Friday, October 29, 2010

விடுதலை புலிகள் மீதான தடை விசாரணை தீர்ப்பாயம் தொடர்கிறதே?

சென்னையில் அக்டோபர் கடைசி வார அமர்வு ஒன்று நடந்தது. வழக்கம் போல விக்ரம்ஜித் சென் என்ற நீதியரசரும், உதவி சொலிசிடர் ஜெனெரல் சிங்கும், அவருடன் டில்லியிலிருந்து வந்த பல வழக்கறிஞர்களும், அரசு தரப்பு காவல் அதிகாரிகளும், அதேபோல வழக்கறிஞர் உடையில் வைகோவும், அவரது கட்சியை சேர்ந்த பல வழக்கறிஞர்களும், பழ.நெடுமாறனும், அவரது வழக்கறிஞர் சந்திரசேகரனும், தமிழக மக்கள் உரிமை கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி, அவரது வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பகத்சிங் ,லிங்கன், அருள், கயல், ம..தி.மு.க.பெண் வழக்கறிஞர்கள், கட்சி முக்கியத்தர்கள், மீனவர் சங்கத்தின் மகேஷ், போன்ற பலரும் அணிதிரண்டிருந்தனர். திடீரென சுபிரமணிய சுவாமி, சந்திரலேகாவுடனும், சில வழக்கறிஞர்களுடனும், ஆறு பாதுகாப்பு காவலர்களுடனும், தீர்ப்பாய அறைக்குள் நுழைந்தார். பர, பரப்பை அவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால் யாருமே சு.சாமியை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரது பாதுகாவலர்களான அதிரடிப்படை காவல் படையினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருந்த துப்பாக்கிகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. நீதியரசர் வழக்கு விசாரணை செய்யும் அறையினுள் யாரும் ஆயுதங்களுடன் நுழைய கூடாது. ஆனால் இங்கே நுழைந்த அந்த பாதுகாப்பு காவலர்களை சு.சாமி தடுக்காமல் அனுமதித்திருந்தார்.. வந்து அமரும்போது தெளிவான முகத்துடன் இருந்த சு.சாமி சிறிது நேரத்தில், சுற்றி வளைத்து பார்த்துவிட்டு, எங்கு நோக்கினும் அந்த அறைக்குள் தமிழ் உணர்வாளர்கள் இருப்பதை கண்டுவிட்டு,முகமெல்லாம் கறுத்துவிட்டார் .
பத்தரை மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விசாரணைக்கு, நீதியரசர் பத்தே முக்காலுக்கு முன்னால்தான் வந்தார். வந்தவுடன் சு.சாமி பேசத்தொடங்கினார். சட்டவிரோத கூட்ட தடை சட்டம் நான்காவது பிரிவின்படி, யார், யாரை வாதாட அனுமதிக்கவேண்டும் என்ற விதிக்கு புறம்பாக அந்த எல்லையை தாண்டியும் தீர்ப்பாயம் அனுமதிக்க போகிறது என்று ஊடகங்களில் படித்ததாகவும், அது உணமைதான் என்றால் தானும் அதுபற்றி வாதிடப்போவதாகவும், நீதியரசர் வசம் கூறினார். தான் முதலில் ஐந்து சாட்சிகளை பார்க்க போவதாகும் அதற்கு பிறகு பேசலாம் என்றும் கூறிவிட்டார். அப்போது சு.சாமி தனக்கு வேறொரு வேலை இருப்பதாகவும், இப்போது அனுமதித்தால் பேசுவதாகவும் கூற, நீதியரசர் சாட்சிகளை விசாரித்த பிறகு என்று கூற, சு.சாமி வெளியேறி விட்டார். அதன்பிறகு, சாட்சிகளை விசாரிக்க தொடங்கினார் நீதியரசர்.

சாட்சிகள் என்று நீதியரசர் அறிவித்து விசாரித்தது எல்லாமே தமிழக காவல்துறையின் கியூ பிரிவை சேர்ந்த காவல் அதிகாரிகளைத்தான்.முதல் சாட்சி என்பதாக நீதியரசர் அறிவித்தார். சந்திரசேகர் என்ற ஒரு கியூ பிரிவு ஆய்வாளர் சாட்சியாக வந்து நின்றார். செல்வகுமார், பாலகுமார், கலியபெருமாள், ராஜா, மாரனாதன், நந்தகுமார், செல்வம், ஆகியோர் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றி கூறினார். அப்போது வழக்கறிஞர் வைகோ எழுந்து சட்டவிரோத கூட்ட சட்டத்தின் பத்தாவது பிரிவின் "அ" வின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளாரா என்று வினவினார். அதற்கே அந்த அதிகாரி திணறிப்போனார்.நீதியரசர் அதையே சாட்சியிடம் கேட்க, சாட்சியும் நிலைமை மாறுகிறதோ என்று அமைதியாக வழக்கு அவ்வாறு பதிவு செயப்பட்டது என்று கூறினார்.

அடுத்த சாட்சியாக டி.இளங்கோவன் என்ற முன்னாள் கியூ பிரிவு திருச்சி ஆய்வாளர் வந்து நின்றார். அவர் தான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர எதுவுமில்லை. பிரேம்ராஜ் என்ற ராஜ் என்ற துரை என்ற இலங்கை தமிழரை 2008 ஆம் மூன்றாம் மாதம் மூன்றாம் நாளில் வழக்கில் பதிவு செயது உள்ளே தள்ளியதாக கூறினார். எழுபது அடி நீளத்தில், பதினெட்டு அடி அகலத்தில் ஒரு படகை செய்து இலங்கைக்கு சாமான் எடுத்து செல்ல முயன்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார் என்பது அவரது கையெழுத்திட்ட அறிக்கையில் இருப்பதாக அந்த சாட்சி சாட்சியமளித்தார். அவர்கள் அனைவருக்குமே அந்த அளவு உள்ள படகுதான் தமிழ்நாட்டின் கடற்கரை ஓரங்களில் வழமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. அதாவது அந்த நீளமும், அந்த அகலமும் உள்ள ஒரு படகை கடினப்பட்டு இலங்கையிலிருந்து வந்த விடுதலை புலிகள் இங்கே உர்வாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெரிய வில்லை. அது தெரிந்தாலே அந்த குறிப்பிட்ட வழக்கு இட்டு கட்டப்பட்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்போது வைகோ தனது வழக்கறிஞர் உடையுடன் எழுந்து, சீமா பஷீர் என்ற தங்கள் கட்சிகாரர் இதேபோல புலி ஆதரவு பேச்சிற்காக கைது செயப்பட்டது கியூ பிரிவில் அந்த நேரத்தில் இருந்த அந்த சாட்சிக்கு தெரியுமா என வினவினார். சட்டவிரோத கூட்ட தடுப்பு சட்டத்தில் அந்த சீமா பஷீர் கைது செயப்பட்ட போது, அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தெரியுமா என்று வைகோ கேட்க, அதையே நீதியரசர் சாட்சியிடம் கேட்க, சாட்சி முழிக்க ஒரு சுவையான காட்சி அங்கே காணமுடிந்தது.

நீதியரசர் வைகோவிடம் எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்று வினவ, அவரும் வெறும் பேச்சிற்காக சட்டவிரோத கூட்ட தடை சட்டம் பயன்படுத்த முடியாது என்றும், அந்த பேச்சிற்கு பின்னால் அதை ஒட்டிய செயல் இருந்தால்தான் அந்த சட்டம் பயன்படுத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியதை வைகோ சுட்டிக்காட்ட, அதை நீதியரசரும் குறித்துக்கொண்டார். அதை ச்ட்டும்போது சீமா பஷீர் 2007 ஆம் ஆண்டு " தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டத்தையும் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அங்கே விவரித்தனர்.

அடுத்ததாக மூன்றாவது சாட்சியாக ராமநாதபுரத்தில் அப்போது கியூ பிரிவு ஆய்வாளராக இருந்த பாஸ்கரன் என்ற நாற்பது வயது காரரை கொண்டுவந்து நிறுத்தினார்கள். 2008 ஆம் ஆண்டு சீமான் ராமேஸ்வரத்தில் பேசிய பேச்சை ஆதாரமாக வைத்து போடப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டினார் அந்த சாட்சி. அப்போது கைது செயப்பட்ட சீமானை, அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது என்பது அந்த சாட்சிக்கு தெரியுமா என்று வைகோ வழக்கறிஞராக நின்று கேட்க, தெரியும் என்றார் அந்த சாட்சி. அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் எப்படி பேச்சிற்கு பிறகு, நடத்தப்பட்ட செயல்தான் வழக்காக போடப்பட முடியும் என்று கூறப்பட்டதை வைகோ எடுத்து சொன்னார். அந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட கூட்டத்தில், சீமான் இலங்கையில் தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்ததை பேசினார் என்பதும், அப்போது ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர்கள் இலங்கை அரசால் அழிக்கப்பட்டதும் தெரியுமா என்று சாட்சியிடம் கேட்க வைகோ கூறினார். அதையே நீதியரசரும் கேட்க, அந்த சாட்சி ஒப்புக்கொண்டார். அதை நீதியரசரும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். அதே சீமான் இப்போது அதேபோல இன்னொரு பேச்சிற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில்றையில் இருப்பது சாட்சிக்கு தெரியுமா என்ற கேள்வியை அங்கே கேட்டு அதன்மூலம் தமிழ்நாட்டில் நிலவும் நிலையை நீதியரசருக்கு வைகோ மறைமுகமாக புரிய வைத்தார்.

அடுத்து மொகமது அஸ்லாம் என்ற அடுத்த சாட்சி கூண்டில் ஏறினார். அவர் 2008 முதல் சென்னையில் கியூ பிரிவில் ஆய்வாளராக இருந்தவர். அமீர் அந்தோணி பரந்தாமன் என்ற இலங்கை தமிழரை கைது செய்தது பற்றி அவர் சாட்சி அளித்தார். குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டதையும் கூறினார். அப்போது அது நெடுமாறன் இயக்கத்தை சேர்ந்த பரந்தாமன் என்று எண்ணிக்கொண்டு, நெடுமாரனது வழக்கறிஞர் சந்திரசேகரன், கைது செயப்பட்ட பரந்தாமன் உயர்நீதிமன்றத்தல் விடுதலை செயப்பட்டார் என தெரியுமா என வினவ , சாட்சி முழிக்க பிறகுதான் அந்த சாட்சி குறிப்பிடுவது இலங்கை தமிழர் பரந்தாமனை என்று புரிய முடிந்தது. அதையும் நீதியரசர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். உடனடியாக வைகோ எழுந்து ௨௦௦௯ ஆம் ஆம்டு ஜூலை பதினைதாம் நாள் தன் மீது ஒரு வழக்கு தான் வெளியிட்ட ப்த்தகமான " நான் குற்றம் சாட்டுகிறேன்" என்ற வெளியீட்டு அரங்கில் பேசியதற்காக போடப்பட்டது தெரியுமா என கேட்க அதையும் ஏதோ ஒரு வழக்கு போடப்பட்டது தெரியும் என்பதாக அந்த சாட்சி கூறினார். அந்த வழக்கில் 124 -ஏ பிரிவும் 153 -ஏ பிரிவும் போடப்பட்டதை வைகோ கூற அதையும் நீதியரசர் கவனித்துக்கொண்டார்.

அதன் பிறகு ஐந்தாவது சாட்சியாக அதாவது ஆரசு சாட்சியாக தங்கவேல் என்ற திண்டுக்கல் மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சாட்சியாக விசாரிக்கப்பட்டார் அதன் பின் வழக்கறிஞர் ப்கழேந்தி கொடுத்த மனுவின் மீது வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன் பேச தொடங்கினார். அவர் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் தங்களை பவர் ஆப் அட்டோர்நியாக நியமித்திருப்பதை ஆவணங்களுடன் கொடுத்தி பேசினார். சுவிஸ் நாட்டில் இருக்கும் அந்த நபர் பிரஞ்சு மொழியில் கொடுத்து விட்டுள்ள ஆவணங்களையும் நீதியரசரிடம் ஒப்படைத்தார். அதேநேரம் இந்திய அரசு புலிகள் இயக்கம் கலைந்துவிட்டது என கூறியுள்ளதாக கூற, நீங்கள் என்ன சொல்கிறீகள் என நீதியரசர் கேட்க நாங்கள் அரசு சொல்வதை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிய வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன், அப்படி சூழலில் எதற்க்காக புலிகள் இயக்கத்தை அரசு தடை செய்யவேண்டும் என மத்திய அரசுதான் விளக்கம் சொல்லவேண்டும் என பொடி வைத்தார்.


அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நெடுமாறன் வழக்கறிஞர் சந்திரசேகரனும், வைகோவும் புலிகள் இயக்கம் இன்னமும் இருக்கிறது என கூற, சந்திரசேகரன் இந்தியாவில்தான் இல்லை என கூற, உதவி சாளிசிடர் ஜெனரல் கலந்துவிட்டது என்பதற்கு அர்த்தம் காண அகராதி வேண்டும் என வினவ, நீதியரசர் குறிக்கிட்டு , கலைந்துபோனது என்றால் அழிந்துபோனது என்று பொருள் அல்ல என்று கூற , பிறகுதான் அந்த விவாதம் நிறைவுற்றது. அதற்குள் வழக்கறிஞர் சந்திரசேகரன் எழுந்து இது ஆங்கில வார்த்தையை புரிந்து கொள்வதில் எழுந்துவிட்ட பிரச்சனை என்றார். ஆனாலும் அங்கே தொழில்ரீதியாக வழக்கறிஞர்க நடந்துகொள்ளவேண்டியது முக்கியம் என்றும், அரசியல் கருத்துக்களை அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை எனவும் சிலர் பேசிக்கொண்டார்கள். எப்படியோ அந்த மறவு முடிவுற்றது. நீதியரசர் நவம்பர் முதல் நாள் டில்லியில் மதியம் இரண்டு மணிக்கு இது பற்றிய தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு எழுந்துவிட்டார். அப்படியோ இந்திய அரசு தந்தி இலங்கை சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட அரசியல் தந்திரத்திர்க்காக, புலிகள் மீதான தடை விசயத்தில் எந்த முடிவையும் எடுக்கும் என்றும், அது வரப்போகிற அமெர்க்க அதிபர் ஒபமாவின் உடன்பாட்டிற்கு ஒப்ப செய்யப்படும் என்றும் பலரும் எதிர்பார்கின்றனர். அதற்கு என்ன அர்த்தம்? ஓஹோ. சீனா இலங்கையில் காலூன்ற கூடாது என ஒபமா இந்தியாவை பயன்படுத்தி ஒரு புதிய முடிவை எடுக்க சொல்வாரோ? அதன்படி தீர்ப்பாயம் முடிவி இருக்குமோ?

Wednesday, October 27, 2010

கருத்துரிமை என்பது, காஷ்மிர்காரர் டில்லியில் பேசக்கூடாது என்பதுதானா? அருந்ததி எங்கேயும் பேசக்கூடாது என்பதுமா?


கிலானி காஷ்மீர்காரர். கிலானி ஹுரியத் அமைப்பின் ஒரு தலைவர். ஹுரியத் அமைப்பு காஷ்மீரில் இயங்கிவருகிறது. அது சுதந்திரம் என்று மூச்சுவீட்டுவருகிறது. ஹுரியத் தலைவர்களுடன், டில்லி பேச்சு வார்த்தை நடத்த போகிறோம் என்று கூறி வருகிறது.இந்த நேரத்தில் டில்லியில் அந்த கருத்தரங்கம் நடந்ததது. அதில் கிலானி பேச இருக்கும்போதே சில காஷ்மிரி பண்டிட்டுகள் அங்கேவந்து கலாட்ட செய்ய திட்டமிட்டார்கள். திட்டமிட்டே அவர்கள் வந்தார்கள் என்பதைவிட, திட்டமிட்டு அவர்கள் அனுப்பபட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் அவர்கள் கரங்களில் இந்திய தேசிய கொடிகள் கொடுத்துவிடப்பட்டிருந்தன. அதுவே அந்த காஷ்மிரி பண்டிதர்கள் இயக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரமாக இருந்தது. அந்த பண்டிதர்கள் தங்கள் நோக்கமான கூட்டத்தை நடத்தவிடாமல் கலாட்டா செய்வது என்பதில் கவனமாக இருந்தார்கள். அந்த கலாட்டாவை காட்சி ஊடகங்களில் வெளியிடுவதிலும் வெற்றிகரமான பாத்திரத்தை அவர்கள் எட்டினார்கள். அதேசமயம் கூட்டத்தை நடத்திய இளைஞர்கள் அவர்களை விரட்டிவிட்டு கூட்டத்தை நடத்துவதில் கவனமாக இருந்தார்கள்.

அந்த காஷ்மீர் பற்றிய கருத்தரங்கில் ஹுரியத் தலைவர் கிலானி தவிர, அருந்ததி ராய், மற்றும் டில்லி பல்கலை கழக பேராசிரியர் கிலானி ஆகியோரும் பேச்சாளர்கள் ஆனால் கலாட்டா செய்ய அனுப்பப்பட்ட காஷ்மிரி பண்டிதர்களுக்கு, ஹுரியத் தலைவர் கிலானியை பேசவிடாமல் செய்யவேண்டும் என்பது மட்டுமே கொடுக்கப்பட்ட நிகழ்ச்ச்சி நிரல் என்று தெரிகிறது. அதனால் அந்த டில்லி கூட்டத்தில் கலாட்ட செய்ய வந்தவர்களுக்கு, அருந்ததிராய் முக்கியமாக பட வில்லை. அதாவது இந்திய தலைநகர் டில்லியில் வந்து " சுதந்திரம்" பற்றி பேசவந்த கிலானியை கலாட்ட செய்வோம்: அதேசமயம் காஷ்மீர் சென்று " சுதந்திரம்" பற்றி பேசவந்த அருந்ததிராயை பிரச்ச்சனை ஆக்குவோம் என்பதுதான் இவர்கள் கொள்கை போலிருக்கிறது. அதாவது அவர்களே தங்கள் கலாட்டா மூலமும், பிரச்னையை எழுப்புவதன் மூலமும், இந்தியா வேறு, காஷ்மீர் வேறு என்று காட்டுவது போல உள்ளது. அவர்கள் பார்வையில் இந்தியா வேறு, காஷ்மீர் வேறு, அதேபோல இந்தியாவில் உள்ள அருந்ததிராய் வேறு, காஷ்மீரில் உள்ள கிலானி வேறு, அதாவது இந்தியாவில் உள்ள அருந்ததி ராய் காஷ்மீர் சென்று சுதந்திரம் பற்றி பேசக்கூடாது: அதேபோல காஷ்மீரில் உள்ள கிலானி இந்தியா வந்து சுதந்திரம் பற்றி பேசக்கூடாது. இப்போது புரிகிறதா இந்த கருத்துரிமை குரல்வளையை நெறிப்பவர்கள் அவர்களே இந்தியாவையும், காஷ்மீரையும் பிரித்துவிட்டார்கள். உண்மை அவர்களை நிர்ப்பந்தித்து விட்டதா என்பது நமக்கு தெரியவில்லை.


இப்போது டில்லி கூட்டம் பற்றி கூச்சல் போட்ட பா.ஜ.க. புதிய வாய்ப்பாக அருந்ததி ராய் காஷ்மீரில் பேசிய பேச்சு கூக்குரல் போட வசதி ஆனது என்று கண்டு கொண்டது. காஷ்மீர் சென்ற அருந்ததி ராய் அங்கே உள்ள நிலைமைகளை பார்த்துவிட்டு, காஷ்மீர் என்றுமே இந்தியாவுடன் இணைந்து இல்லை என்று பகிரங்கமாக கூறிவிட்டார். இது இந்திய ஆளும்கூட்டத்திற்கு பெரும் அதிர்ச்சியாக போய்விட்டது. அதாவது உலகெங்கும் புகழ் பெற்ற எழுத்தாளராக இருக்கும் அருந்ததி ராய், காஷ்மீர் மக்களுக்கு சாதகமான ஒரு கருத்தை அதுவும் அவர்களது சுதந்திரம் பற்றிய கருத்தை காஷ்மீர் சென்று கூறியது அவர்களது அடிப்படையையே தகர்த்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் போலும். இதில் அடிப்படையில் பா.ஜ.க. வேறு, காங்கிரசு வேறு என்று நாம் பிரித்து பார்க்க முடியாது. ஏன் என்றால், இந்தியா என்ற தேசத்தை காஷ்மீருடன் சேர்த்து உணர்ச்சிகரமாகவும், வரைபட பார்வையில் நின்றே நாட்டு பற்றை எடைபோடுபவர்கலாகவும், இருக்கின்ற ஒவ்வொரு இந்திய குடிமகனும் , இந்த விசயத்தில் உணர்ச்சிவசப்படவே செய்கின்றனர். சில வரலாற்று ஆசிரியர்களும், சில அறிவுஜீவிகளும், சில சுயாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களும், சில மக்கள் சார்பு கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களும், சில மக்கள் மத்தியில் உள்ள உண்மையான உணர்வுகளை அங்கீகரிப்பவர்களும், சில ஊடகவியலாளர்களும், சில எழுத்தாளர்களும் இந்த ஏக இந்தியா என்ற கருத்துகொப்பை தாண்டி, மக்கள் சார்ந்த சுயாட்சி மனோபாவத்தை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அடக்குமுறைகளால் எந்த மக்கள்தொகையின் உரிமை உணர்வையும் நசுக்கிவிட முடியாது என்று நம்புகிறவர்களாக இருக்கிறார்கள்.

அருந்ததி ராய் பேசிய பேச்சிற்காக அவர் மீது " ராஜ துரோகம்" என்று வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். அதை பல ஊடகங்களும் ஜால்ரா போட்டு வரவேற்கின்றன. இப்போது அருந்ததி எஆஇ இதற்கு பதில் சொல்லும் முகத்தோடு, காஷ்மீரில் உள்ள பத்து லட்சம் மக்கள் விரும்புவதைத்தான் சொன்னேன் என்கிறார். அங்குள்ள மக்கள் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார். காஷ்மீரின் பண்டிட்டுகளுக்காக சேர்த்துதான் பேசுகிறேன் என்கிறார். அங்கே பலியாகும் இந்திய ராணுவத்தின் தலித் ராணுவ வீரர்களுக்காக பேசுகிறேன் என்கிறார். ஒரு ஆக்கிரமிப்பை காஷ்மீரில் நடத்துவதற்கு இந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை எதிர்த்துதான் பேசுகிறேன் என்கிறார். அங்குள்ள சோபியன் நகரில் ஆசியா, நிலோபர் ஆகிய இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்டதை எடுத்துசொல்லி, அவர்களது உறவினர் ஷக்கீலை சந்தித்ததையும், அவர் இந்தியாவிடமிருந்து எந்த ஒரு நியாயமும் கிடைக்காதென கூறியதையும் எடுத்து சொல்கிறார். இப்போது மத்திய அரசு கிலானி மீதும், அருந்ததி ராய் மீதும் வழக்கு பதிவு செய்து பிரச்னையை சிக்கலாக்கபோவது இல்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதுவும் அப்படி வழக்கு பதிவு செய்தால், அதுவே பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையை காஷ்மீரில் நடத்துவதற்கு இடையூறாக முடியும் என்றும் கூறுகிறது. அதேசமயம் ஒரு மூவர் குழுவை அப்படிப்பட்ட பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு நிறுவ இருக்கும் நேரத்தில் , கருத்துகளுக்கு எதிரான வழக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கண்டிருக்கிறார்கள். அமெரிக்கா அதிபர் ஒபாமா வரும் நேரத்தில் அப்படி போடப்படும் வழக்கு, காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்கு எதிராக அமைந்து ஒபாமாவின் எதிர்பார்ப்பை உடைத்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாறு கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கும் பார்வை சிறிதும் இல்லாமல் அரசியல் காரனகளுக்காக வழக்கு பதிவு செய்வதை நிறுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதே கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரவையின் செயலாளரான பி.ராமன் கூறும்போது, "ராஜ துரோகம்" என்பது அரசுக்கு எதிராக மக்களை திருப்புவது என்பதாக பொருள்படும் என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அருந்ததி ராய் செய்யவில்லை என்றும், அதேசமயம் அவர் காஷ்மீர் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி மனோபாவத்தை பிற பகுத் மக்கள் மத்தியில் இந்தியாவில் தெரிவிக்க செய்துள்ளார் எனவும் கூறுகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்தால் அதுவே இந்த காஷ்மீரிகளுக்கு இந்தியாவுடன் இருக்கும் முரண்பாட்டை அதிகப்படுத்தும் என்றும் கூறுகிறார். வினைக்கு, எதிர்வினையாக ஆகிவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை செய்கிறார். அருந்ததி ராயின் பேச்சை ராஜ துரோகம் என்று எப்படி கூரமுடிய்ம் என்று ராமன் கேட்கிறார். இவர்கள் எல்லோருமே ஒன்றை மறந்துவிடுகிறார்கள். காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துலாவும் சில வாரங்களுக்கு முன்பு, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், அது நிபந்தனையின் பேரில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்றும் கூறினார். அதனால் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை கலைத்துவிட்டார்களா என்ன? இங்கே உள்ள ஆங்கில பிரபல ஏடு தனது தலையங்கத்தில் இத்தகைய கேள்வியை கேட்டிருக்கிறது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபல தமிழ் ஏடு தனது தலையங்கத்தில், "ஏன் இன்னும் தயக்கம்" என்று தலைப்பிட்டு, அதில் காஷ்மீர் மக்களது சுதந்திர உணர்வு 1900ஆண்டில் இருந்ததுபோல இப்போது இல்லை என்றும் ஆகவே அங்கு நாம் "சுதந்திரம்" பற்றி பேச அனுமதிக்க கூடாது என்றும் எழுதியுள்ளது. இவர்கள் பாராமல் படித்த பழங்கதையை மட்டுமே ஒப்பித்துக்கொண்டிருக்கிரார்கள். வரலாறும், இன்றைய காஷ்மீரத்தின் நிலைமையும், இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதுவரை அருந்ததி ராய் சொன்னதுபோல, எழுத்தாளர்களை நசுக்கும் போக்கு கொண்ட இந்தியா அய்யோ பாவம் என்றுதான் நாமும் சொல்லவேண்டும்.


Wednesday, October 20, 2010

மகிந்தா வழியை தி.மு.க. தலைமை ஏற்றுக்கொண்டுவிட்டதா?

இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்காவது மகிந்தா வழியை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் வருமா? இந்திய அரசியல்வாதிகளில் முக்கால்வாசி பேர்களுக்கு மகிந்தா என்றால் யார் என்றே தெரியாது. ஊடகங்களில் இந்தியாவில் இருப்பவர்களிலும், ஆங்கில ஊடக காரர்களுக்கு தெரிந்த அளவுக்கு இந்தியாவில் மற்ற ஊடக ஜாம்பவான்களுக்கு கூட மகிந்தாவை தெரிந்திருக்க நியாமில்லை. டில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ஆட்சியில் உள்ளவர்களுக்கு, அதிலும் குறிப்பாக சில முக்கிய அமைச்சர்களுக்கும், குறிப்பிட்ட அதிகாரிகளுக்கும் , மகிந்தா என்றால் இலங்கை தீவை அடக்கி ஆளும் சர்வாதிகாரி என்பது தெரியும். அப்போதும் அவர்கள் மகிந்தாவை பற்றி அக்கறை கொள்வதில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு அமெரிக்காவை பின்பற்றுவது என்று சொன்னால் பிடித்த விசயமாக இருக்கலாம். இலங்கையை போய் பின்பற்றுவார்களா? ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலங்கை ஒரு அன்றாட உணவு போன்ற முக்கிய பொருள்.

இலங்கை திவில் நடப்பது பற்றி தெரிந்திருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும். அதனால் இலங்கை தமிழர்கள் பிரச்சனை மட்டுமின்றி இலங்கை அதிபரின் பிரச்சனையையும் தெரிந்து வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் மகிந்தா விவகாரமும் இருந்தது. அதன் பின் மத்திய ஆரசு கிழித்த கோட்டை தாண்ட முடியாது என்பது இங்குள்ள ஆளும் கட்சி தலைமைக்கு கட்டாயமாக ஆன பிறகு, வர்கள் அதற்கு ஏற்றார்போல தாளம் போடத்தொடங்கினார்கள். தாளத்தை சத்தம்போட்டு போடும்போது, இரு நாடுகளிலும் தாளம் போடுபவர்களுக்குள் ஒரு நெருக்கம், ஒரு புரிதல், ஒரு பரஸ்பரம், ஒரு கொடுத்துவாங்குதல், ஒரு பரிமாற்றம், ஒரு ஒப்பந்தம், ஒரு நட்பு, ஒரு கடித போககுவரத்து, ஒரு பயணம், ஒரு இணைந்த செயல்பாடு, ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொடுக்கும் மன பக்குவம், ஒரு வரவேற்ப்பு கொடுக்கும் பாங்கு, ஒரு அரசியல்மேதைதன பரிமாற்றம், ஒரு வணிக உறவு, ஒரு நிலம் வாங்கும் போக்கு, ஒரு மகிழ்விக்கும் விருந்துபசாரம், ஒரு தொலை நோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடல் இத்தனையும்ம்வரத்தானே செய்யும்?

ராஜ ராஜ சோழன் பல நிலங்களையும் தனது ஆட்ச்சியின் கீழ் கொண்டு வார வேண்டும் என்றால், தனது தமிழ்த்தனத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, பார்ப்பனீய சக்திகளுக்கு சதிர்வேத மங்களத்தையும், பிரும்ம தேசத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயம் வரவில்லையா? அதுபோல அவரது வாரிசாக வரவேண்டும் என்றால், அதுபோலவே ஆளும் டில்லியுடன் ஒரு அரவணைப்பு, ஒரு அடிமைத்தனம், அதை ஒட்டி டில்லியின் நண்பர்களுடன் ஒரு கலந்தாய்வு, ஒரு கலப்பு ஆகியவை ஏற்படத்தானே செய்யும்? நீங்கள் ராஜ ராஜ சோழன் காலத்திய தலித் மக்கள் உழைக்கும் மக்களாக உழவு செய்யும் தமிழர்களாக இருந்ததனால், அவர்கள் கையில் வைத்திருந்த விலை நிலங்களை எப்படி அரசர் அந்தணர்களுக்கு தானம் கொடுக்க முடியும்? அந்த நிலங்களை தலித்துகள் கைகளில் இருந்து பறித்து எடுத்து, அந்த பரித்தேடுத்தலை சட்டமாக்கி அதற்கு பிறகுதானே அந்தணர்களுக்கு தானமாக கொடுக்க முடியும்? அதற்காக பிரும்ம தேசம், சதிர்வேத மங்கலம் ஆகியவற்றை ஏற்படுத்திதானே ஆகவேண்டும்?

அதுபோலத்தானே அதிபர் மஹிந்த ராஜ பக்சே, இந்தியா, சீனா, ஆகிய நாடுகளுக்கு தங்கள் நிலத்தை தானம் கொடுத்து பிழைப்பு நடத்துவதுதான் ஒரே வழி என்று இலங்கை ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக சிந்திக்கும் போது, அதையே தனது வாழ்க்கையாக நிரூபிக்கும் போது, தமிழீழ நிலத்தை போராளி தலைவன் பிரபாகரனிடம் இருந்து பறித்து எடுக்கத்தானே செய்யமுடியும்? அந்த முயற்ச்சியில் பல, பல உயிர்கள் இறக்கத்தானே செய்யும்? இறந்த உயிர்களும், கை போன மனிதர்களும், கால் போன பெண்டிரும், நச்சு காற்றில் இறந்துபட்ட உயிர்களும், கொத்து குண்டுகளில் கொல்லப்பட்டோரும், நீரின்றி செத்த பெருசுகளும், பாலின்றி இறந்த குழந்தைகளும், அதமிழர்களாக இருந்தால் யார் என்ன செய்ய? யார் தமிழர்களை அந்த போர்க்களத்தில் போய் வாழச்ச்கோன்னது? இப்படி த்தானே இங்குள்ள ஆளும் கட்சி தமிழர்கள் சிந்திக்க முடியும்? அவர்கள் ராஜ ராஜ சோழனது வாரிசுகளாக ஆக வேண்டியது முக்கியமா? உழைக்கும் தமிழர் கூட்டம் தனது நிலத்தை தானே ஆளவேண்டும் என்பது முக்கியமா? ஆகவே இங்கும், அங்கும் உள்ள ஆட்ச்ஹ்சியாலர்களது கூட்டு உருவானது.

அப்போது பல வணிக சூத்திரங்கள் பரிமாறப்பட்டன. அதில் ஒன்று உங்களுக்கு பணம் வேண்டும், வணிகம் வேண்டும், நல்ல பொருள் ஈட்ட வேண்டும். ராஜ ராஜ சோழன் போல நாடு கடந்து நிலம் ஆளவேண்டும். அதற்கு ஒரே வழி உங்கள் முதலாளி டில்லியை மட்டும் நம்பி இருந்தால் போதுமா? இந்த கேள்வி மகிந்தாவின் சிந்தனை இங்கும் தனது வேர்களை போடமுடிந்தது. மகிந்தா இந்திய அரசுக்கு போட்டியாக, சீன அரசை இறக்கிவிட்டார். அது அவருக்கு பலன் கொடுத்தது. நமது அண்ணன்களும் கற்றுக்கொண்டனர். தமிழக துணை முதல்வரது சீன பயணமும், அவரது அண்ணன் மத்திய அமைச்சரது சீன பயணமும் அதற்கு வழி செய்தன. அய்யா அரசவையில் அமர்ந்தவாறு, அதற்கு ஆலோசனை வழங்கி வழி அனுப்பி வைத்தார். மகிந்தாவின் கடிதத்திற்காக இலங்கைக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த அதே கரங்கள்தான், அதே மூளைதான் இப்போதும் தனது மகன்களை சீன தேசம் அனுப்பிவைத்து அங்குள்ள முதலாளிகளுடன் பல தொழில் உடன்படிக்கைகளை போட உதவ முடிகிறது.

இப்போது புரிகிறதா? இவர்கள் டில்லிக்கு கூட விசுவாசம் இல்லை. தங்களுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். ராஜ ராஜ சோழனின் வாரிசுகள்தான் என இப்போதாவது உலக தமிழர்கள் ஒப்புக்கொள்ளுங்கள்.

Monday, October 18, 2010

மும்பை தாக்குதலை நடத்தியது அமெரிக்க குடிமகனா? அமெரிக்க உளவு துறையா?

இப்போது அம்பலமாயிருக்கும் செய்தி இதுவரை பேசப்பட்ட, அல்லது விவாதிக்கப்பட்ட பாணியில் அல்லாமல், மும்பை தாக்குதலில் முழுமையாக ஈடுபட்டது யார் என்பதில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது. பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறைதான் என்பதாக இருந்த பதிவை மாற்றிவிட்டது இப்போது அமெரிக்க உளவுத்துறையின் பாத்திரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. புரோபுப்ளிகா என்ற இணையதளத்தில், செபஸ்டியன் ரோடெல்லா என்பவர் எப்படி மும்பை தாக்குதலின் மூளையான டேவிட் காலமன் ஹெட்லி என்ற லஷ்கர்-ஈ- தொய்பாவின் சிகாகோ கிளையில் உள்ள பயங்கரவாதி, அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான எப். பி.ஐ. யில் ஐக்கியமானார் என்று அம்பலப்படுத்தியுள்ளார். இரண்டு ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். அனைத்துநாட்டு பயங்கரவாத கண்காணிப்பு அறிக்கை எண்; 685 இல் அவை வெளியாகயுள்ளன. அக்டோபர்-15 , 16 இல் வெளியான இந்த அறிக்கைகளை, அங்க்கீகரிப்பது போல, " வாஷிங்க்டன் போஸ்ட் " வெளியிட்டது. ஹெட்லியை குற்றம் சாட்டி தாக்கல் செயப்பட்ட குற்றப்பத்திரிகை ஆய்விலிருந்து நான்கில், மூன்று பங்கு விவரங்கள் இந்த அறிக்கையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

அந்த அம்பலப்படுத்தும் அறிக்கையில், ஹெட்லியின் இரண்டு மனைவிகளின் வாக்குமூலங்கள் அதிர்ச்சியை தருகின்றன.ஒரு மனைவி அமெரிக்க குடி. அவர் அமெரிக்காவில் வாழ்கிறார். இன்னொரு மனைவி மொராக்கோவை சேர்ந்தவர். அவர் பாகிஸ்தானில் வாழ்ந்துவருபவர். அதேபோல எப்.பி.ஐ. யின் இன்றைய மற்றும் நேற்றைய அதிகாரிகளும் தங்கள் வாக்குமூலங்களை கொடுத்துள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் ஹெட்லியின் மனைவி, மூன்று முறை அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான எப்.பி.ஐ. யின் அதிகாரிகளிடம் நேரடியாக நியு யார்க் நகரில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் ஹெட்லி பாகிஸ்தானில் இருக்கும் லஷ்கர்-ஈ-தொய்பாவின் முகாமில்,பயிற்சிஎடுத்ததீவிரபோராளிஎன்றுகுறிப்பிட்டிருந்தார்.
ஹெட்லி இரவு நேரம் பயன்படுத்தும் கண்ணாடிகளை வாங்கியதாகவும் அவர் மனைவி கூறியுள்ளார். அத்தகைய செய்திகளை மற்ற அதிகாரிகளின் சாட்சிகளும் உறுதி செய்தனர்.

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவரது கூற்றுப்படி, பாகிஸ்தானில் பயிற்சி எடுக்கும் போதே, ஹெட்லி அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ.யின் சம்பளம் வாங்கும் ஒரு உளவாளி என்பது அம்பலமாகி உள்ளது. உள்ளூரில் தாக்குதலில் ஈடுபட்டதாக ஹெட்லியை நியு யார்க் காவல்துறை கைது செய்தது. அது மும்பை தாக்குதலுக்கு பிறகு ஹெட்லியை காப்பாற்ற அமெரிக்க உளவுத்துறை எடுத்த முயற்சி. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை, ஐரோப்பாவில் உள்ள அல்-கொய்தாவுடன் ஹெட்லி தொடர்பு வைத்துள்ளான் என்று அமெரிக்க உளவு துறையிடம் கூறிய பிற்பாடும், மும்பை தாக்குதல் நடந்து பதினோரு மாதங்கள் ஆகியும் ஹெட்லி பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட வில்லை. அதுவே அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ. பற்றி நமக்கு புரிவதற்கு போதுமானது. .ஹெட்லியின் அமெரிக்க மனைவி கொடுத்த வாக்குமூலங்கள் எல்லாம் 2005
ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் உள்ள அமெரிக்க உளவு துறையிடம் கொடுக்கப்பட்டது.அப்படி இருந்தும் அமெரிக்க உளவு நிறுவனம் அதை இந்திய அரசிடம் கூறவில்லை. ஏன்? ஏன்? என்று இப்போதாவது நாம் கேட்க வேண்டும்.

ஹெட்லி மூன்று மனிவிமார்களை மணந்தவர். அவர்களில் இன்னொருவர் மொராக்கோவை சேர்ந்தவர். அவர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூலம், அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் ஹெட்லியை பற்றி பல செய்திகளை பல முறை சந்தித்து வாக்குமூலமாக கூறியுள்ளார். அந்த மனைவியும், ஹெட்லியும் மும்பை வந்து அங்குள்ள தாஜ் ஓட்டலில் தங்கி இருந்ததை படங்களுடன் காட்டி அந்த மனைவி பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறையிடம் அப்போதே கூறியிருக்கிறார் என்ற செய்தி இப்போது வெளியாகி உள்ளது. அதாவது மும்பை தாக்குதலுக்கு ஓராண்டு முன்பே ஹெட்லியின் மனைவி ஆதாரபூர்வமாக அமெரிக்க உளவு நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால் அப்போது ஒரு உளவு துறை அதிகாரி, அவரிடம் "வெளியே போ " என்பதாக கூறியுள்ளார். அதற்கு என்ன பொருள்? நாங்கள் ஏற்பாடு செய்து, நாங்களே தயாரித்துள்ள ஹெட்லி பற்றி எங்களிடமே குறை சொல்ல வந்துவிட்டாயா? என்பதுதானே அதற்கு பொருள்? அதன் அர்த்தம் என்ன தெரிகிறதா? அமெரிக்கவே ஏற்பாடு செய்ததுதான் மும்பை தாக்குதல் என்பது இதிலிருந்தாவது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

அப்படி பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள அமெரிக்க உளவு துறை அதிகாரிகளிடம், ஹெட்லியின் அந்த மொராக்கா மனைவி ஹெட்லியின் நண்பர்கள் லஷ்கர்-ஈ-தொயபாவில் இருப்பதையும், ஹெட்லி பயங்கரமான இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவராக இருப்பதையும் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த அமெரிக்க அதிகாரிகளோ, ஏன் இந்தியாவிடம் இது பற்றி முன்கூட்டியே கூறவில்லை என்று கேட்டதற்கு. குறிப்பான செய்திகள் கிடைக்கவில்லை என்றும் , அதனால்தான் இந்தியாவிடம் முன்னெச்சரிக்கையாக கூறவில்லை என்றும் அந்த அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அதாவது மனைவியால் காட்டப்படும் படத்தின் மூலம் மும்பை தாஜ் ஓட்டலுக்கு வந்ததாகவும், அங்கு வந்த ஹெட்லி லஷ்கருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவரது மனைவியே கூறுவதும்கூட, இந்த அமெரிக்க உளவு துறை அதிகாரிகளுக்கு குறிப்பான விவரங்களாக தெரியவில்லை. அதாவது தாங்களே ஏற்பாடு செய்துள்ள ஒரு மும்பை தாக்குதலுக்கு முன்கூட்டியே அதுபற்றிய செய்தியை இந்திய உளவுத்துறையிடம் கொடுத்துவிட்டு, தங்களது சதி திட்டம் தவிடு பொடியாக அமெரிக்க உளவு துறை அனுமதிக்குமா?
அதனால் ஹெட்லியின் மனைவிகள் கூறிய செய்திகள் எல்லாமே, பொதுவான செய்திகள்தான் என்றும், அவை குறிப்பாக எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறவில்லை என்றும் ஒரு மழுப்புதலை, ஒரு தப்பித்தல் இந்த அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள் இப்போது கூறுகிறார்கள். ஹெட்லியின் தொடர்புகள் பல சிக்கலான விசயங்களை காட்டுகின்றன. இடைநீக்கம் செய்யப்ப்பட்ட பாகிஸ்தான் உளவு அதிகாரியும், இன்று அல்- கொய்தா இயக்கத்தின் ஒரு கட்டளை தளபதியாக இருக்கும் இலியாஸ் காஷ்மீரி என்ற பாகிஸ்தான் நாட்டு போராளியும் ஹெட்லியின் நெருக்கமான தொடர்புகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. முதலில் ஹெட்லி அமெரிக்காவின் போதை மருந்து தடுப்பு துறையின் ஒற்றராக நியமிக்கப்பட்டவர். பிறகு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் பற்றிய செய்திகளை திரட்டி தரச்சொல்லி, அவரிடம் அமெரிக்க உளவுத்துறை பொறுப்பு கொடுத்திருந்தது. அதற்காக அமெரிக்க அரசின் முழு ஒத்துழைப்புடன் ஹெட்லி பாகிஸ்தானிற்கு அவ்வப்போது சென்று வந்தார்.. அந்த நேரத்தில் ஹெட்லியின் அமெரிக்க மனைவி நியுயார்க்கில் உள்ள அமெரிக்க உளவுத்துறை வசம் ஹெட்லி பற்றிய குற்றச்சாட்டுகளை கூறியபோதும், அவர் அனுப்பும் இணைய அஞ்சல்கள் பற்றி குறைகளை கூறிய போதும், ஹெட்லி தன்னை [ மனைவியை] துன்புறுத்துகிறார் என்று கூறிய போதும் அதை அமெரிக்க உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. தாங்கள் ஹெட்லியை நம்பி பெரிய பொறுப்பான ரகசியமான வேலையை கொடுத்துள்ள அமெரிக்க உளவு துறை எப்படி ஹெட்லி மனைவியின் குற்றச்சாட்டுகளை செவி மடுக்கும்?

ஆனால் அதே அமெரிக்க உளவு துறை, 2008 ஆம் ஆண்டு இந்திய உளவு துறையிடம் ஒரு செய்தியை முன்னேச்சடிக்கை என்ற பெயரில் கூறியது. அது கடல் வழியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிட்டுள்ளார்கள் என்ற செய்தி. ஆனால் அதை ஹெட்லி மூலமாக எடுத்தோம் என்று அமெரிக்க உளவு துறை கூறவில்லை. ஏன் என்றால் ஹெட்லியை வைத்து அந்த திட்டத்தை தயார் செய்வதும் தாங்கள்தான் என்று தெரிந்து விடக்கூடாதே என்ற காரணத்திற்க்காக அவ்வாறு சொல்லாமல் இருந்திருக்க முடியும். ஹெட்லி இந்தியாவிற்கு ஐந்து முறை வருகை புரிந்தான் என்றும், அப்போது லஷ்கருக்காக தாக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அவனுடையதாக இருந்தது என்பதும், அவன் அப்படி வருகை புரிந்த நேரத்தில் தாக்குதலுக்கான இடத்தை தேர்வு செய்தான் என்றும், கடல் வழியாக படகு வந்து இறங்கவேண்டிய இடத்தையும் அப்போது தேர்வு செய்தான் என்றும் இப்போது அமெரிக்க உளவு துறை தனது விசாரணையில் கிடைத்ததாக கூறுகிறது. .இத்தகைய செய்திகளை இந்திய அரசிற்கு கொடுக்காமல் அப்போது அமெரிக்க உளவு துறை மறைத்தது ஏன் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும். தாக்குதல் திட்டம் தோற்றுவிடக்கூடாதே என்ற அக்கறையை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

இதில் வேறு சில செய்திகளும் உள்ளன. அதாவது தனது இந்திய வர்ய்கைக்கு முன்பே, இந்திய அரசிடம் தனது பாகிஸ்தான் பிறப்பு தெரிந்து விடக்கூடாதே என்பதற்காக, தனது பெயரான தாவூது கிலானி என்ற பாகிஸ்தான் பெயரை மாற்றி அமெர்க்க பெயரான டேவிட் காலமன் ஹெட்லி என்ற பெயருக்கு ஒரு பாஸ்போர்ட் எடுக்கிறான். இதுவும் அமெரிக்க உளவுத்துறையின் ஏற்பாடுதானே? மும்பை தாக்குதலுக்கு பிறகும், ஹெட்லி மீண்டும் இந்தியா வந்துள்ளான். அப்போதும் அமெரிக்க உளவுத்துறை அதுபற்றி இந்திய அரசிடம் கூறவில்லை. அதேசமயம் அமெரிக்க உளவு நிறுவனம் , கோபன்ஹெகனில் மற்றொரு தாக்குதலுக்கு ஹெட்லி திட்டமிடுவதை இடைமறித்த செய்தி மூலம் தெரிந்துகொண்ட பின்பே ஹெட்லியை கைது செய்கின்றனர்.அதாவது 2005 ஆம் ஆண்டு முகமது நபி பற்றி ஒரு கேலிசித்திரம் வரைந்த ஒரு நாளேடு மீதான தாக்குதலை கோபன் ஹேகனில் திட்டமிடும் போதுதான், அமெரிக்க நடவடிக்கை எடுத்தது. அதாவது தான் திட்டமிட்டு கொடுத்த சதிக்கு ஹெட்லி பயன்படலாம். ஆனால் தானாகவே ஹெட்லி இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிட்டு விடக்கூடாது என்பதுதான் அமெரிக்காவின் கொள்கையாக இருக்கிறது.

ஹெட்லி பற்றி அமெரிக்கா அறிவித்த பிற்பாடும், அவனை இந்திய அதிகாரிகள் நேரடியாக எடுத்துசென்று விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை? அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் இந்திய அதிகாரிகள் அங்கே சென்று தனியாக அவனை விசாரிக்கவும் ஏன் அமெரிக்கா அனுமதிக்க வில்லை? அமெரிக்கா உளவு நிறுவனமான எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்புதான் விசாரிக்கவேண்டும் என்று ஏன் வற்புறுத்தினார்கள்? தனியாக விசாரிக்கப்பட்டால் ஹெட்லி அமெரிக்கா உளவு நிறுவனத்தின் ஏற்பாட்டில்தான் மும்பை தாக்குதலை நடத்த திட்டமிட்டோம் என்று கூறி விடுவான் என்பதற்காகத்தானே? இதுபோல அமெரிக்கா உளவுதுறை நடந்து கொள்ளவேண்டிய தேவை என்ன? மும்பை தாக்குதலில் அமெரிக்கா உளவு துறைக்கு உள்ள ரகசிய உறவு என்ன? அதற்கு முக்கிய பங்கு அமெரிக்கா அரசு வகிக்க வேண்டிய காரணமென்ன?

இத்தனை கேள்விகளுக்கும் விடை காண வேண்டும் என்றால், அமெரிக்கவிற்கும், இந்தியாவிற்கும் நடந்து வரும் அரசியல் உறவுகள், ராணுவ ஒப்பந்தங்கள், மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் ஆகியவை பற்றி ஒரு ஆய்வு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவிற்கு ஏதாவது நிர்ப்பந்தம் இரூக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவில் அமெரிக்காவுடனான ஏதாவது ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு உள்ளதா என்று நினைத்து பார்க்க வேண்டும். அந்த எதிர்ப்பு இப்படிப்பட்ட மும்பை தாக்குதல் போன்ற ஒன்றால், உடைக்கப்பட முடியுமா? என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்தியாவில் அமெரிக்கவுடன்னான அணுசக்தி ஒப்பந்தம் மீது நாட்டுப்பற்று உள்ள சக்திகள் மத்தியில் எதிர்ப்பு இருப்பது அமெரிக்காவிற்கு கவலை அளக்கிறது என்பது உணமைதான். அதை உடைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதும் தெரிந்த செய்திதான். அத்தைகைய முயற்ச்சியில் அமெரிக்கவால் பா.ஜ.க. வை அமெரிக்கா ஆதரவாக அணு சக்தி விபத்து இழப்பீடு சட்டத்தை போடும்போது கொடுவர முடிந்தது. ஆனால் இந்திய மக்களை அப்படி காசு கொடுத்து அரசியல்வாதிகளை வாங்குவது போல வாங்க முடியாதே? அதனால்தான் இப்படி ஒரு மும்பை தாக்குதல் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டிய தேவை அமெரிக்கா அரசுக்கு இருக்கிறது. அதுவே இத்தனை நாடகங்களுக்கும் காரணம் என்பதை நாட்டு பற்றுள்ளவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். ஒபாமா வரும்போது அதையே எதிரொலிக்க வேண்டும். செய்வார்களா?

Sunday, October 17, 2010

தமிழர் வரலாறும், பண்பாடும், எந்தகண்கொண்டு காணப்படவேண்டும்?

இன்றைய சூழலில் தமிழர் உரிமைகள் என்பது உலக தமிழர் மத்தியில் அதிகமாக கவனிக்கப்படும் விசயமாக அறுதியிடப்பட்டு வருகிறது. தமிழர் உரிமைகள் எழுப்பப்பட வேண்டுமானால், தமிழர்களது இன்றைய நிலைமை பற்றிய மதிப்பீடு அறியப்பட வேண்டும். இன்றைய நிலையை ஒப்பீட்டு அறிய, கடந்த கால தமிழர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள தமிழர் வரலாறு படிக்கப்பட வேண்டும். அதனால் தமிழர் வரலாறும், பண்பாடும் பலராலும் இன்று கூறப்பட்டு வருகிறது. பலராலும் எழுதப்பட்டும் வருகிறது.
அவ்வாறு தமிழர் வரலாறு, கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிலும் பேசப்பட்டது. எழுதப்பட்டது. காட்டப்பட்டது. ஓதில் காட்டப்பட்டது என்ற செய்திதான் அதிகமான மக்களை போய் அடையக்கூடியது. அதாவது காட்டப்படுவது என்பது கண்காட்சியாக வைக்கப்பட்டும், காட்சிகளாக உருவாக்கப்பட்டு என்பதாகவும்,பொருள்படுகிறது. அப்படி செம்மொழி மாநாட்டில் ஒரு கண்காட்சி வைக்கப்பட்டது. அதன் முயற்சி முழுமையாக, அனைச்சர் தங்கம் தென்னரசுவினதாக இருக்கலாம். ஆனாக் அதுதான் பெரும்பான்மையான தமிழ் மக்களை கவர்ந்தது. அதில் பல தமிழர்களது பண்பாட்டு அடையாளங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. காட்சிகள் மூலமாக பல பண்பாட்டு நிகழ்வுகள் காட்டப்பட்டன. தமிழர்களது வீர விளையாட்டுக்கள், காதல் காட்சிகள், களை திறமைகள் என அந்த கண்காட்சி காண்போர் மனதை கவர்ந்தது.
தமிழன் புறநானூற்றிலும், அகநானூற்றிலும், சங்க காலத்திலும் எப்படி வாழ்ந்தான் என்ற வரலாற்று சான்றுகள் அங்கே எடுத்து வைக்கப்பட்டன. அப்படி இருந்தும் நிகழ் கால தமிழன் எழத்தில் எப்படி போரிட்டான் என்பதும், எப்படி சுற்றி வளைக்கப்பட்டன என்பதும், எப்படி தரைபடை,கடல் படை,மற்றும் வான்படையை கட்டி அமைத்தான் என்ற வரலாறு அரசியல் காரணங்களால் இடம் பெறவில்லை. அது அவர்களது அரசியலாக இருந்துவிட்டு போகட்டும். நாம் கற்க வேண்டியது தமிழரது உண்மை வரலாறு இல்லையா? தமிழரது உண்மையான பண்பாடு பற்றி இல்லையா?
அது இன்றைய நிலையில் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? இவ்வாறான கேள்விகளுக்கு விடை காண வேண்டும் அல்லவா? அவ்வாறு காண்பதற்கு, தேர்தல் அரசியலை சார்ந்து நிற்கும் கூட்டத்தினரிடமிருந்து சற்றே விலகி இது பற்றி சிறிது அலச வேண்டும் அல்லவா? அதற்கு தமிழர் இயக்கங்களை, தமிழின உணர்வாளர்கள் நடத்தும் நிகழ்வுகளை, அப்படி உணர்வுள்ளவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளை, அல்லது கண்காட்சி நிகழ்ச்சிகளை, நாம் நாடி செல்வோமல்லவா? அப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக பெண்கள் செயற்களம் நடத்திய, தமிழர் பண்பாட்டு கண்காட்ச்சிக்கு பார்வையாளனாக சென்றேன்.
பண்டை தமிழர்கள் கற்கால மனிதர்களாகம் வேட்டையாடும் காலத்திய நிலையில், அடுத்து விவசாயத்தை கற்ற நிலையில், பல்வேறு கலைகளை படைத்த வரலாற்றில், மன்னர் கால ஆட்சிகளில், உற்பத்திகளில் ஈடுபட்ட காலங்களில், கடல் கடந்து வணிகம் செய்த காலத்தில்,வீரத்தில்,காதலில்,இலக்கியத்தில்,என்பதாக தீட்டப்பட்ட ஓவியங்களை, சித்திரங்களை, விவரிப்புகளை,அனைத்தையும் காணமுடிந்ததது.கடுமையான உழைப்பு இன்றி இவை அவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட முடியாது.அததகைய கடுமையானமுயற்ச்சியை பெண்கள் மூலமாக செயலபடுத்தியிருப்பது பெரும் சிறப்பு என உணர முடிந்தது.
அதேசமயம் அந்த கண்காட்சி ஒரு பெரிய கேள்வியை கிளப்பி விட்டது. அதில் தமிழர் வரலாற்றை வர்ணிக்கும் போது, ஆண்களின் பங்கை உயர்த்தி பிடித்திருப்பதை உணர முடிந்தது, அதுதான் தமிழர் வரலாறா? அல்லது அது அவ்வாறு பொருள்படும்படி ஆண்களால் எழுதப்பட்டுள்ளதா? பெண்பாற் கவிஞர்கள் அந்த காலத்தில் ஏதாவது வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களா? அல்லது அப்படி எழுதியவை நமது கண்களுக்கு பட வில்லையா? அதேபோல கண்காட்சியின் கடைசி பகுதியில் இன்றுள்ள சாதி ஒடுக்கல் வரையப்பட்டுள்ளது. அது இடையில் வந்ததா? அப்படியானால் எந்த காலகட்டத்தில் இடையில் வந்தது? தமிழ் அரசர்களே அதை அதாவது சாதி வேறுபாட்டை ஆதரித்து நின்றார்களா?
உணவு உற்பத்தி என்ற விசயத்தில் நெல் உற்பத்தி எப்போது வந்தது? கம்பு, கேழ்வரகு, சோளம், திணை ஆகிய வகைகள் சமீப காலம் வரை பயிரிடப்படுவதும், அதிகமாகஉட்கொள்ளப்படுவதும் இருந்து வந்ததே? என்பதாம் ஆண்டுகள் வரை, தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில், அததகைய பயிர்களை மாட்டுமே அதிகம் உண்டு இழைத்துவந்த் தமிழ் மக்கள் மத்தியில்தானே வாழ்ந்து வந்தோம்? அதனால் நெல்வந்து அததகைய திணைகளை மாற்றி அமைத்தது, தமிழனது வாழ்வியலில் கொண்டு வந்த மாற்றம் பயனுள்ளதா? அல்லது தமிழனை உணவு பழக்கத்திலும் மாற்றி அமைத்து பலவீனப்படுத்தி விட்டதா? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுந்து விட்டன.
அதனால் நாம் தமிழர் வரலாற்றை எந்த கண்களுடன் காண வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் தமிழ் அரசர்கள் என்று இன்று புகழப்படுபவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்ன செய்தார்கள்? எப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார்கள்? யாருக்கு ஆதரவாக இருந்தார்கள்? தமிழர்களின் வாழ்வு மலர உதவினார்களா? அல்லது தமிழர்களின் பண்பாடுகளை நசுக்குவதற்கும், உழைக்கும் தமிழர்களின், வாழ்வாதாரத்தை அழிப்பதற்கும், தீவிரமாக செயல்பட்டார்களா? அப்படி செய்திருந்தால், அவர்களை தமிழர்களின் அரசர்கள் என்று பெருமைப்படலாமா? தமிழர்களில் நல்லவர்களும் இருந்தார்கள், துரோகிகளும் இருந்தார்கள் என்று ஒப்புக்கொள்ளப்போகிரோமா? இல்லையா?
இத்தகைய கேள்விகள் நமக்குள் எழ வேண்டும். அவ்வாறு எழும்போது உலகம் முழுக்க மனித இனம் வளர்ந்தது போலவே, தமிழ் இனத்தின் கற்காலங்களிலும்ம பெண் தலைமை சமுதாய அமைப்புதான் இருதது எனபதையும், பெண்கள் தலைமையில் ஆண்கள் வேட்டையாடுதலை செய்தார்கள் என்பதிலும் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்க தேவையில்லை. அப்படி ஆணும், பெண்ணும் சமமாக இருந்த தமிழர்கள் மத்தியிலும் பாலின வேறுபாடு வந்தது என்பதை நாம் மறைக்க தேவையில்லை. அந்த பாலின வேறுபாடும், எழத்தில் போர்க்களத்தில், பெண்புலிகள் துவக்கு எடுத்து போரிடுன் போதுதான் உணமையான பாலின சமத்துவம் மீண்டும் படைக்கப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பகிரங்கமாக உரக்க கூவ வேண்டும்.
அதுபோல ராஜ ராஜ சோழனது ஆட்சி காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அவர்கள் நிலங்களில் இருந்து விரட்டி அடித்து அவர்களின் இடம் பெயர்வை சட்டரீதியாக ஆக்கிய கொடியவன்தான் அந்த அரசன் என்பதை நாம் பதிவு செய்யாமல் அவனை புகழ முடியுமா? அதுமட்டுமின்றி சதிர்வேத மங்கலத்தில் ராஜ ராஜ சோழனுக்கு எதிராகம உழைக்கும் தமிழ் மக்களான தாழ்த்தப்பட்ட மாக்கள் போராடியதை மறைக்கமுடியுமா?இன்றுஅதேபோல அரச தன்மையை கொண்டுள்ள மன்னர்கள் வேண்டுமானால் அந்த அரசனை புகழலாம். விடுதலை வேண்டிசெயல்படுவோர் புகழமுடியுமா?
ஆகவே இந்த சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய வேறுபாடுகளை உடைத்தெறிவதும் தமிழ் தேசிய விடுதலையின் ஒரு பகுதியும், தொகுதியும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உகத்தில் பல நாடுகளில் பல தேசிய இணைகள் விடுதலைக்காக போராடி உள்ளன. பல விடுதலை அடைந்துள்ளன. ஆனால் தமிழ் தேசிய இனம் மட்டுமே தனது விடுதலையின் ஊடே, பாலின வேறுபாட்டையும், சாதி வேறுபாட்டையும், மத வேறுபாட்டையும், வர்க்க வஐபாட்டையும் நீக்கும் போராட்டங்களை உள்ளடக்கி வளர்ந்து வருகிறது. அதனால்தான் தமிழர் திருநாள் என்று அறியப்பட்ட பொங்கல், உழவர்களது அறுவடை திருநாளாக, கொண்டாடப்படுகிறது. தமிழர் என்றால் உழவர் என்பத்கும் அதில் பொருள் படுகிறது.
ஆகவே தமிழர் விடுதலை என்ற தொலைநோக்கு பார்வையுடன் தமிழர் வரலாற்றை தொகுக்கும போது, பாலின சுதந்திரம், சாதி வேறுபாடு நீக்கம், ஆகியவற்றை இணைத்து காண்பதுதான் தமிழர் பண்பாட்டில் சிறப்புதன்மையையும், செழிப்புதன்மையையுன் ஏற்படுத்தி, எதிர்கால விடுதலைக்கு வித்திட முடியும் என்பதை நாம் உரக்க கூறலாம்.








புதிய விண்டோ
அனைத்தையும் அச்சிடு
ஸ்பான்சர் செய்யப்பட்ட இணைப்புகள்
Life In The Robotics Lab
Who builds humanoid robots? Blog, contests and more!
Robot Manipulators
Manual, semi and automatic models Capacities from 250 up to 20,000kg
Indoor Research Robot
Affordable, Capable, and Expandable Program in Linux or Windows
Dynamixel, Bioloid, OLLO
Smart Robot Servo, DIY Robot Kit ROBOTIS - All you need for robot
X10 for Android
X10 Remotes for Android Phones Download OpenRemote 2.0 Now!
பற்றி மேலும்…
இந்த இணைப்புகளைப் பற்றி

Thursday, October 14, 2010

தண்ணீர் உரிமை மனித உரிமை என்று ஐ.நா.சொல்கிறதே?

நம்ம ஊர்காரங்களுக்கு காது கேட்கலையோ என்னவோ. இல்ல. நம்ம ஊர் பற்றி இந்த ஐ.நா.காரங்களுக்கு இன்னமும் தெரியல்லையோ என்னவோ. திடீர்னு, தண்ணீர் உரிமைய மந்த உரிமையா அறிவ்ச்சிருக்காங்க. மனித உரிமைல இன்னும் எதை, எதை சேர்க்க போறாங்களோ தெரியல்ல. நம்ம ஊர்ல அதாவது தமிழ்நாட்டுல, இப்போ வாட்டர் பாட்டில் வாங்காதவங்க யாரு இருக்காங்க? நகரத்தில உள்ளவங்க நல்ல தண்ணீ கிடைகல்லேன்னு வாங்கறாங்க அப்படின்னு வச்சுகிட்டாலும், கிராமத்துலேர்ந்து நகரம் வர்றவங்களும், ஒரு தண்ணி போத்தல கைல எடுத்துக்கிட்டு வாராகளே? காசு குடுத்து தண்ணி குடிக்கிறோம் பாத்தியளா அப்படின்னு காட்டுதுக்காகவா? இது ஒரு பேஷனா போயிருச்சா? இன்னிக்கி தண்ணீர் உரிமை பற்றி உலகமெங்கும் ஊடகங்களில் கொண்டுவரும் நாள் என்று சொன்னாங்க. அதனால நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஜூலை-28 ஆம் நாள் புதன்கிழமையன்று, ஐ.நா. தண்ணீர் உரிமையை ஒரு மனித உரிமை என்று பிரகடனப்படுத்தியது. ஏற்கனவே மனித உரிமைகளுக்கான ஒரு பிரபஞ்சம் தழுவிய பிரகடனத்தை, இதே ஐ.நா. பொது சபை 1948 ஆம் ஆண்டில், 58 உறுப்பு நாடுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியது. அதே ஐ.நா.பொதுசபை, இப்போது அறுபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, தண்ணீர் உரிமை, மனித உரிமையே என்ற தீர்மானத்தை 192 நாடுகள் இருந்த சபையின் ஒப்புதலோடு நிறைவேற்றியிருக்கிறது. அது தண்ணீரையும், கழிவு அகற்றளையும் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானம் சிக்கலானது என்று நிரூபிக்கும் அளவில், இதற்கு ஆதரவாக 122 நாடுகளும், வாக்களிகாதவர்களாக 41 நாடுகளும் இருந்தன. ஒருவரும் இதை எதிர்த்து வாகளிக்கவில்லை. அதேநேரம் இந்த தீர்மானம் ஒரு ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் முரண்பாடு என்பதாக பார்க்கப்பட்டது. அதாவது ஒரு வடக்கு---தெற்கு முரண்பாடாக கருதப்பட்டது. அமெரிக்கா எதிர்பார்த்தபடியே ஆதரவு வாக்கை அளிக்கவில்லை. மாறாக வாக்களிக்காமல் இருந்துவிட்டது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆச்திரயா, கனடா, கிரீஸ், ஸ்வீடன், ஜப்பான், இஸ்ரேல், தென்கொரியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, டென்மார்க், அயர்லாந்து, ஆகியவை பணக்கார, தொழில்வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் சேர்ந்து வாகளிகாமல் இருந்துவிட்டன. ஆனால் அவர்களுடன் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில், போட்ஸ்வானா, எதியோபியா, கென்யா, லெசோதோ, சாம்பியா, கயானா, ட்ரினிடா, தொபகா சேர்ந்துகொண்டன. இந்த தீர்மானத்தை கொண்டுவந்த பொலிவியா, மனித உரிமைகள் முழுமையாக உருவான ஒன்றாக இருப்பதில்லைஎனவும், அவை யதார்த்தத்தையும்,எதிர்பார்ப்பையும் வைத்தே வளர்க்கப்படுகின்றன என்றும் கூறினார். அனைத்துநாட்டு பொருளாதார, சமூக,பண்பாட்டு மாநாட்டில் முடிவு செய்தது போல, கல்விக்கான உரிமையும், வேலைக்கான உரிமையும் எப்படி மனித உரிமையோ அதுபோல, தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் உள்ள உரிமையும் அடிப்படை மனித உரிமைதான் , என்று அவர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவின் பிரதிநிதியோ, இந்த தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் ஆன தீர்மானத்தில் உலக நாடுகள் மத்தியில் ஒரு கலந்துரையாடலின் மூலம் ஒத்த கருத்தை எட்டி அதன்பிறகு, இப்போது ஐ.நா.வின் மனித உரிமை கழகத்தில் ஜெனிவாவில் நிலுவையில் உள்ள தீர்மானத்தை முழுமையாக ஆக்குவோம் என்று கூறி இப்போதைக்கு தப்பித்துக்கொண்டார். எப்படியோ தண்ணீரை வணிக பொருளாக, குறிப்பாக மக்களுக்கு தேவைப்படும் குடி தண்ணீரை வணிகப்போருளாக ஆகும் ஏகாதிபத்திய நோக்கத்தை ஆதரித்து நிலை எடுப்பவர்களும் அங்கு அடையாளம் காணப்பாட்டனர். அனைத்து நாட்டு சட்டத்தில் தண்ணீரையும், கழிவு அகற்றலையும் ஒரு மனித உரிமையாக பார்ப்பதற்கான அம்சமே இல்லை என்பது அமெரிக்க பிரதிநிதியின் வாதமாக இருந்தது. ஆனாலும் சுத்தமான குடிநீரும், கழிவு அகற்றலும் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையில் தண்ணீருக்கான மற்றும் கழிவு அகற்றலுக்கான உரிமை வருகிறது என்றும், ஆகவே அதை மனித உரிமை என்று கூறுவது இந்த பொருளில்தான் என்றும் அதனால் அதை உடனே ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துநாட்டு சட்டம் எழுதப்பட வேண்டும் என்றும் வாதாடப்பட்டது. தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதும் பலமாக பேசப்பட்டது. குடிதண்ணீருக்கு விலை கூவி விற்க கூடாது என்று பலரும் ஐ.நா. சபையில் பேசினார்கள். பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினசரி குழாய் கசிவினால் மட்டுமே வீணாகி போகிறது என்றும் சிலர் கூறினார்கள். சிங்கபூரும், பிலிப்பைன்சின் மணிலாவும், கம்போடியாவின் நாம்பென்னும், ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தண்ணீரையும், கழிவு அகற்றலையும், மனித உரிமை என்று அறிவிப்பதற்கு முன்பே இனாமாக கொடுத்துவருகிறார்கள். நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இதையெல்லாம் இலவசமாக கொடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் இவை உணமையிலேயே உலகம் அறிந்த மனித உரிமைகள்.

தண்ணீருக்கான நீதி என்ற ஒரு முழக்கம் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகமயமாக்கலும், தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும் இன்று உலக அளவில் தண்ணீரை தனியார் வணிகத்திற்கு தாரை வார்த்துவிட்டது உலகம் முழுவதும் 130 கோடி மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. அதேபோல 250 கோடி மக்களுக்கு கழிவு அகற்றலுக்கான வசதிகள் கிடைக்கவில்லை. உலக வங்கி கணக்குப்படி, 2025 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா சுமார் 120 கோடி மக்கள்தொகையை கொண்ட நாடு. அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட நாடு. இங்கே உணவு பாதுகாப்போ, தண்ணீர் தேவையோ, மக்களுக்கு இயற்கை மூலாதாரங்கள் மீது உரிமை இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் கிடைக்கப்பெறும். ஆனால் இங்கே நிலம், தண்ணீர், காடுகள், நதிகள், கடல் ஆகியவற்றின் மீது பொது மக்களுக்கு உரிமை இல்லாத சூழல் ஏற்படுத்தப்படட்டு வருகிறது.

அதாவது நிலங்களை விவசாயத்தில் ஈடுபடும் மக்களான தலித், மற்றும் ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கைகளில் இருந்து தனியார் ஆதிக்க சாதி பண்னையார்களோ, தனியார் ஆலைகளின் முதலாளிகளோ, அரசாங்க உதவி மூலம் பன்னாட்டு மூலதன கம்பனிகளோ, கைப்பற்றி அதில் தங்களது லாப நோக்க வேலைகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு அரசாங்கங்களும் சட்டத்தை காரணம் காட்டி ஒத்துழைக்கிறார்கள். இநத்தகைய முயற்சிகளில் கிராம மக்களின் பொது இடங்கள் பறிபோகின்றன. அவைதான் குடிநீருக்கான தேவைகளை நிவர்த்தி செய்து வந்தன என்பதை அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை. அது தவிர குளங்கள், ஏரிகள், ஆகியவை இன்றைய அரசாங்கத்தால் முறையாக பராமரிக்க படுவதில்லை. ஒவ்வுறு கோவில் அருகிலும், குளங்களை அன்றைய மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்தனர். ஆனால் இன்றைய அரசுகள் அது பற்றி கவலை படுவதில்லை.

அதுமட்டுமின்றி இந்த அரசியல்வாதிகள் தங்கள் கைகளுக்கு மக்கள் கொடுத்த அதிகாரம் வந்த பிறகு, மக்களுக்கு குடிதண்ணீர் கொடுக்க வேண்டுமே எனப்தி பற்றி கூட கவலைபடுவதில்லை. அதன் விளைவாக மக்கள் அனுபவித்து வரும் காடுகளை இவர்கள் பன்னாட்டு மூலதன நிறுவனகளுக்கு தாரை வார்த்து விடுகின்றனர் அதுபோல நதிகளை கூட இவர்கள் தனியாருக்கு ஏலம் போட்டு விடுகின்றனர் என்று சொன்னால் நம்புவீர்களா? சத்தீஸ்கரில் ஒரு நதியை தனியாருக்கு ஏலம் போட்டு கொடுத்துள்ளனர். அதன் விளைவு அந்த லாப நோக்கம் கொண்ட தனியார் அங்கு படகில் செல்வோரை, அந்த நதி நீரால் நிலத்தடி நீர் கிடைத்து அதன் மூலம் விவசாயம் செய்வோரை எல்லோரையும் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்த தொடங்கி விட்டனர். அதுபோல இங்கே குளங்களையும், ஏரிகளையும் பராமரிக்காத அரசாங்கம், கடல் நீரை குடி நீராக ஆக்குகிறோம் என்ற பெயரில் மீண்டும் தனியார் முதலாளிகுக்கு தாரை வார்க்கும் வேலையை செய்கிறது.

இவை எல்லாமே சந்தையில் தண்ணீரை வணிக பொருளாக ஆக்குவதில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. அதேபோல சில சுற்று சூழலை கெடுக்கும் ஆலைகளை அதாவது நாசகார ஆலைகளை, அதாவது ஆபத்தான ஆலைகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஆலைகளை அதாவது நச்சு ஆலைகளை கொண்டு வந்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிருவவதால், அவை னியாத்தடி நீரையும், கடல் நீரையும் கெடுத்து குட்டி சுவராக ஆக்கி விடுகின்றன. அதுதான் ஸ்டெரிலைட் ஆலை விசயத்திலும், தூத்துக்குடி நகரில் நடந்துள்ளது. அதன் விளைவாக அந்த வட்டாரம் முழுக்க குடி தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடல் நீர் கடுமையாக கேட்டு விட்டது. உதாரணமாக அங்கே உள்ள தெற்கு வீரபாண்டிய பட்டினத்தில் இன்றுள்ள சூழலில், குடி நீர் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் பல லாரிகளில் குடி நீர் ஏற்றிவந்து கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த செயற்கை குடிநீர் தட்டுப்பாடுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமையும். இந்த நிலைதான் கோகோ கோலா ஆலை அமைந்துள்ள கங்கை குண்டான் நிலைமையும். அங்கும் குடி நீர் கடுமையாக பதிக்கப்பட்ட கிராமங்கலாக அங்குள்ள கிராமங்கள் மாறிவிட்டன.

இந்த இழி நிலையை போக்க குடிநீருக்கான ஒரு போரை பொது மக்கள் தான் தொடங்க வேண்டும். அதுவே ஐ.நா. சபை தீர்மானத்தை தண்ணீர் எனபது மனித உரிமையே எனபதை உண்மையாக ஆக உதவும். .

Wednesday, October 13, 2010

தூத்துக்குடி ஸ்டெர்லைட் செய்த இன்னொரு கொலை.

நேற்று செப்டம்பர் --பன்னிரெண்டாம் நாள், அதர்ச்சி செய்தி கேட்டு, தூத்துக்குடியில் ஆர்வலர்கள் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கே ஸ்டெர்லைடில் பணியாற்றும் முத்துக்ரிஷ்ணன் என்ற தொழிலாளி, அவசர் சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும், தலை முதல் முகம், நெஞ்சு என எல்லா பகுதிகளும் அமிலம் பட்டு எரிந்து போய் விட்டது எனவும் செய்திகள் கிடைத்தன. அதற்குள் அந்த நாசகார ஆலையின் நிர்வாகம், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் அண்ணனையும், அண்ணியையும் அணுகி தொகை தந்து
விடுகிறோம், சமாளியுங்கள் அன்று சொல்ல ஒரு நாடகத்திற்கு வீட்டாரும் தயார் ஆனார்கள். அண்ணன் முத்துபாண்டி, ஆலை எதிர்ப்பாளர்களை பார்த்து, என் தம்பி விசயத்தில் நீங்கள் எப்படி தலையிடலாம்; அது உரிமை மீறல் என்றார். உரிமை பற்றியும் ஆலை நிர்வாகிகள் கற்று கொடுத்து விட்டார்கள்.

அதற்கு ஆர்வலர்கள் உங்கள் தம்பி விஷயம் உங்க வீட்டு விசயம்தான்; ஆனால் ஸ்டெரிலைட் பணியாளர் விஷயம் எங்களுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பதில் கொடுக்க, முதுக்ரிஷ்ணனின் அண்ணியார் என் கொழுந்தன் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் யாரும் உள்ளே போய் பார்த்தால் அவருக்கு பாதிப்பு வரும் என்று சொல்ல, ஆர்வலர்கள் பின்வாங்கினர். அவர் உடல் தேறிவிட்டது எனவும், தாங்கள் தங்கள் சொந்த ஊரான ஊத்துமலைக்கு கூட்டி செல்லப்போவதாகவும், அவர்கள் அறிவித்துவிட்டு ஆலை நிர்வாகம் நல்லா கவனிச்சுகிட்டாங்க என்றனர். யாரை கவனிச்சு கிட்டாங்க என்று அப்போதுஅவர்கள் சொல்லவில்லை.ஊத்துமலையில் மறவர் சமூகத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர் முத்துகிருஷ்ணன் , ஓட்டுனராக அந்த ஆலையில் பணியாற்றிவந்தவர். அவரை விபத்து நடந்தவுடன் செப்டம்பர் பதினெட்டாம் தேதியிலேயே முதலில் தனியார் ஏ.வி.எம்.மருத்துவமனையிலும், பிறகு அரசு முத்துவ மனையிலும் சேர்த்துள்ளனர்.
.

அன்பிறகு இன்று புதன் காலையில், அந்த தொழிலாளி இரந்து விட்டார் என்றும், அவருக்கு அவசர் அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாகவும் செய்தி கேட்டு, ஆர்வலர்கள் மருத்துவ மனைக்கு ஓடினர். அங்கே உண்மை தெரிந்தது. சல்பூரிக் அமில துறையில், அமிலம் மேலே கொட்டி அந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் அடிபட்டு, சென்ற மாதம் பதினெட்டாம் தேதியே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மரணமடைந்த அவரை வெள்யே எடுக்க, அண்ணன் முத்துபாண்டி குடும்பத்திற்கு ஐந்து லட்சம் பேசப்பட்டு, ஒரு சிறு தொகை முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது விவகாரம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. அதுவும் ஆர்வலர்கள் மருத்துவமனை முன்பு போராட தொடங்கி விட்டனர். வேறு வழி இல்லாமல் காவல்துறை வழக்கு பதிவி செய்ய முன்வந்தனர். தீவிர கவனக்குறைவு என்ற பிரிவில் 304 -அ என்ற பிரிவில் வழக்கை அங்குள்ள சல்பூரிக் அமில துறையை சேர்ந்த பொறுப்பாளர் சங்கர நாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்வலர்களும் கொலை வழக்கு போடச்சொல்லி கத்தியும் பலிக்கவில்லை.

இரண்டு நாட்கள் முன்பு , செபடம்பர் பதினோராம் நாள் ஒரு மாபெரும் ஊர்வலத்தை ஸ்டெரிலைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி நகரில் நடத்தினர். அதில் 10000 பேர் பங்குகொண்டனர். அதில் மீனவர்கள், வணிகர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். தோழர் இரா. நல்லகண்ணு அந்த பேரணியை தொடங்கி வைக்க, பேராசிரியர். பாத்திமாபாபு தலைமை தாங்கி சிறப்பாக செய்தனர்.பேரணிக்கு சில நாட்கள் முன்பு அரசு எல்லா கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் எந்த ஒரு வெளி போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும், மாணவ, மாணவிகள் செல்லக்கூடாது என்று இருந்தது. அது என்ன புதிய உத்தரவு? மாநிலத்திற்கு முழுவதற்கும் இல்லாமல் ஒரு மாவட்டத்திற்கு மட்டுமா? அதாவது ஸ்டெரிலைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் வரிந்துகட்டுகிறது?

மறுநாள் அரசு நடத்திய புகை பிடித்தல் எதிர்ப்பு பேரணியில் பள்ளி சிறுவர்களை அழைத்துவந்தனர். அவர்கள் அங்கே வந்து ஸ்டெரிலைட்டை இழுத்து மூடு என்று முழக்கமிட்டது அந்த நகரின் மனச்சாட்ச்சியை காட்டியது எல்லா ஊடகங்களுக்கும், அந்த நாசகார ஆலை விளம்பரம் கொடுத்து கை நிறைய பணம் கொடுத்துவிட்டான். அதனால் எந்த ஊடகமும் அந்த பேரணியை பெரிதாக போடவில்லை. இங்கே பணம் மாட்டும்தான் ஊடகங்களுடன் பேச முடிகிறது.இந்த ஆலையில் தாமிரம் உருக்கப்படுகிறது. அது அந்த நகரம் முழுவதையும் கடுமையாக சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த ஸ்டெரிலைட் ஆலையை உயர்நீதிமன்றம் சென்ற மாதம் மூடச்சொன்னது.
. ஆனால் உச்சநீதிமன்றம் முதலாளிக்கு கருணை காட்டி உயர்நீதிமன்ற ஆணைக்கு, தடை கொடுத்துவிட்டது. இப்படி பணம் மூலமே அணில் அகர்வால் எல்லா இடத்திலும் வேதாந்தா என விலை பேசிவருகிறார். இந்த நிகழ்வு இன்னொரு போபால் இங்கே வரலாம் என்பதை காட்டுகிறது. இதே போல இரண்டு மாதம் முன்னால், சென்னை அருகே ஒருபோபால்
முயற்சி நடந்தது.

சென்னை அருகே திருபெரும்புதூரிலிருந்து வந்த செய்தி, அதிர்ச்சியை தந்தது. அங்கே ஒரு ஆலையில் நச்சு கசிவு வெளியாகி, நூற்று இருபது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாந்தி எடுத்தனர். மருத்துவமனையில் காதிலிருந்து ரத்தம் கசிந்ததாக கூறுகின்றனர். விபத்து ஏற்ப்பட்ட ஆலை, சீனா நாட்டுக்காரர் ஆலை. சீனாவைச்சேர்ந்த அந்த பெரிய நிறுவனம், சீன நாட்டில் பெரிய அளவில் பெயர் பெற்ற ஆலை. அது ஒரு பன்னாட்டு மூலதன ஆலை என்று பிரபலம் அடைந்த நிறுவனம். சீன மக்கள் குடியரசுக்கு எதிரான சீன நாடாக உலகம் புரிந்துள்ள தைவான் நாட்டிற்கு சொந்தமான பன்னாட்டு மூலதன ஆலை அது. தைவானை சார்ந்த அந்த ஆலையில், ஹய்பேட் என்று கூறப்படும் காதில் வைத்து பாட்டு கேட்கும் இயந்திரம், அப்போலோ போன் என்ற பெயரில் உற்பத்தியாகிறதாம்.


அங்கு எப்படி நச்சு வாயு கசிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த செய்தியை ஊடகங்களுக்கு வரவிடாமல் செய்வதில், ஆலை நிர்வாகம் அதிக கவனம் எடுத்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட நூற்று இருபது தொழிலாளர் களும், அருகே உள்ள ஜெயா மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்ட தாகவும், அங்கே இருபத்தைந்து தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அதையொட்டி பூந்தமல்லி சுந்தர் மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவர்களை எடுத்து சென்றுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் ஆலை நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து செய்திகளின் தாக்கம் வெளிவந்துவிடாமல் தவிர்க்க, ஊடகங்களுக்கு முறையான செய்திகளை செல்லவிடாமல் இருந்தனர் என்ற கருத்தும் நிலவியது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் பற்றி கிடைக்கும் செய்திகள் ஆவலை அதிகப்படுத்துகின்றன. அதாவது இந்த குறிப்பிட்ட சீன நிறுவனம், ஏற்கனவே சீன நாட்டில் மிகவும் பெயர் பெற்ற கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.


உலகிலேயே அதிகமான அளவில் மின்னணு மற்றும் கணினி உறுப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை பெற்றதுதான் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம். மற்ற நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உற்பத்தியை முக்கியமாக இது செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு, மக்மினி, ஐபெட், ஐபாட், ஐபோன் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறது. அமெரிக்க கணினி நிறுவனங்களான டெல்,போன்றவற்றுக்கு பல்வேறு பொருள்களை தயார் செய்து கொடுக்கும் நிறுவனம் இது சில பாகங்களை .மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், மோட்டாரோலா, நோக்கியா ஆகியற்றுக்கு செல்லுலார் போன்களையும் தயார் செய்து கொடுக்கும் நிறுவனம். 1974 ல் பிளாஸ்டிக் பொருள்களை தயார் செய்யும் நிறுவனமாக இது தொடங்கியது.

தைவான் பங்கு சந்தையில் 1991 வரை இந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமாக இருந்தது. 1988 ல் தனது முதல் உற்பத்தி ஆலையை சீனாவில், ஷென்சென் பிராந்தியத்தில் தொடங்கியது. அதுதான் இப்போது இந்த நிறுவத்தின் மிகப்பெரிய ஆலையாக 420000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அந்த தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் இயங்குகிறார்கள். ஆனால் அனைவரும் தொழிற்சாலையின் வளாகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பாஃக்ஸ்கான் ஆலை, தனது ஷென்சென் ஆலை உட்பட, மக்கள் சீன குடியரசில் மொத்தம் 800000 தொழிலாளர்களை கொண்டதான ஆலையாக இயங்கி வருகிறது. 1994 முதல், இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவிலும், ஜப்பானிலும், வளர்ச்சி மையங்களை விலைக்கு வாங்கி தொழில் புரிந்து வருகிறது.


1997 லும், 1998 லும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கூடுதலான உற்பத்தி தொழிற்சாலைகளை இவர்கள் நிறுவினார்கள். 2007 ஆம் ஆண்டில், செக் குடியரசிலும், ஹங்கேரியிலும், மெக்சிகோவிலும், பிரேசிலிலும்,இந்தியாவிலும், வியட்நாமிலும், இந்த நிறுவனத்தின் ஆலைகளும், துணை ஆலைகளும் காணப்பட்டன. சமீபத்தில் இந்த நிறுவத்தின் மீது, அதன் தொழிலாளர் விரோதப் போக்குகளை பற்றிய பொதுமக்கள் விசாரணை என்பது வெளிவந்தது. சீனக்குடியரசில் இதுதான் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்றாலும், இதன் தொழிலாளர் விரோதப்போக்கு கம்யூனிஸ்ட் சீனா என்ற அந்த நாட்டிலேயே அதிகமாக இருந்தது என்பதே இந்த ஆலை பற்றிய ஒரு சித்திரத்தை நமக்கு தந்துவிடும்.


அதுமட்டுமின்றி இந்த ஆண்டிலேயே, ஐந்து மாதங்களுக்குள் இந்த ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்கள், ஆலையின் சுவர்கள் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், அதே சமயம் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பாஃக்ஸ்கான் ஆலை பற்றிய ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உடனே இந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை நூறு விழுக்காடு கூட்டி அறிவித்தது. இந்த அளவுக்கு இந்த ஆலையின் தொழிலாளர் நிலைமை இருக்கிறது என்பது இதிலிருந்தே வெளிப் படுகிறது.


இந்த பாஃக்ஸ்கான் ஆலை தனது வளாகத்திற்குள், தொழிலாளர்களை கொத்தடிமை போல வைத்திருந்ததாலேயே, அவர்கள் சுவர் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது புரியப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஆலையில்தான் இங்கே திருபெரும்புதூரில், இதே ஆலையின் கிளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லையில்லா பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கையும், அதை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகங்களுக்கு எதிரான போக்கையும் வெளிப்படுத்தி இருந்தது இவர்களை அம்பலப்படுத்திய சீனா வணிக செய்திகள் என்ற இதழாளர்களுக்கு எதிராக பாஃக்ஸ்கான் நிறுவனம் வழக்கு தொடுத்து அவர்களுக்கு நாற்பது லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதிக்கச் செய்தார்கள். இதன் மூலம் ஊடகங்கள் இந்த நிறுவனம் கண்டு அஞ்சத் தொடங்கின.


சீன குடியரசில் இருக்கும் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனத்தில், 2007ம் ஆண்டு ஜூன் 18ம் நாள் ஹூ என்ற 19 வயது பெண் தொழிலாளி, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே கழிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் 21வயது ஆண் தொழிலாளி லியூபிங், வேலையிலிருந்து நீக்கப்பட்ட 2மணி நேரத்தில் திடீரென இறந்து போனார். 2008ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் 28 வயது லீ என்ற ஆண் தொழிலாளி வேலை பளுவின் காரணமாக மரணமடைந்தார். 2009ம் ஆண்டு ஜூலை 16ல் சன் டன்யங் என்ற 25 வயது ஆண் தொழிலாளி தான் தங்கியிருந்த 12 வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 2009 ஆகஸ்ட் 20ல் 23வயது சென் சின் சாங் என்ற ஆண் தொழிலாளி ஆலையின் குளத்தில் இறந்து கிடந்தார். அதன் பிறகே 2010ம் ஆண்டு 5 மாதத்திற்குள் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ள ஆலை சுவற்றிலிருந்து கீழே குதித்தனர் என்ற செய்தி வெளி வந்தது.

இந்த அளவுக்கு கொடுமையான தொழிலாளர் விரோத போக்கை மேற்கொண்ட இந்த பாஃக்ஸ்கான் ஆலை, ஆஸ்திரேலிய இணையதளத்தில் இந்த உண்மைகளை வெளியிட்டதற்காக, வழக்கு போட்டது. 2010 பிப்ரவரி 17ம் நாள் சீனாவில் உள்ள இதன் ஆலையில் ஒரு வெளிநாட்டு நிருபர் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஆலைதான் திருபெரும் புதூரில் நச்சு வாயு கசிவை ஏற்படுத்தி விட்டு, இப்போது அதை மறைக்கப் பார்க்கிறது.

அந்த பாக்ஸ்கான் ஆலை அதிபர்களை நேரில்போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் நமது மாநிலத்தின் தளபதியாம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்மூலம் அதிக மூலதனத்தை இறக்க பேசிவிட்டு வந்திருக்கிறார். இவர்களையும் நாம் அடையாளம் காணவேண்டாமா?

சீன நாட்டினர் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொடியதொரு பாத்திரத்தை வகுத்தப் பின்பு, இப்போது தமிழ்நாட்டு தொழிலாளர் களை அழிப்பதற்காக வந்திருக்கிறார்களா என்று தமிழின உணர்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை போபால் நகரில் 26 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நிறுவனம், நச்சு வாயுவை அவிழ்த்துவிட்டு இந்திய மக்களை கொன்றது போதும். நமக்கு மீண்டும் ஒரு போபால் வேண்டாம். மேற்கண்ட விபத்தை முன்வைத்து, இங்கொரு போபால் இனியும் வேண்டாம் என்ற குரலை எழுப்ப வேண்டாமா

மரணத்திற்குப் பிறகும் படிப்பினைகள் தரும் தோழர் பழனியப்பன்!

பழம்பெரும் புரட்சியாளர் தோழர் பழனியப்பனை,இராவன்னா என்று அழைப்பார்கள்.அவர் காரைக்குடியில் சி.பி.ஐ கட்சியில் இருந்தார்.அப்போது 1967 ஆம் ஆண்டின் நக்சல்பாரி புரட்சி இவரையும் ஈர்த்தது.பழனியப்பன் பாத்திரங்கள் தயாரிக்கும் பணியில் இருந்தார்.உற்பத்திக்கான போராட்டம் என்று கூறப்படும் உழைப்பில் இருந்த பழனியப்பன்,தனது வாழ்க்கையை நக்சல்பாரி இயக்கத்திற்காக அர்ப்பணீப்பில் இறங்கினார். அன்றைய நக்சல்பாரி இயக்கத்தில்,சாருமஜீம்தாரின் வழிகாட்டல்கல் எல்லோராலும் ஏற்கப்பட்டன.தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட வழிகாட்டல்களில் செயல்பட்டு வந்த தோழர் எல்.அப்பு,வேலுரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ரகசியமாக கொலை செய்யப்பட்டார்.அது 1970ஆம் ஆண்டு நடந்தது.அண்ணாமலை பழ்கலைகழகத்தில் படித்து வந்த கே.என்.கணேசன், பென்னாடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்து சிதறி தியாகியானார்.அவருடன் விளாத்திகுளத்தை சேர்ந்த சர்ச்சிலும், சிறுமுகையை சேர்ந்த கன்னியப்பனும் மரணமடைந்தார்கள் அதுவும் 1970 ஆம் ஆண்டு நடந்தது.

1972ஆம் ஆண்டு தோழர் பழனியப்பன் சாருமஜிம்தார் வழியில் செயல்பட முடிவு செய்து,தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இறங்கினார். செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் தேவேந்திரகுல மக்கள் ஆதிக்க சாதியின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருந்தனர். அந்த கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தபடி,பழனியப்பன் இறங்கி தலைமறைவு இயக்கப்பணிகளை தொடங்கினர்.ஒரு கட்டத்தில் அந்த கிராமம் காவல்துறையின் கியூ பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது சுற்றி வளைப்பை உடைத்துக்கொண்டு பழனியப்பனும்,தோழர்களும் தப்பித்தார்கள் அந்த மீனாட்சிபுரம் கிராமம்தான் பிறகு முழுமையாக முஸ்லிம்மாக மாறியது. அதாவது புரட்சிகர மாற்றத்திற்கு தயாரான தலித் மக்களை அரசு அடக்குமுறை செய்யுமானால், அவர்கள் சாதி ஒடுக்கலில் இருந்து தப்பிப்பதற்காக மதம் மாறுவார்கள் என்பதற்கு இதுவே சான்று.

அதனாலேயே அந்த கிராமத்தை சேர்ந்த வாத்தியார் இராமசாமி, நாகூர்மீரான் போன்றோர் மிசாவில் சிறையில் தள்ளப்பட்டனர். அதன்பிறகு இராவண்ணா என்று அழைக்கப்பட்ட பழனியப்பன் இராஜபாளையம் அருகே சேத்தூர்,முகவூர்,தளவாய்புரம் கிராமங்களில் தங்கள் பனிகளை தொடர்ந்தார்..அதை ஒட்டி அந்த வட்டாரத்தில் நாலு பண்ணையார்கள் அழித்தொழிக்கபபட்டார்கள்.சாருமஜீம்தாரால் முன்வைக்கப்பட்ட, கொடுமைமிக்க வர்க்கக எதிரிகளை அழித்தொழியுங்கள் என்ற செயல் தந்திரம் அங்கே நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் அந்த கிராமங்களை சேர்ந்த இரராயப்பன், மச்சக்காளை, ஆறுமுகம், ஆகியோரும், இரத்தினம்,அமல்ராஜ், ஆவுடையப்பன்,கல்லனை போன்றோரும் புரச்சிகர இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அதில் முதல் இரண்டு தோழர்களை காவல்துறை திட்டமிட்டு படுகொலை செய்தது.இதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இராவன்னாவின் செயல்பாடு விரிவடைந்தது.அதில் குறிப்பிட்ட கிராமத்தில் புதிதாக இயக்கத்திற்கு வரும் தோழர்களை இராவன்னா அழைத்து செல்வார் அங்கே அவர்களுக்கு விவசாய வேலைகளை கற்றுக்கொடுப்பார்.அதன் மூலம் புதிய தோழர்கள் உற்பத்திக்கான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொள்ள முற்படுவார்கள்.

இதைத்தான் மாவோவும், சாருவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப்போராட்டம் ஆகியவற்றில் புரச்சியாளர்கள் ஈடுபட்டு, அதன்மூலம் நிலமற்ற, ஏழை விவசாயிகள் மத்தியில் ஒன்றினை--ய வேண்டும் என்று சாருமஜீம்தார் வழிகாட்டல் கொடுத்து இருந்தார். அறிவு ஜீவிகள் தங்களை உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும் என்று மா-சே-துங் கூறி இருக்கிறார்.

அப்படிப்பட்ட வழிகாட்டல்களை தமிழ்நாட்டில் செயல்படுத்திய தோழர்களில் பழனியப்பன் முக்கியமானவர். சாரு வழியில் செயல்பட்ட மாநில குழுவிற்கு,பழனியப்பன் செயலாளராக பொறுப்பு ஏற்று இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது போடப்பட்ட நான்கு கொலை வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் வைக்காமல் தானே வாதாடி அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்றார். அந்தக்காலத்தில் புரட்சியை தொழிலாக கொண்டவர்கள் என்பதாக கட்சியின் ஊழியர்கள் பெயர் பெற்று இருந்தனர். அவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு புரட்சியாளர்களாக இயங்கி வந்தனர். காலப்போக்கில் அதுவே நகரம் சார்ந்த நடமாட்டத்தை மட்டுமே மேற்க்கொள்ளும் ஊழியர்கள்,தங்களை முழுநேரஊழியர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.இவர்கள் பரப்புரை மட்டுமே செய்து வருபவர்கள். இவர்கள் தங்களது வர்க்கத்தன்மையை குறைத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்க உலக கண்ணோட்டத்தை உள்வாங்காமலேயே செயல்பட முடிகிறது.அதனால்தான் இவர்களால் ஒடுக்கப்படும் மக்களை பெருமளவிற்கு அணி திரட்ட முடியவில்லை.இவர்களது வேலை திட்டத்தை ஆய்வு செய்வதன் மூலம்,அவர்களுக்கு இருக்கின்ற புரட்சிகர வர்க்கப்போராட்ட பிடிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.இந்த விசயத்தில் பழனியப்பன் ஒரு புரட்சிகர முன் உதாரணத்தை படைத்து விட்டார்.

சித்தாந்த மட்டத்திலும், பழனியப்பன் இயங்கியல் மற்றும் இயக்கமறுப்பியல் ஆகியவை பற்றிய சர்ச்சைகளை தொடர்ந்து செய்து வந்தார். இப்போது பலரிடமும் இத்தகைய விவாதங்களை காண முடிவதில்லை.

சமீபத்தில் காரைக்குடியில் 24-09-2010அன்று மரணம் அடைந்த பழனியப்பன் இறுதி நிகழ்வில், மேற்கண்ட படிப்பினைகள் உணரப்பட்டன. தமிழ்நாட்டில், பிற மாநிலங்கள் போல் இல்லாமல் புரட்சிகர இயக்கங்கள் வெற்றி பெற்று, முன் செல்லாததற்கு, இத்தகைய காரணங்களும் இருக்கின்றனவா என்ற விவாதத்தை, தோழர் பழனியப்பன் வாழ்க்கை பரிசீலிக்க வைக்கிறது.

Tuesday, October 12, 2010

பீகார் ராணுவ காவலர் படையை கடந்து சென்ற "செம்படை"

"
இப்போது பீகார் ராணுவ காவல்படை பற்றி சேதிகள் வெளிவருகின்றன. அந்த படையிலுள்ள சிலரை மாவோவாதிகள் சுட்டு கொன்று விட்டனர் என்றும், சிலரை கடத்தி விட்டனர் என்றும் பிறகு கடத்தியவர்களை விடுதலை செய்து விட்டார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அந்த பீகார் ராணுவ படை அந்த மாநிலத்தில், 1970 களின் தொடக்கத்திலிருந்தே நிறுத்தப்பட்டுள்ளது. உங்கள் கிராமத்தில் ஒரு அந்நிய படை ஆயுதங்களுடன் தங்கி இருப்பதும், உங்கள் ஊரின் சிறிய பையன்களை பிடிக்க அது முயலுமானால், நீங்கள் பொறுமையாக இருக்க முடியுமா? அந்த இணை ராணுவ படை மீது தானாகவே உங்களுக்கு கோபம் வருமல்லவா? இந்த நிலைமை பீகார் மாநிலத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இருக்கிறது என்றால், அந்த கிராமப்புற மக்கள் என்ன சிந்தனையில் இருப்பார்கள்? எண்ணி பாருங்கள்.
எழுபதின் தொடக்கங்களில் இருந்தே அந்த பீகார் மாநிலத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில், நக்சல்பாரி புரட்சியாளர்கள் வெற்றிகரமாக இயங்க தொடங்கி விட்டார்கள். பீகார் மாநில நக்சல் பொறுப்பாளராக இருந்த சத்ய நாராயன் சின்ஹா என்பவர், அகில இந்திய தலைவர் சாருவை எதிர்த்து கட்சியை விட்டு வெளியே வந்து, சமரச வாத பாதையை எடுத்தார். ஆனாலும் தொண்டர்கள் சாரு வழியில் உறுதியாக இருந்ததால், அவர்கள் ஆயுதப்போர் பாதையை விட்டு வெளியே வரவில்லை. அதனால்தான் சாரு மறைவுக்கு பிறகும், சாகர் என்ற சுப்ர தத்தா தலைமையில் பீகாரில் ஆயுதப்போராட்டம், கொரில்லா போர் முறையில் தொடர்ந்து நடந்து வந்தது. இருபத்தி நாலு மணிநேர கொரில்லா போரை இணை ராணுவத்திற்கு எதிராக நடத்தியதில், எழுபதின் மத்தியில் சாகர் பெயர் பெற்றார். சாகர் நடத்திய கொரில்லா போராட்டத்தில், சுரங்கம் தோண்டி அதிலிருந்து ராணுவத்தை எதிர்த்தது ஒரு வகை. அவ்வாறு கொரில்லா போர் நடந்து வரும் சூழலில்தான், அதன் எதிரொலியாக அரசியல் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.
அந்நேரம் இந்திரா காந்தியின் ஆட்சி மத்தியில் நடந்துவந்தது. எதேச்சாதிகார ஆட்சி என்று அது பெயர் பெற்றிருந்தது. அதை எதிர்ஹ்த்து அரசியல் போராட்டம் நடத்த எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் திராணி இல்லாத போது, பீகாரில் நடந்த நக்சல்பாரிகளின் எதிர்ப்புதான் பெரும் தலிவளியாக அந்த ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அப்போது மத்திய பீகாரில் நடத்தப்பட்ட கொரில்லா போராட்டத்தின் எதிரொலியாக, ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கம் காணப்பட்டது. "எவ்ரிடேஸ் பெர்ஸ்பெக்டிவ் ஒப் டுடே அண்ட் டுமாரோ"l [ everydays perspective of Today and Tomarrow ] என்ற வார எட்டை ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்தினார். அதில் சாகர் தலைமையில் நக்சல்பாரிகள் நடத்திய கொரில்லா போராட்டத்தை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவரும். அதை ஒட்டியே ஜே.பி. முழு புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார். அதில் கல்லூரி செல்வோரையும், ராணுவத்தில் பணியாற்றுவோரையும் கூட, வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் புரட்சியை நடத்த வரும்படி அறைகூவல் விடுத்தார். இவ்வாறாக ஒரு ஆழமான கொரில்லா போர், ஒரு இடத்தில் குவித்து நடத்தப்படும்போது, அதன் எதிரொலியாக பரந்த இடங்களில் அரசியல் போராட்டம் வெடிக்கும் என்பதை அப்போது நம்மால் காண முடிந்தது. அதுதான் இப்போது சென்ற ஆண்டு வன்னி போரில் நடந்த நிகழ்வும் என்பது புரியப்படவேண்டும். வன்னியில் தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் நடத்திய ஆயுதபோராட்டம் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, அகில உலக அளவில் ஒரு " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" என்ற பதாகை உயர்த்தி பிடிக்கப்படுகிறது. அதுவே உலகம் தழுவிய உரிமை போர் என்பதும், அரசியல் வடிவில் இப்போது வெளிப்படுகிறது என்பதும் அறியப்பட வேண்டும்.
அத்தகைய கொரில்லா போர் நடந்த பீகாரின், போஜ்பூர் மாவட்டத்திற்கு, 1978 ஆம் ஆண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது சாகர் ராணுவத்துடனான நேரடி போரில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தாரில் கொல்லப்பட்டதன் விளைவாக, வினோத் மிஸ்ரா தலைமை எடுத்து புரட்சிகர இயக்கத்தை, அதன் கொரில்லா போரை நடத்தி வந்த காலம். அப்போதுதான் அறுந்து போயிருந்த தொடர்பு தமிழ் நாட்டிற்கு மீண்டும் கிடைத்தது. அதனால் மத்திய குழு கூட்டத்திற்கு போஜ்பூர் செல்ல புறப்பட்டோம். அப்போது எங்களை ரயிலில் ஒரு பகுதிவரை அழைத்து சென்றார்கள். அதற்கு பிறகு ரயில் பொக்குவரத்து பீகார் முழுவதற்கும் இல்லாத சூழ்நிலையில், நடை மூலமே இருபதுக்கு மேற்ப்பட்ட கிலோமீட்டர்கள் கூட்டி சென்றார்கள். எங்களுக்கு முன்பும், பின்பும் துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்ட கொரில்லாக்கள் பாதுகாப்புக்கு வந்தனர். அவர்கள் கூலி ஏழை விவசாயிகளாக இருந்தனர். வயல்கள் வழியாக நடந்தோம். வழியில் சிலர் யானை மீது ஏறி செல்வதை காண முடிந்தது. அவர்கள் ஆதிக்க சாதி பண்ணையார்கள் என்று தெரிந்து கொண்டோம். எங்களை ஒரு பெரிய கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே இருந்த மிக பெரிய வைக்கோல்போரில், ஆயுதம் ஏந்திய கொரில்லாக்கள் ஒளிந்திருந்தனர். அவர்கள் குறி முழுவதும் வழியின் மேல் விழி வைத்தே இருந்தது.
நாங்கள் உள்ளே ஒரு பெரிய வீட்டிற்குள் கூட்டி செல்லப்பட்டோம். அங்கே எங்கள் ரகசிய கூட்டம் நடந்தது. அன்று மாலைக்குமேல், ஒரு தோழர் வந்து இந்தியில் ஏதோ கூறினார். உடனே தலைவர்கள் கவனமாக மாற்று இடம் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அதை ஒட்டி நாம் எல்லோரும் இன்று நள்ளிரவில் இந்த ஊரைவிட்டு, அடுத்த இடத்திற்கு செல்லப்போகிறோம் என்று அறிவித்தனர். அவ்வாறே இரவில் எங்களை கொரில்லாக்கள் வெள்யே அழைத்து சென்றனர். வயல் வழி வழியாக சென்றோம். வரப்புகளில் நல்ல இரவு இருட்டில் கடந்து சென்றோம். ஒருவர் பின்னால் ஒருவர் சென்றோம். ஒவ்வுறு தோழருக்கும் முன்னாலும், பின்னாலும் ஒரு கொரில்லா தோழர் துவக்குடன் வந்தார். ஏ.கே.-47 அவர்கள் கரங்களில் இருந்தது. நடுவில் ஒருவர் எஸ்.எம்.ஜி. வைத்திருந்தார். அது சிறிய இயந்திர துப்பாக்கி. அப்போது எங்கள் பாதைக்கு மிக அருகில் ஒரு கூடாரம் இருந்தது. அதில் மினுக், மினுக், என்று விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அதுதான் பீ.எம்.பி. முகாம் என்று ஒரு தோழர் கூறினார். அதாவது பீகார் ராணுவ காவலர் படை முகாம் அங்கேயே இருந்ததை கண்டோம். ஆனால் அவர்களுக்கு சிறிதும் சத்தம் கேட்காமல் நாங்கள் அடி எடுத்து வைத்து அவர்களது முகாமை கடந்து சென்றோம். இப்படியேதான் அங்குள்ள கொரில்லாக்களின் வாழ்நிலை அன்றாடம் நடக்கிறது.
முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதுதான் நிலைமை என்றால் இப்போது கேட்கவா வேண்டும்? பீகார் ராணுவ காவலர்கள் நாற்பது ஆண்டுகளாக அங்கேயே முகாம் போட்டு இருபாது இதிலிருந்தே தெரிகிறதே? அப்புறம் எப்படி ஐயா மக்கள் இந்த மத்திய அரசின் அர்சப்படைகளை ஏற்றுக்கொள்வார்கள்? அங்கு மக்களுக்கும், மத்திய அரசின் அரசபடைகளுக்கும் இடையேதான் மோதல் என்று விளங்குமா?

தமிழீழ தேசியத்தலைவர் சிக்கனம் பற்றி........[ ஒரு வரலாற்று நிகழ்வு---வன்னி கள போராளி ஒருவர் சொல்லி t


புதுவை இரத்தினத்துரை ஒருமுறை மக்கள்மத்தியில் பேசும்போது, தலைவர் தலையணை இல்லாமல்தான் படுப்பார். அதுபோல நாமும் சிக்கனத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்றார். அதற்குப்பிறகு தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன், ஒரு நாள் புதுவை ரத்தினதுரையை கூப்பிட்டார். அவரிடம் அன்று என்ன பேசினீர்கள் என்று கேட்டார். அவரும் கூறினார். இதோ நிற்கிறதே அந்த நான் பயன்படுத்தும் வெளிநாட்டு கார், என்ன விலை தெரியுமா? என்றார். புதுவையும் அது எழுபத்து ஐந்து லட்சம் இருக்கும் என்றார். அதற்கு தலைவர், சரி. அதன் விலை எண்பத்து ஐந்து லட்சம். இது தோட்டா துளைக்காத வாகனம். அதில் பயணம் செய்வது மட்டும்தான் போரை நடத்தும் ஒரு தலைவருக்கு பாதுகாப்பு. அதில் உள்ள ஒரு இருக்கையை விற்றால், ஒரு கிராமத்திற்கு முழுக்க தலையணை வாங்கலாம் தெரியுமா? என்றார். நான் வைத்திருக்கும் செயற்கைக்கோள் கைபேசி, வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டது. நான் சாதாரண கைபேசியை பயன்படுத்தினால், தினசரி வெளிநாடுகளுக்கு நேரடியாக பேசமுடியாது தெரியுமா? என்றார். அதனால் சிக்கனம் பற்றி ஏதாவது பேசாதீர்கள். சில விசயங்கள் கட்டாயத்தேவையாக இன்றைய சூழலில் இருக்கிறது என்றார். சிக்கனம் பற்றிக்கூட கற்பனாவாதத்தையும், விளம்பரத்திற்க்காக படம் காட்டும் இன்றைய தமிழக அரசியல் தலைவர்கள் போல, தமிழீழ தேசியத்தலைவர் இல்லை என்பது இதில் தெரிகிறது.

Monday, October 11, 2010

போர்--தற்கொலை பற்றிய..புதிய சதியில் தமிழர்களை ஏமாற்ற வரும் உளவியலாளர்கள்

.
ஏடுகளில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி தந்தன. போர் காலங்களில் உள்ளதைவிட போர் இல்லாத காலங்களில் இலங்கையில் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்ற மதிப்பீட்டை, இலங்கை நாட்டின் உளவியல் நிபுணர் தயா சோமசுந்தரம் கூறியதாக அந்த ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டிருந்தது இது சாதாரண மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர்களை அல்ல. எமிலே துர்கீம் என்ற பிரான்ஸ் நாட்டு உளவியல் நிபுணர், போர் காலத்தில் அடையாளம் காணப்பட்ட எதிரியை எதிர்த்து அனைவரும் உளப்பூர்வமாக திரண்டு நிற்பார்கள் . அதனால் அன்றாட வாழக்கையில் மக்களுக்குள் பெரும் பிரச்சனை எழுவதில்லை என்று கூறியுள்ளார்.

அதையே இந்த சோமசுந்தரம் சற்று மாற்றி, தற்கொலை மனோபாவம், ஈழப்போர் நேரத்தில் வேறு ஒரு உணர்வாக மாற்றப்பட்டுவிட்டது என்று கூற முற்படுகிறார். உண்மை என்ன என்றால் உளவியல் ரீதியான பார்வையை பார்க்க முனையும் இது போன்ற உளவியல் நிபுணர்கள், தளத்தில் நடக்கும் போர் பற்றியோ அதை சம்பந்தப்படுத்தி மக்கள் மத்தியில் உருவாகும் உணர்வுகள் பற்றியோ என்ன புரிதலில் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்த நிபுணர்களின் அபிப்பிராயங்களை காண வேண்டி உள்ளது. ஈழம் என்பது அடைய வேண்டிய ஒரு இலக்கு என்பதை அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் எனபது அவர்களது வேலை திட்டங்களில் இருந்தே அறியமுடியும்.

அதை விளக்க வருகிறேன் என்று சோமசுந்தரம் கூறும்போது, போர் தனக்கு வெளியே உள்ள எதிரியை அடையாளம் காண வைத்து அதன்மூலம் அந்த எதிரிக்கு எதிரான போரில் தன்னை மாய்த்துக்கொள்ள செய்கிறது. என்கிறார். போர் இல்லாத சூழலில் தனக்குள்ளேயே உள்ள முரண்பாடுகளை சந்திக்க வலு இன்றி தற்கொலை செய்து கொவதாக கூறுகிறார். உள்ளபடியே இது போன்ற அறிஞர்கள் தற்கொலைகளை தனி, தனியாக எடுத்து பார்ப்பதனால், அவர்களுக்கு சமூக சூழலை ஒட்டி அவற்றை படிக்க தெரிய வில்லை என்றுதான் கூறவேண்டும். பொது எதிரியை எதிர்த்து போரிட வாய்ப்பு இல்லாமல் போகும்போது, தனக்குள் உள்ள எதிரியை ஒருவர் தேடிக்கொள்வதாக இவர்கள் கூறுகிறார்கள். அதை சமாதான காலங்களில் என்று வர்ணிக்கிறார்கள். அதாவது இப்போது இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதான நிலைமை நிலவுவதாக கற்பனை செய்துகொண்டு, இந்த நிபுணர் கூறியுள்ளார். அதாவது அரசாங்கத்தின் அறிவிப்புகளை மட்டுமே குளிர்சாதன அறைக்குள் இருந்து கொண்டு, காணும் இந்த நிபுணர்களுக்கு உண்மை நிலைமை நாட்டில் என்ன இருக்கிறது என்பதோ, மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை பற்றியோ தெரியவில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.

ஊசலாட்ட வயதில் உள்ளவர்களுக்கு, தீவிர விரக்தியாலோ, உள்நாட்டு மோதல்களின் விளைவாகவோ, ஒருவிதமான நிலையற்ற மனோ நிலை ஏற்படுகிறது எகிறார் இந்த சோமசுந்தரம். அப்படி நேரங்களில் அத்தகைய இளைஞர்கள் போரில் போராளிகளுடன் சேர்ந்துகொண்டு, மரியாதைக்குரிய மரணங்களை எட்டிவிடுகின்றனர். அதற்காக அவர்களது பெயர்கள், " வீர சாவு" என்று பெயரிடப்பட்டு அவர்களுடைய படங்கள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டு அதன் மூலம் அவர்களது மரணங்கள் மரியாதைக்கு உரியதாக ஆக்கப்படுகின்றன. என்றும் இந்த நிபுணர் கருத்து சொல்லியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் ஆனந்தராஜா என்ற ஒரு ஆறுதல் மையம் வைத்திருப்பவர் கூறிய கருத்துக்களை இந்த நிபுணர் தனது வாதத்திற்கு துணையாக எடுத்துக்கொள்கிறார். ஆனந்தராஜா கூற்றில் சில இளைஞர்கள் போர் நேரத்தில் தங்கள் பெற்றோரிடம், ஒன்று தற்கொலை செய்துகொள்வேன் அல்லது போராளிகளுடன் போய் சேர்ந்து விடுவேன் என்று கூறியுள்ளனர் என்ற வாதத்தை தனக்கு சாதகமாக எடுத்து கொள்கிறார்.

1980 இன் காலங்களில் சமாதான நேரத்தில் யாழ்ப்பாணத்தில்தான் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்று ஒரு கணக்கையும் இவர்கள் தங்கள் வாதத்தை நிரூபிக்க பயன்படுத்துகிறார்கள். உள்ளபடியே இவர்கள் எடுத்துள்ள கணக்கு என்ற எண்ணிக்கை உண்மைதான். ஆனால் அவை ஏன் என்ற காரணத்தை அறிவதற்கான அறிவு இவர்களுக்கு, அதாவது இந்த நிபுணர்கள் என்ற பெயரில் நடமாடும் புத்தி ஜீவிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. அதேசமயம் போர் நடக்கும் நேரத்தில், தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 800 விழுக்காடும், தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 180 விழுக்காடும் குறைந்துள்ளன என்பது இவர்கள் எடுத்துள்ள கணக்கு. அந்த கணக்கில் நமக்கு பிரச்சனை இல்லை. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்க்கான காரணமாக அவர்கள் கூறும் கண்டுபிடிப்பில்தான் பிரச்சனை உள்ளது. பதினைந்து வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை உள்ள ஆண்களின் கணக்கில்தான் தாங்கள் கூறுவதாக இவர்களே அறிவித்துள்ளனர். இந்த வயதில் உள்ள ஆண்கள்தான் போர் இல்லாத காலங்களில் அதிகமான தற்கொலைகளில் மரணமடைந்தவர்கள் என்றும் இவர்களே கூறுகிறார்கள்.

உள்ளபடியே இலங்கை தீவில் ஒரு இன அடக்குமுறை இருப்பதோ, சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக தமிழர்கள் இருப்பதோ, அவர்கள் மீது சிங்கள பெரும்பான்மை அடக்குமுறை செலுத்துவதோ, இவர்களது உளவியல் ஆய்வுக்கு உட்படவே இல்லை. இன ஒடுக்கல் என்பது எந்த அளவுக்கு ஒரு தேசிய இனத்தின் இருத்தலுக்கே இடையூறாக அமையும் என்பதும் இவர்களுக்கு கணக்கில் வரவில்லை. வன்னியில் போர் நடக்கும் நேரத்தில், அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும் செய்திகள் வந்து அடையும் போது, இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நமக்கெல்லாம் எப்படி இருந்தது என்பதே இது போன்ற அறிவுஜீவிகளுக்கு தெரியாத செய்தியாக இருக்கிறது. இங்கே ஒவ்வொருவரும் கையறு நிலையில் இருந்தோம் என்ற சூழல் இவர்களது அறிவுக்கு எட்டவில்லை போலும். இங்கே இருக்கும் முதல்வர் கூட நாம் கையறு நிலையில் உள்ளோம் என்று கூறியது இவர்களுக்கு தெரியாது போலும். அந்த அளவுக்கு ஒரு தேசிய இன ஒடுக்கல் மக்களது மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூட தெரியாதவன் எப்படி உளவியல் நிபுணராக இருக்க முடியும்?

உரிமை என்பது மனிதனுக்கு அடிப்படையானது என்று தெரியாத ஒரு உளவியல் இருக்க முடியுமா? இலங்கை வரலாற்றில் நடக்கும் இன ஒடுக்கல் உளவியல்ரீதியாக எப்படி சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது தெரியாதவன் உளவியல் நிபுணனாக இருக்க முடியுமா? முறையாக போராளிகள் போரை நடத்துவதற்கு முன்பு, அனைத்து அறவழி முறைகளும் தோற்றுவிட்ட நிலையில், இளைஞர்கள் விரக்தியடைந்தால் யார் பொறுப்பு? கைகளில் போராட ஆயுதம் வந்த பிறகு எந்த முட்டாள் தற்கொலை செய்து கொள்வான் என்பதையும் என்பதும் புரியாதவன் உளவியலாளரா?

இப்போது போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து விட்டு, போரில் வெல்லவும் முடியாத ஒரு சூழலில், சமாதானம் என்ற பெயரில் சிங்கள பெரும்பான்மை யாழ்ப்பானத்திர்க்குள் குடியமர்த்தப்படுவார்கள், அதை தட்டி கேட்க முடியாத நிலையில் இளைஞர்கள் என்ன செய்வார்கள்? தற்கொலைதானே செய்துகொள்வார்கள்? இதுகூட தெரியாதவன் உளவியலாளரா? இப்படி ஒரு ஆய்வை நடத்தி அதை பிரபல படுத்த மக்கள் மத்தியில் ஏடுகள் மூலம் கொடுப்பவனது நோக்கம் என்ன? இன உணர்வு என்பதோ, உரிமை என்பதோ சாத்தியப்படாத ஒன்றுதான் என்று உறுதிபடுத்துவதுதானே?

இப்போது இலங்கை தீவை ஆளும் கொள்ளை கூட்டத்திற்கும், அதில் பங்கு போட துடிக்கும் வட்டார, மற்றும் வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கும், மீண்டும் ஒரு தேசிய இன உணர்வு துளிர்விடக்கூடாது என்பதுதானே நோக்கம்? அதற்கு ஏற்றார்போல பல திட்டங்களை அமுல்படுத்தும் அவர்கள், இந்த உளவியலாளர் என்ற பெயரில் சில குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதன்மூலம் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துவது எனபதை தவிர வேறு என்ன சிந்திப்பார்கள்? ஆகவே இவர்கள் மனோதத்துவ நிபுணர்களோ, உளவியல் அறிஞர்களோ அல்ல, மாறாக இவர்கள் உளவு சொல்லும் ஒற்றர்கள் என்பது தெளிவு. உளவியல்போர் ஒன்றை நடத்துவதே இப்போது தமிழின எதிரிகளின் முக்கிய தொழில் எனபதை நாம் உணர வேண்டியுள்ளது.

நக்சல்பாரி தலைவர் சாரு மஜும்தார் கைதாகும்போது கூறிய வார்த்தைகள்....

1972 ஆம் ஆண்டு ஜூலை--12 ஆம் நாள் கொல்கத்தாவில் ஒரு வீட்டில் தங்கி இருக்கும்போது, அதிகாலையில் காவல்துறையினர், சாருவை கைது செய்ய உள்ளே நுழைந்து விட்டனர். அப்போது சாரு மஜும்தார் என்றால், நக்சல்பாரி புரட்சிக்கு வித்திட்டவர் என்று காவல்துறை நடுங்கி கொண்டிருந்த காலம். நக்சல்பாரி புரட்சியின் தந்தை என்று சாரு அழைக்கப்பட்ட காலம். மேற்கு வங்கத்தில் தொடங்கி, ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, என சாருவின் நடமாட்டம் பற்றி காவல்துறை அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரம். சாருவுக்கு வயது அப்போது அறுபத்தி இரண்டு. அவர் அனுப்பி இருந்த " தொடர்பாளர்" [கொரியர்] முந்திய இரவில் திரும்பி வரவில்லை. அதனால் சாருவுக்கு சந்தேகம் ஒரு ஓரத்தில் இருந்திருக்கிறது. ஏற்கனவே தோழர்கள் சரோஜ் தத்தா, போன்ற முக்கிய தலைவர்களை வங்காளத்திலும், வேம்பட்டம்பு சத்யநாராயணா, ஆதிபத்திய கைலாசா, எம்.எல்.நாராயணா, பஞ்சத்ரி கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி ஆகிய தலைமை தோழர்களை, ஆந்திராவில் எதிரிகளின் தோட்டாக்களுக்கு பலி கொடுத்த நேரம். அதனால் எந்த நேரமும் எதரியின் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு அந்த தலைவரிடம் இருந்தது.

அதுவும் கொல்கத்தா நகருக்குள், ரகசியமான தாங்கும் இடங்களை தேர்வு செய்வதும் , அவற்றில் தங்கி இருப்பதும், அவ்வப்போது தங்கும் இடங்களை மாற்றிக்கொள்வதும், புரட்சியாளர்களுக்கு கை வந்தகலை. அதேசமயம் சாரு போன்ற தலைவர்களை இட மாற்றம் செய்யும்போது அதிக கவனத்துடன் பயணத்தை திட்டமிட வேண்டும். அன்றைய அதிகாலைக்கு முன்பே, இரவு வெகுநேரம் கழித்து, சாருவால் வெளியே அனுப்பப்பட்ட அந்த கொரியர் தோழர், திரும்பவில்லை என்ற செய்தியை செரிப்பதற்க்குள், காவல்துறையினர் உள்ளே நுழைந்துவிட்டனர். அதனால் ஒவ்வொரு நிமிடமும் அந்த புரட்சியாளறது மனதில் ஓடிய சந்தேகம் அப்போது உறுதியானது.

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற மன நிலை அந்த தலைமை தோழருக்கு இருந்திருக்க வேண்டும். ஆகவே அவர் காவலர்கள் உள்ளே வந்தவுடன், " நான் எதிர்பார்த்தேன் " என்று கூறி இருக்கிறார். அதற்கு பொருளே தனிதான். எந்த நேரத்திலும் நகர்புறத்தில், அதாவது எதிரியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பெரு நகரில், எதிரியின் சுற்றி வளைத்தல் நடக்கலாம் என்பதுதான் புரட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பிட்ட நேரத்தில் அப்படி நடந்து விடவே அதுவே அவரது எதிரொலியாக இருந்திருக்கிறது.
அன்று கைது செய்த சாருவை, சிறையில் பன்னிரெண்டே நாட்கள் உயிருடன் வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி, அவர் ஜூலை-28 அன்று மரணமடைய காரணமாக இருந்தார்கள். கடும் இருதய நோயில் இருந்த அந்த தலைவனுக்கு தேவையான மருந்துகளை அளிக்காமல், அவரது மறைவுக்கு மறைமுகமாக காரணமாக இருந்துவிட்டார்கள். அதனால்தான் இன்று வரை அந்த மறைவு நாளை, "தியாகிகள் தினம்" என்று குறிப்பிடுகிறார்கள்.

Sunday, October 10, 2010

இந்திய தலைமை தேர்தல் ஆணையர், பண--ஆள் பலத்தை சமாளிக்கமுடியுமா?

சென்னையில் நடந்த கூட்டத்தில், வர இருக்கும் தேர்தலில் பண பலத்தையும் அடியாள் பலத்தையும் எதிர்த்து போராடி, சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்க்கான, ஒரு ஆலோசனைக்கூட்டம் அது என்று வானளாவ பறந்து, பறந்து அறிவித்து கொண்டது. ஐந்தாவது தூண் என்று அதன் அமைப்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். இன்றைய தலைமை தேர்தல் அதிகாரியான குரேஷி, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த கோபால்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அது தேர்தல் ஆணையமும், பொதுமக்களும் கலந்து பேசும் கூட்டம் என்று கூறப்பட்டது. தேர்தல் ஆணையர் அரசியல் கட்சிகளின் தலைவர்களைத்தான் வழக்கமாக சந்திப்பார் . அதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத்தான் அத்தகைய கூட்டங்களிலும் அனுமதிப்பார்கள். ஆனால் இந்த முறை, பொதுமக்கள் பங்கு கொண்டனர். கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டனர். கேள்விகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பதில் கூறினார். இது ஒரு முன்னேற்றம்தான். எப்படியோ மக்களுக்கு தேர்தல் மீது உள்ள அவநம்பிக்கையை போக்கிவிடுவார்களோ?

அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் ஒன்றாவது விதியின் படி, இந்தியாவின் அனைத்து தேர்தல் பொறுப்புகளும், இந்த தேர்தல் ஆணையத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வேறு கூறிவிட்டது. இத்தகைய நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து, அந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்த மனுவில், தேர்தலில் பணபலம் அதிகரித்துவருவதை கவலையுடன் சுட்டி காட்டியிருந்தனர். அதாவது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியாவில் நிலவும் தேர்தல் முறையில் அடிப்படை நம்பிக்கை உள்ளவர்களாகவும், அத்தகைய நம்பிக்கையை வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் கெடுத்துவிடுகிறது என்றும் கருதினார்கள். அது நாடாளுமன்ற தேர்தல் முறையையே பாழ்படுத்திவிடும் என்று அவர்கள் அனைவரும் நம்பினார்கள். அதனால் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில், திருமங்கலம் தேர்தல் முறை என்று பிரபலமாக அழைக்கப்படும் அணுகுமுறை பற்றியே எல்லோரும் பேசினார்கள். அல்லது எல்லோரும் அதை நினைத்தே கொந்தளித்தார்கள் என்றே சொல்லலாம்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தங்கள் அமைப்பின் மூலம், இதுவரை நூறு கிராமங்களுக்கு சென்று, வாக்குகளுக்கு பணம் வாங்க கூடாது என்று பரப்புரை செய்து வந்துள்ளதாகவும், அதற்கு கிராம மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாகவும் எழுந்து நின்று கூறினார். உடனே ஏதோ எல்லாமே மாறிவிட்டது போலவும், அல்லது மாறிவிடும் என்பது போலவும் அனைவரும் கை தட்டி அந்த கருத்துக்களை வரவேற்றனர். திருமங்கலம் மாதிரி என்று அவர்கள் அனைவரும் வருத்தப்படும் முன்மாதிரி என்பது, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டது என்பதுதான். அதுபற்றி ஒரு ஊடகவியலாளர் வித்தியாசமான செய்தியை நம்மிடம் கூறினார். அதாவது இன்றைய தமிழக சூழலில், கடுமையான வேலையின்மையையும், வறுமையையும், எதிர்கொண்டு வரும் கிராமப்புற மக்களுக்கு, தேர்தல் நேரத்திலாவது, அதாவது தேர்தலை சாக்காக வைத்தாவது, தாங்கள் பட்டுள்ள கடன்களை திருப்புவதற்கு ஒரு சிறிய அளவிலாவது அந்த வாக்குகளுக்கு கொடுக்கப்படும் பணம் உதவுமானால், அதை பெரிய பலனாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படித்தான் திருமங்கலம் தொகுதி மக்களும் கருதினார்கள். அவர்களுக்கு அந்த ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்பது, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குறைந்த பட்சம் ஐந்து வாக்குகளுக்கு இருபத்து ஐந்தாயிரம் ரூபாயை சம்பாதித்து கொடுத்து விட்டது. அது தங்கள் குடும்ப கடனை அடைக்க பயன்பட்டதே என்று அவர்கள் நினைத்ததாக அந்த ஊடக இயலாளர் கூறினார்.


அப்படியானால் தூய்மையான தேர்தலை விரும்பும் இந்த அறிவு ஜீவிகளுக்கும், வறிய நிலையில் உள்ள கிராமப்புற மக்களுக்கும் இந்த தேர்தலை சுத்தப்படுத்தி நடத்துவது என்பதில் அடிபப்டையிலேயே வேறுபாடு இருக்கிறதா? வறிய மக்களுக்கு தங்கள் அடுத்த வேளை சோறு என்பதுதான் முக்கிய பிரச்சனை. அதை புரிந்து கொண்ட, ஊழல் அரசியல்வாதிகள், அவர்களை காசு கொடுத்து வாக்கு வாங்கும் கருவிகளாக பார்க்கிறார்கள். ஆக்கிவிடுகிறார்கள். அதுதான் பச்சையாக திருமங்கலத்தில் நடந்தது. ஆள்வோர்களின் தந்திரமாக இந்த தேர்தல்கள் நடப்பதுபோல தெரிகின்றன. அதாவது எளிய மக்களை ஏமாற்றி வறுமையில் தள்ளிவிட்டு அவர்களை தங்கள் வறுமையை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலைமையில் தள்ளிவிட்டு, பிறகு தேர்தல் என்று சொன்னால் அதில் அரசு கொடுக்கும் இலவசங்களும், தேர்தல் நேரத்தில் கொடுக்கும் லஞ்சங்களும் மட்டுமே தீர்மானிக்கும் பங்கை ஆற்றும் என்பதே இந்த அரசியல்வாதிகளின் திட்டமா? என்பதே கேள்வி. இந்த இடத்தில்தான் தேர்தலை ஒரு அரசியல் பிரதிநித்துவத்திற்க்கான அணுகுமுறையாக காணும் அரசியல் பார்வையுள்ள அறிவுஜீவிகளுக்கும், அரசியலற்ற நிலையில் உள்ள எளிய மக்களுக்கும் உள்ள வேறுபாடாக நிற்கிறது.

அன்று நடந்த கூட்டத்தில், அறிவுஜீவிகள் எனப்படுவோரும் ஏறுக்கு, மாறாக பேசினார்கள். ஒரு முன்னாள் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். தான் முக்கியமான ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்திடம் வைப்பதாக கூறி, ஒரு நகைச்சுவையான ஆலோசனையை முன்வைத்தார். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யும் வேட்பாளர்களை தடுக்க முடிவதில்லை என்பதால், ஆணையம் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்து விட்டு தள்ளி வைத்து விடவேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கோடீஸ்வர வேட்பாளர் செலவு செய்தது எல்லாம் வீணாகி போகும் என்றும், பிறகு அடுத்த முறையும் அப்படியே திடீரென தேர்தல் நாளுக்கு முந்திய நாள் தேர்தலை தள்ளி வைத்து விடவேண்டும் என்றும், அதன்பிறகு அப்படிப்பட்ட கோடீஸ்வர வேட்பாளர்கள் கண்டபடி செலவு செய்ய அஞ்சுவார்கள் என்றும் ஒரு சிரிக்க தக்க ஆலோசனையை கூறினார். அதை யாரும் கவனமாக எடுத்துகொள்ளாததால் வாய் விட்டு சிரிக்கவில்லை. இப்படி பிரபல அறிவுஜீவிகளே விரக்தியின் விளிம்புக்கு சென்று, நகைச்சுவை ஆலோசனைகளை வழங்கினால் பாவப்பட்ட மக்கள் என்னதான் செய்வார்கள்?

இப்போது இந்திய தேர்தல் ஆணையம், தன்னுடன் உதவிகள் செய்வதற்காக, புதிய பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் துறையின் அதிகாரிகளையும், வாக்காளர்களுக்கு கல்வி கொடுக்கும் மற்றும் வாக்காளர்களை தேர்தலில் பங்கேற்க வைக்கும் பிரிவையும் ஏற்ப்படுத்தியுள்ளோம் என்று ஒரு புதிய அறிவிப்பை அங்கே தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி வெளியிட்டார். அதேபோல, " காசு கொடுத்து தங்களுக்கு ஆதரவான செய்திகளை தயார் செய்து வெளியிடும்" செயலை கண்டுபிடித்த்டிருப்பதாகவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இத்தகைய அறிவிப்பு தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி ஊடகங்கள் செய்த துரோகத்திற்கு எதிரொலியாக வந்துள்ளன. அதாவது தேர்தல் ஆணையம் வேட்ப்பாளர்கள் இந்த அளவுதான் விளம்பரத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு விதியை விதித்துள்ளது. அதை மீறி ஊடகங்கள் வேட்பாளர்களிடம் காசு வாங்கிக்கொண்டு விளம்பரம் என்ற பெயரில் இல்லாமல், செய்தி போல அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவது என்ற தந்திரத்தை கையாண்டனர். அதில் சில பிரபல ஏடுகள் சிக்கிவிட்டன. அதை எதிர்த்து தங்கள் நடவடிக்கையை குரேஷி கூறினார்.

அடுத்து பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரத்தின் மீது எழுந்துள்ள சந்தேகங்களை போக்க, வாக்காளர்களுக்கு வாக்கு அளித்ததற்கான ரசீது அளிக்கும் முறையை அரசியல் சக்திகள் கோரி இருந்தன. அதை ஏற்றுக்கொண்டு மின்னணு இயந்திரத்தில் இருந்து அப்படிப்பட்ட ரசீது எடுத்து கொடுக்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்தார். 49 [ஒ] என்ற பிரிவை மின்னணு இயந்திரத்திலே பொறிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. அந்த பிரிவு, நிற்கும் வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்தை ஒரு வாக்காளர் பதிவு செய்ய உதவும். அதுவே தனது வாக்கை இன்னொருவர் கள்ளத்தனமாக போட்டு விடாமல் இருக்க உதவும். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்வதாகவும், அரசுக்கு ஆலோசனையை நல்கி இருப்பதாகவும் கூறினார். அங்கே எழுப்பப்பட்ட பல கேள்விகளும், கொடுக்கப்பட்ட ஆலோசனைகளும், மனுக்களும், ஒரு புதிய தன்மையையே ஏற்படுத்தியிருப்பதாகவும் அதற்கு " சென்னை மனு" என்று பெயரிட்டு அழைக்கலாம் என்றும் அப்போது குரேஷி கூறினார்.

ஊழல் பிடித்த அரசு ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்றும், ஆகவே அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படகூடாது என்றும் பொதுவான குரல் அங்கே ஒலித்தது. அதற்கு குரேஷி ஊழல் பிடித்த அதிகாரிகள்கூட, தேர்தல் ஆணையத்தின் நேர்மையான தலைமையின் கீழ் செயல்பட வரும்போது நேர்மையாக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றார். அதனால் கட்டளை தலைமை யார் என்பதுதான் முக்கியம் என்று கூறி சமாதானம் செய்தார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் என்று பிரிவினை பார்த்து ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகளின் பாங்கு, பாவம் குரேஷிக்கு தெரிய நியாயமில்லை. சம்பள உயர்வு, அகவிலைபடி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் இப்படி பல விசயங்களிலும் இரண்டு பிரிவினருக்கும் வேறுபாடு கண்டுபிடித்து, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க அரசியல்வாதிகளால் முடியுமென்பதும் குரேஷிக்கு தெரிய நியாயமில்லை.

பதட்டமான பகுதிகள் என்ற பழைய முறையை மாற்றி, பத்து புதிய நிபந்தனைகளுடன் வாக்கு சாவடிகளை கண்காணிப்பது செய்யப்படும் என்றார் குரேஷி. அதில் வாக்காளர் படங்கள் ஒட்டப்பட்ட அடையாள அட்டைகள் கொடுக்கப்படாத பகுதிகள், ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமாக வாக்களிப்பு நடந்த சாவடிகள், மிகவும் குறைவாக வாக்கெடுப்பு நடந்த சாவடிகள், ஒரே வேட்பாளர் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகள் வாங்கும் சாவடிகள், சாதி அல்லது மத ரீதியாக பதட்டம் உள்ள பகுதிகள், பணம் கொடுப்பதில் பெயர் பெற்ற வாக்கு சாவடிகள் இப்படியாக பத்து நிபந்தனைகள் அடிப்படையில் பிரித்து கண்காணிப்பு செய்யப்படும் என்றார்.
வருகிற ஜனவரி-25 அன்று இந்திய தேர்தல் ஆணைய பிறந்த நாள் வருவதால், அன்றைய நாளில், நாடு தழுவிய அளவில் பல லட்சம் இளம் வாக்காளர்களுக்கு, அதாவது 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் பதினெட்டு வயது முடியும் இளைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். எப்படியோ தலைமை தேர்தல் ஆணையரின் சென்னை வருகை என்பது, ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கலந்துகொண்ட மக்களும் கலைந்து சென்றனர். அதுபோல அவர்களது கனவுகளும் கலைந்து செல்லாமல் இருந்தால் சரிதான்.