Friday, February 19, 2010

விடுதலைத் தாகம் அழியக்கூடியதா?

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் உலகமெங்கிலும் ஒரு தீவிரமான விவாதம் நடந்து வருகிறது. இனி மேல் ஈழத்திலும், இலங்கையிலும் என்ன நடக்கும் என்பதே அந்த விவாதத்தின் சாரமாகும். இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் மட்டு மின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும், இந்திய வம்
சாவழி தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதி யிலும், நேரடியாக இத்தகைய விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. யார் யார் எந்தப் பக்கம் என்ற
சர்ச்சை இருந்தது. தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தன. தமிழர் பகுதி களில் அதிக வாக்குகள் பொன் சேகாவிற்கே போய்ச் சேர்ந்தன. இப் போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் யார் யார் எந்தப்பக்கம் என்று மீண்டும் விவாதம் வந்தது. எந்தப்பக்கமும் இல்லாமல், தனித்து நிற்கின்ற அணிகளும் கிளம்பியுள்ளன. இது நிலவும் அரசியல் அமைப் பிற்குள், தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தீர்மா னிக்கின்ற முயற்சிகள். ஆனால் உலக அரங்கில், குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக மக்கள் மத்தியிலும் வேறொரு விவாதம் வேர் கொண்டு வருகிறது. அதுதான் நான்காவது ஈழப்போரில், விடு தலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டு விட்டனரா என்ற விவாதம்.
இந்த விவாதத்தில் குதித்துள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் அட்டேல் பார்க்கர் தனது ஆங்கில புத்த கத்தில் ஒரு புதிய விளக் கத்தை கூறுகிறார். இலங்கையில் இந்த அமெரிக்கப் பேராசிரியர் 20012002 ஆண்டுகளில் தங்கியிருந்து, அனுப வங்களைப் பெற்றுள் ளார். இலங்கை அர
சாங்கம் முற்றுமுழுதாக புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக கூறிக் கொண்டாலும், இன்ன மும் கூட அவர்களுக்கு அதில் கலக்கம் இருக் கிறது என்கிறார் அவர். ஈழத் தமிழர்களுக்கு அடிப் படை பிரச்சினைகளாக இருக்கும், நாட்டு வளங் களை சமமாக பங்கீடு செய்யாமை, கல்வி, வேலைவாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல் லாமை போன்றவை மீண்டும் புலிகளை உருவாக்கியே ஆகும் என்று இந்த பேராசிரியர் வாதம் செய்கிறார்.
போராளிகள் அமைப் பின் உயர்மட்ட தலை வர்கள் கொல்லப்பட்ட தாகவும், அதுவே அவ் வியக்கத்தின் முடிவாக கருதப்படக் கூடாது என்றும் அவர் வாதம் செய்கிறார். போர் முடிந்த பிற்பாடும், அதே வட்டாரத்தில் அதிகள வில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டு கிறார். சந்தேகிக்கப்படு பவர்களை, இன்னமும் ராணுவம் முகாம்களில் அடைத்து வைக்கிறது என்கிறார் அவர். உலகம் விடுதலைப்புலிகள் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பது இந்தப் பேராசிரியரின் வாதம். அந்த இயக்கம் கடைபிடித்த ரகசியத் தன்மை அதற்கு காரண மாக இருக்கலாம் என்றும் எழுதுகிறார். இங்கிலாந்து ஊடகங்கள், இது பற்றிய விவரங்களை அமெரிக்க ஊடகங்களை விட அதிகமாக தெரிந்திருக் கின்றன என்றும் கூறியுள் ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப் பட்ட இயக்கம் என்கிறார் அட்டேல் பார்க்கர். பெரும் பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் லட்சியத்தையே வரிந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் அடிப் படையில் அஹிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்ப தையும் குறிப்பிடுகிறார். இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்ட பௌத் தம் வேறுபோல இருக் கிறது என்பது அவரது கருத்து. மகாவம்சம் என்ற காப்பியத்தின்படி, இலங் கைக்கு புத்தர் வந்தார் என்று நம்பப்படுகிறது என்றார். அதனால் புத்த பிக்குகளும் அதை காப்பாற்ற, சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பார்வை அமெரிக்க பேராசிரியர் அட்டேல் பார்க்கருக்கு மட்டும் இருக்கிறதா? அண்டை நாடான இந்தியா வின் ஆட்சியாளர்களும், அறிவுசார் பிரிவினரும் இதே உண்மைகளை அறியாமல் இருக்கிறார் களா? உலக நாடுகளில் பரந்து கிடக்கும் தமிழ் மக்கள் மத்தியில், <<ஈழத் தமிழர் போர்முறை தெளி வுடன் புரியப்பட்டுள் ளதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முயற்சியை, உலகம் தழுவிய தமிழர்கள் எப்படி புரிந்து கொண்டுள் ளார்கள்?
மேற்கண்ட கேள்விக ளுக்கெல்லாம் விடை தேட வேண்டும் என்றால், நடந்து முடிந்த வன்னிப் போரின் ஒவ்வொரு கட்டத்தையும், அசை போட் டுப் பார்க்க வேண்டும். அதிலி ருந்து கிடைக்கின்ற படிப்பினைகள், பல் வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுக்கும். உணர்ச்சி கரமான எல்லைகளுக்கு செல்வதிலிருந்து, தமிழர் களை சிந்திக்க வைக்கும். எதிர்கால நடவடிக்கைகளுக்கு திட்டமிட, இந்த தேசிய இனத்திற்கு திசைவழிகாட்டும். போர் விதிகள் பற்றிய அறிவையும் கூட கற்றுக் கொடுக்கும். வரலாற்றில் எடுத்து வைக்க வேண்டிய படிக்கட்டுகளை, வரி சைப்படுத்திக்காட்டும்.
ஒரு கட்டத்தில் புலி களின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டுள் ளன. அதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னால் உணரப்பட்ட, தேசிய இன உரிமைக்கான குரல் ஈழத்தில், அறவழிப் போராக தொடங்கியது. அது நாடாளுமன்ற பாதை யையும் பயன்படுத்த தவறவில்லை. வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட தேர்த லில் தமிழ் மக்களின் வாக்குகள், சுயநிர்ணயத்திற்கு ஆதரவாகவே அளிக் கப்பட்டன. அத்தகைய பாதைகளால் இனவாதத் தையும், இன ஒடுக் கலையும், இனத்தாக்கு தலையும் நிறுத்தமுடிய வில்லை என்பதனால், தமிழ் இளைஞர்களின் பார்வை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பியது. ஆயுதப் போராட்டம், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அறவழி அரசியல் போராட்டத்தை விட, உயர்ந்தது என்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒரு திட்டத்திற் கான முயற்சி தொடங் கப் பட்டுள்ளது. அது உலகம் தழுவிய அளவிலான அரசியல் போராட்டம் என்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கும், நடக்கயிருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் சரியான முறையில், விளங்கிக் கொள்ளப்படாமல் இருக் கிறது. வன்னிப்போரில் தோற்றதனால், தமிழர்கள் அரசியல் போராட்டம் என்பதாக தங்களது இயலாமையைக் காட் டுகிறார்களா என்ற கேள்வியும், சிலரை செரிக்க விடாமல் செய் கிறது. ஆனால் உண்மை என்ன என்றால், ஆயுதப் போரான வன்னிப் போரின் தொடர்ச்சி தான் உலகம் எங்கும் நடத்தப் பட இருக்கும் அரசியல் போர். இத்தகைய அரசியல் போராட்டம், எந்த வகையிலும் ஆயுதப் போராட்டத்திற்கு குறைந் தது அல்ல.
இது எப்படி அதன் தொடர்ச்சியாக இருக்க முடியும் என்ற அப்பா வித்தனமான கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். ஆயுதப் போரை நடத்திக் கொண் டிருந்த, தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் வே.பிரபா கரனும், எத்தகைய அனுபவங்களையும் மற்றும் படிப்பினை களையும் அதிலிருந்து கற்றார்கள் என்பது புரியப்படவேண்டும். உலகில் எந்த ஒரு தேசிய இனமும், முப்படைகளையும் உருவாக்கி, தங்களுடைய விடுதலைப் பகுதியில், புரட்சிகர அரசாங்கத்தையும் நிறுவி, போரில் ஈடுபட்ட வரலாற்றை, ஈழப் போராளிகள் நடத்திக் காட்டியது போல செய்து காட்டவில்லை. அப்படிப்பட்ட புலிகள் இயக்கம், 7 நாடுகளின் ஒத்துழைப்புடன், அரசப்படை நடத்திய போரை எதிர்கொண்டது. அதன் விளைவுகளை முன்கூட்டியே சரியாக உணர்ந்து கொண்டது. அதனாலேயே கிழக்கு மாகாணங்களிலிருந்து, புலிப்படையை அதன் தலைவர் திரும்பப் பெற் றார். வடக்கு மாகாணத்தில் கூட, கிளிநொச்சிக்குள் தமிழர் படைகளை உள்ளிழுத்துக் கொண் டார். அங்கும் தாக்குதல் தொடங்கிய போது, முல்லைத் தீவிற்கு பின் வாங்க வைத்தார். முல்லைத் தீவு நகருக்குள் சிங்களப் படை நுழைந் தவுடன், மக்கள் திரளுடன் புலிப்படை புதுக் குடியி ருப்புக்கு நகர்ந்தது. அங்கும் எதிரிப்படை இறங்கியவுடன், முள்ளி வாய்க்கால், ரெட்டை வாய்க்கால் பகுதிக்கு விடுதலைப் படை, தன்னை பின்னிழுத்துக் கொண்டது. இவை யெல்லாம் போர் விதிக ளின்படி, தற்காப்புப் போர் உத்திகளாகப் புரி யப்படவேண்டும்.
ஒவ்வொரு அங்கு லமும் தற்காப்புப் போரில் ஈடுபடுத்தப்பட்ட புலிப்படை, உலகத்திற்கு ஒரு செய்தியை உரக்கக் கூவியது. அதுதான் அரசியல் போராட்டமாக, புலம் பெயர் தமிழர்கள் இந்த விடுதலைப் போராட் டத்தை, முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற செய்தி. அதை உணர்ந்து தான் விடுதலைப் படை யின் தலைமையின் முழு வழிகாட்டலில் தான், பெற்ற படிப்பினைகளின் தொடர்ச்சியில் தான், இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. இது ஆயுதப் போராட்டத் திலிருந்து, அரசியல் போராட்டம் என்ற பரி ணாம வளர்ச்சிக்கு வந்தி ருக்கும் ஒரு இயங் கியல் விதி. அதனால் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாகம், அழியக்கூடியதல்ல.