Tuesday, July 6, 2010

வெறுப்பும்,,விருப்பும்.

நீ வெறுப்பாய் என்றனர்.
என்னால் நேரில்
காணமுடியவில்லை.
நீ விரும்புகிறாய் என
என்னால் யாரிடமும்
கூற முடியவில்லை.
வெடித்துவிடுவாள்
பேசாதே என்றனர்.
அப்படி எதுவும்
தெரியவில்லை.
விரும்புகிறாய் என
நான் சொல்ல வாய்ப்பும்
நீ கொடுக்கவில்லை.
விரும்பினாய் என்று
எனக்கு தெரிகிறது.
அதையே இப்பவும்
சொல்ல முடியவில்லை.
வெறுத்தாய் என்பதில்
என்னிடம் அதை நீ
காட்டவில்லை.
பொது விஷயம்
பேசும்போது நன்றே
உன் பேச்சு இனிக்கிறது.
பொது இடத்தில் வைத்து
பேசும்போது எல்லா
செய்தியையும் கவனமாய்
சொல்லுகிறாய்.
பொது என்ற பெயரில்,
சரியாய் வழியும்
காட்டுகிறாய்.
குறிப்பாய் எனக்கு
வரும்போது ஆலோசனை
கூறுகிறாய்.
உன்னிடம் கேள்வி கேட்டிட்டால்,
பெரிய,பெரிய ஜாம்பவான்கள்
இருக்கும்போது என்னிடம்போய்
என இழுத்து,
நீயே விளக்கம் கூறுகிறாய்.
என்னை வேண்டி யாரும் வந்திட்டால்,
உரிமையில் நீயே விளக்குகிறாய்.
நான் வந்து சென்றது
கேட்டுவிட்டால், ஏன்
என்று தேடுகிறாய்.
நான் வந்து போயும்
பேசாததால், வருத்த
கேள்வியை எரிகின்றாய்.
ஏன்,ஏன் என்ற கேள்விகளை,
கேட்டு கேட்டு வெறுத்து விட்டேன்.
இது வெறுப்பா, விருப்பா
என்றிட்டால், வானம்
பார்த்து தேடுகிறேன்.
வெறுத்தால் ஒரேயடியாக
வெறுத்துவிடு
விரும்பினால் முழுமையாக
விரும்பிவிடு.