Saturday, July 17, 2010

டெல்லி தொ(ல்)லைப் பேச்சால் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை உடைந்ததா?

இந்திய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பாகிஸ் தானில் கூடினார்கள். தலை நகர் இஸ்லாமாபாத்தில் ஜூலை 15ம் நாள் 6 மணி நேரம் இரு நாட்டு அமைச் சர்களுக்கும் மத்தியில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்திய வெளிவிவாகாரத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தான் வெளிவிவாகாரத் துறை அமைச்சர் ஷா மெகமுது குரேஷி ஆகிய இருவரும் தொடக்கத்தில் பேச்சுவார்த் தைப் பற்றி ஊக்கமான செய்திகளை வெளியிட் டார்கள். பாகிஸ்தான் நாட்டு மக்களும், இந்திய நாட்டு மக்களும், சமாதா னம் விரும்பும் உலக நாட்டு மக்களும் இந்த பேச்சுவார்த்தையின் முன் னேற்றத்தை அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். திடீர் என பேச்சுவார்த்தை தோற்றுவிட்டது என்ற செய்தியும், அதையொட்டி இரு நாட்டு அமைச்சர் களும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த வண் ணம் இருக்கிறார்கள்.
ஏப்ரல் 2829 நாட்களில் பூட்டான் நாட்டின் தலை நகர் திம்புவில், இந்தியா வின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் நாட்டு தலைமை அமைச்சரும் தங்களுக்குள் பேசி, பல்
வேறு பிரச்சினைகளின் மீது ஒரு ஒத்த கருத்தை ஏற் படுத்துவதற்கான சூழ் நிலையை இருநாடுகளுக்கு மத்தியில் ஏற்படுத்தினார் கள் என்பதாக இருநாட்டு அரசாங்கங்களும் செய் தியை வெளியிட்டன. இரண்டு நாட்டு அரசாங் கங்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கையான அடிப் படை உருவானது என்பதாகவும் தெரிவித்தார் கள். அதை தொடர்வதற் காக இருநாட்டு அரசாங் கங்களும் தொடர்ந்து தங் களுக்குள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், அது தந்திரமாக இருக்கக் கூடாது என்றும், பாதக மான பார்வை கொண்டதாக அது அமையக்கூடாது என்றும் அப்போது தங்க ளுக்குள் முடிவு செய்வதாக வும் உலகுக்கு தெரிவித்தார் கள்.
அதன் பிறகு ஜூன் மாதம் 24ம் நாள் இரு நாட்டு வெளிவிவகாரத் துறை செயலாளர்களும் கூடி பேசினார்கள். ஜூன் 25,26 தேதிகளில் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கும் சந்தித்துப் பேசி நல்ல முடிவுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிறைவு பெறவில்லை. அதையொட்டி இப்போது ஜூலை 15ம் நாள் இரு நாட்டு வெளிவிவகாரத் துறை அமைச்சர்களும் நடத்திய பேச்சு வார்த்தை வெற்றியைக் கொடுக்க வில்லை.
நம்பிக்கையை இருநாடு களுக்கும் மத்தி யில் ஏற்படுத்துவதற் காக பல்வேறு பிரச்சினை களின் மீது பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கு பதிலாக, உடனடியாக செயல்பட வேண்டிய தந்திரங்கள் பற்றி பேச்சு வார்த்தையின் கவனம் திரும்பியதால், அது வெற்றிக்கு இட்டுச் செல்ல வில்லை என்றும் தெரி கிறது. அதாவது 26/11 என்ற மும்பை பயங்கரவாத தாக்குதல் நடத்தியதற்கு காரணமாக இருந்ததாக இந்தியாவால் குற்றம்சாட் டப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்கள் மீது பாக். அரசு எடுக்கும் நடவ டிக்கை மட்டும்தான், இந்தியாவிற்கும், பாகிஸ் தானிற்கும் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் ஒரே வழியாக இருக்கும் என்று ஊடகயியலாளர் களிடம் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட அணுகு முறை ஏற்கனவே ஒப்புக் கொண்ட பல்வேறு பிரச்சி னைகள் மீதான பரஸ்பர பரிமாற்றத்தின் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தல் என்ற நிலையை மீறுவதாக அமைந்துள்ளது.
இந்திய அரசாங்கத் துடன் ஏற்கனவே முன் னாள் பாகிஸ்தான் அரசாங் கம், ஜம்மு காஷ்மீர் பற்றிய விவகாரத்தில் ஒரு பரஸ்பர புரிதலை ஏற்படுத்துவது, இரு நாடுகளுக்கும் மத்தியில் நம்பிக்கை அடித்தளத்தை ஏற்படுத்தும் என்ற புரிதல் வைத்திருந்தது என்பதாக, பாகிஸ்தானின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குரேஷி கூறியி ருந்தார்.
அதே போல காஷ்மீர் விவகாரத்தில் எல்லைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமலேயே, அரசி யல் தன்மையுள்ள சில நடவடிக்கைகளை எடுத்து அதன் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கலாம் என்றும், பாகிஸ்தான் தரப்பு கூறி யது. பாக் முன்னாள் அதிபர் முஷாரப்பின் பெயரை உச்சரிக்காவிட்டா லும், அவரது காலத்தை சுட்டிக்காட்டி, குரேஷி மேற்கண்ட கருத்தைக் கூறியிருந்தார். அதாவது பின்கதவு வழி பேச்சு வார்த்தையின் மூலம் இரண்டு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சினையில் ஒரு அரசியல் தன்மை கொண்ட தீர்வை நோக்கி செல்வதற்காக திட்டமிட்டி ருந்தன என்பது குரே ஷியின் வெளிப்படுத்தல்.
சமீபத்திய மத்திய அரசின் காஷ்மீர் விவகார அணுகுமுறைகள் இத்த கைய கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதாக அமை கின்றன. இரு நாடுகளுக் கும் நட்பாகவும், அதே சமயம் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருக்கின்ற அமெரிக்க அரசின் முயற்சிகளின் மூலம் இத்தகைய நிலைப் பாட்டை இரு அரசுகளும் எடுத்திருக்க வாய்ப்புண்டு. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் காஷ்மீர் பயணமும், அதையொட்டி அங்கே இருக்கும் துணை ராணுவத்தை திரும்பப் பெறுவது என்ற அறிவிப்பும், காஷ்மீர் காவல்துறையே அந்த மாநிலத்தின் முதன்மை யான படையாக இயங்கும் என்ற டெல்லியின் அறிவிப்பும் மேற்கண்ட கருத்துகளுக்கு நடைமுறை யில் வலுச்சேர்த்தன.
ஆனால் காஷ்மீரத்தில் தொடர்ந்து நடந்த செயல் பாடுகள் அதற்கு எதிராக சென்றுவிட்டன. துணை ராணுவத்தின் அட்டகாசங் களும், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் நிலை குலைவும், ஹூரியத் மாநாடு அமைப்பினருக்கு பின்னால் பல்லாயிரக்க ணக்கான காஷ்மீர் மக்கள் அணி திரண்டதும், நிகழ்ச்சி நிரலை வேறு ஒரு பக்கம் திருப்பி விட்டது. ராணு வத்தை காஷ்மீருக்குள் அனுப்பும் அளவுக்கு மத்திய அரசின் அணுகு
முறையில் மாற்றம் ஏற்பட் டது.
இப்போது நடந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் பேச்சு வார்த்தை வெற்றியை எட்டாததற்கு காரணமாக வெளிவந்திருக்கும் பாகிஸ் தானின் குற்றச்சாட்டு, பல விஷயங்களை யும் தீவிரமாக கவனிக்கத் தூண்டுகிறது. அதாவது முதலில் நல்லமுறையில், எதிர்பார்ப்புடன் பேசத் தொடங்கிய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, பேச்சு வார்த்தைக்கு இடையி லேயே தொடர்ந்து டெல்லி யிலிருந்து தொலைபேசி வழிகாட்டல்கள் வந்து கொண்டிருந்தன என்பதாக பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மூத்த அனுபவமுள்ள அமைச்சரான கிருஷ்ணாவிற்கு, எதற்காக தொலைபேசி வழிகாட்டல்கள் தொடர்ந்து டெல்லியிலி ருந்து வரவேண்டும் என்ற சந்தேகத்தையும் குரேஷி எழுப்பியுள்ளார். இதுதான் பேச்சு வார்த்தை தொடரா ததற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
எல்லா பிரச்சினைகளை யும் மேசை மீது போட்டு விவாதிக்க தயார் என்று அறிவிக்கப்பட்ட ஒரு பேச்சுவார்த்தையில், பயங்கரவாதம் பற்றிய பிரச்சினை மட்டுமே, அதி லும் குறிப்பாக மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானியர்கள் மீதான நடவடிக்கை என்ற பிரச் சினை மட்டும் தேர்ந்தெடுக் கப்பட வேண்டிய அவசி யம் என்ன என்பதே குரேஷியின் வாதம். பயங் கரவாதத்தால் இந்தியா மட்டுமின்றி, பாகிஸ் தானும் கூட தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது என் கிறார் குரேஷி. வியாழக் கிழமை நல்ல முறையில் சென்ற பரந்து பட்ட பேச்சு வார்த்தை, அதன் பிறகு ஜம்முகாஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி திரும்பிய போது, அதுவே முட்டுக்கட்டை யானது. அதே போல பயங்கரவாதிகளாக சுட்டிக் காட்டப்பட்டவர்கள் மீது, பாகிஸ்தான் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உறுதி கூற வேண்டும் என்ற இந்தியாவின் வற்புறுத் தலும் முட்டுக்கட்டையாக அமைந்தது. ஒருவரை ஒருவர் மேற்கண்ட முறைகளில் குற்றம் சொல் லிக் கொண்டாலும், மீண்டும் ஊடகங்களை சந்திக்கும் போது, அவநம்பிக்கையையும், நம்பிக்கையையும் மாறி, மாறி அளிப்பவர்களாக இரண்டு அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
நம் நாட்டின் தொடர் அமைதி சூழலுக்கு மிகத் தேவையான இத்தகைய பேச்சு வார்த்தை வெற்றி பெறாததற்கு டெல்லியின் தொடர் தலையீடுகள் காரணமா என்ற சந்தேகம் பொதுவாக எழுகிறது. ஆகவே மத்திய அரசு பேச்சு வார்த்தை பற்றிய, மற்றும் டெல்லியின் வழிகாட்டல் பற்றிய முழு விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்திய மக்களுக்கு எழத்தான் செய் யும்.