Sunday, March 14, 2010

அணுஉலை ஆபத்துகளையும், நஷ்ட ஈட்டையும் பொதுமக்கள் சுமப்பதா?

சென்ற ஆண்டு 2009ல் நவம்பர் 20ம் நாள் கூடிய மத்திய அமைச்சரவை, விபரீதமான விளைவுகளைப் புரிந்தோ, புரியாமலோ ஒரு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. அந்த முன்வரைவு இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, இந்திய மக்கள் மீது அவர்களுக்கு சம்பந்த மில்லாத, அவர்களது சம்மதமும் இல்லாத, அணுஉலைகளை இந்த நாட்டில் இறக்கிவிடும் போது ஏற்படுகின்ற விபத்துக்கு இழப்பீடு மட்டும் அவர்களால் சுமக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதற்குப் பெயர் 2009ம் ஆண்டின் அணுஉலை விபத்துக்களுக்கான பொறுப்பை பொதுமக்கள் ஏற்கும் சட்ட முன்வரைவு.
மேற்கண்ட சட்ட முன்வரைவு உருவாவதற்கான வரலாறே சிக்கலான ஒன்று. அமெரிக்கஇந்திய அணு
சக்தி ஒப்பந்தம் ஏற்பட்டதையொட்டி, ஆக்க சக்திக்கான அணுஉலைகளை உருவாக்கும் பணியை இந்திய அரசு சிரமேற்றது. அமெரிக்காவுடன் இந்திய அரசு போட்டுக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு மக்கள் மத்தியில் விவாதத்திற்கு விடப்பட்டு, பிறகு எடுத்த முடிவல்ல. இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் பகிரங்கமான விவாதத்திற்கு வைக்கப்பட்டு, பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அல்ல. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவை முன்னால் விவா திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவல்ல. சென்ற ஆட்சியில் அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த ஆதரவுக் கட்சிகளின் ஒட்டுமொத்த வழிகாட்டும் குழுவைக் கூட்டி எடுக்கப் பட்ட கருத்தல்ல. மாறாக இந்தியாவின் தலைமையமைச்சர் மன்மோகன் சிங், தானாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தக் கையெழுத்து. இது எப்படி ஜனநாயக நடைமுறையாகும் என்று வினவலாம். ஆனாலும் அதுதான் இந்தியாவில் நடைமுறையாக இருக்கின்ற ஜனநாயகம். பொதுமக்களுடைய பங்கு இல்லாமல், ஒரு ஒப்பந்தம் போடப்படலாமா? ஒரு
சட்ட முன்வடிவு முன்வைக்கப்படலாமா? இதுபோன்ற கேள்விகளும் எழுந்துள் ளன. அதற்குத் தான் இந்த சட்ட முன் வடிவுக்கே, அப்படியொரு பெயரை வைத்திருக் கிறார்கள் போலும். அணுஉலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டால், அதன் பொறுப்பை பொதுமக்கள் ஏற்கும் சட்ட முன்வடிவு என்பதாக அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது பொறுப்பை பொதுமக்கள் ஏற்பார்கள் என்று கூறிவிட்டோமே என்று கூட ஆட்சியாளர்கள் விளக்கம் சொல்லலாம்.
உள்ளபடியே இந்த சட்ட முன்வடி வின் அவசியம் எங்கிருந்து வந்தது? அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம், இந்தியாவில் மின் உற்பத்தி செய்வதற்காக அதாவது ஆக்கப்பூர்வமான பணி களுக்கான அணுஉலைகளை உரு வாக்குவதற்காக, யுரேனியம் எரி பொருளை உலகச்சந்தையில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்கிறது. அதை யொட்டி அணுசக்தி ஆதரவு குழுக்கள் என்று அழைக்கப்படும் நாடுகளின் உதவி தேவைப்பட்டது. அதை அவகர்களிடம் அண்டிப் பெறுகின்ற வேலையை மத்திய அரசு செய்தது. அடுத்தகட்டமாக அணுஉலைகள் இந்தியாவில் நிறுவப் பட வேண்டும். ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அதற்கான முன்முயற்சிகளில் முன் சென்றிருக் கிறார்கள். அவர்களுடன் போடப் பட்ட ஒப்பந்தங்களில், இந்திய அரசு விபத்துக்கள் ஏற்பட்டால் அதன் பொறுப்பை ஏற்கின்ற அம்சங்களையும் சேர்த்திருக்கிறது. ஆனால் அமெரிக்க நாட்டின் பெரும் நிறுவனங்களான ஜிஈ ஹிட்டாச்சி, வெஸ்டிங் ஹவுஸ் ஆகிய வற்றிற்கு, குஜராத்திலும், ஆந்திராவிலும் 10,000 மெகாவாட் அணுஉலைகளை ஏற்படுத்த 2 இடங்களை, இந்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனாலும் நிறுவப்படும் அணுஉலைகளில் விபத்துக்கள் ஏற்படுமானால், அவற்றிற்கு வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈடை ஏற்கின்ற பொறுப்பு பற்றி எந்தவொரு
சட்ட ரீதியான உத்தரவாதத்தையும் இந்திய அரசு கொடுக்கவில்லை என்பது அந்த பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடைய குற்றச்சாட்டு. ஒரு அணுஉலை விபத்து நடக்குமானால், அதனால் ஏற்படுகின்ற இழப்புகள், காயங்கள், சொத்து
சேதங்கள், பொருளாதார நஷ்டம் மற்றும் சுற்றுச்சூழலை புனரமைக்க ஏற்படும் செலவுகள் ஆகியவற்றிற்கான பொறுப்பை, அந்த அணுஉலையை இயக்கும் நாடே ஏற்க வேண்டும் என்ப தாக அந்த சட்ட முன்வடிவு எழுதப் பட்டுள்ளது. மேலும் விபத்தின் தாக்கத்தை யொட்டி, விபத்து நடந்து 30 நாட்களுக்குள் மத்திய அரசு ஒரு அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். நஷ்ட ஈடு விண்ணப்பங்களை கவனிக்க ஒரு ஆணையரை அரசு நிறுவ வேண்டும். அந்த ஆணையர் ஒரு மாவட்ட நீதியரசர் மட்டத்திலோ, இயக்குனர் தரத்திலோ, அணுசக்தி பொறுப்பு விதிகள் பற்றிய விவரங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு அணுஉலை விபத்தில் ரூ.300 கோடிக்கு மேல் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்று அரசாங்கம் முடிவு செய்தால், ஒரு அணுசக்தி பாதிப்பு விண்ணப்ப ஆணையத்தை நிறுவலாம் என்றும் அந்த சட்ட முன்வடிவில் உள்ளது. அந்த விபத்து வேண்டு மென்று செய்யப்பட்டதாகவோ அல்லது பெரிய கவனக்குறைவினாலோ அல்லது கருவிகளாலோ அல்லது
சேவையாலோ ஏற்பட்டதாக அணுஉலை இயக்குபவர்கள் கருதுவார்களானால், அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். விபத்து நடந்த நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை தான் நஷ்ட ஈடு கேட்டு விண்ணப்பிக்க முடியும்.
ரகசியமாக தயாரிக்கப்பட்டு, மின்னல் வேகத்தில் ஒப்புதல் பெற நாடாளுமன் றத்திற்கு வரவிருக்கும் இந்த சட்ட முன் வடிவில், 2வது அத்தியாத்தின் 6வது பிரிவில், விபத்து ஏற்பட்டால், ரூ.2,208 கோடி வரை என்றும் ரூ.2,385 கோடி வரை என்றும் அதிகபட்ச பொறுப்பேற்கும் தொகையாக இருக்கும் எனவும், இயக்கிய அமைப்பின் சட்டரீதியான பொறுப்பேற்பு ரூ.300 கோடி வரை இருக்கும் எனவும் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மேலும் பொறுப்பேற்க தேவை ஏற்பட்டால் மத்திய அரசு அதை ஏற்க வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. அணுஉலை நிறுவுதலின் ஆபத்தை கணக்கிலெடுத்து, ரூ.100 கோடிக்கு குறையாமல் பொறுப்புத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் 21வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் எதிர்க்கக்கூடியதாக, இந்த மக்கள் பொறுப்பேற்பு என்ற அணுகு முறை கருதப்படுகிறது. இதை இடது சாரி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அனைத்து கட்சிகளும் இந்த சட்ட முன்வடிவை எதிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
1962ம் ஆண்டின் அணுசக்திச்
சட்டம், அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் லிமிடெட் மட்டுமே, இந்த நாட்டில் அணுஉலைகளை இயக்கலாம் என்று கூறுகிறது. 2008ம் ஆண்டு செப்டம் பரில் அணுசக்தி விநியோகக் குழுவான நாடுகள், அனைத்து நாட்டு அணுசக்தி வர்த்தகத்தில் இந்தியாவை அனுமதித்தப் பிற்பாடு, மத்திய அரசாங்கம் 2030ல் 60 ஆயிரம் மெகாவாட் அணுசக்தியை உருவாக்குவதற்கான இலக்கை பெரும் பேராசையுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கு அந்நியநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அணு உலைகளை அமைக்க மத்திய அரசு அழைப்புக் கொடுக்கிறது. அவர்கள் கேட்டதற்காக இந்திய மக்களின் வரிச்சுமையில் கூடுதலாக பொறுப்பேற்கக்கூடிய ஒரு சட்டத்தை உருவாக்கி, அந்நியநாட்டு நிறுவனங்கள் அகமகிழ்ந்து உள்நுழைய ஏற்பாடு செய்ய முயல்கிறது. அதற்காகவே இத்தகைய சட்ட முன்வடிவை மத்திய அமைச்சரவை, சத்தமில்லாமல் அனுமதித்துள்ளது. இந்திய மண்ணில், அமெரிக்க நிறுவனங்கள் ஏற்படுத்தும் விபத்துகளுக்கு, நஷ்ட ஈட்டை இந்திய மக்கள் மீதே சுமத்துகின்ற ஆபத்தான அணுகுமுறையை இந்த சட்ட முன்வடிவு கொண்டுவருகிறது. இதன் மூலம் அந்நிய நிறுவனம் ரூ.500 கோடி தான் பொறுப்பேற்கும். மீதித்தொகையை இந்திய மக்கள் மீது சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை, அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அனைத்து பொதுமக்களும் எழுப்ப வேண்டும்.