Saturday, January 2, 2010

சந்திரசேகரன் மரணம்

கொழும்பு, ஜன. 2
சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர்,பல்வேறு போராட்டங்களிலும் பங்காற்றியவராவார்.
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த சந்திரசேகரன், முதன் முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார்.
இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த சமாதான நீதிவான் பதவியே அவரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகிய அவர் மலையக மக்கள் முன்னணியை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியான ஈ.பி.ஆர்.எல்.எஃப்.தலைவர் பத்மநாபாவின் முன் முயற்சியுடன் தோற்றுவித்து, முகுந்தன் தலைமையிலான புளொட் அமைப்புடன் இணைந்து முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவளித்தார் என்ற வகையில் இவர் சில காலம் சிறையும் சென்றார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவரின் ஆசனம் மூலமே 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவின் அரசாங்கம் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிவந்த அவர், ராஜபக்சே அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து வந்தார்.
இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்தார். மலையகத்தில் தனி அலகு கொள்கையை இவரின் கட்சி கொண்டிருந்ததுடன் மலையகத்தின் பிரச்சினைகளை வெளியுலகிற்கும் கொண்டு சென்றது

சரணடைந்த விடுதலைப் புலிகளை

கொழும்பு, ஜன. 2கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களையும், விடுதலைப் புலிகளையும் படுகொலை செய்த இலங்கை ராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர்ஒருவர் வெளியிட்டுள்ளார்< இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப் புலிகளை படுகொலை செய்த இலங்கை ராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற் கொண்டவர்களாகும் என தெரிவிக்கப் படுகின்றது. பின்வரும் ராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதானபடுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை ரெஜிமென்ட்டின் ஆணைய அதிகாரி கர்ணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பட்டாலியன் ஆணைய அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பட்டாலியன் ஆணைய அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.சிறப்பு படையின் கால்ஃப் கம்பெனியின் ஆணைய அதிகாரி கேப்டன் சமிந்த குணசேகரா,ரோமியோ கம்பெனியை சேர்ந்த கேப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கம்பனியைசேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கம்பெனியை சேர்ந்த கேப்டன் லசந்தாரத்னசேகரா.மேற்கூறப்பட்டவற்றில் கால்ஃப் மற்றும் ரோமியோ கம்பெனிகள் 1 ஆவது சிறப்பு படைபற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோணஞண் ணீ;மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவதுசிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா 59 ஆவது படையணியின் ஆணைய அதிகாரிமேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிமேஜர் ஜெனரல் கமால் குணரட்னா53 ஆவது படையணியின்ஆணைய அதிகாரிகர்ணல் ரவிப்பிரியா எட்டாவது நடவடிக்கை படையணியின் ஆணைய அதிகாரிஅரசு தரப்பில் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்கள்:அரச தலைவர் மகிந்த ராஜபக்சேஅரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்காபாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேசிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அரசு ராஜபக்சேவெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா ஆகியோர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

அறியாமை இருவகைப்படும்

அறியாமை என்பது பொதுவாக பொதுமக்கள் மத்தியில், கல்வியின்மையாலும், தொடர்பு சாதனங்கள் இன்மையாலும், குறுகிய வட்டத்திற்குள் தங்கள் வாழ்க்கையை கழித்து வருவதனாலும் இருந்து வரக்கூடிய ஒன்று என்பது தான் உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு வருகிறது. அறியாமை என்பதை பரந்துபட்ட மக்கள் மத்தியில் காணும்போது, அவர்கள் மீது ஒருவித அனுதாபத்தோடு யாருமே நோக்குகிறார்கள். அதே அறியாமையை சட்டத்தைப் பற்றிய விவகாரத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்பதாக விளக்குகிறார்கள். ஒரு அரசாங்கத்திற்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு அல்லது நிர்வாகத்திற்கு அல்லது அதிகாரிகளுக்கு, சொல்லப்போனால் அரசியல் வாதிகளுக்கு அதே அறியாமையிருக்குமானால், அதை குற்றம் என்று சொல்லுகிறார்களோ இல்லையோ, அதனால் விளையும் பாதிப்புகள் அல்லது தீமைகள் அதிகம் என்பதை கூறாமலிருக்க முடியாது. ஒரு அரசாங்கத்தை நடத்திச் செல்லும் ஆட்சியாளர்கள், எந்தப் பிரச்சனையை அணுகுகிறார்களோ அந்த பிரச்சனையை பற்றிய அறிவு என்பது அடிப்படையான தேவையாக அவர்களுக்கு இருக்கிறது. அதைப்பற்றிய அறிவை பெறுவதற்கு அவர்களுக்கு அதிகமான அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களது அமைச்சகத்தில் ஏராளமான அதிகாரிகளும், அந்த அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்கான உதவியாளர்களும், அவர்களுக்கு ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களை எடுப்பதற்கான ஆவணங்களும், கோப்புகளும் அங்கே அதிகமான அளவில் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு பிரச்சனை மீதும், சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் மட்டும் தான், வேறு எங்கும் கிடைக்காத அளவிற்கு புள்ளி விவரங்கள் கிடைக்க முடியும். அப்படி பரந்துபட்ட வாய்ப்புகள் இருந்தும் கூட, ஒரு ஆட்சியாளர் அதுபற்றிய விவரங்களில் அறியாமை இருப்பதாக கூறினாலோ, அறியாமை அடிப்படையில் செயல்பட்டாலோ, அது மாபெரும் குற்றமாக கருதப்பட வேண்டும். அப்படி இன்று கருதப்படுகிறதா என்று கேள்வி கேட்பதை விட, பொறுப்புணர்வு கொண்ட ஆட்சியாளர்கள் அறியாமை இருட்டிலே அகப்பட்டுக்கொண்டு, அதனாலேயே பொதுமக்களுக்கு தேவயான திட்டங்களோ, வளர்ச்சிகளோ, முன்னேற்றமோ போய்ச்சேரவில்லை என்று வரும்போது அது பொறுப்புணர்வற்ற அறியாமை என்ற மாபெரும் குற்றமாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் அறியாமை என்பது பல நேரங்களில் வெறும் கேலியாகவும், கிண்டலாகவும் ஆக்கப்பட்டு நிறைவடைந்து விடுகிறது. உதாரணமாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்களது தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை, தேர்தல் அதிகாரியிடம் பெற்றபிறகு, சட்டபேரவையில் தனது பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், அந்த சான்றிதழை ஆதாரமாக சட்டபேரவை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னால், தென் மாவட்டத்தில் தமிழகத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை சட்டபேரவை தலைவரிடம் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டும் என்ற விவரம் தெரியாமல், அந்த சான்றிதழை பிரேம் போட்டு வீட்டிலே மாட்டிவிட்டார் என்பதாக ஒரு செய்தி வெளியானது. இது அந்த உறுப்பினரின் அறியாமையை காட்டுகிறது. இது கடுமையாக கேலிச் செய்யப்பட்டது. இப்படி தனியொரு அரசியல்வாதி அடிப்படை பிரச்சனைகளை அறியாமலேயே செய்கின்ற அறியாமை தவறுகள், கேலி கிண்டலோடு முடிந்து விடுகின்றன. அதுவே ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரச்சனையின் மீது, ஆட்சியாளர்களோ அல்லது தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்ற அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு திட்டத்தைப் பற்றியோ, அதன் விளைவுகளைப் பற்றியோ, அதன் பொருத்தப்பாட்டைப் பற்றியோ அறியாமைலிருந்தால் அது ஆபத்தான குற்றம் என்று கணக்கிட வேண்டுமா இல்லையா? உலக வங்கி கடனை ஆட்சியாளர்கள் தாராளமாக வாங்குகின்ற பக்குவத்திலிருக்கிறார்கள். அப்படி கடன் கொடுக்கக் கூடிய உலக வங்கி, தன் நலனுக்காக சில நிபந்தனைகளை முன்வைக்கிறது. அத்தகைய நிபந்தனைகள் நமது நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ நன்மை பயக்கக்கூடியதா என்று ஆராய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதை சுட்டிக் காட்டி, எடுத்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களாக இருக்கும் அரசியல்வாதிகளோ, அல்லது அதிகாரிகளோ அப்படிபட்ட தங்களது பொறுப்பை சரியாக கவனிக்காமலோ அல்லது தட்டிக்கழித்தோ இருந்தார்களானால், அவர்கள் மூலம் உருவாக்கப்படும் திட்டங்களும், அதைச் செயல்படுத்தும் முறைகளும் எதிர்விளைவை தந்துவிடுகின்றன. இந்த இடத்தில் மேற்கண்ட இடைவெளி என்பது சம்மந்தப்பட்ட ஆட்சியாளர்கள் அதாவது சம்மந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், சம்மந்தப்பட்ட பிரச்சனை மீது அறியாமை இருட்டிலே உழன்று இருப்பதனால் வருகின்ற எதிர்விளைவு என்பதாகத் தான் எடுத்துக்கொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது அது ஒரு மாபெரும் குற்றமாக கருதப்படவேண்டும். உதாரணமாக விவசாயத்தில், பயிர் பாசன வாய்ப்புள்ள நிலங்களை, தரிசுகளாக ஆக்கும் அரசாங்கத் திட்டங்கள் சில அமுல்படுத்தப்படுகின்றன. பாசன நிலங்களை தக்கவைப்பதும், மேம்படுத்துவதும் விவசாயம் பற்றிய அறிவு. அத்தகைய அறிவில் அறியாமை இருக்குமானால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செய்கின்ற பிழை என்பதாகத்தான் அது கருதப்படவேண்டும். அதேபோல மேற்கத்திய நாடுகளிலிருந்து, அவர்களது நலன்களுக்காக, அவர்களால் தயாரிக்கப்பட்ட வீரிய விதைகளும், ரசாயன உரங்களும், இந்த நாட்டில் இருக்கும் பாசன நிலங்களை பாதிக்கும் தன்மைக் கொண்டதாக இருந்தாலும், அந்நியநாட்டு சரக்குகள் என்ற ஒரே காரணத்திற்காக இறக்குமதி செய்யப்படுமானால், நமது விளைநிலங்களை பாதிக்கும் அத்தகைய ஏற்பாடுகள் இங்கே அனுமதிக்கப்படுமானால், அது இந்த நாட்டின் விவசாயத்தைப் பற்றிய விவரங்கள் என்பதில் அறியாமை காரணமாக அனுமதிக்கப்படுகின்றன என்று தான் கொள்ளவேண்டும். இத்தகைய அறியாமை இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாய பொருளாதாரத்தையும், சுயசார்பு சிந்தனையுள்ள, சுயமரியாதைக் கொண்ட விவசாய பெருங்குடி மக்களையும் பாதிக்கக்கூடிய பெரும் குற்றத்தை இழைத்துவிடுகிறது. ஆகவே சம்மந்தப்பட்ட ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட அறியாமைக்காக குற்றம் சாட்டப்படுதல் வேண்டாமா? மலைகளைப் பற்றியும், காடுகளைப் பற்றியும், அதில் வாழும் மனிதர்களைப் பற்றியும் அதிகமாக அறிந்திராத காரணத்தினால், அறியாமையிலிருக்கும் ஆட்சியாளர்கள் மூலமாக, அத்தகைய வட்டாரங்களிலிருக்கின்ற கனிமவளங்களை அடையாளம் கண்ட அந்நிய மூலதன வாதிகள் மற்றும் பெரும் முதலாளிகளின் சூறையாடலுக்கு வழிவகை செய்கின்ற, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஒரு ஆட்சி திட்டமிடுமானால், அதன் பாதிப்புகள் எதிர் விளைவுகளை தோற்றுவிக்கக் கூடியவை. ஏனென்றால், மலைகளையும், காடுகளையும் தங்களுடைய பாரம்பரியமான இருப்பிடங்களாக, வாழும் இடங்களாக கொண்டுள்ள பழங்குடி மக்களான, ஆதிவாசி மக்கள் அத்தகைய பகுதிகள் தங்களிடமிருந்து பறிக்கப்படும் போது, எழுந்து போராட துணிகிறார்கள். அப்படிப்பட்ட போராட்டங்களை தாங்க முடியாமல், அரசு தரப்பு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது. அது மேலும் பல சமூக சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. இத்தகைய நிலமைகளுக்கெல்லாம் அடிப்படை காரணமாக அமைவது அரசுதரப்பின் அறியாமை தான் என்று சொன்னால், சாதாரணமாக அது விட்டுவிடக்கூடிய ஒன்றா? அதுபோலவே கடல்சார் பழங்குடி மக்களான, மீனவ மக்கள் எத்தகைய வாழ்நிலையில், கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை செய்கிறார்கள் என்றும், அவர்களது தொழில் சார்ந்த விதிகள் எப்படி இருக்கமுடியுமென்றும் அறியாத நிலையில், அந்நிய நாட்டின் கோரிக்கைகளை ஏற்று தங்களது சட்டங்களையும், திட்டங்களையும் ஒரு அரசு உருவாக்குமானால், புதிய நெருக்கடிகள் கடலோரங்களில் கொண்டுவரக்கூடிய அத்தகைய செயல்பாடுகளும், அரசின் அறியாமையை காட்டுகிறது. ஆகவே அறியாமை என்பது இரு வகைப்படும். பொதுமக்களிடமிருந்தால் அவர்கள் குற்றமல்ல. ஆட்சியாளர்களிடமிருந்தால் அது மாபெரும் குற்றம். இந்த புத்தாண்டிலாவது இந்த புதிய பாடத்தை படித்துக் கொள்வோமா?