Friday, June 18, 2010

நானும்,நீயும். ..........

.
என்னிலிருந்து தொடங்கி
பார்த்தேன். உன்னை புரிய
முடிய வில்லை.
உன்னிலிருந்து என்னை
பார்த்தாயா? எண்ணி பார்த்தாயா?
எனக்கு தெரியவில்லை.
மண்ணிலிருந்து நான் பார்த்தேன்.
விண்ணிலிருந்து பார்க்க வழி இல்லாததால்.
கண்ணிலிருந்து பார்த்ததால் கட்டுண்டேன்.
என் செய்வேன்? தொலைந்தேவிட்டேன்.

காதலியா?............................

காதல் வாழ்க்கை அவளுக்கு
பிடிக்கும். அதனால் எனக்கு
காதல் பிடிக்கும்.
காதலில் அவள் மூழ்கி
எழுவாள். அதனால் எனக்கு
அவளை பிடிக்கும்.

கிர்கிஸ்தான் இன மோதல் படிப்பினை தருமா?

கடந்த ஒரு வாரகாலமாக கிர்கிஸ்தானில் இனக்கல வரம் என்பதுதான் முதன் மைச்செய்தியாக வெளி வந்து கொண்டு இருக்கிறது. மத்திய ஆசியாவில் கிர்கிஸ்தான் குடியரசு இருக்கிறது. அதன் வடக்கே கஜகஸ்தான் இருக்கிறது. மேற்கே உஸ்பெகிஸ்தான், தென் மேற்கே தஜுகிஸ்தான், மற்றும் கிழக்கே மக்கள் சீனக்குடியரசு இருக்கின் றன. இப்படி மலைகளுக்கு மத்தியில் இந்த கிர்கிஸ்தான் மாட்டிக்கொண்டுள்ளது. பிஷ்கெக் என்பது இந்த நாட்டின் தலைநகரம். கிர்கிஸ் என்றால் நாற்பது பழங்குடியினர் என்று பொருள்.
மனாஸ் என்ற மாவீரன் தலைமையில் இந்த நாற்பது பழங்குடியினரும் அணிதிரட்டப்பட்டு கிதான்சுக்கு எதிராக போரா டினார்கள் என்பது வரலாறு. கிர்கிஸ்தானின் கொடியில் நாற்பது கதிர்கள், அந்த நாற்பது பழங்குடினரை குறிக்கும். தென்னாடு என்பதை குறிக்க சிவப்பு அந்த கொடியில் இருக்கிறது.
சாகா என்ற போர்க்குணம் கொண்ட பழங்குடிதான் அங்குள்ள பாரம்பரிய மக்கள். கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை சாகா பழங்குடியினர் அங்கே வாழ்ந்து வந்தனர். மத்திய ஆசியாவிற்கு துருக்கியர்கள் ஆட்சி நாலா வது நூற்றாண்டில் வரும் வரை சாகா மக்கள் அங்கே கோலோச்சி வந்தனர்.
சாகன் மொழி சீன மொழியிலிருந்து வந்துள் ளது. சோவியத் யூனிய னின் உடைவுக்கு பிறகு, கிர்கிஸ்தான் ஒரு தனி நாடாக உருவாகத்தொடங் கியது. 1876 இல் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் அது சேர்க் கப்பட்டது. 1989 இல் கிர்கிஸ் என்ற பழங்குடி இனத்தவரை, வெளியே தள்ளி அந்த இடங்களில் ரஷ்யாவின் மற்ற இனங்களை குடியேற்ற முயற்சித்தபோது, பலத்த எதிர்ப்பு உருவானது. கடைசியான சோவியத்தின் புள்ளிவிவரத்திலேயே நகர்புறத்தில் கிர்கிஸ் எண்ணிக்கை இருபத்தி இரண்டு விழுக்காடுதான் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு பாரம்பர்ய பழங்குடிகளை விரட்டி அவர்களது நிலங்களை மற்ற சோவியத்தின் இனங் கள் கைப்பற்றியுள்ளனர்.
அதனால்தான் புரட்சி வெடித்துள்ளது. இதை இன்றைய அரசுகள் தங் கள் நாட்டில் உள்ள தேசிய இனங்களை அவர் கள் பகுதிகளை விட்டு விரட் டும்போது உணர்வார் களா?
அதிகாரபூர்வமற்ற அரசியல் குழுக்கள் தடை செய்யப்பட்டன. அதுவே பல புதிய குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் இயங்குதலையும் அரசே அங்கீரிக்க வேண்டிவந்தது 1990 ஜுனில் கிர்கிசுகுக்கும், உஸ்பெக்சுக்கும் மத்தியில் இன மோதலும், வன்முறையும் வெடித்தது. அதையொட்டி கிர்கிஸ் தான் ஜனநாயக இயக்கம் ஒரு பலமான அரசியல் சக் தியாக எழுந்தது.1991 ஆகஸ்ட் 31 இல் சோவியத் யூனியனிலிருந்து கிர்கிஸ் தான் சுதந்திரம் பெற்றது அறிவிக்கப்பட் டது.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள், மத்திய ஆசியாவின் கடைசி அமெ ரிக்க ராணுவத்தளமாக இருந்த மனாஸ் விமானப் படைத்தளமும் கிர்கிஸ் அதிபரால் மூடப்பட்டது. அதை நாடாளுமன்றம் அங்கீகரித்தது. கிர்கிஸ், ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் ஆகியோர் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தை மூலம் அந்த முடிவு மீண்டும் அதே ஆண்டு ஜூன் மாதத்தில் மாற்றப்பட்டது. அமெரிக்கர்கள் இப்போது அதிகமான வாடகைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
உலகில் உள்ள முதல் இருபது ஊழல். நாடுகளில் கிர்கிஸ்தானும் ஒன்று என்று பெயர் வாங்கியுள் ளது அதிகமான அளவில் செலவழிக்கும் ஆள் வோரை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலை வர்கள், ஏப்ரல் ஆறாம்நாள், ஒரு போராட்டத்தை தொடங்கினார்கள். அதுவே வன்முறையாக மாறி நாடெங்கும் பரவி யது. மறுநாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பல எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிஷேக் என்ற தலைநகரில், மக்கள் அரசு தொலைக் காட்சியையும், பாதுகாப் புதுறை தலைமை அலுவ லகத்தையும் கைப்பற்றி னார்கள். 75 பேர் கொல்லப் பட்டதாகவும், 458 பேர் காயம் பட்டதாகவும் முதல் தகவல்கள் கூறின. அந்த நாட்டின் பிரதமர் ரஷ்யா தான் தூண்டிவிட்டது என்றார்.எதிர்க்கட்சிகளும் அமெரிக்க விமானபடைத் தளத்தை மூடும்படி கோரினர்.
அதிபர் அடுத்த நாடான கழகச்தானுக்கு ஓடினார். ஜூன் 12 கணக்குப்படி 200 பேர் கொல்லப்பட்ட னர். 1685 பேர் காயம் பட்டனர். வட்டாரத்தில் உள்ள உஸ்பெக்கிர்களுக் கும், கிர்கிஸ்களுக்கும் இன மோதலாக வெடித்தது. அதில் கிர்கிஸ் இன ஆயுதப்படையும் சேர்ந்து கொண்டது. 30000 உஸ்பெகிச்தானியர் மோத லின் விளைவால் வெளி யேறி, எல்லை தாண்டி உஸ்பெகிஸ்தான் எல் லைக்குள் வந்ததாக அவர்கள் அறிவித்தார்கள். ஐ.நா. மனிதாபிமான உதவிகள் பற்றி வழக்கம் போலவே பேசியது. ஐ.நா.வின் உதவும்கரங்கள் தங்கள் அகதி முகாம் டெண்டுகளுடன் உஸ்பெ கிஸ்தான் வந்து இறங்கி விட்டனர். இரண்டு மாதங் களுக்கு 80000 பேருக்கு உணவு வழங்க தாங்கள் தயார் என உலக உணவு மன்றம் அறிவித்துள்ளது. இரண்டு லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்த அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த கிர்கிஸ்தான் வன் முறை, அருகாமை நாடான சீனக் குடியரசை அதிகமாக பாதித்துள்ளது. வன்முறை நடந்த பகுதிகளிலிருந்து சீனர்களை வெளியேற் றுவதில் சீன நாடு அக்கறை செலுத்த தொடங்கியது. ஜூன் 14ம் நாள் 600 சீனர்களை தங்கள் நாட் டிற்குள் எடுத்துச் சென் றது. 4 லட்சம் உஸ்பெகிஸ் தான்காரர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி எல்லை தாண்டியுள்ளதாக சீனா கணிக்கிறது. கிர்கிஸ்தான் என்ற ஒரு சிறிய தேசிய இனத்தை தொடர்ந்து அடக்குமுறை செய்ததால், சோவியத் யூனியன் உடைந்தது. அதேபோல, உஸ்பெக்கியர்கள் என்ற இன்னொரு தேசிய இனம் அருகாமை நாட்டிலிருந்து, கிர்கிஸ்தானிற்குள் விரிவாகத் தொடங்கியதால் இத்தகைய எதிர்ப்பும், வன்முறையும் சீன தேசம் வரை பாதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதுவே, காஷ்மீர் விச யத்தில் இந்திய அரசுக்கும், ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும் பாட மாக அமையுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
கிர்கிஸ்தானில் நடக்கும் வன்முறையை அல்லது மோதலை அந்த நாட்டின் அதிபரான பக்கியேவ் என்பவரை தூக்கி எறிவதற் கான போராட்டத்தை யொட்டி எழுந்ததாக, உலக நாடுகள் கணிக்கின் றன. ஆனால் அதற்கு பின்னால் ஒரு சிறிய தேசிய இனம், தான் பிரிந்து சென்று சுதந்திரமாக தன்னை அறுதியிட்டுக் கொள்வதற்கு தடையாக இருக்கும் உலக சக்திகள் பற்றிய கணக்கு எடுக்கப்படுவதில்லை. உள்ளபடியே, தனித்து நிற்க முடியாத ஒரு உலகச் சூழலில், சுதந்திரமாக வெளியே வந்துவிட்ட கிர்கிஸ்தான் எந்தளவுக்கு அமெரிக்காவாலும், ரஷ் யாவாலும் தலையிடு செய்யப்பட்டு, சிதற டிக்கப்பட்டது என்ற உண்மை காணப்பட வேண்டும்.
அண்டை நாடான உஸ்பெகிஸ் தானிலிருந்து வருகின்ற மக்கள், கிர்கிஸ்தான் நாட்டிற்குள் சென்று குடியமர்வதும், 10 லட்சம் பேர் அதுபோல குடியேறிய பிறகு இந்த மோதல் இனவாத மோதலாக மாறியுள்ளதும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த கிர்கிஸ்தான் மக்கள் தொகை 54 லட்சமாக இருக்கும்போது, அதில் 10 லட்சம் பேர் உஸ்பெகிஸ் தானியர் களாக போய் வாழ்வதும், அந்த நாட்டு அரசியலுக் குள் தங்களுக்கான அரசியல் கட்சியை ஒரு
சக்தியாக வளர்க்க முயல் வதும் எந்தளவுக்கு பாரம்பரிய கிர்கிஸ்தான் மக்களுக்கு எரிச்சலையும், எதிர்ப்பையும் வலுப்படுத் தியிருக்கும் என்பதும் எண்ணிப்பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழர் பாரம்பரிய பகுதிகளான வடக்கிலும், கிழக்கிலும் தற்போது நடைபெற்று வரும் சிங்கள குடியேற்றங்கள், இதுபோன்ற ஒரு இனவாத வன்முறையை அல்லது மோதலை அல்லது தாக்குதலை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் உலகச் சமூகம் தொலைநோக்குப் பார்வை யுடன் பார்க்குமா என்ற கேள்வி நமக்கு இந்த இடத்தில் எழுகிறது.
ஓஷ் என்ற தெற்கே உள்ள நகரம் பெர்க்கணா பள்ளத்தாக்கு என்ற நீர்பாசன விவசாயப் பகுதியாக இருக்கிறது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு அந்தப் பள்ளத் தாக்கு, கிர்கிஸ்தான், உஸ் பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய மூன்று சுதந்திரமான குடியரசுகளால் பங்கு போடப்பட்டுள்ளது. அந்த மூன்று இன மக்கள் மத்தி யில் ஒரு நல்லிணக்கம் உருவாகாத சூழலில் இத்தகைய மோதல்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகிறது. இந்த பெர்க்கணா பள்ளத்தாக்கில் உள்ள கடும் உழைப்பாளிகளான கிர்கிஸ் இன மக்கள் தங்களது வணிகத்தை பெருக்கி வருகின்றன. உலகச் சந்தைக்கு ஆப் கான் நாட்டிலிருந்து செல் லுகின்ற கள்ளத்தனமான போதை வஸ்துக்களும் இந்தப் பகுதி வழியாக செல்லுகிறது. அவற்றை ஊழலில் சிக்கிய கிர்கிஸ் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்தகைய செயல் பாடுகள் ஒரு சிறிய தேசிய இனத்தின் சரிவையும், பலவீனத்தையும் காட்டுகிறது என்றால் என்ன பொருள்? சூழலின் கட்டா யத்தால் சுதந்திரமான நாடாக உருவான ஒரு தேசிய இனத்திற்கு, சரியான கொள்கையுள்ள, கட்டுப்பாடு கொண்ட ஒரு வலுவான இயக்கமும், அதற்கான உறுதிமிக்க படைப்பிரிவும் இல்லாத காரணத்தால், இத்தகைய சீரழிவுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுவே, போரில் வீழ்ந்து பட்ட தமிழ் தேசியத்திற்கு ஒரு சரியான, வலுவான, ஒன்றுபட்ட கட்டமைப் புடன் கூடிய தலைமை தேவை என்பதை வலி யுறுத்துகிறது.
தேசிய இனங்களின் இருத்தலுக்கும், அறுதியிட லுக்கும், வாழ்வாதாரத் திற்கும் பிரச்சினை எழும் போது, அடக்கமுடியாத வன்முறைகள் எழுச்சி பெறும் என்ற உண் மையை சீன தேசம் தனது வாயிலிலேயே தெரிந்து கொள்ள இந்த மோதல் உதவட்டும். உஸ்பெகிஸ் தான் இஸ்லாமிய இயக்கத் தின் தலைவர்கள், பாகிஸ் தானில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் தங்கியிருப் பதால், இந்த பிரச்சினையில் இந்திய அரசும் கவலை கொள்கிறது. இந்த இரு நாடுகளும் சிறிய தேசிய இனங்களின் இருத்தலை மற்றும் வளர்ச்சியையும், சுதந்திரத்தையும் அங் கீகரிக்க வேண்டும் என்ற உண்மையை, இந்த கிர்கிஸ்தான் தரும் பாடம் சொல்லித்தருமா என்ற கேள்வி நமக்கு எழுந் துள்ளது.