Thursday, December 23, 2010

தி.மு.க. வேண்டாம் ---சோனியாவிடம் வேண்டுகோள்.

. டில்லியில் காங்கிரசு கட்சியின் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூடியபோது, இதுதான் நல்ல தருணம் என்று எண்ணிய தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர்கள் ஒன்று கூடினர். சோனியாவை சந்தித்தனர். ஜி.கே.வாசன்,ப.சிதம்பரம்,கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மேலும் ஐந்து பேருடன் சோனியாவை சந்தித்து தி.மு.க.விற்கு கடும் கேட்ட பெயர் ஆகிவிட்டது என்றும், அதனுடன் சென்றால் நமக்கு அதோகதிதான் என்றும் கூறினார்களாம். பரிசீலிக்கிறேன் ஏறு சோனியா கூறினாராம். அதனால் அடுத்த சின்ன கட்சிகளை அரவணைக்கும் நிலை காங்கிரசுக்கு.

Wednesday, December 22, 2010

புலிகள் இடத்தில் எலிகளா? டில்லி செய்யும் சதிகளா?

இப்போது டெல்லிக்கு கவலை அவர்கள் சொல்வது போல, ஈழத்தமிழர்களை முள்வேலி முகாம்களில் இருந்து வெளியே கொண்டு வந்து மறுகுடியேற்றம் செய்ய வைப்பது அல்ல. அவர்கள் சொல்லிக்கொள்ளாதது போல, இலங்கை தீவில் வணிகரீதியாக நிரந்தர தளம் அமைத்துக்கொள்ள இந்திய பெரு முதலாளிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என்பது டெல்லிக்கு முக்கியமான கவலை. ஆனால், மகிந்தா ராஜபக்சே அரசு இலங்கை தீவின் நிலங்களை மட்டுமின்றி, நீர் நிலைகளையும், கடலையும் கூட சீன அரசிற்கு எழுதி வைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் டெல்லிக்கு பெரும் கவலையாக இருக்கிறது. ஆகவே, இன்றைய டெல்லியில் நோக்கமே இலங்கை தீவில் வணிகத்திற்கான தளங்களை உருவாக்குவதாக இருக்கிறது. அதற்காக, மகிந்தா அரசிற்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய தேவையும் டெல்லிக்கு இருக்கிறது.

80ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்திய அரசு இலங்கை தீவின் அரசாட்சிக்கு எதிராக பகைமை உணர்வு பெற்று வந்த ஈழத்தமிழர்களை போராளிகளாக உருவாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், இந்தியாவிற்குள் செய்து வந்தது. பல போராளி இயக்கத்திற்கு பயிற்சி தளங்கள் அமைத்துக்கொள்ள உதவி செய்வதும், பயிற்சி கொடுப்பதும், ஆயுதம் கொடுப்பதும் போன்ற வேலைகளைச் செய்தது. அதேநேரம் சிங்கள அரசின் படைகளுக்கும் பயிற்சி கொடுத்தலை தொடர்ந்தது. தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல், தமிழீழ விடுதலைக்காக சமரசமற்ற போரை நடத்த தயாராகிவிட்ட அல்லது நடத்திய போராளி அமைப்பை நிர்மூலம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் டெல்லியே முன்நின்று கவனித்தது. ராஜபக்சே அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்தது மட்டுமின்றி, ராணுவ தந்திரங்களை சொல்லிக்கொடுத்து, இந்திய அமைதிப்படை காலத்தில் புலிகள் கையாண்ட போர் முறைகளில் இருந்து கற்று அதற்கு மாற்றான தந்திரங்களை கொழும்பு அரசிற்கு வழிகாட்டல் கொடுத்து, 4ம் வன்னிப்போரை நடத்தியதில் அதிமுக்கிய பங்கை டெல்லி செலுத்தியது. புலிகளை போரில் வென்றதற்கும், தமிழின அழிப்பில் முதன்மை பங்கை ஆற்றியதற்கும், மகிந்தா அரசின் பாராட்டுதல்களை பெற்ற இந்திய அரசிற்கு, போருக்கு பின் வணிகத்திற்காக தளம் அமைத்து கொடுப்பதில் கொழும்பு ஏன்? பின்வாங்குகிறது என்பது தான் டெல்லியில் கேள்வியாக இருக்கிறது.

அவர்களது வாதப்படி செய்த உதவிக்கு நன்றி வேண்டாமா? என்பது தான் நமக்கு புரிகிறது. மீண்டும் கொழும்பு அரசை நிர்ப்பந்தம் செய்து சீன செல்வாக்கில் இருந்து, இலங்கை வணிகத்தை இந்திய மற்றும் அமெரிக்க முதலாளிகளின் சுரண்டல் தளமாக ஆக்குவதற்கு புதிய திட்டங்களை டெல்லி வகுத்துள்ளது. இந்திய அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவான ரா அமைப்பு, தனது வழிகாட்டல்களிலும், கட்டுப்பாட்டிலும் பரந்தன் ராஜன் என்ற ஞானசேகரன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எஃப். என்ற ஈழத்தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற அமைப்பையும், தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள விளாத்திகுளம் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் என்பவர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பையும், வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. இந்திய அரசிற்கு இலங்கை பிரச்சனையில் நெருக்கடி வரும்போதெல்லாம், மேற்கண்ட இரண்டு அமைப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு சில வேலைகளை செய்வார்கள் என்பதும் நாடறிந்த செய்தி.

இப்போது, இந்த அமைப்புகள் வேறு சில அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு ஒரு புதிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெங்களூரில் ராஜன் நடத்தும் குழந்தைகள் பள்ளி அருகே நவம்பர் மாதம் 13, 14ம் தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு மாநாட்டில் கூடிய இவர்கள் ஈழத்தமிழர் விடுதலைக்கான ஒன்றுபட்ட முன்னணி என்பதாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை ஈ.டி.யூ.எஃப். என்று அழைக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் 10 கோரிக்கைகளை தயார் செய்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், டெல்லியை நோக்கி தமிழ்நாட்டில் இருந்து ஒரு ஈழத்தமிழர் நடைபயணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் திருபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்படும் இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இரா.அன்பரசு [வழக்கமாக ரா கருத்துக்களை வெளிப்படுத்துபவர்], சீ.பி.ஐ.யின் தா.பாண்டியன் [ஏன் இவர்?] சீ.பி.எம்.இன் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நடைபயணத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள 117 அகதிகள் முகாம்களிலும் இளைஞர்களை தயார் செய்து வருகிறார்கள். தமிழ் இனத்தின் உரிமைகளை இந்தியா மீட்டு தரவேண்டும் என்றும், இது ஈழத்தமிழர்களின் கோரிக்கை என்றும் ஒரு துண்டறிக்கையை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதை ஒவ்வொரு அகதிகள் முகாம்களிலும் ரகசியமாக கொடுத்து, அவலநிலையில் வாழும் ஈழ இளைஞர்களை அந்த நடைபயணத்திற்காக தயார் செய்கிறார்கள். மகிந்தாவை எதிர்த்தே இவர்களது விளக்கங்கள் இருக்கின்றன.

1. சிங்கள ஆட்சியாளர் தமிழ் இனத்தவரை வாழவைக்கப் போகிறார்கள், உரிமைகள் வழங்கப் போகிறார்கள் என்று கூறுவதும், எதிர்பார்ப்பதும் வீணான கற்பனையாகும். தமிழ் இனத்தை அழிப்பதுதான் பௌத்த சிங்கள இனத்தவரின் கொள்கையாகும். இதனைத் தடுத்து நிறுத்ததான் இந்தியா 1987ல் இலங்கை விஷயத்தில் தலையிட்டது. 50 ஆயிரம் துருப்புகளை வைத்துக்கொண்டு தமிழருக்கு உரிமை பெற்றுக்கொடுக்க முடியாமல் திரும்பியது இந்தியா. சிங்களத் தலைமை ஒரு நயவஞ்சகமான தலைமை, அவர்களை நம்பி எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது. எனவே இந்தியா ஈழத்தமிழரையும் அவர்களது உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், முன்னைநாள் பிரதமர் அமைதிப்படையை அனுப்பியது போன்று ஓர் படையை அனுப்பி தமிழ் இனத்துக்கு உயிர்ப் பாதுகாப்பையும், நில உரிமையையும் பெற்றுத்தரவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

2. 1987ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த, அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கிய மாநிலம் ஒன்றினை ஈழத்தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.3. இந்தியாவையும் ஈழத்தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசு பல தடவைகள் ஏமாற்றியுள்ளது. மறுவாழ்வு, மறு கட்டமைப்பு என்று கூறி சிறிலங்கா அரசு சிங்கள மக்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றி வருகிறது. இதனை இந்தியா உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

4. பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட 1948ம் ஆண்டுக்குப் பின்னர், தமிழரது பூர்விக நிலங்களில் சிங்கள அரசால் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தையும் முற்றாக அகற்றவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.5. புத்த பிக்குகள் ஈழத்தமிழருக்குச் சொந்தமான பூர்விகப் பகுதிகளில் எங்கெங்கு அரசமரங்கள் இருக்கின்றனவோ அவற்றின் கீழே பௌத்த மதத்தைப் பரப்ப, அரசின் ஆதரவோடு புத்த விகாரைகளைக் கட்டி வருகின்றனார்கள். அவ்வாறு கட்டும் சட்டத்திற்குப் புறம்பான செயலைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், ஏற்கனவே கட்டப்பட்ட புத்த விகாரைகளை இடித்து அகற்றவேண்டும் என்றும் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

6. 2009ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாத எதிர்நடவடிக்கை அல்ல, சிங்கள இனத்தவரின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பயங்கரவாதம் என்று உலகுக்குக் காண்பித்த சிங்கள அரசு செய்தது இனப்படுகொலைதான். இதனை விசாரிப்பதற்கு மிகப்பெரிய சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய மக்கள் இதனை கண்டிப்பாக வரவேற்பார்கள். எந்த நாடும் தனது சொந்த மக்கள் மீது இவ்விதம் குண்டுகள் வீசி, அழித்தது கிடையாது. அங்கு நடைபெற்றது எதிர்நாட்டின் மீது படையெடுப்புதான். எனவே நடத்தப்பட்ட படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு இந்தியா முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7. ஈழத்தமிழரது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் ஈழத்துக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை மத்திய அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம் கேட்ட எங்கள் மக்கள் தமிழக பொலிசாரால், குறிப்பாக கியூ பிரிவினரால் முகாம்களுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எங்கள் மக்களை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும்.8. திபெத்திய அகதிகளுக்கு வழங்குகிற உரிமைகள் போன்று ஈழத்தமிழ் மக்களுக்கும், அவர்கள் நாடு திரும்பும் வரை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்விதமான தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை இந்தியாவில் இருக்கும் ஈழத்து அகதிகள் யாரையும் திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.9. இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 80 சதவீதமான பகுதி தமிழ் இனத்துக்குச் சொந்தமானது. எனவே, வடக்கு கிழக்குக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. வடக்குகிழக்குக் கரையோரப் பகுதிகளை சிங்களர் அரசின் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டனர். அரசினால் குடியமர்த்தப்பட்ட சிங்களரது கரையோரக் குடியிருப்புகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்று கோருகிறோம்.10. மேற்படி கோரிக்கைகள் அனைத்தும் சாத்தியம் இல்லை என்று இந்தியா கருதினால், சிறிலங்கா அரசு தமிழர் மீது யுத்தம் புரிவதற்கு நிதி உதவி வழங்குவதற்காக, நன்கொடை நாடுகள் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி போர்க்கருவிகள் வாங்குவதற்கு பெருமளவு பணஉதவி செய்தனர் பிறநாட்டினர். அதேபோன்று தமிழ் இனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க, தமிழர்கள் அகதிகளாக வாழும் நாடுகள் அனைத்தையும் இணைந்த அமைப்பொன்றினை ஏற்படுத்த வேண்டும். சமாதான நாடுகள் என்ற அமைப்பின் மூலம் எங்கள் இனத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வொன்றினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு இயக்கத்தை தங்கள் நலனுக்காக கட்டியமைக்க இந்திய அரசு துணிந்துவிட்டது. இதுபோன்ற நெருக்குதல்கள் மூலம்தான் மகிந்தா அரசை, இந்திய முதலாளிகளிடம் அடிபணிய வைக்க முடியும் என்பது டெல்லியின் திட்டம். அதேசமயம், புலிகள் இல்லாத களத்தில் தங்கள் வீட்டு எலிகளைக் கொண்டு நிரப்பிவிட டெல்லி எண்ணுகிறது. இதை நம்பிச் செல்லும் இளைஞர்கள், ஈழத்தமிழர்களை பலிகடா ஆக்கி தங்களது வணிக சுரண்டலை சாதித்துக்கொள்ள திட்டமிடும் வல்லாண்மை அரசுகளை புரிந்து கொள்வார்களா?

Tuesday, December 21, 2010

தி.மு.க.வை கைவிடும் காங்கிரசு.

காங்கிரசு கட்சி தனது அகில இந்திய காங்கிரசு கட்சி குழுவை டிசம்பர் பத்தொன்பதிளிருந்து டில்லியில் கூட்டியது. இருபயைரம் பேர் கலந்துகொண்ட அந்த மஹாநாட்டில் பல பிரச்சனைகளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வடக்கு மாநிலங்களில் காங்கிரசு கட்சியின் மரியாதையை சுத்தமாக காயடித்துவிட்டது. அதனால் ஆத்திரம் ஏற்பட்ட காங்கிரசு தலைவர்கள் தமிழ்நாட்டை பொறுத்தவரை என்ன செய்வது என்ற கேள்விகளோடு இருந்தனர். இப்போதைக்கு தி.மு.க.வுடனான கூட்டணியில் மாற்றம் செய்வதாக திட்டமில்லை என்று ஒருபுறம் கூறிவரும் காங்கிரசு இதுபற்றி உண்மையில் கவலைகொண்டிருப்பதை விவத்தித்தனர். தி.மு.க.வை கை விட்டால் யார் என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் பா.ம.க., விஜயகாந்த், கொங்கு முன்னேற்ற சங்கம், இந்திய ஜனநாயக கட்சி என்ற பச்சமுத்து உடையார் கட்சி என்ற பெயர்கள் கூறப்பட்டனவாம். அதில் யாருமே போதுமான அளவுக்கு காங்கிரசு தலைமையை செல்வாக்கு செலுத்தவில்லை என்ற நிலையில் இப்போதைக்கு தி.மு.க.வுடன் இருக்கும் கூட்டணியில் மாற்றம் பற்றி பேச வேண்டாம் என்றும், ஆனால் தாங்கள் அதுபற்றி வருகின்ற ஜனவரி மாதம் பேசி முடிவு செய்வோம் என்றும் தலைவர்கள் கூறினார்களாம். அதற்குள் பெரிதாகும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.வை அடையாளம் காட்டிவிட்டு தாங்கள் தப்பித்து விடலாம் என்று அந்த தலைவர்கள் நினைக்கிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி தி.மு.க.விற்கு சாதகமான ஆண்டாக இருக்காது என்று டில்லியில் கூறுகிறார்கள். சீ.பி.ஐ. வழக்கில், உச்சநீதிமன்றத்தில் எப்போது விவகாரம் கையை மீறி போகும் என்று காங்கிரசு நினைக்கிறதோ அப்போது தி.மு.க. தான் அத்தனைக்கும் காரணம் என்று கூறிவிட்டு ஓடிவிடலாம் என்று காங்கிரசு நினைப்பதாகவும் கூறுகிறார்கள். காங்கிரசு தங்கள் கட்சியை கழட்டுமானால் அப்படி ஒரு முயற்சி தெரியுமானால் தி.மு.க. தன் பங்கிற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவை சுட்டிக்காட்டி அவர்தான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்று கூறிவிட்டு தி.மு.க.தலைமை தான் தப்பித்துகொள்ள தயாராகிவருகிறது. அப்படியானால் ராஜா தன்மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்ற தொகைகளை கூற தயாராவாரா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். போல்லாதவர்கல்தான் இந்த பொதுமக்கள்.

சாயிபாபாவும், அத்வானியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் வருகிறார்கள்..

வாஜ்பாய காலத்திலிருந்து செல்லுலார் தொலைபேசி ஊழலில் இருக்கின்ற கொஷிகா என்ற நிறுவனத்தின் முதலாளியான குல்வந்த்ராயின் டில்லி வீட்டில் புட்டபரத்தி சாயிபாபா தங்கியிருந்து இந்த தனியார் வணிகத்திற்காக வக்காலத்து வாங்கிய கதை வெளியே வந்துள்ளது. அதேபோல எஸ்ஸார் நிறுவனம் அன்றைய துணை பிரதமர் அத்வானிக்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது.மேற்கண்ட தகவல்களை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்ட கருணாநிதியே தனது முரசொலி ஏட்டில், தனது நண்பர் சின்ன குத்தூசி மூலம் எழுதவைத்துள்ளார்.

சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்பவர்கள்

தி.மு.க. அரசு எல்லா மக்களுக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை கொடுத்தது. அதன்விளைவாக இப்போது சன் தொலைக்காட்சி மூலம் தினசரி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மக்கள் அளவுக்கு அதிகமாகவே தெரிந்து கொள்ளதொடங்கிவிட்டார்கள். அதை திரைப்பட தயாரிப்பாளர் புகழேந்தி தங்கராஜ் வர்ணிக்கும்போது, இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்று நக்கலடித்தார்.

ராஜா ஓட, சீ.பி.ஐ. துரத்த....

பைசால் என்ற இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு அதிகார முன்னாள் தலைவர் சீ.பி.ஐ.யால் சம்மன் வழங்கப்பட்டு, டில்லி சீ.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணையை எதிர்கொண்டார். அதேபோல நிரா ராடிஆவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் விசாரணையை எதிர்கொண்டார். ஆ.ராஜாவிற்கு சீ.பி.ஐ. டிசம்பர் இருபதாம் நாள் வந்து விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ராஜா டில்லி செல்லவில்லை. அதேசமோம் ராஜா அன்று காலை அப்போலோ மருத்துவமனியில் சேர்ந்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அப்போலோவிளிருந்து அரை மணி நேரத்தில் வெள்யே வந்துவிட்டார். சீ.பி.ஐயிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்து, இன்னொரு நாள் கொடுக்குமாறு கேட்டிருந்தார். அதாவது ஒரு வாரம் நேரம் கேட்டதாக தெரிகிறது. அதற்கும் சீ.பி.ஐ. சம்மதித்துவிட்டது. என்று சீ.பி.ஐ. நாள் கொடுக்கிறார்களோ அன்று தான் போய் விசாரணையை எதிர்கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகே அவர் மீதான நடவடிக்கையை சீ.பி.ஐ. முடிவு செய்யமுடியும். பதிலளி முன்அனுப்பு

தி.மு.க. எதிர்ப்பு கூட்டணியில் சீமான்.

. சீமான் கருணாநிதி எதிர்ப்பு, தி.மு.க. எதிர்ப்பு என்று எதிர்க்கட்சி தொலைகாட்சியில் விளாசி தள்ளிவிட்டார். இலங்கையில் என் தமிழ் சமுதாயம் அழிய ஆட்சியில் இருந்துகொண்டே காரணமாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. வரவும் விடமாட்டோம். என் தொழிலான சினிமாத்துறை அழியவும் காரணமாக இருக்கிறார். சிவாஜி குடும்பம், ராஜ்கபூர் குடும்பம், எல்லாம் சினிமாவில் இல்லையா என்று கருணாநிதி கேட்கிறார். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் சினிமா துறையில் இருந்தன. ஆனால் சினிமா துறையே கருணாநிதி குடும்பத்தில் இருக்கிறதே. ஈழப்பிரச்சனை மட்டுமல்ல, ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார் என்பதை நாங்கள் வருகிற தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாடெங்கும் போய் சொல்லுவோம். அ.தி.மு.க.கட்சிதான் இன்று இருப்பதில் பரவாயில்லை என்றும் ஒரு ஏட்டிற்கு நேர்காணல் கொடுத்துள்ளார். ஏற்கனவே காங்கிரசு எதிர்ப்பில் இருந்தவர் இப்போது தி.மு.க. எதிர்ப்பு, என்று வந்துவிட்டார்

ராஜா ---------தயா மோதல்.

ஆ.ராஜா வுடன் , தயாநிதி குழுவினர் முரண்பட்டு இருப்பதோ, முரண்பாடுகளை கிளப்பிவருவதோ, அதிகார மோதலுக்காக ராஜாவை அம்பலப்படுத்த தயா முயற்சி எடுப்பதோ தெரிந்த பழைய செய்திகள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது புதிய செய்தி. டில்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திடீரென நடந்த சீ.பி.ஐ. சோதனைகள், யாரால் தூண்டப்பட்டன? யார் அதுகண்டு மகிழ்ந்தார்கள்? கட்டளை அனுப்பும் இடத்தில் அமர்ந்து கொண்டு அதற்கான ஆதாரங்களை கொடுத்தது யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.

Friday, December 3, 2010

போர்குற்றவாளி மகிந்தாவின் வழியில் கருணாநிதியா?

லண்டன் சென்றார் இலங்கை அதிபர். அதற்கு ஹம்சா என்ற ஒரு மனிதர் காரணமானார். ஹம்சா இப்போது லண்டனில் இலங்கை தூதரக உயர் அதிகாரியாக இருப்பவர். இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே என்று நீங்கள் எண்ணலாம்.சென்னையில் இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரியாக அதாவது ஹை கமிஷனராக இருந்தவர். அதாவது இலங்கையில் தமிழர் மீதான இன அழிப்பு நடந்துவந்த நேரத்தில், சென்னையில் இந்த ஹம்சா ஹை கமிஷனராக இருந்தவர். அப்போது இலங்கை அரசு யாரைகண்டு பயந்தது தெரியுமா? தமிழ்நாட்டு மக்களைகண்டு பயந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கண்டு அந்த சிங்கள அரசு பயந்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று கூறியவர் பொன்சேகா. அவர் கூற்றை மறுக்காமல் அனுமதித்தவர் ராஜபக்ஷே.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 1983 காலகட்டம் போல கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்று இலங்கை அரசு எப்போதும் அச்சப்பட்டுவந்தது. அந்த சிங்கள ஆதிக்கவாதிகள் ஒட்டுமொத்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு எதிராக தமிழர்களாக இருப்பதாகவோ, தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவோ எண்ணிக்கொண்டிருந்த நிலை இப்போது மாறிவிட்டது. இந்திய அரசு தங்களுக்கு ஆதரவானதுதான் என்ற உணர்வு பெற்ற சிங்கள ஆதிக்கவாதிகள், படிப்படியாக தமிழ்நாட்டு அரசை வழிநடத்தும் கும்பலும் தங்களுக்கு ஆதரவானவர்கள்தான் என்ற புரிதலுக்கு வந்திருந்தனர். ஆனால் அப்போதும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அத்தகைய சூழலில்தான் மகிந்தா தனக்கு நம்பகமான ஒரு நபரை அதாவது ஹம்சாவை சென்னை தூதரக அதிகாரியாக நியமிக்கிறார். அந்த ஹம்சா இப்போது லண்டன் பயணத்தில் மகிந்தாவை கவிழ்த்து விட்டார்.

ஹம்சா என்ற அந்த மனிதர் சென்னையில் இருக்கும்போது இங்குள்ள பல ஊடகவியலாளர்களுக்கு போதிய நிதி கொடுத்து தன்பக்கத்தில் வைத்திருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது முகத்தை மூடிக்கொள்ளலாம். ஆனால் காலம் அவர்களை சும்மா விடாது. ஏன் என்றால் ஹம்சா இங்கே இருந்து இயங்கிய நேரம் அங்கே வன்னி போர் நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் தமிழீழ தேசிய தலைவர் ஒரு தற்காப்பு போரைத்தான் நடத்திக்கொண்டிருந்தார் என்பது இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியும். ஆனாலும் அங்கே தாக்குதலில் புலிகள் இறங்கியிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துக்கொண்டே இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய ஒரு தோற்றம் அவர்களுக்கு பல விதத்திலும் உதவிகரமாக இருந்தது.

அதாவது தற்காப்பு போரில் இருந்த புலிகள் அமைப்பை ஒரேயடியாக அழிப்பதை அவர்கள் தங்களது திட்டமாக வைத்திருந்தனர். இன அழிப்பு என்பதை கொள்கையாக கொண்ட மகிந்தா கும்பல் இந்த புலிகள் அழிப்பு சிந்தனையை இந்திய அரசு முன்வைக்கும்போது மனதார அதையும் ஏற்றுக்கொண்டது. அதற்க்கான ஒரு சூழலை அந்த இரு அரசுகளும் மற்ற அரசுகள் சிலவற்றின் உதவியோடு திட்டமிட்டன. அதற்காக விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி உலக அளவில் தனிமைப்படுத்துவதில் இரு அரசுகளும் செயல்பட்டுவந்தன.ஆனால் இன்று உண்மையான பயங்கரவாத அரசு இலங்கை அரசுதான் என்பது நிரூபணமாகி உள்ளது. உண்மையான பயங்கரவாதி மஹிந்த ராஜபக்ஷேதான் என்பது நிரூபணமாகி உள்ளது.

அப்படி நான்காவது ஈழப்போர் நடந்துவந்தபோது இங்கே சென்னையில் ஹம்சாவின் விளையாட்டு தலை தெறிக்க நடந்து வந்தது. அவர் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு சிங்கள எதிர்ப்பும் வந்துவிடக்கூடாதே என்றும், வளர்ந்துவிடக்கூடாதே என்றும் அக்கறையுடன் செயல்பட்டார். அதற்காக சில ஊடகவியலாளர்களுக்கு சம்பளப்பட்டியலில் இடம் ஒதுக்கி இருந்தார்.அதேபோல சில அரசியல்வாதிகளுக்கும் குழப்பம் விளைவிப்பதற்காக அதாவது தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் பிரச்னையை சரியாக புரியவிடாமல செய்து அதன்மூலம் எழுச்சியை தடுப்பது போன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார். உதாரணமாக ராமதாஸ் நடத்திய ஒரு அறிவுஜீவிகள் கூட்டத்தில் முருகன் ஐ.ஏ.எஸ். எழுந்து பிழைக்க சென்ற தமிழன் எப்படி நாடு கேட்கலாம் என்று பேசினார். அவருக்கு எதிர்ப்பு வந்தது. அவர் வெளியேறினார். அவரை தயார் செய்து பேசவைத்த ஹம்சா அவருக்கு பின்னால் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போதுதான் இவருக்காக அவர் பேசினார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. இப்படிப்பட்ட ஹம்சாதான் இப்போது லண்டனில் அதிகாரியாக இருக்கிறார்.

அந்த ஹம்சா ராஜபக்சேயிடம் லண்டன் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றும் அவர்கள் நாற்பது குழுவினராக பிரிந்து உள்ளார்கள் என்றும் கூறி தைரியமாக லண்டன் வரசொல்லியதால் ராஜபக்ஷே லண்டன் வந்தார். ஆனால் சிங்கள முற்போக்குவாதிகளான, " ஹூரா" அமைப்பினர் இந்த லண்டன் எதிர்ப்பிர்க்கான ஏற்பாட்டை செய்துவந்தனர். இவர்கள்தான் டப்ளின் அனைத்து நாட்டு தீர்ப்பாயத்திர்க்கும் ஏற்பாடு செய்தவர்கள். இவர்களுக்கு இலங்கையிலிருந்து போர்குற்றங்களை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருந்த சிங்கள ராணுவ வீரர்கள் மூலம் அனுப்பிய அனைத்து விதமான போற்குற்றங்களும் நாலாவது அலைவரிசை என்ற அந்த தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுவே இந்த ராஜபக்சேயின் லண்டன் வருகையின் போது வெளியிடப்பட்ட காரணத்தினால் பெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆங்கிலேயர் மத்தியிலும் ஏற்படுத்தி அதன்மூலம் நூற்றுகணக்கில் வெள்ளைகாரர்களும் ராஜபக்சே தங்கியிருந்த விடுதி முன்பு கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக பொதுமன்னிப்பு சபையை சேர்ந்த வெள்ளைகாரர்களும், தொழிலாளர் கட்சியை சேர்ந்த சில எம்.பி.களும், முன்னாள் அமைச்சரான மில்லி பாண்டும் அங்கே அறுபதாயிரம் தமிழர்களுடன் கடும் குளிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பணி விழும்போதே ராஜபக்சேயை தண்டிக்கவேண்டிமுழக்கம் செய்து வந்தனர். புலிகளுக்கு 2009 ஆம் ஆண்டு மே பதினேழாம் தேதிக்கு பிறகு லண்டனிலும், நம் ஊரைபோலவே அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. இப்போது யார் உணமையான பயங்கரவாதி என்று உலகம் தெரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறது. ஹம்சாவிடம் உதவி பெற்று பிழைப்பு நடத்தியவர்கள் இனியாவது வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்களா?

லண்டனில் போர் குற்றவாளி மாட்டிக்கொண்ட நேரத்தில், ஒரு ஊடகத்திலிருந்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டார்களாம். அவர் சொல்ல மறுத்து விட்டாராம். ஹம்சா இருந்த போது அவருடன் இணைந்து செயல்பட்டது தமிழக அரசின் உளவுத்துறை. அதற்கு அனுமதி கொடுத்தது தமிழக முதல்வர். அதன் பிரதிபலனாக ஹம்சா முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்களை சந்தித்ததும், அதற்குப்பின்தான் அவர்களுக்கு மலையகத்தில் நிலம் கிடைத்ததும் தனி கதை.