Thursday, July 15, 2010

வார்த்தை போர் நடக்கிறதா?

கருணாநிதிக்கும், மன்மோகனுக்கும்,
கடிதப்போக்குவரத்து
துரிதப்பட்டுள்ளதாக
தகவல்கள் வந்துகொண்டே
இருக்கின்றன
கடிதங்களா? அவை நெருக்கல்களா?
தமிழர் அழிப்பை செய்ததில்
ஒத்துப்போன இருதலைவர்களுக்குள்
இந்த நேரம் மோதல் வர
யார் காரணம்?
காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரம்
கூட்டணி மாற முயலலாம் என்று
தமிழக முதலவர் சந்தேகம்
செம்மொழி மாநாட்டில் பேசிய
வார்த்தைகள் தமிழை வைத்து
மோதுவாரோ என அவர்களுக்கு
ஒரு சந்தேகம்.
மாநாடு வராத சோனியாவும்,
மன்மோஹனும் விலகி நின்றது
ஏன் என்ற கேள்வியை நாடு இங்கே
கேட்கிறது. இப்போ மன்மோகன்
எழுதுகிறார்.
என்ன தீர்வை கொடுப்பதுன்னு
எழுதிகாட்டு கருணாநிதியே
தமிழீழம்தான் தீர்வு என்று
ஊடகங்களுக்கு சொல்லலாம்.
டில்லிக்கு அதையே முடியுமா?
மாட்டிக்கொண்டார் முதல்வர்
என்றால் பதில் தந்தார் கருணாநிதி.
எதுவும் முன்னேற்றம் நடக்கலையே?
நீ சொன்னியே? நடக்கலையே?
என்பதுபோல ஒரு கேள்வி.
சிறப்பு பிரதிநிதி அனுப்புங்கள்
மன்மோகனுக்கு ஒரு கடிதம்.
இந்த ஆட்டம் எதற்க்காக?
தமிழர் பிரச்சனை வந்திட்டால்
யார்மீது பழிபோட என்ற நாடகம்
நடக்கிறதா? சீமானை பாதுகாப்பு
சட்டத்தில் போட்டு மத்திய அரசை
சரிப்படுத்த இன்னொரு புறத்தில்
ஏற்பாடு. விசுவாசம் நான்
காட்டிவிட்டேன் என்று அதிலே
முறைப்பாடு. நாளை கூட்டணி முறிந்திட்டால்
நீ தமிழருக்கு செய்யல்ல என்று சொல்ல
இப்படி ஒரு கூப்பாடு.
மராத்திகாரன் கர்நாடகத்தானை
பேசினாலே அடிக்கின்றான்
அடித்தவனுக்கு எம்.எல்.ஏ.
தலைமை தாங்கி வருகின்றான்.
இன விவகாரம் இப்படியே
இந்தியாவில் வெடித்து சிதறி
போகும்போது சிங்களவன்
கடலிலே தமிழ் மீனவரை தாக்குவதா?
என்று கேட்டு எழுந்துவந்த
சீமான் பேச்சில் சிங்களனை
தாக்குவோம்னு சொல்லியதால்
தேசிய பாதுகாப்பு சட்டத்தை
பயன்படுத்திய கருணாநிதியை
எந்த வகையில் சேர்ப்பது நாம்?
டில்லிக்கான விசுவாசமா?
கூட்டணி தக்கவைக்க தந்திரமா?
பிள்ளைகளுக்கு போட்டியாக
சீமான் வருவான்னு பயத்திலா?.
.