Tuesday, February 16, 2010

60 ஆண்டுகளாக பற்றி எரியும் நாகர்கள் பிரச்சினை

அனைத்து நாட்டு நாகர் ஆதரவு மையம் என்ற அமைப்பு, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர் டாங் நகரில் இருந்து ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய அரசு தங்கள் இனமக்கள் மீது மோதல் போக்கை கையாளுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். அமைதிக்கான பேச்சு வார்த்தைகள், நாகர் புரட்சியாளர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தி யில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும், அது இழுத்துக் கொண்டே இருக்கிறது. நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தை என்பதாகத்தான், இரு சாராருக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங் கியது. இந்திய அரசுக் கும், நாகர்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது, இரண்டு நாடுகளுக்கு இடையிலானது என்பதாக அந்த அனைத்து நாட்டு அமைப்பு நினைவு படுத்துகிறது. அதாவது நாகர்கள் தங்களை இந்தியாவின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண் டதே இல்லை. இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கும் போதும், அத்தகைய ஒரு புரிதலை அவர்கள் கொண்டிருக்க வில்லை. தங்களை இந் தியர்கள் என்பதாக, எந்த நாகரும் இதுவரை எண்ணவும் இல்லை. இதை இந்தியாவெங்கும் பல்வேறு வேலை களுக்காக, நடமாடும் நாகர்கள் அனைவருமே தங்களது சிந்தனையாகக் கொண்டுள்ளனர்.
தென்னிந்தியர்கள் வட இந்தியா செல்லும் போதோ, வேறு இடங்களிலோ, நாகர்களை சந்தித்தால், சந்தித்து அவர்களது தேசிய இனப்பிரச்சினையின் மீது அக்கறையுடன் விவாதித்தால், நீங்கள் எப்போது இந்தியாவை விட்டு வெளியே வரப் போகிறீர்கள் என்ற கேள் வியை சாதாரணமாக நாகர் கள் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, இந்தியாவை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். தங்களுடைய பிரச்சனை கள் மட்டும் அல்லாமல், இந்தியாவிலிருக்கின்ற அனைத்து தேசிய இனங் களும், சுயநிர்ணய உணர் வுள்ளவர்கள் என்பதாக நாகர்கள் எண்ணுகி றார்கள்.
பேச்சு வார்த்தையின் இந்த கட்டத்தில் இந்திய அரசு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் நாகர்களோ, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள் நடத்தப் படவேண்டும் என்று, முன்பு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள விவ ரத்தை வெளியே கூறி, தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்கிறார்கள். பேச்சுவார்த்தையின் மூலம் நல்லதொரு தீர்வை எட்டலாம் என நாகர்கள் முயற்சிப்பதாகவும், ஏற் கனவே ஒப்புக் கொண்ட விதிகளை மீறுவதன் மூலம், இந்திய அரசு அத்தகைய பேச்சுவார்த் தையை உடைத்து விட முயற்சிக்கிறது என்றும், நாகர்கள் குற்றம் சாட்டுகி றார்கள். பேச்சு வார்த்தை உடைந்தால், அதற்காக நாகர்கள் மீது குற்றம் கூறக் கூடாது என்றும் அவர் கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
இப்போது இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரை நாகர் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தியில் 60வது முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. சென்ற ஆண்டு நாகாலாந்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய நாட்டின் வரலாற்றில் இல்லாத முறையில், ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்ப தாக அந்த தீர்மானம் அழைக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இருக்கின்ற, அனைத்துக் கட்சி உறுப்பி னர்களும் ஒரே குரலில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் நாகா அரசியல் பிரச்சினையின் மீது ஆய்வு செய்ய, ஒரு கூட்டு நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதாக எழுதப்பட்டது. பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கின்ற இந்தியநாகா அரசியல் பிரச்சினைக்கு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்காக தங்களது புதிய நேர்மையான முயற்சியை எடுப்பதாக, இந்திய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், அந்த தீர்மானம் பாராட்டியுள் ளது.
மேற்படி செய்தியை மாநிலங்களவை உறுப் பினர் கேகிஹோ சிமோமி, நாடாளுமன்றத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் தெரிவித்தார். அப்போது உள்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை என்பது தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆகவே பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் தலைமறைவு நாகர் குழுக்களான, ஐசக்முய்வா தலைமையிலான நாகா லாந்து தேசிய சோசலிச கவுன்சிலும், கப்லாங் தலை மையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலும் மற்றும் நாகா தேசிய கவுன்சிலும் எந்த ஒரு நாகர்களுக்கான சிறந்த தீர்வையும், பல் வேறு குழுக்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அந்த எம்.பி. கூறினார்.
1950ம் ஆண்டு காலகட்டங்களிலேயே, நாகா எழுச்சி, பிசோ தலைமையில் உருவான நாகா தேசிய கவுன்சில் மூலமாகக் கிளம்பியது. அது சுதந்திரமான, தனி இறை யாண்மை கொண்ட ஒரு நாகா தேசத்தை அடைவதுதான் தங்கள் லட்சியம் என்பதை முன்வைத்தது. அப்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வட்டார நிர்வாகத்தின் கீழ், நாகா மலைகளின் மாவட்டம் என்பது இருந்தது. அத னால் அப்போது கிளம்பிய நாகா எழுச்சியை, உள்ளே நுழைந்த இந்திய ராணு வம் அடக்கி விட்டது. அதனாலேயே நாகா தேசிய கவுன்சிலின் புரட்சிகர உறுப்பினர்கள், தலைமறைவாகச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர் பிசோ லண்டனுக்கு தப்பி ஓடினார். கிறித்துவ பாதிரியாரான மைக்கேல் ஸ்காட் பொறுப்பில் பிசோ, லண்டனிலேயே தங்கியிருந்து ஆங்கிலேய நாட்டின் குடியுரிமைப் பெற்று, தொடர்ந்து தன் மக்களுக்கான பிரதிநிதித் துவத்தை, மறையும் வரை தொடர்ந்தார். மிதவாத நாகா தலைவர் சிலுஆவோ தலைமையில் வந்தவர்கள், இந்திய அரசுடன் பேசி தீர்க்க முதன்மை கொடுத்தார்கள். அதனால் 1963ம் ஆண்டு ஜனவரி முதல் நாளே, தனி நாகாலாந்து மாநிலம் உருவானது. அதன் முதல் முதலமைச்சராக சிலுஆவோ பொறுப் பேற்றார். ஆனாலும் நாகா தேசிய கவுன்சில் பெயரில் சில தலைவர்கள் ஆயுதப் போராட்ட நடவடிக் கையை தொடர்ந்தார்கள். அன்றைய கிழக்கு பாகிஸ் தானுக்கும், சீனாவிற்கும் சென்று, கொரில்லா போராட்ட பயிற்சிகள் எடுத்து, ஆயுதங்களையும், தோட்டாக்களையும் பெற்று வந்து தாக்கு தல்கள் நடத்தினார்கள். 1976ம் ஆண்டு இந்திய அரசுடன், நாகர்கள் போர் நிறுத்தம் செய்து வந்தார்கள். அப்போது அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரி புராவுக்கு ஆளுநராக இருந்த எல்.பி.சிங் முயற் சியில், சில்லாங் சமாதான ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை நிராகரித்த
ஐசக் ஸ்வு மற்றும் துயிங்கலன் முய்வா ஆகி யோர் பிசோ தலைமை யிலான நாகா தேசிய கவுன்சிலில் இருந்து வெளியே வந்து புதிய நாகா புரட்சிகர குழுவை உருவாக்கினார்கள். 1980ம் ஆண்டு அது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்று பெயர் பெற்றது. ஆயுதப் போராட் டத்தை அது தொடர்ந்து நடத்தியது. அந்த அமைப்பு இரண்டாக உடைந்து, அதில் ஒன்றை கப்லாங் தலைமையேற்றார்.
ஐசக்கும், முய்வாவும் 1995ம் ஆண்டு பாரீஸ் நகரிலும், பிறகு நியூயார்க் நகரிலும், இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவுடன் பேச்சுவார்தையில் ஈடு பட்டனர். 1997ம் ஆண்டு பிப்ரவரியில் சூரிச் நகரில் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2002ம் ஆண்டில் டோக்கியோவில் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவ்வாறு 9 ஆண்டுகளாக ஒரு தீர்வு வேண்டி, பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கள் எழுப்பி வரும், சுதந்திரமான தனி இறையாண்மை கொண்ட அரசு என்ற கோரிக்கையை கைவிடுவதோ, அல்லது இந்தியாவிற்கு உட்பட்டு, பெரிய அளவில் சுயாட்சி கொண்ட நாகா மாநிலத்தை உருவாக்குவது என்பதோ, பேச்சு வார்த்தை நிறை வில் காணப்படும். மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் பலப் பகுதிகளை, நாகாலாந் துடன் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். 50க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய ஆதி வாசி இனங்கள் அங்கே வாழ்கின்றனர். அங்கு வாழும் மைத்தி இன மக்கள் இந்துக்களாகவும், அனைத்து மலைவாழ் பழங்குடியினர் கிறித்துவர் களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நிலப்பிரச்சினையில் மோதல்களையும் கொண் டிருக்கிறார்கள். அந்த இடைவெளியில்தான் இதுவரை இந்திய அரசு தனது அதிகாரத்தை நிலைக்க வைத்துக் கொண் டிருக்கிறது.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுவாகவும், மக்கள் செல்வாக்கு மிக்கவர் களாகவும், தங்களுக்கென ஒரு தலைமறைவு அர
சாங்கத்தை நடத்திக் கொண் டிருப்பவர்களாகவும், ஆயுதம் தாங்கிய படை யணியையும், போது மான தளவாடங்களையும் வைத்திருப்பவர் களாகவும், 60 ஆண்டு போராட்ட வரலாற்று அனுபவத்தை பெற்றவர்களாகவும் இருக்கின்ற நாகா புரட்சியாளர்களுடன், இந்திய அரசு ஒரு மரியாதைக்குரிய தீர்வை எட்டுமா என்பதே எதிர் காலத்தை நோக்கி நிற்கும் கேள்வி.