Sunday, June 20, 2010

சீனா மட்டும்தான் ஆபத்தா?

தமிழ்நாட்டில் எதிர்க் கட்சி தலைவர், ஈழத் தமிழர்கள் பற்றி ஒரு அறிக்கை வெளியிட் டுள்ளார். அதில் 25,000 சீன கைதிகளை இலங்கை வளர்ச்சி பணிகளுக்கு, சீன அரசு அனுப்பி வைக் கிறது என்று கூறியுள்ளார். அந்த கைதிகள் யாழ் பாணத்தில் மற்றும் தமிழர் பகுதிகளில், சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது, உள் நாட்டு அகதிகளாக இருக் கின்ற ஈழத் தமிழர்களுக்கு நெருக்கடி உருவாகும். தமிழ்ப் பெண்களுக்கு ஆபத்து வந்து சேரும். மேற்கண்ட எச்சரிக்கை களை தமிழ்நாட்டின் எதிர் கட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
இலங்கையில் நடந்து வரும் பல்வேறு நடவடிக் கைகள் பற்றி, பல்வேறு ஆய்வு அறிக்கைகள் உலகம் முழுவதும் வெளி வந்து கொண்டிருக்கின் றன. அவற்றில் சீனமய மான ராஜபக்சேவை, இந்திய மயமாக்க டெல்லி முயல்வதாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் எழுதியிருந்தார். அதே போல சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மத்தியில் இலங்கை நிலங்களையும், வளங்களையும் கைபற்று வதில் போட்டி நிலவுகிறது என்றும் கருத்துகள் உண்டு.
அம்பாந்தோட்டை என்ற இடத்தில், சீனா விற்கு துறைமுகம் கட்டுவ தற்காக, இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இடம் இலங்கைத் தீவின் ஒரு ஒரத்தில், தொங்கிக் கொண்டு இருக் கும் ஒரு பகுதி இது கதிர் காமம் என்ற பிரபல முருகன் கோவில் உள்ள தமிழர் பகுதிக்கு கீழே உள்ளது. அம்பாந் தோட்டை முழுமையாக சிங்களப் பகுதிதான் என்றாலும், அம்பாறை, மட்டக்களப்பு போன்ற தமிழர் வாழும் கிழக்கு மாகாணப்பகுதிகளை ஒட்டி இருக்கிறது.
அம்பாந் தோட்டை யில் சீனத் துறைமுகம் ஒன்று உருவான பிற்பாடு, சீனநாட்டின் பெரிய கப்பல்கள் அங்கே நிறுத் தப்படும். அவை இந்திய பெருங்கடலில் இருக்கின்ற அம்பாந் தோட்டை துறைமுகத்திற்கு வந்து போய் கொண்டிருக்கும். அதன் முலம் சீன நட மாட்டம், இந்திய பெருங் கடலிலும், அரபிக் கடலி லும், வங்காள விரிகுடா விலும் அதிகரிக்கும். அவை சீன கப்பற்படை கப்பல்களாகவோ, ஒற்றர் பிரிவுகளாகவோ இருக் கலாம். இதனால் இந்தி யாவின் தென் பகுதியில் இருக்கும் கடற்கரை ஒரங்களுக்கும், கடலுக்கும் பாதுகாப்பின்மை ஏற் படலாம்.
இது தவிர இலங்கை அரசு, சீன அரசுடன் வேறு ஒரு ஒப்பந்தமும் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர் களையும், இந்தியாவில் உள்ள தமிழ் மீனவர் களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இலங்கையின் வடக்கு மாகாணமான முல்லைத் தீவு மாவட்டத்தில் இருக்கின்ற கடல்பகுதியை சீன அரசுக்கு தாரைவார்ப் பது போன்ற தன்மை கொண்டது. முல்லைத் தீவின் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான உரி மத்தை, சீனாவிற்கு இலங்கை அரசு கொடுத் துள்ளது. முல்லைத் தீவு தான், வன்னிப் பகுதியில் முக்கியமான தளமாக போராளிகளுக்கு இருந் தது. அங்கிருக்கும் கடற் கரையோரம், விடுதலைப் புலிகளின் கடல் புலிப் படை வலுவாக செயல் பட்டு வந்தது.சுனாமி பேரலைகளால், பேரழிவு ஏற்பட்டபோது, இலங் கையின் தமிழர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட் டன. தமிழர் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளான முல்லைத் தீவும், மட்டக் களப்பும் அதிகமாக பாதிக்கப்பட் டன.
இயற்கையின் அத் தகைய பாதிப்புகளை, எதிர்நீச்சல் போட்டு தமிழர்கள் வென்றனர். அவ்வாறு மறுவாழ்வை ஏற்படுத்திய கடலோர மீனவத் தமிழர்களுக்கு, கடல் புலிகளின் முழுமை யான ஒத்துழைப்பு இருந் தது. அதில் ஒரு பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின், மீனவத் தமிழர்கள் தங்கள் கடலில் சுதந்திரமாக மீன் பிடிக்க தடை விதிக்கும் அணுகுமுறை யில், இலங்கை அரசு சீனாவிற்கு மீன்பிடி உரிமையை கொடுத்துள் ளது. அது மட்டுமின்றி ஆழ் கடல் மீன்பிடி ஒப்பந் தத்தையும் போட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள மீனவத் தமிழர்களின் வாழ்வதாரத்தையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்திய மீனவர்கள் ஏற்கானவே இந்திய அரசு அந்நிய கப்பல்களுக்கு கொடுத்த, ஆழ் கடல் மீன்பிடி உரிமத்தை எதிர்த்து போராடி, அதை திரும்பப் பெற வைத் தார்கள். இப்போது இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை இலங்கை அரசு, சீன நாட்டின் அந்நியக் கப்பல்களுக்கு கொடுப்பதனால், இரு நாடுகளிலும் உள்ள பரம்பரிய மீனவர்களுக்கு எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். அதே போல வன்னிப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை உடன டியாக, தான் கொடுக்கின்ற ரூ.1000 கோடி நிதியில் இருந்து இந்திய அரசு நேரடியாக கட்டிக் கொடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருந்தார். அத்தகைய கூற்றை எதிர்த்து, இலங்கை அமைச்சர் பதில் கூறி யுள்ளார். இலங்கை அர சுத்துறையின் மூலமாக மட்டும்தான் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் அல்லது மறுவாழ்வுத் திட்டமும் செய்து கொடுக் கப்படும் என்பதாக அவர் கூறிவிட்டார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் கட்ட முதல் தவணை கடனாக 3,600 லட்சம் டாலர்களை, அதாவது துறைமுக கட்டு மானத்திற்கான 83 விழுக்காடு நிதியை சீனா அளித்திருந்தது. இப்போது இரண்டாவது கட்டமாக, அடுத்த ஆண்டு தொடங்கும் கட்டுமானத் திற்காக 2,000 லட்சம் டாலர்களை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜுன் 1012 நாட்களில் சீன துணைபிரதமர் இலங்கை வந்த போது இதற்கான ஒப்பந்தம் செய் யப்பட்டது. சீனாவுடன் இலங்கை அரசு 67 ஒப்பந் தங்களை செய்து கொண் டுள்ளது.
இந்தியாவுடன் டெல்லி யில் சமீபத்தில் புதிய ஒப்பந்தங்களை செய்து கொண்ட அதிபர் ராஜ பக்சே, அதன் பிறகு பாகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்களில் கையெ ழுத்து யிட்டுள்ளார்.
அதே சமயம் இந்திய அரசும் தன் பங்கிற்கு வீடுகள் கட்ட 2500 லட் சம் டாலர்களை கூடுதலாக அளிக்க, இலங்கைக்கு உறுதி கூறியுள்ளது. அதே போல இலங்கையில் நடந்த போரில் விதவைகளான பெண்களுக்கு உதவுவதற்காக, சுய வேலைப் பெண்கள் அமைப்பு என்ற குஜராத் தில் உள்ள சேவா என்ற அரசுசாரா நிறுவனத்தை ஈடுப்படுத்துவது என்ற இந்திய அணுகுமுறை கேள்விக்குள்ளகின்றது. அமைப்பாக்கப்படாத மற்றும் ஏழைப் பெண்கள் மத்தியில் வேலை செய்யும் ஒரு அமைப்பு எப்படி போரினால் விதவைகளான பெண்க ளுக்கான பணியாற்ற முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. இலங் கையில் உள்ள அரசுசாரா நிறுவனங்களே அந்த பணியை சரியாக செய்ய முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு அம்பாந் தோட்டை என்றால், இந்தியாவிற்கு திரிகோண மலை துறைமுகம் என்பதா கவும் விவாதிக்கப்படு கிறது. ராஜபக்சேவை பெறுத்த வரை, இரண்டு நாடுகளையும் சார்ந்து, இரு நாடுகளின் வாய்ப்பு களையும் பயன்படுத்தி கொள்வது என்ற தந்தி ரத்தை கையாள்கிறார். பாகிஸ்தானும் தன் பங் கிற்கு இலங்கையில் இறங்கி வருகிறது. அமெரிக்காவும் இந்தியா முலம் அனைத்தையும் செய்வோம் என அறிவித் துள்ளது.
தமிழர் விடுதலைக்கான ஒரு சுதந்திரமான போர் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு வல்லரசு நாடும் இலங்கைத் தீவை பங்குபோடத் துடிக்கின்றன என்று தான் புரிந்துகொள்ள முடிகி றது.