Thursday, March 4, 2010

ஆன்மீகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பின் வெற்றி!

அய்யா வழி என்று அழைக்கப்படும் ஆன்மீகப் பாதை ஒரு வராலற்றை உருவாக்கியுள்ளது. 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருவிதாங்கூர் மகாராஜா, ஆங்கிலேயர்களுடைய உதவிகளுடன் ஆட்சி புரிந்து வந்தார். கிழக்கிந்திய கம்பெனி அவருக்கு முழுமையாக உதவிகளைச் செய்தது. திருவிதாங்கூரில் தங்கியிருந்த ஆங்கி லேய ராணுவத்தை பராமரிக்க, கிழக் கிந்திய கம்பெனிக்கு திருவிதாங்கூர் மகாராஜா பெருந்தொகையைக் கொடுத்து வந்தார். அதற்கு ஈடாக அந்த மன்னர் மக்களின் மீது, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களாக இருக்கின்ற மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்து வந்தார். சாதி இந்துக்களின் கைப்பாவையாக அப்போது மன்னர் இருந்தார். அதனால் ஆதிக்க சாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகளை மன்னரின் ஆட்சியைப் பயன்படுத்தி, கடுமையாகச் சுரண்டி வந்தனர். அத்தகைய இந்து மதத்தின் ஆதிக்க கட்டத்தில்தான், அந்நிய நாட்டிலிருந்து வந்திறங்கிய மதத்தாலும், ஒடுக்கப்பட்ட சமூகம் மத்தியில் பரவ முடிந்தது. அப்படி மதம் மாறியவர்களுக்கு அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்து பல சலுகைகள் கிடைத்தன. மன்றோ என்ற ராணுவத் தளபதி, ஆள்வோர் மற்றும் ஆதிக்க சாதிகளின் பிடிக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை காப்பாற்றுவதற்காக பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1811ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிமை வர்த்தகத்திற்கு தடை விதித்தார். மீன் வலைகளுக்கு போடப்பட்டிருக்கும் வரியையும் நீக்கினார். அதனாலேயே மீனவ மக்கள் பலரும் கிறித்துவ மதத் தை தழுவினர். இந்து மதத்தில் உள்ள ஆதிக்க சாதியினரிடம் இருந்து விடுதலை பெற்றோம் என்று உணர்ந்தனர். 1817ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சா தியினர் தங்கள் வீட்டு ஓலைகளை ஓடுகள் வைத்து வேய்ந்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்பு அப்படிப்பட்ட அனுமதியை மன்னரும், நம்பூதிரிகளும் அவர்களுக்கு வழங்கவில்லை.
ஒடுக்கப்பட்ட சமூகங்களாக அறிவிக்கப் பட்ட நாடார்கள், சாணர்கள், ஈழவர்கள் ஆகியோரது குடும்பப் பெண்கள் தங்கத்தையும், வெள்ளியை யும் நகைகளாக அணிய நம்பூதிரிகளும், மன்னர் ஆட்சியும் அனுமதிக்கவில்லை. அத்தகைய அனுமதி யை 1818ம் ஆண்டு ஆங்கிலேய தளபதி வழங்கினார். ஆனாலும் கூட நம்பூதிரி களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களுக்குள், இத்தகைய ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை. ஆங்கிலேயன் கொண்டு வந்த சீர்தி ருத்தங்களால் கூட, இந்து மதத்திற்குள் இருந்த பார்ப்பனிய சாதி இழிவை நீக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நிலப்பிரபுத் துவமும், மூட நம்பிக்கைகளும், ஆதிக்க
சாதி வெறியும், மன்னர் ஆட்சியில் மலிந்து கிடந்தது. சாதிப்பாகுபாடும், சாதி இழிவுபடுத்தலும் அன்றைய காலத்தின் நடைமுறையாக இருந்தது. 4 வர்ணங்கள் என்பதாக பிரிக்கப்பட்ட மனிதர்களை சாதிக்கட்டுமானத்திற்குள் ஏற்றுக் கொண்ட பார்ப்பனியம், அங்கே இருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை வர்ணமற்றவர்கள் என்றும், சாதிக் கட்டுமானத்திற்கு வெளியே உள்ளவர்கள் என்றும், ஒதுக்கி தீண் டாமைப் பாராட்டி வந்தனர்.
சாதி இந்துக்கள் நடந்து செல்லும் வழியில் எதிரே ஒடுக்கப்பட்ட
சாதியைச் சேர்ந்த உழைப்பாளி வருவாரானால், ஆதிக்க சாதிக்காரன் எதிரே வரும் தாழ்ந்த சாதிக்காரனை கொலை செய்ய உரிமை உண்டு என்ற பழக்கத்தை வைத்திருந்தனர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், அத்தகைய கொலைகள் குற்றமல்ல என்று கருதப்பட்டது. பிரம்மா என்ற கடவுளின் வழி வந்தவர்களாக பார்ப்பனர் களைக் கருதினார்கள். அவர்கள் எதை உளறினாலும் அதுவே அன்றைய ஆட்சியின் விதியாக மாறியது. அன்றைய ஆட்சியில் பார்ப்பனர் களுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. அன்றாடம் பார்ப்பனர்களுக்கு
சோறு கொடுக்க உணவுக் கூடங்கள், அந்த ஆட்சியில் நிறுவப்பட்டது. பார்ப்பனர்கள் வீடுகளுக்குள்ளே, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்கள் நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் பின்புறம் வழிதான் செல்லவேண்டும். அப்போதும் கூட மார்பில் துணியின்றிதான் செல்ல முடியும். கடவுளுக்கு அடுத்ததாக பார்ப்பனர்களான நம்பூதிரிகளை, அரசன் மதித்து வந்தான். நாயர்கள் அதையடுத்து மதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் அடுத்து வெள்ளாளர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். நாயர்கள் பொதுவாக அரசு ஊழியர்களாக இருந்தார்கள். அரசுப் பொறுப்புகளில் 60% அவர்களே இருந்தார்கள். அவர்கள் பண்ணையார்களாக இருந்து கொண்டு, ஒடுக்கப்பட்ட சமூகங் களை மேற்பார்வையிட்டார்கள். நம்பூதிரிகள் முன்னால் குறைந்தது 12 அடி தள்ளித் தான் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் நிற்க முடியும். அந்த விதி கறாராகப் பின்பற்றப்பட்டது. நாடார் சமூகத்தின் ஆண்களும், பெண்களும் அந்த விதிக்குட்பட்டே செயல்படவேண்டும். ஆண்கள் தலைப்பாகை அணிய முடியாது. பெண்கள் மார்பு சேலை அணியக்கூடாது. கடுமையான பண் பாட்டு அடக்குமுறையை ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சந்தித்து வந்தன.
அப்போதுதான் பழமை மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து, சாதி கவுரவத் தையும், மத ஒடுக்கலையும் தூக்கி எறிந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தை விடுதலை செய்ய வைகுண்டர் தோன்றினார். அவர் முடிசூடும் பெருமாள் என அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய வழி ஒரு மாற்று மதமாகவும், மாற்றுப் பண்பாட்டு பழக்கமாகவுமானது. அவருடைய வழிச் செல்வோர் பெரும்பாலும் ஏழை மற்றும் விளிம்பின சமூகத்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு வித்தியசமான, சுயாட்சி தன்மைக் கொண்ட சமூகமாக பரிணமிக்கத் தொடங்கினர். தங்கள் பாதையை அய்யா வழி என்று அழைத்துக் கொண்டனர். 19ம் நூற்றாண்டின் மத்திய கால கிறித்துவ சபைகளின் அறிக்கைகள் இதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. தெற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், தெற்கு திருநெல்வேலியிலும் அந்த வழி வேரூன்றி யது. 1840லிருந்து அய்யா வழி நம்பிக்கை முக்கியமானதாக வளரத் தொடங்கியது. 19ம் நூற்றாண்டின் கடைசியில், நாகர்கோவில் அருகே இருக்கும் சாமித் தோப்பு என்ற இடம் அய்யா வழியின் மையமாக கருதப் பட்டது. வைகுண்டரின் கற்பித்தலால் அது பரவியது. வைகுண்டரின் 5 சீடர்கள் நாடெங்கும் சென்று, அய்யா வழியை பரப்பினர்.
அய்யா வழி செல்வோர் தங்களுக் கென்று ஆங்காங்கே பதிகளை உருவாக்கிக் கொண்டனர். அந்தப் பதிகளுக்குள் உயரமான நிலைக் கண்ணாடி, கடவுள் சிலைக்கு பதிலாக வைக்கப்பட்டுள்ளது. சாமி தோப்பில் வைகுண்டரின் புனித பிரம்பு, தண்டையம், சுரைக்கூடு ஆகியவை உள்ளன. 1927ல் வெளியிடப்பட்ட அய்யா வழி நூலின் பெயர், அருள் நூல். 1931ல் அகிலம் என்ற நூல் வெளியிடப்பட்டது. 1940க்கு பிறகு அதாவது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அய்யா வழி மேலும் பரவியது என்று கூறுகிறார்கள். 90களின் ஆண்டுகள் அது வேகமாக பரவியது. 20ம் நூற்றாண்டில் அதன் பெயரில் பல சமூக அமைப்புகள் தோன்றின.
1994ல் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வைகுண்டர் தினத்தை விடுமுறையாக அறிவித்தது. பின்னர் 2006ல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் அந்த விடுமுறை பின்பற்றப்பட்டது. தற்போது அய்யா வழியின் வாரி
சாக பால பிரஜாபதி அடிகளார், அந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறார். அகிலத் திரட்டு என்று அழைக்கப் படும் நூலில் அனைத்து வழி காட்டல் களும் இருக்கின்றன என்று அவர் கூறுகிறார். அந்த நூலை 1841ல் ஹரி கோபாலன் என்ற அய்யா வழி சீடர் எழுதியுள்ளார்.
பார்ப்பனிய ஒடுக்கு முறை களிலிருந்து தப்பிக்க முடியாமல், இந்து மதத்திற்குள் திணறிக் கொண்டிருக்கும் சாதிச்சனங்கள் மத்தியில், இந்து மத விலங்கிலிருந்து விடுபட்டு, ஆன் மீகத்திலேயே புதிய பாதை யை ஏற் படுத்தி அறுதியிட்டுள்ளதால், அய்யா வழி இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் அந்தப் பாதையை பின்பற்றுகிறார் கள். துண்டை இடுப்பில் கட்டச் சொல்லும் சாதி ஒடுக்கலுக்கு எதிராக, துண்டை தலைப் பாகையாக அய்யா வழி பக்தர்கள் கட்டிக் கொள்கிறார்கள். கையைத் தொடாமல் எறியப்படும் திருநீற்றை மறுப்பதற்காக, வெள்ளை மாவை நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள். பார்க்க அனுமதிக்கப்படாத கடவுள் சிலைகளுக்கு மாறாக, நிலைக் கண்ணா டியில் பார்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு வகை சித்தர் வழிபாடு என்பதாக கருதப்படமுடியும். 200 ஆண்டுகளுக்கு முன்னால், தோள் சேலைப் போராட்டம் ஒன்றை நடத்தி, அதன் மூலம் மார்புச் சேலை அணிய, ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் உரிமைப் பெற்றார்கள்.
மேற்படி சாதி ஒழிப்பு, சமூக விடுதலை மற்றும் பண்பாட்டு உரிமை பெறுவதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வழிகாட்டிய அய்யா வழி இன்றும் வலு வடைந்து வருகிறது. வைகுண்டரின் 178வது பிறந்த நாளான இன்று தமிழகம் எங்கும் எடுக்கப்படும் விழா இதை பதிவு செய்கிறது.