Friday, February 12, 2010

தென்னிலங்கையில் ஆயுதப் போர் வெடிக்குமா?

இலங்கைத் தீவில் நடந்த முடிந்த அதிபர் தேர்தல், புதிய அணி
சேர்க்கைகளை உருவாக் கிய அதே நேரத்தில், புதிய பிளவுகளையும் உரு வாக்கியுள்ளது. அதிபர் ஆட்சி அல்லது நாடாளு மன்ற ஆட்சி என்ற தளத்தில் அந்த பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அதிபராக முதலில் மகிந்த ராஜபக்சே போட்டியிடும் போது, அவர் சந்திரிகாவை ஓரங்கட்டினாலும், ஜனத விமுக்தி பெரமுனாவை தனது கூட்டணிக்கட்சியாக சேர்த்துக் கொண்டார். அப்போது ஜே.வி.பி.க்கு இலங்கை அரசாட்சியை ஒற்றையாட்சி என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் அழுத்தமாக இருந்தது. அதை மகிந்தா ஏற்றுக் கொண்டார். அதையே அவர் தனது தேர்தல் வியூகத்திற்கும் பயன் படுத்தினார். மகிந்தாவை எதிர்த்து ஐ.தே.க. தலை வர் ரணில் விக்ரம சிங்கே அப்போது அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். ரணில் அதிகமாக தமிழர் வாக்குகளை எதிர்பார்த்து அந்த தேர்தலில் ஈடுபட் டார். அப்போது வன்னிப் பகுதியில் தமிழ் அர
சாங்கத்தை நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு வேறு பட்டு சிந்தித்தது. புலிகள் அமைப் பிலிருந்து கிழக்கு மாகாண தளபதி கருணாவையும், கருணாவுடன் 5,000 போராளிகளையும் பிரித்து, புலிகள் அமைப்பை
உடைத்தது ரணில் விக்கிரம சிங்கே தான் என்ற கருத்து, ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தமிழ் ஈழ ஆர்வலர்களின் விருப்பம், தேர்தலில் ரணிலுக்கு சாத கமாக இல்லை. போரை நடத்திக் கொண்டிருந்த மகிந்தாவும், ஒற்றையாட்சி அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே இரண்டு பேருக்குமே வாக் களிக்க முடியாது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அந்த அதிபர் தேர்தலைப் புறக் கணித்தார்கள். அதன் காரணமாகவே மகிந்தா வெற்றி பெற்றார். மகிந்தா வின் சர்வாதிகார ஆட்சியை பார்த்தவர்கள், தமிழர்கள் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும், அந்த தவறினால் தான் மகிந்தா வெற்றி பெற்றார் என்றும், அந்த தவறை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இப்போது 2வது முறை யாக அதிபர் தேர்தலில் மகிந்தா நின்றார். இந்த முறை அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத் தினார்கள். மகிந்தாவை சென்ற அதிபர் தேர்தலில் ஆதரித்து வேலை செய்த ஜே.வி.பி., இந்த முறை மகிந்தாவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரித் தது. இப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்றம் தென் னிலங்கையில் ஏற்பட்டது என்றால், வடக்கிலும், கிழக்கிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள், பொன்சேகாவை ஆதரித்தார்கள். அதனாலேயே தமிழர்கள் வாழும் வடக்கிலும், கிழக்கி லும், கொழும்பிலும், மலையகத்திலும், பொன்சேகாவிற்கே வாக்குகள் விழுந்தன. இதுவும் கூட ஒரு அரசியல் அணி சேர்க்கை என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இப்போது தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பொன்சேகாவை கைதா அல்லது கடத்தலா என்றே தெரியாத அளவுக்கு, ராணுவ காவல் துறை மூலம் மகிந்தா செயல் பட்டுள்ளார். அதுவே தென்னிலங்கையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவிற்கு ஆதர வாக தெருவில் இறங்கி போராடியவர் கள் மீது, மகிந்தா ஆதரவாளர் கள் தாக்கியிருக் கிறார்கள். இத்தகைய போராட்டங் களும், தாக்குதல்களும் தொடரும் என்று தெரி கிறது.
தமிழர்கள் மத்தியில் உலகம் எங்கிலும் ஒரு விவாதம் நடந்து கொண்டி ருக்கிறது. ராஜபக்சே அர சாங்கத்தால், கைது செய் யப்பட்ட பொன்சேகா ஏற்கனவே தமிழருக்கு எதிரான போரில், மோசமாக நடந்து கொண்டதற்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ப தாக ஒரு கருத்து உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த கருத்து, அதிபர் தேர்தல் நேரத்திலேயே வெளிவந்த சிந்தனைப் போக்குதான். அதாவது ராஜபக்சேயும், பொன்சேகாவும் போட்டியிடுகின்ற ஒரு தேர்தலில், இருவரை யுமே தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதுதான் அந்த கருத்து. இருவரும் சேர்ந்து தான் ஒரு இன அழிப்புப் போரை, தமிழர்கள் மீது நடத்தினார்கள். அந்தப் போரை நடத்துவதற்கான அனைத்து திட்டங் களையும் உருவாக்கி, அந்நிய நாட்டு உதவிகளை யும் வாங்கிக் கொண்டு, அரசியல் முடிவுகளை செய்தது மகிந்த ராஜபக் சேயின் கும்பல் என் பதால், தமிழர்கள் வாக்கு மகிந்தாவிற்கு ஆதரவாக போடப்பட முடியாது. அதே சமயம் மகிந்தாவை எதிர்க்கிறேன் என்ற பெய ரில் நிற்கின்ற பொன்சேகா, நேரடியாக வடக்கு மாகாணத்தில் சிங்களப் படைக்கு தலைமை எடுத்து நின்று, தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்தார் என்பதனால் அவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதே அந்தக் கருத்து. மேற்கண்ட கருத்துக்கு ஏதுவாக சிவாஜிலிங்கமும், டாக்டர் விக்ரமபாகு கருணா ரத்னேயும் சேர்ந்து நின்று போட்டியிட்டார்கள். அவர்களது பிரச்சாரம் முக்கிய இரு வேட்பாளர் களான, ராஜபக்சேயையும், பொன்சேகாவையும் போர் வெறியர்களாக சித்தரித்தது.
பொன்சேகாவை பொருத்தவரை அவர் எந்த விதத்திலும், தமிழர்களுக்கு சாதகமாக போர் நேரத்தில் சிந்தித்தது இல்லை. அப்பாவி தமிழர்கள் படு கொலையானதற்கும், தமிழ் போராளிகள் மீது ரசாயன குண்டுகளைப் போட்டு, படுகொலை செய்வதற்கும், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானதற்கும், சிங்கள ராணுவம்தான் பொறுப்பு எனும் போது, அந்த ராணுவத்திற்கு தலைமை தாங்கிய
சரத் பொன்சேகாதான் நேரடியான பொறுப்பு என்ற அழுத்தமான கருத்தை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள்.
அதே சமயம் தமிழின அழிப்புப் போர் நடை பெறும் நேரத்தில், ராணு வத் தளபதி சரத்பொன்சேகா, கூறிய வார்த்தை உலக மெங்கிலும் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையை கிளப்பியிருந்ததை, இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு, சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்ற வர்கள் அங்கே வாழலாம்; ஆனால் உரிமை கேட்கக்கூடாது என்றும், பொன்சேகா கூறியதை இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அப்படி கூறிய பொன்சேகாவிற்கு, தமிழர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதற்கு காரணமாக அமைந்ததும், அதிபர் தேர்தல் நேரத்தில் பொன்சேகா உதிர்த்த உறுதிமொழிகள்தான். அந்த உறுதிமொழிகளில், தமிழர் பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக அறி வித்திருப்பதை நீக்குவேன் என்றும், ராணுவத்தை அந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெறுவேன் என்றும், முள்வேலி முகாம்களை முழுமையாக திறந்து விடுவேன் என்றும், கைது செய்யப்பட்டவர்களை போராளிகள் உட்பட விடுதலை செய்வேன் என்றும், கடத்தப் பட்டவர்களில் மரண மடைந்தவர்கள் குடும்பத் திற்கு நட்டஈடு தருவேன் என்றும், கூறிய வாக்குறுதி கள்தான் தமிழர்களை ஈர்த்தது. போர் நேரத்தில் கண்டபடி தமிழர்களுக்கு எதிராகப் பேசிய, பொன்சேகா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசியதுதான் அதி சய நிகழ்வாக நடந்தது.
இப்போது தென்னிலங் கையில் பொன்சேகாவின் பெயரால் கொந்தளிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த கொந்தளிப்பிற்கு ஒரு வரலாறு உண்டு. ராஜபக்சே குடும்பத்தினர் பொருள் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் என்று தென்னிலங்கையில் உள்ள ஏழை சிங்கள மக்கள் எண்ணிப் பொரு முகிறார்கள். ஜனநாயக ரீதியாக செயல்பாடுகள் இல்லை என்ற தாக்கம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அவர்களை துன்புறுத்துகிறது. ஜே.வி.பி. இப்போது கடும் கோபத்தில் இருக்கிறது. அவர்களுடைய
செல்வாக்கு பகுதிகளில், இளைஞர்களும், மக்களும் பெரிய அளவிலான மக்கள் எழுச்சிக்கு, தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் அரசு ஊழியர்களை யும், ராணுவத் தினரையும் நோக்கி கலகம் செய்யும்படி அறைகூவல் விடுகின்றனர். தவறான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர்.
இன்னொரு ஆயுதக் கிளர்ச்சி தென்னிலங் கையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜே.வி.பி. நடத்திய ஆயுத கிளர்ச்சி, 1971ம் ஆண்டி லும், 80களிலும் தென்னிலங் கையை நிலைகுலைய வைத்தது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தால் அநியாயமாகக் கொல் லப்பட்டனர். அத்தகைய எழுச்சி மீண்டும் எழலாம் என்ற அறிகுறிகள் தென் படுகின்றன. அதனால்தான் ரஷ்யாவிடம் சென்று 300 மில்லியன் டாலர் பெறு மான ஆயுத உதவியை ராஜபக்சே பெற்றுள்ளார். சிங்கள தேசத்தின் நாட்டுப்பற்றாளர்கள் இந்த முறை எழுவார்கள். சர்வாதிகாரத்திற்கு எதிராக உழுவார்கள். இலங்கைத் தீவிலும் ஒரு ஜனநாயக வெளிச்சம் பிறக்க உதவுவார்கள். இப்படி ஒரு எதிர்பார்ப்பு சில ஜன நாயக உணர்வாளர்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.