Friday, March 19, 2010

ஆதிவாசி நிலங்களை, வளைத்துப் போடும் வணிகக் குழுமங்கள்

சத்திஸ்கர் மாநிலம் என்றாலே மாவோ யிஸ்டுகளுக்கும், மத்திய அரசு துணை ராணுவப்படையினருக்கும் இடையி லான மோதல் பகுதி என்பதாக ஒரு புரிதல் இருக்கிறது. அந்த மாநிலத்தின் காவல்துறை சல்வாஜுடும் என்ற கூலிப் படையை உருவாக்கி, அதன் மூலம் மாவோயிஸ்டுகள் நடமாடும் பகுதிகளில், அவர்களுக்கு ஆதரவாக சென்று விட்ட அல்லது செல்லக் கூடிய ஆதிவாசிகளை மிரட்டுவதற்கும், அடிப்பதற்கும், கொல்லு வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்ற செய்திகள் பல நமக்கு வந்துள்ளன. காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து வருகின்ற ஆதிவாசி மக்களுடைய வாழ் வாதாரங்களாக இருக்கக் கூடிய நிலத்தையும், நிலத்தடி கனிமப் பொருட்களையும் களவாடுவதற்காக, பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் உள்ளே நுழைவதால் ஏற்படுகின்ற மோதல்களில் தான், அரசுப் படைகள் ஈடுபடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதாகவும் பல செய்திகளைக் கேள்விப்பட்டோம். அந்தப் பகுதிகளில் ஆதிவாசி மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட மாவோ யிஸ்ட்டுகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதாகவும் அரசுத் தரப்பிலிருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. அதுபோல அனைத்து மலைவாழ் மக்களின் பகுதிகளிலும், மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்களா? மாவோயிஸ்ட் வன்முறை நடக்கின்றதா? இப்படிப்பட்ட கேள்விகளும் இப்போது எழுந்துள்ளன.
மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டமோ அல்லது மாவோயிஸ்ட் வன்முறைகளோ சிறிதும் இல்லாத பகுதிகளிலும், ஆதிவாசி களுக்கு பாரம்பரியமாக சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் என்று அழைக்கப் படும் வணிகக் குழுமங்கள், வளைத்துப் போட்டு வருகின்றன என்பதாக செய்தி கள் இப்போது வரத்தொடங்கி யுள்ளன. அவ்வாறு ஆதிவாசி பகுதிகளில் அவர் களது பாரம்பரிய நிலங்களை, வணிகக் குழுமங்கள் ஆக்கிரமிக்கின்றன என்று தெரிகிறது. பணம் அதிகமுள்ள வணிகக்குழுமங்கள், ஏழ்மையிலிருக்கும் ஆதிவாசிகளது நிலங்களை அதிகப்பணம் கொடுத்து வாங்குவது எப்படித் தவறு என்றும் கேட்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் வேறு ஒரு சட்டவிரோத நடைமுறை அமுலாகி வருகிறது என்பதுதான் முக்கியப் பிரச்சினை. அதாவது இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு ஒரு தீர்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலங்களை, எந்த ஒரு ஆதிவாசி அல்லாதவர்களுக்கும் சுரங்க ஒப்பந்தம் என்ற பெயரில் கூட, மாற்றிக் கொடுப்பது என்பது தடைசெய் யப்படுகிறது என்பதாக தெளிவாக உத்தர விடப்பட்டது. இந்த வழக்கை சமதா என்ற ஒரு அரசு சாரா நிறுவனம், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் மீதும், மற்றவர்கள் மீதும் தொடுத்திருந்தது. இது 1997ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு. ஆல் இந்தியா ரிப்போர்ட்டர் என்ற உச்சநீதிமன்ற வழக்குகளைப் பற்றி வெளியிடும் 1997ம் ஆண்டின் அறிக்கையில், 3297ம் பக்கத்தில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் சுரங்கத் தொழிலுக்கு ஒப்பந்தத்திற்கு விடப்படும் ஆதிவாசிகளுடைய பகுதி நிலத்தில் வருகின்ற லாபத்தில் 20 விழுக்காடு ஆதிவாசிகள் சமூகத்தின் உறுப்பினர்களுக்காக என்று ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான நிலையை உறுதிப்படுத்துவ தற்காக, மத்திய அரசு ஆதிவாசிகள் பகுதிகளில்
சுரங்கத் தொழில் செய்வதற்கான, கொள்கைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட தீர்ப்பு ஆந்திரப்பிரதேசத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் ஏற்புடையது. ஏனென்றால் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைந்துள் ளது. அரசியல் சட்டத்தின் 5வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி , பாரம்பரியமிக்க ஆதிவாசிகளுக்கு, அவர் களது உடைமைகளுக்கும், அவர்களை சுரண்டவும், மிரட்டல் வருவதை எதிர்த்து சிறப்பு பாதுகாப்பு கொடுப்பதற்காக, ஆதிவாசிகளது நிலங்களின் பாரம்பரிய உரிமைகளை பட்டியல் போட்டு உத்தரவாதம் செய்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கோ, தொழிற்
சாலைகளுக்கோ ஆதிவாசி பகுதி நிலங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றால், அங்குள்ள கிராமக் கவுன்சில்களை அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்ற சட்டமும் 1996ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டியே 1997ல் உச்சநீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சல்வாஜூடும் என்ற கூலிப்படை மூலம் பலாத்காரமாக காலி செய்யப்பட்ட 644 ஆதிவாசிகள் வாழும் கிராமங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு பிரச்சினை இப்போது வந்துள்ளது. அது டாடா ஸ்டீல் கம்பெனி ஒரு ஆலை உருவாக்குவதற்காக அறிவித்த திட்டம் சம்பந்தப்பட்டது. டாடாக்கள் அவ்வாறு அறிவித்த பிற்பாடும், 5 ஆண்டுகளாக அந்த வட்டார ஆதிவாசி ஆண்களும், பெண்களும் தங்களது பாரம்பரிய நிலத்தில் உழுது வருகிறார்கள். 5,000 ஏக்கர் நிலம் டாடாவிற்கு தேவைப்படுகிறது என அறிவிக்கப் பட்டுள்ளது. வடக்கு பஸ் ஸ்டார் என அழைக்கப்படும் அந்த வட்டாரத்தில் உள்ள ஜக்தால்பூரில் மாவோயிஸ்ட்டுகளோ, சல்வாஜûடுமோ இல்லை. அதே போல தெற்கு பஸ் ஸ்டார் பகுதியிலும் கூட, எஸ்ஸார் நிறுவனம் நில ஆக்கிரமிப்பு செய்ய முயலும் இடத்திலும் மாவோயிஸ்டுகளோ, சல்வாஜூடுமோ இல்லை. இந்த பகுதிகள் சட்டவிரோதமாக ஆதிவாசி நிலங்களைக் கைப்பற்ற முயலும் வணிகக் குழுமங்களுக்கு, கையூட்டு பெறும் அதிகாரிகள் செய்து கொடுக்கின்ற அக்கிரமங்கள்தான். இவை எல்லாமே பலாத்காரமாக விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.
முதலில் நில அளவையர் வந்தார்கள். பிறகு டாடா நிறுவனம் பெரியதொரு ஸ்டீல் ஆலையை நிறுவப் போகிறது என்ற வதந்தியை கிராமங்களில் பரப்பினார்கள். கடைசியாக அரசாங்க அதிகாரிகள் லோகண்டிகுடா பகுதியிலுள்ள கிராமவாசி களிடம், குறிப்பாக கோண்ட் ஆதிவாசிகள் மத்தியிலுள்ள கல்வி கற்காத விவசாயி களிடம் பணம், வேலை மற்றும் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்து, அவர்களது நிலங்களை விட்டு வெளியேறச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள். பணத்தை வைத்துக் கொண்டு தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்றும், தங்கள் குழந்தை களுக்கு உணவூட்ட விவசாயம் செய்ய வேண்டும் எனவும் பதில் கூறிய விவசாயி பங்காராம் கைது செய்யப்பட்டார். 13 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவரது மகன்கள் நிர்ப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டனர். அருகே சிந்தகாவோம் கிராமத்தில் உள்ள சுந்தர்காஷியாப், அரசாங்க மாட்டாஸ் பத்திரியில் ரூ.10,000 சம்பளம் வாங்கி வந்தார். அவரது பெரிய அதிகாரிகள் மிரட்டியதால், தனது தம்பிகளின் நிலத்தை நிர்ப்பந்தமாக விற்கவேண்டி வந்தது. கிராமத்து விவசாயிகள் தங்கள் நிலங்களை டாடாவிற்கு விற்பதற்கு சிறிதளவு கூட தயாராக இல்லை. இந்தியா முழுவதும் நடக்கின்ற நிர்ப்பந்தமான நிலப்பறிப்பு, இங்கும் கூட நடந்து வருகிறது. இந்தியாவின் ஆதிவாசிகள் பகுதிகளில் மட்டும்தான், அவை சட்ட ரீதியாக போராடப்படுகின்றன. இந்த இடத்தில் டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், வேதாந்தா, தேசிய கனிமவள வளர்ச்சி வாரியம் ஆகியவை கனிம வளங்களை களவாடுவதற்காக செய்து வரும், சட்ட விரோத நிலப்பறிப்பு ஆதிவாசி மக்களால் சட்டப்படி எதிர்க்கப்படுகிறது. இதில் வேதாந்தா என்ற நிறுவனம், தூத்துக்குடி நகரை மாசுபடுத்தும் ஸ்டெர் லைட் ஆலையின் தாய் அமைப்பு. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், 8.4 விழுக்காடு ஆதிவாசிகள் என அறிவிக்கப் பட்டுள்ளனர். அரசாங்க உதவிகள் எட்டாத, கல்வி அறிவும் கிட்டாத உள்கிடைக் கிராமங்களில் ஏழ்மையில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பையும், பறிக்கின்ற வேலையை பணக்கார வணிகக் குழுமங்களுக்கு சட்டவிரோதமாக செய்து கொடுக்கும் ஊழல் அதிகாரிகளை என்ன செய்யப்போகிறோம்?