Thursday, September 30, 2010

மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.

மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.
மூன்று நீதியரசர்களில், இரண்டு பேர் ஷர்மாவும், அகர்வாலும். இந்துக்கள். அதனால் அவர்கள் கொடுத்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குர்யா இடத்தில், ராமர் கூரையின் கீழ் பிறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். யாராவது நீதியரசர் என்ற பெயரில் உள்ளவர்கள் "லாம்" போட்டு ஒரு தீர்ப்பை கொடுப்பார்களா? இவர்கள் இந்துத்துவாவாதிகளாக இருப்பது இதிலேயே தெரிகிறது. அதேபோல கான் என்ற ஒரு நீதியரசர் மட்டும், 1949 ஆம் ஆண்டு 23 ஆம் நாள்தான் ராமர் சிலையை கொண்டுவந்து மசூதிக்குள் வைத்தார்கள் என்கிறார். அவர் இந்து இல்லை என்பதனால் தைரியமாக இப்படி சொல்ல முடிகிறதா? அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும், கோவிலை இட்த்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அதி புத்திசாலிகளுக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்த்தது என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இந்திய மக்கள் இவர்களை கல்லைக்கொண்டு அடித்துக்கொல்லலாமா என்று யாராவது கேட்டுவிடக்கூடாது.
கற்பனை கதைகளை சொல்லவும், கடவுள் அங்கே பிறந்திருக்கலாம் என்று சொல்வதற்கும் இது ஒன்றும் அந்த தாத்தாக்களின் வீட்டு பேரன்களுக்கு சொல்லும் கதை இல்லையே? இது நீதி மன்றம் என்பது அவர்களுக்கு தெரியாதா? சொத்து யாருக்கு சொந்தம் என்று வழக்கு கேட்டால், ஆளுக்கு பாதி எடுத்துகிடுங்க என்பதற்கு இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? இவர்கள் பிரித்துக்கொடுத்தது அயோத்தியில் உள்ள நிலத்தை அல்ல, மாறாக இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களை. இவர்கள் பிரித்து கொடுத்தது இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை. இந்த நாட்டு மக்களின் மனதுகளை. இதற்க்கு ஒரு நீதியரசர் மற்றும் நீதிமன்றம் தேவையா?
இது ஒருமதச்சர்பு அரசு என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனால்தான் இங்குள்ள நீதிமன்றமும் ஒருமதச்சார்பு நீதிமன்றமாக இருக்கிறது. தியோகிரடிக் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒருமதச்சார்பு அரசு மற்றும் நீதிமன்றம் இருப்பது இப்படியாவது அம்பலமானதே.

நீதிமன்றம் ஒரு சார்பு தீர்ப்பு வழங்கலாமா? குழப்பலாமா?

அல்லஹாபாத் உயர்நீதிமன்றம் பாபர்--கோவில் விவகாரம் பற்றிய வழக்கில், யாருக்கு அந்த இரண்டரை ஏக்கர் நிலம் சொந்தம் என்ற வழக்கை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது. ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடம் உண்மையிலேயே ராமர் பிறந்த இடமா? அதில் ஒரு ராமர் கோவில் இருந்ததா? அல்லது அது விவரம் தெரிந்த காலத்திலிருந்து பாபர் கட்டிய மசூதி இருந்த இடமா? இதுதான் அந்த நீதிமன்றம் முன்னால் உள்ள வழக்கு. அறுபது ஆண்டுகளாக நீண்டுகொண்டே போகின்ற ஒரு வழக்காக இந்த வழக்கு இருக்கிறது. இந்திய வழக்காடுமன்றங்களில் இத்தனை ஆண்டுகளாக இழுத்துக்கொண்டு இருக்கும் வழக்கு இது என்பதாகவும் தெரிகிறது. அல்லஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை பாபர் மசூதி வழக்கு என்றும், ராமர் பிறந்த இடம் பற்றிய சர்ச்சை வழக்கு என்றும் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படுகிறது.
அந்த நிலம் அறுபது சதுர அடிக்கு, நாற்பது சதுர அடி என்ற நிலப்பரப்பு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைதான். அந்த இடத்தில்தான் பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர்-6 ஆம் நாள் வரை இருந்தது. அனைவரும் காட்சி ஊடகத்திலாவது பார்க்கும் வண்ணம் அன்றைய நாளில் உடைக்கப்பட்டது. ஒரு வழிப்பாட்டு தளத்தை உடைக்கலாமா என்ற பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனை அதாவது அந்த குறிப்பிட்ட இடம் பாபர் மசூதிக்கு சொந்தமானதா? அல்லது ராமர் கோவிலுக்கு சொந்தமானதா? என்ற பிரச்சனை 1885 முதல் இருக்கிறது. பாபர் மசூதி என்ற அந்த கட்டிடத்திற்குள், இருக்கும் ராமர் சிலைக்கு வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும் என்று அந்த ஆண்டு நிர்மொஹி அகாரா என்ற அமைப்பு அனுமதி கேட்டு, வழக்கு ஒன்றை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. அப்போது அனுமதி கொடுக்கப்படவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டே அதாவது 1886 இல் பைசாபாத் நீதிமன்றத்தின் மாவட்ட நீதியரசர் எப்.ஈ.ஏ. சமீர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் இந்துக்களால் புனித இடமாக நம்பப்படும் ஒரு இடத்தில் குறிப்பாக ஒரு மசூதியை கட்டியிருக்கிறார்கள் என்பது கெடுவாய்ப்பானது என்றார். அது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால் இப்போது அதை நிவர்த்தி செய்வது என்பது முடியாத காரியம். 1950 தொடங்கி அலஹாபாத் நீதிமன்றம் முன்னால் ஐந்து வழக்குகள் யாருக்கு அந்த நிலம் சொந்தம் என்று போடப்பட்டுள்ளது. அதில் நான்கு வழக்குகள் இந்துக்களுக்கு ஆதரவாகவும், ஒன்று சன்னி வக்போர்டால் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் போடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளுமே அந்த குறிப்பிட்ட ஒன்றரை ஏக்கர் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று போடப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட வழக்குகள்தான் இப்போது அந்த அலஹாபாத் நீதிமன்றம் முன்னால் உள்ள மூன்று நீதியரசர்கள் முன்பு வந்த வழக்குகள். மூன்று நீதியரசர்களும், அகர்வால், சர்மா, கான் என்று பெயர்கொண்டவர்கள்.

1528 இல் மிர் பாகி, பாபர் மசூதியை கட்டுவதற்கு முன்பு அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு கோவில் இருந்ததா? என்ற கேள்வி நீதியரசர்கள் முன்னால் நின்றது. 1961 இல் சன்னி வக்போர்டால் போடப்பட்ட வழக்கு, கால கெடுவால் தடுக்கப்பட்டதா? என்பதற்கும் பதில் வேண்டி நீதிமன்றம் முன்னால் நின்றது. அதேபோல அயோத்தியா உண்மையில் ராமர் பிறந்த இடமா? என்பதற்கும் நீதியரசர்கள் பதில் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதேபோல இந்துக்கள் அந்த இடத்தில் நீண்ட காலம் வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்வியும் இருந்தது. 1934 இல் முஸ்லிம்கள் அந்த மசூதியை வழிபாட்டு இடமாக பயன்படுத்துவதிலிருந்து கைவிட்டு விட்டார்கள் என்றால், ராமர் சிலைகள் அந்த மசூதிக்குள் திடீரென தோன்றியது மந்திரமா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த கேள்விகள் கடந்த ஆறு பத்தாண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்படும் கேள்விகள். உணமைகளை சொல்வது என்பது மட்டுமின்றி, நம்பிக்கைகளா சம்பந்தப்பட்ட விசயங்களில் அந்த நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்று இந்த நாடு எதிர்பார்த்தது. நம்பிக்கைகள் விசயத்தில் நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்ல முடியுமா? என்றால் அந்த கேள்வியும் சட்டத்தில் கவனிக்கப்படவேண்டும். 1949 இல் டிசம்பர்-22 ஆம் நாள் திடீரென அந்த இடத்தில் தோன்றிய ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் மீது முரண்பாடு வந்தவுடன் அரசு அந்த இடத்தை கைப்பற்றியது பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தீர்ப்பு வரும் நாள் என்று செப்டம்பர் முப்பதாம் நாளை அறிவித்து அதை ஊடகங்கள் மூலம், பதட்டம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என்று அடிக்கடி சொல்லி பதட்டத்தை ஏற்ப்படுத்திய அணுகுமுறை அரசின் அணுகுமுறையாக இருந்தது. நீதிமன்றத்திற்குள் வழக்கு போட்ட நபர்கள்தான் செல்லவேண்டும் என்று கூறி மேலும் பதட்டம் ஏற்ப்படுத்தப்பட்டது. அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள அதிகமான இந்து மதம் சார்ந்த வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி ஊடகங்களில் பதட்டத்தை கூட்டினர். நீதிமன்றத்திற்குள் செல்பவர்கள் தீர்ப்பு கூறி முடிக்கும்வரை வெள்யே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. சன்னி வக்போர்ட் மற்றும் நிர்மோகி அகாரா தொடுத்த வழக்கு கால கெடு முடிந்து விட்டது என்பதாக கூறத் தொடங்கினார்கள்
மூன்று பகுதிகளாக அந்த நிலம் பிரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பை பற்றி காட்சி ஊடகங்கள் கூறத்தொடங்கின. அலஹபாத் உயர்நீதிமன்ற இணையதளம் திடீரென சிக்கிவிட்டது. சிலைகளை அங்கிருந்து அகற்றவேண்டியதில்லை. மூன்று மாதங்களில் நிலம் பிரிக்கப்படவேண்டும். இந்துக்களின் வழக்கறிஞர் ரவிசங்கர் காட்சி ஊடகங்களில் விளக்கினார். ராமர் பிறந்த நிலம் என்பதை அந்த நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுதான் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். தீர்ப்பு மிகவும் தவறு என்று வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார். 1992 இல் மசூதி இடிக்கப்பட்டது உண்மையா இல்லையா என்று கேட்டார். அப்படி இடிக்கப்பட்டது உண்மை என்றால், அந்த இடத்தின் சொந்தக்காரர்களான சன்னி வக்போர்டு தொடுத்த வழக்கை எப்படி காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய முடியும்? என்று வினவினார்.

பிரச்னையை மிகவும் சிக்கலாகக் நீதியரசர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு அல்ல என்பதாக இதன்மூலம் சொல்லுகிறார்களா? இது ஒரு ஒருமதச்சார்பு அரசு இயந்திரம் என்று இதன்மூலம் தெரிகிறதா? தீர்ப்பு ஒரு சார்பானது என்பதை ராஜீவ் தவான் கூறினார். மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு, மீதம் இரண்டு பகுதிகளை இரண்டு இந்து அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது இரண்டு இந்து அமைப்புகளுக்கு சேர்த்து, மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்றும், ஒரு பங்குதான் முஸ்லிம்களுக்கு என்றும் தீர்ப்பு கூறுவதாக பொருள் .இது ஒருமதச்சார்பு தீர்ப்பு இல்லையா? பாபர் மசூதி கமிட்டிக்கு ஒரு பகுதியை கொடுத்தால், அதில் பாபர் மசூதியை கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களா? ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்றும், இன்னொரு பகுதியை புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறியிருப்பதன் நோக்கம் என்ன?
இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கவா? இது கட்டப்பஞ்சாயத்து போல இல்லையா? நீதிமன்றம் ஒரு சிவில் வழக்கில், சொத்து வழக்கில் ஒனக்கும் இல்லை, அவனுக்கும் இல்லை, இரண்டு பேருக்கும் கொஞ்சம், கொஞ்சம் என்று கூறுமா? நமக்கு தலை சுற்றுகிறது. இந்த நாட்டு மக்களுக்கும் தலை சுற்றட்டும் என்று இப்படி ஒரு விளையாட்டா? எப்படியோ இந்த நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை இருக்கக்கூடாது என்பது ஆள்வோரின், அதாவது சட்டம் மூலம் ஆளும் நீதியரசர்களின் நோக்கமா? இப்படி குழம்பி திரிகிறார்கள் ஒற்றுமை விரும்புவோர்.