Sunday, April 25, 2010

பாலியல் பட்டினியில் தமிழகம் மட்டும் தவிக்கவில்லையா?

இடதுசாரிகள் என்று பாராளுமன்ற இடதுசாரிகள் பெயர்வைத்துக்கொண்டு செய்த சேட்டைகள், கேரளாவில் கலாச்சாரக்காவலர்களாக அவர்களைக்காட்டியது . அதற்கு கேரளாவில் உள்ள ஆணாதிக்க பண்பாடும், அதை ஊற்றி வளர்க்கின்ற ஒரு நிலவுடமை உறவு நிலவிவருவதும் புரியப்படவேண்டும். சிறு நிலவுடமை உற்பத்தி உறவுகள் கேரளாவில் எங்கணும் நிறைந்து கிடக்கின்ற காரணமாக, அதன் பண்பாட்டு வெளிப்பாடுகள் அங்குள்ள மனிதர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. அதன் விளைவாக ஆண்கள் பொதுவாக பொறுமையிழந்து பெண்களின் அறுதியிடலைக்கண்டு, எரிச்சலடைவதும், அதனாலேயே கேரளப்பெண்கள் மீது அதிகமாக வெறுப்பை உமிழ்வதும் செய்கின்றனர். இதுவே கமலாதாஸ் போன்ற பெண்ணியச்சிந்தனையாலர்களுக்கு கேரளா ஆண்கள் மீது வெறுப்பை கொடுத்தது. அதேபோல இப்போது அருந்ததிராய் போன்ற கேரளப்பென்களையும் கடுப்படைய வைத்துள்ளது. அதேநேரம் கேரளாவில் மட்டும்தானா இந்த பாலியல் பட்டினி ஆண்களை வாட்டுகிறது? தமிழகத்தில் இல்லையா? இப்படிஒரு கேள்வியைக்கேட்க வேண்டியிருக்கிறது. ஏன் என்றால் சமீபத்தில் சாமியார் நித்தியானந்தா செய்த சாகசங்கள் வெளிச்சத்திற்கு வந்தபோது, தமிழகத்தில் நிலவும் பாலியல் பட்டினி பகிரங்கமாக படம்பிடித்துக்காட்டப்பட்டது. நித்தியானந்தா பொய்யாகச்சொல்லிவந்த துறவறம், அவரது தனிமைச்சூழலில் உடைக்கபட்டிருந்தது. இது நித்தியானந்தாவின் தவறா அல்லது துறவறத்தின் தவறா என்று ஆராயவேண்டும். அது பகுத்தறிவு. அப்படி ஆராய்வதற்குப்பதில் மனிதனைக்குற்றமாகப்பாற்கும் பார்வை இங்கு நிறைந்திருக்கிறது. இதுதான் நித்தியானந்தா மீது குற்றவழக்குகளைப்போட காவல்துறையை ஊக்குவித்தது. இன்றுவரை நித்தியானந்தாவை செல்லமாக நித்தி என அழைக்கும் தொலைக்காட்சிகளிடம் மக்கள் தேடுவது ஏதாவது புதுசா கிடைக்குமா என்பதுதான். இது என்ன? பாலியல் பட்டினி இல்லையா?
அறைக்குள் நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் கொஞ்சுகிறார் என்பதற்கான ஆதாரப்படங்கள் அந்த தொலைக்காட்சிக்கு கிடைத்துவிட்டன. இவர்களில் யார்தான் கிடைத்த பெண்களுடன் அப்படிக்கொஞ்சவில்லை? எசுநாதர் சொன்னதுபோல உங்களில் யார் அந்த தப்பை செய்யாதவர்களோ, அவர்கள் முதல் கல்லை எடுத்து அடியுங்கள் என்று சொன்ன உடனே, அந்தக்காலத்து ஜெரூசலம்வாசிகள் கலைந்து போய்விட்டார்கள், இந்தக்காலத்து தமிழ்நாட் டுக்கரர்கள் கலையவில்லையே? அதனால் இவர்களது பாலியல் பட்டினியும் குறைந்தது அல்ல. சரி. இப்போது உச்சநீதிமன்றம் குஷ்பு வழக்கில் ஒரு தீர்ப்பை சொல்லிவிட்டது. திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது நடக்கத்தான் செய்கிறது என்ற உண்மையை குஷ்பு சொல்லிவிட்டார். இது அப்படி உறவு வைத்துக்கொல்வதையே அன்றாடம் விருப்பமாக வைத்துக்கொண்டவர்களுக்கு கோபம் வந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒரு பெரிய குழப்பமே இதன் மீது ஏற்படுத்தப்பட்டது. வழக்குகள் போடப்பட்டன.இப்போதுதான் தீர்ப்பு வந்துள்ளது. குஷ்பு மீதான ௨௨ வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.அப்போதும் அதே தொலைகாட்சி இதேபோல அந்த எதிர்ப்பை பெரியதாகி காட்டியது. இப்போது நித்தி வில்லங்கத்தை தொடர்ந்து போட்டு நல்ல வசூல் செய்து விட்டார்கள். அதுவும் மக்கள் மத்தியில் உள்ள பாலியல் பட்டினியில் நம்பிக்கைகொண்டுதானே செய்தார்கள்? அதற்குப்பிறகு ஒரு தொலைக்கட்சியில் இதுபற்றி கடுமையாகக்கண்டித்தோம். அதற்கு முதல்வரும் ஆதரவு என்று மக்கள் நினைப்பார்கள் என்றோம். அதுவேறு முதல்வரின் பேரன் தொலைகாட்சி. உடனேயே முதல்வர் கடுமையாக அந்த ஒளிபரப்பலை கண்டித்தார் பிறகுதான் நிறுத்தப்பட்டது. அறைக்குள் நடத்தப்பட்ட ஒரு காரியத்தை அம்பலத்துக்கு அதுவும் செய்திகள் வெளியிடும் பகுதியில் தொடர்ந்து வெளியிட்டார்கள். அது ஒரு நீலப்படம் போல வெளியிடப்பட்டது. வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இது என்ன என்று கேட்கத்தொடங்கிவிட்டன. பேராசிரியர் சரஸ்வதி, டாக்டர் கிருஷ்ணசாமி, , டைரக்டர் புகழேந்தி, அய்யநாதன், ஆகியோருடன் நானும் இந்த ஒளிபரப்பலை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். முதல்வர் கலைஞரும் கடுமையகத்தாக்கி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் அந்த பாலியல் பட்டினியும், தாகமும் அம்பலத்திற்கு வந்துள்ளன என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது. .
குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியுடன் வாழும் கலாச்சாரம் தான் போற்றத்தக்கது எனவும், அதற்கு தமிழ் கலாச்சாரம் எனப்பெயரிட்டு அழைப்பதும் பிரபலமான ஒரு பழக்கம்.அதனால் எல்லோருமே தன்பயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைகூறி பெண்களை மட்டுமே அடிமைப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆண்களுக்கு என்று வரும்போது அந்த கலாச்சார விதிகள் பின்பற்றுவதில்லை. என்பதை, பாரதி சாடிஇருந்தாலும், கற்பென்று வந்தால் அக்தை இருபாலர்க்கும் பொதுவென வைப்போமேனக்கூறி யிருந்தாலும், அதைக்கண்டுகொளவது இல்லை. இது ஆண் ஆதிக்கச்சிந்தனையன்றி வேறில்லை. அரசியலில் அதிகாரத்தில் உள்ளவர்களே அந்தகாலத்து மன்னர்கள்போல அந்தப்புரங்கள் பாணியில் வாழ்வதும், ஒன்றுக்கு மேல் மனிவிமார்களைக்கொண்டிருப்பதும் அங்கிகரிக்கப்படுகிறது.ஆகவே தமிழகம் தன்னுடைய மௌனமொழியில் ஆணாதிக்க சிந்தனைகளை அழுத்தமாக வைத்திருப்பதற்கு, இங்குள்ள பெண்களும் பெரும் அளவு ஒத்தழைக்கிரார்கள். இங்குள்ள பெண்களிடம் ஆணாதிக்க சிந்தனைகள் அதிகமாக ஊறிப்போய் இருக்கின்றன. அதனால்தான் பெண்களால் விரும்பப்படும் எம்ஜியாரால்,"பொம்பளை சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சுன்னு" பாட முடிந்தது. தமிழகத்தில் இருக்கும் பெண்ணடிமை என்பது குவிந்து கிடக்கும் நிலவுடமை உறவுகளின் வெளிப்பாடாக இருக்கிறது. ஒவ்வொரு மண்ணிலும் நிலவும் நில உறவுகளை ஒட்டி, ஆணாதிக்கம் தனது முகத்தை காட்டும்போலத்தெரிகிறது. . . .