Saturday, February 13, 2010

ஒரு ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாகிறது

அஸ்ஸாம் மாநிலத்தின் முழு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கும் உல்ஃபா என்ற ஒன்றுபட்ட அஸ்ஸாம் விடுதலை முன்னணி, ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தில் தனி
சுயாட்சி மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்ட, கரீபி ஆங்லாங் என்ற ஆதிவாசி பகுதியை, விடுதலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை, அங்குள்ள போராளிகள் அமைப்பு நடத்திக் கொண் டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளுடனும் மத்திய அரசு பிப்ரவரி 7ம் தேதியும், பிப்ரவரி 13ம் தேதியும் பேச்சு வார்த்தை நடத்த எடுத்த முயற்சிகள், வெற்றிகரமாக நடந்து வரு கின்றன. இரண்டு நாட்கள் முன்னால் கரீபி லாங்ரீ நோத் காசர் மலைகள் விடு தலை முன்னணி என்ற அமைப்பின் தலைவரான தீபு சங்கியா திமுங், தனது துப்பாக்கிகளை அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகாய் முன்னிலையில், கவுகாத்தியில் திபு என்ற இடத்தில் அடையாளமாக ஒப்படைத்து, தனது போராளி அமைப்பு ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து மாறிக் கொள்வதை அறிவித்தார். இந்த அமைப்புக்கு கே.எல்.என்.எல்.எஃப். என்று பெயர். இதற்கு முன்பே கருப்பு விதவை என்ற திமா ஹலம் தாவோ காவின் அமைப்பு இதே போல ஆயுதங்களுக்கு விடைகொடுத்து, அர சாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது. மொத்தத்தில் 412 போரா ளிகள் இவ்வாறாக தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதில் 27 பெண் போராளிகளும் அடக்கம். அவர்கள் மொத்தம் 158 தாக்கும் துப்பாக்கிகளை அந்த விழாவில், அரசாங்கத் திடம் ஒப்படைத்தனர். அப்போது அஸ்ஸாம் முதல்வர், ஆயுதங்கள் பிரச்சனைகளை தீர்க்காது என்றும், இலக்கை அதன் மூலம் அடைய முடியாது என்றும், வழக்கமான அரசியல்வாதிகள் போல, வியாக்யானம் செய்தார்.
கரீபி பழங்குடியினரின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையில் எடுத்த கே.எல்.என்.எல்.எஃப். என்ற இந்த அமைப்பு, ஒன்று பட்ட மக்கள் ஜனநாயக தோழமை என்ற அமைப் பிலிருந்து வெளியே வந்த ஒரு கரீபி பழங்குடியினர் போராளி அமைப்பு. இவர்கள் தான் அஸ்ஸாம் மாநிலத்தில், வேலைக்கு வந்திறங்கிய இந்தி பேசும் மக்களைப் படுகொலை செய்தவர்கள். ஏற்கனவே 2002ம் ஆண்டு மே மாதம் யு.பி.டி.எஸ். என்று அழைக்கப்படும் ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக தோழமை அமைப்பு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தனது ஆயுதப் போராட்டப் பாதை யிலிருந்து விலகிக் கொண் டது. 2004ம் ஆண்டு மே மாதம் கே.எல்.என்.எல்.எஃப். உருவானது. இப்போது 6 ஆண்டுகள் கழித்து, இவர்களும் தங்களது ஆயுதங்களை கைவிட்டு, அரசியல் போராட்டத்திற்கு வந்துள் ளனர். இந்த அமைப்பினர் அவ்வப்போது கொடுத்து வந்த நகர்ந்து செல்லும் தாக்குதல்களால், அந்த வட்டாரத்தில் வெளிச் சக்திகளாகப் போய் இறங்கிய இந்திய ராணுவம், கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அதே போல உல்ஃபா அமைப்பும் எத்தனை தாக்குதல்களை சந்தித்தாலும், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் வேரூன்றிய நிலை யிலேயே இருக்கிறது. இந்த இரு போராளி அமைப்புகளுடன் மத்திய அரசை பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்தம் செய்த பணி, குறிப்பாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாயால் முன் னெடுக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 1978ம் ஆண்டு வரை, வங்காளிகளின் ஆதிக்கம் இருந்து வந்தது. கல்விச் சாலைகளிலும், அரசாங்க பணிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்காளிகளே அதிகமாக ஆக்கிரமிப்பு செய்திருந் தார்கள். அஸ்ஸாம் மாநிலத் தினுடைய மக்கள் தங்க ளுக்குரிய பணியிடங்கள் கிடைக்காமல், தத்தளித் தார்கள். அதுதான் 197879 ஆண்டுகளில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் தலைமையில் மக்கள் நடத்திய எழுச் சிப் போராட்டமாக எழுந்தது. அதையொட்டி வங்காளிகள் விரட்டப் பட, அஸ்ஸாம் மாநிலத்த வர்கள் முழுமையாக ஈடுபடும் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங் களும் வலுப்பெற்றன. அதுவே சில ஆண்டுகள் கழித்து ஏ.ஜி.பி. என்று அழைக்கப்படும், அஸ்ஸாம் கனபரிஷத் ஆட்சிக்கு வர உதவியது. ஆனாலும் கூட அவர் கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மத்திய ஆளும் வர்க்கத் தின் ஒரு அங்கமாக ஆகி விட்டார்கள் என்ற குற்றச்
சாட்டிற்கு உள்ளானார் கள். அஸ்ஸாம் மாநி லத்தில் பல்வேறு விதமான பழங் குடிகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மாவட்டங்களில் வசித்து வரும், கரீபி ஆங்லாங் பழங்குடியினர், போர் குணமிக்க அறுதியிடும் தன்மை கொண்ட வர்கள்.
அவர்கள் தங்களு டைய சுயாட்சி உரிமை களை பெறுவதற்கு, ஏ.எஸ்.டி.சி. என்றழைக் கப்படக் கூடிய, சுயாட்சி மாநில கோரிக்கை குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழுவினர் நக்சல் பாரி புரட்சியாளர்களால் வழிகாட்டப் பட்டார்கள். அந்த ஏ.எஸ்.டி.சி. சார்பாக நாடாளுமன்றத்திற்கு, காங்கிரஸ் கட்சியையும், ஏ.ஜி.பி. கட்சியையும் எதிர்த்து நின்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். அதே போல கரீபி ஆங்லாங் பகுதியைச் சேர்ந்த 4 சட்டமன்றத் தொகு திகளுக்கும், ஏ.எஸ்.டி.சி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் முறையின் மூல மாகவும், ஜனநாயக போராட்ட இயக்கங்களின் மூலமாகவும் போராடிப் பார்த்த, கரிபீ ஆங்லாங் பழங்குடி மக்கள் தங்களது விடுதலை லட்சியங்களை அடையவில்லை என உணர்ந்தார்கள். அதன் பிறகு அங்கே உருவானது தான் யு.பி.டி.எஸ். என்ற அமைப்பு. அதுவும் தனது ஆயுதப்போராட்டப் பாதையைக் கைவிட்டப் பிறகு உருவானதுதான் கே.எல்.என். எல்.எஃப். என்ற அமைப்பு. அதுவும் கூட இப்போது தனது ஆயுதப் போராட்டப் பாதையை கைவிட்டுள் ளது.
மேற்கண்ட நிகழ்வு களிலிருந்து நமக்குப் புரிவதெல்லாம், ஆயுதப் போராட்டப் பாதையும், அரசியல் போராட்டப் பாதையும், மாறி மாறி அந்தப் பகுதியில் எடுக்கப் பட்டுள்ளது என்பததான். தமிழ்நாடு தனிநாடு என்ற கோரிக்கையை கைவிடும் போது அண்ணா கூறிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது. தனிநாடு கோரிக்கை இப்போது கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பது தான் அன்று அண்ணா குறிப்பிட்ட செய்தி. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் இயக்கங்கள் வளர்ந்தன. தேர்தல் அரசியலில் நுழைந்து விட்ட அந்த கட்சி சார்பற்ற மக்கள் இயக்கம், ஒரு அரசியல் கட்சியாக மாறியது. அதன் பிறகு மக்களது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. அதுவே அஸ்ஸாம் முழுமைக்கான விடுதலையை, ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவ தற்கான அமைப்பை தோற்றுவித்தது. அந்த அமைப்பும் கூட பல்வேறு நிர்ப்பந்த வேலைகளை செய்தாலும், தொடர்ந்து வெற்றி பெற முடிய வில்லை. அதற்குள் அஸ் ஸாம் மாநிலத்திற்குள் வாழுகின்ற பல்வேறு பழங்குடிகள், தங்களது சுயாட்சிக்கான போராட் டங்களை உருவாக் கினார்கள். அதுவே கரீபி ஆங்லாங் பகுதியில், ஜனநாயக இயக்கமாக வளர்ந்து, அதன் மூலம் மாவட்ட சுயாட்சியைப் பெற்றார்கள். அதன் மூலமும் கரீபி பழங்குடி மக்களுக்கான உரிமைகள் கிடைக்காததனால், புதிய அமைப்புகள் தோன்றி, ஆயுதப்போராட்டங் களை நடத்தினார்கள். இப்போது அவர்களும் தங்களது போராட்ட முறையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள் ளது.
இதில் அடிப்படையாகப் புரிய வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது பழங்குடி மக்களும், சிறிய தேசிய இனங்களும் தங்களது சுயாட்சியையும், சுய அதிகாரத்தையும், உரிமை களையும் நிலவுகின்ற அரசாட்சி அமைப்புக்குள் பெற முடியாமல், திக்கு முக்காடிப் போகிறார்கள். அதன் மூலம் மறுக் கப்பட முடியாத தங்களது நீதியான கோரிக்கை களுக்காக, பல்வேறு போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு, உரிமைப் போராட்டத்தை தொடர்கிறார்கள். அதில் அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறுவதும், ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாக மாறு வதும் இடையில் நடக்கக் கூடிய வழிமுறையே தவிர, போராட்ட இலக்கை கைவிட்டதாக பொரு ளல்ல. இதுவே நாம் இந்தியாவிலும் கற்றுக் கொண்டிருக்கும் பாடம்.