Tuesday, March 23, 2010

கொய்ராலா மறைவால் யாருக்கு இழப்பு?

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா மரணம் அடைந்தார். இரண்டு நாட்களாக அந்த இழப்பு எப்படிப்பட்ட சமாதான பேச்சு வார்த்தைகளை பலவீனப்படுத்தும் என்பது பற்றி ஊடகங்களும், அரசியல் அவதானிகளும் அலசிவருகிறார்கள். நேபாள காங்கிரஸ் தலைவர் ஜி.பி.கொய் ராலா தனது மகளது இல்லத்தில் மார்ச் 20ம் நாள் சனிக்கிழமை நண்பகல் தாண்டி மரணமடைந்தார். அவர் தனது கடைசி மூச்சுவரை நேபாள அரசியலில் தொடர்பு வைத்திருந்தார். அவரை கவனித்து வந்த மருத்துவர் அர்ஜுன் கார்க்கியிடம், நாட்டு நலனுக்காக ஒற்றுமை யுடன் செயல்படுங்கள் என்றும், எல்லா பிரிவினரையும் இணைத்துக் கொண்டு முன்செல்லுங்கள் என்றும் கூறினாராம். அந்த செய்தி நேபாள நாடு முழுவதும் பரவி வருகிறது. நேபாள அரசியலை ஒரு காலத்தில் இவரது அண்ணனான பீ.பி.கொய்ராலா
செல்வாக்கு செலுத்தினார். அவரது நிழலில் ஜி.பி.கொய்ராலா வளர்ந்தார். அண்ணன் மற்றவர்களை வளர விடாமல், அரசியலை ஆக்கிரமித்தார் என்று பெயர் பெற்றார். தம்பியோ 1990ல் இயக்கத்திற்குப் பிறகு தானாகவே மேலே உயர்ந்த ஒரு அரசியல்வாதி. நடைமுறையில் அனைவரையும் அணைத்துச் செல்ல முற்பட்டவர். தொடர்ந்து வந்த நோபாள ஆட்சிகளில், மாவோயிஸ்ட் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2004ம் ஆண்டு ஜி.பி.கொய்ராலா, மாவோயிஸ்ட் புரட்சியை அடக்க முடியாமல் ராஜினாமா செய்தார். ஜி.பி.கொய்ராலாவின் கனவு என்பது நேபாள நாட்டில் சமாதானத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்டுவது என்பதாக அறியப்பட்டது. நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு மத்தியில் நேபாள காங்கிரஸ் ஒரு ஒன்றுப்பட்ட அடை யாளத்தை காட்டுமாஎன்ற கேள்வி தான் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. கொய்ராலாவின் மரணம் நேபாள காங் கிரசுக்கு, பிரபலமான தலைமை ஒன்று இல்லாமல் செய்து விட்டது.
நேபாள காங்கிரசுக்கு சரியான தலைமை இல்லாமல் இருப்பது, நேபாளத்தை விட இந்திய அரசை அதிகமான வருத்தத்தில் தள்ளியிருக்கிறது. நேபாள காங்கிர சுக்கு இளம் தலைவர்களை வளர்த்து விடுவ தற்கு ஜி.பி.கொய்ராலாவும் தடையாக இருந்திருக்கிறார் என்ற செய்தி இப்போது தெரிகிறது. அதிகமான அளவில் இளைய தலைமுறை தலைவர்கள் அந்த கட்சிக்கு இருந்தா லும் கூட, அவர்களால் கட்சியின் அரசியலை மற்றும் நேபாள நாட்டை வழிகாட்டிச் செல்ல முடியுமா என்ற கேள் வியை அனைவரும் கேட்கிறார்கள்.
தலைவர்களில், அனைவரையும் அணைத்து போவதற்கு முதிர்ச்சியுள்ள ஒருவர் என்பதாகவும் கூட நம்பப்பட் டது. அவரது மறைவினால் மாவோயிஸ்ட் களுக்கும், நேபாள காங்கிரசுக்கும் இடை யேயுள்ள சமாதானப் பேச்சுவார்த்தை பலவீனப்படும் என்பதாக அரசியல் ஆரூடம் கூறுகிறார்கள். கொய்ராலாவின் மறைவினால் நேபாள காங்கிரசுக்கு இருக்கின்ற அறுதியிடலை விட, ஒன்று பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஜே.என்.கனல் உடன், மாவோயிஸ்ட்கள் இணைந்து ஒரு புதிய அறுதியிடலை ஏற்படுத்தி விடுவார் கள் என்று கூறுவோரும் உண்டு. அதே சமயம் மாவோயிஸ்ட்களுடன் சமரசமாக செல்வதற்கு கொய்ராலாவிற்கு இருந்த முதிர்ச்சி வேறு நேபாள காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் சமாதான வழியில் அதிகாரத்தில் பங்கு கொள் வதற்கு மாவோயிஸ்ட்களுக்கு வாய்ப் புக்கள் குறையும் என்றும் சிலர் மதிப்பிடு கிறார்கள்.
அதேசமயம் இந்திய அரசு தனது செல்வாக்கை நேபாள அரசியலில் என்றைக்குமே குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. நேபாளத்தில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, நேபாளம் ஒரு இந்து நாடு என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மன்னர் ஆட்சியுடன் அப்போது இந்திய அரசு நெருக்கமான தொடர்பை வைத்திருந்தது. மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயக பாதையை நேபாளத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது இந்திய அரசு மன்னர் ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்தது. முடியாட்சியை மாற்றி, குடியாட்சியைக் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சியில், புதிய அரசியல் நிர்ணய சபை ஒன்றை அதற்காக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவைப் பெற்றது. அத்தகைய கோரிக்கையை முன்வைத்து சமரசமற்றுப் போராடக் கூடிய ஒரே அமைப்பாக நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மட்டுமே இருந்தது. அதனால் பொது மக்களுடைய ஆதரவும் முடியாட்சிக்கு எதிராக, மாவோயிஸ்ட்களுக்கே போய்ச் சேர்ந் தது. மாவோயிஸ்ட்கள் தங்களுடைய பாதையாக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்திருந்தார்கள். அதற்காக கொரிலாப் படைகளைக் கட்டி போரா டினார்கள். கிராமப்புறங்களை விடுதலை செய்து தங்கள் தலைமையில் மக்கள் அதிகாரங்களை அங்கே நிறுவினார்கள். தங்களது கொரிலாப் படைக் குழுக்களை எல்லாம் இணைத்து, மக்கள் விடுதலைப் படை ஒன்றை உருவாக்கினார்கள். அதன் பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், தேர்தல் மூலம் மாவோயிஸ்ட்கள் பெரு வாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். இது இந்திய அரசை கடுமையாக யோசிக்க வைத்தது. ஒருபுறத்தில் மாவோயிஸ்ட்களுடன் பேசவும் செய்தது. இன்னொரு புறம் சி.பி.எம். தலைவர் சீத்தாராம் யெச்சுரியை அனுப்பி, மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இந்திய அரசு துணையாக இருந்தது. மீண்டும் முழு நேபாளமும் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கிற்குள் சென்றுவிடக் கூடாது என்பதில், இந்திய அரசு கவனமாக இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளைக் காணும்போது, இந்தப் போட்டி விளங்கிக் கொள்ள முடியும். 2006ம் ஆண்டு ஜுன் 16ம் நாள் ஒரு ஏழு கட்சி கூட்டணியை இணைத்துக் கொண்டு, நேபாளம் மாவோயிஸ்ட் கட்சி 12 கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது. அதையொட்டி மூன்று மாதங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு ஜனவரி 14ல் 330 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 83 மாவோயிஸ்ட்கள் வெற்றி பெற்று உள்ளே நுழைந்து, ஒரு இடைக்கால சட் டத்தை அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்று, ஆட்சியில் அமர்ந்தார்கள். 2007ம் ஆண்டு மார்ச் 21ல் மாதேசி மக்க ளின் உரிமை மன்றத்திற்கும், மாதேசி ராஷ்டிரிய விடுதலை முன்னணிக்கும் மோதல் நடந்தது. இதில் முதல் அமைப்பு இந்திய அரசின் ஆதரவு என்றும், இரண்டாவது மாவோயிஸ்ட் ஆதரவு என்றும் கூறப்பட்டது. மாதேசி மக்கள் இந்தியா விலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்பது அதன் அடிப்படைப் பிரச் சனை. 2007ம் ஆண்டு ஏப்ரல் 1ல் புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்தது. அதில் 5 மாவோயிஸ்ட் அமைச்சர் கள் மற்றும் ஒரு துணை அமைச்சர் இருந் தார்கள். 2007ம் செப்டம்பர் 18ல் தங்களது கோரிக்கையான விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்ற தேர்தல் முறை யையும், அரசியல் சாசன தேர்தலுக்கு முன்பே, குடியரசாக அறிவிக்க வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்படாததால், மாவோயிஸ்ட் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். 2007ம் ஆண்டு டிசம்பர் 31ல் விகிதாச்சார பிரதிநித்துவம் முறை ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டதும், முடியாட்சி ஒழிக்கப்பட்டதும், மீண்டும் ஐந்து மாவோயிஸ்ட்களை அமைச் சர் பொறுப்பெடுக்க ஒத்துழைத்தது. 2008ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் அரசியல்
சாசன தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி 30% வாக்குகள் பெற்று 575 தொகுதி களில், 220ல் வெற்றி பெற்றது. மொத்த உறுப்பினர்களான 601ல் மாவோ யிஸ்ட்களுக்கு கூடுதலாக கிடைத்த 9 நியமனங்களைச் சேர்த்து 229 மாவோ யிஸ்ட்கள் இடம் பெற்றனர்.
இதற்கிடையே சுதந்திரமான தெராய் மாநிலத்தை கோருகின்ற இயக்கமும் தொடங்கியது. 2009ம் ஆண்டு ஒன்றுபட்ட மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து, ஒரு பிரிவு தெராய் பகுதிக்கான கட்சியாக வெளிவந்தது. இன்றுவரை இந்திய அரசுக்கும், நேபாள அரசியலுக்கும் உடன்படாத பகுதிகள் தீர்க்கப்படாவிட்டாலும், நேபாள அரசியலுக்குள் ஒரு ஒன்றுபட்ட முயற்சி என்ற கொய்ராலாவின் கனவு நிறைவு பெறாமலேயே நிற்கிறது. இது வெளிநாட்டுச் சுட்டிகளுக்கு அதிகமாக பலன் தரக்கூடியதா என்ற கேள்வியும் நேபாள மக்களிடம் எழுந்துள்ளது. நேபாள மாவோஸ்ட்கள் எடுத்து வைக்கின்ற புதிய சமாதான செயல்தந்திரங்கள் மட்டுமே, அவர்களது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.