Thursday, March 25, 2010

கனுசன்யால் மரணம் எழுப்பும் விவாதம்

நேற்று 82 வயதைக் கடந்த கனுசன்யால் இறுதி அஞ்சலி மேற்குவங் கத்தில் நடந்தது. அதில் ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டார்கள். அவர்களில் கூர்காலாந்து தனி மாநிலத்திற்காக போராடக் கூடியவர்களும் இருந்தார்கள். விவசாயப் பெண்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதபடியே, கனுசன்யாலை எடுத்துச் சென்ற வாகனத்துடன் ஓடிவந்தார்கள். இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆழமான பதிவை ஏற்படுத்தியுள்ள அந்த முதியவரின் வரலாறு பல படிப்பினைகளை பதியவைக்கிறது.
43 ஆண்டுகளுக்கு முன்னால் 1967ம் ஆண்டு மார்ச் 25ம் நாள், மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஆயுதக்கல வரத்தில் இறங்கிய விவசாயிகளுக் கும், காவல்துறைக்கும் மோதல் நடந்தது. அந்த விவசாயிகளின் ஆயுதப் பேரெழுச்சியைத் தயார் செய்து, அதற்காக 8 ஆவணங்களை வழிகாட்டும் கருத்தி யலாக வெளியிட்டு தலைமை தாங்கியவர் சா ருமஜும்தார். அவருடன் அந்த வட்டாரத்தில் விவசாயிகள் மத்தியில் முன்னோ டியாக செயல்பட்ட களப்பணியாளர்கள் 2பேர். அந்த 2 தலைவர் களில் ஒருவர் ஜங்கல் சந்தல். இன்னொருவர் கனுசன்யால். மேற்கண்ட ஆயுத எழுச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணியுடன், வங்காள காங்கிரஸ் நடத்திய ஆட்சிக் காலத்தில் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தார். நக்சல்பாரி விவசாய எழுச்சியை, சாரு மஜும்தார் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளே இருந்து கொண்டே திட்டமிட்டார். டார்ஜிலிங் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சி, சாருமஜும்தாரின் செல்வாக்கின் கீழ் அன்று இருந்தது. அதனால் புரட்சிகரப் பாதையை தேர்வு செய்த, புரட்சியாளர்கள் சி.பி.எம்.கட்சிக்குள் இருந்து கொண்டே தங்களது தலைமையில் கீழ் உள்ள விவசாய சங்கத்தினரையும், மாணவர் சங்கத்தினரையும் ஈடுபடுத்தி, அத்தகைய ஆயுத எழுச்சியை நடைமுறைப்படுத்த முடிந்தது. ஜோதிபாசுவின் ஏற்பாட்டில், மத்திய அரசின் ஒத்துழைப்பில் கிழக்கு பிராந்திய துப்பாக்கிப்படை என்ற துணை ராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கி, புரட்சியாளர்களின் கரங்களுக்குள் சென் றுவிட்ட நக்சல்பாரி மற்றும் அண்டைக் கிராமங்களை துப்பாக்கி முனையில் சி.பி.எம். கூட்டணி மீட்டெடுத்தது. அதையொட்டி மூன்று தலைவர் களான சாருமஜும்தார், ஜங்கல் சந்தல், கனுசன் யால் ஆகியோர் பல தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்கள். அதன்பிறகு ஜங்கல் சந்தல் விடுதலையான பிற்பாடு, தனது களப்பணிகளில் பின்வாங்கினார். 1981ல் ஜங்கல் சந்தல் மறைந்தார். ஆனால் விடுதலைக்குப் பிறகு, சாருமஜும்தார் தலைமையில் கனு சன்யால், புரட்சிகர இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்.
1968ம் ஆண்டு சாரு மஜும்தார் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கி ணைப்புக் குழுவில், கனு சன்யாலும் இணைந்துச் செயல்பட்டார். கருத்தியல் வழிகாட்டலுக்கும், புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைமைத்துவத்திற்கும்
சாருமஜும்தார் தலைமைக் கொடுத்ததால், அவரது தலைமை டார்ஜிலிங் மாவட்டத்திலிருந்து, மேற்கு வங்கத்திற்கும், மேற்கு வங்கத்திலிருந்து இந்தியா முழுமைக்குமாக விரிவடைந்து வளர்ந்தது. அதேசமயம் கனுசன்யால் சிலிகுரி பகுதியில் விவசா யிகள் மத்தியில் ஆழமான பிடிப்புக் கொண்ட முன்னோடித் தலைவராக எழுந்து வந்ததால், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் கூர்க்கா இன மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவராக தொடர்ந்து விளங்கினார். 1968ம் ஆண்டு தொடங்கிய அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு, இந்தியா முழுமைக்கும் ஒரு போராட்ட வேலைத் திட்டத்தை முன்வைத்தது. அதில் அடுத்த அறுவடை நமக்கு என்ற முழக்கம் உயர்த் திப் பிடிக்கப்பட்டது. இத்தகைய விவசாயிகள் சார்ந்த, நிலமற்ற விவசாயிகளின் நிலத் தாகத்தை நிறைவு செய்வதற் கான போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக, பண்ணையார்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலங்களில் பசுமையை உருவாக்குவதற்கு, உழைப்பையும், வியர்வையையும் சிந்திய நிலமற்ற விவசாயிகளின் போர் முழக்கமாக அது மாறியது. இவ்வாறு விவசாயிகளின் அடுத்தக் கட்ட போராட்டத்தை உணர்ந்து ஈடுபடுத்துவதில் கனுசன்யாலுக்கும் நல்லதொரு பங்கு இருந்தது. பீகார் மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும் அடுத்த அறுவடை நமக்கே என்ற முழக்கத்துடன் திரண்ட நிலமற்ற, ஏழை விவசா யிகள் ஆயிரக்கணக்கில் ஆயுதங்களுடன் அணி திரண்டனர். அப்படி அணிதிரண்டவர்கள் தங்களுக்கு தடையாக இருப்பவர்களாக அந்த வட்டாரத்தின் ஆதிக்கத்தை வைத்திருக்கும் பண்ணை யார்களைக் கருதினார்கள். அதனால் முதலில் அந்த வட்டாரங்களில் திரண்ட விவசாயப் போராளிகள், ஆதிக்கம் செலுத்தும் பண்ணையார்களை அழித்து விட்டு, பிறகு அவர்களது விளை நிலங்களுக்குள் இறங்கி அறுவடையை கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட அறுவடையை நிலமற்ற, ஏழை விவசாயிகள் மத்தியில் பிரித்துக் கொடுத்தனர். இவ்வாறு கிராமப்புறங்களில், புரட்சியாளர்கள் தலைமை யிலான கிராமப்புற மக்கள் அதிகாரம் என்பதைப் படைப்பதற் கான, போ ராட்டம் தொடங்கியது.
மேற்கண்ட புரட்சிகர போராட்டங்கள் மாசேதுங்கின் தத்துவ வழிகாட்டலில் எடுத்துச் செல்லப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் அதற்கு முழுமையாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீ கரிக்காமல், மேற்கண்ட புரட்சியாளர்களை அங்கீகரித்தது. அதனால் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகியோர் திரிவுவாதிகள் என முத்திரைக் குத்தப் பட்டனர். மார்க்சியத்தை திரித்து தேர்தல் பாதைக்கு சென்று விட்டவர்கள் என்று அவர்களை குற்றம் சாட்டினார்கள்.
1969ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் மேற் கூறிய புரட்சியாளர்கள், புதியதொரு கம் யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி னார்கள். லெனினது பிறந்த நாளான அந்த நாளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்று அதற்கு பெயரிட்டார்கள். சாருமஜும்தார் அந்த புதிய கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கனுசன்யால் அந்த கட்சியில் இறங்கி களப் பணியில் ஈடுபட்டார். புதிய கட்சியின் துவக்கத்தை உலகிற்கு அறிவிப்பதற் காக, 1969ம் ஆண்டு மே தினத்தன்று, கொல்கத்தா நகரில் ஒரு மாபெரும் சிவப்புப் பேரணியை, நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்ட அந்த புரட்சியாளர்கள் நடத்தினார்கள். புதிய கட்சி தன்னை தலைமறைவு கட்சியாக அறிவித்துக் கொள்ள திட்டமிட்டிருந் ததால், கட்சியின் பொதுச் செயலாளர் சாரு மஜும்தார் தலைமறை வானார். அத்தகைய சூழலில் கட்சியை பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தில் கல்கத் தாவில் அறிவிப்பதற்கு பொருத்தமானவராக கனுசன்யால் தேர்வு செய்யப்பட்டார்.
சி.பி.ஐ. (எம்எல்) கல்கத்தாவில் அந்த மாபெரும் பேரணியில், கனுசன்யாலால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரில்லாப் போராட்டத்தை, அதிலும் குறிப்பாக வர்க்க எதிரி களை அழித்தொழிக்கும் போராட்டத்தை தொடக்கப் புள்ளியாக அந்த கட்சி ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியது. காலப்போக்கில் கட்சிக்குள் வளர்ந்த பிளவுகளில், சாருமஜும்தாரின் கொரில்லாப் போராட் டப் பாதையை ஏற்றுக் கொள்ளாத கனுசன்யால் தனியாக வெளியே வந்து தனிக்கட்சியாக செயல் படத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பல்வேறு நக்சல்பாரி குழுக்களை கனுசன்யால் ஒன்றுதிரட்டி செயல்படுத்த முயன்றார். அதில் 1972ம் ஆண்டு சாருமஜும்தார் மேற்குவங்க சிறையில், அடக்குமுறையின் கீழ் மரணமடைந்த பிற்பாடு, இயக்கத்தில் ஏற்பட்ட தொய்வினால் பல குழுக்கள் வெளியேறினர். அதுபோல தான் 1977க்குப் பின் வெளியேறிய கனு
சன்யால் குழுவினரும் கருதப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட் ணசியின் இடது கூட்டணியுடன் 90களில், சன்யால் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டார். அதி லும் மனம் வெதும்பி வெளியேறினார். 2003ல் தானே தலைமை தாங்கிய ஒரு எம்.எல். கட்சியை அறிவித்துக் கொண்டார்.
இப்போது கனு
சன்யாலின் மறைவுக்கு சி.பி.ஐ.யும், சி.பி.எம்.மும் அஞ்சலி செலுத்தியு ணள்ளன. அவரை ஒரு மகத்தான கம்யூனிஸ்ட் தலை வராக அறிவித் துள்ளனர். அவரது மரணம் உடல்நிலை மோசமடைந் ததால், தானே உருவாக்கிக் கொண்ட ஒன்று என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் கூர்காலாந்தின் தனி மாநில கோரிக்கைப் போ ராட்டத்தில், கனுசன்யால் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இன்றைக்கு இந்தியாவில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வரும் மாவோயிஸ்ட் இயக்கம் பல வலுவான முன்னேற்றத்தை காட்டியிருப்பது கூட, கனுசன்யாலால் செரிக்க முடியாத ஒரு செய்தியாக இருக்கக்கூடும். தனது மரணம் வரை அந்த மனிதன் மக்களுக்காகச் சிந்தித்தார். தான் உயிர் வாழும் வரை சன்னியால் போராட்டப் பாதைகளைத் தேடினார். அவரது வாழ்க்கை வருங்கால இளைஞர்களுக்கு, விடுதலைக்கான பாதையைத் தேடவும், அதற்காக தன்னுயிரை அற்பணிக்கவும் தயாராயிருப்பதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அறிவுறுத்துகிறது.