Thursday, September 30, 2010

மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.

மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.
மூன்று நீதியரசர்களில், இரண்டு பேர் ஷர்மாவும், அகர்வாலும். இந்துக்கள். அதனால் அவர்கள் கொடுத்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குர்யா இடத்தில், ராமர் கூரையின் கீழ் பிறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். யாராவது நீதியரசர் என்ற பெயரில் உள்ளவர்கள் "லாம்" போட்டு ஒரு தீர்ப்பை கொடுப்பார்களா? இவர்கள் இந்துத்துவாவாதிகளாக இருப்பது இதிலேயே தெரிகிறது. அதேபோல கான் என்ற ஒரு நீதியரசர் மட்டும், 1949 ஆம் ஆண்டு 23 ஆம் நாள்தான் ராமர் சிலையை கொண்டுவந்து மசூதிக்குள் வைத்தார்கள் என்கிறார். அவர் இந்து இல்லை என்பதனால் தைரியமாக இப்படி சொல்ல முடிகிறதா? அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும், கோவிலை இட்த்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அதி புத்திசாலிகளுக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்த்தது என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இந்திய மக்கள் இவர்களை கல்லைக்கொண்டு அடித்துக்கொல்லலாமா என்று யாராவது கேட்டுவிடக்கூடாது.
கற்பனை கதைகளை சொல்லவும், கடவுள் அங்கே பிறந்திருக்கலாம் என்று சொல்வதற்கும் இது ஒன்றும் அந்த தாத்தாக்களின் வீட்டு பேரன்களுக்கு சொல்லும் கதை இல்லையே? இது நீதி மன்றம் என்பது அவர்களுக்கு தெரியாதா? சொத்து யாருக்கு சொந்தம் என்று வழக்கு கேட்டால், ஆளுக்கு பாதி எடுத்துகிடுங்க என்பதற்கு இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? இவர்கள் பிரித்துக்கொடுத்தது அயோத்தியில் உள்ள நிலத்தை அல்ல, மாறாக இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களை. இவர்கள் பிரித்து கொடுத்தது இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை. இந்த நாட்டு மக்களின் மனதுகளை. இதற்க்கு ஒரு நீதியரசர் மற்றும் நீதிமன்றம் தேவையா?
இது ஒருமதச்சர்பு அரசு என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனால்தான் இங்குள்ள நீதிமன்றமும் ஒருமதச்சார்பு நீதிமன்றமாக இருக்கிறது. தியோகிரடிக் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒருமதச்சார்பு அரசு மற்றும் நீதிமன்றம் இருப்பது இப்படியாவது அம்பலமானதே.

நீதிமன்றம் ஒரு சார்பு தீர்ப்பு வழங்கலாமா? குழப்பலாமா?

அல்லஹாபாத் உயர்நீதிமன்றம் பாபர்--கோவில் விவகாரம் பற்றிய வழக்கில், யாருக்கு அந்த இரண்டரை ஏக்கர் நிலம் சொந்தம் என்ற வழக்கை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது. ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடம் உண்மையிலேயே ராமர் பிறந்த இடமா? அதில் ஒரு ராமர் கோவில் இருந்ததா? அல்லது அது விவரம் தெரிந்த காலத்திலிருந்து பாபர் கட்டிய மசூதி இருந்த இடமா? இதுதான் அந்த நீதிமன்றம் முன்னால் உள்ள வழக்கு. அறுபது ஆண்டுகளாக நீண்டுகொண்டே போகின்ற ஒரு வழக்காக இந்த வழக்கு இருக்கிறது. இந்திய வழக்காடுமன்றங்களில் இத்தனை ஆண்டுகளாக இழுத்துக்கொண்டு இருக்கும் வழக்கு இது என்பதாகவும் தெரிகிறது. அல்லஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை பாபர் மசூதி வழக்கு என்றும், ராமர் பிறந்த இடம் பற்றிய சர்ச்சை வழக்கு என்றும் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படுகிறது.
அந்த நிலம் அறுபது சதுர அடிக்கு, நாற்பது சதுர அடி என்ற நிலப்பரப்பு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைதான். அந்த இடத்தில்தான் பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர்-6 ஆம் நாள் வரை இருந்தது. அனைவரும் காட்சி ஊடகத்திலாவது பார்க்கும் வண்ணம் அன்றைய நாளில் உடைக்கப்பட்டது. ஒரு வழிப்பாட்டு தளத்தை உடைக்கலாமா என்ற பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனை அதாவது அந்த குறிப்பிட்ட இடம் பாபர் மசூதிக்கு சொந்தமானதா? அல்லது ராமர் கோவிலுக்கு சொந்தமானதா? என்ற பிரச்சனை 1885 முதல் இருக்கிறது. பாபர் மசூதி என்ற அந்த கட்டிடத்திற்குள், இருக்கும் ராமர் சிலைக்கு வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும் என்று அந்த ஆண்டு நிர்மொஹி அகாரா என்ற அமைப்பு அனுமதி கேட்டு, வழக்கு ஒன்றை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. அப்போது அனுமதி கொடுக்கப்படவில்லை.
ஆனால் அடுத்த ஆண்டே அதாவது 1886 இல் பைசாபாத் நீதிமன்றத்தின் மாவட்ட நீதியரசர் எப்.ஈ.ஏ. சமீர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் இந்துக்களால் புனித இடமாக நம்பப்படும் ஒரு இடத்தில் குறிப்பாக ஒரு மசூதியை கட்டியிருக்கிறார்கள் என்பது கெடுவாய்ப்பானது என்றார். அது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால் இப்போது அதை நிவர்த்தி செய்வது என்பது முடியாத காரியம். 1950 தொடங்கி அலஹாபாத் நீதிமன்றம் முன்னால் ஐந்து வழக்குகள் யாருக்கு அந்த நிலம் சொந்தம் என்று போடப்பட்டுள்ளது. அதில் நான்கு வழக்குகள் இந்துக்களுக்கு ஆதரவாகவும், ஒன்று சன்னி வக்போர்டால் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் போடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளுமே அந்த குறிப்பிட்ட ஒன்றரை ஏக்கர் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று போடப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட வழக்குகள்தான் இப்போது அந்த அலஹாபாத் நீதிமன்றம் முன்னால் உள்ள மூன்று நீதியரசர்கள் முன்பு வந்த வழக்குகள். மூன்று நீதியரசர்களும், அகர்வால், சர்மா, கான் என்று பெயர்கொண்டவர்கள்.

1528 இல் மிர் பாகி, பாபர் மசூதியை கட்டுவதற்கு முன்பு அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு கோவில் இருந்ததா? என்ற கேள்வி நீதியரசர்கள் முன்னால் நின்றது. 1961 இல் சன்னி வக்போர்டால் போடப்பட்ட வழக்கு, கால கெடுவால் தடுக்கப்பட்டதா? என்பதற்கும் பதில் வேண்டி நீதிமன்றம் முன்னால் நின்றது. அதேபோல அயோத்தியா உண்மையில் ராமர் பிறந்த இடமா? என்பதற்கும் நீதியரசர்கள் பதில் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதேபோல இந்துக்கள் அந்த இடத்தில் நீண்ட காலம் வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்வியும் இருந்தது. 1934 இல் முஸ்லிம்கள் அந்த மசூதியை வழிபாட்டு இடமாக பயன்படுத்துவதிலிருந்து கைவிட்டு விட்டார்கள் என்றால், ராமர் சிலைகள் அந்த மசூதிக்குள் திடீரென தோன்றியது மந்திரமா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த கேள்விகள் கடந்த ஆறு பத்தாண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்படும் கேள்விகள். உணமைகளை சொல்வது என்பது மட்டுமின்றி, நம்பிக்கைகளா சம்பந்தப்பட்ட விசயங்களில் அந்த நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்று இந்த நாடு எதிர்பார்த்தது. நம்பிக்கைகள் விசயத்தில் நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்ல முடியுமா? என்றால் அந்த கேள்வியும் சட்டத்தில் கவனிக்கப்படவேண்டும். 1949 இல் டிசம்பர்-22 ஆம் நாள் திடீரென அந்த இடத்தில் தோன்றிய ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் மீது முரண்பாடு வந்தவுடன் அரசு அந்த இடத்தை கைப்பற்றியது பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தீர்ப்பு வரும் நாள் என்று செப்டம்பர் முப்பதாம் நாளை அறிவித்து அதை ஊடகங்கள் மூலம், பதட்டம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என்று அடிக்கடி சொல்லி பதட்டத்தை ஏற்ப்படுத்திய அணுகுமுறை அரசின் அணுகுமுறையாக இருந்தது. நீதிமன்றத்திற்குள் வழக்கு போட்ட நபர்கள்தான் செல்லவேண்டும் என்று கூறி மேலும் பதட்டம் ஏற்ப்படுத்தப்பட்டது. அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள அதிகமான இந்து மதம் சார்ந்த வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி ஊடகங்களில் பதட்டத்தை கூட்டினர். நீதிமன்றத்திற்குள் செல்பவர்கள் தீர்ப்பு கூறி முடிக்கும்வரை வெள்யே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. சன்னி வக்போர்ட் மற்றும் நிர்மோகி அகாரா தொடுத்த வழக்கு கால கெடு முடிந்து விட்டது என்பதாக கூறத் தொடங்கினார்கள்
மூன்று பகுதிகளாக அந்த நிலம் பிரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பை பற்றி காட்சி ஊடகங்கள் கூறத்தொடங்கின. அலஹபாத் உயர்நீதிமன்ற இணையதளம் திடீரென சிக்கிவிட்டது. சிலைகளை அங்கிருந்து அகற்றவேண்டியதில்லை. மூன்று மாதங்களில் நிலம் பிரிக்கப்படவேண்டும். இந்துக்களின் வழக்கறிஞர் ரவிசங்கர் காட்சி ஊடகங்களில் விளக்கினார். ராமர் பிறந்த நிலம் என்பதை அந்த நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுதான் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். தீர்ப்பு மிகவும் தவறு என்று வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார். 1992 இல் மசூதி இடிக்கப்பட்டது உண்மையா இல்லையா என்று கேட்டார். அப்படி இடிக்கப்பட்டது உண்மை என்றால், அந்த இடத்தின் சொந்தக்காரர்களான சன்னி வக்போர்டு தொடுத்த வழக்கை எப்படி காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய முடியும்? என்று வினவினார்.

பிரச்னையை மிகவும் சிக்கலாகக் நீதியரசர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு அல்ல என்பதாக இதன்மூலம் சொல்லுகிறார்களா? இது ஒரு ஒருமதச்சார்பு அரசு இயந்திரம் என்று இதன்மூலம் தெரிகிறதா? தீர்ப்பு ஒரு சார்பானது என்பதை ராஜீவ் தவான் கூறினார். மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு, மீதம் இரண்டு பகுதிகளை இரண்டு இந்து அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது இரண்டு இந்து அமைப்புகளுக்கு சேர்த்து, மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்றும், ஒரு பங்குதான் முஸ்லிம்களுக்கு என்றும் தீர்ப்பு கூறுவதாக பொருள் .இது ஒருமதச்சார்பு தீர்ப்பு இல்லையா? பாபர் மசூதி கமிட்டிக்கு ஒரு பகுதியை கொடுத்தால், அதில் பாபர் மசூதியை கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களா? ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்றும், இன்னொரு பகுதியை புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறியிருப்பதன் நோக்கம் என்ன?
இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கவா? இது கட்டப்பஞ்சாயத்து போல இல்லையா? நீதிமன்றம் ஒரு சிவில் வழக்கில், சொத்து வழக்கில் ஒனக்கும் இல்லை, அவனுக்கும் இல்லை, இரண்டு பேருக்கும் கொஞ்சம், கொஞ்சம் என்று கூறுமா? நமக்கு தலை சுற்றுகிறது. இந்த நாட்டு மக்களுக்கும் தலை சுற்றட்டும் என்று இப்படி ஒரு விளையாட்டா? எப்படியோ இந்த நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை இருக்கக்கூடாது என்பது ஆள்வோரின், அதாவது சட்டம் மூலம் ஆளும் நீதியரசர்களின் நோக்கமா? இப்படி குழம்பி திரிகிறார்கள் ஒற்றுமை விரும்புவோர்.

Wednesday, September 29, 2010

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? ராமர் பிறந்தது எங்கே?-மக்கள் மன்றம் தீர்ப்பு வழங்குமா?

இந்தியாவில் ஒரு பிரச்சனையில்லா பிரச்சனை உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு அதுவே மத நம்பிக்கையாக கற்ப்பிக்கப்பட்டு, பிற மத நம்பிக்கையுடன் மோதல் இருப்பதாக வரலாறு கூறப்பட்டு, அந்த வரலாற்றை மீண்டும் படைக்க வந்ததாக தங்களை தாங்களே சிலர் வர்ணித்துக்கொண்டு, இன்று நாடே அந்த மத மோதல் சகதியில் விழா இருப்பதாக அரசால் கூறப்படுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் அதற்க்கான வழக்கில் தீர்ப்பு கூறப்போவதனால் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது என அரசு கூறுகிறது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறப்போகும் வழக்கு, அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றியது. அதாவது அந்த சர்ச்சைக்குரிய அயோத்யா நிலம் ராமர் பிறந்த இடமா? அல்லது பாபர் மசூதி கட்டப்பட்ட இடமா? என்பதுதான் அந்த வழக்கின் சர்ச்சை. இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், மூன்று கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஒன்று, ராமர் பிறந்த இடம் என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது? இரண்டாவது, ராமர் கோவில் ஒன்று இருந்ததை இடித்துவிட்டுத்தான் அதே இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளதா? கோவில் இருந்ததாகவோ, அது இடிக்கப்பட்டதாகவோ, ஒரு பிரபல கருத்து அன்றைய காலத்தில் இருந்ததா? அல்லது சமீபத்தில் உருவாக்கப்பட்டதா? இப்படிப்பட்ட மூன்று கேள்விகளை ஆராய்ச்சியாளர்கள் அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார்கள்.
மகாராஜா விக்ரமாதித்தன் ராமர் கோவிலை கட்டினான் என்று ஒரு கருத்து உள்ளது. விக்ரமாதித்தன் என்ற பெயர் கொண்ட அரசன் ஒருவன் அல்ல ; பலர் இருந்திருக்கிறார்கள். எந்த விகிரமாதித்த அரசன் என்று சரியாக கூறுவதற்கு இந்துத்துவாவாதிகளிடம் சான்று இல்லை. வால்மீகி தனது ராமாயணத்தில், அயோத்தி மன்னர் ராமர் என்று குறிப்பிட்டுள்ளதும், எந்த அயோத்தி என்பதற்கான ஆதாரத்தை இந்துத்துவா சக்திகளால் கொடுக்க முடியவில்லை. கிருத்து பிறப்பதற்கு முன்பு 3102 ஆம் ஆண்டில் காலி யுகத்திற்கு முன்பு என்று அயோத்தி நகரை குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தாரால் ஆதாரமாக கொடுக்கப்பட முடியவில்லை. வால்மீகி ராமாயணம் ஒரு கற்பனைக்கதை என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அயோத்தி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு வளர்ச்சி அடைந்த நகரம் என்பதாக காவியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வளர்ந்த நகரை நம்மால் இந்தியாவில் காண முடியவில்லை. மிகவும் பின்னுள்ள ஒரு காலத்தை சேர்ந்ததாக அந்த அயோத்தி நகர் பற்றிய கதை எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. சகேடா நகர் என்பதைத்தான் அவர்கள் அயோத்தி என்று கூறுகிறார்கள் என்பதாகவும் தெரிகிறது.
ஸ்கந்த குப்தா என்ற விகிரமாதித்தனைத்தான் இவர்கள் அயோத்தி நகரை உருவாகியதாக குறிப்பிடுவதாக தெரிகிறது. கிருத்து பிறந்த பின்பு ஐந்தாவது நூற்றாண்டின் கடைசியில் சூரியவம்ச அரசு அயோத்தியில் இருந்தது. அந்த அயோத்தியில் புத்திசம், சமண மதம், இந்து மதம் ஆகியவை இருந்துள்ளது. ராமர் வழிப்பாடு என்பது மிக அண்மைகாலத்தில் தான் வந்துள்ளது. ஒன்றாவது மற்றும் நான்காவது சமண தீர்த்தகாரன் மரபு என்பது அங்கே இருந்திருக்கிறது. பர்ஷ்வனாதா, மகாவீரா ஆகியோரது வருகை அயோத்தி நகரில் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது நூற்றாண்டு வரை அந்த இடத்தில் ராமர் வழிபாடு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் யாரிடத்திலும் இல்லை. பதினோராவது மற்றும் பன்னிரெண்டாவது நூற்றாண்டுவரை ராமர் என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. இதுதான் வரலாற்று உணமையாக இருக்கிறது.
1528 இல் பாபர் மசூதி இந்தியாவில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தி நகரம் எந்த நதிக்கரையில் இருந்தது என்ற ஆதாரம் வேறு புதிய குழப்பத்தை ஏற்ப்படுத்துவதாக இருக்கிறது. கங்கை நதிக்கரையில்தான் இந்தியாவில் உள்ள அயோத்தி இருக்கிறது... . ஆனால் சகேடா என்ற நகர் சரயு நதிக்கரையில் இருக்கிறது. அன்றைய அயோத்தியும் சரயு நதிக்கரையில்தான் இருந்தது.. அந்த சரயு நதி இன்றைய ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. இந்தியாவின் அயோத்திக்கு புத்தர் இரண்டு முறை வருகை புரிந்துள்ளார். இவ்வாறு வரலாறு கூறும் எந்த ஆதாரமும் இவர்கள் இன்று கூறுகின்ற அயோத்தியை ராமர் பிறந்த இடம் என்று சொல்வதற்கான ஆதாரமாக இல்லை. அப்படியானால் இவர்கள் கூறும் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற பெரிய நகரம், சராயு நதிக்கரையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அயோத்தியாக இருக்கலாம். அதை கேள்விப்பட்டதனால், ஆத்திரம், மதரீதியான பகைமை ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்திய அயோத்தியை சர்ச்சைக்குரிய இடமாக மதவாதிகள் ஆக்கியிருக்கலாம் அதுவே பின்னாளில் மதத்தை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று எண்ணியவர்களுக்கு சாதகமாக போய் இருக்கலாம். அதனாலேயே இந்தியாவில் உள்ள அயோத்தி இப்போது பெறும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியாவெங்கும் பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பெயர் பெற்றவர் முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் ராதாகிரிஷ்ணனின் மகனான சர்வபள்ளி கோபால், இந்த பாபர் மசூதி சர்ச்சை பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர், " மோதலை பற்றிய உடல்கூறு". அதில் பணிக்கர், ஸ்ரீவத்சவா, நூரானி ஆகியோர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகள் நேரடியாக மசூதி--கோவில் விவகாரத்தை பற்றி எழுதப்பட்டுள்ளன.அதில் பணிக்கர் கூறும்போது, வால்மீகியின் அயோத்தியா இன்றைய அயோத்தியா அல்ல என்று எழுதுகிறார். கிருத்துவின் முதல் நூற்றாண்டிற்கு பிறகுதான் ராமர் வழிபாடு தொடங்கப்பட்டது என்றால், ராமர் வழிபாட்டின் மையமாக அயோத்தியா உருவானது பதினெட்டாம் நூற்றாண்டில்தான் என்கிறார் அவர். அதேபோல பாபர் ஆட்சி மத சகிப்புதனமையற்று நடந்துகொண்டதாகவோ, கோவில் இடிப்பில் ஈடுபாட்டதாகவோ எந்த ஆதாரமும் வரலாற்றில் இல்லை என்பதை அவர் உறுதி செய்கிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முந்திய காலத்திய இந்து மத நூல்கள் எதிலுமே, கோவில்கள் எதுவும் இடிக்கப்பட்டதாக எழுதப்படவில்லை. இவ்வாறு வரலாற்று உண்மைகள் வித்தியாசமாக இருக்கும்போது, மத உணர்வுகளை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று என்னுபவர்கல்தான் இந்த சர்ச்சையை பெரும் சிக்கலாக ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே அலஹாபாத் உயர்நீதிமன்றம், செப்டம்பர் முப்பதாம் நாள் எந்த தீர்ப்பை கொடுத்தாலும், இந்திய மக்கள் தங்களுக்குள் உள்ள ஒற்றுமையை உடைக்க எந்த மத உணர்வுகளையும் அனுமதிக்க கூடாது என்று நாமும் கேட்டுக்கொள்வோம்.

Tuesday, September 28, 2010

விவசாயம் பற்றிய அறிவு இன்றியே நெல்லுக்கு பெயர் வைப்பதா?

இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதாரம் விவசாய பொருளாதாரம். அதை பற்றிய அறிவு ஆள்வோருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. சரி. விவசாயத்தை பற்றிய நேரடி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுதானே ஆழ வந்தோர் திட்டமிடுவார்கள்? அப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்க மாட்டேன் என்கிறதே? இங்கே பாசன நிலங்களின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே? பாசனத்திற்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்திற்கு தேவையான நீரை தருகின்ற காவேரி ஆற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவது பற்றி போதுமான அக்கறை இல்லையே? முல்லை பெரியார் அணை தண்ணீர் வந்தால்தான் தேனீ, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று ஆள்வோருக்கு அக்கறை இல்லையே? ஆந்திராவில் கட்டப்படும் தடுப்பணைகள் நிறுத்தப்பட்டால்தான், பாலாறு தமிழ்நாட்டிற்குள் சரியாக பாயும் என்பதும், அதனால் மட்டும்தான் காஞ்சி, வேலூர், கடலூர், மாவட்டங்களில் உள்ள விவசாயத்திற்கு பயன் கிடைக்கும் என்பதும் ஆளும் கூட்டத்திற்கு புரிவதில்லையே? இதற்கெல்லாம் காரணம் நாட்டை மாநிலத்தில் ஆளவந்தோர் விவசாயம் பற்றி அறியாதவர்கள். அக்கறையில்லாதவர்கள் என்று கூறினால் கோபம் கொள்கிறார்கள். ஆனால் இப்போது உண்மை பையிலிருந்து வெள்யே வந்த பூனை போல வெள்யே தெரிந்துவிட்டது
தமிழக முதல்வர் கலைஞர் தனது வாழ்நாள் சாதனையாக ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு என்ற மாபெரும் விழாவை நடத்தி சாதனை புரிந்துள்ளார். அதில் மிகவும் நீடித்த தன்மை உள்ள சாதனை என்று அவர் நினைப்பது, தமிழக விவசாயத்தில் தனது தலையீடு என்று அவர் நினைக்கலாம். ராஜராஜன் 1000 என்ற பலமான ஒரு பெயரை, தான் செம்மை நெல்லுக்கு வழங்குவதாக அப்போது அறிவித்துள்ளார். அதற்கு விளக்கமும் கூறியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் என்ற விவசாயத்துறை அமைச்சர் தன்னிடம் அந்த நெல் அதிகமான விளைச்சலை தருவதாக கூறினார் என்கிறார் முதல்வர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதற்க்கு செம்மை நெல் என்று பெயரிட்டதாகவும் கூறியுள்ளார். அப்படி ஒரு விசேசமான நெல் எது என்று நாம் ஆராய்ந்தோம். சி.பி.ஐ. கட்சியின் விவசாய சங்கத்தின் தலைவர் துரைமாணிக்கம் ஒரு அறிக்கையை இன்றைய ஜனசக்தி ஏட்டில் கூறியுள்ளார். அதில் அப்படி ஒரு நெல்லே கிடையாதே ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறுகிறது.
உண்மை என்ன என்று பார்ப்போம். Systamatic Rice Intensification என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "நெல் உற்பத்தியை தீவிரமாக துரிதப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட முறை" என்பது நெல் உற்பத்தியில் புதிதாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் பழைய முறையிலிருந்து பல மாறுதல்கள் உள்ளன. அதாவது ஒரு ஏக்கர் நிலத்தில் கொத்து,கொத்தாக விதைகளை போடவேண்டியது இல்லை. மாறாக ஒன்றேகால் அல்லது ஒன்றரை கிலோ விதையை ஒரு ஏக்கருக்கு விதைத்தால் போதும். வழமையாக நாற்று பயிரை முப்பது அல்லது நாற்பத்தைந்து நாட்களுக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இந்த முறைப்படி ஏழு நாட்களிலிருந்து பதினைந்து நாட்களிலேயே நாற்றுகளை பிடுங்கி நட்டு விடலாம். அப்படி நடும்போது அது அதிகமாக வேர் பிடிக்கும். அதை அடி மண்ணுடன் சேர்த்து பிடுங்கி நடவேண்டும். வழக்கமாக நாற்றுகளை இரண்டிற்கு மேல் நடும் பழக்கம் போல இல்லாமல், இந்த முறையில் ஒரு அடிக்கு, ஒரு நாற்று என்று நடவேண்டும். அதை ஒற்றை நாற்று முறை என்று அழைக்கிறார்கள். இந்த ஒற்றை நாற்று முறையைத்தான் செம்மை நெல் முறை என்கிறார்கள். இந்த முறையிலான நாற்று நடுதலில் தண்ணீரை மூன்றடிக்கு நிற்கவைக்க வேண்டியது இல்லை. காய்ச்சலும், பாய்ச்சலுமாக காய்கறிகளுக்கு ஊற்றுவதுபோல தண்ணீரை பாய்ச்சினால் போதும். அதேபோல அறுவடையை 120 நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. 110 நாட்களிலேயே அறுவடை செய்து விடலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இந்த ஒற்றை நாற்று முறை எந்த அளவுக்கு அதிக விளைச்சலை கொடுக்கிறது என்று முதல்வரிடம் கூறினார் போல தெரிகிறது. விவசாயம் பற்றி கிஞ்சித்தும் தெரியாத முதல்வரோ, அப்படியானால் அதற்கு செம்மை நெல் என்று பெயர் வைத்து விடலாமே என்று கூறினார் போலும். இதை கேட்டு சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் விவசாயத்துறை அதிகாரிகள் அதையே " செம்மை நெல் சாக்படி முறை" என்று கூறத்தொடங்கியுள்ளனர். தான் ஒரு நெல்லுக்கு என்று பெயர் வைத்ததை இந்த விவசாய அமைச்சர்கள் சாகுபடி முறை என்பதாக கூறுகிறார்களே என்று முதல்வருக்கு மறுபரிசீலனை வந்திருக்க வேண்டும். வீரபாண்டியருக்காவது புரிந்திருக்க வேண்டும். தாங்கள் செய்வது எல்லாமே சரியானது என்று எதிர்க்கட்சிகாரர்களிடம் வாதாடுவதுபோல, இதிலும் இவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். அதன் விளைவே இப்போது இந்த சாகுபடிமுரையை ஒரு நெல் என்று நினைத்துக்கொண்டு, தமிழக முதல்வர் அடஹ்ர்க்கு புதிய பெயராக ராஜராஜன் 1000 என்று பெயரிட்டுவிட்டார். அவருக்கு விவசாயம் பற்றி இருக்கும் அறிவை மட்டுமல்ல, அக்கறையையும் இது அம்பலப்படுத்தி விட்டது.

Monday, September 27, 2010

உயர் கல்வி இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தால் கைப்பற்றப்படுமா?

இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டிலிருந்துதான் இந்திய துனைக்கண்டத்திற்க்கே எடுத்து சொல்லப்பட்டது என்பது நாம் பெருமையாக கூறிக்கொள்ளும் ஒரு வரலாறு. தந்தை பெரியார் வழி வந்தவர்கள்தான், இட ஒதுக்கீட்டின் தேவையை உணர்ந்தவர்கள் என்று அரசியல்வாதிகளும், சமூக சிந்தனையாளர்களும், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர்களும் கூறி வரக்கூடிய கூற்றுக்கு ஒரு அழுத்தமான கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே மற்ற பிற்படுத்தப்பட்டோர் என்று இந்திய அளவில் கூறப்படும், பிற்படுத்தப்பட்டோர் சமுதாயம் தனது இட ஒதுக்கீட்டை பெறுவதில் ஒரு நீண்ட கால போராட்டம் தேவைப்பட்டது. அதை தமிழகம்தான் தொடங்கிவைத்தது. தொடர்ந்து நடத்தி வைத்தது.

அப்படி இருக்கையில் சமீபத்தில் மூன்று ஆண்டுகளாக சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான உயர் கல்விக்கான இட ஒதுக்கீடு என்பது முதலில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்கால் கொண்டுவரப்பட்டதாகவும், பிறகு சில மத்திய அமைச்சர்களால் மறுக்கப்பட்டதாகவும், பிறகு உச்சநீதிமன்றம் சென்ற ஆதிக்க சாதியினரின் வேண்டுகோள்படி அது தடை செய்யப்பட்டதாகவும் செய்திகள் தமிழ்நாடு போன்ற இட ஒதுக்கீடு ஆதரவு பகுதிகளை உலுக்கியது. ஐ.ஐ.டி. போன்ற கல்விச்சாலைகளிலும், மருத்துவ கழகத்திலும், ஜே.என்.யு. [ ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்] போன்ற உயர் கல்வி பல்கலைக்கழகங்களிலும், இந்த ஒ.பி.சி. என்ற மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது தடைகளையே தொடர்ந்து சந்தித்து வந்தது.
மத்திய அரசு சில சமூகங்களை, அவர்களது சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை கணக்கில் எடுத்து அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வி பெறுவதற்கான மற்றும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது என முடிவு செய்தது. சுதந்திரம் பெற்ற பின்பு ஏற்ப்படுத்தப்பட்ட காகா கலேல்கர் ஆணையம், மற்றும் மண்டல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் ஆய்வின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்றது. அனால் அதை அமுல்படுத்தும் போது ஒவ்வொரு கட்டத்திலும் வருகின்ற தடைகளை நீக்குவது என்பதுதான் பெரும் கடினமான விஷயம் என்பது இப்போது புரியப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆரம்பத்திலேயே சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது நீண்ட காலமாக ஆளும் வர்க்கத்தினரால் கவனிக்கப்படவில்லை. மண்டல் ஆணையம் அதை வலியிறுத்தியும்கூட, கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
அதை வெள்யே கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்பதால் அவர் முற்ப்பட்டோர் வகுப்பிலிருந்து வந்தவர் என்றாலும் பெரிதும் பிறபடுத்தப்பட்ட மக்களால் பாராட்டப்பட்டார்.
அதன் பின்பும், உயர் கல்வியில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற செய்தி தாமதமாக உணரப்பட்டது. அதற்கும் உச்சநீதிமன்றம் 2007 மார்ச்-29 அன்று இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. 27 விழுக்காடு உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்பதே அந்த கோரிக்கை. 1985 க்கு முன்னால் பிற்படுத்தப்பட்டோருக்கான விவகாரம், உள்துறையில் இருந்த பிற்படுத்தபட்டோர் செல் மூலம் கவனிக்கப்பட்டது. அதன் பின் புதிதாக உரூவாக்கப்பட்ட தனி பிறபடுத்தப்பட்டோர் நல த்துறை, அதை கவனித்தது.. 1998 இல் அதுவே சமூக நீதி மற்றும் அதிகார மேம்படுத்தல் அமைச்சகம் என்று பெயர் பெற்றது. பிறகு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல்--10 அன்று உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில், மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 % இட ஒதுக்கீட்டை ஆதரித்து கூறியது. ஆனாலுல் கிரிமி லேயர் என்ற ஒரு பொருளாதார கணக்கை நிபந்தனையாக கொடுத்தது. அதேசமயம் அரசு உதவி பெறும், மற்றும் தனியார் கல்விச்சாலைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கூறியது.

சமீபத்தில் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விசயத்தில் ஒரு சதி நடந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மார்ச்-18 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் ஒரு முடிவு நிறைவேற்றப்பட்டது. அது பொதுநுழைவு தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணில், எது குறைவான மதிப்பெண்ணாக இருக்கிறதோ அதைவிட பத்து எண் குறைவாக எடுத்த பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இடம் தர முடியும் என்ற முடிவே. இது கடுமையாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களாலும், பிற மாணவர் சங்கங்களாலும் எதிர்க்கப்பட்டது. இதை எதிர்க்கும் பட்டினிப்போராட்டம் அந்த வளாகத்திர்க்குள்ளேயே நடத்தப்பட்டது..

ஜே.என்.யு. வில் உள்ள ஐசா என்ற அகில இந்திய மாணவர் கழகம் எனும் சி.பி.ஐ.எம்.எல்.[விடுதலை] அமைப்பின் மாணவர் அமைப்பும், எஸ்.எப்.ஐ. என்ற இந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற சி.பி.எம்.இன் மாணவர் அமைப்பும், டி.எஸ்.யு. என்ற ஜனநாயக மாணவர் சங்கம் என்ற புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர் அமைப்பும், பி.எஸ்.யு. என்ற முற்ப்போக்கு மாணவர் சங்கம் என்ற இன்னொரு எம்.எல். கட்சியின் மாணவர் அமைப்பும், எதிர்ப்பிற்கான மாணவர் அமைப்பும், இட ஒதுக்கீட்டை பாதுக்காக்கும் மற்றும் அமுல்படுத்துவதர்க்கான கூட்டமைப்பும், சேர்ந்தது போராட்டங்களை அந்த வளாகத்திற்குள் நடத்தியுள்ளனர். அதை அடுத்து ஒரு மாணவர் டில்லி உயர் நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றுள்ளார்.

அபூர்வா என்ற அந்த வடகிழக்கு மாநில மாணவனின் கோரிக்கைக்கு செவி மடுத்த டில்லி உயர்நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுத்துள்ளது. நீதியரசர் ராஜீவ் சஹாய் என்பவர் கொடுத்த அந்த தீர்ப்பில் நடைமுறையில் வந்துள்ள தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய அரசையும், ஜே.என்.யு. நிர்வாகத்தையும் பிரதிவாதிகளாக சேர்த்து இந்த தீர்ப்பை 2010 ஆம் ஆண்டு செப்டம்பர்-7 ஆம் நாள் நீதியரசர் கொடுத்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு அதாவது மாணவர்களுக்கு எங்குமே இந்தியாவில் வெட்டு மதிப்பெண் என்று ஒன்று பார்க்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில் அதே காரணமான சமூக ரீதியில், மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், பிற பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது என்ற அணுகுமுறையில் எப்படி வெட்டு மதிப்பெண் என்று ஒன்று புதிதாக வர முடியும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இப்படியாக நீதியரசர் வைக்கும் வாதங்கள்தான் சதி எண்ணத்துடன் அரசின் மற்றும் பல்கலைகழகங்களின் உயர்பதவிகளில் இருக்கும் ஆதிக்க சாதிவெறி படைத்தோரின் முகத்திரையை கிழிக்க உதவும்.
நுழைவு தேர்வ்களில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும், அவரவர்களுக்கு உள்ள அதாவது அந்த, அந்த சமூகங்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதுதானே கல்விச்சாலைகளின் வேலை? இந்த வழக்கை தொடுத்தவர்கள் தனி இட ஒதுக்கீட்டை, தனி வெட்டு மதிபெண் மூலம் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கவேண்டும் என்றுதான் கோரியிருந்தனர். நுழைவு தேர்வின் பொது மதிப்பெண்களில் எப்படி ஒரு குறைந்தபட்ச மதிப்பினை எடுத்துக்கொண்டு அதற்கும் பத்து மதிபெண் குறைவாக பெரும் பிற பிற்படுத்தப்பட்டோரை மட்டுமே சேர்த்துக்கொள்வோம் என கூறமுடியும் என்ற மாணவர்களின் வாதம் நன்றாக நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களும், ஏற்கனவே ஜே.என்.யு.வின் நிர்வாகத்தால் மறுக்கப்பட்டவர்கள் உள்ளே நுழையலாம் என்ற முயற்சி இப்போது செய்யப்படுகிறது.

இந்தியாவின் எதார்த்தத்தில் இருக்கின்ற சாதி பாகுபாடும், சாதி இழிவும், சாதிரீதியான ஒடுக்குமுறையும் ஒழிக்கப்படவேண்டுமானால், அதற்கு ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறாமல் இந்த சாதிரீதியான ஏற்றத்தாழ்வை போக்கமுடியாது. அகவே பெரியாரால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநித்துவம் உணமையாக நடைமுறையாக, நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இன்று நீதிமன்றங்களின் மூலம் நடத்தப்படும் சமூக நீதிக்கான இந்த போர், ஆதிக்க சாதிகளின் கரங்களில் சிக்கியுள்ள கல்வியையும், கல்விச்சாலைகளையும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இன்னமும் போதுமான அளவுக்கு கண்டுகொள்ளாதது கவலையளிக்கிறது. இனியாவது பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இத்தகைய பிரச்சனைகளை கையில் எடுப்பார்களா?

Sunday, September 26, 2010

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது.
திலீபன் பெயர் தெரியாத தமிழின உணர்வாளர்கள் இந்த பூவுலகில் இருக்க முடியாது. நேற்று அதாவது செப்டம்பர்-26 , திலீபன் நினைவை திரும்பி பார்க்கும் நான். அது நடந்தது 1987 இல். திலீபனின் இயற்பெயர் ராசையா பார்த்திபன், அவர் ராசையா என்ற பள்ளி ஆசிரியரின் மகன். யாழ்ப்பணத்தில் பிறந்தவர். குழந்தை பருவத்திலேயே தாயை இழந்தவர் திலீபன். யாழ்ப்பாணத்தின் பிரபலமான இந்து கல்லூரியில் பயின்றவர். தாய் தமிழீழத்தை அடைவதற்காக, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில், 1983 ஆம் ஆண்டு, அதன் கருப்பு ஜூலை நிகழ்ச்சியின் போது இணைந்தவர்.. அந்த கருப்பு ஜூலை படுகொலை நிகழ்வு, தமிழர்களுக்கு எதிரான படுகொலை நிகழ்வு மாத்திரமல்ல, தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் அடையாள நிகழ்வு என்பதை அன்றே புரிந்திருந்ததால்தான் திலீபன், புலிகள் இயக்கத்தில் சங்கமமானார். தமிழீழம் விடுதலை அடைவதே தங்கள் இலட்சியமாக கொண்ட விடுதலை புலிகள் இயக்கத்தில் அதனால்தான் இணைந்தார். யாழ் குடாநாட்டின் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக திலீபன் உயர்வு பெற்றார்.
1987 ஆம் ஆண்டு இந்திய அரசு, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. அதாவது இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழும் போது, அந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல், அந்த தமிழ் மக்களின் கலந்தாலோசித்தல் அல்லது பங்களிப்பு என்று எதுவும் இல்லாமல், அதேசமயம் இலங்கை தீவில் வாழும் ஈழத்தமிழர்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ, இல்லாமல், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களான, மலையக தமிழர்களின் கலந்தாலோசனையோ, அல்லது பங்களிப்போ இல்லாமல், கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ இல்லாமல், ஒரு ஒப்பந்தம் தயாரானது. அந்த ஒப்பந்தத்தை தயாரித்தவர்கள், இந்தியாவின் அரசியல் தலைமையில் வீற்றிருந்த தமிழர் அல்லாதவர்களாகவும், இலங்கையில் ஆட்சியில் இருந்த தமிழர் அல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.
இப்படி ஒரு ஒப்பந்தம் உலக அரங்கில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையைதீர்ப்பதற்கானஆவணமாகஎங்காவது ஏற்றுக்கொள்ளப்படமுடியுமா? அது இங்கே முடியும்,. அதுதான் இந்தியா. அதுதான் இலங்கை. ஒவ்வொரு நாட்டிலும் தேசிய இன பிரச்சனை என்பது பலமுறை, பல காலங்களில் வந்திருக்கிறது. காலம், காலமாக தேசிய இன பிரச்சனை என்பது பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலை, முடிக்கிலும், எழுந்து கொண்டே இருக்கும் ஒரு உரிமை பிரச்சனைதான். அப்போதெல்லாம் அத்தகைய தேசிய இன பிரச்னையை, கையாளும் ஆளும் கூட்டங்கள் தங்கள் இழுப்புக்கு வரக்கூடிய ஒரு சக்தியை தேசிய இன போராட்ட இயக்கத்திருந்து தேர்ந்தெடுத்து அதை வைத்து, மேசைப்பேச்சு என்று ஒன்றை நடத்தி, அதன்மூலம் ஒரு தீர்வை முன்வைத்து, அதில் அதிகாரம் செலுத்தும் சக்தியின் கையெழுத்தையும், அடிமைப்பட்டிருக்கும் சக்தியின் சார்பாக ஒரு பிரதிநிதியின் கையெழுத்தையும் பெற்று, உலகின் முன்னால் ஒரு தீர்வை அந்த குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையில் எட்டிவிட்டோம் என்பதாக அறிவிப்பார்கள். நாமும் அதை அப்படியே நம்பி அதையே வரலாறாகவும், அதையே தீர்வாகவும் எண்ணி, அதை எட்டுவதற்கு பாடுபட்டவர்கள் என்று கருதப்படும் மென்மை முகம் கொண்ட ஆதிக்க சக்திகளின் கையாள்களை பாராட்டி, வரலாற்றில் ஏற்றி , பாடப்புத்தகத்தில் சேர்த்துவிடுவோம்.

இதுவே பாலஸ்தீன பிரச்சனைக்கும் நடந்தது. அங்கே பி.எப்.எல்.பி . என்ற ஜார்ஜ் ஹப்பாஸ் தலைமையிலான அமைப்பு போன்ற கருத்தியல் தெளிவான அமைப்புகள் ஆயுதப்போரில் இருந்தன. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் பேச, யாசர் அரபாத் தலைமையிலான பி.எல்.ஒ. என்ற ஒருங்கிணைப்பு என்று சொல்லி, அல்-படாஹ் அமைப்பை மட்டுமே மேசை பேச்சுக்கு உற்சாகப்படுத்தியது. அதன் விளைவு ஒரு நகராட்சி அளவுக்கு உள்ள இடத்தை விடுதலை பகுதி என்று பாலஸ்தீன மக்களுக்கு கொடுத்து விட்டு, அதிலும் வெள்யே வர, உள்ளே போக ஒரு பாதையை போட்டு அதை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் கையில் கொடுத்ததே நடந்திருக்கிறது.
இவ்வாறு உலக ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு, தேசிய இன பிரச்சனைகளை தங்கள் கையை விட்டு சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டு பிறகு அதற்கு ஒரு தீர்வு என்ற பெயரில் சரணாகதி ஒப்பந்தங்களை செய்வது வழக்கம்,. இதுதான் காஷ்மீர் பிரச்சனையில், இந்திய அரசாலும், பாகிஸ்தான் அரசாலும் தொடர்ந்து செயல்பாட்டில் செய்யப்படும் தந்திரமாகும். அதாவது மதச்சார்பற்ற அமைப்பாக விடுதலை உணர்வோடு போராடிய ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவரை மக்பூல் பட்டை தூக்கிலிட்டு விட்டு, அங்கே மத அடிப்படையிலான பிரச்சனையாக மாற்ற முயற்ச்சித்து, தங்களுக்கு ஒத்துவரும் சில தலைவர்களுடன் பேச இந்திய அரசு முயற்ச்சிப்பதும் இதே வரிசையில்தான்.. இந்த வகையில்தான் இந்திய அரசு இலங்கை தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் ஈழத்தமிழர் பிரச்சனையிலும் கையாண்டுள்ளது.

அதாவது 1987 இல் செய்யப்ப்பட்ட இந்திய--இலங்கை ஒப்பந்தம், ராஜீவ்--ஜெவர்தனே ஒப்பந்தம் என்றுதான் அழைக்கப்பட்டது. அதிலேயே நாம் சம்பத்தப்பட்ட சக்திகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கூட்டிவந்து வற்ப்புறுத்தி அவர்கள் அந்த ஒப்பந்தப்படி, பெயர் அளவுக்கு ஆயுதங்களை ஒப்படைப்பது போல நடந்து கொள்ளசொன்னதும், அப்படியே பிரபாகரன் நடந்துகொண்டதும், அதை ஒட்டி இந்திய அமைதி படை என்ற பெயரில் ஒரு தமிழர் விரோத மனப்பான்மையை மனதிலும், கொள்கையிலும் கொண்ட தமிழர் அல்லாத படையை இந்திய அரசு அனுப்பியதும் அம்பலமான பழைய செய்திகள். ஆனாலும் தமிழர் விடுதலைக்காக தியாகம் செய்ய போர்க்களம் இறங்கிய பிரபாகரனோ, புலிப்படையோ, ஆக்கிரமிப்பு பாணியில் ஈழமண்ணில் இறங்கிய இந்திய அரசப்படைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய ஒரு வரலாற்று திருப்புமுனையை, சாதித்த நிகழ்வுதான் திலீபனின் தியாகம். அதை போர்க்களம் கண்டுவந்த பிரபாகரன், பிரபல காந்தீய வழியான பட்டினி போராட்டத்தின்மூலம் சரியாகவே கையாண்டார். போராட்டம் எப்போதுமே பல முனைகளிலும் நடத்தப்படவேண்டும். விடுதலை போர் என்பது அதையே நிரூபித்து காட்டுகிறது. தேசிய இன விடுதலை போராட்டங்கள் மட்டுமே, நேரடியாக இன்று உலகை ஆளும் ஏகாதிபத்தியவாதிகளை உடைப்பதற்கான வழிமுறையாகும். ஏகாதிபத்தியங்கள் எப்போதுமே தங்களுக்கான சந்தைகளை தேடுபவர்கள். அவற்றை தக்கவைத்து கொள்பவர்கள். அவர்களுக்கு அப்படிப்பட்ட சந்தைகளாக இருக்கும் நிலங்களை, தேசிய இன போராட்டங்கள் மட்டுமே உடைக்கின்றன . அதனால் அவர்கள் தேசிய இன விடுதலை போராட்டங்களுக்கு எதிராகவே தங்களது காய்களை நகர்த்துவார்கள். இதை தேசிய இனங்கள் அடிப்படையில் புரிந்துகொள்ளவேண்டும்.

இதே சிக்கல்தான் இந்திய அரசின் அணுகுமுறையிலும் நடந்தது. டில்லியை ஆளும் சக்திகள் நாகா, மிசோ, மணிப்பூர், அஸ்ஸாம், காஷ்மீர், போன்ற பல சிக்கலான தேசிய இன பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள். அவற்றில் பலவற்றை அடக்கியதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் அந்த அனுபவம் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் ஈழப்பிரச்சனையில் தலையிட்ட காலங்களில், தமிழ்நாட்டில் இரு பெரும் கருத்துக்கள் இருந்து வந்தது. ஒன்று இந்திய அரசை சார்ந்து தங்கள் போராட்டத்தை ஈழ போராளிகள் பெற்றுவிடலாம் என்ற கருத்து. அதற்காக இந்திய அரசப்படையை இலங்கைக்கு அனுப்பி விடுதலைக்கு உதவ செய்வது என்று அந்த கருத்து உள்ளவர்கள் அபிப்பிராயப்பட்டாகள். அதில் தமிழ்நாட்டு ஆளும்வர்க்க கட்சிகள் தொடங்கி, தமிழ் இன உணர்வாளர்கள் வரை பலரும் வரிசைப்பட்டார்கள். தமிழ் நாட்டு அப்பாவி மக்களின், உணர்வுகளும், ஏன் ஈழ தேசத்து தமிழ் மக்களின் உணர்வுகளும் கூட, அப்படியே இந்திய அரசை நம்பும் போக்கையே வெளிப்படுத்தியது. .இன்னொரு கருத்து இந்திய உதவி பற்றி எச்சரித்து வந்தது. அது புரட்சியாளர்களின் கருத்து.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் இந்திய அரசை நம்புகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் இந்திய அரசின் மீது, அப்படி ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்து இருந்தார்கள். அந்த நம்பிக்கையை உடைத்த முதல் நிகழ்வு என்பதால்தான் திலீபனின் நினைவு இன்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்ற இந்திய அமைதிப்படை அங்கே சிறிது, சிறிதாக போராளிகளின் போக்குகளையும், நடமாட்டங்களையும், நடவடிக்கைகளையும் கண்காணிக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் செய்களில் ஈடுபட தொடங்கினார்கள். அப்போது இந்திய அமைதிப்படையை எதிர்த்த பிளாட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனும், பாபி தலைமையில் இருந்த டெலோவும் ,டெலா அமைப்பின் சிறு பிரிவும் களத்தில் போர் புரிந்தார்கள். நிர்ப்பந்தத்தின் காரணமாக சுடுமலையில் ஒரு கூட்டம் ,அதில் பெயரளவுக்கு ஆயுதம் ஒன்றை ஒப்படைத்த பிரபாகரன் அடுத்தட கட்ட அதிகார கைப்பற்றலுக்கு தயாராகி கொண்டிருந்தார்.

அதற்க்கான பேச்சுவார்த்தையில், எழுப்பப்பட்ட கோரிக்கைகளை திலீபனின் பட்டினிப்போர் மூலம், புலிகள் இயக்கம் முன்வைத்தது. அதில்தான் 1 ] பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்ப்பட்ட எல்லா தமிழ் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முதல் கோரிக்கையாக வைத்தது. 2 ] மறுவாழ்வு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில், சிங்களர்களை கொண்டுவந்து குடியேற்றும் காலனிமயப்படுத்தல் என்ற இன அடையாள அழிப்பு எதிர்ப்பு என்பதை இரண்டாவது கோரிக்கையாக முன்வைத்தது. 3 ] ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவும்வரை அத்தகைய காலனிமயப்படுத்தும் நடவடிக்கைகளை தடை செய்ய வலியுறுத்தி மூன்றாவது கோரிக்கையாக வைக்கப்பட்டது . 4 ] வட-கிழக்கு மாகாணங்களில் புதிய காவல் நிலையங்களை திறப்பதிலிருந்து சிங்கள அரசை தடுக்க வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை. 5 ] தமிழர் கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள , இலங்கை ராணுவத்தையும், இலங்கை காவல்துறையையும், திரும்ப அழைக்கவேண்டும். இந்திய ராணுவத்தின் மேற்பார்வையில், இலங்கை அரசால், ஊர்காவல் படைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுதங்களை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தனது பட்டினப்போரை தொடங்கினார். அதாவது புலிகளின் அரசியல்பிரிவின், யாழ் குடாநாட்டு தலைவர் மேற்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தனது பட்டினிபோரை நடத்தினார் என்பது புலிகளின் அரசியல் போராட்டமாக காணப்படவேண்டும்.
மேற்கண்ட ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை ஏற்காமல் இந்திய அரசு திலீபனின் மரணத்தை அனுமதித்தது என்றால், அதன் போரும் என்ன என்பதை இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போதாவது உலக தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை போட்டவர்கள், அன்றைய நிலையில் தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளான திலீபனின் கோரிக்கைகளை ஏற்க்கவில்லை என்பதை அரசியல்ரீதியாக புரிந்து கொள்ளவேண்டும். அன்றைய சூழலில் ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒரு பகுதியையாவது, புலிகளும் வைத்திருந்ததால்தான், கடைசி கோரிக்கையில் இந்திய ராணுவத்தின் மேற்ப்பார்வையில் என்பதாக திலீபனின் கோரிக்கையும் அமைந்தது. இத்தகைய கோரிக்கைகளை ஏற்காத இந்திய அரசு, திலீபனின் காந்தீய முறை போராட்டத்தை கூட ஏற்காத நிலையில், அவரது தியாகம் அங்கே எழுதப்பட்டது. அதுவரை டில்லியை நம்பிய தமிழ் உள்ளங்கள் கூட அப்போதுதான் முதல்முறையாக டில்லி எதிர்ப்பு மனோபாவம் கொண்டனர். அதன்விளைவே புலிகளின் படைகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மோதல்கள் வெடித்தன. அதேசமயம் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும், செல்வம் தலைமையில் டெலோவும், ஈ.என்.டி.எல்.எப்.பும் த்ரீ ஸ்டார் என்ற பெயரில் இந்திய அரசு செயல்களுடன் சேர்ந்துகொண்டார்கள். தற்க்காலிக அரசை இந்திய அடிவருடி அரசாக அமைத்தார்கள்.
இதுவே திலீபனின் மரணம், அதாவது தியாகம் நமக்கு கொடுக்கின்ற பாடம். உலகத்தமிழர்கள் இந்த பாடத்தையும் இன்றாவது புரட்டிப்பார்ப்பார்களா?

Friday, September 24, 2010

கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்.

இப்போது கச்சதீவை இந்த்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை தீவை ஆண்டுவரும் சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்காக, கடும் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டுவரும் வேளை. இந்த கைமாற்றி கொடுக்கப்பட்ட தீவு பிரச்சனை ஒரு அரசியல் முடிவாக எதிர்க்கப்படுவதைவிட, ஒரு சமூகத்தின் வாழ்நிலை பிரச்சனையாக இப்போது பார்க்கப்படுகிறது. அதாவது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கச்சதீவு இந்தியாவால் திரும்பப்பெறபடவேண்டும் என்று ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதை கொண்டுவந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற கட்சியின் தலைவரான டி.ஆர்.பாலு. தி.மு.க. கொடுத்த தீர்மானத்தில், அ.இ.அ.தி.மு.க., இடது சாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருமே 1974 ஆம் ஆண்டு இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் நடந்த ஒப்பந்தந்த்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பேசினர். அதன்மூலம் கச்சதீவை திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட விவாதப்பொருள், தொடர்ந்து இந்தியாவின் தமிழக மீனவர்கள் கச்சதீவை தாரைவார்த்ததனால், அதன் அருகே செல்லும்போதெல்லாம் இலங்கை கடற்ப்படையால் தாக்கப்படுகிறார்கள் என்பதே.
அதை பேசும்போது டி.ஆர்.பாலு, கச்சதீவை தாரை வார்த்தபிரகுதான், தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள கடல்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள் என்றார். அதேபோல அ.தி.மு.க.வின் தம்பிதுரையும் பேசினார். ம.தி.மு.க.வின் கணேச முர்த்தி ஒரு கட்டம் மேலே போய், தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள்தானே? என்றும், அவர்களை இந்திய அரசு ஏன் அங்கீகரிக்க மறுக்கிறது? என்றும், தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது? என்றும் கேட்டார். அதையும் தமிழிலேயே கேட்டார். இடது சாரி கட்சி உறுப்பினர்களும் மீனவர் கொலைகளுக்கு கச்சதீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடுவதில்லை என்றும், அதனால் அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறினார். இந்த அளவுக்கு அவர்கள் கேட்கும்போது, இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நிரூபமா ராவ், இலங்கை பயணத்தில் இருந்தார். கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற தமிழ்நாட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனித்த எஸ்.எம்.கிருஷ்ணா, நிரூபமா ராவ் எல்லாவற்றையும் இலங்கை அரசிடம் பேசுவார் என்று கூரிமுடித்துவிட்டார்.
மேற்கண்ட நாடாளுமன்ற குரல்களுக்கு பிறகும், இந்திய அரசு பக்கத்திலிருந்து எந்த ஒரு ஆக்கபூர்வமான முன்முயற்சியும் தெரியவில்லை. ஏற்கனவே கச்சதீவை இந்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று ஒரு வழக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் பெயரில் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் இந்தியா இலங்கைக்கு கொடுத்த கட்சதீவு ஒப்பந்தம் சட்ட ரீதியாக செல்லத்தக்கதல்ல என்பதே முக்கிய அடிப்படையாக இருக்கிறது. அதாவது இதற்க்கு முன்னால் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, ஒரு இந்திய பகுதியை பாகிஸ்தானிற்கு கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்த போது, அத்தகைய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலையும், மூன்றில் ஒரு பங்கு உள்ள இந்திய சட்டமன்றங்களின் ஒப்புதலையும் பெறாததனால் செல்லாது என்ற பழைய வழக்கு ஒன்றின் தீர்ப்பை எடுத்துக்காட்டி, அதேபோல கட்சதீவு ஒப்பந்தமும் இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவையும், மூன்றில் ஒரு பங்கு சட்ட மன்றங்களின் ஒப்புதலையும் பெறவில்லை என்று அந்த வழக்கில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 11 ஆம் நாள், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் ஆயிரக்கணக்கில் தாங்களே கச்சதீவை நோக்கி போகப்போகிறோம் என்றும் உலகுக்கு அறிவித்துள்ளனர்.
கச்சதீவை ஒருகாலத்தில் ராமநாதபுரம் ராஜாவாக இருந்த சேதுபதி மன்னர் வைத்திருந்தார். அவர் அதை குத்தகைக்கு கொடுத்த ஆவணங்கள் இன்னமும் இருக்கிறது,. அப்படிப்பட்ட கச்சதீவை இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த பிறகு அதன் அருகே செல்வதற்க்கே தமிழ்நாட்டு மீனவர்கள் அஞ்சினர். அதேபோல சம்பவங்களும் நடந்துவரூகின்றன. முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு நாம் கொடுத்த கட்ச தீவை நாமே திரும்ப கேட்கும் நிலை வந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்னால், செப்டம்பர் 22 ஆம் நாள், இரவில் வழமை போல, ஒரு இலங்கை கடற்படை கப்பல் ராமேஸ்வரம் தீவு அருகே வந்துவிட்டது. இதுபோல பலமுறை இலங்கை கடற்படையின் சிங்கள வீரர்கள் நமது கரை ஓரத்தில் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். அப்படி நுழைபவர்கள் இங்குள்ள இந்திய மீனவர்களை அடிப்பதும், சுடுவதும் போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்திய அரசின் கடற்படையும், தமிழக கடலோர காவல்படையும் அந்த இலங்கை கடற்படைக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டும்கூட, அத்துமீறி நுழையும் இலங்கை கடற்படை மீதோ, வன்முறையை கட்டவிழ்த்து விடும் சிங்கள படை வீரர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுத்தது இல்லை. அதுமட்டுமின்றி குறைந்த பட்சம், சட்டத்தை மீறும் இலங்கை கடற்படையினர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்பதை தொடர்ந்து மீனவ இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், தமிழின உணர்வாளர்களும் எடுத்து சொல்லியும் தமிழக காவல்துறையின் செவிகளில் விழுந்ததாக தெரிய வில்லை.
சமீபத்தில் வேதாரண்யம் அருகே செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போது, ஓடிவந்து உதவிய தமிழக அரசு கூட, சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையினர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்ற விமர்சனம் பெரிதாக கிளம்பியது. இப்போது முதல்முறையாக இந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, கடந்த செப்டம்பர் 22 இரவில் நடந்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு, ராமேஸ்வரம் காவல்துறை ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதற்க்கு மீனவர் சங்கங்கள் நன்றி சுவரொட்டியும் ஒட்டியுள்ளனர்.
இந்த அளவுக்கு கட்சதீவு பிரச்சனை ஒரு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு கச்சதீவு பிரச்சனையில், இந்திய அரசோ, இலங்கை அரசோ செய்கின்ற செயல் தவறு என்ற புரிதல் இருக்கிறது. கச்சதீவில் இந்திய மீனவர்கள் வலைகளை காயப்போடவும், மீன்களை உலர்த்த போடவும், ஒப்பந்த்தப்படி உரிமை இருக்கிறது என்றாலும் அதை சிங்கள கடற்படை வீரர்கள் ஏற்றுக்கொள்ளாமல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை பார்ப்பதுபோல பார்த்து, அத்துமீறுகிரார்கள் என்பதும் தமிழக மக்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதேசமயம் இந்திய மீனவர்கள் கடலில் எல்லை மீறி செல்கிறார்கள் என்றும் அதனால்தான் இலங்கை கடற்படை இவர்களை சித்தரவதை செய்வதும், சுட்டு கொள்வதும் நடக்கிறது என்றும் தொடர்ந்து இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு, இந்திய அரசும் சொல்லி வருவதால், அதை மக்கள் நம்புகிறார்கள். இதுபோன்ற சால்ஜாபுகளால் அரசு இதுவரை தப்பித்து வருகிறது. உண்மை அவ்வாறு இல்லை.
கடலில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள எல்கையில் எப்படி சுவர் எழுப்ப முடியாதோ, அதேபோல மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது அவர்கள் இத்தகைய எல்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.
இரு நாடுகளுக்கு நடுவே உள்ள எல்கைகளை கடலில் வரைவது என்பது இரு நாட்டு அரசுகளுக்கும் சாத்தியமான ஒன்றே. இரு நாட்டு கடல் படைகளும், தங்கள் திசைகாட்டும் கருவிகளுடன் தான் கடலில் நகர்வார்கள். அவர்களுக்கு அவ்வாறு அடுத்த நாட்டு எல்கைகள் என்பது கவனிக்கப்பட முடியும். ஆனால் அதுவே மீனவர்களுக்கு சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாது மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, அதிகமான மீன் கிடைக்கும் இடம் நோக்கிதான் நகர முடியும். அப்போது அவர்கள் மீன்களுக்கு பின்னே செல்லும் வழிகளைத்தான் வழிகாட்டிகளாக கொள்ளமுடியும். அப்படி மீன்களுக்கு பின்னால் பயணமாகும் மீனவர்கள் தங்களது படகுகளை, எல்கை பார்த்துக்கொண்டு ஓட்டமுடியாது. ஆகவே மீனவர்களுக்கு கடலில் எல்கை கிடையாது என்பதையும், மீனவர்களுக்கு கடலில் எல்கை இருக்க முடியாது என்பதையும் மீனவர்கள் அல்லாதவர்கள் புரிந்துகொள்வது இயலாததாக இருக்கிறது. இதுவே நடைமுறையாகவும் இருக்கிறது.
அதாவது 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு, அதாவது இலங்கை தீவில், ஈழத்தமிழருக்கும், சிங்களவர்களுக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய போர் நடப்பதற்கு முன்பு இந்தியா பக்கம் இருக்கும் தமிழ் மீனவர்களும், இலங்கை தீவில் இருக்கும் தமிழ் மீனவர்களும் இருபுறமும் கரைகளுக்கு வருவதும், மீன் பிடித்தலை இரு புறமும் செய்வதும், பரஸ்பரம் பழகிக்கொள்வதும், சர்வ சாதாரணமாக நடந்து வந்தது.
அவ்வாறு பரஸ்பரம் இரு நாட்டு கரைகளுக்கும், எதிர் கரைகளில் உள்ள மீனவர்கள் செல்வதும், அந்த கரையோரத்தில் மீன் பிடிப்பதும், அங்கேயே சில நேரங்களில் தங்கி இருந்து ஒய்வு எடுப்பதும், பின் திரும்பி வருவதும் சாதாரணமாக இரு நாடுகளுக்கு இடையில் நடக்கின்ற விஷயம். அதற்குமேலும் சொல்லப்போனால், யாழ்ப்பாண மீனவர்களில் சிலர், தாங்கள் ராமேஸ்வரம் கரைக்கு வந்து தங்கும்போது, இங்கேயே குடும்பமாக வாழ்வதற்கு சில ஏற்பாடுகளை செய்துகொண்டவர்களும் உண்டு. அதேபோல தமிழக மீனவர்களில் சிலரும், ஈழப்பகுதியில் தங்கி வாழ்ந்ததும் உண்டு. ஆகவே இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் உள்ள உறவு என்பது ஒரு வரலாற்று தொடர்பு என்பதை உலகம் உணர்ந்துகொள்ளவேண்டும். இதில் தமிழ்நாடு வரை வந்து மீன் பிடிப்பதில், சிங்கள மீனவர்களும் உள்ளடக்கம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதனால்தான் சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை நாட்டு மீனவர்கள் அதாவது தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் தங்களுக்குள் பேசும்போது இரு புறமும் பரஸ்பரம் மீன் பிடிக்க அனுமதிவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவ்வாறு மீனவர்கள் பற்றியும், மீன் பிடிக்கும் தொழில் பற்றியும் சரியாக புரிந்து கொள்ளவேண்டியது மீனவர் அல்லாத மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது.
ஏன் என்றால் உலகம் முழுக்கவே நிலத்தில் வாழும் மக்களுக்கு, நீரில் வாழும் மீனவர்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. தெரியாத விசயத்தின் மீது அவர்கள் கருத்து வைத்திருக்கிறார்கள் எனபதுதான் மிகவும் கொடுமையானது. நிலம் சார்ந்த உலகம் என்பது வேறு. நீர் சார்ந்த உலகம் என்பது வேறு. நிலம் சார்ந்த உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் .ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள்தான் அரசியலிலும், அதிகார வர்க்கத்திலும், ஊடகங்களிலும் கோலோச்சுகிறார்கள். அவர்கள் தங்களது அனுபவங்களில் இருந்து மட்டுமே உலகை காண முடியும். அவர்களுக்கு நீரில் வாழும் ஒரு உலகம் பற்றி எதுவுமே தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நீரில் வாழும் மக்கள் பற்றிய சட்டங்களையோ, சாதகங்கலையோ, இடைவெளிகளையோ, தேவைகளையோ, பொருளாதார உறவுகளையோ, உற்பத்தி முறைகளையோ புரிந்துகொள்ள முடியும்? முடியாத ஒன்றை எப்படி தீர்மானிக்க முடியும்?
கடல் சார்ந்த உலகில் அரசர்களாக வாழும் மீனவர்கள் ஆதிவாசிகளாக இருக்கிறார்கள். அவர்களை கடல் சார்ந்த பழங்குடியினர் என்று அழைக்கவேண்டும். கடல் சார்ந்த பழங்குடியினருக்கு கடல் சொந்தம். கரையும் சொந்தம். அதை அவர்கள் உரிமையாக பெறுவதற்கு அவர்களை கடல் சார்ந்த ஆதிவாசிகளாக அறிவித்து, அவர்களுக்கு உரிய கல்வி ஒதுக்கீடு, வேலை ஒதுக்கீடு, அரசியல் தொகுதி ஒதுக்கீடு ஆகியவை கொடுக்கப்ப்படும்போதுதான், அவர்களது பிரதிநிதிகள் தக்க இடங்களில் அமர்ந்து தனகளுக்கான திட்டங்களை தீட்டும்போது, தாங்களே பங்கு கொண்டு, அவற்றை தீர்மானிக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு சூழல் மட்டுமே அவர்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை கொடுக்க முடியும். அகவே மீனவர்களின் முழக்கமான கடல், கடலாளிக்கே, கடற்கரை மீனவனுக்கே என்பதை உண்மையாக்க போராடுவோம்.

Thursday, September 23, 2010

கல்மாடிக்கு கல்தா. களவாண்டதற்கு மன்னிப்பா?

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் மரியாதையை உலக அரங்கில் அசிங்கப்படுத்திவிட்டதா? இந்தியாவின் கௌரவத்தை காலி செய்துவிட்டதா? இந்திய நாட்டிற்கு இது தலைகுனிவா? இதை செய்தவர்கள் தேச துரோகத்தை செய்துள்ளனரா? இப்படிப்பட்ட பட்டிமன்றம் நாடெங்கும் உள்ள ஊடகங்களில் நடந்து வருகிறது. அக்டோபர்- 3 ஆம் நாள் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. சென்ற ஆண்டே இந்த விளையாட்டு போட்டிகள் பற்றி கூறும்போது, டில்லியின் முதல்வர் ஷீலா தீட்ஷித், ஒரு கடுமையான சோதனையாக அது இருக்கும் என்று கூறியிருந்தார். விளையாட்டு போட்டிக்கான நாட்கள் நெருங்க, நெருங்க பல்வேறு பிரச்சனைகள் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், இந்த விளையாட்டு போட்டிக்கு இத்தனை கோடி ரூபாயை செலவழிப்பதா என்று கேள்வி எழுப்பினார். அதையே காங்கிரசு கட்சியின் இன்னொரு மூத்த தலைவரான திக் விஜய்சிங்கும், பிரதிபலித்தார். மணிசங்கர் ஐயர் ஒரு கட்டம் மேலே சென்று, காமன்வெல்த் போட்டி நடக்குமானால், அந்த நேரம் டில்லியில் இருக்க பிடிக்காமல் தான் வெளிநாடு சென்று விடுவதாக கூறினார். அதன் பிறகு இந்த விளையாட்டு போட்டிக்கான செலவுகள் செய்யப்ப்பட்ட புள்ளி விவரங்கள் வெளிவந்தன. அதில் தேவையற்று அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் பொருள்கள் ஒவ்வொன்றும் பற்றி பட்டியல் போடப்பட்டது. அதுவே புதிய தலைவலியாக ஆட்சியாளர்களுக்கு ஆனது.
வழமையாக நமது அரசாங்க திட்டங்களுக்கு முதலில் செலவு கணக்கு ஒன்று போடப்படும். பிறகு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அதிக செலவு ஆகிவிட்டது என்றும், அதிக செலவு ஆகும் என்றும் ஒரு புதிய கணக்கை கூறுவார்கள். இத்தகைய போக்கு இங்கே காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் நடந்தது. அதாவது ரூ. 655 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. அதையே மனிசங்கரையர் போன்றவர்கள் கேள்வி கேட்டனர். அந்த அளவுக்கு விளையாட்டு போட்டிக்கு செலவழிப்பதற்கு பதில், அதையே இந்த நாட்டில் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவளிக்க பயன்படுத்தலாம் என அவர்கள் கூறினார். ஆனால் காலம் ஆக, ஆக செலவு கணக்கு அதிகரிக்கத்தொடங்கியது. 11490 கோடி ரூபாய் வரை செலவு கணக்கை கூட்டினார்கள். பகிரங்கமாக இந்தியா வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் உழன்று கொண்டு இருக்கும் போதே, இவர்கள் விளையாட்டு போட்டிக்காக பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பது நாட்டு மக்களை எரிச்சலடைய செய்தது.காமன்வெல்த் போட்டிக்கான செலவு இவ்வளவு என்று அதன் ஒருங்கிணைப்பு குழு கூறும்போதே, இந்த விளையாட்டு போட்டிக்காக, டில்லி பெருநகருக்குள், அரசு அதாவது டில்லி யூனியன் பிரதேச அரசு உள்கட்டுமான ஏற்பாடுகளை செய்யவேண்டி வந்தது. அதற்க்கான செலவாக டில்லி அரசு 17000 கோடியை செலவு செய்துள்ளது. அது டில்லியின் எதிர்கால தேவைகளுக்கும் பயன்படும் என்பது அவர்களது வாதம்.
கல்மாடி தலைமையின் மீது பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகள் வந்தபோதும், வாங்கிய கருவிகள் விசயத்தில், கருவிகளின் விலையைவிட அதிகமான அளவு கொடுத்து வாடகைக்கு கருவிகளை வாங்கினார் என்ற விமர்சனம்கூட வந்த போது அவர் கலங்கவே இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு காங்கிரசு தலைமையின் அழுத்தமான ஆதரவு இருந்தது தெரியவந்தது. அதேநேரம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக தீம்பாடல் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாட, பகிரங்கமாக மேடை போட்டு, கல்மாடி டிஷர்ட் போட்டுக்கொண்டு வெளிட்டதை நாம் காட்சி ஊடகங்களில் காண முடிந்தது. .இப்படிப்பட்ட கல்மாடி அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலரும் காங்கிரஸ் கட்சிக்குள் விரும்பினர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்குமிடங்களில், பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் கட்டவேண்டி வந்தது. அதில் நேரு, இந்திராகாந்தி, என்று ஒவ்வொரு விளையாட்டு அரங்கிற்கும் பல நூறு கோடி ரூபாய்க்கு கட்டுமானப்பணிக்காகவே செலவழித்துள்ளார்கள். ஆனாலும் அவ்வாறு கட்டப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் ஒவ்வொரு நாளும், ஒரு அரங்கம் என்று உடைந்து விழுவதை கண்டு ஊரே சிரிக்கிறது. உதாரணமாக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், நடைமேடை பாலம் உடைந்து விழுந்தது. அதில் இருபத்தேழு பேர் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளார்கள் என்ற செய்தி இன்னொரு இடியாக வந்து விழுந்தது. அதற்கு மறுநாளே, பளு தூக்கும் போட்டி நடைபெற இருந்த அரங்கில், செயற்கை கூரை ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் உலகெங்கிலும் பெரிதாக காட்டப்பட்டது. அதன்விளைவாக பல பங்குபெறும் நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். காமன்வெல்த் நாடுகள் என்று பெயர் பெற்ற பெரிய நாடுகளான இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, போன்ற நாடுகள், விளையாட்டு போட்டிகளில் தாங்கள் கலந்துகொள்ளப்போவது இல்லை என்றும் அறிவித்தனர். அதில் சில நாடுகள் தாங்கள் பொறுமையாக தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களை செப்டம்பர் கடைசியில் இந்தியாவிற்கு அனுப்புவோம் என்றும் கூறி உள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களையும், விளையாட்டு வீரர்களையும், எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களிலும் மாட்டாமல் இருப்பதற்காக எச்சரிக்கையாக இருக்குமாறு இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் நாடுகளின் கூட்டமைப்பு தலைவர் மைகேல் ப்பேணல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான கிராமம், சுத்தமாக இல்லைஎன்றும், கட்டி முடிக்கப்படவில்லைஎனவும், கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
இத்தனை விமர்சனங்களுக்கு பிறகும் ஒருபுறம் முதல்வர் ஷீலா தீட்ஷித் தாங்கள் எல்லா குறைபாடுகளையும் சரி செய்து விடுவோம் என்றும், இப்போது எழுகின்ற குறைபாடுகள், விளையாட்டு போட்டிகளை ஒருபோதும் தடுத்து விடாது என்றும் கூறினார். இன்னொருபுறம் அந்நிய நாடுகள் பார்க்கும் தரம் என்பது வேறு என்றும், இந்த நாட்டில் தரம் என்று நாம் பார்ப்பது வேறு என்றும் பதில் கூறிக்கொண்டிருந்தனர். அசுத்தம், சுகாதாரம் பற்றிய விமர்சனகளுக்கு இப்படி பதில் சொல்ல இந்த நாட்டு அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் முடிகிறது என்று சொன்னால், இந்த நாட்டின் மரியாதை உலக நாடுகள் மத்தியில் எந்த நிலையில் இருக்கும் என்பது சொல்லாமலேயே தெரியமுடியும். இப்படி சூழலில்தான் நேற்று தலைமை அமைச்சர் மன்மோகன், ஒரு தீவிர நடவடிக்கையாக கல்மாடியை இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஓரங்கட்டிவிட்டு , ஜெயபால் ரெட்டியையும், எம்.எஸ்.கில்லையும் பொறுப்பில் போட்டு, அமைச்சர்கள் குழுவை முழு பொறுப்பையும் கவனிக்க அந்த இடத்தில் நியமித்தார்.. அதுபற்றி கூறிய மணி சங்கர் ஐயர் இந்த விளையாட்டு போட்டி நடத்துவதில் உள்ள குறைகளை தான் ஏற்கனவே நாலு ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாகவும், இப்போது ஒருங்கிணைப்பாளரை மாற்றியதால் இனி விளையாட்டு போட்டி சரியாக நடைபெறும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு காங்கிரசு கட்சிக்குள் பிளவுகள் இருப்பது பகிரங்கமாக வெளிவந்துள்ளது.
இப்போது நமக்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால், கல்மாடியை நீங்கள் நீக்கலாம் அல்லது ஓரங்கட்டலாம். ஆனால் கலமாடியின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டுள்ள குளறுபடிகள், வீண்செலவுகள், மற்றும் ஊழல்கள் ஆகியவை அப்படியே எடுத்துக்கொள்ளப்படுமா? அவற்றை நீக்குவதற்கோ, போக்குவதர்க்கோ, அல்லது ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ காங்கிரஸ் கட்சி தலைமை என்ன செய்யப்போகிறது? அல்லது ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணமாவாது அவர்களுக்கு இருக்கிறதா? இந்தநாடு ஒரு பெரிய பஞ்சத்தை, எதிர்நோக்கி இருக்கும்போது, பெரும் அளவில் வறுமையை தாங்கிக்கொண்டு இருக்கும்போது, இவ்வாறு 77000 கோடி ரூபாய் பணத்தை உலக நாடுகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக செலவழிக்கலாமா? இது இந்த நாட்டிற்கு இழுக்கா? அல்லது பெருமையா என்பது அவரவர் கண்ணோட்டத்தில் இருக்கிறது.

Wednesday, September 22, 2010

முருகன் கொலைக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்

இன்று 22.09.2010 காலை 10.00 மணிக்கு புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அளித்தப் பேட்டி வருமாறு.

தூத்துக்குடி நகரில் குடிமைப் பொருள் விநியோக உதவி தரக்கட்டுபாடு அதிகாரி முருகன் 25 ஆண்டுகலமாக பணியாற்றி வருகிறார்.குடிமை பொருள் கிட்டங்கியில் கடத்தல் நடக்குமானால் அதை மேலதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்து வந்துள்ளார் இறந்த முருகன் சென்ற மாதமே குடிமை பொருள் விநியோக துறையில் நடந்துவரும் கள்ள கடத்தல் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப்புகாரை மேலதிகாரிகளின் வலியுறுத்தலில் திரும்பப் பெற்றதாக அவரது மனைவி கூறியுள்ளார்.

இந்நிலையில் விஷம் அறுந்தியதாக 7.9.2010 அன்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை கொண்டுவந்து சேர்த்தவர்கள் அவர் பாலிடால் குடித்து தற்கொலை செய்ய முயன்றதாக கூறியிருக்கிறார்கள் அரசு ஊழியராக இருகின்ற முருகனது தொழிலை கூலி என்று எழுதி பிறகு அதை அடித்து பணம் கட்டும் நோயாளி என்பதாக எழுதி விபத்து பதிவு ஏட்டில் நிரப்பியிருக்கிறார்கள் இது தொடக்கம் முதலே அவரை கொண்டுவந்து சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் பதிவு செய்தோர் உட்பட பலர்மீதும் பல கேள்விகளை எழுப்புகிறது.

அந்த பதிவேட்டில் நாடிதுடிப்பு,இரத்த அழுத்தம் ஆகியவை கேள்விக்குறியாக குறிக்கப்பட்டுள்ளது. அப்படியானல் அவரது உயிர் அப்போது இருந்ததா?பிரிந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது அது தவிர அப்போது அவர் நினைவற்று இருந்ததாக முதலில் எழுதப்பட்டு பிறகு அதுவே அரை நினைவில் இருந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் இதேபோல மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துக்களை பதிவேட்டில் பார்க்கமுடிகிறது. அதனால் திட்டமிட்டு தவறாக பதிவு செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. அவர் உடலில் வேறு எந்த காயமும் இருந்ததாக விபத்து பதிவேட்டில் குறிக்கப்படவில்லை செப்டம்பர் 11-ஆம் நாள் முருகன் இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை அறிவித்தது. செப்டம்பர் 12 ஆம் நாள் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் 10 இடங்களில் அவரது உடலில் காயம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இடது பாதத்திலும்,இடது கையிலும், கழுத்தின் இடபுறமும், தோளின் இடது புறமும், இடது முழங்கையிலும் இடது கையின் பின்புறமும், உதட்டின் கீழ்புற மத்தியிலும் கடுமையான காயங்கள் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட காயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களில் முருகன் அடித்து கொல்லப்பட்ட்டுள்ளார் என்பதை நிருபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இதுபற்றி நேற்று 21.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் பிரகாசிடம் நேரடியாக கேட்டபோது, அவரால் எந்தவொரு பதிலையும் கொடுக்க முடியவில்லை. இறந்த முருகனின் மனைவி செல்வி ஒரு வாரகாலமாக நியாயம் கேட்டு குடும்பத்துடன் ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னால் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார். அவரது புகாரில் கூறப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையுமே இதுவரை காவல்துறை விசாரனைகூட செய்யவில்ல்லை.

இறந்த முருகன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்ராக இருப்பதனால் அவரது மரணம் பற்றிய வழக்கில் 1989-ன் எஸ்.சி/எஸ்.டி தாழ்த்தப்படோர் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யவேண்டும். அதையும் இந்த அரசு செய்யவில்லை ஆகவே இந்த மரணத்திற்கு பின்னால் தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மாநில மெங்கும் நடக்கும் ரேஷன் பொருள் கடத்தல் என்ற மாபெரும் சதி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அரிசி மட்டுமின்றி உழுந்தும் பருப்பும் கடத்தப்படுகின்றன் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இவ்வாறு முருகனின் மரணத்திற்கு பின்னால் பெரிய அளவில் ஒரு சதி வலை பின்னல் இருக்கக்குடிய நிலைமை இருப்பதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

அதேபோல இதற்கான போராட்டத்தை மாநிலம் தழுவிய ரீதியில் நடத்துவதற்காக எதிர்கட்சியான் அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரை நான் கேட்டுக் கொள்ள இருக்கிறேன். அனைத்துக்கட்சிகளையும் இணைத்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி முருகன் மரணத்திற்கான பின்னனியை வெளிக் கொண்டு வரவும், உண்மை குற்றவாளிகளை தண்டிக்கவும், சட்டரீதியான முயற்சிகளை புதிய தமிழகம் மேற்கொள்ளும். இவ்வாறு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி பேட்டியின்போது கூறினார்.

Tuesday, September 21, 2010

தலித் மக்கள் பாதுகாப்பு சட்டத்தை படிக்க மாட்டீர்களா?

தலித் மக்கள் நிலைமை, இந்திய துணை கண்டத்தில், கொடூரமான சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, ஐ.நா. சபையே உணர்ந்துள்ளது என்பதை டர்பன் மாநாடு நிரூபித்து காட்டியது. அதாவது ஐ.நா.வால் "இனவெறி பாகுபாடு எதிர்ப்பு மாநாடு" என்ற உலகம் தழுவிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் நடத்தப்பட்டது. அதில் இந்திய நாட்டிலிருந்து ஆதாரபூர்வமாக தலித் சமூகத்தின் மீது நடத்தப்படும் தொடர் கொடுமைகள் பட்டியலிடப்பட்டன. சமூக, பண்பாட்டு, அரசியல் தளங்களிலும், அன்றாட வாழ்க்கையில் தலித் மக்கள் ஆதிக்க சாதியைச்சேர்ந்த சாதி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்படுவதை படம் பிடித்து உலக நாடுகளின் மக்களுக்கு காட்டுவதற்கு அந்த உலக மாநாடு உதவியது. இந்தியாவில் இருக்கும் சாதி கட்டுமானத்தை உலக மக்கள் உணர்வதற்கு அது உதவியது. தீண்டாமை என்ற கொடிய நோய் ஒன்று, இந்தியாவை தொற்றிக்கொண்டுள்ளது என்ற யதார்த்த நிலவரம் உலக மக்கள் மத்தியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது..
இத்தகைய தீண்டாமை கொடுமை பற்றிய இந்திய யதார்த்தம், உலக அரங்கில் விவாதிக்கப்பட்டபோது ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தில் சர்ச்சைக்கு உள்ளானபோது, இந்திய அரசின் பக்கத்தில் முன்வைக்கப்பட்ட சட்டரீதியான தடுப்பு நடவடிக்கைகள் கவனிக்கப்படவேண்டும். ஏன் என்றால் ஒரு அரசு நிலவுகின்ற சமூக அநீதி பற்றி என்ன கருதுகிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.
இந்தியாவிற்கான ஒரு அரசியல் சட்டம் எழுதப்ப்படும்போதே, அதில் தீண்டாமை ஒழிப்பு என்பதற்காக ஒரு சட்டப்பிரிவு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது தீவிரமான செயல்பாட்டிற்கு செல்லவில்லை. ஏன் என்று பார்த்தோமானால் தீண்டாமை என்பதும், சாதி இழிவு படுத்தல் என்பதும், சாதி கட்டுமானம் என்பதும், இங்கு நிலவுகின்ற சமூக, பொருளாதார, அரசியல் தளங்களுடன் இணைந்த ஒரு அம்சமாக இருக்கிறது. இது ஆண்டாண்டு காலமாக இந்திய கிராமங்களிலும், நகரங்களிலும்கூட, நடைமுறை செயல்பாடுகளாக இருந்து வருகிறது. அதாவது நிலவிவரும் நில உறவுகள் அத்தகைய சாதி கட்டுமானத்தை உயிரோடு வைத்திருப்பதில் கவனமாக இருக்கின்றன. சாதி இந்துக்கள் கரங்களில் இந்திய கிராமப்புறங்களில் உள்ள நில உறவுகள் இருந்துவருவதால், அவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதர்க்காக, சாதி கட்டுமானத்தை இறுக்கமாக்கி வருகிறார்கள்.
அதனால் சாதி ஆதிக்கம் என்பது ஒரு சமூக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு ஏதுவாகிறது. சமூக வன்முறை என்பதாக இந்த தீண்டாமை கொடு நோய் புரியப்படவேண்டும். அதனால்தான் அரசாங்கம் எந்த ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும், அதை அமுல்படுத்துவதற்க்கோ, குற்றம் செய்தவர்களை கைது செய்வதற்கோ, தண்டனை வழங்குவதர்க்கோ, அதிகாரிகள் தயாராக இல்லை என்ற சூழல் நிலவுகிறது.
இப்படிபட்ட பின்னணியில்தான் நாம் தலித் மக்களுக்கு சாதகமாக, தலித் மக்களுக்கு பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களைக்கூட, அமுலாக்கமுடியாத ஒரு நாட்டில் வாழ்ந்துவருகிறோம் என்பது வெட்கப்படவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது..
வட மாநிலங்களில் சாதி பாகுபாடு என்பது, பகிரங்கமாக அறிவிக்கப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆதிக்க சாதிகளுக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஒடுக்கப்படும் சாதி மக்களை மிரட்டியும், தாக்கியும், கொலை செய்தும் வருவது அன்றாட நிகழ்ச்சியாக இருக்கிறது. உதாரணமாக பீகார் மாநிலத்தில், ராஜபுத்திரர்கள் எனும் ஆதிக்க சாதியான ஜமீன்தார்களுக்கு ஒரு தனி ஆயுதப்படை, அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பூமிஹார் என்ற இன்னொரு பண்ணையார் சாதிக்காக இன்னொரு ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது. இவ்வாறு சாதி என்பது படை பரிவாரங்களுடன் இயங்குவது, இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் இருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழல் தமிழ்நாட்டில் இல்லை. இங்கே அரசியவாதிகள்கூட, சாதி கூடாது என்பதை வாயளவில் கூறி வருகின்றனர். தந்தை பெரியாரால் சாதி எதிர்ப்பு பரப்புரையும், சாதி ஒழிப்பு செயல்பாடுகளும் தமிழக மண்ணை செல்வாக்கு செலுத்தி வரும் காரணத்தாலும், சாதி இங்கே பகிரங்கமாக பேசப்படுவது அசிங்கமான செயல் என்ற கருத்து இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் நிலவும் தீண்டாமை செயல்பாடுகளை காண வேண்டும்.
அதாவது தமிழ்நாட்டில், தீண்டாமை இன்னமும் மக்கள் மத்தியில், ஆதிக்க சாதிகள் மனங்களில் ஆழமாக குடியிருந்தாலும், பகிரங்கமாக இங்கே தீண்டாமையை ஆதரிக்கிறேன் என்று சொல்லக்கூடிய நிலையில் யாரும் இல்லை. அதுமட்டுமல்லாது இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ, தீண்டாமை என்பது ஒரு கொடூரமான நோய் என்பதை புரிந்தே வைத்துள்ளனர். ஆனாலும் தன்கள் நலுனுக்காகவும், தங்களது சாதி நலனுக்காகவும் தீண்டாமையை அங்கீகரித்து ஆதரிக்கிறார்கள். ஆகவே இங்கே இதே நோயை வித்தியாசமான முறையில்தான் எதிர்கொள்ளவேண்டும். அதாவது சட்டரீதியாகவே எதிர்கொள்ளமுடியும்.
உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில், இந்திய அரசியல் சட்டத்தால் தடை செய்யப்ப்பட்ட உடன்கட்டை ஏறுதல் என்ற கொடிய பெரிய பெண்ணடிமை நோயை, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இவ்வாறு சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகளே பெண்ணடிமையை ஆதரிக்கும் உத்திர பிரதேசம் எங்கே? பெண்ணடிமையையும், தீண்டாமையையும் எதிர்த்து ஆட்சிக்கு வரும் தமிழ் நாட்டு கட்சிகள் எங்கே? ஆகவே தமிழ்நாடு இத்தகைய விசயங்களில் வேறுபட்டுத்தான் நிற்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் ஏன் இன்னமும் தீண்டாமை கொடுமை நிகழ்ந்து வருகிறது?
இந்திய அரசியல் சட்டத்தில் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் தமிழ்நாட்டில் ஒழுங்க்காக செயல்படுத்தப்படுகிறதா? தமிழ் நாட்டு சூழலில், தீண்டாமை எதிர்ப்பு சட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்பட்டாலே போதும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் தீண்டாமை எதிர்ப்பு சட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படாமல் இருப்பதற்கு யாரை காரணமாக சொல்ல முடியும்? சட்டங்களை அமுலபடுத்தவேண்டிய பங்கு வழமையாகவே அதிகாரிகள் கைகளில்தான் உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளும், அதை கண்காணித்து செயல்படுத்த வழிகாட்டவேண்டிய வருவாய் துறை அதிகாரிகளும், ஏன் இந்த தீண்டாமை தடுப்பு, தலித் மக்கள் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்தாமல் இருக்கிறார்கள்? 1989 ஆம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பது, அதிகமான பற்களுடன் தலித் மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை கடுமையாக தண்டிக்கவும் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அது ஏன் பயன்படவில்லை?
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் சமூகத்தை சேர்ந்த ஒருவரை, அந்த குறிப்பிட்ட சமூகங்களை சேராத ஒருவர், இழிவு படுத்தினாலோ, தாக்கினாலோ, காயம் அடைய வைத்தாலோ, கொலை செய்தாலோ, தலித் பெண்ணை மானபங்க படுத்தினாலோ, பாலியல் பலாத்காரம் செய்தாலோ, வீட்டை இடித்தாலோ, வீட்டை எரித்தாலோ, தலித்துக்கு சொந்தமான நிலத்தை பறித்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ, அத்தகைய வழக்குகள் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படலாம் என்று அந்த சட்டம் கூறுகிறது. அதுமட்டுமின்றி, 1995 இன் விதிகள் என்று கொண்டுவரப்பட்ட விதிகள், ஒவ்வொரு தீண்டாமை குற்றத்திற்கும் ஏற்றார்போல, பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படவேண்டிய இழப்பீடு தொகையையும், கூடுதலாக கொடுக்கப்படவேண்டிய சலுகைகளையும், வரிசைப்படுத்தி கூறுகிறது.
உதாரணமாக இழிவான பொருள்களை அருந்தவைத்தால், ரூ.25000 என்றும், காயம் ஏற்படுத்தினாலோ, நிலத்தை கைப்பற்றினாலோ, அதேபோல தொகையையும், மரபு வழிகளை தடை செய்தால் ரூ.ஒரு லட்சம் என்றும், கொலை அல்லது மரணம் விளைவித்தால் வருமானம் பெறாத தலித் பாதிக்கப்படும்போது, ஒரு லட்சம் ரூபாயும் ,வருமானம் பெறுபவர் விசயத்தில் .இரண்டு லட்சம் ரூபாயும் கொடுக்கப்படவேண்டும். இதுதவிர கூடுதலாக பாதிக்கப்பட்டவரை சார்ந்து இருப்பவர்க்கு மதம் ரூ.1000 அல்லது அரசுப்பணி அல்லது வீடுமனை, விவசாய நிலம், போன்ற சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். மேற்கண்ட உதவிகளை, வழக்கு பதிவு செய்த உடனேயே ஒரு தவணையையும், அடுத்து வழக்கு நிறைவு பெற்றபின் ஒரு தவணையையும் கொடுக்கவேண்டும். இதை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் கொடுக்கவேண்டும். அதற்காக மாநில வரவு-செலவு திட்டத்தில் ஒரு பெரும்தொகையை ஒதுக்கீடு செய்து அதை மாவட்டங்களுக்கு மாநில அரசு அளிக்கவேண்டும்.
மேற்கண்ட விவரங்கள் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 1996 ஆம் ஆண்டிலிருந்து வாதம் செய்யப்பட்டு 1998 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகும் இவ்வாறான வழுக்குகளில், வன்கொடுமை தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்ற செய்தி கெடுவாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியை சேராத காவல் அதிகாரியோ, வருவாய் அதிகாரியோ, குறிப்பிட்ட தீண்டாமை குற்றங்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாவிட்டால், அதை கடமை தவறியமை என்ற காரணத்திற்க்காக அந்த குறிப்பிட்ட அதிகாரி மற்றும் நீதியரசரை மூன்று ஆண்டு கடுங்காவல் விதித்து தண்டனை தரலாம் எனவும் அந்த சட்டம் கூறுகிறது. அப்படியானால் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சில, பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அத்தைகைய குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும். தலித் என்ற சொற்றொடரை தங்கள் அரசியலுக்கு, அவ்வப்போது பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இதுபோன்ற நிலவும் தலித் பாதுகாப்பு சட்டங்களின் பிரயோகத்தை உற்சாகப்படுத்தாமல் இருப்பது வேதனை தருவதாகும்.
இதில் அடிப்படையான தவறை செபவர்கள் அதிகாரிகளே என்பது கவனிக்கப்படவேண்டும். அதிகாரிகள் ஏன் சம்பந்தப்பட்ட தீண்டாமை வழக்குகளில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்? சமீபத்திய சில நிகழ்வுகளில் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அதாவது காவல்துறையின் பெரிய அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் போன்றோருக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறது என்பதே. இருக்கும் சட்டத்தை படிக்காமல், அதுபற்றிய அக்கறை இல்லாமல், அத்தகைய சட்டங்கள் பற்றிய உணர்வுகள் கொள்ளாமல் எப்படி மாவட்ட நிர்வாகத்தை இவர்கள் வகித்துவருகிரார்கள் என்ற கேள்வி எழுகிறது. முதலில் மேற்கண்ட அதிகாரிகள் இதுபோன்ற குறிப்பிட்ட முக்கியமான சட்டங்களை படிக்கட்டும். அதன் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு சொல்லையும் புரிந்து கொள்ளட்டும். அதை அமுல்படுத்த முயலட்டும். தமிழ்நாட்டு சூழலை பொறுத்தவரை இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தை படித்து அதிகாரிகள் பயன்படுத்தினாலே தமிழ்நாட்டு ஆதிக்க சாதிகள் தங்களது தீண்டாமை செயல்பாடுகளை விட்டுவிடுவார்கள். சட்டத்தின் மூலம் செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல், தலித் எழுச்சி வருகிறதே என்று கவலைப்படும் அதிகாரவர்க்கம், கையில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்த தெரியாமல், சட்ட ஒழுங்கு கெடுவதற்கு வழி செய்வதாக இதிலிருந்து தெரியவருகிறது.. இந்த அதிகாரிகளின் அறியாமையால் இந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு கெடவேண்டுமா?

Sunday, September 19, 2010

ராஜபக்சே வருகிறார். ஐ.நா.வே உஷார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்தவாரம் ஐ.நா.பொதுசபையில் உரையாற்ற போகிறார் என்ற செய்தி உலக தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவுற்ற நாலாம் வன்னி போரில், 50000 நிராயுதபாணியான அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த கொடுஞ்செயலுக்கு, போற்குற்றவாளியாக அறிவிக்கபடவேண்டியவர் என்று மகிந்த மீது உலகத்தமிழர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். சரணடைந்த விடுதலை புலிகளையும் கொலை செய்தவர் என்ற குற்றச்சாட்டு, போர் குற்றங்களிலே பெரியதும், கொடூரமானதுமாக கருதப்படுகிறது. பல்வேறு மனித உரிமை மீறல்களை கூடுதலான குற்றங்களாக செய்தவர் என்ற பொறுப்பும், மகிந்த தலைமையிலான அரசாங்கத்தியே சாரும். போர் காலத்தில், அப்பாவி தமிழ்மக்கள் மீது, பீரங்கி தாக்குதல்களை நடத்தியது, காயம்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் உதவ, மருந்துகளும், சிகிச்சையும் அனுப்பாதது, உணவு கிடைக்க வழியில்லாமல் சாலைகளை தடுத்து, மக்களை பட்டினி போட்டது, போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மகிந்தா அரசாங்கம் செய்தது என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இருக்கிறது.
அப்படி இருக்கும்போது, இப்போது எப்படி போர்க்குற்றவாளி மகிந்தாவை ஐ.நா. சபை வரவேற்கலாம் என்பதே உலக தமிழர்களின் கேள்வி. ஏற்கனவே ஐ.நா. சபையின் மனித உரிமை கழகம், ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முயன்றது. அப்போது இந்திய அரசும், சீன அரசும் அந்த முயற்ச்சியை முறியடித்து, ஐ.நா.மனித உரிமை கழகத்தையே செய;ல்படவிடாமல் செய்து மகிந்தாவை காப்பாற்றியது. ஐ.நா.மனித உரிமை கழகத்தின் தலைவரான நவீன் பிள்ளை, போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க எடுத்துக்கொண்ட அக்கறை, உலக தமிழர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது. அதேபோல உலகத்தமிழர்கள் அமெரிக்காவையும், அதன் புதிய அதிபர் பாரக் ஒபமாவையும் பெரிதும் நம்பி, அவரிடம் ஈழத்தமிழர் பிரச்சனையை முறையிட்டு வந்தார்கள்.அமெரிக்காவும் தனக்கு இருக்கும் இரண்டு முகங்களில் ஒரு முகமான மனித உரிமை முகத்தை மட்டுமே ஈழத்தமிழர்கள் விசயத்திலும் காட்டிவந்தது. அதுநேரம் ராஜபக்சே,மேற்க்கத்தியநாடுகளுக்கு எதிரான ஆள் போல காட்டிக்கொண்டிருந்தார்.
அதுதான் உண்மை என்றால், இப்போது எப்படி இந்த போர்குற்றவாளி, ஐ.நா. செல்ல முடியும்? எப்படி அமெரிக்கா அவரை வரவேற்க முடியும்? உண்மையில் இதுவரை தமிழருக்கு புரியாமல் போனது என்ன? உண்மையில் அமெரிக்காவின் முகம்தான் என்ன? இப்போது விழுந்தடித்து ராஜபக்சேக்கு வரவேற்ப்பு கிடைக்க காரணம் என்ன?
ராஜபக்சேவின் வருகையை ஒட்டி, கனடா நாட்டு தமிழர்கள் இப்போது பெரும் ஆர்ப்பாட்டத்தை, அங்கே உள்ள ஐ.நா. தூதரகம் முன்பு செய்துள்ளார்கள். போர் குற்றவாளி என்றும், இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களை மூடச்சொல்லியும், ஈழத்தமிழர்களை காப்பாற்றச்சொல்லியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை, நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் என்ற கோரிக்கையையும் அவர்கள் அப்போது எழுப்பி உள்ளனர். அத்தகைய கோரிக்கைகளை அவர்கள் ஐ.நா.சபைக்கும், அமெரிக்க அரசிற்கும் கேட்டுள்ளார்கள். அத்தகைய கோரிக்கைகளை, இன்றைய நிலையில் ஐ.நா. சபையை நோக்கித்தான் கேட்கமுடியும். அதனால்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பாகவும் அத்தகைய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளனது. அமெரிக்காவை பொருத்தவரை, தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத சக்திகள் என்று முதலில் முத்திரை குத்தியதற்க்கான பொறுப்பு கொண்டவர்கள். அதேசமயம் அமெரிக்க முதலாளிகளின் நிறுவனங்கள் , தங்களது சாவு வியாபாரம் நடக்கவேண்டும் என்பதற்காக, உலகின் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் ஆயதங்களை விற்க தயார் என்பதை நடைமுறைபடுத்துபவர்கள். அவ்வாறு ஆயுதங்களை விற்ப்பதில் அவர்கள் புலிகளுக்கு விற்பதற்கும் என்றும் தயங்கியதில்லை. ஆகவே அமெரிக்காவை புரிந்துகொள்ளவேண்டும் எனபதுதான் நமக்கு முன்னால் உள்ள விஷயம்.
ஈழத்தமிழரின் சுய-நிர்ணய உரிமை போராட்டத்தை நேரடியாக அமெரிக்கா ஆதரிக்காதபோதும், ராஜபக்சே அரசு மேற்க்கத்திய நாடுகளை தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் தலையிடவிடமாட்டோமென பகிரங்கமாக அறிவித்து வந்தது., அது இலங்கை அரசின் திட்டமான அருகாமை நாடுகளை அதாவது அருகாமை நாட்டு அரசுகளை சார்ந்து தனது சிங்கள பௌத்த அரசை நடத்துவது என்ற எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்ப்பட்ட தந்திரமாகவே தெரிகிறது. அதற்காக மகிந்தா அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய அரசுகளின் உதவியுடன் செயல்படுவதே அதன் செயல்தந்திரமாகும். , இந்திய அரசு , தனக்கு சமமாக சீனாவையும், பாகிஸ்தானையும் வைப்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது இந்த செயல்தந்திரத்தில் மகிந்தா அரசுக்கு வசதியாகபோய்விட்டது. அதனால் இந்திய அரசுக்கும், சீன அரசுக்கும் உள்ள முரண்பாடுகளையும், இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் உள்ள வேறுபாடுகளையும் மகிந்தா அரசு சரியாக பயன்படுத்தி கையாள தொடங்கியது. அதுவே வடக்கே மன்னார் கடற்கரையில், இந்திய அரசுக்கு 100 ஏக்கர் கொடுத்தால், சீன அரசுக்கும் 100 ஏக்கர் கொடுப்பது, அம்பந்தோட்டா கரையை சீனாவிற்கு துறைமுகம் கட்ட கொடுத்தால், அதன்மூலம் அருகே இந்தியாவில் உள்ள துறைமுகங்களுக்கு போட்டியாக சீன துறைமுகத்தை நிறுத்துவது, ரயில்வே பாதை போட இந்தியாவிற்கு கொடுத்தால், முல்லைதீவு கடற்கரையை மீன் பிடிக்க சீனாவிற்கு ஏலத்திற்கு விடுவது, இப்படியாக சீனாவையும், இந்தியாவையும் எதிர்,எதிராக நிறுத்தி அதன்மூலம் தனது காரியங்களை சாதித்துக்கொள்வது மகிந்தாவின் பாணியாக மாறிவிட்டது.
அதேபோல மகிந்தா பாகிஸ்தானையும், இந்தியாவையும் உள்ளே அனுமதித்து அதன்மூலமும் லாபம் பெற்றார். அப்படி செய்யும்போது ஏற்ப்பட்ட முரண்பாட்டில்தான், சேலை வியாபாரிகள் போல வந்த இந்திய அரசின் உளவு ஒற்றர்களை பாகிஸ்தான் உளவு ஒற்றர்கள் மட்டக்கிளப்பில் கொன்றுவிட்டார்கள் என்பதற்காக, லாகூர் தாக்குதலை இந்திய ஒற்றர்கள் செய்த செய்தி வெளிவந்தது. அதன்மூலம் இலங்கை--பாகிஸ்தான் உறவை கெடுக்கலாம் என இந்திய ஒற்றர்கள் திட்டமிட்டால் அது எதிரிடையாக சென்று விட்டது.
இப்போது மட்டக்கிளப்பில் நடந்த சீன கண்டைனர் வெடிப்பிலும் இதே கரங்கள் இருக்க வாய்ப்பு தெரிகிறது. ஏற்க்கனவே அந்த வட்டாரத்தில் ஒரு ராமு படை என்று போலி விடுதலை புலி படையை வைத்திருப்பதில் இந்திய ஒற்றர்கள் பெயர்பெற்றுள்ளனர். அதேபோல கிழக்கு பகுதியின் முதல்வர் பிள்ளையன் இந்திய அரசின் செல்லப்பிள்ளையாக இருப்பதால்தான் உயிருடன் கருணா குழு அவரை விட்டுவைக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மை இருக்கிறது. பிள்ளையன் ஆட்சிக்கு வருவதற்காக, சில குழுக்களுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டதும் வெளியே தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையுடன் மட்டுமின்றி, ஈரான் நாட்டுடனும் நல்லுறவை ராஜபக்சே அரசு வைத்துக்கொண்டுள்ளது. ஈரான் அதிபர் கொழும்பு வந்ததும், அவருடன் ராஜபக்சே இருக்கும் விளம்பர பலகைகள் கொழும்பில் பிரபலமாக இருந்ததும் வன்னி போர் நேரத்திலேயே நடந்தது. இது அமெரிக்காவால் ரசிக்க முடியாத செய்தி. ஆனாலும் இப்போது அமெரிக்கா எப்படி ராஜபக்சேவை ஏற்றுக்கொள்கிறது?
அதற்கும் இன்றைய இந்திய அரசே காரணம்.. அதாவது அமெரிக்காவிற்கு தன்னால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்பது தெரியும். அதேசமயம் ஆசியாவில், குறிப்பாக தெற்காசியாவில் சீனா செல்வாக்கு பெறுவது எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு ஆபத்தாக முடியும். ஆகவே சீனா செல்வாக்கு இலங்கையில் பெருகுவதை தடுக்க ஒரே வழி, அதற்கு பிராந்திய போட்டியாளராக உள்ள இந்தியாவை வலுப்படுத்துவதாலேயே முடியும் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால்தான் வன்னி போர் முடிவுக்கு பின், அமெரிக்க தலைவர்கள் தங்களது அறிக்கைகளில், தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியா மூலம் கண்காணித்து, இலங்கை பிரச்சனையில் தலையிட்டு வருகிறோம் என்று கூறினார்கள். அதேபோல இலங்கைக்கு அமெரிக்க பிரதிநிதியை அனுப்பி தங்கள் ஆதரவை ராஜபக்சேவுக்கு தெரிவித்தனர்.
இப்போது சிங்கள எதிர்க்கட்சி உட்பட எல்லோரும் ராஜபக்சே அரசுக்கு எதிராக புதியதோர் அரசியல் போராட்டத்தை எடுத்துவருகின்றனர். மீண்டும் சட்டத்தை வளைத்து மூன்றாவது முறையும் அதிபரே ஆட்சியாளர்களாக தொடர்வதற்கான புதிய சட்ட திருத்தத்தை சிங்க பொதுமக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். அதை ஜனநாயகம் கருதியாவது இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஆதரிக்கவேண்டுமல்லவா? அதை அவர்கள் செய்ய வில்லை.
ஆகவே இந்திய அரசின் வழியை எடுத்து ராஜபக்சே அரசுடன் சமரசபோக்குக்கு அமெரிக்க அரசு போய்விட்டதையே அது காட்டுகிறது.ஐ.நா.வை வளைத்து ராஜபக்சே அரசுக்கு சாதகமாக நிலை எடுக்கவைக்க அமெரிக்க அரசால் முடியும். அதுவே இந்திய அரசின் நிலைப்பாடாகவும் இருக்கும்.
ஆனால் உலக தமிழர்கள் இப்போது அரசியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் இந்த ஆயுதம் தாங்கிய அரசுகளின் மனித தன்மையற்ற கொள்கைகளை புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து போர் குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை தொடர்ந்தது எடுத்து செல்வார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். ஏன் என்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர் கூட்டம் இப்போது ஒரே கோரிக்கையுடன் எழுந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் எதிரொலி கேட்டே தீரும்.

Friday, September 17, 2010

கல்வியை வணிகமாக ஆக்கலாமா?

கல்வி வியாபாரம்தான் களை கட்டி இப்போது பறக்கிறது. தமிழ்நாட்டில் இன்று அது ஒரு பெரிய வில்லங்கமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கோவிந்தராஜன் ஆணைய அறிக்கை, நிறுவப்பட்ட நிறுவனங்களாக இயங்கிவரும், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முதலாளிகளது பெரும் எதிர்ப்பை கிளப்பியது. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களது முதல் நடவடிக்கை, பள்ளிகளை இந்த ஆண்டு திறக்காமல், அரசை நிர்ப்பந்தித்து தங்கள் மீது எந்த ஒரு கட்டுப்பாட்டையும், கல்வி கட்டணம் விசயத்தில் அரசு விதிக்கக்கூடாது என்பதான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கோவிந்தராஜன் ஆணையம் தனது ஆய்வின் மூலம், 10 934 சுய-நிதி பள்ளிகளுக்கு, கல்வி கட்டண கட்டமைப்பை நிர்ணயித்தது. அந்த ஆய்வு அறிக்கையை சட்டமன்றத்தில் பள்ளி கல்வி அமைச்சர் வைத்தபிறகே இந்த பிரச்சனை சூடு பிடித்தது. அப்போதுதான் இந்த மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கங்கள் இதை எதிர்க்க தலைப்பட்டனர். அரசு அதற்கு இணங்காத நிலையில் அவர்கள் முதலில் போராட நினைத்தனர். பள்ளிகளை இந்த ஆண்டு வழக்கமாக திறக்கும் காலத்தில் திறக்கவில்லை. அரசிடம் இருந்து தங்கள் பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்ற வழிகாட்டல் வரவில்லை என்றும், வந்த பின்தான் திறக்கமுடியும் என்றும் முதலில் கூறினார். பிறகு திறந்தனர். அப்போது ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு குறைவான அளவில் கட்டணங்களை பெற்று சேர்த்துக்கொண்டனர். அதேசமயம் இந்த கல்வி முதலாளிகள் நீதிமன்ற படிக்கட்டுகளையே முழுவதும் நம்பி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இந்த குறைந்த கட்டண விகிதத்தில் சேர்த்துவிட்டனர். இப்போது நீதிமன்ற உத்தரவு வந்து விட்டது.
இந்த ஒய்வு பெற்ற நீதியரசர் கோவிந்தராசன் ஆணையம், 2009 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பள்ளிகள்[ கட்டண திரட்டல் விதிகள் ஒழுங்குபடுத்தல்] என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அது 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -7 ஆம் நாள் அமுலுக்குவந்தது. அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு டிசம்பர்--7 ஆம் நாள் அதற்க்கான விதிகள் தயாரிக்கப்பட்டன. அது சட்டமாக ஆக்கப்பட்ட உடனேயே எல்லா 10934 பள்ளிகளுக்கும் ஒரு கேள்வித்தாள் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த பள்ளிகளில் சுய-நிதி பள்ளிகளான சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அனைத்து பள்ளிகளும் அடங்கும். 41 பத்திகளைக்கொண்டதாக அந்த கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு 10238 பள்ளிகள்தான் பதில் அனுப்பியிருந்தன. இப்போது இந்த கல்வி வியாபாரிகளின் வழக்கில், அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை நீதியரசர் வாசுகி வழங்கியுள்ளார். ஆகஸ்ட்--11 ஆம் நாள் அரசு வெளியிட்ட ஊடக செய்தியையும் இந்த நீதியரசர் தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். அந்த ஊடக வெளியீட்டில், மேற்குறிப்பிடப்பட்ட கோவிந்தராஜன் ஆணைய வழிகாட்டல்படியான கல்வி கட்டண கட்டமைப்பை இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்கவேண்டும் என்று இருந்தது. அதுமாத்திரமின்றி அந்த நீதியரசர் தனது தீர்ப்பில், கோவிந்தராஜன் ஆணையம் பற்றியும் கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது அந்த ஆணையம் ஆறு உறுப்பினர்களை கொண்டது என்றும், அவர்கள் மட்டுமே எந்த சார்டெட் அக்கவுண்டும் இல்லாமல் , இந்த கட்டண கட்டமைப்பை எல்லா விவரங்களையும் பார்த்து ஒருமாத காலத்திற்குள் சிறப்பாக செய்யமுடியாது என்றும் கருத்து கூறியுள்ளார். இவ்வாறு ஆணையத்தின் அதாவது ஒரு ஓய்வு பெற்ற நீதியரசரின் செயல்பாட்டை, அமர்வு நீதியரசர் விமர்சன ரீதியாக கருத்து சொல்வது என்பது பொதுவாக நடப்பது இல்லை. ஆனால் இங்கே அது நடந்துள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு அரசை விட, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் சங்கங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது போல தெரிகிறது. இந்திய அரசும், தமிழ் நாடு அரசும் இதுவரை கடைப்பிடித்து வந்த கல்வி கொள்கைகளினால்தான், இத்தகைய சுய-நிதி பள்ளிகள் நாடெங்கும் புற்றீசல் என பெருகி விட்டன. இப்போது அந்த பள்ளிகளே அரசை எதிர்த்து நிற்கும் அளவுக்கும், அரசை எதிர்த்து, நீதிமன்ற தீர்ப்பை பெரும் அளவுக்கும், பெரிய அதிகாரமாக ஆகிவிட்டன. தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு செல்லப்போகிறது என்பது பெற்றோர்கள் மனங்களுக்கு ஒருபுறம் ஆறுதல் செய்தி. ஆனால் இன்று பெற்றோர்கள் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
உலக அரங்கில் இந்த விவகாரமான கல்வியை தனியார் கைகளில் ஒப்படைக்கலாமா என்ற கேள்வி பல நாட்களாகவே பெரும் சர்ச்சையாக இருக்கிறது. அதைப்பற்றி புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. தனியார்மயப்படுத்தல் என்பது கல்வியைப்பொருத்தவரை ஜனநாயக நடைமுறை போல தோற்றம் அளிக்கலாம். அதாவது திறமையும், போட்டியும் கல்வியை கற்றுத்தரும் தரத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் தனியார் என்பது லாபம் தேடும் முயற்சி என்பதால் அவர்களின் லாப நோக்கு அங்கே முக்கியமான நிபந்தனையாக நிற்கிறது. அதன் விளைவு இப்போது தமிழ்நாட்டில் பாதிப்பை எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளி வாசல்களிலும் அதை பார்க்க முடிகிறது. அங்கே தாய்மார்கள் புலம்பிக்கொண்டிருப்பதை கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. அதாவது இந்த தாய்மார்கள் கோவிந்தராஜன் ஆணைய அறிவிப்புக்கு பின், நிம்மதியாக பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தனர். இந்த ஆண்டிற்கான கட்டண விகிதம் அரசு அறிவித்ததுபோலத்தான் வாங்கவேண்டும் என்று அறிவித்தபின் வேறு வழியில்லாமல், மேற்கண்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் குறைவான அளவில் பள்ளி நிர்வாகம் கட்டணங்களை பெற்றது.
இப்போது நீதிமன்ற ஆணை வந்ததை ஒட்டி இதே பள்ளி நிர்வாகங்கள், பிள்ளைகளின் பெற்றோரை அழைத்து நீங்கள் இன்னொரு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்,. இது நடுத்தர, மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களில் உள்ள தாய்மார்களுக்கும், தந்தைமார்களுக்கும் இயலாத காரியமாக இருக்கிறது. தங்கள் வரவுக்கு ஏற்றபடி அவர்கள் முதலில் பள்ளிகள் கூறிய கட்டணங்களை கட்டினார்கள். இப்போது நீதிமன்ற தீர்ப்பு அவர்களை இப்படி புதிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்குமானால் , பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிவரும். . அதாவது அரசாங்கம் எடுக்கும் கல்வி பற்றிய முடிவு பெற்றோர்களை வம்புக்கு இழுத்து, அலையவிட்டு, தவிக்கவிடுவதாக இருக்கிறதா என்ற கேள்வி அந்த பெற்றோர்கள் மனங்களில் உருவாவது நல்லதல்ல என்பதுமட்டும் நமக்கு புரிகிறது

பெரியார் பிறந்த நாளில் ......

தலை குனிய வேண்டாம்
பணக்காரர் முன்னால்.....
தலை குனிய வேண்டாம்
ஆதிக்க சாதி முன்பு......
தலை குனிய வேண்டாம்
அரசியல்வாதிகளை கண்டு.
தலை குனியவேண்டாம்
காவல்துறையை கண்டதும்
தலைகுனியாதீர்.. அதிகாரம்
கொண்டவர் கண்டு.......
தலைகுனியுங்கள் தவறு
செய்தோம் என்றால்......
தலை குனியுங்கள்....
குனிந்து கீழே உள்ளவரை
தூக்கிவிட........
இன்றுமட்டுமல்ல உறுதி
எடுப்போம் என்றும்...

Thursday, September 16, 2010

பயங்கரவாதம், பயங்கரவாத துணையுடன் பல்லிளிக்கிறது

.
பயங்கரவாதம் என்றால் என்ன என்று இந்த உலகம் இப்போது புரிந்துகொள்ளுமா? பயங்கரவாதத்திற்கு எத்தனை முகம்? விடுதலை போர்களை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தினார்களே? தேசிய இன விடுதலை போர்கள் மக்கள் சார்பு போர்கள்தானே? மக்கள் சார்பு போர்கள் எப்படி பயங்கரவாதமாக ஆகமுடியும்? இந்த கும்பல்கள் பகத்சிங் பயங்கரவாதி என்று இந்திய சுதந்திர போர் நேரத்தில் கூறியவர்கள்தானே? அடுத்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மக்கள்சார்பாக படை அமைத்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதை, ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு பயங்கரவாதி என்றும், வன்முறையாளர் என்றும் கூறியவரின் வாரிசுகள்தானே? ஈராக் நாட்டை ஆண்டுவந்த சதாம் ஹுசைனை கவிழ்ப்பதற்காக பலமுறை படையெடுத்தும், அருகில் உள்ள நாடுகள் மூலம் சதி செய்தும் வெற்றிபெறாத நிலையில், அமெரிக்க அரசு தனது நேட்டோ அணி நாடுகளை சேர்த்துக்கொண்டு, சதாமை பயங்கரவாதத்திற்கு துணை செல்பவர் என்றும், பயங்கரவாத ஆயுதங்களான பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்றும் பொய் கூறி அதற்காக ஐ.நா.வை சாட்சிக்கு இழுத்து அதன்மூலமும் நிரூபணம் ஆகவில்லை என்று தெரிந்தபின்னால், நேரடியாக படை எடுத்து ஈராக்கை ஆக்கிரமித்தது. இவ்வாறு பயங்கரவாதம் என்ற பெயர், உலகை ஆளும் பெரும் வல்லரசுகளால் யார் மீதெல்லாம் முத்திரையாக குத்தப்படுகிறதோ, அவர்கள் நியாயமான போராட்டவாதிகளாக இருப்பார்கள் என்பதற்கு பல வரலாற்று முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
ஆனால் மேற்கண்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் ஈடுபட்ட ஆங்கிலேய, மற்றும் அமெரிக்க சக்திகளும் அவர்களுக்கு துணை செல்பவர்களும்தான் உண்மையான பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள் என்பது கண்கூடு.
இந்திய சுதந்திர போர் உதாரணம் போல, ஈராக் மீது நடத்தப்பட்ட போர் போல, அனைத்து இடங்களிலும் ஆதிக்க சக்திகளுக்கும், விடுதலைக்கு போரிடும் சக்திகளுக்கும், நடக்கும் கருத்து போரில் விடுதலை சக்திகள் தங்களது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தும்போதெல்லாம், ஆதிக்க சக்திகளுக்கு விடுதலை வீரர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதை தவிர வேறு வழி இல்லை. அமைப்பாக்கப்பட்ட வன்முறை கருவியை கையில் வைத்திருக்கும் இந்த ஆதிக்க சக்திகள் , உரிமை கோரும் ஒவ்வொரு இனத்தின் மீதும் வன்முறையை, கட்டவிழ்த்துவிடுகின்றன. அத்தகைய வன்முறைகளில் பல நிராயுதபாணியான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது பலியாகிறார்கள். அவ்வாறு வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் சக்திகளாக ராணுவமோ, காவல்துறையோ இருக்கிறது. அவ்வாறு நடக்கும் போதெல்லாம் அததகைய வன்முறை செய்த சக்திகளை, யாரும் பயங்கரவாதிகள் என்று அழைக்க மாட்டேன் என்கிறார்கள். அத்தகைய வன்முறைகளை, அதாவது நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை பயங்கரவாதம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?
அதுவே விடுதலை அமைப்புகளால் நடத்தப்படும் தாக்குதல்களில் நடைபெறுமானால், அதை உடனே பயங்கரவாத நடவடிக்கை என்றும், அதில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்றும் அழைக்கிறார்கள். அதுவே பகத்சிங் நடத்திய நாடாளுமன்ற தாக்குதலை வைத்து அவரை ஆங்கிலேயர் முத்திரை குத்துவதற்கு ஏதுவாக போய்விட்டது. அதுவே நேதாஜி விசயத்திலும் அவர் கட்டிய ஆயுதம் தாங்கிய கட்டுப்பாடுள்ள படைவரிசையை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்களும், காங்கிரஸ்காரர்களும் அவரை பயங்கரவாத தலைவர் என்பதாகவே அழைத்து, நேதாஜி போஸ் இந்தியாவிற்குள் எப்போது நுழைந்தாலும் காங்கிரஸ் அரசு அவரை பிடித்து ஆங்கிலேயர் வசம் ஒப்படைப்பது என்று கூறினார்கள் அதே பகத்சிங்கும், சுபாஷ்போசும், இன்று இந்திய மக்களால் மாபெரும் தேசிய சுதந்திர போராட்ட வீரர்களாக மதிக்கப்படவில்லையா?
இதே நிலைதான் அருகாமை நாடான இலங்கையில், சிறுபான்மை தமிழ் தேசிய இனம் தனது விடுதலைக்காக போராடும்போது, அனைத்து தமிழ் தேச விடுதலை இயக்கங்களையும், பயங்கரவாதிகள் என்பதுபோல சித்தரித்தது இலங்கை அரசு. இன்று இந்திய மற்றும் இலங்கை அரசுடன் நட்பு கொண்டு அலையும் சில அமைப்புகளை, அந்த நேரம் அதாவது அந்த அமைப்புகள் ஆயுதம் தாங்கிய புரட்சியை முன்னெடுத்த நேரத்தில் என்ன கூறின? அதாவது ந.பா.என்ற பத்மனாபா தலைமையில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப்.என்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பு, தமிழீழத்திற்க்காக போராடுவது மட்டுமின்றி, தெற்க்கே இருந்த சிங்கள புரட்சியாளர்களைக்கொண்ட, ஜனதா சங்க மேவா என்ற ரகசிய அமைப்புடன் சதி செய்து இலங்கை அரசை கவிழ்க்க ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்த திட்டமிட்டார்கள் என்று சதித்திட்ட வழக்கை அந்த தலைமையின் மீது போடவில்லையா? அதற்கு இந்தியாவில் அப்போது இருந்த நக்சல்பாரி அமைப்பான விநோத்மிஸ்ரா தலைமையிலான சி.பி.ஐ.[எம்.எல்.] உடன் சேர்ந்து சதி செய்ததாக வழக்கு போட்டதே? அதை எந்தவரிசையில் சேர்ப்பது? அதேபோல உமா மகேஸ்வரன் என்ற முகுந்தன் தலைமயிலான பிளாட் அமைப்புடன் சேர்ந்து ஜனதா சங்க மேவா அமைப்பினரும், இந்தியாவின் வினோத் மிஸ்ரா அமைப்பை சேர்ந்தவர்களும் சதி செய்து இலங்கை அரசை கவிழ்க்க ஏற்பாடு செய்ததாக இன்னொரு வழக்கை, இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் அமுலில் இருக்கும்போது போடவில்லையா? இப்போது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கேயும், இங்கேயும் தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டதால் பயங்கரவாத பட்டியலில் இல்லாமல் போகவில்லையா?
அப்படியானால் ஆள்வோரை ஆதரித்தாலோ, ஆள்வோரின் தேர்தல் பாதையை ஆதரித்தாலோ ஒருவர் அல்லது ஒரு அமைப்பு பயங்கரவாதி என்ற முத்திரையிலிருந்து மாறி, ஜனநாயகவாதிகளாக ஆகிவிடுகிறார்கள். தொடங்கிய நிலையிலேயே கொள்கையில் உறுதியாக இருந்துவிட்டால் அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதை அரசும், ஆதிக்கவாதிகளும், அவர்கள் கைகளில் இருக்கும் ஊடகங்களும் சொல்லிக்கொண்டே இருக்கும். இதுதானே இந்த வரலாறுகள் காட்டும் உண்மை?
அத்தகைய வரலாற்றில்தான், பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாதிகள் என்ற முத்திரை பெற்றுள்ளது. முதலில் உலகம் முழுவதும் பெரிய பயங்கரவாத நாடாக இருக்கும், பயங்கரவாதத்தை கண்டம் விட்டு கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்காதான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியது. பிறகு அதை ஐரோப்பிய நாடுகளை பின்பற்ற சொன்னது. அவர்களும் அவ்வாறே அறிவித்தார்கள். அதன்பிறகு இந்தியா போன்ற அமெரிக்காவின் நேசநாடுகளை அவ்வாறு அழைக்கசொன்னது. இவர்களும் அதையே பின்பற்றினார்கள். அதற்கு அவர்கள் சொல்லிய காரணம், கரும்புலிகள் கண்டு அவர்களுக்கு ஏற்ப்பட்ட பயம் என்பதுதான்.
அதையேதான் ஈராக்கின் சதாம் ஹுசைன் விசயத்திலும் சொன்னார்கள். ஏன் என்றால் கருப்பு செப்டம்பர் என்ற பெயரில் முதலில் அரபு நாடுகளில் இருந்த பாலஸ்தீன புரட்சியாளர்கள், மனித வெடிகுண்டுகளாக மாறி எதிரியின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்கினார்கள். அவர்களது தாக்குதல் அத்தோடு நிற்காமல், உலகின் முக்கிய விளையாட்டு போட்டிகளிலும், முக்கிய விமான தளங்களிலும், எதிரொலித்தது. அத்தகைய தாக்குதல்களால் மட்டுமே பாலஸ்தீன விடுதலை போராளிகளின் தியாக உணர்வையும், வீரத்தையும் உலகம் காண முடிந்தது. அதுவேதான் விடுதலை புலிகள் விசயத்திலும் உணமையாக இருந்தது. ஆகவே பாலஸ்தீன புரட்சியாளர்களின் மனிதவெடிகுண்டு தாக்குதல்களை, ஈராக்கின் சதாம் ஆதரித்தார் என்றும், அதற்கு ஏற்ப்பாடு செய்தார் என்றும் அவர் மீது அமெரிக்க போன்ற நாடுகள் குற்றம் சுமத்தி அவரை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முனைந்தனர்.
அதேநிலைதான் பிரபாகரனுக்கும் ஈழ விடுதலை போராட்டத்தில் நடந்துள்ளது. நேத்தாஜியை பின்பற்றுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பிரபாகரன், அகவே அவருக்கு அவ்வாறு முத்திரை விழுந்தததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். ஆனால் இன்று உணமையான பயங்கரவாதிகள் யார் என்பது தெரிய வருகிறது.
சமீபத்தில் பூனா என்ற இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் நகரத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கைதானார்கள். அவர்கள் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதை இலங்கை அரசு மறுத்தாலும், இந்த அம்பலம் இந்திய அரசை இப்போது ஆட்டிவருகிறது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், வன்னி போர் நடக்கும் காலத்தில் ஒரு புதிய தூதரை நியமித்தது. அவர் யார் என்றால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது தெரிய வந்தது. அவர் மூலம் பயிற்ச்சிகள் சிலருக்கு நடத்தப்பட்டதும் அப்போதே பேசப்பட்டது. இப்போதுதான் அது நிரூபணமாக ஆகியுள்ளது. அவர்கள் அப்போது மட்டக்கிளப்பில் இந்திய வெளிவிவகார உளவுத்துறையான " ரா ".அமைப்பின் ஆட்களை கொலைசெய்ததாகவும், அதற்கு பதில்கொடுக்கவே, இலங்கை-பாக் உறவை உடைக்க இந்திய உளவு அமைப்பு லாகூரில் கிரிக்கட் ஆடவந்த இலங்கை வீரர்களை குண்டுவீசி தாக்க ஏற்பாடு செய்தது என்றும் அப்போது வந்த செய்திகளுக்கு இன்றுவரை தக்க மறுப்பு கிடைக்கவில்லை. இப்படி அவர்கள் தங்கள் தேவைக்கு பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பது இப்போது தெரிய வருகிறது. இன்று அம்பலமாகியுள்ள பாகிஸ்தானின் லஷ்கர் -ஈ-தொய்பாவின் கொழும்பு தள நடவடிக்கையை , முன்னாள் இந்திய அரசின் மத்திய அமைச்சக செயலாளரான பி.ராமன் பகிரங்கமாக அமபலப்படுத்துகிறார்.
ஏற்கனவே ராஜபக்சே அரசு வெள்ளை கொடியுடன் வந்த அதாவது சரணடைந்த விடுதலை புலிகளை சுட்டுகொன்ற பயங்கரவாதிகள் என்பது, உலக நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இப்போது தெற்காசியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக இந்திய, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்க அரசுகளால் முத்திரை குத்தப்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா, ராஜபக்சே அரசுடன் சேர்ந்து தென்தமிழ்நாட்டிலும், அதேசமயம் இந்தியா எங்கணும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது தெள்ளந்தெளிவாக தெரியவந்துள்ளது. விடுதலைக்காக போராடுபவர்கள் நடத்தும் தாக்குதல்களையும், ஆதிக்கவாதிகள் மக்களை கொல்வதற்காக நடத்தும் தாக்குதல்களையும் பிரித்துப்பார்த்து யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காண ஊடகங்களாவது உதவுமா என்பதே நமது கேள்வி. இப்போது சிங்கள பயங்கரவாதம், பாகிஸ்தான் பயங்கரவாதத்துடன் சேர்ந்து பல்லிளிப்பதை பார்க்கமுடிகிறதா?

Wednesday, September 15, 2010

பூவுலகின் நடைமேடைகளை, வானுலகின் நாயகர்கள் ஆக்கிரமிக்கலாமா?

சமீபமாக வெளியாகியுள்ள உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டல், ஒரு ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த உலகில் பூவுலகு என்றும், வானுலகு என்றும் வெவ்வேறு உலகம் இருப்பதாக மத நம்பிக்கை உள்ளவர்கள் கூறி வருகிறார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்கள் பூவுலகை மாத்திரம் நம்பி பேசுவார்கள். ஆனால் இரு சாராரும், பூமி, வானம், காற்று, மேகம், வெளி, இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொள்ளும் பொருள்களில் நடக்கும் அறிவியல் சோதனைகளை இவர்கள் இருவருமே ஏற்றுக்கொள்வார்கள். அதன்விளைவாக பூமி என்பதில் உள்ள நிலம் எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. நிலமும், நீரும், காற்றும் பொதுவாய் கிடக்கு என்ற பழைய பாடல்கூட இப்போது பழுதாய் போய்விட்டது.
தனியார்துறை எல்லா இடங்களையும் நீக்கமற நிரப்பிக்கொண்டு வருகிறது. தனியார் என்றாலே லாப நோக்கம் என்று பொருள். அரசுத்துறை என்றால் மக்களுக்காக என்று பொருள். தனியார்மயம் என்பதை துரிதப்படுத்துவது, உலகம் முழுவதும் உலகமயமாக்கல் மூலம் விதியாக ஆக்கப்பட்டுவிட்டது. நிலத்தை பன்னாட்டு மூலதனக்கூட்டத்திற்கு எடுத்து தாரை வார்ப்பது அரசாங்கத்தின் கொள்கை என்று ஆக்கப்பட்டுவிட்டது. நிலத்தடி நீரையும், கடல் நீரையும் அதேபோல துளை போட்டு எடுக்கவும், குழாய் போட்டு எடுக்கவும் அரசாங்கம் தனியாருக்கு வளர்ச்சி என்ற பெயரில் செய்து கொடுத்துவருகிறது.
அதேபோல நிலத்தின் மீது ஓடும் நீரையும் இப்போது தனியாருக்கு கொடுக்க தொடங்கிவிட்டார்கள் .எப்படி கொடுக்கமுடியும் என்று கேட்பவர்களுக்கு, நதி நீரை, தாமிரபரணி போன்ற நதிகளில் இருந்து குழாய் மூலம், கோகோ கோலா போன்ற நிறுவனங்களுக்கு, கங்கைகொண்டான் போன்ற நெல்லை மாவட்ட வட்டங்களில் கொடுப்பதை மட்டும் எடுத்து சொன்னால் போதாது. ஏன் என்றால் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நதியையே தனியாருக்கு விற்றுவிட்டார்கள். அதை வாங்கிய தனியாரும் நதியில் உள்ள நீர் மட்டுமல்ல, நதி ஓடும் இடங்களில் இருக்கும் அல்லது ஓடும் நிலத்தடி நீரும் எனக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி அதன்மூலம் அந்த வட்டாரத்தில் வாழும் அனைத்து மக்களையும், குறிப்பாக விவசாயிகளை தனது நீரை பயன்படுத்துவதற்க்காக விலை கொடுக்க சொல்கிறாராம். இதுவே தனியார் வசம் அரசு எந்த அளவுக்கு விலை போய்விட்டது என்பதைக்காட்ட போதுமான உதாரணமாக இருக்கும்.
இது இப்படி என்றால் இன்று வானமும் விலை பேசப்படுகிறது. அதாவது வானில் இருக்கும் வெளி இடத்தைத்தான் நமது இணைய தளத்தில், பகுதி, பகுதியாக விற்கிறார்கள். இணையதளம் ஒன்று தொடங்க இருப்பவர், அதற்க்கான தொகையை சம்பந்தப்பட்ட சக்திகளிடம் கட்டுகிறார். அதுதான் வானவெளி இடத்தை விற்ப்பது என்று பொருள். அதேபோல ஸ்பெக்ட்ரம் என்று சொல்லப்படும் கைபேசி இணைப்பு எதிலிருந்து கொடுக்கப்படுகிறது? அதுவும் கூட வான்வெளியில் உள்ள காற்றிலிருந்துதான் கொடுக்கப்படுகிறது. அதாவது விற்கப்படுகிறது.இவ்வாறு அறிவியல் அறிவு இன்று தனியார்மயம் ஆகிவரும் சூழலில், இதையெல்லாம் உலகிற்கு கொடுத்தது என்பதாக இயற்கையை சிலரும், கடவுளை சிலரும் சொல்வார்கள்
அந்த கடவுள் நம்பிக்கை என்பதும்கூட, மக்களால் பொதுவாக ஏற்றுகொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறது. அத்தகைய கடவுள் நம்பிக்கையை அவர், அவர்கள் தாங்கள் சார்ந்து இருக்கும் மதம் சார்ந்து பின்பற்றுகிறார்கள். அவர்கள் பூவுலகு என்பதையும், வானுலகு என்பதையும் பிரித்து பார்க்கிறார்கள். அதேபோல அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதேசமயம் தங்களது கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் ஒழுங்குபடுத்தி செயல்படுத்துவதில் ஒத்துழைக்கிறார்கள். அதாவது அரசாங்கம் எல்லா மதங்களின் வழிபாட்டு தலங்களையும் முறைப்படுத்தி வைக்கிறது. அதை அந்த, அந்த மதம் சார்ந்த மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் ஏன் என்றால் ஒவ்வொரு மதமும் தனது வழிப்பாடு வழியில் பிரிதொரு மதத்தின் நம்பிக்கைகளோ, நம்பிக்கை கொண்ட மக்களோ பாதித்துவிடகூடாது என்பதில் சரியாக இருக்கிறார்கள். நாட்டில் நிலவும் சட்டங்களும், அரசாங்கங்களும் எப்படி சரியாக இருக்கிறார்களோ, அதே போல இந்த மத நம்பிக்கை கொண்ட மக்களும் சரியாகவே இருக்கிறார்கள்.
அதனால்தான் இந்து அறநிலைய துறை என்றும், வக்பு வாரியம் என்றும், கிறித்துவ நிறுவனங்கள் எனவும் ஒவ்வொரு மத நம்பிக்கைகளுக்கும் அரசின் நேரடி அல்லது மறைமுக பார்வையில் உள்ள அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டு, அவையே அது போன்ற வழிபாட்டுதலங்களை கட்டுவது, நடத்துவது, பராமரிப்பது போன்ற காரியங்களை செய்து வருகின்றன. அதேசமயம் அந்த வழிபாட்டுதலங்களை யாராவது புதிதாக தொடங்கினாலும், அதை அரசு ஒழுங்கு செய்து மற்றவர்களுக்கு அதனால் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்கிறது இது மத நம்பிக்கை கொண்டவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை அரசு ஒழுங்குபடுத்துவது என்பதே. ஆனால் அதையும் தாண்டி இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. அதாவது மக்களது அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு இந்த வழிபாட்டுதலங்கள் தடையாக இருக்ககூடாது. அதுதான் இப்போது பிரச்சனை.
மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக நடத்தத்தான் கடவுளையும், மதங்களையும் பின்பற்றுகின்றனர். அப்படி இருக்கையில் மக்களது நிகழ்கால வாழ்க்கைக்கே இந்த வழிபாட்டு தலங்கள் தடைகளாக வரலாமா? இந்த கேள்வி உச்சநீதிமன்றத்தால் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு வழக்கு உச்சநீதிமன்ற படிக்கட்டுகளை எட்டிஉள்ளது. அது பொது இடங்களில் வழிபாட்டுதலங்களை வைத்து அதன்மூலம் மக்களது அன்றாட வாழ்க்கைக்கு தடை செய்யும் விதத்தில் இருக்கக்கூடாது என்பதே அந்த வழக்கின் நோக்கம்.
2010 ஆம் ஆண்டு ஜூலை-27 ஆம் நாள் இந்த வழக்கின் விசாரணையின் கடைசி நாள் வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் இத்தகைய வழிபாட்டுத்தலங்கள் சட்டவிரோதமாக ஏற்ப்படுத்தபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டது. பொது இடங்களில் இருப்பதால் அவை சட்ட-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகின்றன என்றும் ஒப்புக்கொண்டது. எந்த புதிய தேவாலயமோ, கோவிலோ,மசூதியோ, குருத்துவாராவோ இதுபோல அனுமதியின்றி வரக்கூடாது என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அப்போது உச்சநீதிமன்றம் கூறியது. அதற்கு வட்டார அதிகாரிகள்தான் பொறுப்பு என்றும் அறிவித்தது.நான்கு வாரங்களுக்குள் இதுபோன்ற வாக்குறுதியை அரசுகள் தரவேண்டும் என்றும் அறிவித்தது. அதற்கு அரசாங்க வழக்கறிஞர் அரசு இது பற்றி உடனடியாக அனைத்து மாநிலங்களின் ஒத்த கருத்தை உருவாக்கும் என்று கூறினார். உச்சநீதிமன்ற அமர்வு இந்த வழக்கை செப்டம்பர் மாதம் எடுத்துக்கொள்ள முடிவு செய்தது.

இப்போது இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு, சட்ட விரோத வழிபாட்டுத்தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க இரண்டு வாரம் கெடு கொடுத்துள்ளது. சட்டவிரோத கட்டிடங்களை மத்தியபிரதேசம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, திரிபுரா, ஹிமாச்சல் பிரதேஷ், கோவா, டில்லி, மற்றும் சிறிய மாநிலங்கள் என்பதாக இந்த வழக்கு வரிசைப்படுத்துகிறது. அதில் தமிழ்நாடு 77453 என்ற எண்ணிக்கையில் சட்டவிரோத கட்டிடங்களை கொண்டுள்ளது எனவும், அதுதான் இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையை கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அடுத்ததாக 58253 என்ற எண்ணிக்கையிலும், அடுத்ததாக மத்தியபிரதேசம் 51624 என்ற எண்ணிக்கையில் பொது இடங்களில் சட்டவிரோத கட்டிடங்களை, வழிபாட்டுத்தலங்கள் என்ற பெயரில் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல மகாராஷ்டிரா 17385 என்றும், குஜராத் 15000 என்றும், கர்நாடகா 2814 என்றும், டில்லி 52 என்றும் சட்டவிரோத வழிபாட்டுத்தலங்கள் கணக்கு வெளியாகி உள்ளது. சிக்கிம், மிசாரம், நாகலாந்து ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அப்படி சட்டவிரோத கட்டிடங்களே இல்லை என அறிவித்துள்ளன. நமது கேள்வி இதை மாநில அரசுகள் எப்படி அமுல்படுத்த போகின்றன? என்பதே.
ஏன் என்றால் ஒவ்வொரு நடமேடையிலும் இதுபோன்ற தலங்கள் கட்டப்பட்டு பல பூசைகளும் தினசரி நடந்து வருகின்றன. அதனால் மக்கள் நடந்து செல்வதற்க்கே கூட வழி இல்லாமல் போய் விடுகிறது. இதுவே நடந்து செல்லும் நடைபாதைவாசிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லவேண்டிய கட்டாயம் வருகிறது. அதனால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. நடைமேடைகள் ஒவ்வொரு சாலையிலும் அடிப்படியான தேவை. ஆகவே அனைத்து பொது சிந்தனை உள்ளோரும் இதை ஒரு மதவிரோத அல்லது கடவுள் விரோத நடவடிக்கை என்று பார்க்காமல், இது மக்கள் வாழ்க்கைக்கு அன்றாடம் கட்டாயமான தேவை என்பதை உணர்வார்களா? அரசுகளும் இதை கட்சி பார்வையிலோ, மத சார்பு பார்வையிலோ பார்க்காமல் நடவடிக்கையை துரிதப்படுத்தி, நடைமேடை வாசிகளுக்கு உதவுவார்களா?

Tuesday, September 14, 2010

கார்பரேட்களின் நாடா இது?--அருந்ததி,பினாயக் கேள்வி.

கார்பரேட்களின் நாடா இது?--அருந்ததி,பினாயக் கேள்வி.
மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் யாருக்கு லாபமாக போனாலும், போகாவிட்டாலும், ஒரு உண்மையை அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதுதான் இந்திய நாட்டை ஆள்வது யார் என்ற கேள்வி. கார்பரேட்கள் என்ற அந்நிய பெருவணிக குழுமங்கள் இந்திய நாட்டை ஆள்கின்றனவா என்ற விவாதம் இன்று ஆங்கில காட்சி ஊடகங்களின் அன்றாட அம்பலப்படுத்தலாக ஆகிவிட்டது. அதேசமயம் சென்னை வந்திருந்த டாக்டர் பினாயக் சென் சில செய்திகளை இரண்டு வாரங்களுக்கு முன்பு சொல்லிச்சென்றார். அதாவது சட்டிஸ்கரில் நடந்து வருகின்ற வன்முறைகள், அது துணை ராணுவத்தின் மற்றும் காவல்துறையின் வன்முறையானாலும், மாவோவாதிகளின் வன்முறையானாலும் எங்கிருந்து தொடங்கியது என்று எடுத்து சொன்னார். இப்போது அரசாங்கத்தால் அதிகமாக பேசப்படும் பொதுவிநியோக முறையை விட முக்கியமானது உணவு பாதுகாப்பு. உணவு பாதுகாப்பு என்பது வெறும் உணவுப்பொருள்களை சேமிப்பு கிடங்கில் சேர்த்து வைப்பதுதான் என்று பார்க்கும் பார்வை இன்று பரவிக்கிடக்கிறது. அதையே உச்சநீதிமன்றமும், நாட்டின் பிரதமரும் பொருள் கொள்கிறார்கள். உச்சநீதிமன்றம் சேமிப்பில் இருக்கும் உணவு பொருள்களை வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக கொடு என்றது. அதை பிரதமர் மன்மோகன் முடியாது என்றார். அதாவது எதற்க்காக மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். வறுமையில் வாடும் மக்கள் வேலை செய்ய மறுப்பவர்களா? அவர்களுக்கு அரசு வேலை கொடுக்காமல் இருப்பதால் வறுமையில் இருக்கிறார்களா? அவர்களுக்கு இந்த வேளைபசிக்கு,சேமிப்பில் இருக்கும் உணவை எடுத்து கொடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? அடுத்தவேளை உணவுக்கு என்ன உத்திரவாதத்தை உச்சநீதிமன்றம் சொல்கிறது? இப்போது பசிக்கு சேமிப்பில் இருக்கும் உணவை கொடுக்க மறுக்கும் பிரதமர் மன்மோகன், அந்த வறுமையில் உழலும் மக்களுக்கு என்ன பதில் சொல்கிறார்? ஏற்கனவே இந்தமுறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், இதே மன்மோகன் தொடர்ந்து பல மாநாடுகளை நடத்தி, இந்தமுறை நமது நாட்டில் பெரும் பஞ்சம் வரப்போகிறது என்றும் அதை எப்படி சந்திப்பது என்றும் பேசினார். அவரது முதல் நூறு நாட்கள் இப்படிப்பட்ட பஞ்சம் பற்றி பேசும் மாநாடுகள் மட்டுமே நடந்தன என்பதை இப்போது நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். அதில் மாபெரும் அறிவாளிகளான மன்மோகனும், திட்டக்குழு துணைத்தலைவரான மான்டெக் அலுவாலியாவும் ஒரே தீர்வை திரும்ப, திரும்ப பேசினர். அதுதான் ஆண்டுக்கு நூறு நாள் கொடுக்கப்படும், தேசிய ஊரக வேலை உறுதி சட்டம். அந்த சட்டத்தின் மூலமே அனைத்து வேலையில்லா பிரச்சனையையும், மற்றும் வறுமை பிரச்சனையையும் தீர்த்துவிடலாம் என்று பேசினார்கள். அப்படி தீராததால் இப்போது வேறு வழிகளை பேசுகிறார்கள். ஆனால் வெறும் மழை இல்லாததால் மட்டுமே இந்த வறுமை என்பதும், பஞ்சம் என்பதும் வந்துள்ளதா? இந்த கேள்விகளுக்கு பினாயக் சென் பதில் சொல்கிறார்.
அதாவது சட்டிஸ்கரில் உள்ள தெற்கு பாஸ்டர் மாவட்டத்தில், 650 கிராமங்களில் உள்ள பழங்குடி மக்களை, கார்பரேட்களின் ஆக்கிரமிப்புகளுக்காக, இடம் பெயர்தலை பலாத்காரமாக அரசு செய்துள்ளது. அவ்வாறு இடம் பெயர்தல் செய்யப்பட பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பர்ய பகுதிகளான மலைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தவர்கள். அதாவது அவர்கள் அந்த காடுகளையும், மலைகளையும் பண்படுத்தி அதில் பயிர் வைத்து, அதன்மூலம் அத்தகைய காட்டு வளங்களையும், மலை வளங்களையும் பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர். அதாவது அவர்களுக்கான வாழும் நிலங்களாக, வாழ்க்கை கொடுத்த பூமியாக அந்த மலைகளும், காடுகளும் இருந்துவந்தன. அப்படிப்பட்ட மலைகளையும், காடுகளையும் வெளியே இருந்து வந்த பெருவணிக குழுமங்களான கார்பரேட்களுக்கு தாரை வார்த்து கொடுத்தவர்கள் யார்? அந்த இடங்களில் மக்களது பொது சொத்தாக இருந்த தாதுபொருள்களை, தனியார் பெருமுதலாளிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மத்தியஅரசு தாரை வார்த்து கொடுத்துள்ளது. இது 2005 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு, நடத்தப்பட்ட பலாத்கார இடம் பெயர்த்தல். அதை ஒட்டியே சல்வாசுடும் என்று அழைக்கப்படும் திட்டமிட்டு அரசு ஆரம்பித்த ஆயுதம் தாங்கிய கூலிப்படை, தோற்றுவிக்கப்பட்டது. அதாவது அரசு அந்நிய நாட்டு பெருவணிக குழுமங்களுக்கு, நமது நாட்டின் பொது சொத்தாக இருந்த மலைகளையும், காடுகளையும் எழுதிக்கொடுத்தபோதே, அங்கிருந்து இதுவரை ஆண்டு, அனுபவித்துவரும் ஆதிவாசி மக்களை விரட்டுவதற்காக ஒரு திட்டமிட்ட கூலிப்படையையும் அந்த நேரத்தில் உருவாக்கியது என்பதுதான், பினாயக்கின் உரையில் நமக்கு கிடைத்த செய்தியாக இருக்கிறது. பலாத்காரமாக இடம் பெயர்க்கப்பட்ட ஆதிவாசி மக்கள், தங்களது சுற்று சூழல் தொடர்புகளையும், சமூக தொடர்புகளையும் அதன் மூலம் இழந்துவிட்டனர். அதுமட்டுமே அவர்களை வறுமையில் தள்ளியுள்ளது. அதுமட்டுமே அவர்கள் மத்தியில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசு போட்ட பின்புதான் மேற்குறிப்பிட்ட சல்வாசுடும் என்ற கூலிப்படை உருவாக்கப்பட்டது என்பதையும் கூடுதல் தகவலாக பினாயக் கூறினார். இவ்வாறு அந்த மலைப்பகுதிகளில், வன்முறைக்கு தொடக்க கர்த்தாக்களாகவும், வித்திட்டவர்களாகவும் இருப்பது யார் என்பது புரியப்பட முடியும். 60000 பழங்குடி மக்கள் அந்த டாடா நிறுவன வரவால் இடம் பெயர்க்கப்பட்டனர். அவர்கள் மாவோவாதிகள் வசம் போகாமல் எங்கே போவார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
அதேபோல சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில், ஜிண்டால் என்ற பெருவணிக குழுமம் இறங்கி உள்ளது. நியம்கிரி மலைகளில் இவர்களது ஆக்கிரமிப்பு அதிகமாக ஆகியுள்ளது.அங்கே ராய்கர் மாவட்டத்தில் கிடைக்கும் மலை தண்ணீரை கொள்ளை அடிக்க இந்த நிறுவங்கள் இறங்கியுள்ளன. இது இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் கொடுமை. அங்கேயும் ஆதிவாசி மக்கள் வாழும் மலைப்பகுதிகளில், பொது சொத்தாக உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க,இதே போல அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதனால்தான் அங்கே அவர்கள் தலிபான் போன்ற தீவிரவாதி குழுக்களுக்கு பின்னால் பழங்குடிகள் போய்விட்டார்கள் என்று அலறுகிறார்கள். அங்குள்ள கனிம வளங்கள் 3000 கோடி அமெரிக்க டாலருக்காக விற்கப்பட்டுள்ளன.திட்டமிட்டு இங்கே மத்திய ஆசிய பகுதியான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆகியவை தனியார் நிறுவன கொள்ளைகளுக்காக, தாரை வார்க்கப்பட்டுள்ளன அல்லது அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட செய்திகளை பினாயக் கூறும்போது உணமையிலேயே மூச்சு நின்றுவிடும் போல இருந்தது. இவ்வாறு நமது மூச்சை நிற்க வைப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு மூலதன நிறுவங்களும் என்பது புரியப்படவேண்டும்.அதேசமயம் இங்குள்ள ஆங்கில காட்சி ஊடகம் ஒன்று, சில நாட்கள் முன்பு அருந்ததிராயை பேட்டி கண்டது. கரன்தாப்பர் தனது வழமையான பாணியில் மடக்கு கேள்விகளை, பிசாசின் வழக்கறிஞர் என்ற பெயரில் கேட்டார்.
அதில் அரசாங்கம் இந்திய அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் உடைத்துக்கொண்டு, பழங்குடி மக்களின் பாதுகாபிற்க்கு இருக்கும் அந்த சட்டங்களை காலால் போட்டு மிதித்துவருவதை குறிப்பிட்டார். அதன்மூலம் பல பத்து லட்சம் பழங்குடி மக்களின் தாய்நாட்டை தாக்கி உள்ளார்கள் என்றார். இந்த நாட்டில் மட்டுமின்றி, இந்த உலகத்திலேயே அதிக ஏழைகளாக இருக்கும் இந்திய நாட்டு பழங்குடி மக்கள் மீது, ஒரு அரசு தனது ராணுவத்தை அனுப்பி தாக்கிவருவதை எப்படி ஆதரிக்கமுடியும் என்று வினவினார். தங்கள் நலன்களையும், தங்கள் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள அந்த பழங்குடி மக்கள் ஆயுதம் ஏந்தினால் எப்படி தவறு என்றும் கேட்டார். அரசுதான் வன்முறையை தூண்டுகிறது. அரசுதான் வன்முறையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய பஞ்சாயத் அறிக்கையை பார்த்தால் அதில் அரசுதான் பல சட்ட மீறல்களை செய்தது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார். மாவோவாதிகள் செய்யும் வன்முறையையும் அவர் கண்டித்தார். ஆசாத் என்ற மாவோவாதியை பிடித்து கொலை செய்த அரசின் செயல் போன்றதுதான், மாவோவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அதிகாரியை அவர்கள் கொலை செய்ததும் என்றார். ஆனால் அனைத்திற்கும் காரணமாக இன்றைய அரசு எப்படி அந்நிய பெருவணிக குழுமங்களான கார்பரேட்களின் நலன்களுக்காக இருக்கிறது என்பதையும், அதேபோல பெரும்பான்மை மதமான இந்து மத பாதுகாவலனாக அரசே செயல்படுகிறது என்பதையும் அந்த நேர்காணலில் அவர் வெளிப்படுத்தினார். ஆகவே இந்திய அரசு ஒரு கார்பரேட் நலன் காக்கும் அரசு என்பதை இந்த விவாதங்களை கண்ணுறும்போது யாராலும் மறுக்க முடியாது போலும்.