Tuesday, July 20, 2010

மோசடி மூலதன நிறுவனங்களுக்கு, மன்மோகனின் அரசியல் ஆதரவா?

இப்போது புதிய ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பன்னாட்டு மூலதன நிறுவங்களை கண்டபடி அனுமதிப்பது என்ற போக்கு நமது நாட்டில் நடைபெற்றுவருவதாக, ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே பன்னாட்டு மூலதன நிறுவனங்களில், அமெரிக்காவை சேர்ந்த கோகோகோலா, பெப்சிகோலா, ஆகியவை இந்தியாவில் நாடாளுமன்றத்திலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு, பிறகு மொரார்ஜிதேசாய் ஆட்சியில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் வலியுறுத்தலில், இந்தியாவை விட்டே விரட்டப்பட்ட வரலாறும் உண்டு. அதற்குபிறகு, அதே நிறுவனங்கள் இந்திய மக்களின் தாகத்தை போக்க வல்லவை என்று அரசு கண்டுபிடித்ததன் விளைவாக, மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தன. எல்லா இடங்களிலும் இந்திய மக்களின் தாகத்தை போக்க ஏற்கனவே இருந்துவந்த இளநீரையும், வட்டார குளிர்பானங்களையும், காலி செய்து விட்டு அந்த இடங்களை இந்த பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பிடித்துக்கொண்டன. அதேபோல அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான யூனியன் கார்பைடு எத்தனை மக்களை கொல்ல காரணமாக இருந்தாலும், அதற்கு தனியான சிவப்பு கம்பள வரவேற்பு என்பதே இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. அதேபோல அமெரிக்காவின் இன்னொரு பன்னாட்டு மூலதன நிறுவனமான டூபாண்டு உலக அளவில் மாசுபடுத்துவதில் மிகப்பெரிய பெயரை பெற்றிருந்தாலும், அதற்கு தமிழ்நாடு சிவப்பு கம்பளம் விரித்து கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை அமைக்க உதவியது என்பது வரலாறு.
இப்போது ஒரு புதிய கொள்ளை அம்பலத்திற்கு வந்துள்ளது.அதாவது உலகமயமாக்கலின் பெயரில், மன்மோகன் தலைமையிலான அரசாங்கம், அடிக்கும் கொள்ளையை அம்பலப்படுத்தியுள்ளார்கள். எட்டு ஆண்டுகளாக உலகமயமாக்கலின் பெயரில், 500 இந்திய பெரும் நிறுவனங்களுக்கும், 300 பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், கொள்ளை அடிக்கவும், கண்டபடி சட்டவிரோதமாக செயல்படவும் அனுமதித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் மௌரிஷியஸ் மூலம் 40 % மூலதனத்தை இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு, கள்ளபணமாக இறக்கியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்குசந்தையிலிருந்து மட்டும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10000 கோடி கொள்ளையடிக்க, மூலதனமிட ரூ.பத்து லட்சம் டாலர்களை அவ்வாறு கள்ள பணமாக பெற்றுள்ளனர் என்ற செய்தி வெளிவந்துள்ளது. உதாரனத்திற்க்கு நெசில் நிறுவனத்தை கூறுகிறார்கள். அவர்கள் 200 கிராம் பால்பவுடரை 56 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதாவது ஒரு கிலோ கிராமுக்கு ரூ.280 என்பதாக விற்கிறார்கள். வரி சேர்த்து ஒரு கிலோகிராமுக்கு ரூ.2800 என விலைக்கு விற்கிறார்கள். கார்பரேட்டுகள் தங்களது உற்பத்தியின் மூலமோ, தொழிநுட்பம் மூலமோ, லாபத்தை அடைவதில்லை. மாறாக தங்களது கொள்ளையின் மூலம் மட்டுமே லாபத்தை அடைகிறார்கள். மின்னணு ஆலைகள் மட்டுமே தங்கள் தொழில்நுட்பம் மூலம், தங்களது லாபத்தை பெறுகிறார்கள். அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் உள்ளதுபோல,இந்தியாவில்உற்பத்தியாகும் பொருளின் தரத்தை கண்காணிக்கவோ, அல்லது விலையை நிர்ணயிக்கவோ எந்த ஒரு அரசு ஏற்பாடும் கிடையாது. அதனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம், தனது விருப்பப்படி தரத்தையும், விலையையும் நிர்ணயித்து கொள்கிறது. இதுதான் அந்த நிறுவனங்கள் அதிகமாக பெறுகின்ற கொள்ளைகளுக்கு காரணமாக இருக்கிறது. எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறையை இந்த நாட்டில் ஆலைகளுக்கு பயன்படுத்துகிறோம் என்றால், அது எந்த முன்மாதிரி என்பதுதான் கேள்வி. ஊழலையும், கொள்ளையையும் ஒரு முன்மாதிரியாக பின்பற்றுகிறோமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவிற்கு என்று ஒரு தேசிய விலை நிர்ணய ஆணையம் ஏன் இல்லை? இப்படிப்பட்ட நியாயமான கேள்விகளும் எழுகின்றன.
இந்தியாவின் தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே இந்திய மக்களின் வரிப்பணம்தான், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மூலம், கடன் என்ற பெயரிலோ, பங்கு என்ற பெயரிலோ, சென்று மூலதனமாக மாறி உள்ளது. அப்படி மாறிய மக்களது பணத்தை வைத்துக்கொண்டு இந்த மன்மோகன் அரசு, எந்த ஒரு கட்டுப்படும் அந்த நிறுவனங்களுக்கு விதிக்காமல், விலை நிர்ணயத்தில் கூட ஒரு தேசிய நிர்ணயத்தை ஏற்படுத்தாமல், அவர்களை கொள்ளையடிக்க அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளபடியே மிகவும் பெர்ய விசயமாக பார்க்கப்படவேண்டும். அதே சமயம் இந்த நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்த மன்மோகன் அரசு எந்த நிதி அளிப்பையும் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இணைந்தே எழுந்துள்ளது. ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு போடப்படும் வரவுசெலவு திட்டத்தில், நீதி துறைக்காக ஏன் ஒரு இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கமுடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்காவில் நீதித்துறையை வலுவானதாக வைத்திருக்கிறார்களே, அத்தகைய மாதிரியை வழமையாக எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவை பின்பற்றும் மன்மோகன் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்வியும் சேர்ந்து எழும்புகிறது. மன்மோகன் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு சில்லறை பொருட்களின் விலைகள் 300 % அதிகமாகி உள்ளது. அதேபோல சொத்துக்களின் விலைகள் 600 % அதிகமாகி உள்ளது. என்றைக்குமே இந்த ஏறிய விலைவாசி இறங்கவே இல்லை. மத்திய, மாநில அரசுகள் சுரண்டும் அதீத வரிகள் எல்லாமே பலவீனமான திட்டங்களான தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், போன்றவற்றிற்கு வீணாக செலவிடப்படுகின்றன. பல லட்சம் கோடி பணம் உலகமயமாக்கல் என்ற பெயரில், இந்தியாவிற்கு வெளியே எடுத்து செல்லப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 70 % உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை, இருபத்தாறு ஆப்பிரிக்க நாடுகளை விட,.அதிகமாக இருக்கிறது. இதுவே மன்மோகனின் பொருளாதார கணக்கின் லட்சணம். இநத்தகைய நிலையில் நாட்டை வைத்துக்கொண்டு இதற்க்கு வல்லரசு என்று பெயர் கூறி அழைப்பதிலும் ஆள்வோர் சளைக்கவில்லை. இந்தியாவிற்குள் இறக்கியுள்ள வெளிநாட்டு நிதியான ரூ.10000 கோடியை வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்ப எடுத்துவிட்டார்கள் என்றால், இங்கே உள்ள பங்கு சந்தை நிலைமை என்ன ஆகும்? இவ்வாறு நூற்றி இருபது கோடி இந்திய மக்களை ஏமாற்றி அவர்களை கொள்ளை அடித்து, அதன்மூலம் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை வலுப்பெறச்செய்யும் வேலையை மன்மோகன் செய்து வருகிறார். இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியை கொண்டுவருவோம் என்றும், இரட்டை இலக்கத்தில் பணவீக்கத்தை குறைப்பேன் என்றும் பீற்றி வரும் மன்மோகன், நாளுக்கு நாள் கூடிவரும் வறுமையின் எல்லைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கைபற்றிகவலைப்படுவதாக தெரியவில்லை..
இதுபோன்ற கேள்விகளை இப்போது இந்தியாவில் உள்ள நாட்டுப்பற்றுள்ள பொருளாதார மேதைகள் கேட்கத்தொடங்கியுள்ளனர். பேராசிரியர் ஆர்.கே.குப்தா போன்றவர்கள் இதுபோல கேள்வி கேட்கிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் மன்மோகன் போன்றோருக்கு இந்த கேள்விகள் எல்லாம் காதில் கேட்பதாக நமக்கு தெரியவில்லை. மாறாக பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் நலன்கள் தான், அவர்களுக்கு பெரிதாக படுகிறது. இது இந்தியாவை எங்கே கொண்டு விடப்போகிறது என்ற கவலை நாட்டு பற்றாளர்களுக்கு ஏற்படுகிறது. ஊடகத்துறையினர் அதே கவலையை பகிர்ந்து கொள்கிறார்களா?

கருணாநிதி வருகிறார்.

கருணாநிதி வருகிறார்.
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழர் எம்.பி.மாரை
சந்தித்த பின்னாலே ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஈழத்தமிழரை படுகொலை
செய்த போரிலே குற்றவாளி
பெயர்பட்டியலில் இருந்தவர்
வருகிறார். இப்போ ஆதரவு
குரல் கொடுக்க வருகிறார்.
ஐ.நா.முயற்சித்த ஆய்வில்
போர் குற்றவாளிகளை
விசாரணை செய்யவந்தால்
தனக்கும் வருமோ என
அஞ்சிய கருணாநிதி
வருகிறார். இப்போ
ஆதரவு குரல் கொடுக்க
வருகிறார். கொழும்பு
தொடங்கியுள்ள விசாரணையே
போதுமென்று ஐ.நா.
சொன்னதனால்,
ஆனந்தம் அடைந்தார்
அதே குடிமகன்.
போர்க்குற்றவாளிகளை
கணக்குபார்த்தால் தன்
பெயர் வந்துவிடுமோ
உண்மை உலகுக்கு
தெரிந்துவிடுமோ
என்ற அச்சம் கொண்டவர்
அப்படித்தான் என்ன முடியும்.
அதனால்தான் வருகிறார்.
இன்றைக்கு வருகிறார்.
மத்திய அரசு கை
காட்டியபின் வருகிறார்.
ஈழத்தமிழருக்கு குரல்
கொடுக்க வருகிறார்.