடரத்தொடங்கியது.
அதில் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியின் மீன்வலத்த்டுரை துணை இயக்குனரான மார்க்கண்டன், இந்த ஆண்டுக்கான இலஞ்சத்தொகையாக இந்த சட்டவிரோத டிராலர்காரர்களிடம், ஆறு லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். அதேபோல நாகப்பட்டினம் பகுதியின் மீன்வளத்துறை அதிகாரிகள் ஐந்து கோடி ரூபாயை பெற்றுள்ளார்கள். இந்த பணத்தில் ஒரு பகுதி அமைச்சகம் வரை செல்வதால் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயபடுகின்றனர். இத்தகைய சூழலில்தான் பிப்ரவரி பதினைந்தாம் நாள் யாழ்ப்பாணம் கடற்கரை வரை சென்று அதாவது அவர்கள் கேட்டுக்கொண்ட ஐந்து மெயில் தூரத்திர்க்குள்ளும் சென்று திராலரில் இரட்டை மடியையும், ஒற்றை மடியையும் கொண்ட வலைகளை வைத்துக்கொண்டு மீன் பிடித்த நாகப்பட்டினம் மீனவர்கள் நூற்று ஆறு பேரை அவர்களது பதினெட்டு படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் பிடித்து படித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இத்தனை விவரங்களும் தமிழக அரசின் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் தெரியும். ஆனாலும் இதை வைத்து ஒரு நாடகம் ஆடி தங்களது அரசியலை நடத்த முயற்ச்சிக்கிறார்கள்.

கனிமொழியும், கருணாநிதியும் இரட்டை மடிக்கு ஆதரவா?

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தி.மு.க.முற்றுகை இட முயர்ச்சிஎடுத்து கனிமொழி உட்பட கைதாமே? இது எதற்காக? யாழ்ப்பாணம் அருகே இந்தியாவிலிருந்து சென்ற குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற அதிலும் குறிப்பாக நாகப்பட்டினத்திலிருந்து சென்ற பதினெட்டு படகுகளை சேர்ந்த நூற்று ஆறு மீனவர்களை பிடித்துள்ளார்கள் என்பதே அந்த செய்தி. இவர்களை கைது செய்தது அல்லது இடைமறித்தது யார்? தி.மு.க.தலைமை சொல்கிறது, அது இலங்கை கடற்படை என்று. சரி அப்படி இருந்தால் அந்த தி.மு.க. தலைமை ஏன் இதுவரை நடந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை கடற்படை வெட்டவெளிச்சமாக செய்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் இலங்கை தூதரகமுற்றுகை என்று கிளம்பி உள்ளது? ஏன் ஜெயகுமார் என்ற புஷ்பவனம் மீனவர் இலங்கை கடற்படையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது காட்டாத எதிர்ப்பை இப்போது திடீரென காட்டுகிறது? எதற்காக பாண்டியன் என்ற மீனவர் இளநகை கடற்படையால் சமீபத்தில் கொல்லப்பட்டபோது கட்டத எதிர்ப்பை தி.மு.க. தலைமை காட்டுகிறது?
தேர்தல் நேரம். தி.மு.க. தலைமை உண்மையாகவே தான் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதை பதிவு செய்யவேண்டும் என்றால் சரியானதுதான். சமீபத்திய ஜெயகுமார், பாண்டியன் கொலைகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வந்துள்ளதால் தானும் அதனுடன் கலந்துகொண்டு மீனவர்களுக்காக குரல் கொடுத்தால் அதுவும் கூட ஒரு அரசியல் கட்சியை பொறுத்தவரை, அதுவும் தி.மு.க. போன்ற மாநில அரசியலை முன் நிறுத்தி பணியாற்றும் அரசியல் கட்சியை பொருத்தவரை சரியானதுதான். அதனால்தான் மீன்வள அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஏற்பாட்டில் அவரது கைகளிலேயே உள்ள அன்பழகனார் என்ற மீனவர் தலைவரது அமைப்பையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். காநிராஸ் கட்சிக்கும் தி.மு.க.விற்கும் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் ஆ.ராஜாவை கிடிக்கி பிடி போடும் சீ.பி.ஐ.யால் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவே இந்தார்ப்பாட்டம் என்பது மட்டும்தான் உண்மையா? அப்படியானால் உண்மையில் நடந்ததுதான் என்ன?
மீனவர்களுக்கு மட்டுமே புரிந்த அல்லது தெரிந்த மீன்பிடி தொழில் பற்றி நிலம் சார்ந்த மக்களுக்கு தெரியாது. அதாவது இரட்டை மடி வலை, சுருக்கு வலை ஆகியவை ஒட்டுமொத்த மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் தடுக்கின்ற அல்லது அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் முழு கடலையும் அரித்து எடுக்கின்ற ஒரு தடை செய்யப்ப்பட்ட வலைகளாகும். அந்த வலைகளை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா மீனவர்கள் மட்டும் மற்ற மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைகிறது. அதனால் மற்ற மீனவர்களுக்கு மீன்களே இல்லாமல் ஆகஈவிடுகிறது.இந்த தடை செயாப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை மீன் வள துறையின் ஊழல் அதிகாரிகளும், ஒழல் அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள். கையூட்டு வாங்கி கொள்கிறார்கள். இது விசைப்படகு மீனவர் சங்கங்களால் தொடர்ந்து எதிர்க்க படுகிறது.
இதே தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்தி மன்னார், யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் சில ஆண்டுகளாகவே அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை கொடுத்துள்ளார்கள். அதுதவிர யாழ்ப்பாணம், மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் போல டிராலர்களை பயன்படுத்துவது இல்லை. அவைகள் இன்னமும் நாட்டு படகு முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது அங்கே பிடிபட்டவர்கள் இரட்டை மடி வலைகளையும், ஒற்றை மடி வலைகளையும் பயன்படுத்தி டிராலர்கள் மூலம் மீன் பிடிக்க சென்றவர்கள். அங்கே வந்து மீன் பிடிப்பதை அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்க்கவில்லை. டிராலர்களை பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறுதான் எராலும் அதைக்கூட அவரால் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பல முறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது அவர்களது வாழ்வுரிமையை பறிப்பதாக உள்ளது.அதுமட்டுமின்றி இவர்கள் யாழ்ப்பாண கரையோரம் சென்று மீன் பிடித்துள்ளனர். அது அவர்களது அன்றாட மீன் பிடித்தலுக்கே எதிரானது.
ஆகவே இந்த நாகப்பட்டினம் மீனவர்களை பிடித்தது யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள்தான், அதன்பிறகு இவர்களுக்கேபிரியாணி உட்பட நல்ல உணவு அழத்து பிறைதான் அவர்களை படித்துறை என்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இந்த சில குறிப்பிட்ட தவறு செய்யும் மீனவர்களை ஆதரித்து இவர்களிடம் லஞ்சப்பணம் வாங்கி கொண்டு ஒத்துழைப்பவர்கள் தமிழ்நாட்டு மீன்வள துறையின் அதிகாரிகளும், எம்.எல்.ஏ., எம்.பி. போன்றோரும், அமைச்சர் கே.பி.பி.சாமியும் என்பது தெரியவந்துள்ளது.இப்போது தி.மு.க. நடத்திய போராட்டம் தடை செயப்பட்ட வலைகளை பயன்படுத்ஹுவோருக்கு ஆதரவாகவும், ஊழல் அமைச்சர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் இருகிறதே தவிர, இன்மையில் அப்பாவி மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு ஆதரவாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க எண்ணினால் இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 538 முதல் தகவல் அறிக்கைகளையும், அடிக்கப்பட்ட, வலைகள் அறுக்கப்பட்ட, படகுகள் யுடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் இருபதேட்டேட்டாண்டு வழக்குகளையும் சேர்த்து உயர்நீதி மன்றத்தில் போட்டு, இலங்கை கடற்படை தளபதிகள் மீது கைது வாரண்டை பிறப்பிக்க செய்யட்டும்.

தயாநிதி காலம் விசாரணைக்கு வந்து விட்டது.

இந்திய ஊடகங்களிலும், தமிழக ஊடகன்கல்லும் தடுக்கப்பட்ட அந்த செய்தியை இன்று சென்னையிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும், நக்கீரனும் வெளிப்படுத்திவிட்டன. கபில் சிபிலால் நிரோப்பட்ட முன்னாள் நீதிடரசர் சிவராஜ் பட்டீல் விசாரணை குழு முன்வைத்துள்ள அறிக்கையின் படி, தயாநிதி சகோக்கள் அவர்களது சன் டி.டி.எச். சிறகாக வாங்கிய 675 கோடி ரூபாய் மூலதனம் எங்கிருந்து, எப்படி வந்தது என்பது அம்பலமாகியுள்ளது. அதாவது 2004 முதல் 2007 வரை தொலை தொடர்பு அமைச்சராக இருந்த அந்த இளைய சகோ. டிஷ் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய அலைகற்றைவரைசையை கடுமையாக தாமதம் செய்து அவர்களுடன் பேரம் பேசி, அந்த ஏர்செல்லின் அங்கமான டிஷ் நிறுவனத்தை தங்களுக்கு வேண்டிய மாக்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடவைத்து அதன்மூலம் சண் டி.டி.எச். சிறகு அந்த பெரும் தொகையை மூலதனமாக வாங்கியுள்ளனர். இப்போது அது வணிக தர்மம் என்றும் கூறுகின்றனர். இதை சிவராஜ் பட்டீல் தனது அறிக்கையில் கண்டுபிடித்து குறிப்பிட்டிருப்பதுதான் முக்கிய செய்தி.
இதை ஒட்டி கார்பொரேட் போர் கடுமையாகி உள்ளது. ரிலைன்ஸ் நிறுவனம் தங்கள் மீது குற்றம் வருகிறது என்று தெரிந்தவுடன், டாடா தான் முக்கிய குற்றவால் என்றும் அவர்களது ஒப்பந்தத்தால் தான் இரண்டு லட்சம் கோடி நட்டம் அரசுக்கு என்றும் தெரிவிக்க டாடா அதை எதிர்க்க இப்படி ஒரு பெரு முதலாளில்குழுமங்களின் போர் தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்றைய டெக்கான் கிரோனிகள் ஏடு சமீபத்தில் வெளியாகி உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவன தேவாஸ் மல்டி மீடியா வுடனான ஒப்பந்தத்தை கசியவிட்டது முதல்வர் கருனநிதீன் குடும்ப உர்ப்பினரான ஒரு ஐ.எஸ்.ஆர்.ஒ.வின் மூத்த அதிகாரி என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆ.ராஜாவை சிக்கவைத்த ஆனியார்ஸ் கட்சியை கவிழ்க்க பிரதமர் அலுவலகம் செய்த மாபெரும் ஊழலை அம்பலப்படித்தி திசை திருப்பிவிட கருணாநிதி குடும்ப முயற்சி என்கிறது அந்த ஏடு.
எப்படியோ ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரு கேரள மாவலி அரசனின் வழிவந்தவராக தன்னை கருதிக்கொள்ளும் ஒரு முதல்வர் இப்போது இந்திய நாட்டையே சுற்றிவிடுவதர்க்கான பல ஊழாகளை செய்து அதமூலம் பிரபலம் அடைந்திருப்பது தமிழர்களாகிய நாம் பெருமை படக்கூடியதன்றோ?

Tuesday, February 15, 2011

தடுக்கப்பட்ட டில்லி கசிவுகள்.

காதலர் தினத்தன்று காலையில் அந்த செய்தி வந்தது. அது எந்த காதளைப்பற்றியோ, காதலர்களைப்பற்றியோ இல்லை. தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளருக்கு ஊழல் மீது உள்ள காதலைப்பற்றியது. நடந்துகொண்டிருக்கும் இரண்டு தலைமுறை அலைக்கற்றை ஊழலில் சிக்கியுள்ள ஆ.ராஜாவிற்கு மேலும்,மேலும் சீ.பி.ஐ.அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்.அது தி.மு.க. தலைவருக்கு அதிக இரத்த அழுத்தத்தை கொடுக்கும். அதுவே சன் டிவி சகோதரர்களுக்கு பேருவகையை தரும்.ஆனால் டில்லியில் வெளிவந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி உவகையை மாற்றி அளித்தது. 2003 ஆம் ஆண்டு அருண் செளரி தொலை தொடர்பு அமைச்சர். அப்போது முதலில் வருபவருக்கு முதலில் கொடுப்பது என்ற நடைபெற்று வந்த கொள்கையை எதிர்த்து, இரண்டு அலைவரிசை வழங்குவதில்,இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை அதிகாரம் என்ற டி.ஆர்.ஏ.ஐ. ஒரு முன்வைப்பை வைக்கிறது. அதில் போட்டீக்கு விட்டு அலைகற்றையை வழங்கும்படி ஆலோசனை கொடுக்கப்பட்டது. அதை மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்தது. அதை அருண் சூரியின் அமைச்சரவ்கமும் ஒப்புக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகும் ஏன் அருண் செளரி முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கையை பின்பற்றினார்? என்ற கேள்வியை கேட்டு வருகிற இருபத்தி ஒன்றாம் நாள் அருண் ஷௌரியை சீ.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது.
அதேசமயம் அதே துறையில் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டுவரை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அவருக்கு சன் தொலைகாட்சி ஊடக குழுமத்தில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேற்பட்ட அலைவரிசைகளும், ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் பல அலைவரிசைகளும் இருக்கும்போதே அந்த அலைவரிசைகளுக்கு தலைமை ஏற்கும் ஒரு அமைச்சரவையை கொடுத்திருந்தார்கள். அதுவே தலைமை அமைச்சர் செய்த தவறு. ஒரு தனியார் முதலாளிக்கு அவரது வணிகம் தொடர்பான அமைச்சரவையை கொடுக்கும் சாமர்த்தியம் மன்மோகனுக்கு மட்டுமே உண்டு. அந்த தயாநிதி மாறனுடைய காலத்தில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை விற்பனையும் முதலில் வருபவருக்கு முதலில் என்ற அணுகுமுறையிலேயே கொடுக்கப்பட்டது. அதில் லாபம் அடைந்த தனியார் நிறுவனங்கள் அந்த அமைச்சரை கவனிப்பது என்பது கார்பரேட் பண்பு. அதன்படியே அந்த கொள்ளையில் அதிகம் சம்பாதித்த ஏர்செல் நிறுவனம் தனது அன்பளிப்பாக 670 கோடியை சன் டிடிஎச் என்ற தாயநிதி மற்றும் கலாநிதி சகோதரர்களின் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனறேன்பதே அந்த செய்தி.
அதனால் அடுத்து சீ.பி.ஐ. விசாரணை தயாநிதி மேலும் வார இருக்கிறது என்பது அந்த தகவல். இதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் போட்டிருக்கலாம். அதற்கு டாடா ஏற்பாடு காரணமாகவும் இருக்கலாம். அனால் தயாநிதி சகோக்கள் அவ்வளவு தூரம் விட்டுவிடுவார்களா என்ன? உடனடியாக எல்லா ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அது பொயசெய்தி என்றும், அதை வெளிடாதீர்கள் என்றும் தடுத்து விட்டார்கள். எல்லாம் ஊடக பெரும் உதலாளிகளால் முடியும் ஐயா.

Thursday, February 10, 2011

இதுதான் அதிகாரவர்க்க முதலாளித்துவம்.

ஐ.எஸ்.ஆர்.ஒ.வும், தேவாஸ் மல்டிமீடியாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் இன்று ஊரெல்லாம் கிழிந்து தொங்குகிறது. அதை தாங்கள் ரத்து செய்யப்போகிறோம் என்று அவர்களே அறிவிக்கும் நிலைக்கு அது பொய் சேர்ந்துள்ளது. அதில் முதல் தகவல்படி,அல்லது மேலோட்டமான ஒரு கணிப்புப்படி, இரண்டு லட்சம் கோடி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய செய்தி. அந்த பணம் யாருடையது? இந்திய மக்களது பணம் இல்லையா?
இந்திய மக்கள் இன்னமுஜ்ம் ஏழ்மையில் வாழ்கிறார்களே? அவர்கள் தாங்கள் செலுத்திய நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் இந்த நாட்டின் அரசு செயல்பட உதவி வருகிறார்களே? நேரடி வரி என்பது நமது நட்டு மக்களது, அதாவது உங்களையும், என்னையும் சேர்த்த இந்திய மக்களது நேரடி வரி என்றுதானே பொருள். அதை பல்வேறு விதமான வரிகள் மூலம் நாம் செலுத்தி வருகிறோமே?
மறைமுக வரி என்பது நாம் வாங்கும் ஒவவொரு பொருள் மீதும் இந்த அரசு போட்டுள்ள விற்பனை வரி, மதிப்பு கூடுதல் வரி, ஆகியவை அனைத்தும் நமது மக்களின் பைகளிலிருந்து ஒவ்வொரு நாளும் மத்திய மாநில அரசுகளின் கஜானாவிற்கு எடுத்துசெல்லப்படுகிறது. அப்படியானால் அந்த பணம்தானே இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் செலவழிக்கப்படுகிறது? ஐ.எஸ்.ஆர்.ஒ. எனபது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று தமிழில் பொருள்படும். அவர்கள்தான் இந்த இரண்டு லட்சம் கோடியை அரசுக்கு நட்டம் ஏற்படுத்த காரணமானவர்கள். அதிலும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், வெள்யே வந்தபின் தேவாஸ் மல்திமேடிஆ போன்ற நிறுவனங்களை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு உள்ளே இருக்கும் நிறுவன தலைவர்கள் இத்தகைய ஒப்பந்தங்களை வேறு வெளி ஆட்களுக்கு தெரியாமல் போட்டுக்கொடுப்பதும் ஏன் நிகழ்கிறது?
இத்தகைய அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை யார் கொடுத்தது? தலைமை மாயச்ச்சரின் அலுவலகத்திற்கு கீழே இருக்கும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்படி தலைமை அமைச்சருக்கும் கூட தெரியாமல் இப்படிப்பட்ட அரசுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தங்களை போடமுடிகிறது? இந்திய அரசில் அதற்க்கான ஏற்பாடு எங்கே இருக்கிறது? இப்போது அம்பலமாகி இருப்பது உள்ளபடியே ஐ.எஸ்.ஆர்.ஒ.அதிகாரிகள் தாங்கள் உருவாக்கிய புதிய எஸ்.பாண்டு திட்டத்தை வெளியே அறிவிக்காமல் அதற்கான டெண்டர் விடாமல், பலரும் போட்டியில் கலந்துகொள்வதை தடுத்து தங்களது மூத்த அதிகாரிகள் ஒய்வு பெற்று வெளியே இருப்பவர்கள் மூலம் அத்தகைய ஒப்பந்தங்களை போட்டிருக்கிறார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஏன் இந்த அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் எந்த விதியையும் மீறி, தங்கள் லாபங்களுக்காக செயலபடுகிரார்கள்? பெரிய மத்திய அரசின் நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்தை அல்லது இந்திய அரசின் மூலதனத்தை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிரார்களே? இது எப்படி நிகழ்கிறது? இந்திய அரசை ஆளுகின்ற வர்க்கங்களில் முக்கியமாக இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் இருக்கிறார்கள். ஆமாம். இவர்களுக்கு பெயர் அதிகார வர்க்க முதலாளிகள். இந்திய அரசின் மூலதனத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஆளுகின்ற இந்த அதிகாரிகள் அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் அந்நியநாடுகளுடன் பல ஒப்பந்தங்களை அந்நியநாட்டு நலன்களுக்கும், அந்நியநாட்டு நிறுவனங்களான பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், இந்திய நாட்டு செல்வங்களை பகிர்ந்துகொள்ள உதவியிருக்கிறார்கள் என்பதுதான் இதில் புரியப்படவேண்டிய செய்தி.அவ்வாறு இவர்கள் செயல்படுவதால் இவர்கள் தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கபடுகிரார்கள்.
இவ்வாறு இந்த கொள்ளையடிக்கும் அதிகாரிகளை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைப்பது சீ.பி.ஐ.எம்.எல். என்ற நக்சல்பாரி இயக்கம்தானே என்று கேட்கலாம். ஆம். அதுதான் உண்மை. இந்தியாவை ஆள்வது தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று நக்சல்பாரி இயக்கம்தாம் உறுதியாக கூறியது. யார் கூறியிருந்தாலும் உண்மை அதுதானே? அதனால் அவர்கள் கூறுவதுபோல தரகு அதிகாரவர்க்க முதலாளிகளான இந்த ஐ.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் இந்தியாவை கொள்ளை அடித்ததை இப்போது மக்கள் புரிந்துகொள்ளும் கட்டம் வந்துவிட்டநிலையில் அவர்களை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்க நாமும் பழகிக்கொள்ள வேண்டும்.

Wednesday, February 9, 2011

தமிழ்நாடு தமிழருக்கே என்ற நூல் என்ன சொல்கிறது?

பிப்ரவரி எட்டாம் நாள் அதாவது மா.பொ.சீ.யின் பிறந்தநாளுக்கு முந்திய நாள் வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய " தமிழ்நாடு தமிழருக்கே" என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் பழ.நெடுமாறன், புகழேந்தி தங்கராஜ், இலக்குவனார் திருவள்ளுவன், பெ.மணியரசன், தியாகு, திரைக்கலைஞர் ராஜேஷ், இயக்குனர் வீ.சேகர், சந்திரேசன், ஆகியோர் உரை நிகழ்த்தினர். மறுநாள் மா.பொ.சீ.க்கு கலைஞர் சிலை திறக்கிறார்.என்னே கரிசணை? மா.பொ.சீ.கூறிய கருத்துக்கள் சரிதானா? இன்னமும் மறையாமல் இருக்கிறதா? அவர் மெட்ராஸ் ராஜதானியில் 1920 முதல் 1952 வரை தமிழகத்தை ஆண்ட பத்து முதல்வர்களில் எட்டு பேர் தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுன்குகாரர்கள் என்று எழுதியுள்ளார். அந்த நேரம் ஆங்கிலேயன் ஆட்சியில் உள்ள மெட்ராஸ் ராஜதானி. அதாவது மொழிவாரி மாநிலங்கள் ஏற்படாத காலம். இப்போது மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு ஆன பிற்பாடு என்ன நிலைமை?
அதேநிலைதான் உள்ளது என்பதே அந்த புதிய சக்திவேலின் நூல் கூறுகிறது. அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் மேடையில் பேசினார்கள். அவர்கள் உண்மையில் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறார்களா? நமக்கு தெரிந்த வரையில் அந்த கூட்டத்திலேயே மணியரசன் குறிப்பிட்டதைப்போல பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மக்களாகத்தான் கருதப்படவேண்டும் என்பது ஒருபுறம் வாதம். அதேபோலத்தான் கன்னடம் பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பண்பாட்டுடன் இரண்டற கலந்துவிட்ட அல்லது அதிகபட்சம் கலந்துவிட்ட இந்த திராவிடர்களை முதல் எதிரிற் போல சித்தரிப்பது சரியா? கலப்பு திருமணத்திலும், தமிழ் மொழிக்கான போராட்டத்திலும், தமிழர்களுக்கான போராட்டத்திலும் மேற்கண்ட மொழிவழி வந்தவர்கள் பலர் பங்குகொண்டு சிறப்பாக கூட பணியாற்றுகிறார்கள். ஆனாலும் ஒரு அச்சத்தின் காரணமாக அவர்களை கணக்கு பார்க்கிறோம் என்று நம்மவர்கள் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த தமிழ் சிந்தனையாளர்கள் இன்னொரு இனம் எந்த ஒரு கலப்பையும் தமிழ்மக்களுடன் வைத்துக்கொள்ளாமல், பண்பாட்டு, சமூக காரோயங்களில் கலக்காமல், தனது தனித்தன்மையை தக்கவைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும், அதாவது பொருளாதார மட்டத்தில் எல்லா துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்களே அந்த வட இந்திய வணிக சமூகம் பற்றி இவர்கள் ஏன் பேசவில்லை? அந்த மார்வாடி சமூகம் பற்றி பேச பயமா? மறந்துவிட்டதா? அல்லது கண்ணுக்கு தெரியவில்லையா? அவர்கள் வாங்கி போட்ட இலங்கள் இவர்களது இல்லையா? ஒவ்வொரு தமிழ்நாட்டு பொருளாதார துறையிலும் இந்த மார்வாடிகள் நுழைந்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது நமது தமிழ் அறிஞர்களுக்கு தெரியாதா? அல்லது மார்வாடியை தொட்டால் டில்லி ஆட்சியாளர்கள் கோவித்துக்கொள்வார்கள் என்று பயமா?
மார்வாடியை தொட்டுவிட்டால் டில்லிக்காரர்கல்தானே வருவார்கள்? தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் தொட்டால் டில்லிகாரனுக்கு மகிழ்ச்சிதானே?
வாணி போருக்கு பின் விபத்து போல உலக தமிழினமும், உள்ளூர் தமிழர்களும், டில்லியை எதிரியாக பார்க்காவிட்டாலும், கடும் கோபத்தை டில்லி மீது வைத்துக்கொண்டுள்ளார்கள். அதை திசை திருப்பும் பணியை தெலுங்கர், கன்னடர், மலையாளி எதிர்ப்பு செய்துவிடாதா என்று தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும். இப்போதுதான் டில்லியை தமிழன் சரியாக புரிந்து கொண்டுள்ளான் என்று மகிழ்ச்சியடைந்தால் அதில் மண் விழா வைத்துவிடாதீர்கள் ஐயா.

Sunday, February 6, 2011

அம்பலமான புதிய ஊழலில் சிக்குவது?

இந்து ஆங்கில நாளிதழும்,அதன் வணிக இதழான பிசினஸ் லைனும், வெளியிட்டுள்ள புதிய சீ.ஏ.ஜி. அறிக்கை என்ற, கணக்கு கண்காணிப்பு குழுவின் புதிய அறிக்கை பர,பரப்பை ஏற்படுத்தியுள்ளது.அது அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்திய ஒப்பந்தம் ஒன்றை பற்றி கூறுகிறது.அப்படி ஒரு ஒப்பந்தத்தை நமது நாட்டின் விண்வெளி துறையின் வணிகபிரிவு போட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை. அப்படியானால் அந்த அம்பலமாகியுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடி ரூபாய் கொள்ளையைவிடட இன்ரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பது பெரிய கொள்ளை இல்லையா? இதை கமுக்கமாக செய்தவர்கள் யார்? இந்த ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு 2005 . அந்த நேரத்தில் இந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் தான். இது என்ன ராஜா செய்த ஒப்பந்தத்தைவிட அதிக நட்டத்தை ஏற்படுத்தியது? இவர்கள் மாறி,மாறி இந்திய் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்களா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற் ஐ.எஸ்.ஆர்.ஒ .உடன், அதாவது அதன் வணிக பிரிவான அற்றிக்ஸ் உடன், தேவா என்ற நிறுவனம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. இதன் மூலம் ஆண்டு செயற்கை கோள்களை அந்த தனியார் நிறுவனம் வானில் பறக்க விட்டது. ஐ.எஸ்.ஆர்.ஒ.எப்போதுமே தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனம். அதாவது அன்றைய தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம். மன்மோகனும் தனியார் நிறுவனமான தேவாவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அதில்தான் இந்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சீ.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது
2500 மெகா ஹெர்ஸ் கொண்ட அந்த செயற்கை கோளில் எழுபது மெகா ஹெர்ஸ் இந்த தேவா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மூன்றாம் அலைக்கற்றை விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு இப்போது சீ.ஏ.ஜி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேவா நிறுவனம் பெற்ற தொகையை கணக்கிட்டுள்ளது. அதான் இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இந்த ஒப்பந்தத்தால் நட்டமாகி உள்ளது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. .ஐ.எஸ்.ஆர்.ஒ. விற்கு தலைமை அமைச்சர் மன்மோகன் தான் பொறுப்பு என்பதால் அவரும் சேர்ந்து செய்த நட்டம் என்று புரிகிறது.
இப்போது தேவாஸ் மல்டி மீடியா என்ற அந்த நிறுவனம் எந்த அலைக்கற்றையையும் வாங்கவில்லை என்றும், குத்தகைக்குத்தான் எடுத்தோம் என்றும் எல்லாமே ஐ.எஸ்.ஆர்ட்.ஒ.வின் வசம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது.அதே கருத்தை முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஒ. செயலாளர்களான ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர், ஆகியோரும் கூறுகின்றனர். ஏன் இவர்கள் முண்டி அடித்துக்கொண்டு பதில் சொல்கிறார்கள்? இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முன்னாள் செயலாளராக ஐ.எஸ்.ஆர்.ஒ.வில் இருந்த சந்திரசேகர்.. அப்படியானால் பல ஐ.எஸ்.ஆர்.ஒ. முன்னாள் செயலாளர்கள் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டி அதை தங்களது தனியார் நிறுவனமான தேவாசிற்கே குத்தகைக்கு கொடுக்கும் ஒப்பந்தம் செய்தார்களா? இது ஒரு அதிகாரிகள் மட்டத்து மாபெரும் ஊழலா?
ஏன் டெண்டர் விடவில்லை என்று கேட்டதற்கு மற்றவர்கள் போற்ற்டிக்கு வரவில்லை என்றும், தேவாஸ் மாத்திரமே வந்தது என்றும் கூறுகிறார்கள். அதாவது இப்படி ஒரு திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஒ.விடம் உருவானது மடற நிறுவனங்களுக்கு தெரியவிடாமல் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே திட்டமிட்டு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சதியா? கர்நாடகாவில் உள்ள இந்த நிறுவனம் மாதவன் நாயர் போன்றோரின் உறவினர்கள் மற்றும் எழுபது விழுக்காடு பங்கை பெற்றுள்ள பிரான்சு நாட்டு நிறுவனம் ஆகியவை சேர்ந்து செய்துள்ளதாக தெரிகிறது. நெருக்கடி இப்போது வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை சென்ற ஆண்டே அரசு வழக்கறிஞர் ரத்து செய்ய சொன்னதாகவும், ஆகவே அது செயல்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படும் என்றும் இப்போது கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா? என்றும் எண்ணத்தோன்றுகிறது. எஸ்.பான்ட் என்பதுதான் இப்படி ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், கே.யு.பாண்ட்தான் சன் குழுமம் உட்பட டி.டி.எச்.களுக்கு பயன்படுகிறது என்றும் விளக்குகிறார்கள்.எப்படியோ இப்போதைக்கு தயாநிதி சிக்கவில்லை. ஆனால் மன்மோகன் மாட்டிக்கொண்டார்.ஆனால் ஏன் சன் குழுமத்தின் பங்கு தொகை கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சரிந்துள்ளது?
2007 -2008 ஆண்டுகளில் தயாநிதி சகோதர்கள் நடத்தும் சன் காட்சி ஊடக குழுவினர், ஒரு செயற்கை கோளை அதிகமான பங்கை செலுத்தி வாங்கி அதை வானில் விட்டு முதல் முறை தோற்றுபோய் பிறகு வெற்றி அடைந்தது நினைவிருக்கிறதா? அது இந்த ஒப்பந்தம் தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதன்மூலம் தங்களது குழுமத்தின் அனைத்து அலைவரிசைகளையும் இயக்கி வருகிறார்களே? இந்திய நாட்டை நட்டமடைய வைத்து தங்கள் குடும்பம் பிழைக்கின்ற வழியா இது? இப்போது ஆ.ராஜாவின் சின்ன ஊழல் கோடுக்கு பக்கத்தில் தயாநிதியின் பெரிய ஊழல் கோட்டை போட்டாச்சா?


.

Saturday, February 5, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சென்னையில் பிப்-4 இல் தனது முதல் அறிமுக கூட்டத்தை தியாகராய நகர் தேவர் திருமண மண்டபத்தில் நடத்தியது. அதன் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றினர்.இடையில் திடீரென நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமார் தனது உரையை இணையதள திரை மூலம் நியூ யார்க் நகரிலிருந்து ஆற்றினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் தொடங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து அந்த கூட்டத்தின் ஒரு உரையாளராக கலந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
முதலில் ஈழப்போரில் உயிர் துறந்த போராளிகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கூட்டம் அஞ்சலி செலுத்தியது. தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற அந்த கூட்ட தலைப்பிற்கு அழகான விளக்கத்தை தந்தார். ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் பின்னடைவுக்கு பின் தமிழர்கள் சோர்ந்துவிடாமல், அரசியல் அரங்கில் ஒரு அனைத்துநாட்டு வடிவம் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி இருப்பதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார். புதிதாக விடுதலை பெற்றுள்ள தெற்கு சூடான் அரசு நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருப்பதை சுட்டி காட்டினார். தாங்கள் தொடங்கி இருக்கும் தோழமை மையம் இந்தியளவில் அந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக அதன் அங்கீகாரத்தை உலகம் தழுவிய அளவில் பெறுவதற்காக பாடுபடும் என்றார். அதன்பிறகு தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளின் தேவையை விளக்கினார்.
அடுத்து உரையாற்ற தமிழக இளைஞர் இயக்க தலைவர் மருத்துவர் எழிலன் தொடங்கினார். அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆணைய துணை தலைவர் பேரா.நாகநாதனின் மைந்தன் என்பதால் கூட்டம் அதிக ஆர்வத்துடன் அவர் எடுத்துவைத்த சஐதிகளை கவனித்தது. எழிலன் சூடான் நாடு எப்படிப்பட்ட சூழலில் சிக்கி இருந்தது என்று விளக்கினார். வட சூடானில் உள்ள அரபிகள் பணம் படைத்தவர்களாக என்னை வளம் மிக்க நிலங்களை ஆள்பவர்களாக
இருஹ்தார்கள் என்றார். அவர்கள் தெற்கு சூடானில் இருந்த பழங்குடி மக்களை குதிரையில் சென்று சாட்டை கொண்டு அடித்து வேலை வாங்கினர் என்றார். அதனால் கொந்தளித்த அந்த மக்கள் பெரும்பாலும் கிறித்துவ மதம் சார்ந்தவர்களாக இருந்த அந்த தெற்கு சூடான் மக்கள் தங்கள் விடுதலைக்காக சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தை நடத்தி முப்பத்தைந்து ஆண்டுகள் போராடினர் என்றார்.அவர்களது போராட்டம் எழ தமிழர்களின் போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படவேண்டும் என்றார். அந்த நாடு இப்போது கருத்துகேட்பு வாக்கெடுப்பில் சுதந்திர நாடாக ஆகியுள்ளது என்றார். அத்தகைய நாட்டின் அழைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரும் அங்கீகாரத்தை அனைத்து நாட்டு தளத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், இங்கும் தோழமை மையம் பல்வேறு கொள்கைகள் கொண்ட பல அமைப்புகை சேர்ந்தவர்களால் இணைக்கப்பட்டிருப்பினும் ஒரு குறைந்த பட்ச போது வேலை திட்டத்தின் கீழ் செயல்படவேண்டும் என்றார். அடுத்து பேசிய ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, தெ.சீ.சு.மணி என்று அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற பி.யு.சீ.எல். என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அகில இந்திய மனித உரிமை அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் என்றும் கூறப்பட்டது. அவர் மாவோ கூறிய மேற்கோளான," போர் என்பது ஆயுதம் தொக்கும் அரசியல், அரசியல் என்பது ஆயுதம் தோக்காத போர்" என்று கூறி தொடங்கினார். வன்னியில் நடந்த நான்காவது போர் ஒரு தற்காப்பு போராக இருந்ததை, புலிகள் கிழக்கிலிருந்து திருநப அழைக்கப்பட்டதையும், மன்னர் தாக்குதல்களினால் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் புலிகள் இருந்த வன்னி பகுதிக்குள் புகலிடம் தேடி வந்ததையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கடைச்யாக முள்ளிவாய்க்கால் என்று அவர்கள் இடம் பெர்ந்ததையும் குறிப்பிட்டு தற்காப்பு போரை புலிகளின் தலைமை தெரிந்தே நடத்தியது என்றும் அதனால் ஏற்படும் அனைத்து நாட்டு அரசியல் போராட்டத்தை போராளிகளின் தலைமை புரிந்தே இருந்தது என்றும் வாதிட்டார். அதன் விளைவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். ஆயுதப்போராடத்தையும், அரசியல் போராட்டத்தையும் எதிர் எதிராக காணக்கூடாது என்றார்.
அடுத்து பேசிய வேப்தமிழ்துனியா ஊடகவியலாளர் அய்யநாதன், ஈழப்போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பொதுமக்கள் பெரும் அளவில் வாக்களித்த காலம் தொட்டு இன்று உலக அளவில் புலம் பெயர்ந்த தமிழர் இடையே என்பது நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையே நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். அதற்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் இன்று தெற்கு சூடான் கொடுத்திருப்பது போல பெற்றுத்தர நாம் போராடவேண்டும் என்று நாடு கடந்த தனிழீழ அரசு தோழமை மையத்தை தாங்கள் தொடங்கி இருக்கும் காரணம் பற்றி விளக்கினார்.
அடுத்து அந்த தேவர் மண்டபம் ஆச்சர்யத்தில் மூழ்க இணையதளம் மூலம் அங்கிருந்த திரையில் தோன்றி நாடு கடந்த தமிழீழத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் ருத்திரகுமார், ருத்ரா என்ற பெயர் அறிவுப்புடன் பேசினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் பேரா.சரஸ்வதி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளதர்க்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். தனது உரையில் தேசிய தலவரின் விருப்பத்திற்கினங்க இந்த அரசியல் களத்தில் தாங்கள் நிற்பதை கூறினார்.தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இயக்கம் எப்படி தங்களது அரசு தொடக்க நிகழ்விலேயே கலந்து கொண்டது என்பதை தெரிவித்தார். தமிழக கடற்கரை ஓரம் மீனவர்கள் சிகல கடற்படையால் கொலை செய்யப்படுவதையும், சமீபத்தில் புபவனம் ஜெயகுமார் கழுத்து நேரிக்கப்பட்டநிலையில் சிங்கள கடல் படையால் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டு தங்கள் அரசு சார்பாக கண்டனம் தெரிவித்தார். சிங்கள பௌத்த பேரினவாத அரசு எவ்வாறு தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் மூலம் இந்திய அரசின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று கூறினார். இந்திய நடுவன் அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து அதன்மூலம் தமிழர்களை அழிப்பதற்கு ஒத்த்டுழைப்பு கொடுத்து ஒரு மாய நம்பிக்கையில் இருக்கிறது என்று விளக்கினார். ஆனால் சிங்களம் இந்தியாவை நம்பவில்லை என்றார்.
அடுத்து பேசவந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம்களான தாங்களும் தமிழர்கள்தான் என்றார். இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழர்கள்தான் என்று விளக்கினார். ஈழத்தமிழர் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும், இப்போது வாழ்வதற்கே வழி இன்றி துன்பப்படுவதையும் விளக்கும் போது அழுது விட்டார்.அது கேட்ட மேடையில் அமர்ந்திருந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் அழுதுவிட்டார். மலையாக தனிழர்கலான இந்திய வம்சாவழி தமிழரும், இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும், எழத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார். முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுடன் இணைந்தே போராடினர் என்றும், சிங்கள சதியால் அவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
அடுத்து உரையாற்றிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன் தாங்கள் பெங்களூருவில் மற்றும் கர்நாடக தமிழ்நாடு எல்லையில் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை தெரிவித்தார். ஆயுதப்போராட்டம் மூலம் விடுதலை அடைவதை விட்டுவிடக்கூடாது என்றும், இந்திய இசை நம்பக்கூடாது என்றும், அரசியல் போராட்டமும் தேவைதான் என்றும், தமிழ்நாடு பிரிந்து செல்லும் போராட்டம் நடத்தபடவேண்டும் என்றும் கூறினார். பேரா.சரஸ்வதி ராசனது அந்த சொந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த தோழமை மையம் ஈழத்தமிழரது அரசு அமைவதற்கான ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறது என்று விளக்கினார். அதை அடுத்து பேசிய பெரியார் தி.க.தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக ராஜன் எழுப்பிய கேவிகளுக்கு விடை பகன்றார். அதாவது அவரவர்களது தனி கொள்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள டத்தை கணக்கில் கொண்டு அதற்குள் நின்று அத்தகைய ஒரு அரசின் அங்கீகாரத்தை உலக ளவில் பெற போராடும் என்றார். ஏற்கனவே இந்திய அரசு கண்ட பாரதம்தான் புலிகளின் கொள்கை என்று பொய் சொல்லி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். புலிகளின் மீதான தடையாய் ஆய்வு செய்ய போடப்பட்ட தீர்ப்பாயம் முன்பு இந்திய அரசு புலிகளின் தொடர்ச்சியே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்று திசை திருப்பும் வேலையை சேதத்தையும் சுட்டிக்காட்டினார்.
நிறைவு உரை நிகழ்த்திய திரைப்பட இயக்குனர் மணிவன்னான், நாடு கடந்த தமிழீழ அரசு அப்ற்றி சந்தேகங்களை கிளப்பியவர்களை நாம் கோபப்படவேண்டாம் என்றும், அத்தகைய சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். பல்வேறு கேள்விகளை அனைத்து நாட்டு தளத்தில் கிளப்பிவருவதால், இத்தகைய சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாது என்றும் விளக்கினார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரே என்று விளித்து, நீங்கள் அங்கீகாரத்திற்காக பல அரசுகளிடம் பேசுங்கள், அதேசமயம் எங்களுக்கு வழிகாட்டுங்கள் அதே கோரிக்கைகளுக்காக நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆயத்தமாக உள்ளோம் என்று முத்தைப்பாக கூறியது பெரும் அளவில் வரவேற்கப்பட்டது.
சென்னை எங்கும் இந்த அறிமுக கூட்டத்திர்க்கான சுவரொட்டிகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கில் துனடரிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன. கூட்ட அரங்கு அருகே அகில இந்திய பார்வார்டு பிளாக் அமைப்பினர் ஒட்டியிருந்த சுவரொட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்தது. அதில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் படமும், முத்துராமலிங்க தேவர் படமும், மூக்கையா தேவர் படமும் போட்டு, நேதாஜி வழியில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முதல் அங்கீகாரம் அளித்த சுதந்திர தெற்கு சூடன் அரசுக்கு ன்றி என்று அறிவித்திருந்தது வித்தியாசமாக இருந்தது.
---------- Forwarded message ----------

Thursday, February 3, 2011

ராஜா சிக்கினாரா? தலைவர் சிக்கினாரா? கட்சியே சிக்கியதா?

ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் தி.மு.க. தலைவர் திணறினார். பிறகு ராஜாவை கழட்டிவிட எண்ணினார். அதற்கு குடும்பத்திற்குள் ஆதரவு அதிகம் இருந்தது. தயாநிதி தூண்டிவிட, செல்வி, ஸ்டாலின், அழகிரி என்று அணி திரண்டனர். தி.மு.க.வின் நால்வர் அணி என்று அது பெயர் பெற்றது. குடும்பத்தலைவன் யோசித்தார். அதற்குள் ராஜா வீடு சோதனை என்று சீ.பி.ஐ. பாய்ந்தது. ராஜா உண்மையை சொல்லத்தொடங்கினால், குடும்பத்தில் எல்லோரும் சிக்க வேண்டும். சிக்கலை உருவாக்கியது 2007 ஆம் ஆண்டிலேயே கே.டி.பிறதேர்ஸ் என்பது குடும்பத்தலைவரின் கணிப்பு. ராஜாவை காப்பாற்ற படைகளை இறக்கிவிட்டார். அதுவே முதலில் தமிழ் ஊடகங்கள் பேரவை என்ற பெயரில் போடப்பட்ட கூட்டம். அதில் கட்சி சார்பற்ற கட்சி விசுவாச அறிவுஜீவிகள் பேசினர்.தி.மு.க.வில் இரண்டு வகை உறுப்பினர் அட்டை இருப்பது தெரிந்தது. ஒன்று திராவிட முன்னேற்ற கழக கட்சியின் உறுப்பினர் அட்டை. அதில் அண்ணா முதல் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்றோர் கையெழுத்து போட்டிருப்பார்கள். இன்னொன்று கையெழுத்து போடாத உறுப்பினர் அட்டை. அது திருக்குவளையூர் முத்துவேலர் கருணாநிதி குடும்ப அட்டை. நீங்கள் நேரடியாக அந்த குடும்பத்தின் உறுப்பினர் என்றால் அப்படி அட்டை தேவை இல்லை. இல்லாவிட்டால் உங்களுக்கு கொடுக்கப்படும்.
அப்படி குடும்ப அட்டையை பெற்றவர்கள் பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ராஜா சார்பாக பேச வெளியே வந்தார்கள். அதன் பிறகு குடும்ப தலைவரே கட்சி தலைவர் என்பதால் கட்சியின் முடிவு என்ற பெயரில் ராஜாவை பாதுகாக்க தொடங்கினார் தலைவர்.இது மாறன் சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தங்களது அணியை சேர்ந்த மற்ற மூவரையும் எச்சரித்தனர். அவர்களது அணியின் முக்கிய குதிரையாக இருந்த ஸ்டாலின் திடீரென பல்டி அடித்தார். தயா கேலி செய்தார். அப்பா வழி சென்றால்தான் தனயனுக்கு சிம்மாசனம் என்பது இளையவரின் கருத்து. ராஜாவை ஸ்டாலின் தற்காத்து அறிக்கைகளை வெளியிட்டார். அழகிரி முதலில் மசியவில்லை. முரண்டு பிடித்தார். தந்தை கவலைப்படைல்லை. ராஜாவிடம் வான்க்காமல் ஸ்டாலினும், அழகிரியும் இல்லை என்பது துணை கதை. தயாதான் பிரச்சனை என்று தலைவர் எண்ணினார். காங்கிரஸ் கட்சி தலைமையை தயா நெருங்கி சென்று திட்டமுடிகிறார் என்று தலைவர் சந்தேகப்பட்டார். கணிராஸ்-தி.மு.க. தேர்தல் உடன்பாட்டை தயா முறிக்க பார்க்கிறார் என்ற அளவு சந்தேகம். அதேபோல தயாவின் காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும் குடும்பத்தலைவரின் ஆட்சிக்கு எதிரான கருத்துகளுக்கு அதிக விளம்பரம் செய்துவந்தன. இப்போதும் செய்து வருகின்றன.ராஜாவை விட்டால் எல்லோரையும் அம்பலப்படுத்துவார் என்ற பயம் தலைமைக்கு உண்டு. இத்தனை கோடி ரூபாயை ஒரே மனிதர் கொள்ளை அடிக்கமுடியுமா என்று கான்கிஈஸ் தலைமையையும் வலைக்குள் சிக்க வைக்க முயற்ச்சித்தார். அதற்குள் டில்லிக்காரர்களுக்கு உச்சநீதிமன்ற வழக்கு சிக்கலை அதிகப்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை காப்பாற்ற வேண்டும்.கபில்சிபல் அதற்காக பொய்களை கண்டபடி பேசத்தொடங்கினார். சீ.பி.ஐ. வசமாக சிக்கிக்கொண்டது. பெயர் அசிங்கப்படாமல் இருக்க சில சோதனைகளையும், இப்போது கைதுகளையும் செய்து வருகிறது.மீண்டும் தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி ராஜாவை பாதுகாத்து விட்டது. இதை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளும், அமைச்சரவை பங்கும் கேட்கலாம் என்பது அதன் யுத்தி. வருகிற பத்தாம் நாளில் சீ.பி.ஐ. முன்வைக்கும் அறிககையை உச்சநீதிமன்றம் எப்படி பார்க்கப்போகிறது என்று பொறுத்திருந்து தேர்தல் கூட்டு பற்றி முடிவு செய்யலாம் என்று காங்கிரஸ் எண்ணுகிறது. எப்படியோ மாட்டிக்கொண்டது ஆளும் மன்னர் குடும்பம்.ஆமாம். சோனியா மிரட்டினாங்கன்னு ஒரு செய்தி நடமாடுதே. நூறு தொகுதி கேட்டு, என்பதாவது வாங்கனும்னு காங்கிரஸ் உறுதியா இருக்காங்களாமே. எல்லாம் உண்மையா? பா.ம.க. பற்றி சோனியா சந்தர்ப்பவாதின்னு கருனாநிதிட்ட சொன்னதா தி.மு.க. பொதுக்குழுவிலேயே தலைவர் சொல்லியிருக்காரே, அதுக்கு என்ன அர்த்தம்?