Friday, June 11, 2010

ஒரு அறிவுஜீவி தடுக்கி விழுந்தார்

அன்று ஜூன் மாதம் எட்டாம் நாள்.தமிழ் தொலைகாட்சி ஒன்றில், போபால் தீர்ப்பு சம்பந்தமாக ஒரு விவாதம் நடந்தது. அதில் போபால் நீதிக்கான அனைத்துநாட்டு பரப்புரை இயக்கம் சார்பாக ஒருவரும், பெண்கள் இயக்கம் சார்பாக ஒருவரும், அந்த குறிப்பிட்ட அறிவுஜீவியும் கலந்து கொண்டனர். தொலைக்காட்சியைச்சேர்ந்த நடுவர் இருந்தார்.அது நேரலை ஒளிபரப்பு. விவாதம் தொடங்கும்போதே, அந்த அறிவுஜீவி போபால் விபத்து நடந்த ஆண்டை 1984 என்று சொல்வதற்கு பதில், 1986 என்று தவறாக கூறினார். அது நேரலையாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி. அதில் பேசும்போது அதிக அக்கறையுடன் பேசவேண்டுமே என்ற கவலை கூட அந்த அறிவயுஜீவிக்கு வந்ததாக தெரியவில்லை.மீண்டும் அதே தவறான செய்தியைக்கூரினார். நேயர்கள் திகைத்து நிற்கும்போது, நடுவராக இருந்தவர் 1984 என்று திருத்தினார். அதன்பிறகு அந்த அறிவுஜீவி, உலகமயமாக்கலின் பாதிப்பு இந்த போபால் நச்சு வாயு ஆலையின் செயல்பாட்டில் வெளிப்பட்டதாக கூறினார். உலகமயமாக்கல் என்ற சொல்லும், விவாதமும் வந்தது 1995 இல் என்ற உண்மை அந்த அறிவுஜீவிக்கு நினைவில்லை போலும். அதே சமயம் மறுநாள் இன்னொரு தமிழ் தொலைக்காட்சியில் இதே பிரச்சனை விவாதமாக ஆக்கப்பட்டது.அப்போது அந்த தொலைகாட்சி நடுவர், உலகமயமாக்கல் வருவதற்கு மிகவும் முன்பே இந்த போபால் ஆலை விபத்து நடந்துவிட்டதே எனக்குறிப்பிட்டதை எண்ணி தமிழ் நேயர்கள் சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த அறிவுஜீவி வரலாற்றையே தவறாக சொல்லத்தொடங்கி விட்டார். அதுமட்டுமல்ல. இவர் உலகமயமாக்கல் வந்தபோது, 1995 இல், ஒரு குழுவினரால் திண்டுக்கல்லில் உலகமயமாக்கல் எதிர்ப்பு கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டார். அப்போது தான் உலகமயமாக்கலை ஆதரித்துதான் பேசுவேன் என இவர் கூறிவிட்டார். ஆனாலும் பேசுங்கள் என அவர்கள் கூப்பிட்டனர். அங்கே போய் உலகமயமாக்கலை எதிர்க்க முடியாது, அதனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனபபேசியவர் தான் இந்த அறிவுஜீவி. இப்போது உலகமயமாக்கல் தோற்றுவ்ட்டது என்று உலகமே ஒப்புக்கொண்ட பிற்பாடு, உலகமயமாக்கலை எதிர்த்து சம்பந்தமில்லாத இடத்தில் கூட பேசத்தொடங்கி விட்டார்.அதனால்தான் இந்த விவாதத்திலும், போபால் ஆலை விபத்தை உலகமயமாக்கலுடன் சம்பந்தப்படுத்தி இவர் பேசி இருக்கிறார். இப்படி பேசிவரும் அறிவுஜீவி ஈழம் பற்றி பேசும்போது களத்தில் நின்று போராடும் புலிகளை தாக்கி பரப்புரை செய்துவருகிறாரே என்று பலரும் வருத்தப்படுகிறார்கள்.புலிகளை அழித்துவிட்டோம் என்ற அரசு தரப்பு பரப்புரையை வலுப்படுத்தி வரும் இந்த அறிவுஜீவிகள், அதற்கு பிறகும் புலி எதிர்ப்பு பரப்புரையை தமிழ்நாடு முழுக்க செய்து வருவது யாரை திருப்திப்படுத்த? அதற்கு பிரான்சு நாட்டிலிருந்து ஷக்தி ஆதரவு இருப்பதால் செய்து வருவது நாட்டிற்கு தெரிகிறது. அப்படியானால் இந்திய நாட்டு உளவுத்துறைகள் செய்ய வேண்டிய வேலையை செய்கிறார்களா? இது சில அறிவுஜீவிகளுக்கு வழமையாக ஆகி விட்டது. இவர்கள் ஒரு காலத்தில் மார்க்சிசம் பேசினார்கள். பிறகு அது தோற்று விட்டது என கண்டுபிடித்தார்கள். பிறகு மனித உரிமை பேசினார்கள். பிறகு அதற்க்கான அமைப்புகள் தோற்றுவிட்டதென கண்டுபிடித்தார்கள்.பிறகு தாங்களே அப்படி ஒரு அமைப்பை கண்டு பிடித்தார்கள். அதற்குபிறகு மாவோவாதிகளை நெருங்கினார்கள். மார்க்சிசம் தோற்றுவிட்டது என இந்த அறிவுஜீவி கூறியதை தெரிந்துகொள்ளாதவர்கள் அதற்கும் இடம் கொடுத்தார்கள்.பிறகு அரசியல் கைதிகள் விடுதலையிலும் இணைந்து கொண்டார்கள். அதையும் செயற்படுத்தவில்லை. அதற்க்குபிறகே அந்த அமைப்பை எடுத்துச்செல்பவர்கள் இந்த பெரிய மனிதர்களை அடையாளம் கண்டனர். அதற்கு பிறகு இவர்களுக்கு சுற்று சூழல் மத்தியில் இடம் கிடைத்தது. அப்போதுதான் மேற்கண்ட தடுக்கி விழுதலை செய்தார்கள். இவ்வாறு அடையாள நெருக்கடிக்காக தன்னை காட்டிக்கொள்பவர்களை எல்லாம் தொடந்து ஏதாவது ஒரு பெயரில் தூக்கிப்பிடிப்பதை தமிழன் நிறுத்திக்கொண்டாலே இந்த தலைவலிகள் தொடராது.