Saturday, April 17, 2010

விளையாட்டுப் போட்டி விபரீதமாகுமா?

விளையாட்டுப் போட்டி என்றாலே இன்றைய காலத்தில் அது வியாபாரப் போட்டி என்பதாக மாறிவருகிறது. கல்வி எப்படி இந்த நாட்டில் வியாபாரமாகி விட்டதோ, அதே போல விளையாட்டும் வியாபாரமாகி வருகிறது. மட்டைப்பந்து விளையாட்டில் முன்பெல்லாம் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் இரண்டு இன் னிங்ஸ் என்பதாக போட்டி நடக்கும். அல்லது ஒரு நாள் போட்டி என்ற பெயரில் ரஞ்சி ட்ராபிகள் நடக்கும். இப்போது ஐ.பி.எல். என்று ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் முழுமையாக வியாபாரமாக ஆக்கியிருக்கிறார்கள். இந்த ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தையும், ஒவ்வொரு நிறுவனம் ஒப்பந்தம் போட்டு விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு தூதர் என்பதாக பிரபல திரைத் துறை கலைஞர்களை நியமித்துக் கொள் கிறார்கள். அந்தப் பாணியில் கொச்சியில் நடத்தயிருக்கும் ஐ.பி.எல். போட்டி இப் போது சிக்கலாகி விட்டது. சிக்கல் மத்திய அமைச்சரின் அதி காரத் தலையீட்டின் மூலம் அரசிய லாக்கப் பட்டுள்ளது. ஒரு அமைச்சர் தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் பெரும் பான்மை பங்கு கொண்ட ஒரு நிறுவனத் திற்கு, கொச்சி யில் நடக்கயிருக்கும் ஐ.பி.எல். போட்டியை விற்றதற்காக, செல்வாக்கு செலுத் தினார் என்று சிக்கல் எழுந்துள்ளது. மாட்டிக் கொண்ட அமைச்சர் வெளி விவகாரத் துறையின் இணை அமைச்சரான சசிதரூர். பிரச்சினையை கிளப்பி இருப்பது ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக உள்ள லலித் மோடி. ஊடகங்கள் மூலம் நடந்த இந்த மோதல் தலைமை அமைச்சர் வரை சென்றது. ஆதாரம் கிடைத்தால் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவும் தயார் என தலைமை அமைச்சர் கூறினார்.சசிதரூரோ அன்னை சோனியாவை போய் அணுகினார். விளைவு லலித் மோடியின் ஐ.பி.எல். அலுவலகம் வரு மான வரித்துறை யினரால் சோதனை யிடப்பட்டது. இந்திய ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் யாருக்கும் வருமான வரித்துறை அதிகாரி களின் சோதனையிடல் நடக்கும் என்பது இங்குள்ள நடைமுறை வரலாறு. ஆனால் நேற்று நாடாளுமன்ற அவைகளில் இந்த பிரச்சினையே பெரிதாக கிளப்பப் பட்டது. சசிதரூர் அறிக்கை தரக்கூடாது என்றும் பிரதமர்தான் இதுபற்றி பேச வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வாதாடி, அவையை தள்ளப் போடவைத்தார்கள். அடிப்படையில் ஒரு விளையாட்டுப் போட்டி, வியாபார மானதால் கிளம்பி யுள்ள விபரீதமே இது. இன்று ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளும், முன்கூட்டியே முடிவு களைத் திட்டமிட்டு நடத்தப்படும் போட்டிகளாக ஆக்கப்பட்டுள்ளன. அதில்தான் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் புரள்கின்றன. விளை யாட்டு வீரர்களும் கோடிகளில் நீச்சலி டுகிறார்கள். இந்த நேரத்தில் டெல்லியில் காமன்வெல்த் கேம்ஸ் என்ற பெரியதொரு விளையாட்டுப் போட்டி நடக்கயிருக்கிறது. காமன்வெல்த் நாடுகள் பங்கு கொள்ளும் போட்டி இது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்வது உண்டு. அதுபோல பிரபலமானது இந்த காமன்வெல்த் போட்டி. போட்டிக்கான தயாரிப்பிற்காக டெல்லி மாநிலம் அல்லோல கல்லோலப் படுகிறது. டெல்லி மாநகரையே ஒளிமிக்க பெருநகரமாகக் காட்ட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். டெல்லி மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் அனுபவமிக்க ஷீலா தீட்சித், வர இருக்கும் காமன்வெல்த் போட்டி மாநகரில் எத்தகைய பிரச்சினைகளை உருவாக்குமோ என்ற அச்சத்திலும் இருப்பதாக அவ்வப்போது அறிவிக்கிறார். டெல்லியை மெருகேற்ற பெருமளவு நிதி செலவழிக்கப்படுகிறது. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடு கள், அதற்கு உதவி செய்யும் உள்கட்டு மானங்கள், வெளிநாட்டவர்களுக்கு தங்கும் வசதி கள், பொழுது போக்குகள், உணவு விடுதிகள், மற்ற பலவகை ஏற்பாடுகள் ஆகியவற்றை தயார் செய்ய கட்டுமானங் களை உருவாக்கி வருகிறார்கள். அதில் ஒவ்வொரு வகையான வேலைகளையும் செய்ய, வெவ்வேறு தொழிலாளர்களைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள். பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் டெல்லிக்கு இடம் பெயர்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்து வரும் தொழி லாளர் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டும் என்று அரசு கணக்குப் போட்டுள்ளது. அழகுபடுத்தும் பணிகளைச் செய் வதற்காக ஒரு லட்சம் குடும்பங்கள் இடம் பெயர்ந்து டெல்லி வந்துள்ளன. பூங்காக் களை அமைக்கவும் அவர்கள் பயன் படுகிறார் கள். தொழிலாளர் விதிகளை மீறி, குழந்தைத் தொழிலாளர்களாக உள்ள 14 வயது முதல் 16 வயது வரை உள்ள 2000 சிறுவர்கள் பல விளையாட்டு போட்டி இடங்களில் வேலை செய்கிறார்கள். கட்டுமானப் பணிகளில் இதுவரை மரணம் மட்டுமே 70 வது பேருக்கு நடந்திருக்கிறது. தொழிலாளர்களது வாழும் இடங்களில் சுகாதாரக்கேட்டினால் நோய்கள் பரவி வருகின்றன. இப்போது வயது வந்த 50,000 பிச்சைக்காரர்கள் மற்றும் 60,000 குழந்தைப் பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விளை யாட்டுப் போட்டி நடக்கும் இடங் களை விட்டு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். நகருக்கு வெளியே கொண்டு போய் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். செலவழிக்கப்படும் நிதியைப் பார்த்து டெல்லி மக்கள் கொந்தளிக்கிறார்கள். டெல்லி அரசாங்கத்தால் விளையாட்டுப் போட்டிக்காக வே புதிய வரிகள் மக்கள் மீது போடப்பட்டுள் ளன. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டுமான வசதிகள் இதையொட்டி டெல்லி மக்களுக்கு கிடைக்கும் அதே சமயம் இந்த வளர்ச்சிக்காக செலவழிக்கப்படும் மனித சக்தியும், ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்கமும், கவனிக்கப்படவில்லை. அக் டோபர் மாதத்திற் குள் இந்த ஏற்பாடுகளை எல்லாம் முடித்தாக வேண்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிகள் நடந்து முடிந்த பிறகு டெல்லியில் 30 லட்சம் பேர் வீடற்றவர்களாக, தெருவில் நிற்பார்கள். தங்கள் வேலை முடிந்த பிறகு இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், 15 லட்சம் பேர் டெல்லிவாசியாக முழித்துக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடிசைகளையும், குடியிருப்புகளையும், நகரை அழகுபடுத்து வதற்காகவோ, பூங்கா கட்டுவதற்காகவோ, புல்டவுசர் களிடம் இழந்த நிலையில் ஒரு லட்சம் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்று வீடுகள் கொடுக்க அரசு உதவவில்லை. சாலையோரத்திலோ, நகருக்கு வெளியேயோ தற்காலிக குடியிருப்புகளை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினையின் ஆழம் தெரியாது என்று நாம் கூறமுடியுமா? டெல்லி முதல்வரின் வார்த்தையில் சொல்லப்போனால், விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, 30 லட்சம் வீடற்றவர் கள் இருப்பார்கள் என்கிறார். அவர்களுக்கு வீடு கொடுப்பது முதல் கடமையாக இருக் கும் என்றும் சொல்கிறார். விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு என்று சொல்வதன் மூலம், பிரச்சினையை தள்ளிப் போடுவது என்ற பொறுப்பற்ற செயல்தான் தெரிகிறது. விளையாட்டுப் போட்டிக்கு வருகின்ற வெளிநாட்டவருக்கு டெல்லியிலும், அதை யொட்டி இந்தியாவிலும் ஏழைகளே இல்லை என்பதாகக் காட்ட வேண்டும் என அரசு விரும்புகிறது. பீகார் போன்ற அண்டை மாநில அரசாங்கங்களிடம், டெல்லி அரசாங்கம் பிச்சைக்காரர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும்படி கேட்டு வருகிறது. யாருமே ஒத்துழைக்கவில்லை. மணி சங்கரய்யர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கும் போது, ஒரு கூட் டத்தில் தனது உள்ளாட்சித் துறைக்கு ஒரு பகுதி நிதியை ஒதுக்க சொன்ன நேரத்தில், மறுக்கப்பட்டார். அதே நேரம் அதே கூட்டத்தில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக ரூ.700 கோடி கேட்கப்பட்ட போது, மத்திய அமைச்சரவை உடனடியாக அந்தத் தொகையை ஒதுக்கியது. இந்திய மக்களின் உள்ளாட்சிக்கு கேட்கப்பட்டது, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக கேட்கப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகவும் குறைவான அளவுதான். விளை யாட்டுப் போட்டிக்கு ஆர்வமாகத் தொகை ஒதுக்கும் மத்திய அரசு, விவசா யத்துறையின் தேவை வரும்போது, உற்சாகமாக செயல்படவில்லை என்று ஓய்வு பெற்ற அதிகாரி ராகவன் கூறுகிறார். அதனால் நமது ஆட்சியாளர்களுக்கு, விவசாயத்தை விட விளையாட்டுப் போட்டியே முக்கியமானது. இந்திய மக்கள் பெரும்பான்மையானோர் வறுமை எல்லைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். விவசாயம் மழையின்மை யால் பொய்த்து விட்டது. இத்தகைய சூழலில், வெளிநாட்டவரை குளிர்விக்க விளையாட்டுப் போட்டிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசை நாம் என்ன சொல் வது? இதற்குப் பெயர்தான் ரோம் நகர் பற்றி எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்ற பழமொழிக்கு உண்மை அர்த்தமா?