Thursday, April 29, 2010

கொலையுண்ட தமிழ் ஊடகத்தார் சிவராமின் 6வது நினைவு ஆண்டு

இலங்கைத் தீவில் சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு எதிராக, ஒரு இனவாதப் போர் நடத்தப்பட்டு, இன அழிப்பு நடந்தேறியது என்பது உலக மக்களுக்கு இப்போது தெரியும். அதிலும் போர்க் குற்றங்களை நடத்தித்தான் மகிந்தாவின் அரசாங்கம், தனது போர் வெறியை, போர் வெற்றியாக சித்தரித்துக் கொண்டுள்ளது என்பதும் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர் களுக்குப் புரியும். அதே சமயம் களத்தில் போர் புரிய இறங்கிய போராளிகள், தங்கள் உயிரை துச்சமென மதித்து இறங்குவதால், அவர்களது வீரச்சாவுகள் வரலாறுகளாக பதிந்து விடுகின்றன. ஆனால் தங்கள் தொழிலை ஊடகவியலாளராக தொடங்கி யவர்கள் யாரும், அல்லது தொடர்ந் தவர்கள் யாரும் முதலில் எதிர்பார்ப்பது சரியான அங்கீகாரமும், சுதந்திரமும்தான். உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரம் என்பது பெரிதாக மதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை அன்றாடம் சுவாசிக்கப் பிறந்தவர்கள், ஊடகவியலாளர்கள். அப்படி ஒரு ஊடக வியலாள ராகத்தான் சிவராம் தர்மரத்னமும் இருந்தார். 2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் சிவராம், சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கும்பலால் வாகனத்தில் கடத்தப்பட்டார். மறுநாள் அதிகாலையில் சிவராமின் உயிரற்ற சட லம் இலங்கை நாடாளுமன்ற கட்டிடத் திற்கு அருகேயே அடையாளம் காணப் பட்டது. இது உலகின் பல மூலைகளில் உள்ள பல்வேறு ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. பிரபல மற்றும் முக்கிய மூத்த ஊடகவியலாளர்கள் அனைவரும் சிவராமை ஏதாவது ஒரு விதத்தில் தெரிந்து வைத்திருந்தனர். சிவராம் மிகவும் அறிமுகமான, தைரி யமான ஒரு அரசியல் ஆய்வாளர். அவரது எழுத்தின் மூலமே, தமிழ்நெட் என்ற இணைய தள ஆங்கில ஏட்டிற்கு மூத்த ஆசிரியராக பணியாற்றி வந்தார். 1959ம் ஆண்டு மட்டக்கிளப்பு மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி பிறந்த வர். அக்கரைப் பட்டு அருகே ஒரு நிலவு டமை யாளர் குடும்பத்தில் பிறந்தவர். மட்டக் கிளப்பிலும், பின்னர் கொழும்பிலும் கல்லூரி வாழ்க்கை யை பயணித்தவர். 1982ம் ஆண்டு பெரடேனியா பல்கலைக் கழகத்தில் படித்த போது, முதல்கட்ட இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேற்றப் பட்டவர். அதையொட்டி முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தலைமையில் இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பிளாட் அமைப்பின் முன்னணி அமைப்பாக இருந்த காந்தீயம் என்ற வடிவில் தன்னை இணைத்துக் கொண்டார். 1983ம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப் போர் ஒரு இனமோதலாக உருவான பிற்பாடு, சிவராம் பிளாட் போராளியாக மாறினார். அந்த அமைப்பின் ராணுவத்திலும், அரசியல் பிரிவிலும் சிவராம் ஒரு முக்கிய பங்காற்றினார். 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவான பிற்பாடு, இந்திய அமைதிப்படை இலங்கை சென்று இறங்கிய தற்குப் பிறகு, பிளாட் தலைவர் உமாமகேஸ் வரன் ஒரு வெகுமக்கள் அரசியல் முன்னணியை உருவாக்கினார். அந்த அரசியல் முன்னணிக்கு, ஜன நாயக மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர். டி.பி.எல்.எப். என்று அழைக்கப்பட்ட அந்த முன்னணிக்கு, பொதுச் செயலாளராக சிவராமை, உமா மகேஸ்வரன் நியமித்தார். அதுவே ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இயங்கத் தொடங்கியது. காந்தியம் அமைப்பில் இருந்த மார்க்சி யவாதி சந்ததியார் பிளாட் அமைப்பால் கொல்லப்பட்ட பிறகு, அதை நிறுவிய டேவிட் அய்யா பிளாட் அமைப்பால் ஓரங் கட்டப்பட்ட பிறகு, பிளாட் அமைப்பின் படையணிக்கு தலைமை வகித்த கண்ணன் என்ற ஜோதிஸ்வரனும், சுபாஷ் என்ற பவானந்தனும், மட்டக்கிளப்பிலேயே விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டப் பிறகு, உமாமகேஸ்வரனுடன் தொடர்ந்து சிவராம் இயங்கி வந்தார்.இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை, புலி கள் அமைப்பின் மீது திணித்து, இந்திய அமைதிப்படையிடம் புலிகள் அமைப்பை அடையாளமாக ஆயுதங்களை ஒப் படைக்க இந்தியா வற்புறுத்திய பிறகு, பிளாட் தலைவர் உமாமகேஸ்வரன் அதை எதிர்த்து நின்றார். அப்போது உடன் இருந்தவர் சிவராம். இந்தியாவின் விரிவாக்க மனப்பான்மையை எதிர்த்து, தென்னிலங்கை யின் ஜே.வி.பி.யுடன் தொடர்பு கொண்டு செயல்பட, முகுந்தன் முயன்ற போது சிவராம் அதை எதிர்த்தார். அதே போல வீரசாகசமாக மாலத்தீவை கைப்பற்ற முனைந்து, முகுந்தன் தோற்ற போது, சிவராம் அதையும் எதிர்த்தார். 1989ம் ஆண்டு மேற்கண்ட காரணங் களால், சிவராம் பிளாட் அமைப்பை விட்டு வெளியேறினார். தன் சொந்த ஊரான மட்டக்கிளப்பிலேயே 1988ல் திருமணம் செய்த சிவராம், வைஷ்ணவி, வைதேகி என்ற பெண்களுக்கும், சேரலாதன் என்ற மகனுக்கும் தந்தையானார். டி.பி.எல்.எப்.பில் இருக்கும் போதே, சிவராமின் திறமையால், அரசியல் ஆய்வாளராக ஐ.நா.நிதியில் இயங்கும் இண்டர் பிரஸ் சர்வீஸில் எழுதத் தொடங்கினார். அதே போல ஐலண்ட் என்ற ஆங்கில இதழிலும் தராக்கி என்ற புனைப் பெயரில் எழுதத் தொடங்கினார். தாரக்கியின் கட்டுரைகள் பிரபலமடைந்தன. சரியான புள்ளி விவரங்கள், உள்விவ காரங்கள், ராணுவ, அரசியல், யுத்த தந்திர விவரங்கள், இலங்கையின் இனவாத மோதலில் இரு தரப்பிலும் இருக்கின்ற செயல் தந்திர மதிப்பீடுகள் ஆகியவை சிவராமின் எழுத்துக்கள் மூலம் உயிர் பெற்றன. ராணுவ அறிவியலில் அவரு டைய பரந்த படிப்பும், மார்க்சிஸம் என்ற அரசியல் சிந்தாந்த அறிவும், அவருக்கு சிறந்த கட்டுரைகளை எழுத உதவியது. அதன் மூலம் அவரது எழுத்துக்கள் மிக வும் பிரபலமடைந்தன. ஊடகவியலாளராகவும், நடிகராகவும் இருந்த ரிச்சர்டு டி சொய்சா என்ற நண்பர்தான் சிவராமனை ஊடகத்து றைக்கு இழுத்தவர். அந்த டி சொய்சா 1990ம் ஆண்டில் அவரது வீட்டிலி ருந்து கடத்தப்பட்டு, படுகொலை செய்யப் பட்டபோது, அந்த உடலை அடையாளம் காட்டியவர் சிவராம். தராக்கி என்ற பெய ரில் சிவராம் எழுதிய கட்டுரைகள் 1990ன் தொடக்க காலங்களில் பிரபலமாகி, கட் டாயமாக படிக்கக் கூடிய ஒரு பத்தியாக மாறிவிட்டது. அதை பிரான்சில் உள்ள தமிழ் சமூகம் தொகுப்பு புத்தகமாக வெளியிட்டது. ஐலண்ட், சன்டே டைம்ஸ், லண்டன் தமிழ் டைம்ஸ், டெய்லி மிரர், வீரகேசரி ஆகிய ஊடகங்களுக்கு, சிவராம் எழுதி வந்தார். 1997ல் தமிழ்நெட் டாட் காம் என்ற இணைய தள ஏட்டுக்கு ஒரு செய்தித் தாளாக புதிய முகவரி தந்தவர் சிவராம். அவர் கடத்தப்பட்ட நாளில், இரவு 7.30 மணிக்கு தமிழ் நெட் இணைய தளத்திற்கு தனது கட்டுரையை எழுதி அனுப்பி விட்டு வந்திருக்கிறார். இதழியலுக்கு மட்டுமின்றி, தமிழ் அரசியலுக்கும், இலக்கியத்திற்கும், அவர் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார். இலங்கையின் சிக்கலான வரலாறு அவரது முக்கியத்துவத்தை உயர்த்தி விட்டது. அவர் வரலாற்று ஆசிரியர்களுடன், அரசியல் அறிவியலாளர்களுடன், மானூடயியலாளர் களுடன், கொள்கை நிபுணர்களுடன் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பூகோளயியலாளர்களுடன் என பல்வேறு மட்டங்களில் விவாதம் செய்து வந்தார். மட்டக்கிளப்பு பூர்வ சரித் திரத்திற்கு ஒரு உயர்தர முன்னுரையை, 2005ம் ஆண்டு ஏப்ரலிலேயே எழுதிக் கொடுத்தார். 90களின் மத்தியில் பல அரசாங்க மற்றும் மனித உரிமை அமைப்புகள் அவரிடம் ஆலோசனைகள் கேட்டதுண்டு. ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் பயணம் செய்து மனித உரிமை ஆர்வலர்களுடன் ஊடாடல் செய் துள்ளார். அவருடைய எழுத்துக்கள் மூலமாக தொடர்ந்து ராணுவ சக்திகளிடமிருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனா லும் கொழும்பை விட்டு வெளியேற மறுத்தார். 2004ல் காவல்துறை அவரது இல்லத்தை இரண்டு முறை சோத னையிட்டது. பல ஆயுதக்குழுக்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தன. போராடும் விடுதலைப்புலி அமைப்பிற்கு பயன்படும் வகையில், அரசாங்கத்தின் இனவாத, இன அழிப்பு போர்த்தந்திரங்களை அம்பலப்படுத்திய ஒரு தமிழ் எழுத்தாளர் இதே நாளில் 5 ஆண்டுகளக்கு முன்னால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்ட உடனேயே கிடைத்த செய்தியையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் டெல்லிக்கு தொடர்பு கொண்டு, பிரதமர் மன்மோகன் மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி, மறுநாள் அதிகாலை இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, உறைந்து போயினர். இதுவே இலங்கையின் ஊடகச் சுதந்திரத்திற்கு எடுத்துக் காட்டு.