Tuesday, June 22, 2010

வவுனியாவில் எம் தமிழ் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு ????

முன்னாள் போராளிகளுக்கு என்ன செய்கிறது இலங்கை அரசு? கருணா அம்மான் நிறைய நிலங்களையும், தோட்டங்களையும் வாங்கி போட்டிருக்கிறான். அவற்றில் முன்னாள் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகிறான். தமிழன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆங்கிலேயரால் கடத்திச்செல்லப்பட்ட காலத்தில், அங்கே போய் ரத்தத்தை பிழிந்து காடுகளை பதப்படுத்தி தோட்டமாக்கி அன்றைய ஆங்கிலேயர்களுக்கு உற்பத்தி பின்னிலமாக ஆக்கி வைத்தான். அன்றே சுதந்திரமாக இருந்த ஈழத்தமிழர்கள் இன்று போரில் தோற்றபின், அடிமைகளாக, கொத்தடிமைகளாக, ஆக்கப்பட்டு, உண்ண உணவு கூட கொடுக்கப்படாத நிலையில், கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். இப்போது இதைச்செயபவன் ஆங்கிலேயன் அல்ல. சிங்களன் அல்ல. ஆனால் முன்னாள் போர்ப்படை தளபதியாக இருந்து இந்நாள் அமைச்சராக இருக்கும் கருணா அம்மன் இதை செய்கிறான். இன்று பட்டினியில் வேலை செய்யும் அந்த முன்னாள் போராளிகள், எலும்பும்,தோலுமாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களை சென்று பார்த்த அவர்களது மனைவிமார்கள் இந்த கோரக்காட்சிகளை கூறக்கேட்கும்போது நெஞ்செல்லாம் வெடிப்பது போல் உள்ளது.
அடுத்து வவுனியாவில் உள்ள ஈழத்தமிழ் பெண்கள் நிலைமை மிக மோசமாக ஆகி வருகிறது. அங்கே இருக்கும் சிங்கள ராணுவ காடையர்கள் எங்கள் தமிழ் பெண்களை சூறையாடுவதை வழமையாக கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவு வவுனியாவில் உள்ள தமிழ் பெண்களில் பலரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். வவுனியா தமிழ் பெண்களின் நிலைமை யாராவது தலையிட்டு தடுக்கவேண்டும் என்ற நிலைமைக்கு சென்றுள்ளது. வெளி நாட்டிலிருந்து அங்கு செல்லும் பணக்கார தமிழர்கள் ஏதாவது உதவி செய்ய செல்கிறோம் எனக்கோரி செல்பவர்கள் சிலர்கூட, இதே போல தமிழ் பெண்களை சூறை யாடுவதை தங்களது ஆண் ஆதிக்க வெறியாக காட்டி வருகிறார்கள் என்ற செய்தி வெட்கத்தக்க செய்தியாக இருக்கிறது. தமிழ் ஆண்களே, புலம்பெயர்ந்த ஆண்களே, நீங்கள்தான் அன்றே ஓடிப்போய் உங்களது தமிழ் பற்றை காட்டி விட்டீர்களே. இப்போது என் அங்கே சென்று எங்கள் பெண்களின் இயலாமையை சுரண்ட எண்ணுகிறீர்கள்? உங்களுக்கு உங்கள் அக்காள், தங்கச்சி, தாய் ஆகியோர் இல்லையா? இப்படியும் கூட கேட்கத்தோன்றுகிறது.
இவையெல்லாவற்றையும் விட கொடூரமான வேலையை அரசு சார நிறுவனம் என்ற பெயரில் சில தமிழர்கள் செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில அரசு சார நிறுவங்கள் குழந்தைகள் பாதுகாப்பு அகங்களை நடத்துகிறோம் என்கின்றனர். மகிழ்ச்சி என்று சொன்னால், அதிலும் தங்கள் நிதி திரட்டும் வேலையை காட்டுகிறார்கள். வடக்கே இருக்கும் குடும்பக்களுக்கு அவரவர் குழந்தைகளை அனுப்ப, இந்த நிறுவனகள் மறுக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நீங்கள் முதலில் மீள் குடியேற்றத்தில் சரியாக அமருங்கள். உங்களை நிலைப்படுத்திகொல்லுங்கள். அதுவரை உங்கள் குழந்தைகள் எங்கள் இல்லத்தில் இருக்கட்டும் எனகூறிவிடுகின்றனர். அதன் மூலம் பெற்றோரையும், குழந்தைகளையும் பிரித்தே வைத்து விடுகின்றனர். தாய்மாரை தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். சிங்களனின் கொடுமை போதாது என்று இது வேறா என்பதாக எம்மக்கள் அடித்துக்கொள்கிராரகள். ஏற்கனவே சிங்களவன் வந்து குடியமர்த்தப்படுகிறான். தமிழன் தனது நிலத்தை இழக்கிறான். குடியிருப்பை இழக்கிறான். சிங்கள ராணுவம் வடக்கை ஆக்கிரமித்து கொண்டு உள்ளான். அதில் புத்த சிலையை நிறுவுகிறான். அரச மரத்தை நடுகிறான். தமிழ் கடவுள் முருகன் கோவிலை அத்துமீறி பயன்படுத்துகிறான். தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்திற்காக குடியிருப்பு கட்டுகிறான். இத்தனையும் காணாது என முன்னாள் போராளிகளை கருணா நடத்தும் விதமும், வவுனியாவில் தமிழ் பெண்கள் நடத்தப்படும் விதமும், சேவை நிறுவனகள் தமிழ் குழந்தைகளை பிடித்து வைத்து கொண்டு, அவர்கள் பெயரை சொல்லி வெளிநாட்டு நிதி திரட்டும் விதமும், கேள்விப்படும்போது நெஞ்சை உருக்குகிறது. இந்த கொடுமைகளை தமிழர்களே செய்யாதீர்கள். செய்தீர்கள் என்றால் உங்கள் பெயரும் துரோக பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். இதுமட்டும் நிச்சயம். என் என்றால் அனைத்தையும் உலகத்தமிழர்கள் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். நினைவில் வையுங்கள்.

இன்னொருவர் அம்பலமாகிறார்

அக்னி சுப்பிரமணியம் என்பவர் பற்றி இப்பொது ஒரு செய்தி இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. அது ஆச்சர்யமாக இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டில் அவர் மீது பொதுவாக நம்பிக்கை இல்லை.அக்னி சுப்பிரமணியம் பற்றி ஏற்கனவே எச்சரித்தோம். இதுபோல நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நமது தமிழர்கள், குறிப்பாக எங்களுடன் களப்பணிகளுக்கு வரும் தமிழ் நாட்டு தமிழர்கள் பலரும் இது போன்ற செயல்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. அல்லது அதற்காக அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. இந்த அக்னி ஏற்கனவே ஈரோட்டில் என்னை மக்கள் சிவில் உரிமை கழக மாநாட்டில் முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார். அல்லது அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அப்போதே நான் அதாவது அவரை சந்திப்பதற்கு முன்பே நான் அவர் இப்படிப்பட்டவர் என்று கேள்விப்பட்டேன். அதனால் அவரிடமே வினவினேன். உங்களை பற்றி நான் நல்ல முறையில் கேள்விப்படவில்லையே?இதுவரை நாம் சந்தித்த்டது இல்லை.இப்போது பார்த்து விடீர்கள். இனி நம்பலாம் இல்லையா?-என அவர் கேட்டார். பார்த்ததனால் எப்படி நம்ப முடியும்?-நான் கேட்டேன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர் சொன்னார். நான் என்.ஜி.ஒ. எனக்கு அது பற்றி நல்ல அபிப்ராயம் இல்லையே? உடனே அவர் சொன்னார்:- நான் ஹென்றி வளர்ப்பு. நான் சொன்னேன், அவர் வளர்ப்பு என்றால் நான் தவறாகத்தான் நினைப்பேன். நான் அகதிகளுக்கு உதவி செய்கிறேன். நான் நெடுமாறன் ஆகியோருடன் வேலை செய்கிறேன். நான் கேட்டேன் ஆனால், யாருக்கும் உங்களை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லையோ? அவர் திணறினார். பிறகு அவர் சொன்னார். நான் நண்பர்களிடம் பணம் சேர்த்தது அகதிகளுக்கு துணிமணி வாங்கி கொடுக்கிறேன். அப்படி யாரும் செய்வது கடினமாயிற்றே? இப்படி இருந்தது முதல் சந்திப்பு.
அதற்கு பிறகு அவர் சென்னை வந்தார். நான் சென்னை வந்துவிட்டேன் என்றார். சரி. அவரது வரத்து தலைமை உத்தரவு போலும் என எண்ணினேன். பிறகு ஈழத்தமிழர் பேரணிகளில் முனனால் தலைவர்களுடன் வந்தார். அதற்கு முன்பே சேது திட்டத்தை எதிர்த்தது போராடும் எங்கள் தோழர்களை தெற்கே சென்று பார்த்து பேசி இருக்கிறார். அவருக்கு அவ்வளவு அதிகமாக விவரம் தெரியாது. பின் எப்படி எல்லாவற்றிலும் இணைகிறார் என்ற ஐயம் இருந்தது பிறகு பெங்களூரில் நடந்த முஸ்லிம் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தமிழ்நாட்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார் என கேள்விபட்டேன். என் போன்ற தோழர்கள் இப்படி எல்லா இடங்களிலும் போய் கலந்து கொள்வது வேறு விஷயம். இவர் அப்படி ஆளும் இல்லை. அவ்வளவு விவரமும் இல்லை. வன்னி போர் நேரத்தில் டெலோ தலைவர்களுடன் பத்திரிகையாளர் கூட்டத்தை இவரே கூட்டினார். எனக்கு சந்தேகம் கூடியது. சிவாஜிலிங்கம் அதில் சிக்கிகொண்டவர் என்பது பிறகு தெரிந்தது. முதலில் எல்லா புலி அல்லாத எம்.பி.களையும் ரா பயன்படுத்த விரும்புகிறது என்பதாகத்தான் நான் சந்தேகப்பட்டேன். அதை நான் பேசும் தொலைகாட்சி நிகழ்ச்சியிலும் சொல்லிவிட்டேன். இந்த ஆள்
இந்திய உள்நாட்டு உளவுத்துறை ஆள் என்று தான் நான் எண்ணினேன். பிறகு ஒரு ஹூண்டாய் காருடன் வந்தார். நண்பர்கள் அதில் ஏறி சென்றனர். நானும் எச்சரித்தேன். பிறகு வணங்காமன் கப்பல் வந்தது. தடுக்கப்பட்டது. அதற்குள் வெப்சைட் நடத்தினார். அதன்மூலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பழகினார். அவர்களும் நம்பி கப்பல் பற்றிய செய்திகளை இவருக்கு தந்தனர். அதைவைத்து சென்னையிலுள்ள ஊடகங்களை செல்வாக்கு செலுத்தினார். இந்த அளவுக்கு விவரமான ஆளாகவும் தெரிய வில்லை. அவருக்கு யாரோ அத்தனை ஆலோசனையையும் கொடுப்பதாக தெரிந்தது. இப்போது கலைஞருக்கு பார்வதி எழுஅம்மாவால் தப்பட்டதாக சொன்ன கடிதம் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. தமிழ் நாட்டில் ஒரு தவறான பழக்கம் உள்ளது. ஒருவரை அவரது பேச்சு, மற்றும் எழுத்தை மட்டும் வைத்து முற்ப்போக்கு எனவும், புரட்சியாளர் என்றும் முடிவு செய்கிறார்கள். அவரது செயல் என்பதை கணிப்பதே இல்லை. இதே தவறு புலம் பெயர்ந்த தமிழரில் சாதாரண மக்களிடம் உள்ளது. இயக்கத்துக்காரார்கள் மட்டுமே ஒவ்வொருவரையும் பரிசீலித்து கணிக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் தமிழனின் கோளாறு. ஒவ்வொருவரையும் பேச்சை வைத்து பார்க்காதீர்கள்.