Friday, September 10, 2010

நம்பிக்கைகளை புண்படுத்தும் மதவெறியர்கள்

உலகமெங்கிலும் ஒரே நேரத்தில் கணிசமான மக்களை, புண்படுத்திய நிகழ்வு இப்போது நடந்துள்ளது. இத்தகைய அதிர்வை ஏற்படுத்திய பாதிரியார், அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறிய திருச்சபையின் பிரதிநிதி. அவர் பெயர் டெர்ரி ஜோன்ஸ். அவர் டோவ் வேர்ல்ட் அவுட்ரீச் மையம் என்ற திருச்சபையின் பாதிரி. இவரது திருச்சபையில் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையோ ஐம்பதுக்கும் குறைவு. இப்படி 50 பேர் கூட இல்லாத ஒரு திருச்சபையின் பாதிரியார், உலகில் உள்ள எல்லா முஸ்லிம் மக்களையும் ஒரே நேரத்தில் புண்படுத்தி அதிர்ச்சியடையச்செய்யமுடியும் என்றால், இது என்ன கூத்து என்று கேட்கத்தோன்றும். அந்த பாதிரி செப்டம்பர் பதினோராம் நாள் நடத்தப்பட்ட அல்-கொய்தா தாக்குதலை கண்டிப்பதற்காக, அதேநாளில் உலக அளவில் குரானை எரிக்கும் போராட்டம் நடத்தவேண்டும் என்று அறிவித்ததை ஒட்டியே இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. அந்த பாதிரியும் அதற்க்கான ஊடவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதில் அமெரிக்காவின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் நாளில், அந்த அல்-கொய்தாவின் நம்பிக்கை எங்கிருந்து வருகிறதோ அந்த குரானை எரிக்கவேண்டும் என்பதாக ஒரு வாதத்தை முன்வைத்து, அதற்காக உலகம் முழுவதையும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இப்படி மிகச்சிறிய எண்ணிக்கையில் உள்ள ஒரு திருச்சபையை நடத்தும் ஒரு பாதிரிர் செய்ததால் இது திட்டமிட்டு தனது பெயர் பிரபலமாவதற்க்காக செய்கிறார் என்றும் தெரிகிறது. அதைத்தான் அமெரிக்காவின் கூட்டு ராணுவ தளபதியும், அமெரிக்க அதிபர் ஒபமாவும் கூறியுள்ளனர். இப்படி நாடகமாடும் முதலில் இந்த பாதிரியை கடுமையாக கண்டித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிக்கை விடுத்தார். அப்போதும் இந்த பாதிரி இறங்கிவரவில்லை. அதற்குப்பின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ தளபதி இது ராணுவத்தில் உள்ள தங்கள் வீரர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் ஏறு எச்சரிக்கை விடுத்தார். அடஹ்ர்க்கும் இந்த பாதிரி இணங்கவில்லை. எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியின் சார பாலின், சினிமா நட்ச்சத்திரம் ஏஞ்செலினா ஜோலி ஆகியோர் கூறியும் இந்த பாதிரி கேட்டபாடில்லை. பிறகு ஒபாமாவே இது பற்றி கடுமையாக எச்சரித்தார். இந்த பாதிரியின் அறிவிப்பு, பல நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரப்படுத்தி அவர்களை அல்-கொய்தாவில் சேரும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்று கூறினார். அதுமட்டுமல்ல அவர்கள் தங்கள் உயிரைகொடுத்து அமெரிக்க நகரங்களையும், ஐரோப்பிய நகரங்களையும் தாக்க முன்வருவார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார். அதன்பிறகு இந்த பத்திரி நடிகன், தன்னை வெள்ளை மாளிகையோ, அமெரிக்க அதிபரோ கேட்டுக்கொண்டால் தான் தனது எரிப்பு திட்டத்தை கைவிடத்தயார் என்றான். அதற்குள் அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறையான எப்.பி.ஐ. தனது ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அவசர ஆலோசனை குழுவை அமேரிக்கா கூட்டியது. அதில் எங்கெல்லாம் இந்த பாதிரி அர்விப்புக்கு எதிராக அல்-கொய்தா திட்டமிடுகிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த இடத்திலும் அல்--கொய்தா அப்படி எதுவும் திட்டமிடவில்லை என்று தெரிய வந்தது. அதன் பிறகு இப்போது அந்த பாதிரி தனது திட்டத்தை கைவிட்டிறிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அடிபப்டையில் எப்படி ஒரு நம்பிக்கை மீது நடத்தப்படும் தாக்குதல் அல்லது நடத்தப்படப்போவதாக அறிவிக்கப்படும் ஒரு தாக்குதல், உலகை உலுக்கிவிடும் என்று காட்டக்கூடிய நிகழ்வு. இந்த அறிவிப்பை இந்திய றரசு உடனடியாக எதிர்த்து அறிக்கை விட்டது. அதுவும் நமது உளவுத்துறை உடனடியாக இது இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக பிரிப்பதில் கொண்டுபோய் விடும் என்று எச்சரித்துள்ளது. அதேசமயம் இதை ஊடகங்கள் பெரிது படுத்தி பிரச்னையை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. உலக மக்கள் பல மதங்களின் நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கைகளையும் எதிர்த்து எதையும் செய்வதற்கு யாருக்குமே இந்த உலகில் உரிமை கிடையாது. மனித உரிமைகளில் மத நம்பிக்கைகளும் ஒரு இடத்தை பிடித்துள்ளன. ஐ.நா. சபையின் பிரபஞ்சம் தழுவிய மனித உயரிமைகள் பிரகடனத்தில், மத உரிமைகள் மனிதனின் அடிப்படை உரிமைகள் ஆகவே இது மனத்தளவில் மட்டுமல்ல, மனித உரிமை என்ற அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. அடுத்தவர் மத நம்பிக்கைகளை பறிக்கவோ, கேலி செய்யவோ, எதிர்க்கவோ, இந்த ப்போவுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. அப்படியிருக்க மேற்கண்ட பாதிரியார் ஏன் இவ்வாறு செய்தார்? அவரும் ஒரு மத நம்பிக்கை கொண்டவர்தானே? அவரது மதமான கிறித்துவத்தில் எத்தனையோ பிரிவுகள் உள்ளனவே? அதில் இவர் ஒரு மிகச்சிறிய பிரிவை சேர்ந்தவர்தானே? வர இப்படி பிரச்னையை கிளப்பியதர்க்கும், அமெரிக்க உளவுத்துறைக்கும் சம்பந்தம் உண்டா? இவ்வாறு பல கேள்விகள் எழும்பினாலும், அடிப்படையில் மத நம்பிக்கைகள் கொண்டோரும், மத நம்பிக்கைகள் இல்லாதோரும் சேர்ந்து இது போன்ற செயல்களை எத்ரிக்க வேண்டும.
இங்கே நமது தமிழ்நாட்டில் இதே போல ஒரு பிரச்சனை உள்ளது. அது விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலம் சம்பந்தப்பட்டது. அத்தகைய ஊர்வலத்த்ளும் பத்து ஆண்டுகளுக்குமுன்னால் கலவரம் வெடித்தது. அதுவும் கூட தூண்டிவிடப்பட்டதுதான். தமிழர்கள் மத்தியில் அமைதி நிலவிவந்த சூழ்நிலையில், அதுவும் குறிப்பாக முஸ்லிம், கிருத்துவர், இந்து என்ற பகை உணர்வு இன்றி அமைதி நிலவி வந்த சூழ்நிலையில், இந்த விநாயகர் ஊர்வலங்கள் திடீரென இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக நடத்த திட்டமிடப்பட்டன. அப்படி நடத்த ஆர்வம் காட்டியவர்கள் சென்னை வந்து வணிகம் செய்துவரும், வடநாட்டு மார்வாடி சமூகத்தினராக இருந்தனர். அவர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி மீது மட்டும் அப்படி அக்கரைவந்ததால் இநத்தகைய ஊர்வலங்களை கட்டமைத்தர்களா? அப்படித்தெரியவில்லை. ஏன் என்றால் அவர்கள் வணிகம் செய்யும் இடங்களான சௌகார்பேட்டை போன்ற பகுதிகளில், முஸ்லிம்கள் இவர்கள் செய்துவரும் அதே தொழிலை செய்துவருகிறார்கள்.
அதில் இருசாராருக்கும் வணிகப்போட்டி உண்டு. அந்த வணிகபோட்டி இந்த ஊர்வலங்களில் எதிரொலித்ததா? ஆம். ஏன் என்றால் இந்த ஊர்வலங்கள் திருவல்லிகேணியில் வரும்போது, ஐஸ் ஹவுஸ் முன்பு உள்ள மச்சொதி முன்பு திட்டமிட்டு மத்தளம் அடித்து ஓசையை கிளப்பினார்கள். அது தொழுகை நேரம். ஆகவே முஸ்லிம்கள் எரிச்சல் அடைந்தனர். அதுவே கலவரமாக மாறியது. இது திட்டமிட்டு செய்யப்பட்டது. இதுவும்கூட ஒரு மத நம்பிக்கை மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி அதன்மூலம் ஆதாயம் பெற முயர்ச்சிப்பதுதான். அப்போது அந்த கலவரம் போலிசின் துப்பாக்கி சூடுவரை கொண்டுவிட்டது. அதில் இரண்டு முஸ்லிம்கள் இறந்துவிட்டனர். அதுபோன்ற கலவர் நடத்துவது திட்டமிட்டு நடத்தப்பட்டதும, அதை நடத்தியவர்கள் தங்களது வணிக நோக்கத்திற்காக செய்தார்கள் என்பதும் தெருய வந்த பிறகு, இந்து மக்கள் இதுபோன்ற விநாயகர் ஊர்வலங்களில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டனர். அதன்பிறகு விநாயகர் ஊர்வலங்களை நடத்தும் அமைப்புகள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். அனாலும் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலனகளின் போதும் ஒருவிதமான பதட்டம் இப்போதும் நிலவுகிறது. இது தேவையற்ற நிலைதானே? எதற்க்காக ஒருவருடைய மத நம்பிக்கைகள் மீது இன்னொருவர் தலையிடவேண்டும்? மத நல்லிணக்கம் இந்த மக்கலதி வரலாற்று ரீதியான பண்புதானே? அதை பின்பற்ற ஏன் எல்லோரும் சேர்ந்து ஒத்துழைக்க மறுக்கிறார்கள்?