Monday, March 22, 2010

விரும்பவும், வெறுக்கவும் அரசுகள் கட்டளையிடுவதா?

இரண்டு நாட்கள் முன்பு சென்னையில் அணு ஆயுத எதிர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. அதில் பாகிஸ்தானில் நெருக்கடியான காலத்தில் 4 ஆண்டுகள் பிரபல ஆங்கில நாளேட்டிற்காக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் நிரூபமா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு செய்திகளை பரிமாறிக்கொண்டார். பாகிஸ் தான் அரசு பற்றியும், மக்கள் பற்றியும், அங்கே நிலவும் சூழல் பற்றியும் நமக்கு ஒரு விதமான பார்வையை இந்திய அர
சும், இந்திய ஊடகங்களும் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளன. நேரடியாக சென்னை யைச் சேர்ந்த ஒரு பெண் ஊடகவியலாளர் தனது அனுபவங்களைக் கூறும்போது, இதமாக இருந்தது. இந்தியாபாகிஸ்தான் இடையே உள்ள மக்களுக்கு மத்தியில் அமைதிக்கான ஒரு முயற்சி முடுக்கி விடப்படவேண்டும் என்ற அந்தக் கூட்டத் தின் செய்தி, பல ஆண்டுகளாக இதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை கணக்குப் பார்க்க வைத்தது.
பிரபல ஊடகவியலாளர் குல்தீப் நய்யார் இதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டது, பல்வேறு கேள்விகளை ஏற்கனவே எழுப்பியிருந்தது. 55 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சீயால்காட் என்ற தனது சொந்த ஊரைவிட்டு தான் வெளியேறி வந்ததாக குல்தீப் நய்யார் கூறுகிறார். ஏற்கனவே இந்தியாவில் இப்போது எதிர்கட்சியின் முக்கியமான தலைவராக இருப்பவரும், ஒரு முறை உள்துறை அமைச்சராக இருந்தவருமான எல்.கே.அத்வானி, இன்றைய பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு கலவர நேரத்தில் வந்தவர் தான். பலபத்தாண்டுகளாக இரண்டு நாடு களுக்குமான நல்லுறவுக்காக பாடுபாட்டு வரும் ஒரு ஊடகவியலாளர் குல்தீப் நய்யார். இந்த துணைக் கண்டத்தில் இருநாடுகளிலும் உள்ள மக்களிலிருந்து, மக்களுக்கு என்ற தொடர்பு ஒரு பொது உணர்வை ஏற்படுத்தி வருகிறது. அரசுகள் சண்டையிட்டுக் கொண்டாலும், மக்களுக் கிடையே இருக்கும் பரிமாற்றம் அரசுகளை நிர்ப்பந்தித்து அமைதியை நோக்கிய காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த நேரத்தில் துணைக் கண்டமெங் கும் பிரபலமான திரைத்துறை நடிகராக இருக்கும் அமிதாப் பச்சன் தன்னுடைய வலைப் பதிவில் எழுதி உள்ள செய்தி, பரபரப்பாக பேசப்படுகிறது. அவர்கள் ஊடகமும், நமது ஊடகமும், ஒரு ஊடக முன்முயற்சி மூலம் கைகோர்ப்பதற்கான முயற்சிகளை, எல்லை கடந்து செய்ய வேண்டும் என்றும், தங்களுக்குள் புரிதலைக் கொண்டுவருவதற் கான பாலத்தைக் கட்டுவதற்கு, தேவையான பார்வைகளையும், கருத்துகளையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மேலும் கூறும்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு வெவ்வேறு நாடுகள்; ஆனால் அவற்றி னுடைய பண்பாடும், உணவுகளும், வாழும் பழக்கமும், மொழிகளும் ஒத்து இருக்கும் போது, இரு புறத்திலும் இருப் பவர்களது நம்பிக்கையை உருவாக்கு வதற்கான முயற்சி யை ஊடகங்கள் செய்வது சிறப்பானது என அமிதாப்பச் சன் கூறியிருக்கிறார்.
குல்தீப் நய்யார் 2002ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான்(விடிகாலை) இதழில், மக்கள் மத்தியில் உள்ள தொடர்பு நிறுத்தப்பட்டது பற்றி எழுதுகிறார். எதற்காக இந்தியாவில் நாளேடு களும், புத்தகங்களும் தடை செய்யப் பட்டன? பயணிகள் எல்லையைத் தாண்டி ஏன் அனுமதிக்கப்படவில்லை? ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் ஏன் நிறுத்தப் பட்டன? அதையும் தாண்டி இஸ்லாமாபாத் தில் இந்திய காட்சி ஊடகங்கள் காட்டப் படாமல் ஏன் தடுக்கப்பட்டன? இது போன்ற கேள்விகளை குல்தீப் நய்யார் எழுப்புகிறார்.
32 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ் பாய் வெளிநாட்டு அமைச்சராக இருந்த போது, இந்திய, பாகிஸ்தான் எல்லையை மென்மை யாக்குவது என்று குரல் கொடுத்தார். அப்போது தலைமை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை எதிர்த்தார். ஆனால் வாஜ்பாய் பிரதமராக வந்த பிறகு, ஒரு கட்டத்தில் பேருந்து அனுப்பி, சமாதானம் பேசினார். இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்த பிறகு அனைத்தையும் ரத்து செய்தார். தான் வெளிவுறவுத் துறை அமைச்சராக இருந்த போதுதான் வற் புறுத்தி யதை, பிரதமராக வந்த பிறகு தானே மறுத்தார். ஆனாலும் ஆகஸ்டு மாதம் 1415 தேதிகளில், இரு நாடுகளும் பிறந்த நேரத்தில் 2002ம் ஆண்டில் பாகிஸ்தான் எல்லையில் 45,000 பேரும், இந்திய எல்லையில் 20,000 பேரும் கூடி சமாதான முழக்கமிட்டார்கள். இருபுறமும் இருக்கும் மக்கள் மத்தியில் அன்பும், பாசமும் பொங்கி வழிவது நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டது. பயங்கரவாதி களின் தாக்குதல்களைத் தடுக்க, ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டு மக்களை சந்திப்பதை நிறுத்துவதனால் சாதிக்க முடியுமா?
வெறுப்பதும், பகைமை ஏற்படுத் துவதும் பயங்கரவாதிகளின் குறிக்கோள் தானே? அதையே அரசுகள் செய்தால் அதற்கு என்ன பெயர்? எல்லைகளை மூடுவதால், அடிப்படைவாதிகளின் நோக்கம்தானே நிறைவேறும்? இரு நாடுகளுக்குள்ளும் பகை வளருவது மட்டும்தானே அடிப்படை வாதிகளின் விருப்பம்?
2005ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் புதுடெல்லியிலிருந்து ஒரு சமாதான பேரணி புறப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள முல்டனுக்கு மே 11ம் நாள் சென்றடைய திட்டமிட்டார்கள். சமா தானம் மற்றும் ஜனநாயகத்திற்கான பாகிஸ்தான் இந்தியா மன்றம் இதை ஏற்பாடு செய்தார்கள். 6 வாரங்களில் இந்த சமாதான பேரணி இலக்கை எட்டியது. இந்தியா, பாகிஸ்தான் நட்புறவு கிளப் என்ற பெயரில் ஒரு குழு 150 பேருடன் இது போன்ற இன்னொரு முயற்சியில் ஈடுபட்டது. இந்திய, பாகிஸ்தான் உறவு களில் மாற்றம் கொண்டு வர இவர் களும் செயல்படுகிறார்கள்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் 2006ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் மட்டைப் பந்து ஆட்டத்தின் மூலம் 200 இந்தியர்களையும், பாகிஸ்தானி யர்களையும் ஒன்று சேர்த்தார்கள். தோஸ்தி என்ற அமைப்பு அதைச் செய்தது. இப்போது 4 ஆண்டுகள் பாகிஸ் தானிலேயே இருந்து, முக்கிய அரசியல் நெருக்கடிகளை நேரில் கண்டு, ஊடகத்தில் எழுதிய நிரூபமா, இதே செய்தியை பேசுகிறார். சமாதான முயற்சி மேட்டுக்குடி களுக்கு இருந்தாலோ, ஊடக அளவில் இருந்தாலோ போதாது என்கிறார். அது ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும் என்பது அவரது வாதம்.
பாகிஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்த வழக்கறிஞர் போராட்டத்தில், செய்தி எடுக்கச் சென்ற போது, கிடைத்த அனுபவங்களைக் கூறுகிறார். இந்தி யாவின் சட்டம், இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை பாகிஸ் தான் வழக்கறிஞர்கள், வாதங்களில் மேற்கோள் காட்டுவதாக கூறுகிறார். தங்கள் போராட்டத்திற்கு இந்திய ஆதரவு வேண்டு மென வழக்கறிஞர்கள் கோரியதையும் குறிப்பிட்டார். இந்திய பொருட்களான டைட்டன் வாட்ச், பிரிட்டானியா பிஸ்கட் போன்றவை, இந்திய தயாரிப்பு என்ற முத்திரை இல்லாமல் அங்கே சந்தையில் அதிகம் விற்கப்படுவதை சுட்டிக்காட்டினார். இந்திய அரசு காஷ்மீர் தவிர்த்த, சீயாச்சல் போன்ற சிறு விஷயங்களிலும், விட்டுக் கொடுக்காமல் இருப்பது பாக்.மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.
இஸ்லாமாபாத்தில் எங்கு திரும்பினா லும் பயங்கரவாதிகள் இருப்பது போல ஒரு கருத்து இந்தியாவில் உள்ள மக்கள் இடையே பரப்பப்பட்டுள்ளது என்றார். பலூசிஸ்தானில் இந்திய அரசு ஆயுதம் கொடுத்து கலகத்தை ஊக்கு விப்பதாக பாகிஸ்தானில் பெரும் பாலும் நம்புகிறார்கள் என்றார். அது உண்மை யில்லை என்றால், அது பற்றி பகிரங்கமாகப் பேச இந்திய அரசு தயங்குவ தேன் என்று கேட்டார். இந்திய அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் மத்தியில் ஒரு விசித்திரமான ஒப்பந்தம் இருக்கிறது என்றும், அதன் மூலம் ஊடகவியலாளர்கள் அங்கும், இங்கும் இரண்டு நகரங்களுக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மை யைப் போட்டு உடைத்தார்.
அரசுகள் இரண்டும் ஒருவரையொருவர் விருப்புக் கொள்ளச் சொல்லி மக்களுக்கு கூறுகிறார்கள். மறுநாளே ஒரு வரையொருவர் வெறுக்கச் சொல்லி அதே மக்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார்கள். இது எத்தகைய வகையைச் சேர்ந்தது என்று நிரூபமா கேள்வி எழுப்பினார். கீறல் விழுந்த இசைத்தட்டு போல, பாகிஸ் தானை வெறுக்கச் சொல்லி பரப்புரை செய்வது, இந்திய மக்களை நச்சுச் சிந்தனைக்கு மட்டுமே இட்டுச் செல்லும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் நீதி. இருநாட்டு மக்கள் இடையேயும், நேரடி உறவுகளை பலப்படுத்தலாம். அதுவே அரசுகளை நிர்ப்பந்திக்கலாம்.