Wednesday, February 17, 2010

கனடாவிலிருந்து வந்த இயற்கை விஞ்ஞானம்!

இன்று இந்தியா எங்கும் விவாதப் பொருளாகி வருவது, மரபணு மாற்று உணவு நல்லதா, கெட்டதா என்பதே. சமீபத் தில் நாடெங்கிலும் பல நகரங்களில் நடந்து முடிந்த, மலட்டு கத்தரிக் காய் பற்றிய கலந்துரையா டல்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை, மரபணு மாற்று கத்தரிக்காய்கள் விற்ப னைக்கு அனுமதிக்கப் படுவதை, குறைந்த பட்சம் தள்ளிப் போட்டது. அதே சமயம் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் அதே மரபணு மாற்றை, கெடுதல் அல்ல என்பதாகக் கூறிய கூற் றும் வெளிவந்தது. இதே ஊடகங்கள் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அர சாங்கத்திற்குள், இரண்டு கருத்துக்கள் என்பதாக எழுதியிருந்தன. இன்ன மும் தீர்க்கப்படாத பிரச்சினையாக, இந்தியா வில் இந்த மரபணு மாற்று விதைகளும், உணவு களும் இருக்கின்றன. அதனால்தான் தங்கள் தலைமேலே, கூர்வாள் தொங்கிக் கொண்டிருக் கிறது என்று இயற்கை விவசாயிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அறிவியலா ளர்களும் கூறுகிறார்கள். கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் ஆகியவற்றின் அரசாங்கங் கள் கறாராக மரபணு மாற்று விதைகளை மறுப்பது போல செய்யா விட்டாலும், தமிழக அரசு தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என்றாவது கூறியுள்ளதே என்ற ஆறுதல் ஒருபுறம். அதே சமயம் விவசாயப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டி லும், பஞ்சாபிலும் இந்த மரபணு மாற்று விதை களை சந்தையில் இறக்கி விடும் பன்னாட்டு நிறுவனங் களுக்கு, பயன்பாடாக
சென்று கொண்டிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் விவசாய உற்பத்திக்கு பெயர் பெற்றது என்பதாக கூறு கிறார்கள். அந்த பஞ்சாபி லிருந்து பிறந்து 1960ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் வாழ்ந்து வரும், இயற்கை விஞ்ஞானி டாக்டர் சிவ்சோப்ரா, இந்தியா வந்துள்ளார். இவர் ஹைதராபாத், சென்னை, கொச்சி, மைசூர், பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு சென்று தனது கருத்துக்களை தெளித்துக் கொண்டிருக் கிறார். மரபணு மாற்று உணவுகளின் அரசியலும், அதனால் ஏற்படும் சுகாதார தாக்கங்களும் என்பதுதான் இவரது விளக்கத்தின் தலைப்பு. அறிவியல், சமூகம், மதம் பற்றி பல் வேறு வெளியீடுகளை வெளியிட்டுள்ள இவர், கால்நடை மருத்துவம் மற்றும் மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கனடா நாட்டில் எல்லாமே முன்னேறி இருக்கும் என்ற நம் பிக்கை நம்மவர்களுக்கு உண்டு. ஆனால் இந்திய வம்சாவழியான இந்த விஞ்ஞானியின் அனு பவம், மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாய உற்பத்தி பெருகியதற்கு காரணம், பசுமைப் புரட்சிதான் என்று சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் இன்னமும் கீறல் விழுந்த இசைத் தட்டு போல கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஆங்கிலேயனுடைய ஆட்சி இருக்கும் போது, இந்தியாவும், பாகிஸ்தா னும் ஒன்றாக ஆளப்பட்ட போது, பஞ்சாப் மாநிலம் விவசாய விளைச்சலில் இயற்கையாகவே, சிறந்து விளங்கியது. அதில் முக்கிய விளைச்சல் பகுதிகள் பாகிஸ்தானுடன் சென்று விட்டன. ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில், வெள்ளைக்காரர்கள் நிரந்தரமாக தாங்கள் இந்தி யாவை ஆளப்போகி றோம் என்ற எண்ணத்தில், பஞ்சாப் விளைச்சலை அதிகப்படுத்தினார்கள் என் கிறார் சோப்ரா. அதற்காக நிலமற்ற உழவர்களுக்கு, நிர்ப்பந்தமாக நிலச் சீர்திருத்தம் செய்து, நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இலவச மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் அளித்தார்கள். எந்த ஒரு ஆலை உற்பத்தியும் இல்லாமல், பஞ்சாப் விவ சாயத்தை மட்டுமே சார்ந் திருந்தது. அத்தகைய காரணங்களினால் விளைந்த விளைச்சல், பஞ்சாப் உட்பட இந்தியா முழுமைக்கும் உணவு தந்தது. இப்படியாக பஞ்
சாப் பற்றி நமக்கு ஒரு புதிய வரலாற்றுச் செய்தியை, சோப்ரா அளிக்கிறார்.
ஆங்கிலேயே ஆட்சி யாளர்களது அன்றைய
சதித்திட்டத்தையும்
சோப்ரா அம்பலப்படுத் தினார். இந்தியாவை வணி கத்தின் மூலம் அதிகாரம் செலுத்திய, கிழக்கிந்திய கம்பெனி கடுமையாக ஊழல் செய்யத் தொடங் கினார்கள். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலேயே அரசு மெக்காலே பிரபுவை, இந்தியாவிற்கு ஆளுநராக இறக்கிவிட்டது. 1833ம் ஆண்டு மெக்காலே இங்கு வந்தார். இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த் தார். பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இந்த பூமி யில் இல்லை என்று அதிர்ச்சியுடன் எழுதினார். இந்தியாவிலிருக்கும் வளத்தையும், மனத்தி
டத்தையும், மரபையும், பண்பாட்டையும் உடைத்து இந்தியர்களின் முதுகெலும்பை முறிக்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதினார். அதற்காக அடிமைக்கல்வியை அறிமுகப்படுத்தினார். 1858ல் மெக்காலே மறைந்தார். 1859ல் ராணி விக்டோரியாவின் தலைமையில் இந்தியா முழுமையான காலனி நாடாக ஆனது. இப்படி ஒரு அரசியல் வரலாற்றை தொகுத்து, அதன் மூலம் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்த, சுயசார்பு பொருளா தாரத்தை எப்படி உடைத் தார்கள் என்று சோப்ரா விளக்குகிறார்.
பருத்தியை விளைச் சல் செய்யுங்கள். ஆனால் இங்கிலாந்தில் கொண்டு போய் நெய்து கொள்கிறோம். இப்படிப் பட்ட கொள்கையுடன் ஆங்கிலேயே ஏகாதிபத் யம், இந்திய விவசாயத்தை தனக்கான உற்பத்திப் பின்னிலமாக ஆக்கியது என்பதே சோப்ரா கொடுக்கின்ற வரைபடம். பருத்தி இந்தியாவின் பாரம்பரிய, சுயமான உற்பத்தி. இந்தியாவை காலனியாக்கிய ஆங்கிலே யர்களுக்கு பருத்தி உற்பத்தி பற்றியும், பருத்தி உடைகள் பற்றியும் தெரியாது. மேற்கிந்திய, கிழக்கிந்திய மொரீசியஸ் நாடுகளுக்கு, இந்திய விவசாயிகளை கூட்டிச் சென்று, பருத்தி உற்பத்தியை அவர்கள் பரவலாக்கினர். இப்படி வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கின்ற அந்த இயற்கை விஞ்ஞானி, பசுமைப் புரட்சி பற்றி யும், மரபணுக்களை மாற்றி புதிய செயற்கை விதைகளை உருவாக்கும், பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் விளக்குகிறார்.
வீரிய விதைகள் அறிமுகப்படுத்தப்படும் போதே, அவற்றினால் ஏற்படும் பூச்சிகளை அழிக்க, அவர்களே தயாரித்து பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனைக்கு தயாரானதை சுட்டிக் காட்டுகிறார். உயிரியல் தொழில் நுட்பம், இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில், இயற்கை யாகவே 6,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந் தது என்று கூறுகிறார். இப்போது வந்திருக்கும் மரபணு மாற்று விதைகள் உருவாக்கப்படும் செயற்கை முறைகளை விளக்குகிறார். பாக்டீரியா எனப்படும் குறிப்பிட்ட கிருமியை, குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து எடுத்து, பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாட்டுக்கு கொடுப்பதோ, கத்தரிக்காய் உற்பத்தியை அதிகப்படுத்தவோ, பருத்தி உற்பத்தியை அதிகப் படுத்தவோ, அந்தந்த பொருள்களுக் குள் ஊசி மூலம் ஏற்று வதோ, மரபணு மாற்று என்று கூறுகிறார்கள்.
மரபணு மாற்று கத்த ரிக் காய்கள் விளையும் போது, பூச்சிக் கொல்லி மருந்து களுக்கு வேலையே இல்லை என்பது சிலரது வாதம். தானாகவே அந்த மரபணு மாற்று ஊக்கி, பூச்சிகளைக் கொன்று விடுகிறது என்பது அவர்களது விளக்கம். உள்ளபடியே தன்மீது அமரும் பூச்சிகள் மீது, ஒரு பாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள, எப்படி நச்சை கக்குகிறதோ, அப்படி நச்சைக் கக்கி இந்த ஊக்கிகள் (ஹார் மோன்கள்) அனைத்துப் பூச்சிகளையும் கொன்று விடுகின்றன என்பதே
சோப்ரா கொடுத்த விளக்கம். அதனால் பயிருக்கு பயனுள்ள பூச்சிகளும் கூட அழிக்கப்படும் என்பதே விளைவு. ஆகவே இந்த மரபணு மாற்று உணவுகள், எந்த விதத்திலும் இயற்கையான ஆரோக்கிய தன்மை கொண்டவை அல்ல என்பது தெளிவாகிறது.
கனடா நாட்டு நாடாளு மன்றம், மான்சான்டோ என்ற மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்திற்கு, ஆதரவாக நிலை எடுத் தது. பால் உற்பத்தியை அதிகப்படுத்த, மாடுகளுக்கு மரபணு மாற்று ஊக்கிகளை உள்ளே செலுத்தும் முறையை, கனடா நாட்டு அரசாங்க அதிகாரியாக இருந்த
சோப்ரா எதிர்த்திருக்கிறார். பொவைன் வளர்ச்சி ஊக்கி என்று அழைக்கப்படும் மரபணுவை, மாட்டுக்கு செலுத்துவது ஆபத்தானது என்று கனடா நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, சோப்ரா ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். அதையொட்டி கனடா நாடு தனது அனுமதியை நிறுத்தி வைத்தது. ஆனால் அமெரிக்கா மட்டும் தனது அனுமதியைத் தொடர்ந்தது. இத்தகைய அம்பலப்படுத்தலால்
சோப்ரா அரசு பணியை இழந்தார். தனது பணியை விட, மக்களது ஆரோக்கியமும், இயற் கையான உற்பத்தியும் தான் முக்கியம் என்று உணர்ந்த சோப்ராக்கள், இளைய தலைமுறையில் உருவா கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி யுள்ளது.