Thursday, February 18, 2010

மாவோயிஸ்ட் கோட்டையில் கண்ணிவெடிகள்

சமீபத்திய நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்கள் அல்லது அவர்கள் மீது அரசப்படை நடத்திய தாக்குதல்கள் என் பதாக செய்தி வராத நாளே இல்லை என்று கூறலாம். ஊடகங்களுக்கும் அத் தகைய செய்திகள், பர
ப ரப்பூட்டும் ஆய்வுகளை நடத்த உதவியுள்ளன. சமீபத்தில் நமது மத்திய உள்துறை அமைச்சர், தற்காலிகமாக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியையும், இந்திய அரசியல்
சட்டத்திற்குட்பட்ட ஆட் சியில் மாவோயிஸ் டுகளின் கொள்கைகளுக்கு இட மில்லை என்பதையும், விரிவாக விளக்கியிருந்தார். அது மேற்கு வங்க மாநி லத்திலுள்ள, மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற் றியது. தாக்குதலில் பலியான அரசப்படை வீரர்கள் மீது, பலத்த அனுதாபம் ஏற்பட்டது. ஜர்க்ரம் பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள், ஆறு மாதங்களுக்குள் அரசப்படை மீது ஐந்து தாக்குதல்கள் நடந்து விட் டன என்று கூறுகிறது. 32 படைவீரர்கள் கொல்லப் பட்டனர். பல பத்துப் பேர் காயமடைந்தனர். ஆயுதங் கள் பறிக்கப்பட்டன. காவல் முகாம்கள் பிடிக்கப் பட்டன. அதேசமயம் மாவோயிஸ்டுகளின் முகாம்களில் மூன்று உடைக்கப்பட்டது. கொரில்லக்கள் என சந் தேகிக்கப்படும் 3 பேர் கொல் லப்பட்டனர். 190 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட படை அதி காரி அத்திந்தரநாத் தத்தாவை விடுதலை செய்வதற்காக 23 பேர் விடுதலை செய் யப்பட்டனர். மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி, எல்லா விவரங்களையும் மறைந்து இருந்து கொண்டே, ஊடகப் பேட்டிகள் கொடுக்கிறார். ஜங்கல் மஹால் என்ற ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப்பகுதியில், அரசப்ப டைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை மக் கள் ஆதரிக்கிறார்கள்.
2008ம் நவம்பர் மாதத்திற்கு பிறகு, அதாவது காவல்துறை அராஜ கங்களுக்கு எதிரான மக் கள் குழுவை அமைத்த பிற்பாடு, ஒவ்வொன்றாக மாவோயிஸ்ட்கள், வெற்றி பெற்று வருகிறார்கள். 2009 ஜனவரியில் லால் கரில் காவல்துறையை புறக்கணித்தார்கள். காவல்துறைக்கு உளவுக் கொள்பவர்களை தீர்த்துக் கட்டினார்கள். 300 கிராமங் களிலுள்ள 3 லட்சம் மக் களை பாதுகாக்க லால்கரில் 36 காவலர்களே அப்போது இருந்தனர். உள்ளூர் உளவு கட்டமைப்புத் தான், காவல்துறைக்கு இருந்த ஒரே அமைப்பு. அதையும் மாவோ யிஸ்ட்கள் குறி வைத்து தாக்கினார்கள். இரவு ஆனபிறகு காவலர்கள் வெளியே வருவதில்லை. படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி யுள்ளன. இதன் மூலம் விடுதலை பகுதியை ஏற்படுத்தி, மேற்கு மிதி னாப்பூரையும் தாண்டி, புருலியா மற்றும் பங்குரா மாவட்டங்களுக்கு, மாவோ யிஸ்ட்கள் செல்வாக்கு விரி வடைந்துள்ளது. கிணறுகள் தோண்டுதல், சாலைகள் அமைத்தல், சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை வளர்ச் சியுறாத பகுதி களில் உருவாக்கி மக்கள் செல்வாக் கையும், மாவோயிஸ்ட்கள் பெற்று விட்டார்கள். அரசப்படைகளுக்கு இல்லாத அனைத்து கட்ட மைப்புகளும், அங்கே மாவோயிஸ்ட்களுக்கு இருக்கிறது.
9 மாதங்களாக அந்த வட்டாரத்திலேயே முகாமிட்டு இருக்கின்ற அரசப்படைகள், அந்த வட் டாரம் பற்றி இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு கிராமப்புற பாதை தெரியவில்லை. காடுகளில் உள்ளே உள்ள வழிகள் தெரியவில்லை. காலை முதல் மாலை வரை தாங்கள் வலம் வரும் பகுதிகள் மட்டும் தான் தெரியும். இரண்டு வாரங்களாகத் தான் காடுகளுக்குள் அரசப்படைகள் செல்கின்றார்கள். புதிதாக உள்ளே செல்லும் போது குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்று, கையில் ஆயுதங்கள் இல் லாத நிலையில் அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
மேற்கண்ட நிலைமை மேற்கு வங்கத்தில் என்று சொன்னால், சத்திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் பகு தியில் இருந்து வரும் செய்திகள், மாபெரும் உள்நாட்டு போர் சூழலை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 14வது நூற்றாண்டில், பஸ்டர் என்ற அரசாட்சி அங்கே நடந்து வந்திருக்கிறது. ராமா யணத்தில் தண்டகாரண்யா என்று சொல்லப்படும் பகுதி தான் அது. மகாபாரதத்தில் கோசல ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பிராந் தியம் தான் அது. 19ம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில், பஸ்டர் என்ற அந்த அரசாட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் மத்திய பிராந்தியமாக அழைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பஸ்டர் பகுதி இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2000மாவது ஆண்டு சத் திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் வட்டாரத்தின் ஒரு பகுதி
சேர்க்கப்பட்டது. இந்தி ராவதி நதிக்கரையோரம் அந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புறம் ஒரிசா இன்னொரு புறம் ஆந்திரா. எல்லாம் காடுகள் இவ்வாறு வர லாற்று புகழ் பெற்ற அந்த பகுதி தான் இப்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அரசப்படைகளுக்கும் மத் தியில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி போல நடந்து வருகிறது.
ஒரு பிரபல ஊடகம் தண்டகாருண்யாவின் அடர்த்தியான காடுகளில், தர்பா என்ற பகுதியின் மாவோயிஸ்ட் குழு தலைவர்கள் 3 பேரை சந்தித்திருக்கிறது. பத்ரு, வினோத், தேவா என்ற அந்த மூன்று பேர் கொண்ட குழுவின் தளப தியான பத்ரு, ஊடகத் திற்கு கடுமையான நேர்காணலைக் கொடுத் துள்ளார். பன்னாட்டு மூல தன கம்பெனிகளுக்கு, தங்கள் பகுதியின் நிலங் களை விற்கத் துடிக்கின்ற மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் செய்ய முடியாது என்றும் தாங்கள் அரசு ஏற்றுக் கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது அந்த வட்டார நிலங்கள் ஆதி வாசிகள் உட்பட வட்டார மக்களுக்கே சொந்தம் என்று அவர் தெரிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஆயுதக்குழு தலைவர் பத்ருவிற்கும், இந்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவொரு வேறுபாடும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது இருவருமே அவரவர் துப் பாக்கிகளை, துடைத்து வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார் கள். இது தான் சமாதா னத்திற்கோ, பேச்சுவார்த் தைக்கோ, வழிவகுக்குமா என்ற கேள்வி தான் எழு கிறது.
அரசப்படைகளிட மிருந்து, அப்பாவி மக்களை தாங்கள் காப்பாற்ற விரும் புவதாகவும், அதற்காகவே தாங்கள் துப்பாக்கி தூக் கியிருப்பதாகவும், பத்ரு போன்றவர்கள் கூறுகி றார்கள். அப்பாவிகளைத் தான் அரசப்படைகள் கொலை செய்ய முடியுமே தவிர, தங்களை அல்ல என் றும் மாவோயிஸ்ட்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதன் விளைவாக அதிகமான மக்கள் துப் பாக்கி ஏந்துவார்கள் என்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். பச்சை வேட்டை என்ற பெயரில் அரசப்படையும், அரசால் ஆயுதபாணியாக்கப்பட்ட, கூலிப் படையான சல்வா ஜுடுமும், அப்பாவி மக்களை கொலை செய்வ தனால், எதிர் விளைவுகளே உருவாகும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆஸ்ரம பள்ளிகளை உடைத்தீர்களே என்ற கேள்விக்கு, அரசப் படைகள் அவற்றை ஆக் கிரமித்திருந்தன என்றும் பதில் கூறுகிறார்கள். பா.ஜ.க.வும், காங்கிர
சும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை, அந்த வட்டாரத்திற்கு கொண்டு வந்து, பாரம்பரியமாக வாழும் மக்களை நிர்பந் தமாக இடம் பெயர வைக்கிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
அதேசமயம் அரசு தரப்பு செய்திகள், தாங்கள் செய்கின்ற பச்சை வேட்டை என்பது, பொது இடங்களில் மாவோயிஸ்ட்களால் நிலத்தில் புதைக்கப்பட்ட, கண்ணிவெடிகளை நீக்குவது தான் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பஸ்டர் பகுதியில் கண்ணிவெடிகளை நீக் குவதற்காக, இறங்கிய காவல்துறையினர் பலர் தங்களது உயிரை இழந்தி ருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது கால்களை இழந்திருக்கிறார்கள். இதுபற்றி மனித உரிமை அமைப்புகள் பேசு வதில்லை என்பது அரசுதரப்பு குற்றச்
சாட்டு. சாலைகளிலும், விவசாய நிலங்களிலும், காடுகளிலும், பொது இடங் களிலும் இதுபோன்ற கண்ணிவெடிகளை மாவோயிஸ்ட்கள் புதைத் திருக்கிறார்கள்.
அங்கே ஆதிவாசி பகுதி களில், ஒரு உள்நாட்டுப் போருக்கான சூழல் நில விக்கொண்டிருக்கிறது. அத னால் தான் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தும் மாவோயிஸ்ட்கள்,
சாதாரணமாக தாங்கள் அறிவித்துள்ள விடுதலைப் பகுதிகளை, நெருங்கும் இடங்களிலெல்லாம் கண்ணிவெடிகளை புதைத் திருக்கிறார்கள். அதே சம யம் காவல்துறையின் சித் ரவதைகளை எதிர்த்து, 2005ம் ஆண்டு 25 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் சில தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டலுடன் பதிவு செய்யப்பட்டுள்ள. மனித உரிமைகள் என்ற அடிப்படையான அளவு கோல் மூலம் அந்த வட் டாரம் பார்க்கப்படுமா? 2005ம் ஆண்டு 26 மாவோயிஸ்ட்களும், 48 அரசப்படையினரும், 52 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு 117 மாவோயிஸ்ட்களும், 55 அரசப்படைகளும், 189 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 73 மாவோயிஸ்ட்களும், 182 அரசப்படைகளும், 95 அப்பாவிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2008ம் ஆண்டு 66 மாவோயிஸ்டுகளும், 67 அரசப்படைகளும், 35 அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். 2009ம் ஆண்டு 137 மாவோயிஸ்ட்களும், 121 அரசப்படைகளும், 87 அப் பாவிமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைமை 2010லும் தொடர வேண்டுமா என் பதே நமது கேள்வி.