Friday, July 16, 2010

அவள் பேசுவாள்.

அவன் சுடப்பட்டான்.
அப்போது எம்.பி. என
அவனை அழைத்தார்கள்.
யாழ் நகரில் வெறும்
எம்.பி.யாக இருந்தால்
உயிர் போயிருக்காது.மனித
உரிமை பேசினார். மனோவுடன்
சேர்ந்து காணாமல் போனவர்
பட்டியல் எடுத்தார். விடுமா அரசு.
உயிரை எடுத்தது. இரத்தமும்,
சதையுமாய் வாழ்ந்த மனைவி
மறுகவில்லை. எம்.பி.க்கு நின்றார்.
வென்றார். வந்தார் மன்றத்திற்கு.
பேசத்தெரியாது என்று நினைத்தனர்.
பேசினார். அவள் பேசினாள்.
அவள் பெயர் விஜயகலா மகேஸ்வரன்
நாடாளுமன்றத்தில்
பகிரங்கமாக தன் கணவரை கொன்றது
இன்னாரென அந்த அமைச்சரை
காட்டி பேசினார். சென்னை
திருவள்ளுவர் நகரில் வெளியே
விட்ட தோட்டாக்களை அனுப்பிய
அதே கைகள்தான் தன் கணவருக்கும்
தோட்டா அனுப்பியது என்பதை
எடுத்து கூறினார். இதுதானே தமிழ்
பெண்ணின் துணிச்சல். முறம்
எடுத்த தமிழ் பெண்ணுக்கு
பின்னால் இப்போது எதிரியின்
சிங்கமுக குகையிலேயே
கொலைகாரனை காட்டிய
தமிழ் பெண் ஆனாள்