Sunday, March 21, 2010

ஹெட்லியை வைத்து, இந்தியாவை சுற்றிவிடுகிறதா அமெரிக்கா?

அமெரிக்காவில் மும்பைத் தாக்குதல் குற்றவாளி என்பதாக கைது செய்யப் பட்ட வர் டேவிட் ஹெட்லி. மும்பை மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் நடந்தது. அதில் பிடிப்பட்ட அஜ்மல் கசாப் தனது வாக்குமூலத்தில், இந்த டேவிட் கொலிமன் ஹெட்லி தன்னை விசாரணை செய்த அதிகாரிகளில் ஒருவராக வந்ததாகக் கூறினார். அதுவே அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. இந்த ஹெட்லி பிடிபட்டதிலிருந்தே, இந்திய அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே எதிரெதிர் கருத்துக்கள்தான் வெளிப்பட்டன. அதாவது மும்பை மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும், எந்த நாட்டில் பிடிபட்டிருந்தாலும், அவர்களை விசா ரிக்க அல்லது நேரடியாக கொண்டு வந்து விசாரிக்க, இந்திய புலனாய்வுத் துறைக்கு உரிமை உண்டு என்ற பார்வையில் இந்திய அரசின் கருத்துக்கள் வெளிப்பட்டன. ஆனால் ஒவ்வொரு முறையும் அமெரிக்க அரசு அதை மறுத்தே வந்தது.
ஹெட்லி ஒரு பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஆனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர். அவரை விசாரிக்க இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த படி, டெல்லியிலிருந்து அதிகாரிகள் அமெரிக்க சென்றனர். அவரை கைது செய்து இந்தியா கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையுடன் சென்றனர். ஹெட்லியின் கைதையொட்டி 2009ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் பற்றிய வழக்கு வெளிவந்தவு டனே, இத்தகைய முயற்சி மேற்கொள்ளப் பட்டது. கைதி பரிமாற்றம் என்ற ரீதியில் அது நடத்தப்படும் என்று இந்திய அரசு தனது நம்பிக்கையை ஊடகங்களுக்கு தெரிவித்தது. ஆனால் ஹெட்லியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியாது என அமெரிக்க அரசு மறுத்து விட்டது.
ஹெட்லி சிகாகோ நகரில் அமெரிக்கா வில் வாழ்ந்து வந்தார் என்பதும், அவர் பலமுறை இந்தியாவிற்கும், பாகிஸ் தானிற்கும் மும்பைத் தாக்குதலுக்கு முன்னால், பயணம் செய்தார் என்றும் அமெரிக்கா வெளியிட்டது. பாகிஸ் தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் ஹெட்லி தொடர்பு வைத்திருந் ததையும், மும்பை தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் ஹெட்லியும் ஒருவர் என்பதும், சொல்லப் பட்டது. சமீபத்தில் புனேயில் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு என்பதும், அருகே இருக்கும் ஓஷோ ஆசிரமத்திற்கு இரண்டு முறை ஹெட்லி வருகை தந்ததாக நிரூபிக்கப்பட்டதும் இணைத்துப் பார்க்கப் பட்டது. அந்த அளவு க்கு ஹெட்லியின் நடமாட்டம் அதிகமாகவே சலசலப்பை ஏற்படுத்தியது. ஹெட்லி யும் தன்மீது சுமத்தப்பட்ட 12 குற்றங்களை யும், ஜனவரி மாதம் மறுத்து விட்டு, இப்போது ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அமெரிக்கா செய்தி வெளியிடுகிறது. இதே மும்பை தாக்குதல் வழக்கு, மும்பை உயர்நீதிமன்றத் தில் எப்படி நடந்து வருகிறதோ, அதே போல பாகிஸ்தான் நீதிமன்றத்திலும், லஷ்கர் அமைப்பின் மீது விசாரணை நடந்து வருகிறது. இப்போது அமெரிக்க நீதிமன்றத்தி லும் இன்னொரு விசா ரணை நடக்கத் தொடங்கியுள்ளது. இவையெல்லாமே உண்மைக் குற்ற வாளி களை கண்டு பிடிப்பதற்கா? அல்லது வழக்கை குழப்பி விடுவதற்கா? என்ற கேள்வி எழுகிறது.
மும்பைத் தாக்குதலில் 6 அமெரிக்கர் கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக் கர்கள் மீதும், இஸ்ரேலியர்கள் மீதும் அந்தத் தாக்கு தல் குறி வைக்கப் பட்டுள்ளது. ஊடகங் கள் மூலமாக, இந்திய நாட்டை மட்டுமின்றி, உலகத் தையே 2 நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு நிமிடமும் உலுக்கிவிட்ட சம்பவமாக அந்தத் தாக்குதல் இருக்கிறது. அப்படியானால் அது பெரிய அளவில், பெரிய இடத்தில் திட்டமிடப்பட்ட ஒரு
சதி என்பது புரிய முடிகிறது. அந்தப் பெரிய இடம் எது என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கிறது. எதற்காக அமெரிக்கா இதன் விசாரணையில் இந்த அளவுக்கு தலையிடவேண்டும்? இந்திய அதிகாரிகளின் விசாரணைக்கு ஏன் இத்தனை தடங்கல்களை ஏற்படுத்தவேண்டும்?
சமீபத்தில் ஹெட்லியின் ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்கா ஊடகங் களுக்கு கூறியது. உடனடியாக இந்திய அதிகாரிகள் அங்கே போய் விசாரிப்பார்கள் என இந்திய உள்துறை அறிவித்தது. அதற்கும் கூட இப்போது அனுமதியில்லை என்பது போல அமெரிக்கா மறுத்து விட்டது. ஏன் இந்த அளவுக்கு இந்தியாவை, அமெரிக்கா அரசு குழப்பவேண்டும்? மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு, அமெரிக்காவை ஜார்ஜ் புஷ் ஆளும் போதும், ஆதரித்துத்தானே செயல்பட்டது? புஷ் உடன் இந்திய அரசு, இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்யும் எந்த ஒரு கப்பலையும் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சோதிக்கலாம் என்றும், பேரழிவு ஆயுதங்கள் கடத்தப்படுகின்றதா என்று ஆய்வு செய்யலாம் என்றும் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதே? அப்படி இருந்தும் இந்திய அரசுக்கு, அமெரிக்க அரசு ஒத்துழைக்க தடங்கல் செய்வது ஏன்?
இந்திய நாடே எதிர்த்தாலும், அமெரிக்க அரசுடன், அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை இந்திய அரசு கையெழுத்திட்டதே? ஆனாலும் அமெரிக்க அரசு முழுமையாக இந்திய அரசின் தேவைகளுக்கு ஒத்துழைக்க தயங்குவது ஏன்? கோபன்ஹெகனில் நடந்த புவி வெப்பமடைதல் பற்றிய மாநாட்டில், மாறுபாடுகள் இருந்தாலும் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா நீட்டிய தாளிலே கையெழுத்துப் போடவில்லையா? அப்படி இருந்தும் அமெரிக்க அரசின் முழு ஒத்துழைப்பு இந்தியாவிற்கு இந்த வழக்கில் ஏன் கிடைக்கவில்லை?
2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் முன்னாள் ராணுவ உளவு அதிகாரிகள் பக்கத்திலிருந்து வெளியான தகவல்களில் சில செய்திகள் கிடைத்தன. அமெரிக்க ஊடகங்களின் செய்திப்படி 2009ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள், அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க நாட்டின் உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.பி.ஐ. கொடுத்த அறிக்கையில், ஹெட்லி மீது கிரிமினல் செய்தி அறிக்கை என்பதாகத் தான் குற்றம் சாட்டியுள் ளார்கள். அதாவது ஹெட்லியுடன் ஏற்கனவே பேசி முடித்தபடி சில குற்றங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பரஸ்பரம் முடிவு செய்ததையொட்டி, பிற குற்றச்
சாட்டுகளை அழுத்தம் கொடுக்காமல் உருவாக்கப்பட்ட அறிக்கை தான் அது என்பதாக இந்தியாவின் முன்னாள் அதிகாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதுவே ஹெட்லியை அவரது பாகிஸ்தான் தொடர்பு களுடன்
சேர்ந்து ஆப்கானிஸ்தான் பாகிஸ் தான் பகுதியில் செய்த குற்றங்களை விசாரிக்க விடாமல் செய்து விடும். அதனால் இந்திய அதிகாரிகள் ஹெட்லியை கைது செய்து கொண்டு செல்வதற்கோ, சுதந் திரமாக விசாரணை செய்வதற்கோ அனுமதிக்க அமெரிக்க அரசு தயாராக இல்லை. வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளும், எஃப்.பி.ஐ.யின் அதிகாரிகளும் நெருக்கமான கண் காணிப்பை ஹெட்லி மீது வைத்திருக் கிறார்கள். அதிபர் ஒபாமாவும் ஒருபுறம் பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் கூட்டு வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட பயங்கரவாத செயலில் ஈடுபட்டவரை விசாரிக்கும் போது, அதை நேரடிப் பார்வையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஹெட்லி, ஒரு அமெரிக்க புலனாய்வுத்துறையின் ஒற்றன் என்ற செய்தி அம்பலமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான், இந்த திரைமறைவு வேலைகள் என்று முன்னாள் இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அவர்களுடைய தொகுப்பில் இந்த ஹெட்லி 4 அமைப்புகளில் பணியாற்றிய வன் என்கிறார்கள். இதை முன்னாள் அதிகாரி ராமன் எழுதியுள்ளார். அதாவது அமெரிக்கா வின் போதைத் தடுப்பு நிர்வாகத்தில் பணியாற்றினான். எஃப்.பி.ஐ.யில் செயல் பட்டான். அமெரிக்க வெளிவிவகார புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ.வில் இருந்தான். இதுதவிர பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பாவில் தொடர்பில் இருந்தான். இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாதியை, வாக்குமூலம் கொடுத்த காரணத்திற்காக, அமெரிககா தண்டனைக் குறைப்பு கொடுக்கப் போகிறது. இதுவே இந்திய உள்துறைக்கு பெரும் அதிர்ச்சித் தாக்குதல். இப்போது மும்பை தாக்குதலை நடத்தியதில் அமெரிக்காவின் பங்கும் தெரிந்து விட்டது. இப்படி ஒரு தாக்குதலை நடத்தி, இந்தியாவை பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளிவிட்டு, அதன் மூலம் அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்களை வரிசையாக கையெழுத்திட வைக்கிறார்களா? என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. இல்லையென்று மறுப்பதற்கு நம்மிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?