Tuesday, March 30, 2010

அல்கொய்தா தேனீக்கூட்டை கலைக்கிறாரா ஒபாமா?

நேற்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 மனித வெடிகுண்டுகள் வெடித்தன. இரண்டும் பெண் மனிதவெடிகுண்டுகள். முதல் பெண் போராளி தன்னை வெடித்துக் கொண்டு 45 நிமிடங்கள் கழித்து, அடுத்த பெண் போராளி இன்னொரு மெட்ரோ நிலையத்தில் தன்னை வெடித்துக் கொண்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இது
செசன்யா தனிநாடு பிரிவினைக் கோரும் போராளிகளால் நிகழ்த்தப்பட்டது என்று முதலில் சந்தேகம் கொண்டார்கள். அதற்குள் செசன்யா விடுதலைப் போராளிகள், நடந்த சம்பவத்திற்கு உரிமைக் கோரி விட்டார்கள். தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு, அதன் மூலம் தங்கள் நாட்டின் விடுதலைக்கு போராடும் இந்தப் போராளிகள், யாருடைய ஆதரவில், யாருடைய உதவியில் போராடுகிறார்கள் என்ற கேள்வி மேலை நாட்டு வட்டாரங்களில் கேட்கப்படுகிறது. 2004ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த தற்கொலை பயங்கரவாதம் என்ற நிகழ்வு ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வருகிறது. கடந்த காலங்களில் செசன்யா விடுதலை போராளிகளுக்கு, அல்கொய்தா பயிற்சிக் கொடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆப்கான் தாலிபன் போராளிகளும் செசன்யா விடுதலை இயக்கத்திற்கு உதவியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், ஆப்கானிலுள்ள தாலிபன்கள் வேறு என்றும், அமெரிக்கா பிரித்து விளக்குகிறது. அதில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தாலிபன்களை, அல்கொய்தாவுடன் கூட்டுச் சேர்ந்துச் செயல்படுவதாக அவர் கள் அறிவிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கான்
சென்றுள்ளார். தாலிபன்களுடைய எந்த வகையிலும் ராணுவ ரீதியாக செயல்பட விடமாட்டோம் என்பது ஒபாமாவின் சூளுரை. அல்கொய்தாவை தோற்கடித்தே காட்டுவோம் என்பது அவரது வைராக்கியம். பாகிஸ்தான் அரசினுடைய உதவியுடன், பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஆப்கான் நாட்டிற்குள் தாக்குதலை தொடர்ந்து எடுத்துச் செல் வது அவரது வியூகம். தான் அதிபராக இருக்கும் போதே 2012ம் ஆண்டுக்குள் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் தோற்கடித்து விட வேண்டும் என்ற நோக்கில் அவரது ஆப்கான் வருகை அமைந்துள்ளது.
ஆப்கான் நாட்டில் இருக்கின்ற அமெரிக்க ராணுவத்தையும், நேட்டோ படைகளையும் உற்சாகப்படுத்தி தங்களது இலக்கை அடைய ஒபாமா துடிக்கிறார். அதற்காக ஆப்கானிலுள்ள பக்ரம் பகுதியில் நிற்கும் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார். அதேபோல அமெரிக்காவால் தேர்தல் குளறுபடிகள் மூலம், ஆப்கானில் பொம்மையாக நிறுவப் பட்டுள்ள அதிபர் ஹமித் ஹார்சாயை காபூலில் சந்தித்திருக்கிறார். ஆப்கான் பிரச் சனையில் குழம்பிய நீரில் மீன் பிடிக்க இந்திய அரசுக்கும் ஆசைதான். ஆனால் வலியச்சென்று ஆதரவுக் கொடுக்கும் இந்திய அரசை அமெரிக்கா அதே மட்டத் தில் அங்கீகரிக்கத் தயாராயில்லை. தாலிபன்களில் வென்றெடுக்கப்பட முடிந்தவர்களுக்கு, நிதியுதவி செய்ய பல லட்சம் கோடி அமெரிக்க பணத்தை இறக்கி விட தயாராயிருக்கும் அமெரிக்க அரசு, அதற்கான சட்ட முன்வடிவையும் அமெரிக்க செனட் டில் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் கைநிறைய பணம் கொடுத்து, அவர்கள் உதவியுடன் தாலிபன்களை துரத்துவதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு அல்லது பிளவுப்படுத்தி வெல்வதற்கு தனது முழு முயற்சியை, அமெரிக்கா செலவழிக்கிறது. அதனால் இந்தியாவின் அண்டை நாடான ஆப் கானில் தனது போர் தந்திரங்களை செயல்படுத்த, இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானை மட்டுமே அமெரிக்கா சார்ந்திருக்க விரும்புகிறது.
அமெரிக்க அரசுக்கு அல்கொய்தாவின் இருத்தலேக் கூட, அச்சுறுத்தலை ஏற்படுத் துகிறது. அதனால் தான் ஆப்கானிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பேசிய ஒபாமா 9/11 தாக்குதலை அவர்களுக்கு நினை வுப்படுத்தினார். அதை செய்தவர் கள் என்று அல்கொய்தாவை அடையாளப் படுத்தினார். அல்கொய்தாவுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக ஆப்கான் மலைகளும், காடுகளும் இருப்பதை சுட்டிக் காட்டினார். அத்தகைய பாதுகாப்பான இடம் ஒன்றை அல்கொய்தாவிற்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். அமெரிக்காவை பாதுகாப்பாக வைத்திருக் கத் தான், அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் இறங்கியிருக்கிறார்கள் என்பதாக அந்த வீரர்களுக்கே எடுத்துச் சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த ஆப்கான் பற்றிய மாநாட்டில், அமெரிக்கா ஆப்கானில் பலவீனப்பட்டுக் கொண் டிருப்பதாக வெளிப்பட்ட கருத்துக்கள் கெடுவாய்ப்பானவை என்று தனது ராணுவ வீரர்களுக்கு விளக்கினார். அமெரிக்காவும், நேட்டோ படைகளும் கூடுதலாக 30,000 ராணுவ வீரர்களை, ஆப்கானுக்குள் இறக்கி விட முடிவு செய்திருப்பதும், தங்கள் பணியை முடித்து விட்டு தங்கள் ராணுவங்கள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த பணிமுடிப்பு செயலுக்காகத் தான், இப்போது தாக்குதலை துரிதப்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆப்கான் அதிபர் கார்சாய்யுடன் புதிய புரிதலின்மை ஏற்பட்டுள்ளதை நீக்க ஒருபுறம் ஒபாமா முயன்றிருக்கிறார். தங்கள் நாட்டு பாதுகாப்பையும், ஆப்கா னிஸ்தான்பாகிஸ்தான் பிராந்திய பாது காப்பையும் இணைத்து பார்க்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோள். அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பே, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பு சக்திகள் நடமாட்டத்தை இல்லாமல் செய்வதில் இருக்கிறது என்ற வேகத்துடன் அவரது செயல்பாடு பளிச்சிடுகிறது. தாங்கள் அல்கொய்தா மற்றும் தாலிபன் தலைமைக்கெதிராக கடும் தாக்குதல்களை நடத்துவதாகவும், அதில் அவர்கள் தலைமை நிலை குலைந்திருப்பதாகவும் ஒபாமா கூறியுள்ளார். அவர்களது நடமாட்டமும், பயிற்சி எடுத்தலும்,
சதி செய்தலும், தாக்குதலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்குகிறார். ஆனால் நடைமுறையில் இதே புரிதலை அல்கொய்தாவினர் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அனைத்து நாட்டு விதிகளின் படி, தங்கள் சுய பாதுகாப்புக்காக, தாக்கு தல் நடத்த தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பது அமெரிக்காவின் வாதம்.
அதேசமயம் பாகிஸ்தான் அரசோ, அமெரிக்க தூதரக ஆதரவுடன், ஆப்கானில் இந்தியாவின் நடமாட்டத்தையே இல்லா மல் செய்வதற்கு உள்ள முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒபாமாவின் ஆப்கான் பயணத்தின் மூலம், லஷ்கர் இ தொய்பாவையும் எதிர்த்து இயங்க வேண்டிய அவசியத்தை அவர் உணர் வாரா என்பதை மட்டும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் ஆண்டுபலவாக ஆப்கான் மலைகளிலும், காடுகளிலும் இருந்து ஆதிவாசிகளுடன் இரண்டறக் கலந்து, ஆப்கான் ஆதிவாசிகள் மத்தியில் இருந்தே எழுகின்ற தாலிபனுக்கு உயிர் கொடுத்து, வளர்த்திருக்கின்ற அதன் மூலம் தானும் வளர்ந்திருக்கின்ற அல் கொய்தாவை, அமெரிக்கா முன்வைத்திருக் கும் போர்த் தந்திரங்களால் அழிக்க முடியுமா? அல்கொய்தாவை தாக்கும் போது, அந்த போராளிகள் சிதறி பல் வேறு இடங்களிலும், மாறிச் சென்று விரி வடைந்து விடமாட்டார்களா?
செசன்யா விடுதலை போராளிகளுக்கு அல்கொய்தாவின் தொடர்ந்த ஆயுதப் பயிற்சி, வெடிகுண்டு பயிற்சி ஆகியவை ஏற்கனவே 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலை யத்தில் நடந்த குண்டுவெடிப்பின் மூலம் அம்பலமானது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடந்த தற்கொலைப்படை தாக்குதல், நவம்பர் மாதம் நடந்த ரயில் தாக்குதல் ஆகியவை அதை மறுஉறுதி செய்தன. சென்ற ஆண்டு சீனாவில் நடந்த உய்கூர் எழுச்சியிலும், அல்கொய்தாவின் கரங்கள் வெளியே தெரிந்தன. உஸ்பெக்கின் ஆயுத எழுச்சிக்குப் பின்னாலும் அல்கொய்தா இருக்கிறது. மத்திய ஆசிய குடியரசுகளில் அவை பிரபலமாக இருக்கின்றன. வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அல்கொய்தாவால் பயிற்சிக் கொடுக்கப்பட்டு, உஸ்பெக்ஸ், செசன்யா, உய்கூர் ஆகிய போராளிக் குழுக்களை ஊக்குவித்து ரஷ்யா, சீனா, உஸ்பெகிஸ்தான், கசக்ஸ்தான், தஜிகிஸ் தான் ஆகிய வட்டாரங்களில் இன்று சிதறியும், விரிந்தும், நீண்டும் இருக்கின்ற எதிரொலிகள் இவர்களால் நிறுத்தப்பட முடியுமா? தேனீகூட்டை தாக்கி அது சிதறி, பல இடங்களில் பரவுவதற்கு தான், ஒபாமாவின் தந்திரம் பயன்படுமா என்ற கேள்வி எழுகிறது.