Wednesday, October 13, 2010

தூத்துக்குடி ஸ்டெர்லைட் செய்த இன்னொரு கொலை.

நேற்று செப்டம்பர் --பன்னிரெண்டாம் நாள், அதர்ச்சி செய்தி கேட்டு, தூத்துக்குடியில் ஆர்வலர்கள் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கே ஸ்டெர்லைடில் பணியாற்றும் முத்துக்ரிஷ்ணன் என்ற தொழிலாளி, அவசர் சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும், தலை முதல் முகம், நெஞ்சு என எல்லா பகுதிகளும் அமிலம் பட்டு எரிந்து போய் விட்டது எனவும் செய்திகள் கிடைத்தன. அதற்குள் அந்த நாசகார ஆலையின் நிர்வாகம், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் அண்ணனையும், அண்ணியையும் அணுகி தொகை தந்து
விடுகிறோம், சமாளியுங்கள் அன்று சொல்ல ஒரு நாடகத்திற்கு வீட்டாரும் தயார் ஆனார்கள். அண்ணன் முத்துபாண்டி, ஆலை எதிர்ப்பாளர்களை பார்த்து, என் தம்பி விசயத்தில் நீங்கள் எப்படி தலையிடலாம்; அது உரிமை மீறல் என்றார். உரிமை பற்றியும் ஆலை நிர்வாகிகள் கற்று கொடுத்து விட்டார்கள்.

அதற்கு ஆர்வலர்கள் உங்கள் தம்பி விஷயம் உங்க வீட்டு விசயம்தான்; ஆனால் ஸ்டெரிலைட் பணியாளர் விஷயம் எங்களுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பதில் கொடுக்க, முதுக்ரிஷ்ணனின் அண்ணியார் என் கொழுந்தன் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் யாரும் உள்ளே போய் பார்த்தால் அவருக்கு பாதிப்பு வரும் என்று சொல்ல, ஆர்வலர்கள் பின்வாங்கினர். அவர் உடல் தேறிவிட்டது எனவும், தாங்கள் தங்கள் சொந்த ஊரான ஊத்துமலைக்கு கூட்டி செல்லப்போவதாகவும், அவர்கள் அறிவித்துவிட்டு ஆலை நிர்வாகம் நல்லா கவனிச்சுகிட்டாங்க என்றனர். யாரை கவனிச்சு கிட்டாங்க என்று அப்போதுஅவர்கள் சொல்லவில்லை.ஊத்துமலையில் மறவர் சமூகத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர் முத்துகிருஷ்ணன் , ஓட்டுனராக அந்த ஆலையில் பணியாற்றிவந்தவர். அவரை விபத்து நடந்தவுடன் செப்டம்பர் பதினெட்டாம் தேதியிலேயே முதலில் தனியார் ஏ.வி.எம்.மருத்துவமனையிலும், பிறகு அரசு முத்துவ மனையிலும் சேர்த்துள்ளனர்.
.

அன்பிறகு இன்று புதன் காலையில், அந்த தொழிலாளி இரந்து விட்டார் என்றும், அவருக்கு அவசர் அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாகவும் செய்தி கேட்டு, ஆர்வலர்கள் மருத்துவ மனைக்கு ஓடினர். அங்கே உண்மை தெரிந்தது. சல்பூரிக் அமில துறையில், அமிலம் மேலே கொட்டி அந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் அடிபட்டு, சென்ற மாதம் பதினெட்டாம் தேதியே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மரணமடைந்த அவரை வெள்யே எடுக்க, அண்ணன் முத்துபாண்டி குடும்பத்திற்கு ஐந்து லட்சம் பேசப்பட்டு, ஒரு சிறு தொகை முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது விவகாரம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. அதுவும் ஆர்வலர்கள் மருத்துவமனை முன்பு போராட தொடங்கி விட்டனர். வேறு வழி இல்லாமல் காவல்துறை வழக்கு பதிவி செய்ய முன்வந்தனர். தீவிர கவனக்குறைவு என்ற பிரிவில் 304 -அ என்ற பிரிவில் வழக்கை அங்குள்ள சல்பூரிக் அமில துறையை சேர்ந்த பொறுப்பாளர் சங்கர நாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்வலர்களும் கொலை வழக்கு போடச்சொல்லி கத்தியும் பலிக்கவில்லை.

இரண்டு நாட்கள் முன்பு , செபடம்பர் பதினோராம் நாள் ஒரு மாபெரும் ஊர்வலத்தை ஸ்டெரிலைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி நகரில் நடத்தினர். அதில் 10000 பேர் பங்குகொண்டனர். அதில் மீனவர்கள், வணிகர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். தோழர் இரா. நல்லகண்ணு அந்த பேரணியை தொடங்கி வைக்க, பேராசிரியர். பாத்திமாபாபு தலைமை தாங்கி சிறப்பாக செய்தனர்.பேரணிக்கு சில நாட்கள் முன்பு அரசு எல்லா கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் எந்த ஒரு வெளி போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும், மாணவ, மாணவிகள் செல்லக்கூடாது என்று இருந்தது. அது என்ன புதிய உத்தரவு? மாநிலத்திற்கு முழுவதற்கும் இல்லாமல் ஒரு மாவட்டத்திற்கு மட்டுமா? அதாவது ஸ்டெரிலைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் வரிந்துகட்டுகிறது?

மறுநாள் அரசு நடத்திய புகை பிடித்தல் எதிர்ப்பு பேரணியில் பள்ளி சிறுவர்களை அழைத்துவந்தனர். அவர்கள் அங்கே வந்து ஸ்டெரிலைட்டை இழுத்து மூடு என்று முழக்கமிட்டது அந்த நகரின் மனச்சாட்ச்சியை காட்டியது எல்லா ஊடகங்களுக்கும், அந்த நாசகார ஆலை விளம்பரம் கொடுத்து கை நிறைய பணம் கொடுத்துவிட்டான். அதனால் எந்த ஊடகமும் அந்த பேரணியை பெரிதாக போடவில்லை. இங்கே பணம் மாட்டும்தான் ஊடகங்களுடன் பேச முடிகிறது.இந்த ஆலையில் தாமிரம் உருக்கப்படுகிறது. அது அந்த நகரம் முழுவதையும் கடுமையாக சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த ஸ்டெரிலைட் ஆலையை உயர்நீதிமன்றம் சென்ற மாதம் மூடச்சொன்னது.
. ஆனால் உச்சநீதிமன்றம் முதலாளிக்கு கருணை காட்டி உயர்நீதிமன்ற ஆணைக்கு, தடை கொடுத்துவிட்டது. இப்படி பணம் மூலமே அணில் அகர்வால் எல்லா இடத்திலும் வேதாந்தா என விலை பேசிவருகிறார். இந்த நிகழ்வு இன்னொரு போபால் இங்கே வரலாம் என்பதை காட்டுகிறது. இதே போல இரண்டு மாதம் முன்னால், சென்னை அருகே ஒருபோபால்
முயற்சி நடந்தது.

சென்னை அருகே திருபெரும்புதூரிலிருந்து வந்த செய்தி, அதிர்ச்சியை தந்தது. அங்கே ஒரு ஆலையில் நச்சு கசிவு வெளியாகி, நூற்று இருபது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாந்தி எடுத்தனர். மருத்துவமனையில் காதிலிருந்து ரத்தம் கசிந்ததாக கூறுகின்றனர். விபத்து ஏற்ப்பட்ட ஆலை, சீனா நாட்டுக்காரர் ஆலை. சீனாவைச்சேர்ந்த அந்த பெரிய நிறுவனம், சீன நாட்டில் பெரிய அளவில் பெயர் பெற்ற ஆலை. அது ஒரு பன்னாட்டு மூலதன ஆலை என்று பிரபலம் அடைந்த நிறுவனம். சீன மக்கள் குடியரசுக்கு எதிரான சீன நாடாக உலகம் புரிந்துள்ள தைவான் நாட்டிற்கு சொந்தமான பன்னாட்டு மூலதன ஆலை அது. தைவானை சார்ந்த அந்த ஆலையில், ஹய்பேட் என்று கூறப்படும் காதில் வைத்து பாட்டு கேட்கும் இயந்திரம், அப்போலோ போன் என்ற பெயரில் உற்பத்தியாகிறதாம்.


அங்கு எப்படி நச்சு வாயு கசிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த செய்தியை ஊடகங்களுக்கு வரவிடாமல் செய்வதில், ஆலை நிர்வாகம் அதிக கவனம் எடுத்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட நூற்று இருபது தொழிலாளர் களும், அருகே உள்ள ஜெயா மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்ட தாகவும், அங்கே இருபத்தைந்து தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அதையொட்டி பூந்தமல்லி சுந்தர் மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவர்களை எடுத்து சென்றுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் ஆலை நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து செய்திகளின் தாக்கம் வெளிவந்துவிடாமல் தவிர்க்க, ஊடகங்களுக்கு முறையான செய்திகளை செல்லவிடாமல் இருந்தனர் என்ற கருத்தும் நிலவியது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் பற்றி கிடைக்கும் செய்திகள் ஆவலை அதிகப்படுத்துகின்றன. அதாவது இந்த குறிப்பிட்ட சீன நிறுவனம், ஏற்கனவே சீன நாட்டில் மிகவும் பெயர் பெற்ற கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.


உலகிலேயே அதிகமான அளவில் மின்னணு மற்றும் கணினி உறுப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை பெற்றதுதான் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம். மற்ற நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உற்பத்தியை முக்கியமாக இது செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு, மக்மினி, ஐபெட், ஐபாட், ஐபோன் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறது. அமெரிக்க கணினி நிறுவனங்களான டெல்,போன்றவற்றுக்கு பல்வேறு பொருள்களை தயார் செய்து கொடுக்கும் நிறுவனம் இது சில பாகங்களை .மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், மோட்டாரோலா, நோக்கியா ஆகியற்றுக்கு செல்லுலார் போன்களையும் தயார் செய்து கொடுக்கும் நிறுவனம். 1974 ல் பிளாஸ்டிக் பொருள்களை தயார் செய்யும் நிறுவனமாக இது தொடங்கியது.

தைவான் பங்கு சந்தையில் 1991 வரை இந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமாக இருந்தது. 1988 ல் தனது முதல் உற்பத்தி ஆலையை சீனாவில், ஷென்சென் பிராந்தியத்தில் தொடங்கியது. அதுதான் இப்போது இந்த நிறுவத்தின் மிகப்பெரிய ஆலையாக 420000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அந்த தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் இயங்குகிறார்கள். ஆனால் அனைவரும் தொழிற்சாலையின் வளாகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பாஃக்ஸ்கான் ஆலை, தனது ஷென்சென் ஆலை உட்பட, மக்கள் சீன குடியரசில் மொத்தம் 800000 தொழிலாளர்களை கொண்டதான ஆலையாக இயங்கி வருகிறது. 1994 முதல், இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவிலும், ஜப்பானிலும், வளர்ச்சி மையங்களை விலைக்கு வாங்கி தொழில் புரிந்து வருகிறது.


1997 லும், 1998 லும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கூடுதலான உற்பத்தி தொழிற்சாலைகளை இவர்கள் நிறுவினார்கள். 2007 ஆம் ஆண்டில், செக் குடியரசிலும், ஹங்கேரியிலும், மெக்சிகோவிலும், பிரேசிலிலும்,இந்தியாவிலும், வியட்நாமிலும், இந்த நிறுவனத்தின் ஆலைகளும், துணை ஆலைகளும் காணப்பட்டன. சமீபத்தில் இந்த நிறுவத்தின் மீது, அதன் தொழிலாளர் விரோதப் போக்குகளை பற்றிய பொதுமக்கள் விசாரணை என்பது வெளிவந்தது. சீனக்குடியரசில் இதுதான் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்றாலும், இதன் தொழிலாளர் விரோதப்போக்கு கம்யூனிஸ்ட் சீனா என்ற அந்த நாட்டிலேயே அதிகமாக இருந்தது என்பதே இந்த ஆலை பற்றிய ஒரு சித்திரத்தை நமக்கு தந்துவிடும்.


அதுமட்டுமின்றி இந்த ஆண்டிலேயே, ஐந்து மாதங்களுக்குள் இந்த ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்கள், ஆலையின் சுவர்கள் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், அதே சமயம் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பாஃக்ஸ்கான் ஆலை பற்றிய ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உடனே இந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை நூறு விழுக்காடு கூட்டி அறிவித்தது. இந்த அளவுக்கு இந்த ஆலையின் தொழிலாளர் நிலைமை இருக்கிறது என்பது இதிலிருந்தே வெளிப் படுகிறது.


இந்த பாஃக்ஸ்கான் ஆலை தனது வளாகத்திற்குள், தொழிலாளர்களை கொத்தடிமை போல வைத்திருந்ததாலேயே, அவர்கள் சுவர் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது புரியப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஆலையில்தான் இங்கே திருபெரும்புதூரில், இதே ஆலையின் கிளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லையில்லா பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கையும், அதை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகங்களுக்கு எதிரான போக்கையும் வெளிப்படுத்தி இருந்தது இவர்களை அம்பலப்படுத்திய சீனா வணிக செய்திகள் என்ற இதழாளர்களுக்கு எதிராக பாஃக்ஸ்கான் நிறுவனம் வழக்கு தொடுத்து அவர்களுக்கு நாற்பது லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதிக்கச் செய்தார்கள். இதன் மூலம் ஊடகங்கள் இந்த நிறுவனம் கண்டு அஞ்சத் தொடங்கின.


சீன குடியரசில் இருக்கும் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனத்தில், 2007ம் ஆண்டு ஜூன் 18ம் நாள் ஹூ என்ற 19 வயது பெண் தொழிலாளி, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே கழிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் 21வயது ஆண் தொழிலாளி லியூபிங், வேலையிலிருந்து நீக்கப்பட்ட 2மணி நேரத்தில் திடீரென இறந்து போனார். 2008ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் 28 வயது லீ என்ற ஆண் தொழிலாளி வேலை பளுவின் காரணமாக மரணமடைந்தார். 2009ம் ஆண்டு ஜூலை 16ல் சன் டன்யங் என்ற 25 வயது ஆண் தொழிலாளி தான் தங்கியிருந்த 12 வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 2009 ஆகஸ்ட் 20ல் 23வயது சென் சின் சாங் என்ற ஆண் தொழிலாளி ஆலையின் குளத்தில் இறந்து கிடந்தார். அதன் பிறகே 2010ம் ஆண்டு 5 மாதத்திற்குள் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ள ஆலை சுவற்றிலிருந்து கீழே குதித்தனர் என்ற செய்தி வெளி வந்தது.

இந்த அளவுக்கு கொடுமையான தொழிலாளர் விரோத போக்கை மேற்கொண்ட இந்த பாஃக்ஸ்கான் ஆலை, ஆஸ்திரேலிய இணையதளத்தில் இந்த உண்மைகளை வெளியிட்டதற்காக, வழக்கு போட்டது. 2010 பிப்ரவரி 17ம் நாள் சீனாவில் உள்ள இதன் ஆலையில் ஒரு வெளிநாட்டு நிருபர் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஆலைதான் திருபெரும் புதூரில் நச்சு வாயு கசிவை ஏற்படுத்தி விட்டு, இப்போது அதை மறைக்கப் பார்க்கிறது.

அந்த பாக்ஸ்கான் ஆலை அதிபர்களை நேரில்போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் நமது மாநிலத்தின் தளபதியாம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்மூலம் அதிக மூலதனத்தை இறக்க பேசிவிட்டு வந்திருக்கிறார். இவர்களையும் நாம் அடையாளம் காணவேண்டாமா?

சீன நாட்டினர் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொடியதொரு பாத்திரத்தை வகுத்தப் பின்பு, இப்போது தமிழ்நாட்டு தொழிலாளர் களை அழிப்பதற்காக வந்திருக்கிறார்களா என்று தமிழின உணர்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை போபால் நகரில் 26 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நிறுவனம், நச்சு வாயுவை அவிழ்த்துவிட்டு இந்திய மக்களை கொன்றது போதும். நமக்கு மீண்டும் ஒரு போபால் வேண்டாம். மேற்கண்ட விபத்தை முன்வைத்து, இங்கொரு போபால் இனியும் வேண்டாம் என்ற குரலை எழுப்ப வேண்டாமா

மரணத்திற்குப் பிறகும் படிப்பினைகள் தரும் தோழர் பழனியப்பன்!

பழம்பெரும் புரட்சியாளர் தோழர் பழனியப்பனை,இராவன்னா என்று அழைப்பார்கள்.அவர் காரைக்குடியில் சி.பி.ஐ கட்சியில் இருந்தார்.அப்போது 1967 ஆம் ஆண்டின் நக்சல்பாரி புரட்சி இவரையும் ஈர்த்தது.பழனியப்பன் பாத்திரங்கள் தயாரிக்கும் பணியில் இருந்தார்.உற்பத்திக்கான போராட்டம் என்று கூறப்படும் உழைப்பில் இருந்த பழனியப்பன்,தனது வாழ்க்கையை நக்சல்பாரி இயக்கத்திற்காக அர்ப்பணீப்பில் இறங்கினார். அன்றைய நக்சல்பாரி இயக்கத்தில்,சாருமஜீம்தாரின் வழிகாட்டல்கல் எல்லோராலும் ஏற்கப்பட்டன.தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட வழிகாட்டல்களில் செயல்பட்டு வந்த தோழர் எல்.அப்பு,வேலுரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ரகசியமாக கொலை செய்யப்பட்டார்.அது 1970ஆம் ஆண்டு நடந்தது.அண்ணாமலை பழ்கலைகழகத்தில் படித்து வந்த கே.என்.கணேசன், பென்னாடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்து சிதறி தியாகியானார்.அவருடன் விளாத்திகுளத்தை சேர்ந்த சர்ச்சிலும், சிறுமுகையை சேர்ந்த கன்னியப்பனும் மரணமடைந்தார்கள் அதுவும் 1970 ஆம் ஆண்டு நடந்தது.

1972ஆம் ஆண்டு தோழர் பழனியப்பன் சாருமஜிம்தார் வழியில் செயல்பட முடிவு செய்து,தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இறங்கினார். செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் தேவேந்திரகுல மக்கள் ஆதிக்க சாதியின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருந்தனர். அந்த கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தபடி,பழனியப்பன் இறங்கி தலைமறைவு இயக்கப்பணிகளை தொடங்கினர்.ஒரு கட்டத்தில் அந்த கிராமம் காவல்துறையின் கியூ பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது சுற்றி வளைப்பை உடைத்துக்கொண்டு பழனியப்பனும்,தோழர்களும் தப்பித்தார்கள் அந்த மீனாட்சிபுரம் கிராமம்தான் பிறகு முழுமையாக முஸ்லிம்மாக மாறியது. அதாவது புரட்சிகர மாற்றத்திற்கு தயாரான தலித் மக்களை அரசு அடக்குமுறை செய்யுமானால், அவர்கள் சாதி ஒடுக்கலில் இருந்து தப்பிப்பதற்காக மதம் மாறுவார்கள் என்பதற்கு இதுவே சான்று.

அதனாலேயே அந்த கிராமத்தை சேர்ந்த வாத்தியார் இராமசாமி, நாகூர்மீரான் போன்றோர் மிசாவில் சிறையில் தள்ளப்பட்டனர். அதன்பிறகு இராவண்ணா என்று அழைக்கப்பட்ட பழனியப்பன் இராஜபாளையம் அருகே சேத்தூர்,முகவூர்,தளவாய்புரம் கிராமங்களில் தங்கள் பனிகளை தொடர்ந்தார்..அதை ஒட்டி அந்த வட்டாரத்தில் நாலு பண்ணையார்கள் அழித்தொழிக்கபபட்டார்கள்.சாருமஜீம்தாரால் முன்வைக்கப்பட்ட, கொடுமைமிக்க வர்க்கக எதிரிகளை அழித்தொழியுங்கள் என்ற செயல் தந்திரம் அங்கே நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் அந்த கிராமங்களை சேர்ந்த இரராயப்பன், மச்சக்காளை, ஆறுமுகம், ஆகியோரும், இரத்தினம்,அமல்ராஜ், ஆவுடையப்பன்,கல்லனை போன்றோரும் புரச்சிகர இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அதில் முதல் இரண்டு தோழர்களை காவல்துறை திட்டமிட்டு படுகொலை செய்தது.இதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இராவன்னாவின் செயல்பாடு விரிவடைந்தது.அதில் குறிப்பிட்ட கிராமத்தில் புதிதாக இயக்கத்திற்கு வரும் தோழர்களை இராவன்னா அழைத்து செல்வார் அங்கே அவர்களுக்கு விவசாய வேலைகளை கற்றுக்கொடுப்பார்.அதன் மூலம் புதிய தோழர்கள் உற்பத்திக்கான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொள்ள முற்படுவார்கள்.

இதைத்தான் மாவோவும், சாருவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப்போராட்டம் ஆகியவற்றில் புரச்சியாளர்கள் ஈடுபட்டு, அதன்மூலம் நிலமற்ற, ஏழை விவசாயிகள் மத்தியில் ஒன்றினை--ய வேண்டும் என்று சாருமஜீம்தார் வழிகாட்டல் கொடுத்து இருந்தார். அறிவு ஜீவிகள் தங்களை உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும் என்று மா-சே-துங் கூறி இருக்கிறார்.

அப்படிப்பட்ட வழிகாட்டல்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திய தோழர்களில் பழனியப்பன் முக்கியமானவர். சாரு வழியில் செயல்பட்ட மாநில குழுவிற்கு,பழனியப்பன் செயலாளராக பொறுப்பு ஏற்று இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது போடப்பட்ட நான்கு கொலை வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் வைக்காமல் தானே வாதாடி அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்றார். அந்தக்காலத்தில் புரட்சியை தொழிலாக கொண்டவர்கள் என்பதாக கட்சியின் ஊழியர்கள் பெயர் பெற்று இருந்தனர். அவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு புரட்சியாளர்களாக இயங்கி வந்தனர். காலப்போக்கில் அதுவே நகரம் சார்ந்த நடமாட்டத்தை மட்டுமே மேற்க்கொள்ளும் ஊழியர்கள்,தங்களை முழுநேரஊழியர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.இவர்கள் பரப்புரை மட்டுமே செய்து வருபவர்கள். இவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்க உலக கண்ணோட்டத்தை உள்வாங்காமலேயே செயல்பட முடிகிறது.அதனால்தான் இவர்களால் ஒடுக்கப்படும் மக்களை பெருமளவிற்கு அணி திரட்ட முடியவில்லை.இவர்களது வேலை திட்டத்தை ஆய்வு செய்வதன் மூலம்,அவர்களுக்கு இருக்கின்ற புரட்சிகர வர்க்கப்போராட்ட பிடிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.இந்த விசயத்தில் பழனியப்பன் ஒரு புரட்சிகர முன் உதாரணத்தை படைத்து விட்டார்.

சித்தாந்த மட்டத்திலும், பழனியப்பன் இயங்கியல் மற்றும் இயக்கமறுப்பியல் ஆகியவை பற்றிய சர்ச்சைகளை தொடர்ந்து செய்து வந்தார். இப்போது பலரிடமும் இத்தகைய விவாதங்களை காண முடிவதில்லை.

சமீபத்தில் காரைக்குடியில் 24-09-2010அன்று மரணம் அடைந்த பழனியப்பன் இறுதி நிகழ்வில், மேற்கண்ட படிப்பினைகள் உணரப்பட்டன. தமிழ்நாட்டில், பிற மாநிலங்கள் போல் இல்லாமல் புரட்சிகர இயக்கங்கள் வெற்றி பெற்று, முன் செல்லாததற்கு, இத்தகைய காரணங்களும் இருக்கின்றனவா என்ற விவாதத்தை, தோழர் பழனியப்பன் வாழ்க்கை பரிசீலிக்க வைக்கிறது.