Wednesday, September 22, 2010

முருகன் கொலைக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்

இன்று 22.09.2010 காலை 10.00 மணிக்கு புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அளித்தப் பேட்டி வருமாறு.

தூத்துக்குடி நகரில் குடிமைப் பொருள் விநியோக உதவி தரக்கட்டுபாடு அதிகாரி முருகன் 25 ஆண்டுகலமாக பணியாற்றி வருகிறார்.குடிமை பொருள் கிட்டங்கியில் கடத்தல் நடக்குமானால் அதை மேலதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்து வந்துள்ளார் இறந்த முருகன் சென்ற மாதமே குடிமை பொருள் விநியோக துறையில் நடந்துவரும் கள்ள கடத்தல் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப்புகாரை மேலதிகாரிகளின் வலியுறுத்தலில் திரும்பப் பெற்றதாக அவரது மனைவி கூறியுள்ளார்.

இந்நிலையில் விஷம் அறுந்தியதாக 7.9.2010 அன்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை கொண்டுவந்து சேர்த்தவர்கள் அவர் பாலிடால் குடித்து தற்கொலை செய்ய முயன்றதாக கூறியிருக்கிறார்கள் அரசு ஊழியராக இருகின்ற முருகனது தொழிலை கூலி என்று எழுதி பிறகு அதை அடித்து பணம் கட்டும் நோயாளி என்பதாக எழுதி விபத்து பதிவு ஏட்டில் நிரப்பியிருக்கிறார்கள் இது தொடக்கம் முதலே அவரை கொண்டுவந்து சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் பதிவு செய்தோர் உட்பட பலர்மீதும் பல கேள்விகளை எழுப்புகிறது.

அந்த பதிவேட்டில் நாடிதுடிப்பு,இரத்த அழுத்தம் ஆகியவை கேள்விக்குறியாக குறிக்கப்பட்டுள்ளது. அப்படியானல் அவரது உயிர் அப்போது இருந்ததா?பிரிந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது அது தவிர அப்போது அவர் நினைவற்று இருந்ததாக முதலில் எழுதப்பட்டு பிறகு அதுவே அரை நினைவில் இருந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் இதேபோல மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துக்களை பதிவேட்டில் பார்க்கமுடிகிறது. அதனால் திட்டமிட்டு தவறாக பதிவு செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. அவர் உடலில் வேறு எந்த காயமும் இருந்ததாக விபத்து பதிவேட்டில் குறிக்கப்படவில்லை செப்டம்பர் 11-ஆம் நாள் முருகன் இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை அறிவித்தது. செப்டம்பர் 12 ஆம் நாள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் 10 இடங்களில் அவரது உடலில் காயம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இடது பாதத்திலும்,இடது கையிலும், கழுத்தின் இடபுறமும், தோளின் இடது புறமும், இடது முழங்கையிலும் இடது கையின் பின்புறமும், உதட்டின் கீழ்புற மத்தியிலும் கடுமையான காயங்கள் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட காயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களில் முருகன் அடித்து கொல்லப்பட்ட்டுள்ளார் என்பதை நிருபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இதுபற்றி நேற்று 21.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பிரகாசிடம் நேரடியாக கேட்டபோது, அவரால் எந்தவொரு பதிலையும் கொடுக்க முடியவில்லை. இறந்த முருகனின் மனைவி செல்வி ஒரு வாரகாலமாக நியாயம் கேட்டு குடும்பத்துடன் ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னால் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார். அவரது புகாரில் கூறப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையுமே இதுவரை காவல்துறை விசாரனைகூட செய்யவில்ல்லை.

இறந்த முருகன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்ராக இருப்பதனால் அவரது மரணம் பற்றிய வழக்கில் 1989-ன் எஸ்.சி/எஸ்.டி தாழ்த்தப்படோர் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யவேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை ஆகவே இந்த மரணத்திற்கு பின்னால் தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மாநில மெங்கும் நடக்கும் ரேஷன் பொருள் கடத்தல் என்ற மாபெரும் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அரிசி மட்டுமின்றி உழுந்தும் பருப்பும் கடத்தப்படுகின்றன் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இவ்வாறு முருகனின் மரணத்திற்கு பின்னால் பெரிய அளவில் ஒரு சதி வலை பின்னல் இருக்கக்குடிய நிலைமை இருப்பதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல இதற்கான போராட்டத்தை மாநிலம் தழுவிய ரீதியில் நடத்துவதற்காக எதிர்கட்சியான் அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரை நான் கேட்டுக் கொள்ள இருக்கிறேன். அனைத்துக்கட்சிகளையும் இணைத்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி முருகன் மரணத்திற்கான பின்னனியை வெளிக் கொண்டு வரவும், உண்மை குற்றவாளிகளை தண்டிக்கவும், சட்டரீதியான முயற்சிகளை புதிய தமிழகம் மேற்கொள்ளும். இவ்வாறு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி பேட்டியின்போது கூறினார்.