Monday, March 1, 2010

தேசிய அறிவியல் நாள் துண்டாடப்படுகிறதா?

நேற்று தேசிய அறிவியல் நாள் என்பதாக கொண்டாடப்பட்டது. அறிவியலுக்காக ஒரு நாளை நிர்ணயித்து அதைக் கொண் டாடும் அளவுக்கு இந்தியா முன்னேறியிருக்கிறதே என்று நாம் வியக்கலாம். மத்திய அரசின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பூமி அறிவியல் என்ற ஒரு அமைச்சகம் இருக்கிறது. அதன் மாநிலங்களவை அமைச் சர் பிரித்விராஜ் சவான் நேற்றைய முன்தினம், தொழில்நுட்ப மாளி கையில் ஒரு விழாவை நடத்தி அதில் பலருக்கும் விருது வழங்கினார். 2009ம் ஆண்டிற் கான விருதில், கடந்த 5 ஆண்டுகளாக அறிவியல் தொழில் நுட் பத்தில் சிறப்பாக பங்களிப்பு செலுத்தியவர்களுக்கு அத்தகைய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் செயற்கைக் கோள், பூமி, கடல், செவ்வாய், சூரியன் என்ற தலைப்புகளில் பிரபல அறிவியல் புத்தகங்களை எழுதியவரும், அணுசக்தி என்ற ஏட்டில் தொடர் கட்டுரைகளை வரைந்தவருமான சென்னையைச் சேர்ந்த என்.ராம துரைக்கு, தேசிய விருதாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதே போல ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த டி.டி.ஓழாவிற்கும் 23 புத்தகங்கள் எழுதியதற்காக விருது வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு அறிவியலை எடுத்துச் சென்றதற்காக மணிப் பூரைச் சேர்ந்த தக்கேலம்பம் ரோபிந்தரசிங் என்பவருக்கும் விருது வழங்கப்பட்டது. இது போல வழங்கப்பட்ட விருதுகள் எல்லாம் அறிவியலை மக்களிடம் எடுத்துச் செல்ல உதவியவர்கள் என்பதாக பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.
புதுடெல்லியில் உயர்
சக்தி பொருள்கள் ஆராய்ச்சி சோதனைச் சாலையில் நடத்தப் பட்ட தேசிய அறிவியல் நாள் விழாவில், அறிவியல் என் பது உலகம் முழுமைக்கும் பொருத் தமானது என்றும், தொடர்ந்து பொருத்தமானதாக இருக்கும் என்றும், அறிவியல் சில நேரங்களில் பிரச்சினைகளை உருவாக்குகிறது என்றும், ஆனாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அறிவியல் மட்டுமே ஒரே வழி என்றும், டி.ஆர்.டி.ஓ. தலைவர் டாக்டர் பி.எஸ். கோயல் கூறினார். இத்த கைய அறிவியலாளர்களின் கூற்றுக்கள் உற்று நோக்கப்பட வேண்டும். இந்திய அர
சாங்கத்தில் பணிபுரிகின்ற அறிவியலாளர்களில் மாறு பட்ட கருத்துக்களை சிலர் கூறிவந்தாலும், முக்கியமான பிரச்சினைகளில் வேறுபாடுகள் தோற்றமளித்தாலும், அறிவிய லாளர்களின் கூற்றுக்கள் ஆழமா கவே கவனிக்கப் படுகின்றன.
அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்பு களின் மூலம் வளர்ந்து வரும் ஒரு புறச்சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். அறிவியல் வளர்ச்சிகள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்படும் அளவுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில்தான் இதற்கான தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மூலதனம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில், ஏகபோக மூல தனமும், பன்னாட்டு மூலதனக் குவிதல் களும், அதிகார வர்க்க மூலதனமும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மேலான பங்கை செலுத்தத் தொடங்கினால், அப்படிப்பட்ட சக்திகளின் கரங்களில் அறிவியல் வளர்ச்சிகள் போய் சிக்கிக் கொள்கின்றன. அதுபோன்ற சூழல்களில் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளை, தனியார்கள் தங்களுடைய நிறுவனத்தின் லாபங்களை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது பொருளாதார கட்டமைப்பில் ஒரு தவிர்க்க முடியாத விதியாக மாறிவிட்டது. அதிலும் உலகப் பொருளாதாரம், உலகமய மாக்கல் என்ற கொள்கையின் வழியில் இழுத்துச் செல்லப் படும் போது, அவற்றின் அணுகுமுறை அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன் படுத்தி தங்களுடைய நிறுவனத்தின் லாபப் பங்குகளை அதிகரிக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதாவது ஒரு நல்வாழ்வு அரசுக்கு இருக்க வேண்டிய, பொதுமக்கள் பற்றிய அக்கறையோ, நாட்டு முன்னேற் றத்தைப் பற்றிய கவனமோ, வருங்கால தலைமுறைக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களோ, செல்வாக்கு செலுத்துவதற்கு பதில், தனியார் லாப நோக்க கண்ணோட்டங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது எந்த வகையிலும் நாட்டிற்கோ, மக்களுக்கோ பயன்படக்கூடிய அணுகுமுறை அல்ல.
இதைத்தான் சமூக அறி வியலாளர்கள், அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கு எதிராக அறிவியலைப் பயன்படுத்துவது என்று அழைக்கிறார்கள். அது எப்படி முடியும்? அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கு எதிராக அறிவியலைப் பயன்படுத்த முடியுமா? நம் கண் முன்னால் இந்திய துணைக் கண்டத்தில் நடந்து வருகின்ற, அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகளையும், அவை இயங்கி வரும் இயற்கை மூலாதாரங் களையும், பொதுமக்களின் வாழ்க்கையையும், எவ்வாறு பாதிக்கின்றன என்று சமூக ஆய்வுப் பார்வையோடு காண வேண்டியிருக்கிறது.
விவசாயத்தில் இருந்து வந்த பாரம்பரிய விதைகளையும், மரபுசார் உரங்களையும் மறுத்து புதிய வீரிய விதைகளையும்,ரசா யன உரங்களையும் அறிமுகப் படுத்தி அதன் மூலம் இயற்கை விவசாயத்தில் இயங்கி வந்த விதிகளை உடைத்தெறிந்து, நவீன விவசாயம் படைக்க 1965ம் ஆண்டு எடுத்த முயற்சி களின் பாதிப்பு இன்றும் கூட நிலவி வருகிறது. மேற்கண்ட முயற்சிக்கு பசுமைப்புரட்சி என்று ஆள்வோர் பெயரிட்டனர். இத்தகைய முயற்சி அமெரிக் காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதாக அறியப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில், ஒரு சோதனைச் சாலையில் தயார் செய்யப்பட்ட வீரிய விதைகளை, இந்திய விவசாயச் சந்தையில் விற்பனை செய்தார்கள். அதன் மூலம் விதைகளின் எண் ணிக்கையை அதிகரித்தும், உற்பத்தியின் அளவை கூட்டி யும் சாதனை செய்ததாக அறிவித்தார்கள். ஆனால் அவை எல்லாமே இந்த நாட்டு விவ சாயத்தின் முதுகெலும்பான பாரம்பரிய விதைகளை குழி தோண்டிப் புதைக்க மட்டும் தான் பயன்பட்டது. இதுதான் அறிவியல் ரீதியான அணுகு முறைக்கு எதிராக, அறிவியல் வளர்ச்சியை அல்லது புதிய கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவது என்று பொருள்.
அதே போல பாரம்பரிய மாக நமது நாட்டின் கடலோ ரங்களில் கிடைத்து வந்த இறால் உற்பத்தியை வளர்ப்பு தற்கு பதில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி செயற்கை இறால் பண்ணைகளை அர
சாங்கம் அமைத்துக் கொடுத் தது. அத்தகைய புதிய செயற்கை இறால் பண்ணைகள், மண்வளத் தையும், நீர் வளத்தையும் கெடுத்தது மட்டுமின்றி, கடல்நீரில் கழிவுகளைக் கொட்டி அதன் மூலம் ஒட்டு மொத்த மீன்வளத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தின. சில ஆண்டுகள் மண்வளத்தை மற்றும் நிலத்தடிநீர் வளத்தை அழித்த பிறகு, சம்பந்தப்பட்ட பண்ணை முதலாளிகள், அந்த இடத்தை பயன்படாத நிலமாக விட்டு விட்டு, இடம் மாறிச் சென்று விடுகின்றன. இதுவும் கூட அறிவியல் தொழில் நுட்பத்தை, தனிநபர் லாபங்களுக்காக பயன் படுத்தும் போது, ஒட்டு மொத்த சமூகத்தின் நலன் என்பது கீழே தள்ளப்பட்டு, நாட்டு முன் னேற்றம் தடைப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை, அறிவியல் அணுகு முறைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது என்ற பட்டியலில்தான் இதுவும் சேர்க் கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை யும், மீனவர் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவதையும், பவளப்பாறைகள் பாதுகாக்கப் பட வேண்டி யதையும், பல்லுயிர் தன்மைகள் காக்கப்படு வதையும், வலியுறுத்தும் ஐ.நா.வளர்ச்சித் திட்டம் மற்றும் சுற் றுசூழல் ஆய்வு ஆகியவை, அர சியல்வாதிகளின் சேது கால்வாய் திட்டம் போன்ற வலியுறுத்தல் களால் கேள்விக்குறியாகின்றன.
கடலோர ஒழுங்குபடுத்தல் திட்டம் என்ற மீனவர் மேலாண் மையை உறுதிப்படுத்தும் திட்டத்தைக் கூட, கடலோர மேலாண் மைத் திட்டம் போன்ற தனியார் நலன்களுக்காகத் தாரைவார்க்க, அதிகார வர்க்கம் முயல்கிறது. மரபணு மாற்று விதைகளையும், உணவு களையும் கொண்டு வந்து இறக்கும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் லாபத்திற்காக, மறு உற்பத்திக்கு உதவக் கூடிய பாரம்பரிய விதை களும், உணவுகளும் மறுக்கப் படுகின்றன.
தேசிய அறிவியல் நாளில், மக்களுக்கு பயன்படும் அறி வியல் மற்றும் தொழில் நுட் பத்தை மட்டுமே வலியுறுத்தும் கோரிக்கைகளை, முதன்மைப் படுத்துவதே நாட்டு முன்னேற்றத் திற்கு வழிவகுக்கும்.