Wednesday, July 14, 2010

நமக்குள்தானே என்றாயே.....

அது என்ன அப்படி சொன்னாய்?
நமக்குள் ஒன்றும் நடக்கலையே?
நமக்குள் பரஸ்பரம் பேசலையே?
நமக்குள் திட்டம் போடலையே?
நமக்குள் காதலை சொல்லலையே?
நாம் இருவரும் சேர்ந்து எங்கும்
போகலையே?
நமக்குள் ரஹசியம் பேசலையே?
எல்லாம் உனக்குள் பேசிவிட்டால்
நமக்குள் தானே சொல்லுவதா?
நான் புரிந்துகொள்ளணும் அப்படின்னு
நமக்குள் தானே சொன்னாயா?
நமக்குள் வேணுமின்னு
நினைப்பதனால் இத்தனை கேள்வி
கேட்கின்றேன்.
நமக்குள்தானே என்றிட்டால்,
வெளியே காதலை மறைப்பதுவா?
நமக்குள்தானே என்றிட்டால்
ஊருக்கு நடிப்போம் எனப்பொருளா?
நமக்குள்தானே எனச்சொன்னால்,
நாலு பேருக்கு மத்தியிலே
நெருக்கம் தெரியா ஒரு நட்பா?
நமக்குள்தானே என்றால்
வெளியே தெரியா விவகாரமா?
நமக்குள்தானே என்று சொல்லி
கட்டிபிடித்தால் பரவாயில்லை.
நமக்குள்தானே கேட்டுவிட்டு
பேசாமல் போனால் என்ன பயன்?