Wednesday, April 21, 2010

அமைச்சரவை மாற்றத்தில் சிதம்பரமும் கவிழ்வாரா?

தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்காலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாலும் ஆர்வத்தோடு அமைச்சராக் கப்பட்ட, சசிதரூர் தானாகவே சிக்கிக் கொண்ட ஒரு ஐ.பி.எல். சூதாட்டத்தில் மாட்டி, ராஜினாமா செய்யும் நிலைமை உரு வாகிவிட்டது. இதைப்போலவே, சில, பல ஐ.மு.கூ. அமைச்சர்கள் மாறுத லுக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற பேச்சு டெல்லியில் எதிரொலித்துக் கொண்டி ருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் நிதித்துறையை கையில் வைத்திருப்பதில் பெருமையும், பலன்களும் பெற்ற ப.சிதம் பரம், திடீரென நிதித்துறை ஐ.மு.கூ.வின் இரண்டாவது கட்ட ஆட்சியில், பிரணாப் முகர்ஜி கைகளுக்கு சென்றதில் மனம் உடைந்ததாக கூறினார்கள். அதையொட்டி உள்துறை அவருக்கு கொடுக்கப்பட்டதில் முழுமையான ஈடுபாட்டை காட்டவில்லை என்பது போல ஊடகங்கள் சித்தரித்தன. இப்போது மாவோயிஸ்ட் பிரச்சனை தீவிரமான விவாதத்திற்கு வந்திருக்கும் சூழலில், உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் தீவிரமான வழிகாட்டலை, சிதம்பரம் கொடுக்கிறார் என்பதற்காக, உள்ளேயும், வெளியேயும் முரண்பட்ட காரணங்கள் காட்டப்பட்டு, அவர் பல வீனப்பட்டிருப்பதாக ஒரு சித்திரம் வரை யப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின், காந்தியவாதிகளின்,சர்வோதயா இயக்க ஆர்வலர்களின், வினோபாஜியின் வழி வந்தவர்களின், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளின், நேரு வழி சோஸலிச ஆதரவாளர்களின், ஜெயபிரகாஷ் நாராயணனின் வழிச் சென்றவர்களின் மற்றும் ஆங்கிலே யர்களால் பயங்கரவாதிகள் என்று முத்தி ரைக் குத்தப்பட்டு இருந்த நாட்டுப் பற்றாளர்களின், பழைய பாணியிலான ஓய்வு பெற்ற கம்யூனிஸ்ட்களாக தெபாகா, தெலுங்கானா காலத்தவர்களின், பிள்ளைகளும், பேரன்களும் இன்று சிதம் பரத்தின் அணுகுமுறையை, மாவோயிஸ்ட் பிரச்சனையில் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே என்றால், ஒன்றுபட்ட மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திக்விஜய் சிங், ஒரு ஆங்கில அச்சு ஊடகத்தில், இந்த பிரச்சனையை அந்த வட்டாரத்தில் வாழ்ந்து வரும் மக்களுடைய நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் அலட்சி யப்படுத்தி விட்டு கையாள முடியாது என்று கூறியிருக்கிறார். ஒரு நாகரிகமான சமுதாயத்தின், பிரபலமான ஜனநாயக நாட்டில், மக்கள் தான் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் திக்விஜய் கூறியிருக்கிறார். அதேபோல திக்விஜய் சிங்கின் கூற்றை ஒரு லட்சம் விழுக்காடு ஆதரிப்பதாக கூறியுள்ள, மணிசங்கர் ஐயர், ஒரு முறை சிதம்பரம் பற்றி கடுமையாகவே பேசினார். 1986ம் ஆண்டிலிருந்து 89ம் ஆண்டு வரை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாநிலங்களவை அமைச்சராக இருந்த சிதம்பரம், அதற்கு பொருத்தமில்லாதவர் என்று ராஜிவ் காந்தி கொலையையொட்டி, அவர் சாட்சி கூண்டிலே ஏறி நாலு அமர்வுகளில் பேசியதிலிருந்தே தெரிய வந்தது என்று மணிசங்கர் ஐயர் கூறி னார். 1995ம் ஆண்டு மே 24ம் நாள், ராஜிவ் காந்தி கொலையையொட்டி நடந்த புலனாய்வுக்கு பொறுப்பெடுத்த அவர் 1996ம் ஆண்டு ஏப்ரல் மாத முட்டாள்கள் தினத்தன்று, தமிழ் மாநில காங்கிரசுக்கு மாறிச் சென்றது வரை, அந்த புலனாய்வில் அக்கறையற்றுச் செயல்பட்டதைக் காணமுடிந்தது என்றும் அந்த முன்னாள் மத்திய பெட்ரோலியம் அமைச்சர் கூறியுள்ளார். இப்போது திக்விஜங் சிங்கினுடைய சிதம்பரம் மீதான குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்காக, திக்விஜய் 100 விழுக்காடு மட்டுமல்ல 1000 விழுக்காடு மட்டுமல்ல, 1,00,000 விழுக்காடு சரியாகச் சொன்னார் என்று கூறியுள்ளார். அதாவது மாநிலங்களின் தோல்வி என்று மாவோயிஸ்ட் வளர்ச்சியைப் பற்றி வருணிக்கின்ற சிதம்பரத்தை, வறுத்தெடுப்பது போல மணிசங்கர் ஐயர் குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசிலிருந்து மாநிலங்களுக்கு கட்டாயப்படுத்தி பெசா என்று அழைக்கப்படுகின்ற, பட்டியல் இடப்பட்ட இடங்களின் விரிவாக்கத்தை உள்ளடக்கிய, பஞ்சாயத்து சட்டத்தின் சாராம்சத்தை எழுத்திலும், உணர்விலும் அமுல்படுத்த சொல்லி வலியுறுத்த தவறிவிட்டார் என்கிறார் அவர். அதுதான் வனப்பகுதிகளில் இருக்கின்ற சூழ்நிலையை, அரசுக்கு எதிராக தூண்டி விடுவதற்கான ஒரே காரணமாக அமைந்து விட்டது என்பது அவரது வாதம். அதனால் தான் இந்தியாவின் இதயப்பகுதியில், அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி, புற்றீசலென புறப்பட்டு விட்டது என்கிறார் அவர். சிதம்பரம் பற்றி, திக்விஜய் சிங் அறிவுஜீவித் திமிர் கொண்டவர் என்பதாக எழுதியிருந்தார். அதேபோல சுற்றுச்சூழல் மற்றும் வனஇலாகாவின் அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷûம், திக் விஜய் சிங் கருத்தை ஆதரித்து விட்டார். ஆனால் சிதம்பரம் மட்டும் மாவோயிஸ்ட்டுகளை முழுமையாக துடைத்தெரியும் என்ப தாகவும், அழிப்போம் என்றும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அதை தனது கட்டளையின் கீழ் உள்ள துணை ராணுவம், மற்றும் காவல்துறை மற்றும் இந்திய அரசின் விசுவாச ஊடகங்கள் மூலமாக எடுத்துச் சொல்லி வருகிறார். இறுதி ஆய்வில் இது சட்ட ஒழுங்கு பிரச் சினை அல்ல. அதையும் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்திய நாட்டு கிராமங்களில் சட்டம் மீறிய செயல்பாடு என்பது சாதாரணமாக நடந்து வரும் நிர்வாக முறைதான். ஒவ்வொருவராக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பேசி வருகிறார்கள். அருந்ததிராய்களும், ஹிமன்சுகுமார்களும் மட்டுமின்றி, நிதியரசர்கள் பி.பி.சவந்த், சுரேஷ், பேராசிரியர் யஸ்பால், டாக்டர்கள் கிரி, பார்கவா, சுப்பிரமணியம் போன்ற இந்திய மக்கள் தீர்பாயத்தின் தொடர்பிலுள்ள பல்வேறு அறிவுஜிவிகளும் ஒவ்வொருவராக, சிதம்பரத்தின் அணுகுமுறையினை எதிர்த்து பேச தொடங்கி விட்டார்கள். பிரபல ஊடகங்கள் டெஹல்கா, அவுட் லுக், மெயின்ஸ்ட்ரீம் மற்றும் கொல்கத்தா தொலைக்காட்சிகள் பேசத் தொடங்கி விட்டனர்.தண்டகாருண்யா பகுதியில் உள்ள மலைகளும் நதிகளும் நடக்கின்ற அடக்கு முறைகள் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லி வருகின்றன. தண்டேவாடாவில் கொல்லப்பட்ட துணை ராணுவ வீரர் களின் குடும்பங்களுக்கு, தாங்களும் ஆறுதல் தொகை அளிப்போம் என்று மாவோயிஸ்ட்டுகள் அறிவிக்கும் அள வுக்கு, அவர்களது செல்வாக்கு அங்கே நிறைந்திருக்கிறது.வெளி உலகத்தில் தனிமைப் படுத்தப்படும் சிதம்பரத்தின் கருத்துக்கள், காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கிறது என்றால், அதற்கு பின்னால் கட்சித் தலைமையின் முக்கிய பிரமுகர்கள் இருப்பதாக சொல் லப்படுகிறது. சிதம்பரத்திற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்த மூத்த காங்கிரஸ் பிரமுகர்கள், காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் வேண்டியவர்கள். இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தொடர்ந்து அந்த வட்டாரத்தின் கனிம வளங்களை, பழங்குடியினரை விரட்டி விட்டு பன் னாட்டு முலதன நிறுவனங்களிடம் ஒப்படைக்க அமைச்சர் அவசரப்படுவது ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள்.2004ம் ஆண்டு வேதாந்தா ரிசோர் சஸ் என்ற ஸ்டெரிலைட் ஆலையின் பன்னாட்டு முலதன வணிகக் குழுமம், தனது ஆண்டறிக்கையில், அதன் தலை வர் பிரியான் கில்பெர்ட்சன் கூற்றை பதிவு செய்துள்ளது. அதில் இந்திய அரசாங் கத்தில் நிதியமைச்சராக நியமனம் கிடைத்த காரணத்தினால், தங்கள் தலைமைக் குழுவில் இருந்து 2004ம் ஆண்டு மே 22ம் நாள் ப.சிதம்பரம் ராஜினாமா செய்தார் என்று எழுதப்பட்டுள்ளது. அவரது பங்களிப்பிற்கு நன்றியும் கூறப் பட்டுள்ளது. இந்தியாவின் தொடர்ந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று தாங்கள் நம்புவதாகவும் எழுதப்பட்டுள்ளது. இதுவே, வேதாந்தா குழுவில் அங்கம் வகிப்பவராகவே சிதம்பரம் பணியாற்றி வருவதை பறை சாற்றுகிறது. இப்போது இத்தகைய பெரும் பொறுப்பில் உள்ள தனி நபரின் நலனுக்காக, நாட்டு நலன் மற்றும் மக்கள் நலன் பின் தள்ளப்படுவது அம்பலமாகி உள்ளது.இதன் விளைவாக அடுத்த மாதம் மத்திய அமைச்சரவையில் வர இருப் பதாக கூறப்படும் மாற்றத்தில் பாதிக் கப்படுவரா சிதம்பரம் என்பதே இப் போது விவாதிக்கப்படும் செய்தியாக இருக்கிறது.