Thursday, December 23, 2010

தி.மு.க. வேண்டாம் ---சோனியாவிடம் வேண்டுகோள்.

. டில்லியில் காங்கிரசு கட்சியின் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூடியபோது, இதுதான் நல்ல தருணம் என்று எண்ணிய தமிழ்நாடு காங்கிரசு கட்சி தலைவர்கள் ஒன்று கூடினர். சோனியாவை சந்தித்தனர். ஜி.கே.வாசன்,ப.சிதம்பரம்,கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மேலும் ஐந்து பேருடன் சோனியாவை சந்தித்து தி.மு.க.விற்கு கடும் கேட்ட பெயர் ஆகிவிட்டது என்றும், அதனுடன் சென்றால் நமக்கு அதோகதிதான் என்றும் கூறினார்களாம். பரிசீலிக்கிறேன் ஏறு சோனியா கூறினாராம். அதனால் அடுத்த சின்ன கட்சிகளை அரவணைக்கும் நிலை காங்கிரசுக்கு.

Wednesday, December 22, 2010

புலிகள் இடத்தில் எலிகளா? டில்லி செய்யும் சதிகளா?

இப்போது டெல்லிக்கு கவலை அவர்கள் சொல்வது போல, ஈழத்தமிழர்களை முள்வேலி முகாம்களில் இருந்து வெளியே கொண்டு வந்து மறுகுடியேற்றம் செய்ய வைப்பது அல்ல. அவர்கள் சொல்லிக்கொள்ளாதது போல, இலங்கை தீவில் வணிகரீதியாக நிரந்தர தளம் அமைத்துக்கொள்ள இந்திய பெரு முதலாளிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என்பது டெல்லிக்கு முக்கியமான கவலை. ஆனால், மகிந்தா ராஜபக்சே அரசு இலங்கை தீவின் நிலங்களை மட்டுமின்றி, நீர் நிலைகளையும், கடலையும் கூட சீன அரசிற்கு எழுதி வைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் டெல்லிக்கு பெரும் கவலையாக இருக்கிறது. ஆகவே, இன்றைய டெல்லியில் நோக்கமே இலங்கை தீவில் வணிகத்திற்கான தளங்களை உருவாக்குவதாக இருக்கிறது. அதற்காக, மகிந்தா அரசிற்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய தேவையும் டெல்லிக்கு இருக்கிறது.

80ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்திய அரசு இலங்கை தீவின் அரசாட்சிக்கு எதிராக பகைமை உணர்வு பெற்று வந்த ஈழத்தமிழர்களை போராளிகளாக உருவாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், இந்தியாவிற்குள் செய்து வந்தது. பல போராளி இயக்கத்திற்கு பயிற்சி தளங்கள் அமைத்துக்கொள்ள உதவி செய்வதும், பயிற்சி கொடுப்பதும், ஆயுதம் கொடுப்பதும் போன்ற வேலைகளைச் செய்தது. அதேநேரம் சிங்கள அரசின் படைகளுக்கும் பயிற்சி கொடுத்தலை தொடர்ந்தது. தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல், தமிழீழ விடுதலைக்காக சமரசமற்ற போரை நடத்த தயாராகிவிட்ட அல்லது நடத்திய போராளி அமைப்பை நிர்மூலம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் டெல்லியே முன்நின்று கவனித்தது. ராஜபக்சே அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்தது மட்டுமின்றி, ராணுவ தந்திரங்களை சொல்லிக்கொடுத்து, இந்திய அமைதிப்படை காலத்தில் புலிகள் கையாண்ட போர் முறைகளில் இருந்து கற்று அதற்கு மாற்றான தந்திரங்களை கொழும்பு அரசிற்கு வழிகாட்டல் கொடுத்து, 4ம் வன்னிப்போரை நடத்தியதில் அதிமுக்கிய பங்கை டெல்லி செலுத்தியது. புலிகளை போரில் வென்றதற்கும், தமிழின அழிப்பில் முதன்மை பங்கை ஆற்றியதற்கும், மகிந்தா அரசின் பாராட்டுதல்களை பெற்ற இந்திய அரசிற்கு, போருக்கு பின் வணிகத்திற்காக தளம் அமைத்து கொடுப்பதில் கொழும்பு ஏன்? பின்வாங்குகிறது என்பது தான் டெல்லியில் கேள்வியாக இருக்கிறது.

அவர்களது வாதப்படி செய்த உதவிக்கு நன்றி வேண்டாமா? என்பது தான் நமக்கு புரிகிறது. மீண்டும் கொழும்பு அரசை நிர்ப்பந்தம் செய்து சீன செல்வாக்கில் இருந்து, இலங்கை வணிகத்தை இந்திய மற்றும் அமெரிக்க முதலாளிகளின் சுரண்டல் தளமாக ஆக்குவதற்கு புதிய திட்டங்களை டெல்லி வகுத்துள்ளது. இந்திய அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவான ரா அமைப்பு, தனது வழிகாட்டல்களிலும், கட்டுப்பாட்டிலும் பரந்தன் ராஜன் என்ற ஞானசேகரன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எஃப். என்ற ஈழத்தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற அமைப்பையும், தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள விளாத்திகுளம் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் என்பவர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பையும், வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. இந்திய அரசிற்கு இலங்கை பிரச்சனையில் நெருக்கடி வரும்போதெல்லாம், மேற்கண்ட இரண்டு அமைப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு சில வேலைகளை செய்வார்கள் என்பதும் நாடறிந்த செய்தி.

இப்போது, இந்த அமைப்புகள் வேறு சில அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு ஒரு புதிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெங்களூரில் ராஜன் நடத்தும் குழந்தைகள் பள்ளி அருகே நவம்பர் மாதம் 13, 14ம் தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு மாநாட்டில் கூடிய இவர்கள் ஈழத்தமிழர் விடுதலைக்கான ஒன்றுபட்ட முன்னணி என்பதாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை ஈ.டி.யூ.எஃப். என்று அழைக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் 10 கோரிக்கைகளை தயார் செய்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், டெல்லியை நோக்கி தமிழ்நாட்டில் இருந்து ஒரு ஈழத்தமிழர் நடைபயணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் திருபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்படும் இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இரா.அன்பரசு [வழக்கமாக ரா கருத்துக்களை வெளிப்படுத்துபவர்], சீ.பி.ஐ.யின் தா.பாண்டியன் [ஏன் இவர்?] சீ.பி.எம்.இன் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நடைபயணத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள 117 அகதிகள் முகாம்களிலும் இளைஞர்களை தயார் செய்து வருகிறார்கள். தமிழ் இனத்தின் உரிமைகளை இந்தியா மீட்டு தரவேண்டும் என்றும், இது ஈழத்தமிழர்களின் கோரிக்கை என்றும் ஒரு துண்டறிக்கையை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதை ஒவ்வொரு அகதிகள் முகாம்களிலும் ரகசியமாக கொடுத்து, அவலநிலையில் வாழும் ஈழ இளைஞர்களை அந்த நடைபயணத்திற்காக தயார் செய்கிறார்கள். மகிந்தாவை எதிர்த்தே இவர்களது விளக்கங்கள் இருக்கின்றன.

1. சிங்கள ஆட்சியாளர் தமிழ் இனத்தவரை வாழவைக்கப் போகிறார்கள், உரிமைகள் வழங்கப் போகிறார்கள் என்று கூறுவதும், எதிர்பார்ப்பதும் வீணான கற்பனையாகும். தமிழ் இனத்தை அழிப்பதுதான் பௌத்த சிங்கள இனத்தவரின் கொள்கையாகும். இதனைத் தடுத்து நிறுத்ததான் இந்தியா 1987ல் இலங்கை விஷயத்தில் தலையிட்டது. 50 ஆயிரம் துருப்புகளை வைத்துக்கொண்டு தமிழருக்கு உரிமை பெற்றுக்கொடுக்க முடியாமல் திரும்பியது இந்தியா. சிங்களத் தலைமை ஒரு நயவஞ்சகமான தலைமை, அவர்களை நம்பி எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது. எனவே இந்தியா ஈழத்தமிழரையும் அவர்களது உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், முன்னைநாள் பிரதமர் அமைதிப்படையை அனுப்பியது போன்று ஓர் படையை அனுப்பி தமிழ் இனத்துக்கு உயிர்ப் பாதுகாப்பையும், நில உரிமையையும் பெற்றுத்தரவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

2. 1987ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த, அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கிய மாநிலம் ஒன்றினை ஈழத்தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.3. இந்தியாவையும் ஈழத்தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசு பல தடவைகள் ஏமாற்றியுள்ளது. மறுவாழ்வு, மறு கட்டமைப்பு என்று கூறி சிறிலங்கா அரசு சிங்கள மக்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றி வருகிறது. இதனை இந்தியா உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

4. பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட 1948ம் ஆண்டுக்குப் பின்னர், தமிழரது பூர்விக நிலங்களில் சிங்கள அரசால் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தையும் முற்றாக அகற்றவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.5. புத்த பிக்குகள் ஈழத்தமிழருக்குச் சொந்தமான பூர்விகப் பகுதிகளில் எங்கெங்கு அரசமரங்கள் இருக்கின்றனவோ அவற்றின் கீழே பௌத்த மதத்தைப் பரப்ப, அரசின் ஆதரவோடு புத்த விகாரைகளைக் கட்டி வருகின்றனார்கள். அவ்வாறு கட்டும் சட்டத்திற்குப் புறம்பான செயலைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், ஏற்கனவே கட்டப்பட்ட புத்த விகாரைகளை இடித்து அகற்றவேண்டும் என்றும் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

6. 2009ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாத எதிர்நடவடிக்கை அல்ல, சிங்கள இனத்தவரின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பயங்கரவாதம் என்று உலகுக்குக் காண்பித்த சிங்கள அரசு செய்தது இனப்படுகொலைதான். இதனை விசாரிப்பதற்கு மிகப்பெரிய சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய மக்கள் இதனை கண்டிப்பாக வரவேற்பார்கள். எந்த நாடும் தனது சொந்த மக்கள் மீது இவ்விதம் குண்டுகள் வீசி, அழித்தது கிடையாது. அங்கு நடைபெற்றது எதிர்நாட்டின் மீது படையெடுப்புதான். எனவே நடத்தப்பட்ட படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு இந்தியா முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7. ஈழத்தமிழரது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் ஈழத்துக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை மத்திய அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம் கேட்ட எங்கள் மக்கள் தமிழக பொலிசாரால், குறிப்பாக கியூ பிரிவினரால் முகாம்களுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எங்கள் மக்களை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும்.8. திபெத்திய அகதிகளுக்கு வழங்குகிற உரிமைகள் போன்று ஈழத்தமிழ் மக்களுக்கும், அவர்கள் நாடு திரும்பும் வரை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்விதமான தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை இந்தியாவில் இருக்கும் ஈழத்து அகதிகள் யாரையும் திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.9. இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 80 சதவீதமான பகுதி தமிழ் இனத்துக்குச் சொந்தமானது. எனவே, வடக்கு கிழக்குக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. வடக்குகிழக்குக் கரையோரப் பகுதிகளை சிங்களர் அரசின் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டனர். அரசினால் குடியமர்த்தப்பட்ட சிங்களரது கரையோரக் குடியிருப்புகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்று கோருகிறோம்.10. மேற்படி கோரிக்கைகள் அனைத்தும் சாத்தியம் இல்லை என்று இந்தியா கருதினால், சிறிலங்கா அரசு தமிழர் மீது யுத்தம் புரிவதற்கு நிதி உதவி வழங்குவதற்காக, நன்கொடை நாடுகள் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி போர்க்கருவிகள் வாங்குவதற்கு பெருமளவு பணஉதவி செய்தனர் பிறநாட்டினர். அதேபோன்று தமிழ் இனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க, தமிழர்கள் அகதிகளாக வாழும் நாடுகள் அனைத்தையும் இணைந்த அமைப்பொன்றினை ஏற்படுத்த வேண்டும். சமாதான நாடுகள் என்ற அமைப்பின் மூலம் எங்கள் இனத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வொன்றினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு இயக்கத்தை தங்கள் நலனுக்காக கட்டியமைக்க இந்திய அரசு துணிந்துவிட்டது. இதுபோன்ற நெருக்குதல்கள் மூலம்தான் மகிந்தா அரசை, இந்திய முதலாளிகளிடம் அடிபணிய வைக்க முடியும் என்பது டெல்லியின் திட்டம். அதேசமயம், புலிகள் இல்லாத களத்தில் தங்கள் வீட்டு எலிகளைக் கொண்டு நிரப்பிவிட டெல்லி எண்ணுகிறது. இதை நம்பிச் செல்லும் இளைஞர்கள், ஈழத்தமிழர்களை பலிகடா ஆக்கி தங்களது வணிக சுரண்டலை சாதித்துக்கொள்ள திட்டமிடும் வல்லாண்மை அரசுகளை புரிந்து கொள்வார்களா?

Tuesday, December 21, 2010

தி.மு.க.வை கைவிடும் காங்கிரசு.

காங்கிரசு கட்சி தனது அகில இந்திய காங்கிரசு கட்சி குழுவை டிசம்பர் பத்தொன்பதிளிருந்து டில்லியில் கூட்டியது. இருபயைரம் பேர் கலந்துகொண்ட அந்த மஹாநாட்டில் பல பிரச்சனைகளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வடக்கு மாநிலங்களில் காங்கிரசு கட்சியின் மரியாதையை சுத்தமாக காயடித்துவிட்டது. அதனால் ஆத்திரம் ஏற்பட்ட காங்கிரசு தலைவர்கள் தமிழ்நாட்டை பொறுத்தவரை என்ன செய்வது என்ற கேள்விகளோடு இருந்தனர். இப்போதைக்கு தி.மு.க.வுடனான கூட்டணியில் மாற்றம் செய்வதாக திட்டமில்லை என்று ஒருபுறம் கூறிவரும் காங்கிரசு இதுபற்றி உண்மையில் கவலைகொண்டிருப்பதை விவத்தித்தனர். தி.மு.க.வை கை விட்டால் யார் என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் பா.ம.க., விஜயகாந்த், கொங்கு முன்னேற்ற சங்கம், இந்திய ஜனநாயக கட்சி என்ற பச்சமுத்து உடையார் கட்சி என்ற பெயர்கள் கூறப்பட்டனவாம். அதில் யாருமே போதுமான அளவுக்கு காங்கிரசு தலைமையை செல்வாக்கு செலுத்தவில்லை என்ற நிலையில் இப்போதைக்கு தி.மு.க.வுடன் இருக்கும் கூட்டணியில் மாற்றம் பற்றி பேச வேண்டாம் என்றும், ஆனால் தாங்கள் அதுபற்றி வருகின்ற ஜனவரி மாதம் பேசி முடிவு செய்வோம் என்றும் தலைவர்கள் கூறினார்களாம். அதற்குள் பெரிதாகும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.வை அடையாளம் காட்டிவிட்டு தாங்கள் தப்பித்து விடலாம் என்று அந்த தலைவர்கள் நினைக்கிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி தி.மு.க.விற்கு சாதகமான ஆண்டாக இருக்காது என்று டில்லியில் கூறுகிறார்கள். சீ.பி.ஐ. வழக்கில், உச்சநீதிமன்றத்தில் எப்போது விவகாரம் கையை மீறி போகும் என்று காங்கிரசு நினைக்கிறதோ அப்போது தி.மு.க. தான் அத்தனைக்கும் காரணம் என்று கூறிவிட்டு ஓடிவிடலாம் என்று காங்கிரசு நினைப்பதாகவும் கூறுகிறார்கள். காங்கிரசு தங்கள் கட்சியை கழட்டுமானால் அப்படி ஒரு முயற்சி தெரியுமானால் தி.மு.க. தன் பங்கிற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவை சுட்டிக்காட்டி அவர்தான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்று கூறிவிட்டு தி.மு.க.தலைமை தான் தப்பித்துகொள்ள தயாராகிவருகிறது. அப்படியானால் ராஜா தன்மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்ற தொகைகளை கூற தயாராவாரா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். போல்லாதவர்கல்தான் இந்த பொதுமக்கள்.

சாயிபாபாவும், அத்வானியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் வருகிறார்கள்..

வாஜ்பாய காலத்திலிருந்து செல்லுலார் தொலைபேசி ஊழலில் இருக்கின்ற கொஷிகா என்ற நிறுவனத்தின் முதலாளியான குல்வந்த்ராயின் டில்லி வீட்டில் புட்டபரத்தி சாயிபாபா தங்கியிருந்து இந்த தனியார் வணிகத்திற்காக வக்காலத்து வாங்கிய கதை வெளியே வந்துள்ளது. அதேபோல எஸ்ஸார் நிறுவனம் அன்றைய துணை பிரதமர் அத்வானிக்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது.மேற்கண்ட தகவல்களை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்ட கருணாநிதியே தனது முரசொலி ஏட்டில், தனது நண்பர் சின்ன குத்தூசி மூலம் எழுதவைத்துள்ளார்.

சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்பவர்கள்

தி.மு.க. அரசு எல்லா மக்களுக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை கொடுத்தது. அதன்விளைவாக இப்போது சன் தொலைக்காட்சி மூலம் தினசரி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மக்கள் அளவுக்கு அதிகமாகவே தெரிந்து கொள்ளதொடங்கிவிட்டார்கள். அதை திரைப்பட தயாரிப்பாளர் புகழேந்தி தங்கராஜ் வர்ணிக்கும்போது, இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்று நக்கலடித்தார்.

ராஜா ஓட, சீ.பி.ஐ. துரத்த....

பைசால் என்ற இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு அதிகார முன்னாள் தலைவர் சீ.பி.ஐ.யால் சம்மன் வழங்கப்பட்டு, டில்லி சீ.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணையை எதிர்கொண்டார். அதேபோல நிரா ராடிஆவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் விசாரணையை எதிர்கொண்டார். ஆ.ராஜாவிற்கு சீ.பி.ஐ. டிசம்பர் இருபதாம் நாள் வந்து விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ராஜா டில்லி செல்லவில்லை. அதேசமோம் ராஜா அன்று காலை அப்போலோ மருத்துவமனியில் சேர்ந்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அப்போலோவிளிருந்து அரை மணி நேரத்தில் வெள்யே வந்துவிட்டார். சீ.பி.ஐயிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்து, இன்னொரு நாள் கொடுக்குமாறு கேட்டிருந்தார். அதாவது ஒரு வாரம் நேரம் கேட்டதாக தெரிகிறது. அதற்கும் சீ.பி.ஐ. சம்மதித்துவிட்டது. என்று சீ.பி.ஐ. நாள் கொடுக்கிறார்களோ அன்று தான் போய் விசாரணையை எதிர்கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகே அவர் மீதான நடவடிக்கையை சீ.பி.ஐ. முடிவு செய்யமுடியும். பதிலளி முன்அனுப்பு

தி.மு.க. எதிர்ப்பு கூட்டணியில் சீமான்.

. சீமான் கருணாநிதி எதிர்ப்பு, தி.மு.க. எதிர்ப்பு என்று எதிர்க்கட்சி தொலைகாட்சியில் விளாசி தள்ளிவிட்டார். இலங்கையில் என் தமிழ் சமுதாயம் அழிய ஆட்சியில் இருந்துகொண்டே காரணமாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. வரவும் விடமாட்டோம். என் தொழிலான சினிமாத்துறை அழியவும் காரணமாக இருக்கிறார். சிவாஜி குடும்பம், ராஜ்கபூர் குடும்பம், எல்லாம் சினிமாவில் இல்லையா என்று கருணாநிதி கேட்கிறார். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் சினிமா துறையில் இருந்தன. ஆனால் சினிமா துறையே கருணாநிதி குடும்பத்தில் இருக்கிறதே. ஈழப்பிரச்சனை மட்டுமல்ல, ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார் என்பதை நாங்கள் வருகிற தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாடெங்கும் போய் சொல்லுவோம். அ.தி.மு.க.கட்சிதான் இன்று இருப்பதில் பரவாயில்லை என்றும் ஒரு ஏட்டிற்கு நேர்காணல் கொடுத்துள்ளார். ஏற்கனவே காங்கிரசு எதிர்ப்பில் இருந்தவர் இப்போது தி.மு.க. எதிர்ப்பு, என்று வந்துவிட்டார்

ராஜா ---------தயா மோதல்.

ஆ.ராஜா வுடன் , தயாநிதி குழுவினர் முரண்பட்டு இருப்பதோ, முரண்பாடுகளை கிளப்பிவருவதோ, அதிகார மோதலுக்காக ராஜாவை அம்பலப்படுத்த தயா முயற்சி எடுப்பதோ தெரிந்த பழைய செய்திகள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது புதிய செய்தி. டில்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திடீரென நடந்த சீ.பி.ஐ. சோதனைகள், யாரால் தூண்டப்பட்டன? யார் அதுகண்டு மகிழ்ந்தார்கள்? கட்டளை அனுப்பும் இடத்தில் அமர்ந்து கொண்டு அதற்கான ஆதாரங்களை கொடுத்தது யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.

Friday, December 3, 2010

போர்குற்றவாளி மகிந்தாவின் வழியில் கருணாநிதியா?

லண்டன் சென்றார் இலங்கை அதிபர். அதற்கு ஹம்சா என்ற ஒரு மனிதர் காரணமானார். ஹம்சா இப்போது லண்டனில் இலங்கை தூதரக உயர் அதிகாரியாக இருப்பவர். இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டு இருக்கிறோமே என்று நீங்கள் எண்ணலாம்.சென்னையில் இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரியாக அதாவது ஹை கமிஷனராக இருந்தவர். அதாவது இலங்கையில் தமிழர் மீதான இன அழிப்பு நடந்துவந்த நேரத்தில், சென்னையில் இந்த ஹம்சா ஹை கமிஷனராக இருந்தவர். அப்போது இலங்கை அரசு யாரைகண்டு பயந்தது தெரியுமா? தமிழ்நாட்டு மக்களைகண்டு பயந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கண்டு அந்த சிங்கள அரசு பயந்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று கூறியவர் பொன்சேகா. அவர் கூற்றை மறுக்காமல் அனுமதித்தவர் ராஜபக்ஷே.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் 1983 காலகட்டம் போல கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்று இலங்கை அரசு எப்போதும் அச்சப்பட்டுவந்தது. அந்த சிங்கள ஆதிக்கவாதிகள் ஒட்டுமொத்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு எதிராக தமிழர்களாக இருப்பதாகவோ, தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவோ எண்ணிக்கொண்டிருந்த நிலை இப்போது மாறிவிட்டது. இந்திய அரசு தங்களுக்கு ஆதரவானதுதான் என்ற உணர்வு பெற்ற சிங்கள ஆதிக்கவாதிகள், படிப்படியாக தமிழ்நாட்டு அரசை வழிநடத்தும் கும்பலும் தங்களுக்கு ஆதரவானவர்கள்தான் என்ற புரிதலுக்கு வந்திருந்தனர். ஆனால் அப்போதும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அத்தகைய சூழலில்தான் மகிந்தா தனக்கு நம்பகமான ஒரு நபரை அதாவது ஹம்சாவை சென்னை தூதரக அதிகாரியாக நியமிக்கிறார். அந்த ஹம்சா இப்போது லண்டன் பயணத்தில் மகிந்தாவை கவிழ்த்து விட்டார்.

ஹம்சா என்ற அந்த மனிதர் சென்னையில் இருக்கும்போது இங்குள்ள பல ஊடகவியலாளர்களுக்கு போதிய நிதி கொடுத்து தன்பக்கத்தில் வைத்திருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது முகத்தை மூடிக்கொள்ளலாம். ஆனால் காலம் அவர்களை சும்மா விடாது. ஏன் என்றால் ஹம்சா இங்கே இருந்து இயங்கிய நேரம் அங்கே வன்னி போர் நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் தமிழீழ தேசிய தலைவர் ஒரு தற்காப்பு போரைத்தான் நடத்திக்கொண்டிருந்தார் என்பது இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரியும். ஆனாலும் அங்கே தாக்குதலில் புலிகள் இறங்கியிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துக்கொண்டே இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய ஒரு தோற்றம் அவர்களுக்கு பல விதத்திலும் உதவிகரமாக இருந்தது.

அதாவது தற்காப்பு போரில் இருந்த புலிகள் அமைப்பை ஒரேயடியாக அழிப்பதை அவர்கள் தங்களது திட்டமாக வைத்திருந்தனர். இன அழிப்பு என்பதை கொள்கையாக கொண்ட மகிந்தா கும்பல் இந்த புலிகள் அழிப்பு சிந்தனையை இந்திய அரசு முன்வைக்கும்போது மனதார அதையும் ஏற்றுக்கொண்டது. அதற்க்கான ஒரு சூழலை அந்த இரு அரசுகளும் மற்ற அரசுகள் சிலவற்றின் உதவியோடு திட்டமிட்டன. அதற்காக விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தி உலக அளவில் தனிமைப்படுத்துவதில் இரு அரசுகளும் செயல்பட்டுவந்தன.ஆனால் இன்று உண்மையான பயங்கரவாத அரசு இலங்கை அரசுதான் என்பது நிரூபணமாகி உள்ளது. உண்மையான பயங்கரவாதி மஹிந்த ராஜபக்ஷேதான் என்பது நிரூபணமாகி உள்ளது.

அப்படி நான்காவது ஈழப்போர் நடந்துவந்தபோது இங்கே சென்னையில் ஹம்சாவின் விளையாட்டு தலை தெறிக்க நடந்து வந்தது. அவர் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு சிங்கள எதிர்ப்பும் வந்துவிடக்கூடாதே என்றும், வளர்ந்துவிடக்கூடாதே என்றும் அக்கறையுடன் செயல்பட்டார். அதற்காக சில ஊடகவியலாளர்களுக்கு சம்பளப்பட்டியலில் இடம் ஒதுக்கி இருந்தார்.அதேபோல சில அரசியல்வாதிகளுக்கும் குழப்பம் விளைவிப்பதற்காக அதாவது தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் பிரச்னையை சரியாக புரியவிடாமல செய்து அதன்மூலம் எழுச்சியை தடுப்பது போன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தார். உதாரணமாக ராமதாஸ் நடத்திய ஒரு அறிவுஜீவிகள் கூட்டத்தில் முருகன் ஐ.ஏ.எஸ். எழுந்து பிழைக்க சென்ற தமிழன் எப்படி நாடு கேட்கலாம் என்று பேசினார். அவருக்கு எதிர்ப்பு வந்தது. அவர் வெளியேறினார். அவரை தயார் செய்து பேசவைத்த ஹம்சா அவருக்கு பின்னால் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போதுதான் இவருக்காக அவர் பேசினார் என்பது எல்லோருக்கும் புரிந்தது. இப்படிப்பட்ட ஹம்சாதான் இப்போது லண்டனில் அதிகாரியாக இருக்கிறார்.

அந்த ஹம்சா ராஜபக்சேயிடம் லண்டன் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றும் அவர்கள் நாற்பது குழுவினராக பிரிந்து உள்ளார்கள் என்றும் கூறி தைரியமாக லண்டன் வரசொல்லியதால் ராஜபக்ஷே லண்டன் வந்தார். ஆனால் சிங்கள முற்போக்குவாதிகளான, " ஹூரா" அமைப்பினர் இந்த லண்டன் எதிர்ப்பிர்க்கான ஏற்பாட்டை செய்துவந்தனர். இவர்கள்தான் டப்ளின் அனைத்து நாட்டு தீர்ப்பாயத்திர்க்கும் ஏற்பாடு செய்தவர்கள். இவர்களுக்கு இலங்கையிலிருந்து போர்குற்றங்களை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருந்த சிங்கள ராணுவ வீரர்கள் மூலம் அனுப்பிய அனைத்து விதமான போற்குற்றங்களும் நாலாவது அலைவரிசை என்ற அந்த தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுவே இந்த ராஜபக்சேயின் லண்டன் வருகையின் போது வெளியிடப்பட்ட காரணத்தினால் பெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆங்கிலேயர் மத்தியிலும் ஏற்படுத்தி அதன்மூலம் நூற்றுகணக்கில் வெள்ளைகாரர்களும் ராஜபக்சே தங்கியிருந்த விடுதி முன்பு கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக பொதுமன்னிப்பு சபையை சேர்ந்த வெள்ளைகாரர்களும், தொழிலாளர் கட்சியை சேர்ந்த சில எம்.பி.களும், முன்னாள் அமைச்சரான மில்லி பாண்டும் அங்கே அறுபதாயிரம் தமிழர்களுடன் கடும் குளிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பணி விழும்போதே ராஜபக்சேயை தண்டிக்கவேண்டிமுழக்கம் செய்து வந்தனர். புலிகளுக்கு 2009 ஆம் ஆண்டு மே பதினேழாம் தேதிக்கு பிறகு லண்டனிலும், நம் ஊரைபோலவே அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. இப்போது யார் உணமையான பயங்கரவாதி என்று உலகம் தெரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறது. ஹம்சாவிடம் உதவி பெற்று பிழைப்பு நடத்தியவர்கள் இனியாவது வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்களா?

லண்டனில் போர் குற்றவாளி மாட்டிக்கொண்ட நேரத்தில், ஒரு ஊடகத்திலிருந்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்டார்களாம். அவர் சொல்ல மறுத்து விட்டாராம். ஹம்சா இருந்த போது அவருடன் இணைந்து செயல்பட்டது தமிழக அரசின் உளவுத்துறை. அதற்கு அனுமதி கொடுத்தது தமிழக முதல்வர். அதன் பிரதிபலனாக ஹம்சா முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்களை சந்தித்ததும், அதற்குப்பின்தான் அவர்களுக்கு மலையகத்தில் நிலம் கிடைத்ததும் தனி கதை.

Tuesday, November 2, 2010

மொழிவாரி மாநில நாளில், இந்தியா ஒற்றையாட்சி என்பதா?


தமிழ்நாட்டிலும் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் கழித்து, நவம்பர் தொடக்கத்தை, மொழிவாரி மாநில அறிவிப்பை கடைப்பிடிக்கவேண்டும். ஆந்திராவில் அதை கொண்டாட என்னும் போதுதான், தெலுங்கானாகாரர்கள், அதை எதிர்த்து தகராறு செய்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் தகராறு செய்ய ஆள் இல்லாவிட்டாலும், யாரும் இதை கவனமாக கொண்டாடவில்லை. ஆனால் சண்டே இந்தியன் என்ற அந்த இதழ் மட்டும், தனது தமிழ் பதிப்பு மூலம் அதை ஒரு கருத்தரங்காக ஆக்கி நிகழ்ச்சி நடத்தியது. அதில் அறிய பல கருத்துக்கள் வெளிவந்தன. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், வேல்முருகன், வெங்கடேஷ் ஆத்தரையா, தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவர் நாகநாதன், ஆகியோர் உரையாற்றினார்கள்.மொழிவாரி மாநிலங்கள் 1956 இல் அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு அதற்காக நடந்த போராட்டங்கள் அங்கு வரிசைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டை பொறுத்த மட்டில், கேரளாவுடன் இன்று போய்விட்ட முல்லைபெரியாரும், அதையொட்டிய தேவிகுளம், பீர்மேடும், திருவனந்தபுரமும், நெய்யாறும், நெய்யாற்றங்கரையும்,பாலக்காடும், நமமுடன் இணைக்கப்படாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டார் ராதாகிருஷ்ணன் . ஆந்திராவுடன் போய்விட்ட சித்தூரும், காளஹஸ்தியும், குப்பமும் நமக்கு வரவேண்டியவை என்றும் சொல்லிவைத்தார். கர்நாடகாவுடன் இன்று போய்விட்ட பெங்களூருவும், தங்கவயலும், மந்தியாவும், தமிழ்நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்றும் கருத்து சொன்னார். அதனால்தான் அந்த பகுதிகளுடன் இன்றும் தண்ணீர் பிரச்சனை தலைவலியாக இருப்பதாகவும் கூறினார்.

அடுத்து பேசவந்த ச.ம.உ. ரவிக்குமார், அமைதியா தொடங்கி இன்று மத்தியில் ஆள்வது கூட்டணி ஆட்சி என்று கூறுகிறோம், ஆனால் அதை பலரும் தவறாக கூட்டாட்சி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற குண்டை தூக்கி போட்டார்.
அதாவது இந்தியாவில் நடப்பது கூட்டாட்சி அல்ல என்பதை கூறினார். ஏன் என்றால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருப்பதால் அவற்றை ஆளும் மத்திய அரசு கூட்டாட்சி அரசு என்ற தவறான பார்வை நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில கட்சிகள் மத்தியில் ஆளும் கூட்டணி ஆர்சில் அங்கம் வகிக்கும் காரணத்தால், அந்த மத்திய அரசு கூட்டாட்சியாக மாறிவிடாது. அதைதான் அங்கே ரவிக்குமார் கூறினார். ரவி பேசத்தொடங்கும் போதே அன்று அண்ணா வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்னார்; ஆனால் இன்று அப்படி சொல்லமுடியாது என்று புதிய குழப்பத்தை ஏற்படுத்தினார். இன்று பல விசயங்களில் தமிழ்நாடு அல்லது தமிழர்கள் மேலாண்மை செலுத்துவதாக ரவி விளக்கமளித்தார்.அவர் கூறும் சில தமிழர்கள் ஒட்டுமொத்த வடவர் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி அடிபணிந்து நடந்து கொண்டு இருப்பதனால், அவர்களது மேலாண்மை என்பது அந்த குறிப்பிட்ட துறையில் அதாவது ஊடகத்துறை போன்ற துறைகளில் மேலோங்கி இருக்கலாம். இது எந்த விதத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற அண்ணா கூற்றை இன்றைக்கு பொருத்தமில்லாமல் செய்யும் என்பதை ரவியிடம்தான் கேட்கவேண்டும்.


கூட்டாட்சியாக கூட்டணி ஆட்சி உருவாகவில்லை என்ற ரவியின் கூற்று, கூட்டாட்சியல்லாத ஒரு அரசு இயந்திரம் அவ்வாறு கூட்டாட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்புகிறது. கூட்டணி ஆட்சியிலேயே மாநில கட்சிகள் திருப்தி அடைந்து விடுகின்றன என்று அப்போது ரவி கூறினார். அதாவது தங்கள் சொந்த அல்லது கட்சியின் தேவைகளை பெற்றுக்கொண்டால் போதும் என்றும், மாநிலத்தின் உண்மையான தேவைக்கு கூட்டாட்சி கட்டாயம் தேவை என்றாலும், மாநில கட்சிகள் அது பற்றி கவலை கொள்வதில்லை என்பதையும் அங்கே சுட்டிக்காட்டுவதாக இருந்தது.நாம் உடனடியாக தங்கள் குடும்ப தேவையை நிறைவு செய்யதால் போதும் என்று கட்சி நலனை சுருக்கி புரிந்து கொள்ளகூடாது. மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரிகள், மாநிலங்களுக்கு செலவழிக்கப்படாமல் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்படுகின்றன என்பது அடுத்த குற்றச்சாட்டாக ரவியிடம் இருந்து கிளம்பியது. என்.டி.ராமாராவ்,லாலு, போன்ற தலைவர்கள் மாநில கட்சியை தொடங்கும்போது, மாநிலங்களின் உரிமைகளை முன்வைத்தே அந்த கட்சிகளை தொடங்கினார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு மத்திய ஆட்சியில் பங்கு கிடைத்தவுடன், மாநில உரிமைகளை விட்டுவிட்டார்கள் என்றும் ரவி குறிப்பிட்டார். சௌகரியமாக தமிழ்நாட்டில் அதுபோன்ற உதாரணங்களை சுட்டி காட்டுவதிலிருந்து தவிர்த்து விட்டார்.ஆனாலும் அனைவராலும் புரிந்துகொள்ளமுடிந்தது.

மாநிலங்களில் வசூலிக்கப்படும் வரியில்,ஐம்பது விழுக்காட்டையாவது மாநிலங்களின் நலனுக்கு செலவழிக்க வேண்டும் அல்லது மாநிலங்களின் கைகளில் கொடுத்து விடவேண்டும் என்று ரவி தெரிவித்தார். ஆனால் இரண்டு விழுக்காடு கூட மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றார். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒன்று புள்ளி ஆறு விழுக்காடுதான் மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்றார். இந்த புள்ளி விவரம் அதிர்ச்சியானதுதான் நேர்முக வரியையும், மறைமுக வரியையும் மத்திய அரசே எடுத்து கொள்கிறது என்றார். கார்கில் போர் நேரத்தில் ஒரு செஸ் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு விழுக்காடு செஸ் வரி கார்கிலுக்காக என்று நியாயப்படுத்தப்பட்டது. பிறகு அதையே கல்விக்காக என்று வசூலிக்கப்பட்டது. இதை பா.சிதம்பரம்தான் அமுல்படுத்தினார். அதில் ஒரு பைசா கூட கல்விக்காக இதுவரை மாநிலங்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதை எதிர்த்து எந்த மாநில கட்சியும் பேசவும் இல்லை. தமிழக முதல்வர் ஒருமுறை முதல்வர்கள் மாநாட்டில் பேசினார். அதற்குபிறகு அவரும் வலியுறுத்தவில்லை. அந்த செஸ் வரியிலிருந்து களிக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்று நாடாளுமன்றத்தில் கேட்டால், சிதம்பரம் பதில் சொல்லவில்லை. மாறாக ல்கல்விக்கு என்று வசூலித்த நாதா பணத்தை வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்கள்.இது மத்திய அரசு செய்துவரும் பெரும் மோசடி என்றார் ரவி. இருபது ஆண்டுகளாக சர்வ சப்த அபியான் என்ற அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் அமுலாகி வருகிறது. மாநிலங்களின் பாட்டியலில் இருந்த கல்வியை இந்திராகாந்தி காலத்தில் போது பட்டியலில் மாற்றினார். இப்போது மெல்ல, மெல்ல, அதுவே மத்திய பட்டியலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது.


அடுத்து பாவம் ரவிக்குமாருக்கு அரசியல் செய்யவேண்டிய கட்டாயம் இருந்ததால், டி.ஜி.பி. யை மாநில முதல்வர் தீர்மானிக்கமுடியாமல், நீதிமன்றம் தலையிடுகிறது என்றார். வழமையை விட்டுவிட்டு எப்படி முதல்வர் வரிசைகிரமத்தை மாற்றலாம் என்ற கேள்வி கேட்க அவரால் முடியவில்லை. தேசிய உளவு நிறுவனம் நிறுவி அதன்மூலம், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்தை பின்பற்றி, இந்தியாவிலும் மாநிலங்களின் காவல்துறை மற்றும் உளவு துறையின் செயல்பாடுகளை கபளீகரம் செய்துவிட்டார்கள் என்று ரவி புலம்பிவிட்டார். இவ்வாறு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பவர்கள் அதன்விளைவாக சோவியத் யூனியன் உடைந்து போனதை போல, இந்தியாவும் நாளை உடைந்துபோக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார். மொழிவாரி மாநிலங்களுக்கும் உரிமைகள் கொடுப்பதை அதாவது உரிமைகளை பிரித்து கொடுப்பதை செய்யப்போகிறார்களா? அல்லது ஒற்றை ஆட்சி முறைக்கு போவதா என்ற வாய்ப்புதான் உள்ளது என்றார். ஒற்றையாட்சியை கொண்டுவர முயற்ச்சிக்கிறார்கள் என்றார். அப்படியானால் இப்போது ஒற்றையாட்சி இல்லையா என்று நமக்கு அப்போது கேட்கத்தோன்றியது.

அடுத்து வேல்முருகன் ச.ம.உ. பேசினார். அவர் சங்கரலிங்கனார் பட்டினிப்போர் இருந்து கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைத்ததை நினைவு கூர்ந்தார். அவர் வைத்த பதினாறு கோரிக்கைகளில், கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்ப்பதும் போய்விட்டது, அதுபோல பூர்ண மதுவிலக்கும் அமுலுக்கு வரவில்லை என்றார்.1953 இல் நடந்த போட்டி ஸ்ரீராமுலு போராட்டத்தை நினைவுகூர்ந்தார். சும்மா வரவில்லை இந்த மொழிவாரி மாநிலங்களும் என்பதை எல்லோருமே உணர்த்தினார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மாநில றைசுக்கும் உரிமை இல்லை, மத்திய அரசும் உள்ளே போகமுடியாதவாறு பன்னாட்டு மூலாத குழுமங்களுக்குதான் அனுமதி உள்ளது என்று பொரிந்து தள்ளினார். இதுதானா மொழிவாரி மாநிலங்களின் இன்றைய நிலைமை என்ற கேள்வி எழும்பியது. தேசிய ஊரக வேலை வைப்பு திட்டம் சரிதான என்ற கேள்வியை வேல்முருகன் எழுப்பினார். இலவசங்களை சாடினார். மக்களுக்கு தொலைக்காட்சி வாங்க பணம் சம்பாதிக்கும் நிலையை வேலை வாய்ப்பின் மூலம் ஏற்படுத்தவேண்டும் என்றார். வட மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக ஆக்குவதற்கு உரிய காரணங்களாக அந்த வட மாவட்டங்களில் உள்ள வளர்ச்சி இன்மையை சுட்டிக்காட்டினார். சம சீரான வளர்ச்ச்சி இன்றி தமிழகம் கையேந்தி நிற்கிறது என்றார்.

பொருளாதார நிபுணர் அன்று அழைக்கப்படும் வெங்கடேஷ் ஆத்தரையா, அடுத்து பேசவந்தார். கடுமையாக பேசுவார் என்று எதிர்பார்த்தால் அவர் பூசிமெழுகி பேசினார். ஆனாலும் சில செய்திகளை நன்றாகவே கூறினார். ஆனால் ரவிகுமார் பேசியதுடன் உடன்பாடு என்று வேறு சொல்லிக்கொண்டார். இந்தியாவில் திட்ட குழுதான் முக்கிய அமைப்பு. அத்தகைய திட்டக்குழுவில் உறுப்பினர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றார். அதனால் அந்த திட்டகுழுவும், நிதிகுழுவும் அடிப்படையில் ஜனநாயக விரோதமானவை என்று அழுத்தம் திருத்தமாக ஆத்தரேயா கூறினார். மத்தியஅரசு பொதுப்பணி துறைகளில் உள்ள மூலதன பங்குகளை விற்க முற்படும்போது, எந்த மாநிலத்தையும் கேட்பது இல்லை என்றார். மனிதவள மேம்பாடு குறியீடு படி, சிசு மரண விகிதத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை விட முன்னேறியுள்ளது என்றார். ஆனாலும் கேரலாவைவிடவும், இலங்கையை விடவும் அதிகமான விகிதத்தை கொண்டுள்ளது என்றார். எழுத்தறிவில் முன்னேறியுள்ளது என்றார். போக்குவரத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. நூற்றெட்டு நகராட்சிகள் இங்கு இருக்கின்றன. போக்குவரத்துத்துறை முன்னேறியதற்கு, அது பொதுதுறையாக இருந்ததே காரணம் என்றார். முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைக்கு ஊக்குவிப்பு என்று பொருள்; ஆனால் மக்களுக்கு கொடுக்கும் சலுகைக்கு மானியம் என்று பொருள் என்றார். எதற்கு இந்த இரண்டு பெயர் என வினவினார்.தலித் மக்களுக்கு இன்னமும் தீண்டாமை சுவர்கள் டிக்கப்படவில்லை என்று வளர்ச்சி பற்றி கேள்வி எழுப்பினார். திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு ஏதாவது செய்யவிரும்பினால், அவற்றை உரிமைகள் என்ற பெயரிலேயே அன்க்கேகரிப்பது நல்லது என்றார்.

அடுத்து மாநில திட்டக்குழுவின் துணை தலைவர் நாகநாதன் பேசினார்.ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அறுபத்தாறு துறைகளில், முப்பத்துமூன்று துறையில், மற்ற மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் இருந்தார்கள். தமிழ்நாட்டை ஆள தமிழ் அதிகாரிகள் இல்லா நிலையும் இருந்தது உண்டு என்றார். நாகநாதன் அன்றைய மொழிவாரி மாநிலங்களுக்காக போராடிய வரலாற்றை சொல்லும்போது, காந்தி மொழிவாரி மாநிலங்களுக்கு ஆதரவாக இருந்தார் என்றும், ஆனால் நேரு அதற்கு எதிராக இருந்தார் என்றும் ஒரு வரலாற்று உண்மையை போட்டு உடைத்தார். அதுபற்றிய விவரங்களை தனது வெளிவர இருக்கும் புத்தகமான," இந்திய கூட்டாட்சியில் அதிகார குவிப்பா? அதிகார பகிர்வா?" என்பதில் குறிப்பிட்டிருப்பதாக கூறினார். காந்தியார் எவ்வளவு பேர் அஹிம்சையையும், ராட்டிணத்தையும், நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று நொந்து பொய் கூறியதை நாகநாதன் குறிப்பிடுகிறார். அதேசமயம் இந்தியாவை ரானுவமயமாக ஆக்கவேண்டும் என விரும்புகிறார்கள் என்று காந்தி கூறியது நேருவின் சிந்தனையைத்தான் என்று கூறினார். உலகிலேயே ராணுவ தளவாடங்களை அதிகமாக வாங்கும் பதினாலு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஸ்டோக்ஹோம் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறியுள்ளதையும் எடுத்து சொன்னார்.


மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க யாருடைய போராட்டங்கள் எல்லாம் உதவின என்ற பட்டியலில், 1952 ஆம் ஆண்டிலேயே ஆந்திராவை சேர்ந்த சீதாராமன் இருந்த பட்டனி போரை குறிப்பிட்டார். மொழிவாரி மாநிலங்கள் பற்றி 1948 இல் டிசம்பர் பத்தில் சார் குழு போடப்பட்டது. நேரு அப்போது மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்ற கருத்தை வைத்திருந்தார். காந்தி மறைவுக்கு இரண்டு நாட்கள் முன்பு, மொழிவாரி மாநிலங்கள் பற்றி கூறியுள்ளார். ஆனால் சார் குழு காந்திக்கு துரோகம் இழைத்தது. நேரு,படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் இணைந்தே அப்போது செயல்பட்டனர். 1951 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில், ஆந்திராவின் கொல்லுபட்டி சீதாராமன் பட்டினி போரை தொடங்கினார். அதை முப்பத்தைந்து நாட்களில் முடிக்கவைத்தவர் நேரு. அதன் பிறகு, பலுசு உட்பட சென்னை வந்து, போட்டி ஸ்ரீராமுலு பட்டினி போரை தொடங்கினர். ஐம்பத்தெட்டு நாட்கள் பட்டினி போருக்கு பின், ஸ்ரீராமுலு அதிலேயே மரணமடைந்தார். அதுவே ஆந்திரா எங்கும் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அந்த நிர்பந்தமே மாநிலங்கள் மறுசீரமைப்பு குழு ஒன்றை போடும்படி அரசை வற்புறுத்தியது. முதலில் அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களை நிராகரித்தார். மாநிலங்களின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையை படித்தபின்பு அம்நேட்கர் அதில் உடன்பட்டார். அப்போது அவரது கருத்தை என் மாற்றிக்கொண்டார் என சிலர் வினவினர். அதற்கு, ஒரே கருத்தில் எப்போதும் இருப்பது கழுதையின் குணம் என்று அம்பேத்கர் கடுமையாக பதில் சொன்னார். இத்தனை விசயங்களை நாகநாதன் கூறி அன்றை இந்திய சூழலில் எப்படிப்பட்ட நிலையில் இந்த மொழிவாரி மாநிலங்கள் வந்தன என்பதை விளக்கியது அருமையாக இருந்தது.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மண்டலங்களை அமைக்கவேண்டும் என்ற கருத்தும் வந்தது இன்றோ எல்லா மாநிலங்களின் அதிகாரமும் மத்திய அரசில் உள்ள சில அதிகாரிகளின் கைகளில் அடங்கி கிடக்கிறது என்றார் நாகநாதன். இன்றைக்கு மாநிலங்களுக்குள் உள்ள கவுன்சில்கூட இன்று இயங்காத நிலை உள்ளதை சுட்டி காட்டினார். சில ஆலோசகர்களின் ஆட்சிதான் மத்தியில் நடந்து வருகிறதே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறவில்லை என்றார்.நேரு அப்போதே மத்திய அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதில்தான் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை, நாகனாதனது உரை நமக்கு உணர்த்தியது. இப்போது அரசியல்சட்ட விதிகள் நாட்டை ஆளவில்லை. மாறாக உயர் அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. இவ்வாறு நாகநாதன் கூறியது நமக்கு ஒரு சரியான தெளிவை கொடுத்தது. அத்தைகைய உயர் அதிகாரிகளும் பன்னாட்டு மூலதன நிறுவங்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையையும் கூறினார்.


1930 ஆம் ஆண்டிலேயே ராஜாஜி முதல்வராக இருந்த போதே, அவரால் அகில இந்திய வானொலியில் உள்ள அதிகாரி மூலம்தான் ஒரு செய்தியை வெளிக்கொண்டுவர வேண்டுகோள் வைக்கவேண்டி இருந்தது. ஆனால் இன்று அப்படிப்பட்ட மத்திய தொலை தொடர்பு இலாக்காவில்கூட, எல்லா கார்பரேட்களும் உள்ளே நுழைந்து விட்டன என்றார். விமான நிலையத்திலும், துறைமுகங்களிலும் கூட மாநில அரசுகள் நுழைய முடியாது; ஆனால் பல பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் அவற்றில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. தொலை தொடர்புகளில், அந்நிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றார். இந்தியாவில் நடப்பது ஒற்றையாட்சி என்பதை அப்போது நாகநாதன் அறிவித்தார். மாநிலங்களின் உரிமைகளை மதிக்காமல் இருந்தால், அதுவே தேசிய இனங்களை அங்கீகரிக்காமல் இருப்பதுதான் எனபதை நாகநாதனின் உரையில் நாம் கண்டுகொண்டோம். அப்படி ஒரு நாடு இருக்குமானால் அது ஒரே நாடு என்ற கூற்றை கூறும் பாசிசம் என்றார் அவர். இந்தியாவில் இப்போது இருப்பது ஒரு ஒற்றையாட்சி என்பதை அவர் புரியவைத்தபோது, ரவி கூறிய ஒற்றையாட்சியை கொண்டுவர முயற்சி எடுக்கிறார்கள் என்ற கூற்று பொய்யாகிவிட்டது என்பது புரிந்தது. இங்கே நடப்பது, இங்கே இருப்பது ஒரு கூட்டாட்சி அரசு கட்டமைப்பு அல்ல என்றும், ஒரு ஒற்றையாட்சி அரசு இயந்திரம்தான் என்றும் வெகு நாட்களாக நாம் கூறிவருவது இன்று நாகநாதன் மூலம் வெளிப்பட்டுள்ளது ஒரு நல்ல பதிவு. .

Friday, October 29, 2010

விடுதலை புலிகள் மீதான தடை விசாரணை தீர்ப்பாயம் தொடர்கிறதே?

சென்னையில் அக்டோபர் கடைசி வார அமர்வு ஒன்று நடந்தது. வழக்கம் போல விக்ரம்ஜித் சென் என்ற நீதியரசரும், உதவி சொலிசிடர் ஜெனெரல் சிங்கும், அவருடன் டில்லியிலிருந்து வந்த பல வழக்கறிஞர்களும், அரசு தரப்பு காவல் அதிகாரிகளும், அதேபோல வழக்கறிஞர் உடையில் வைகோவும், அவரது கட்சியை சேர்ந்த பல வழக்கறிஞர்களும், பழ.நெடுமாறனும், அவரது வழக்கறிஞர் சந்திரசேகரனும், தமிழக மக்கள் உரிமை கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி, அவரது வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பகத்சிங் ,லிங்கன், அருள், கயல், ம..தி.மு.க.பெண் வழக்கறிஞர்கள், கட்சி முக்கியத்தர்கள், மீனவர் சங்கத்தின் மகேஷ், போன்ற பலரும் அணிதிரண்டிருந்தனர். திடீரென சுபிரமணிய சுவாமி, சந்திரலேகாவுடனும், சில வழக்கறிஞர்களுடனும், ஆறு பாதுகாப்பு காவலர்களுடனும், தீர்ப்பாய அறைக்குள் நுழைந்தார். பர, பரப்பை அவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால் யாருமே சு.சாமியை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரது பாதுகாவலர்களான அதிரடிப்படை காவல் படையினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருந்த துப்பாக்கிகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. நீதியரசர் வழக்கு விசாரணை செய்யும் அறையினுள் யாரும் ஆயுதங்களுடன் நுழைய கூடாது. ஆனால் இங்கே நுழைந்த அந்த பாதுகாப்பு காவலர்களை சு.சாமி தடுக்காமல் அனுமதித்திருந்தார்.. வந்து அமரும்போது தெளிவான முகத்துடன் இருந்த சு.சாமி சிறிது நேரத்தில், சுற்றி வளைத்து பார்த்துவிட்டு, எங்கு நோக்கினும் அந்த அறைக்குள் தமிழ் உணர்வாளர்கள் இருப்பதை கண்டுவிட்டு,முகமெல்லாம் கறுத்துவிட்டார் .
பத்தரை மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விசாரணைக்கு, நீதியரசர் பத்தே முக்காலுக்கு முன்னால்தான் வந்தார். வந்தவுடன் சு.சாமி பேசத்தொடங்கினார். சட்டவிரோத கூட்ட தடை சட்டம் நான்காவது பிரிவின்படி, யார், யாரை வாதாட அனுமதிக்கவேண்டும் என்ற விதிக்கு புறம்பாக அந்த எல்லையை தாண்டியும் தீர்ப்பாயம் அனுமதிக்க போகிறது என்று ஊடகங்களில் படித்ததாகவும், அது உணமைதான் என்றால் தானும் அதுபற்றி வாதிடப்போவதாகவும், நீதியரசர் வசம் கூறினார். தான் முதலில் ஐந்து சாட்சிகளை பார்க்க போவதாகும் அதற்கு பிறகு பேசலாம் என்றும் கூறிவிட்டார். அப்போது சு.சாமி தனக்கு வேறொரு வேலை இருப்பதாகவும், இப்போது அனுமதித்தால் பேசுவதாகவும் கூற, நீதியரசர் சாட்சிகளை விசாரித்த பிறகு என்று கூற, சு.சாமி வெளியேறி விட்டார். அதன்பிறகு, சாட்சிகளை விசாரிக்க தொடங்கினார் நீதியரசர்.

சாட்சிகள் என்று நீதியரசர் அறிவித்து விசாரித்தது எல்லாமே தமிழக காவல்துறையின் கியூ பிரிவை சேர்ந்த காவல் அதிகாரிகளைத்தான்.முதல் சாட்சி என்பதாக நீதியரசர் அறிவித்தார். சந்திரசேகர் என்ற ஒரு கியூ பிரிவு ஆய்வாளர் சாட்சியாக வந்து நின்றார். செல்வகுமார், பாலகுமார், கலியபெருமாள், ராஜா, மாரனாதன், நந்தகுமார், செல்வம், ஆகியோர் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றி கூறினார். அப்போது வழக்கறிஞர் வைகோ எழுந்து சட்டவிரோத கூட்ட சட்டத்தின் பத்தாவது பிரிவின் "அ" வின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளாரா என்று வினவினார். அதற்கே அந்த அதிகாரி திணறிப்போனார்.நீதியரசர் அதையே சாட்சியிடம் கேட்க, சாட்சியும் நிலைமை மாறுகிறதோ என்று அமைதியாக வழக்கு அவ்வாறு பதிவு செயப்பட்டது என்று கூறினார்.

அடுத்த சாட்சியாக டி.இளங்கோவன் என்ற முன்னாள் கியூ பிரிவு திருச்சி ஆய்வாளர் வந்து நின்றார். அவர் தான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர எதுவுமில்லை. பிரேம்ராஜ் என்ற ராஜ் என்ற துரை என்ற இலங்கை தமிழரை 2008 ஆம் மூன்றாம் மாதம் மூன்றாம் நாளில் வழக்கில் பதிவு செயது உள்ளே தள்ளியதாக கூறினார். எழுபது அடி நீளத்தில், பதினெட்டு அடி அகலத்தில் ஒரு படகை செய்து இலங்கைக்கு சாமான் எடுத்து செல்ல முயன்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார் என்பது அவரது கையெழுத்திட்ட அறிக்கையில் இருப்பதாக அந்த சாட்சி சாட்சியமளித்தார். அவர்கள் அனைவருக்குமே அந்த அளவு உள்ள படகுதான் தமிழ்நாட்டின் கடற்கரை ஓரங்களில் வழமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. அதாவது அந்த நீளமும், அந்த அகலமும் உள்ள ஒரு படகை கடினப்பட்டு இலங்கையிலிருந்து வந்த விடுதலை புலிகள் இங்கே உர்வாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெரிய வில்லை. அது தெரிந்தாலே அந்த குறிப்பிட்ட வழக்கு இட்டு கட்டப்பட்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்போது வைகோ தனது வழக்கறிஞர் உடையுடன் எழுந்து, சீமா பஷீர் என்ற தங்கள் கட்சிகாரர் இதேபோல புலி ஆதரவு பேச்சிற்காக கைது செயப்பட்டது கியூ பிரிவில் அந்த நேரத்தில் இருந்த அந்த சாட்சிக்கு தெரியுமா என வினவினார். சட்டவிரோத கூட்ட தடுப்பு சட்டத்தில் அந்த சீமா பஷீர் கைது செயப்பட்ட போது, அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தெரியுமா என்று வைகோ கேட்க, அதையே நீதியரசர் சாட்சியிடம் கேட்க, சாட்சி முழிக்க ஒரு சுவையான காட்சி அங்கே காணமுடிந்தது.

நீதியரசர் வைகோவிடம் எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது என்று வினவ, அவரும் வெறும் பேச்சிற்காக சட்டவிரோத கூட்ட தடை சட்டம் பயன்படுத்த முடியாது என்றும், அந்த பேச்சிற்கு பின்னால் அதை ஒட்டிய செயல் இருந்தால்தான் அந்த சட்டம் பயன்படுத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியதை வைகோ சுட்டிக்காட்ட, அதை நீதியரசரும் குறித்துக்கொண்டார். அதை ச்ட்டும்போது சீமா பஷீர் 2007 ஆம் ஆண்டு " தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டத்தையும் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அங்கே விவரித்தனர்.

அடுத்ததாக மூன்றாவது சாட்சியாக ராமநாதபுரத்தில் அப்போது கியூ பிரிவு ஆய்வாளராக இருந்த பாஸ்கரன் என்ற நாற்பது வயது காரரை கொண்டுவந்து நிறுத்தினார்கள். 2008 ஆம் ஆண்டு சீமான் ராமேஸ்வரத்தில் பேசிய பேச்சை ஆதாரமாக வைத்து போடப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டினார் அந்த சாட்சி. அப்போது கைது செயப்பட்ட சீமானை, அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது என்பது அந்த சாட்சிக்கு தெரியுமா என்று வைகோ வழக்கறிஞராக நின்று கேட்க, தெரியும் என்றார் அந்த சாட்சி. அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் எப்படி பேச்சிற்கு பிறகு, நடத்தப்பட்ட செயல்தான் வழக்காக போடப்பட முடியும் என்று கூறப்பட்டதை வைகோ எடுத்து சொன்னார். அந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட கூட்டத்தில், சீமான் இலங்கையில் தமிழர்கள் மீது இன அழிப்பு நடந்ததை பேசினார் என்பதும், அப்போது ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர்கள் இலங்கை அரசால் அழிக்கப்பட்டதும் தெரியுமா என்று சாட்சியிடம் கேட்க வைகோ கூறினார். அதையே நீதியரசரும் கேட்க, அந்த சாட்சி ஒப்புக்கொண்டார். அதை நீதியரசரும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். அதே சீமான் இப்போது அதேபோல இன்னொரு பேச்சிற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில்றையில் இருப்பது சாட்சிக்கு தெரியுமா என்ற கேள்வியை அங்கே கேட்டு அதன்மூலம் தமிழ்நாட்டில் நிலவும் நிலையை நீதியரசருக்கு வைகோ மறைமுகமாக புரிய வைத்தார்.

அடுத்து மொகமது அஸ்லாம் என்ற அடுத்த சாட்சி கூண்டில் ஏறினார். அவர் 2008 முதல் சென்னையில் கியூ பிரிவில் ஆய்வாளராக இருந்தவர். அமீர் அந்தோணி பரந்தாமன் என்ற இலங்கை தமிழரை கைது செய்தது பற்றி அவர் சாட்சி அளித்தார். குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டதையும் கூறினார். அப்போது அது நெடுமாறன் இயக்கத்தை சேர்ந்த பரந்தாமன் என்று எண்ணிக்கொண்டு, நெடுமாரனது வழக்கறிஞர் சந்திரசேகரன், கைது செயப்பட்ட பரந்தாமன் உயர்நீதிமன்றத்தல் விடுதலை செயப்பட்டார் என தெரியுமா என வினவ , சாட்சி முழிக்க பிறகுதான் அந்த சாட்சி குறிப்பிடுவது இலங்கை தமிழர் பரந்தாமனை என்று புரிய முடிந்தது. அதையும் நீதியரசர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். உடனடியாக வைகோ எழுந்து ௨௦௦௯ ஆம் ஆம்டு ஜூலை பதினைதாம் நாள் தன் மீது ஒரு வழக்கு தான் வெளியிட்ட ப்த்தகமான " நான் குற்றம் சாட்டுகிறேன்" என்ற வெளியீட்டு அரங்கில் பேசியதற்காக போடப்பட்டது தெரியுமா என கேட்க அதையும் ஏதோ ஒரு வழக்கு போடப்பட்டது தெரியும் என்பதாக அந்த சாட்சி கூறினார். அந்த வழக்கில் 124 -ஏ பிரிவும் 153 -ஏ பிரிவும் போடப்பட்டதை வைகோ கூற அதையும் நீதியரசர் கவனித்துக்கொண்டார்.

அதன் பிறகு ஐந்தாவது சாட்சியாக அதாவது ஆரசு சாட்சியாக தங்கவேல் என்ற திண்டுக்கல் மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சாட்சியாக விசாரிக்கப்பட்டார் அதன் பின் வழக்கறிஞர் ப்கழேந்தி கொடுத்த மனுவின் மீது வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன் பேச தொடங்கினார். அவர் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் தங்களை பவர் ஆப் அட்டோர்நியாக நியமித்திருப்பதை ஆவணங்களுடன் கொடுத்தி பேசினார். சுவிஸ் நாட்டில் இருக்கும் அந்த நபர் பிரஞ்சு மொழியில் கொடுத்து விட்டுள்ள ஆவணங்களையும் நீதியரசரிடம் ஒப்படைத்தார். அதேநேரம் இந்திய அரசு புலிகள் இயக்கம் கலைந்துவிட்டது என கூறியுள்ளதாக கூற, நீங்கள் என்ன சொல்கிறீகள் என நீதியரசர் கேட்க நாங்கள் அரசு சொல்வதை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிய வழக்கறிஞர் ராதாக்ருஷ்ணன், அப்படி சூழலில் எதற்க்காக புலிகள் இயக்கத்தை அரசு தடை செய்யவேண்டும் என மத்திய அரசுதான் விளக்கம் சொல்லவேண்டும் என பொடி வைத்தார்.


அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நெடுமாறன் வழக்கறிஞர் சந்திரசேகரனும், வைகோவும் புலிகள் இயக்கம் இன்னமும் இருக்கிறது என கூற, சந்திரசேகரன் இந்தியாவில்தான் இல்லை என கூற, உதவி சாளிசிடர் ஜெனரல் கலந்துவிட்டது என்பதற்கு அர்த்தம் காண அகராதி வேண்டும் என வினவ, நீதியரசர் குறிக்கிட்டு , கலைந்துபோனது என்றால் அழிந்துபோனது என்று பொருள் அல்ல என்று கூற , பிறகுதான் அந்த விவாதம் நிறைவுற்றது. அதற்குள் வழக்கறிஞர் சந்திரசேகரன் எழுந்து இது ஆங்கில வார்த்தையை புரிந்து கொள்வதில் எழுந்துவிட்ட பிரச்சனை என்றார். ஆனாலும் அங்கே தொழில்ரீதியாக வழக்கறிஞர்க நடந்துகொள்ளவேண்டியது முக்கியம் என்றும், அரசியல் கருத்துக்களை அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை எனவும் சிலர் பேசிக்கொண்டார்கள். எப்படியோ அந்த மறவு முடிவுற்றது. நீதியரசர் நவம்பர் முதல் நாள் டில்லியில் மதியம் இரண்டு மணிக்கு இது பற்றிய தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு எழுந்துவிட்டார். அப்படியோ இந்திய அரசு தந்தி இலங்கை சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட அரசியல் தந்திரத்திர்க்காக, புலிகள் மீதான தடை விசயத்தில் எந்த முடிவையும் எடுக்கும் என்றும், அது வரப்போகிற அமெர்க்க அதிபர் ஒபமாவின் உடன்பாட்டிற்கு ஒப்ப செய்யப்படும் என்றும் பலரும் எதிர்பார்கின்றனர். அதற்கு என்ன அர்த்தம்? ஓஹோ. சீனா இலங்கையில் காலூன்ற கூடாது என ஒபமா இந்தியாவை பயன்படுத்தி ஒரு புதிய முடிவை எடுக்க சொல்வாரோ? அதன்படி தீர்ப்பாயம் முடிவி இருக்குமோ?

Wednesday, October 27, 2010

கருத்துரிமை என்பது, காஷ்மிர்காரர் டில்லியில் பேசக்கூடாது என்பதுதானா? அருந்ததி எங்கேயும் பேசக்கூடாது என்பதுமா?


கிலானி காஷ்மீர்காரர். கிலானி ஹுரியத் அமைப்பின் ஒரு தலைவர். ஹுரியத் அமைப்பு காஷ்மீரில் இயங்கிவருகிறது. அது சுதந்திரம் என்று மூச்சுவீட்டுவருகிறது. ஹுரியத் தலைவர்களுடன், டில்லி பேச்சு வார்த்தை நடத்த போகிறோம் என்று கூறி வருகிறது.இந்த நேரத்தில் டில்லியில் அந்த கருத்தரங்கம் நடந்ததது. அதில் கிலானி பேச இருக்கும்போதே சில காஷ்மிரி பண்டிட்டுகள் அங்கேவந்து கலாட்ட செய்ய திட்டமிட்டார்கள். திட்டமிட்டே அவர்கள் வந்தார்கள் என்பதைவிட, திட்டமிட்டு அவர்கள் அனுப்பபட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் அவர்கள் கரங்களில் இந்திய தேசிய கொடிகள் கொடுத்துவிடப்பட்டிருந்தன. அதுவே அந்த காஷ்மிரி பண்டிதர்கள் இயக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரமாக இருந்தது. அந்த பண்டிதர்கள் தங்கள் நோக்கமான கூட்டத்தை நடத்தவிடாமல் கலாட்டா செய்வது என்பதில் கவனமாக இருந்தார்கள். அந்த கலாட்டாவை காட்சி ஊடகங்களில் வெளியிடுவதிலும் வெற்றிகரமான பாத்திரத்தை அவர்கள் எட்டினார்கள். அதேசமயம் கூட்டத்தை நடத்திய இளைஞர்கள் அவர்களை விரட்டிவிட்டு கூட்டத்தை நடத்துவதில் கவனமாக இருந்தார்கள்.

அந்த காஷ்மீர் பற்றிய கருத்தரங்கில் ஹுரியத் தலைவர் கிலானி தவிர, அருந்ததி ராய், மற்றும் டில்லி பல்கலை கழக பேராசிரியர் கிலானி ஆகியோரும் பேச்சாளர்கள் ஆனால் கலாட்டா செய்ய அனுப்பப்பட்ட காஷ்மிரி பண்டிதர்களுக்கு, ஹுரியத் தலைவர் கிலானியை பேசவிடாமல் செய்யவேண்டும் என்பது மட்டுமே கொடுக்கப்பட்ட நிகழ்ச்ச்சி நிரல் என்று தெரிகிறது. அதனால் அந்த டில்லி கூட்டத்தில் கலாட்ட செய்ய வந்தவர்களுக்கு, அருந்ததிராய் முக்கியமாக பட வில்லை. அதாவது இந்திய தலைநகர் டில்லியில் வந்து " சுதந்திரம்" பற்றி பேசவந்த கிலானியை கலாட்ட செய்வோம்: அதேசமயம் காஷ்மீர் சென்று " சுதந்திரம்" பற்றி பேசவந்த அருந்ததிராயை பிரச்ச்சனை ஆக்குவோம் என்பதுதான் இவர்கள் கொள்கை போலிருக்கிறது. அதாவது அவர்களே தங்கள் கலாட்டா மூலமும், பிரச்னையை எழுப்புவதன் மூலமும், இந்தியா வேறு, காஷ்மீர் வேறு என்று காட்டுவது போல உள்ளது. அவர்கள் பார்வையில் இந்தியா வேறு, காஷ்மீர் வேறு, அதேபோல இந்தியாவில் உள்ள அருந்ததிராய் வேறு, காஷ்மீரில் உள்ள கிலானி வேறு, அதாவது இந்தியாவில் உள்ள அருந்ததி ராய் காஷ்மீர் சென்று சுதந்திரம் பற்றி பேசக்கூடாது: அதேபோல காஷ்மீரில் உள்ள கிலானி இந்தியா வந்து சுதந்திரம் பற்றி பேசக்கூடாது. இப்போது புரிகிறதா இந்த கருத்துரிமை குரல்வளையை நெறிப்பவர்கள் அவர்களே இந்தியாவையும், காஷ்மீரையும் பிரித்துவிட்டார்கள். உண்மை அவர்களை நிர்ப்பந்தித்து விட்டதா என்பது நமக்கு தெரியவில்லை.


இப்போது டில்லி கூட்டம் பற்றி கூச்சல் போட்ட பா.ஜ.க. புதிய வாய்ப்பாக அருந்ததி ராய் காஷ்மீரில் பேசிய பேச்சு கூக்குரல் போட வசதி ஆனது என்று கண்டு கொண்டது. காஷ்மீர் சென்ற அருந்ததி ராய் அங்கே உள்ள நிலைமைகளை பார்த்துவிட்டு, காஷ்மீர் என்றுமே இந்தியாவுடன் இணைந்து இல்லை என்று பகிரங்கமாக கூறிவிட்டார். இது இந்திய ஆளும்கூட்டத்திற்கு பெரும் அதிர்ச்சியாக போய்விட்டது. அதாவது உலகெங்கும் புகழ் பெற்ற எழுத்தாளராக இருக்கும் அருந்ததி ராய், காஷ்மீர் மக்களுக்கு சாதகமான ஒரு கருத்தை அதுவும் அவர்களது சுதந்திரம் பற்றிய கருத்தை காஷ்மீர் சென்று கூறியது அவர்களது அடிப்படையையே தகர்த்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் போலும். இதில் அடிப்படையில் பா.ஜ.க. வேறு, காங்கிரசு வேறு என்று நாம் பிரித்து பார்க்க முடியாது. ஏன் என்றால், இந்தியா என்ற தேசத்தை காஷ்மீருடன் சேர்த்து உணர்ச்சிகரமாகவும், வரைபட பார்வையில் நின்றே நாட்டு பற்றை எடைபோடுபவர்கலாகவும், இருக்கின்ற ஒவ்வொரு இந்திய குடிமகனும் , இந்த விசயத்தில் உணர்ச்சிவசப்படவே செய்கின்றனர். சில வரலாற்று ஆசிரியர்களும், சில அறிவுஜீவிகளும், சில சுயாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களும், சில மக்கள் சார்பு கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களும், சில மக்கள் மத்தியில் உள்ள உண்மையான உணர்வுகளை அங்கீகரிப்பவர்களும், சில ஊடகவியலாளர்களும், சில எழுத்தாளர்களும் இந்த ஏக இந்தியா என்ற கருத்துகொப்பை தாண்டி, மக்கள் சார்ந்த சுயாட்சி மனோபாவத்தை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அடக்குமுறைகளால் எந்த மக்கள்தொகையின் உரிமை உணர்வையும் நசுக்கிவிட முடியாது என்று நம்புகிறவர்களாக இருக்கிறார்கள்.

அருந்ததி ராய் பேசிய பேச்சிற்காக அவர் மீது " ராஜ துரோகம்" என்று வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். அதை பல ஊடகங்களும் ஜால்ரா போட்டு வரவேற்கின்றன. இப்போது அருந்ததி எஆஇ இதற்கு பதில் சொல்லும் முகத்தோடு, காஷ்மீரில் உள்ள பத்து லட்சம் மக்கள் விரும்புவதைத்தான் சொன்னேன் என்கிறார். அங்குள்ள மக்கள் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார். காஷ்மீரின் பண்டிட்டுகளுக்காக சேர்த்துதான் பேசுகிறேன் என்கிறார். அங்கே பலியாகும் இந்திய ராணுவத்தின் தலித் ராணுவ வீரர்களுக்காக பேசுகிறேன் என்கிறார். ஒரு ஆக்கிரமிப்பை காஷ்மீரில் நடத்துவதற்கு இந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை எதிர்த்துதான் பேசுகிறேன் என்கிறார். அங்குள்ள சோபியன் நகரில் ஆசியா, நிலோபர் ஆகிய இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்டதை எடுத்துசொல்லி, அவர்களது உறவினர் ஷக்கீலை சந்தித்ததையும், அவர் இந்தியாவிடமிருந்து எந்த ஒரு நியாயமும் கிடைக்காதென கூறியதையும் எடுத்து சொல்கிறார். இப்போது மத்திய அரசு கிலானி மீதும், அருந்ததி ராய் மீதும் வழக்கு பதிவு செய்து பிரச்னையை சிக்கலாக்கபோவது இல்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதுவும் அப்படி வழக்கு பதிவு செய்தால், அதுவே பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையை காஷ்மீரில் நடத்துவதற்கு இடையூறாக முடியும் என்றும் கூறுகிறது. அதேசமயம் ஒரு மூவர் குழுவை அப்படிப்பட்ட பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு நிறுவ இருக்கும் நேரத்தில் , கருத்துகளுக்கு எதிரான வழக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கண்டிருக்கிறார்கள். அமெரிக்கா அதிபர் ஒபாமா வரும் நேரத்தில் அப்படி போடப்படும் வழக்கு, காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்கு எதிராக அமைந்து ஒபாமாவின் எதிர்பார்ப்பை உடைத்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாறு கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கும் பார்வை சிறிதும் இல்லாமல் அரசியல் காரனகளுக்காக வழக்கு பதிவு செய்வதை நிறுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதே கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரவையின் செயலாளரான பி.ராமன் கூறும்போது, "ராஜ துரோகம்" என்பது அரசுக்கு எதிராக மக்களை திருப்புவது என்பதாக பொருள்படும் என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அருந்ததி ராய் செய்யவில்லை என்றும், அதேசமயம் அவர் காஷ்மீர் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி மனோபாவத்தை பிற பகுத் மக்கள் மத்தியில் இந்தியாவில் தெரிவிக்க செய்துள்ளார் எனவும் கூறுகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்தால் அதுவே இந்த காஷ்மீரிகளுக்கு இந்தியாவுடன் இருக்கும் முரண்பாட்டை அதிகப்படுத்தும் என்றும் கூறுகிறார். வினைக்கு, எதிர்வினையாக ஆகிவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை செய்கிறார். அருந்ததி ராயின் பேச்சை ராஜ துரோகம் என்று எப்படி கூரமுடிய்ம் என்று ராமன் கேட்கிறார். இவர்கள் எல்லோருமே ஒன்றை மறந்துவிடுகிறார்கள். காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துலாவும் சில வாரங்களுக்கு முன்பு, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், அது நிபந்தனையின் பேரில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்றும் கூறினார். அதனால் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை கலைத்துவிட்டார்களா என்ன? இங்கே உள்ள ஆங்கில பிரபல ஏடு தனது தலையங்கத்தில் இத்தகைய கேள்வியை கேட்டிருக்கிறது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபல தமிழ் ஏடு தனது தலையங்கத்தில், "ஏன் இன்னும் தயக்கம்" என்று தலைப்பிட்டு, அதில் காஷ்மீர் மக்களது சுதந்திர உணர்வு 1900ஆண்டில் இருந்ததுபோல இப்போது இல்லை என்றும் ஆகவே அங்கு நாம் "சுதந்திரம்" பற்றி பேச அனுமதிக்க கூடாது என்றும் எழுதியுள்ளது. இவர்கள் பாராமல் படித்த பழங்கதையை மட்டுமே ஒப்பித்துக்கொண்டிருக்கிரார்கள். வரலாறும், இன்றைய காஷ்மீரத்தின் நிலைமையும், இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதுவரை அருந்ததி ராய் சொன்னதுபோல, எழுத்தாளர்களை நசுக்கும் போக்கு கொண்ட இந்தியா அய்யோ பாவம் என்றுதான் நாமும் சொல்லவேண்டும்.


Wednesday, October 20, 2010

மகிந்தா வழியை தி.மு.க. தலைமை ஏற்றுக்கொண்டுவிட்டதா?

இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்காவது மகிந்தா வழியை ஏற்றுக்கொள்ளும் துணிச்சல் வருமா? இந்திய அரசியல்வாதிகளில் முக்கால்வாசி பேர்களுக்கு மகிந்தா என்றால் யார் என்றே தெரியாது. ஊடகங்களில் இந்தியாவில் இருப்பவர்களிலும், ஆங்கில ஊடக காரர்களுக்கு தெரிந்த அளவுக்கு இந்தியாவில் மற்ற ஊடக ஜாம்பவான்களுக்கு கூட மகிந்தாவை தெரிந்திருக்க நியாமில்லை. டில்லியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ஆட்சியில் உள்ளவர்களுக்கு, அதிலும் குறிப்பாக சில முக்கிய அமைச்சர்களுக்கும், குறிப்பிட்ட அதிகாரிகளுக்கும் , மகிந்தா என்றால் இலங்கை தீவை அடக்கி ஆளும் சர்வாதிகாரி என்பது தெரியும். அப்போதும் அவர்கள் மகிந்தாவை பற்றி அக்கறை கொள்வதில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு அமெரிக்காவை பின்பற்றுவது என்று சொன்னால் பிடித்த விசயமாக இருக்கலாம். இலங்கையை போய் பின்பற்றுவார்களா? ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலங்கை ஒரு அன்றாட உணவு போன்ற முக்கிய பொருள்.

இலங்கை திவில் நடப்பது பற்றி தெரிந்திருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும். அதனால் இலங்கை தமிழர்கள் பிரச்சனை மட்டுமின்றி இலங்கை அதிபரின் பிரச்சனையையும் தெரிந்து வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் மகிந்தா விவகாரமும் இருந்தது. அதன் பின் மத்திய ஆரசு கிழித்த கோட்டை தாண்ட முடியாது என்பது இங்குள்ள ஆளும் கட்சி தலைமைக்கு கட்டாயமாக ஆன பிறகு, வர்கள் அதற்கு ஏற்றார்போல தாளம் போடத்தொடங்கினார்கள். தாளத்தை சத்தம்போட்டு போடும்போது, இரு நாடுகளிலும் தாளம் போடுபவர்களுக்குள் ஒரு நெருக்கம், ஒரு புரிதல், ஒரு பரஸ்பரம், ஒரு கொடுத்துவாங்குதல், ஒரு பரிமாற்றம், ஒரு ஒப்பந்தம், ஒரு நட்பு, ஒரு கடித போககுவரத்து, ஒரு பயணம், ஒரு இணைந்த செயல்பாடு, ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொடுக்கும் மன பக்குவம், ஒரு வரவேற்ப்பு கொடுக்கும் பாங்கு, ஒரு அரசியல்மேதைதன பரிமாற்றம், ஒரு வணிக உறவு, ஒரு நிலம் வாங்கும் போக்கு, ஒரு மகிழ்விக்கும் விருந்துபசாரம், ஒரு தொலை நோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடல் இத்தனையும்ம்வரத்தானே செய்யும்?

ராஜ ராஜ சோழன் பல நிலங்களையும் தனது ஆட்ச்சியின் கீழ் கொண்டு வார வேண்டும் என்றால், தனது தமிழ்த்தனத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, பார்ப்பனீய சக்திகளுக்கு சதிர்வேத மங்களத்தையும், பிரும்ம தேசத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயம் வரவில்லையா? அதுபோல அவரது வாரிசாக வரவேண்டும் என்றால், அதுபோலவே ஆளும் டில்லியுடன் ஒரு அரவணைப்பு, ஒரு அடிமைத்தனம், அதை ஒட்டி டில்லியின் நண்பர்களுடன் ஒரு கலந்தாய்வு, ஒரு கலப்பு ஆகியவை ஏற்படத்தானே செய்யும்? நீங்கள் ராஜ ராஜ சோழன் காலத்திய தலித் மக்கள் உழைக்கும் மக்களாக உழவு செய்யும் தமிழர்களாக இருந்ததனால், அவர்கள் கையில் வைத்திருந்த விலை நிலங்களை எப்படி அரசர் அந்தணர்களுக்கு தானம் கொடுக்க முடியும்? அந்த நிலங்களை தலித்துகள் கைகளில் இருந்து பறித்து எடுத்து, அந்த பரித்தேடுத்தலை சட்டமாக்கி அதற்கு பிறகுதானே அந்தணர்களுக்கு தானமாக கொடுக்க முடியும்? அதற்காக பிரும்ம தேசம், சதிர்வேத மங்கலம் ஆகியவற்றை ஏற்படுத்திதானே ஆகவேண்டும்?

அதுபோலத்தானே அதிபர் மஹிந்த ராஜ பக்சே, இந்தியா, சீனா, ஆகிய நாடுகளுக்கு தங்கள் நிலத்தை தானம் கொடுத்து பிழைப்பு நடத்துவதுதான் ஒரே வழி என்று இலங்கை ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக சிந்திக்கும் போது, அதையே தனது வாழ்க்கையாக நிரூபிக்கும் போது, தமிழீழ நிலத்தை போராளி தலைவன் பிரபாகரனிடம் இருந்து பறித்து எடுக்கத்தானே செய்யமுடியும்? அந்த முயற்ச்சியில் பல, பல உயிர்கள் இறக்கத்தானே செய்யும்? இறந்த உயிர்களும், கை போன மனிதர்களும், கால் போன பெண்டிரும், நச்சு காற்றில் இறந்துபட்ட உயிர்களும், கொத்து குண்டுகளில் கொல்லப்பட்டோரும், நீரின்றி செத்த பெருசுகளும், பாலின்றி இறந்த குழந்தைகளும், அதமிழர்களாக இருந்தால் யார் என்ன செய்ய? யார் தமிழர்களை அந்த போர்க்களத்தில் போய் வாழச்ச்கோன்னது? இப்படி த்தானே இங்குள்ள ஆளும் கட்சி தமிழர்கள் சிந்திக்க முடியும்? அவர்கள் ராஜ ராஜ சோழனது வாரிசுகளாக ஆக வேண்டியது முக்கியமா? உழைக்கும் தமிழர் கூட்டம் தனது நிலத்தை தானே ஆளவேண்டும் என்பது முக்கியமா? ஆகவே இங்கும், அங்கும் உள்ள ஆட்ச்ஹ்சியாலர்களது கூட்டு உருவானது.

அப்போது பல வணிக சூத்திரங்கள் பரிமாறப்பட்டன. அதில் ஒன்று உங்களுக்கு பணம் வேண்டும், வணிகம் வேண்டும், நல்ல பொருள் ஈட்ட வேண்டும். ராஜ ராஜ சோழன் போல நாடு கடந்து நிலம் ஆளவேண்டும். அதற்கு ஒரே வழி உங்கள் முதலாளி டில்லியை மட்டும் நம்பி இருந்தால் போதுமா? இந்த கேள்வி மகிந்தாவின் சிந்தனை இங்கும் தனது வேர்களை போடமுடிந்தது. மகிந்தா இந்திய அரசுக்கு போட்டியாக, சீன அரசை இறக்கிவிட்டார். அது அவருக்கு பலன் கொடுத்தது. நமது அண்ணன்களும் கற்றுக்கொண்டனர். தமிழக துணை முதல்வரது சீன பயணமும், அவரது அண்ணன் மத்திய அமைச்சரது சீன பயணமும் அதற்கு வழி செய்தன. அய்யா அரசவையில் அமர்ந்தவாறு, அதற்கு ஆலோசனை வழங்கி வழி அனுப்பி வைத்தார். மகிந்தாவின் கடிதத்திற்காக இலங்கைக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த அதே கரங்கள்தான், அதே மூளைதான் இப்போதும் தனது மகன்களை சீன தேசம் அனுப்பிவைத்து அங்குள்ள முதலாளிகளுடன் பல தொழில் உடன்படிக்கைகளை போட உதவ முடிகிறது.

இப்போது புரிகிறதா? இவர்கள் டில்லிக்கு கூட விசுவாசம் இல்லை. தங்களுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். ராஜ ராஜ சோழனின் வாரிசுகள்தான் என இப்போதாவது உலக தமிழர்கள் ஒப்புக்கொள்ளுங்கள்.

Monday, October 18, 2010

மும்பை தாக்குதலை நடத்தியது அமெரிக்க குடிமகனா? அமெரிக்க உளவு துறையா?

இப்போது அம்பலமாயிருக்கும் செய்தி இதுவரை பேசப்பட்ட, அல்லது விவாதிக்கப்பட்ட பாணியில் அல்லாமல், மும்பை தாக்குதலில் முழுமையாக ஈடுபட்டது யார் என்பதில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது. பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறைதான் என்பதாக இருந்த பதிவை மாற்றிவிட்டது இப்போது அமெரிக்க உளவுத்துறையின் பாத்திரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. புரோபுப்ளிகா என்ற இணையதளத்தில், செபஸ்டியன் ரோடெல்லா என்பவர் எப்படி மும்பை தாக்குதலின் மூளையான டேவிட் காலமன் ஹெட்லி என்ற லஷ்கர்-ஈ- தொய்பாவின் சிகாகோ கிளையில் உள்ள பயங்கரவாதி, அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான எப். பி.ஐ. யில் ஐக்கியமானார் என்று அம்பலப்படுத்தியுள்ளார். இரண்டு ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். அனைத்துநாட்டு பயங்கரவாத கண்காணிப்பு அறிக்கை எண்; 685 இல் அவை வெளியாகயுள்ளன. அக்டோபர்-15 , 16 இல் வெளியான இந்த அறிக்கைகளை, அங்க்கீகரிப்பது போல, " வாஷிங்க்டன் போஸ்ட் " வெளியிட்டது. ஹெட்லியை குற்றம் சாட்டி தாக்கல் செயப்பட்ட குற்றப்பத்திரிகை ஆய்விலிருந்து நான்கில், மூன்று பங்கு விவரங்கள் இந்த அறிக்கையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

அந்த அம்பலப்படுத்தும் அறிக்கையில், ஹெட்லியின் இரண்டு மனைவிகளின் வாக்குமூலங்கள் அதிர்ச்சியை தருகின்றன.ஒரு மனைவி அமெரிக்க குடி. அவர் அமெரிக்காவில் வாழ்கிறார். இன்னொரு மனைவி மொராக்கோவை சேர்ந்தவர். அவர் பாகிஸ்தானில் வாழ்ந்துவருபவர். அதேபோல எப்.பி.ஐ. யின் இன்றைய மற்றும் நேற்றைய அதிகாரிகளும் தங்கள் வாக்குமூலங்களை கொடுத்துள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் ஹெட்லியின் மனைவி, மூன்று முறை அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான எப்.பி.ஐ. யின் அதிகாரிகளிடம் நேரடியாக நியு யார்க் நகரில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் ஹெட்லி பாகிஸ்தானில் இருக்கும் லஷ்கர்-ஈ-தொய்பாவின் முகாமில்,பயிற்சிஎடுத்ததீவிரபோராளிஎன்றுகுறிப்பிட்டிருந்தார்.
ஹெட்லி இரவு நேரம் பயன்படுத்தும் கண்ணாடிகளை வாங்கியதாகவும் அவர் மனைவி கூறியுள்ளார். அத்தகைய செய்திகளை மற்ற அதிகாரிகளின் சாட்சிகளும் உறுதி செய்தனர்.

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவரது கூற்றுப்படி, பாகிஸ்தானில் பயிற்சி எடுக்கும் போதே, ஹெட்லி அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ.யின் சம்பளம் வாங்கும் ஒரு உளவாளி என்பது அம்பலமாகி உள்ளது. உள்ளூரில் தாக்குதலில் ஈடுபட்டதாக ஹெட்லியை நியு யார்க் காவல்துறை கைது செய்தது. அது மும்பை தாக்குதலுக்கு பிறகு ஹெட்லியை காப்பாற்ற அமெரிக்க உளவுத்துறை எடுத்த முயற்சி. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை, ஐரோப்பாவில் உள்ள அல்-கொய்தாவுடன் ஹெட்லி தொடர்பு வைத்துள்ளான் என்று அமெரிக்க உளவு துறையிடம் கூறிய பிற்பாடும், மும்பை தாக்குதல் நடந்து பதினோரு மாதங்கள் ஆகியும் ஹெட்லி பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட வில்லை. அதுவே அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ. பற்றி நமக்கு புரிவதற்கு போதுமானது. .ஹெட்லியின் அமெரிக்க மனைவி கொடுத்த வாக்குமூலங்கள் எல்லாம் 2005
ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் உள்ள அமெரிக்க உளவு துறையிடம் கொடுக்கப்பட்டது.அப்படி இருந்தும் அமெரிக்க உளவு நிறுவனம் அதை இந்திய அரசிடம் கூறவில்லை. ஏன்? ஏன்? என்று இப்போதாவது நாம் கேட்க வேண்டும்.

ஹெட்லி மூன்று மனிவிமார்களை மணந்தவர். அவர்களில் இன்னொருவர் மொராக்கோவை சேர்ந்தவர். அவர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூலம், அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் ஹெட்லியை பற்றி பல செய்திகளை பல முறை சந்தித்து வாக்குமூலமாக கூறியுள்ளார். அந்த மனைவியும், ஹெட்லியும் மும்பை வந்து அங்குள்ள தாஜ் ஓட்டலில் தங்கி இருந்ததை படங்களுடன் காட்டி அந்த மனைவி பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறையிடம் அப்போதே கூறியிருக்கிறார் என்ற செய்தி இப்போது வெளியாகி உள்ளது. அதாவது மும்பை தாக்குதலுக்கு ஓராண்டு முன்பே ஹெட்லியின் மனைவி ஆதாரபூர்வமாக அமெரிக்க உளவு நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால் அப்போது ஒரு உளவு துறை அதிகாரி, அவரிடம் "வெளியே போ " என்பதாக கூறியுள்ளார். அதற்கு என்ன பொருள்? நாங்கள் ஏற்பாடு செய்து, நாங்களே தயாரித்துள்ள ஹெட்லி பற்றி எங்களிடமே குறை சொல்ல வந்துவிட்டாயா? என்பதுதானே அதற்கு பொருள்? அதன் அர்த்தம் என்ன தெரிகிறதா? அமெரிக்கவே ஏற்பாடு செய்ததுதான் மும்பை தாக்குதல் என்பது இதிலிருந்தாவது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

அப்படி பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள அமெரிக்க உளவு துறை அதிகாரிகளிடம், ஹெட்லியின் அந்த மொராக்கா மனைவி ஹெட்லியின் நண்பர்கள் லஷ்கர்-ஈ-தொயபாவில் இருப்பதையும், ஹெட்லி பயங்கரமான இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவராக இருப்பதையும் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த அமெரிக்க அதிகாரிகளோ, ஏன் இந்தியாவிடம் இது பற்றி முன்கூட்டியே கூறவில்லை என்று கேட்டதற்கு. குறிப்பான செய்திகள் கிடைக்கவில்லை என்றும் , அதனால்தான் இந்தியாவிடம் முன்னெச்சரிக்கையாக கூறவில்லை என்றும் அந்த அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அதாவது மனைவியால் காட்டப்படும் படத்தின் மூலம் மும்பை தாஜ் ஓட்டலுக்கு வந்ததாகவும், அங்கு வந்த ஹெட்லி லஷ்கருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவரது மனைவியே கூறுவதும்கூட, இந்த அமெரிக்க உளவு துறை அதிகாரிகளுக்கு குறிப்பான விவரங்களாக தெரியவில்லை. அதாவது தாங்களே ஏற்பாடு செய்துள்ள ஒரு மும்பை தாக்குதலுக்கு முன்கூட்டியே அதுபற்றிய செய்தியை இந்திய உளவுத்துறையிடம் கொடுத்துவிட்டு, தங்களது சதி திட்டம் தவிடு பொடியாக அமெரிக்க உளவு துறை அனுமதிக்குமா?
அதனால் ஹெட்லியின் மனைவிகள் கூறிய செய்திகள் எல்லாமே, பொதுவான செய்திகள்தான் என்றும், அவை குறிப்பாக எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறவில்லை என்றும் ஒரு மழுப்புதலை, ஒரு தப்பித்தல் இந்த அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள் இப்போது கூறுகிறார்கள். ஹெட்லியின் தொடர்புகள் பல சிக்கலான விசயங்களை காட்டுகின்றன. இடைநீக்கம் செய்யப்ப்பட்ட பாகிஸ்தான் உளவு அதிகாரியும், இன்று அல்- கொய்தா இயக்கத்தின் ஒரு கட்டளை தளபதியாக இருக்கும் இலியாஸ் காஷ்மீரி என்ற பாகிஸ்தான் நாட்டு போராளியும் ஹெட்லியின் நெருக்கமான தொடர்புகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. முதலில் ஹெட்லி அமெரிக்காவின் போதை மருந்து தடுப்பு துறையின் ஒற்றராக நியமிக்கப்பட்டவர். பிறகு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் பற்றிய செய்திகளை திரட்டி தரச்சொல்லி, அவரிடம் அமெரிக்க உளவுத்துறை பொறுப்பு கொடுத்திருந்தது. அதற்காக அமெரிக்க அரசின் முழு ஒத்துழைப்புடன் ஹெட்லி பாகிஸ்தானிற்கு அவ்வப்போது சென்று வந்தார்.. அந்த நேரத்தில் ஹெட்லியின் அமெரிக்க மனைவி நியுயார்க்கில் உள்ள அமெரிக்க உளவுத்துறை வசம் ஹெட்லி பற்றிய குற்றச்சாட்டுகளை கூறியபோதும், அவர் அனுப்பும் இணைய அஞ்சல்கள் பற்றி குறைகளை கூறிய போதும், ஹெட்லி தன்னை [ மனைவியை] துன்புறுத்துகிறார் என்று கூறிய போதும் அதை அமெரிக்க உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. தாங்கள் ஹெட்லியை நம்பி பெரிய பொறுப்பான ரகசியமான வேலையை கொடுத்துள்ள அமெரிக்க உளவு துறை எப்படி ஹெட்லி மனைவியின் குற்றச்சாட்டுகளை செவி மடுக்கும்?

ஆனால் அதே அமெரிக்க உளவு துறை, 2008 ஆம் ஆண்டு இந்திய உளவு துறையிடம் ஒரு செய்தியை முன்னேச்சடிக்கை என்ற பெயரில் கூறியது. அது கடல் வழியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிட்டுள்ளார்கள் என்ற செய்தி. ஆனால் அதை ஹெட்லி மூலமாக எடுத்தோம் என்று அமெரிக்க உளவு துறை கூறவில்லை. ஏன் என்றால் ஹெட்லியை வைத்து அந்த திட்டத்தை தயார் செய்வதும் தாங்கள்தான் என்று தெரிந்து விடக்கூடாதே என்ற காரணத்திற்க்காக அவ்வாறு சொல்லாமல் இருந்திருக்க முடியும். ஹெட்லி இந்தியாவிற்கு ஐந்து முறை வருகை புரிந்தான் என்றும், அப்போது லஷ்கருக்காக தாக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அவனுடையதாக இருந்தது என்பதும், அவன் அப்படி வருகை புரிந்த நேரத்தில் தாக்குதலுக்கான இடத்தை தேர்வு செய்தான் என்றும், கடல் வழியாக படகு வந்து இறங்கவேண்டிய இடத்தையும் அப்போது தேர்வு செய்தான் என்றும் இப்போது அமெரிக்க உளவு துறை தனது விசாரணையில் கிடைத்ததாக கூறுகிறது. .இத்தகைய செய்திகளை இந்திய அரசிற்கு கொடுக்காமல் அப்போது அமெரிக்க உளவு துறை மறைத்தது ஏன் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும். தாக்குதல் திட்டம் தோற்றுவிடக்கூடாதே என்ற அக்கறையை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

இதில் வேறு சில செய்திகளும் உள்ளன. அதாவது தனது இந்திய வர்ய்கைக்கு முன்பே, இந்திய அரசிடம் தனது பாகிஸ்தான் பிறப்பு தெரிந்து விடக்கூடாதே என்பதற்காக, தனது பெயரான தாவூது கிலானி என்ற பாகிஸ்தான் பெயரை மாற்றி அமெர்க்க பெயரான டேவிட் காலமன் ஹெட்லி என்ற பெயருக்கு ஒரு பாஸ்போர்ட் எடுக்கிறான். இதுவும் அமெரிக்க உளவுத்துறையின் ஏற்பாடுதானே? மும்பை தாக்குதலுக்கு பிறகும், ஹெட்லி மீண்டும் இந்தியா வந்துள்ளான். அப்போதும் அமெரிக்க உளவுத்துறை அதுபற்றி இந்திய அரசிடம் கூறவில்லை. அதேசமயம் அமெரிக்க உளவு நிறுவனம் , கோபன்ஹெகனில் மற்றொரு தாக்குதலுக்கு ஹெட்லி திட்டமிடுவதை இடைமறித்த செய்தி மூலம் தெரிந்துகொண்ட பின்பே ஹெட்லியை கைது செய்கின்றனர்.அதாவது 2005 ஆம் ஆண்டு முகமது நபி பற்றி ஒரு கேலிசித்திரம் வரைந்த ஒரு நாளேடு மீதான தாக்குதலை கோபன் ஹேகனில் திட்டமிடும் போதுதான், அமெரிக்க நடவடிக்கை எடுத்தது. அதாவது தான் திட்டமிட்டு கொடுத்த சதிக்கு ஹெட்லி பயன்படலாம். ஆனால் தானாகவே ஹெட்லி இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிட்டு விடக்கூடாது என்பதுதான் அமெரிக்காவின் கொள்கையாக இருக்கிறது.

ஹெட்லி பற்றி அமெரிக்கா அறிவித்த பிற்பாடும், அவனை இந்திய அதிகாரிகள் நேரடியாக எடுத்துசென்று விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை? அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் இந்திய அதிகாரிகள் அங்கே சென்று தனியாக அவனை விசாரிக்கவும் ஏன் அமெரிக்கா அனுமதிக்க வில்லை? அமெரிக்கா உளவு நிறுவனமான எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்புதான் விசாரிக்கவேண்டும் என்று ஏன் வற்புறுத்தினார்கள்? தனியாக விசாரிக்கப்பட்டால் ஹெட்லி அமெரிக்கா உளவு நிறுவனத்தின் ஏற்பாட்டில்தான் மும்பை தாக்குதலை நடத்த திட்டமிட்டோம் என்று கூறி விடுவான் என்பதற்காகத்தானே? இதுபோல அமெரிக்கா உளவுதுறை நடந்து கொள்ளவேண்டிய தேவை என்ன? மும்பை தாக்குதலில் அமெரிக்கா உளவு துறைக்கு உள்ள ரகசிய உறவு என்ன? அதற்கு முக்கிய பங்கு அமெரிக்கா அரசு வகிக்க வேண்டிய காரணமென்ன?

இத்தனை கேள்விகளுக்கும் விடை காண வேண்டும் என்றால், அமெரிக்கவிற்கும், இந்தியாவிற்கும் நடந்து வரும் அரசியல் உறவுகள், ராணுவ ஒப்பந்தங்கள், மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் ஆகியவை பற்றி ஒரு ஆய்வு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவிற்கு ஏதாவது நிர்ப்பந்தம் இரூக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவில் அமெரிக்காவுடனான ஏதாவது ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு உள்ளதா என்று நினைத்து பார்க்க வேண்டும். அந்த எதிர்ப்பு இப்படிப்பட்ட மும்பை தாக்குதல் போன்ற ஒன்றால், உடைக்கப்பட முடியுமா? என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்தியாவில் அமெரிக்கவுடன்னான அணுசக்தி ஒப்பந்தம் மீது நாட்டுப்பற்று உள்ள சக்திகள் மத்தியில் எதிர்ப்பு இருப்பது அமெரிக்காவிற்கு கவலை அளக்கிறது என்பது உணமைதான். அதை உடைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதும் தெரிந்த செய்திதான். அத்தைகைய முயற்ச்சியில் அமெரிக்கவால் பா.ஜ.க. வை அமெரிக்கா ஆதரவாக அணு சக்தி விபத்து இழப்பீடு சட்டத்தை போடும்போது கொடுவர முடிந்தது. ஆனால் இந்திய மக்களை அப்படி காசு கொடுத்து அரசியல்வாதிகளை வாங்குவது போல வாங்க முடியாதே? அதனால்தான் இப்படி ஒரு மும்பை தாக்குதல் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டிய தேவை அமெரிக்கா அரசுக்கு இருக்கிறது. அதுவே இத்தனை நாடகங்களுக்கும் காரணம் என்பதை நாட்டு பற்றுள்ளவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். ஒபாமா வரும்போது அதையே எதிரொலிக்க வேண்டும். செய்வார்களா?

Sunday, October 17, 2010

தமிழர் வரலாறும், பண்பாடும், எந்தகண்கொண்டு காணப்படவேண்டும்?

இன்றைய சூழலில் தமிழர் உரிமைகள் என்பது உலக தமிழர் மத்தியில் அதிகமாக கவனிக்கப்படும் விசயமாக அறுதியிடப்பட்டு வருகிறது. தமிழர் உரிமைகள் எழுப்பப்பட வேண்டுமானால், தமிழர்களது இன்றைய நிலைமை பற்றிய மதிப்பீடு அறியப்பட வேண்டும். இன்றைய நிலையை ஒப்பீட்டு அறிய, கடந்த கால தமிழர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள தமிழர் வரலாறு படிக்கப்பட வேண்டும். அதனால் தமிழர் வரலாறும், பண்பாடும் பலராலும் இன்று கூறப்பட்டு வருகிறது. பலராலும் எழுதப்பட்டும் வருகிறது.
அவ்வாறு தமிழர் வரலாறு, கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிலும் பேசப்பட்டது. எழுதப்பட்டது. காட்டப்பட்டது. ஓதில் காட்டப்பட்டது என்ற செய்திதான் அதிகமான மக்களை போய் அடையக்கூடியது. அதாவது காட்டப்படுவது என்பது கண்காட்சியாக வைக்கப்பட்டும், காட்சிகளாக உருவாக்கப்பட்டு என்பதாகவும்,பொருள்படுகிறது. அப்படி செம்மொழி மாநாட்டில் ஒரு கண்காட்சி வைக்கப்பட்டது. அதன் முயற்சி முழுமையாக, அனைச்சர் தங்கம் தென்னரசுவினதாக இருக்கலாம். ஆனாக் அதுதான் பெரும்பான்மையான தமிழ் மக்களை கவர்ந்தது. அதில் பல தமிழர்களது பண்பாட்டு அடையாளங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. காட்சிகள் மூலமாக பல பண்பாட்டு நிகழ்வுகள் காட்டப்பட்டன. தமிழர்களது வீர விளையாட்டுக்கள், காதல் காட்சிகள், களை திறமைகள் என அந்த கண்காட்சி காண்போர் மனதை கவர்ந்தது.
தமிழன் புறநானூற்றிலும், அகநானூற்றிலும், சங்க காலத்திலும் எப்படி வாழ்ந்தான் என்ற வரலாற்று சான்றுகள் அங்கே எடுத்து வைக்கப்பட்டன. அப்படி இருந்தும் நிகழ் கால தமிழன் எழத்தில் எப்படி போரிட்டான் என்பதும், எப்படி சுற்றி வளைக்கப்பட்டன என்பதும், எப்படி தரைபடை,கடல் படை,மற்றும் வான்படையை கட்டி அமைத்தான் என்ற வரலாறு அரசியல் காரணங்களால் இடம் பெறவில்லை. அது அவர்களது அரசியலாக இருந்துவிட்டு போகட்டும். நாம் கற்க வேண்டியது தமிழரது உண்மை வரலாறு இல்லையா? தமிழரது உண்மையான பண்பாடு பற்றி இல்லையா?
அது இன்றைய நிலையில் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? இவ்வாறான கேள்விகளுக்கு விடை காண வேண்டும் அல்லவா? அவ்வாறு காண்பதற்கு, தேர்தல் அரசியலை சார்ந்து நிற்கும் கூட்டத்தினரிடமிருந்து சற்றே விலகி இது பற்றி சிறிது அலச வேண்டும் அல்லவா? அதற்கு தமிழர் இயக்கங்களை, தமிழின உணர்வாளர்கள் நடத்தும் நிகழ்வுகளை, அப்படி உணர்வுள்ளவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளை, அல்லது கண்காட்சி நிகழ்ச்சிகளை, நாம் நாடி செல்வோமல்லவா? அப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக பெண்கள் செயற்களம் நடத்திய, தமிழர் பண்பாட்டு கண்காட்ச்சிக்கு பார்வையாளனாக சென்றேன்.
பண்டை தமிழர்கள் கற்கால மனிதர்களாகம் வேட்டையாடும் காலத்திய நிலையில், அடுத்து விவசாயத்தை கற்ற நிலையில், பல்வேறு கலைகளை படைத்த வரலாற்றில், மன்னர் கால ஆட்சிகளில், உற்பத்திகளில் ஈடுபட்ட காலங்களில், கடல் கடந்து வணிகம் செய்த காலத்தில்,வீரத்தில்,காதலில்,இலக்கியத்தில்,என்பதாக தீட்டப்பட்ட ஓவியங்களை, சித்திரங்களை, விவரிப்புகளை,அனைத்தையும் காணமுடிந்ததது.கடுமையான உழைப்பு இன்றி இவை அவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட முடியாது.அததகைய கடுமையானமுயற்ச்சியை பெண்கள் மூலமாக செயலபடுத்தியிருப்பது பெரும் சிறப்பு என உணர முடிந்தது.
அதேசமயம் அந்த கண்காட்சி ஒரு பெரிய கேள்வியை கிளப்பி விட்டது. அதில் தமிழர் வரலாற்றை வர்ணிக்கும் போது, ஆண்களின் பங்கை உயர்த்தி பிடித்திருப்பதை உணர முடிந்தது, அதுதான் தமிழர் வரலாறா? அல்லது அது அவ்வாறு பொருள்படும்படி ஆண்களால் எழுதப்பட்டுள்ளதா? பெண்பாற் கவிஞர்கள் அந்த காலத்தில் ஏதாவது வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களா? அல்லது அப்படி எழுதியவை நமது கண்களுக்கு பட வில்லையா? அதேபோல கண்காட்சியின் கடைசி பகுதியில் இன்றுள்ள சாதி ஒடுக்கல் வரையப்பட்டுள்ளது. அது இடையில் வந்ததா? அப்படியானால் எந்த காலகட்டத்தில் இடையில் வந்தது? தமிழ் அரசர்களே அதை அதாவது சாதி வேறுபாட்டை ஆதரித்து நின்றார்களா?
உணவு உற்பத்தி என்ற விசயத்தில் நெல் உற்பத்தி எப்போது வந்தது? கம்பு, கேழ்வரகு, சோளம், திணை ஆகிய வகைகள் சமீப காலம் வரை பயிரிடப்படுவதும், அதிகமாகஉட்கொள்ளப்படுவதும் இருந்து வந்ததே? என்பதாம் ஆண்டுகள் வரை, தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில், அததகைய பயிர்களை மாட்டுமே அதிகம் உண்டு இழைத்துவந்த் தமிழ் மக்கள் மத்தியில்தானே வாழ்ந்து வந்தோம்? அதனால் நெல்வந்து அததகைய திணைகளை மாற்றி அமைத்தது, தமிழனது வாழ்வியலில் கொண்டு வந்த மாற்றம் பயனுள்ளதா? அல்லது தமிழனை உணவு பழக்கத்திலும் மாற்றி அமைத்து பலவீனப்படுத்தி விட்டதா? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுந்து விட்டன.
அதனால் நாம் தமிழர் வரலாற்றை எந்த கண்களுடன் காண வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் தமிழ் அரசர்கள் என்று இன்று புகழப்படுபவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்ன செய்தார்கள்? எப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார்கள்? யாருக்கு ஆதரவாக இருந்தார்கள்? தமிழர்களின் வாழ்வு மலர உதவினார்களா? அல்லது தமிழர்களின் பண்பாடுகளை நசுக்குவதற்கும், உழைக்கும் தமிழர்களின், வாழ்வாதாரத்தை அழிப்பதற்கும், தீவிரமாக செயல்பட்டார்களா? அப்படி செய்திருந்தால், அவர்களை தமிழர்களின் அரசர்கள் என்று பெருமைப்படலாமா? தமிழர்களில் நல்லவர்களும் இருந்தார்கள், துரோகிகளும் இருந்தார்கள் என்று ஒப்புக்கொள்ளப்போகிரோமா? இல்லையா?
இத்தகைய கேள்விகள் நமக்குள் எழ வேண்டும். அவ்வாறு எழும்போது உலகம் முழுக்க மனித இனம் வளர்ந்தது போலவே, தமிழ் இனத்தின் கற்காலங்களிலும்ம பெண் தலைமை சமுதாய அமைப்புதான் இருதது எனபதையும், பெண்கள் தலைமையில் ஆண்கள் வேட்டையாடுதலை செய்தார்கள் என்பதிலும் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்க தேவையில்லை. அப்படி ஆணும், பெண்ணும் சமமாக இருந்த தமிழர்கள் மத்தியிலும் பாலின வேறுபாடு வந்தது என்பதை நாம் மறைக்க தேவையில்லை. அந்த பாலின வேறுபாடும், எழத்தில் போர்க்களத்தில், பெண்புலிகள் துவக்கு எடுத்து போரிடுன் போதுதான் உணமையான பாலின சமத்துவம் மீண்டும் படைக்கப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பகிரங்கமாக உரக்க கூவ வேண்டும்.
அதுபோல ராஜ ராஜ சோழனது ஆட்சி காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அவர்கள் நிலங்களில் இருந்து விரட்டி அடித்து அவர்களின் இடம் பெயர்வை சட்டரீதியாக ஆக்கிய கொடியவன்தான் அந்த அரசன் என்பதை நாம் பதிவு செய்யாமல் அவனை புகழ முடியுமா? அதுமட்டுமின்றி சதிர்வேத மங்கலத்தில் ராஜ ராஜ சோழனுக்கு எதிராகம உழைக்கும் தமிழ் மக்களான தாழ்த்தப்பட்ட மாக்கள் போராடியதை மறைக்கமுடியுமா?இன்றுஅதேபோல அரச தன்மையை கொண்டுள்ள மன்னர்கள் வேண்டுமானால் அந்த அரசனை புகழலாம். விடுதலை வேண்டிசெயல்படுவோர் புகழமுடியுமா?
ஆகவே இந்த சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய வேறுபாடுகளை உடைத்தெறிவதும் தமிழ் தேசிய விடுதலையின் ஒரு பகுதியும், தொகுதியும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உகத்தில் பல நாடுகளில் பல தேசிய இணைகள் விடுதலைக்காக போராடி உள்ளன. பல விடுதலை அடைந்துள்ளன. ஆனால் தமிழ் தேசிய இனம் மட்டுமே தனது விடுதலையின் ஊடே, பாலின வேறுபாட்டையும், சாதி வேறுபாட்டையும், மத வேறுபாட்டையும், வர்க்க வஐபாட்டையும் நீக்கும் போராட்டங்களை உள்ளடக்கி வளர்ந்து வருகிறது. அதனால்தான் தமிழர் திருநாள் என்று அறியப்பட்ட பொங்கல், உழவர்களது அறுவடை திருநாளாக, கொண்டாடப்படுகிறது. தமிழர் என்றால் உழவர் என்பத்கும் அதில் பொருள் படுகிறது.
ஆகவே தமிழர் விடுதலை என்ற தொலைநோக்கு பார்வையுடன் தமிழர் வரலாற்றை தொகுக்கும போது, பாலின சுதந்திரம், சாதி வேறுபாடு நீக்கம், ஆகியவற்றை இணைத்து காண்பதுதான் தமிழர் பண்பாட்டில் சிறப்புதன்மையையும், செழிப்புதன்மையையுன் ஏற்படுத்தி, எதிர்கால விடுதலைக்கு வித்திட முடியும் என்பதை நாம் உரக்க கூறலாம்.








புதிய விண்டோ
அனைத்தையும் அச்சிடு
ஸ்பான்சர் செய்யப்பட்ட இணைப்புகள்
Life In The Robotics Lab
Who builds humanoid robots? Blog, contests and more!
Robot Manipulators
Manual, semi and automatic models Capacities from 250 up to 20,000kg
Indoor Research Robot
Affordable, Capable, and Expandable Program in Linux or Windows
Dynamixel, Bioloid, OLLO
Smart Robot Servo, DIY Robot Kit ROBOTIS - All you need for robot
X10 for Android
X10 Remotes for Android Phones Download OpenRemote 2.0 Now!
பற்றி மேலும்…
இந்த இணைப்புகளைப் பற்றி

Thursday, October 14, 2010

தண்ணீர் உரிமை மனித உரிமை என்று ஐ.நா.சொல்கிறதே?

நம்ம ஊர்காரங்களுக்கு காது கேட்கலையோ என்னவோ. இல்ல. நம்ம ஊர் பற்றி இந்த ஐ.நா.காரங்களுக்கு இன்னமும் தெரியல்லையோ என்னவோ. திடீர்னு, தண்ணீர் உரிமைய மந்த உரிமையா அறிவ்ச்சிருக்காங்க. மனித உரிமைல இன்னும் எதை, எதை சேர்க்க போறாங்களோ தெரியல்ல. நம்ம ஊர்ல அதாவது தமிழ்நாட்டுல, இப்போ வாட்டர் பாட்டில் வாங்காதவங்க யாரு இருக்காங்க? நகரத்தில உள்ளவங்க நல்ல தண்ணீ கிடைகல்லேன்னு வாங்கறாங்க அப்படின்னு வச்சுகிட்டாலும், கிராமத்துலேர்ந்து நகரம் வர்றவங்களும், ஒரு தண்ணி போத்தல கைல எடுத்துக்கிட்டு வாராகளே? காசு குடுத்து தண்ணி குடிக்கிறோம் பாத்தியளா அப்படின்னு காட்டுதுக்காகவா? இது ஒரு பேஷனா போயிருச்சா? இன்னிக்கி தண்ணீர் உரிமை பற்றி உலகமெங்கும் ஊடகங்களில் கொண்டுவரும் நாள் என்று சொன்னாங்க. அதனால நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஜூலை-28 ஆம் நாள் புதன்கிழமையன்று, ஐ.நா. தண்ணீர் உரிமையை ஒரு மனித உரிமை என்று பிரகடனப்படுத்தியது. ஏற்கனவே மனித உரிமைகளுக்கான ஒரு பிரபஞ்சம் தழுவிய பிரகடனத்தை, இதே ஐ.நா. பொது சபை 1948 ஆம் ஆண்டில், 58 உறுப்பு நாடுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியது. அதே ஐ.நா.பொதுசபை, இப்போது அறுபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, தண்ணீர் உரிமை, மனித உரிமையே என்ற தீர்மானத்தை 192 நாடுகள் இருந்த சபையின் ஒப்புதலோடு நிறைவேற்றியிருக்கிறது. அது தண்ணீரையும், கழிவு அகற்றளையும் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானம் சிக்கலானது என்று நிரூபிக்கும் அளவில், இதற்கு ஆதரவாக 122 நாடுகளும், வாக்களிகாதவர்களாக 41 நாடுகளும் இருந்தன. ஒருவரும் இதை எதிர்த்து வாகளிக்கவில்லை. அதேநேரம் இந்த தீர்மானம் ஒரு ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் முரண்பாடு என்பதாக பார்க்கப்பட்டது. அதாவது ஒரு வடக்கு---தெற்கு முரண்பாடாக கருதப்பட்டது. அமெரிக்கா எதிர்பார்த்தபடியே ஆதரவு வாக்கை அளிக்கவில்லை. மாறாக வாக்களிக்காமல் இருந்துவிட்டது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆச்திரயா, கனடா, கிரீஸ், ஸ்வீடன், ஜப்பான், இஸ்ரேல், தென்கொரியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, டென்மார்க், அயர்லாந்து, ஆகியவை பணக்கார, தொழில்வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் சேர்ந்து வாகளிகாமல் இருந்துவிட்டன. ஆனால் அவர்களுடன் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில், போட்ஸ்வானா, எதியோபியா, கென்யா, லெசோதோ, சாம்பியா, கயானா, ட்ரினிடா, தொபகா சேர்ந்துகொண்டன. இந்த தீர்மானத்தை கொண்டுவந்த பொலிவியா, மனித உரிமைகள் முழுமையாக உருவான ஒன்றாக இருப்பதில்லைஎனவும், அவை யதார்த்தத்தையும்,எதிர்பார்ப்பையும் வைத்தே வளர்க்கப்படுகின்றன என்றும் கூறினார். அனைத்துநாட்டு பொருளாதார, சமூக,பண்பாட்டு மாநாட்டில் முடிவு செய்தது போல, கல்விக்கான உரிமையும், வேலைக்கான உரிமையும் எப்படி மனித உரிமையோ அதுபோல, தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் உள்ள உரிமையும் அடிப்படை மனித உரிமைதான் , என்று அவர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவின் பிரதிநிதியோ, இந்த தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் ஆன தீர்மானத்தில் உலக நாடுகள் மத்தியில் ஒரு கலந்துரையாடலின் மூலம் ஒத்த கருத்தை எட்டி அதன்பிறகு, இப்போது ஐ.நா.வின் மனித உரிமை கழகத்தில் ஜெனிவாவில் நிலுவையில் உள்ள தீர்மானத்தை முழுமையாக ஆக்குவோம் என்று கூறி இப்போதைக்கு தப்பித்துக்கொண்டார். எப்படியோ தண்ணீரை வணிக பொருளாக, குறிப்பாக மக்களுக்கு தேவைப்படும் குடி தண்ணீரை வணிகப்போருளாக ஆகும் ஏகாதிபத்திய நோக்கத்தை ஆதரித்து நிலை எடுப்பவர்களும் அங்கு அடையாளம் காணப்பாட்டனர். அனைத்து நாட்டு சட்டத்தில் தண்ணீரையும், கழிவு அகற்றலையும் ஒரு மனித உரிமையாக பார்ப்பதற்கான அம்சமே இல்லை என்பது அமெரிக்க பிரதிநிதியின் வாதமாக இருந்தது. ஆனாலும் சுத்தமான குடிநீரும், கழிவு அகற்றலும் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையில் தண்ணீருக்கான மற்றும் கழிவு அகற்றலுக்கான உரிமை வருகிறது என்றும், ஆகவே அதை மனித உரிமை என்று கூறுவது இந்த பொருளில்தான் என்றும் அதனால் அதை உடனே ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துநாட்டு சட்டம் எழுதப்பட வேண்டும் என்றும் வாதாடப்பட்டது. தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதும் பலமாக பேசப்பட்டது. குடிதண்ணீருக்கு விலை கூவி விற்க கூடாது என்று பலரும் ஐ.நா. சபையில் பேசினார்கள். பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினசரி குழாய் கசிவினால் மட்டுமே வீணாகி போகிறது என்றும் சிலர் கூறினார்கள். சிங்கபூரும், பிலிப்பைன்சின் மணிலாவும், கம்போடியாவின் நாம்பென்னும், ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தண்ணீரையும், கழிவு அகற்றலையும், மனித உரிமை என்று அறிவிப்பதற்கு முன்பே இனாமாக கொடுத்துவருகிறார்கள். நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இதையெல்லாம் இலவசமாக கொடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் இவை உணமையிலேயே உலகம் அறிந்த மனித உரிமைகள்.

தண்ணீருக்கான நீதி என்ற ஒரு முழக்கம் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகமயமாக்கலும், தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும் இன்று உலக அளவில் தண்ணீரை தனியார் வணிகத்திற்கு தாரை வார்த்துவிட்டது உலகம் முழுவதும் 130 கோடி மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. அதேபோல 250 கோடி மக்களுக்கு கழிவு அகற்றலுக்கான வசதிகள் கிடைக்கவில்லை. உலக வங்கி கணக்குப்படி, 2025 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா சுமார் 120 கோடி மக்கள்தொகையை கொண்ட நாடு. அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட நாடு. இங்கே உணவு பாதுகாப்போ, தண்ணீர் தேவையோ, மக்களுக்கு இயற்கை மூலாதாரங்கள் மீது உரிமை இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் கிடைக்கப்பெறும். ஆனால் இங்கே நிலம், தண்ணீர், காடுகள், நதிகள், கடல் ஆகியவற்றின் மீது பொது மக்களுக்கு உரிமை இல்லாத சூழல் ஏற்படுத்தப்படட்டு வருகிறது.

அதாவது நிலங்களை விவசாயத்தில் ஈடுபடும் மக்களான தலித், மற்றும் ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கைகளில் இருந்து தனியார் ஆதிக்க சாதி பண்னையார்களோ, தனியார் ஆலைகளின் முதலாளிகளோ, அரசாங்க உதவி மூலம் பன்னாட்டு மூலதன கம்பனிகளோ, கைப்பற்றி அதில் தங்களது லாப நோக்க வேலைகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு அரசாங்கங்களும் சட்டத்தை காரணம் காட்டி ஒத்துழைக்கிறார்கள். இநத்தகைய முயற்சிகளில் கிராம மக்களின் பொது இடங்கள் பறிபோகின்றன. அவைதான் குடிநீருக்கான தேவைகளை நிவர்த்தி செய்து வந்தன என்பதை அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை. அது தவிர குளங்கள், ஏரிகள், ஆகியவை இன்றைய அரசாங்கத்தால் முறையாக பராமரிக்க படுவதில்லை. ஒவ்வுறு கோவில் அருகிலும், குளங்களை அன்றைய மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்தனர். ஆனால் இன்றைய அரசுகள் அது பற்றி கவலை படுவதில்லை.

அதுமட்டுமின்றி இந்த அரசியல்வாதிகள் தங்கள் கைகளுக்கு மக்கள் கொடுத்த அதிகாரம் வந்த பிறகு, மக்களுக்கு குடிதண்ணீர் கொடுக்க வேண்டுமே எனப்தி பற்றி கூட கவலைபடுவதில்லை. அதன் விளைவாக மக்கள் அனுபவித்து வரும் காடுகளை இவர்கள் பன்னாட்டு மூலதன நிறுவனகளுக்கு தாரை வார்த்து விடுகின்றனர் அதுபோல நதிகளை கூட இவர்கள் தனியாருக்கு ஏலம் போட்டு விடுகின்றனர் என்று சொன்னால் நம்புவீர்களா? சத்தீஸ்கரில் ஒரு நதியை தனியாருக்கு ஏலம் போட்டு கொடுத்துள்ளனர். அதன் விளைவு அந்த லாப நோக்கம் கொண்ட தனியார் அங்கு படகில் செல்வோரை, அந்த நதி நீரால் நிலத்தடி நீர் கிடைத்து அதன் மூலம் விவசாயம் செய்வோரை எல்லோரையும் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்த தொடங்கி விட்டனர். அதுபோல இங்கே குளங்களையும், ஏரிகளையும் பராமரிக்காத அரசாங்கம், கடல் நீரை குடி நீராக ஆக்குகிறோம் என்ற பெயரில் மீண்டும் தனியார் முதலாளிகுக்கு தாரை வார்க்கும் வேலையை செய்கிறது.

இவை எல்லாமே சந்தையில் தண்ணீரை வணிக பொருளாக ஆக்குவதில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. அதேபோல சில சுற்று சூழலை கெடுக்கும் ஆலைகளை அதாவது நாசகார ஆலைகளை, அதாவது ஆபத்தான ஆலைகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஆலைகளை அதாவது நச்சு ஆலைகளை கொண்டு வந்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிருவவதால், அவை னியாத்தடி நீரையும், கடல் நீரையும் கெடுத்து குட்டி சுவராக ஆக்கி விடுகின்றன. அதுதான் ஸ்டெரிலைட் ஆலை விசயத்திலும், தூத்துக்குடி நகரில் நடந்துள்ளது. அதன் விளைவாக அந்த வட்டாரம் முழுக்க குடி தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடல் நீர் கடுமையாக கேட்டு விட்டது. உதாரணமாக அங்கே உள்ள தெற்கு வீரபாண்டிய பட்டினத்தில் இன்றுள்ள சூழலில், குடி நீர் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் பல லாரிகளில் குடி நீர் ஏற்றிவந்து கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த செயற்கை குடிநீர் தட்டுப்பாடுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமையும். இந்த நிலைதான் கோகோ கோலா ஆலை அமைந்துள்ள கங்கை குண்டான் நிலைமையும். அங்கும் குடி நீர் கடுமையாக பதிக்கப்பட்ட கிராமங்கலாக அங்குள்ள கிராமங்கள் மாறிவிட்டன.

இந்த இழி நிலையை போக்க குடிநீருக்கான ஒரு போரை பொது மக்கள் தான் தொடங்க வேண்டும். அதுவே ஐ.நா. சபை தீர்மானத்தை தண்ணீர் எனபது மனித உரிமையே எனபதை உண்மையாக ஆக உதவும். .

Wednesday, October 13, 2010

தூத்துக்குடி ஸ்டெர்லைட் செய்த இன்னொரு கொலை.

நேற்று செப்டம்பர் --பன்னிரெண்டாம் நாள், அதர்ச்சி செய்தி கேட்டு, தூத்துக்குடியில் ஆர்வலர்கள் அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கே ஸ்டெர்லைடில் பணியாற்றும் முத்துக்ரிஷ்ணன் என்ற தொழிலாளி, அவசர் சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும், தலை முதல் முகம், நெஞ்சு என எல்லா பகுதிகளும் அமிலம் பட்டு எரிந்து போய் விட்டது எனவும் செய்திகள் கிடைத்தன. அதற்குள் அந்த நாசகார ஆலையின் நிர்வாகம், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் அண்ணனையும், அண்ணியையும் அணுகி தொகை தந்து
விடுகிறோம், சமாளியுங்கள் அன்று சொல்ல ஒரு நாடகத்திற்கு வீட்டாரும் தயார் ஆனார்கள். அண்ணன் முத்துபாண்டி, ஆலை எதிர்ப்பாளர்களை பார்த்து, என் தம்பி விசயத்தில் நீங்கள் எப்படி தலையிடலாம்; அது உரிமை மீறல் என்றார். உரிமை பற்றியும் ஆலை நிர்வாகிகள் கற்று கொடுத்து விட்டார்கள்.

அதற்கு ஆர்வலர்கள் உங்கள் தம்பி விஷயம் உங்க வீட்டு விசயம்தான்; ஆனால் ஸ்டெரிலைட் பணியாளர் விஷயம் எங்களுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பதில் கொடுக்க, முதுக்ரிஷ்ணனின் அண்ணியார் என் கொழுந்தன் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் யாரும் உள்ளே போய் பார்த்தால் அவருக்கு பாதிப்பு வரும் என்று சொல்ல, ஆர்வலர்கள் பின்வாங்கினர். அவர் உடல் தேறிவிட்டது எனவும், தாங்கள் தங்கள் சொந்த ஊரான ஊத்துமலைக்கு கூட்டி செல்லப்போவதாகவும், அவர்கள் அறிவித்துவிட்டு ஆலை நிர்வாகம் நல்லா கவனிச்சுகிட்டாங்க என்றனர். யாரை கவனிச்சு கிட்டாங்க என்று அப்போதுஅவர்கள் சொல்லவில்லை.ஊத்துமலையில் மறவர் சமூகத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர் முத்துகிருஷ்ணன் , ஓட்டுனராக அந்த ஆலையில் பணியாற்றிவந்தவர். அவரை விபத்து நடந்தவுடன் செப்டம்பர் பதினெட்டாம் தேதியிலேயே முதலில் தனியார் ஏ.வி.எம்.மருத்துவமனையிலும், பிறகு அரசு முத்துவ மனையிலும் சேர்த்துள்ளனர்.
.

அன்பிறகு இன்று புதன் காலையில், அந்த தொழிலாளி இரந்து விட்டார் என்றும், அவருக்கு அவசர் அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாகவும் செய்தி கேட்டு, ஆர்வலர்கள் மருத்துவ மனைக்கு ஓடினர். அங்கே உண்மை தெரிந்தது. சல்பூரிக் அமில துறையில், அமிலம் மேலே கொட்டி அந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் அடிபட்டு, சென்ற மாதம் பதினெட்டாம் தேதியே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மரணமடைந்த அவரை வெள்யே எடுக்க, அண்ணன் முத்துபாண்டி குடும்பத்திற்கு ஐந்து லட்சம் பேசப்பட்டு, ஒரு சிறு தொகை முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது விவகாரம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. அதுவும் ஆர்வலர்கள் மருத்துவமனை முன்பு போராட தொடங்கி விட்டனர். வேறு வழி இல்லாமல் காவல்துறை வழக்கு பதிவி செய்ய முன்வந்தனர். தீவிர கவனக்குறைவு என்ற பிரிவில் 304 -அ என்ற பிரிவில் வழக்கை அங்குள்ள சல்பூரிக் அமில துறையை சேர்ந்த பொறுப்பாளர் சங்கர நாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்வலர்களும் கொலை வழக்கு போடச்சொல்லி கத்தியும் பலிக்கவில்லை.

இரண்டு நாட்கள் முன்பு , செபடம்பர் பதினோராம் நாள் ஒரு மாபெரும் ஊர்வலத்தை ஸ்டெரிலைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி நகரில் நடத்தினர். அதில் 10000 பேர் பங்குகொண்டனர். அதில் மீனவர்கள், வணிகர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். தோழர் இரா. நல்லகண்ணு அந்த பேரணியை தொடங்கி வைக்க, பேராசிரியர். பாத்திமாபாபு தலைமை தாங்கி சிறப்பாக செய்தனர்.பேரணிக்கு சில நாட்கள் முன்பு அரசு எல்லா கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் எந்த ஒரு வெளி போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும், மாணவ, மாணவிகள் செல்லக்கூடாது என்று இருந்தது. அது என்ன புதிய உத்தரவு? மாநிலத்திற்கு முழுவதற்கும் இல்லாமல் ஒரு மாவட்டத்திற்கு மட்டுமா? அதாவது ஸ்டெரிலைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் வரிந்துகட்டுகிறது?

மறுநாள் அரசு நடத்திய புகை பிடித்தல் எதிர்ப்பு பேரணியில் பள்ளி சிறுவர்களை அழைத்துவந்தனர். அவர்கள் அங்கே வந்து ஸ்டெரிலைட்டை இழுத்து மூடு என்று முழக்கமிட்டது அந்த நகரின் மனச்சாட்ச்சியை காட்டியது எல்லா ஊடகங்களுக்கும், அந்த நாசகார ஆலை விளம்பரம் கொடுத்து கை நிறைய பணம் கொடுத்துவிட்டான். அதனால் எந்த ஊடகமும் அந்த பேரணியை பெரிதாக போடவில்லை. இங்கே பணம் மாட்டும்தான் ஊடகங்களுடன் பேச முடிகிறது.இந்த ஆலையில் தாமிரம் உருக்கப்படுகிறது. அது அந்த நகரம் முழுவதையும் கடுமையாக சுற்று சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த ஸ்டெரிலைட் ஆலையை உயர்நீதிமன்றம் சென்ற மாதம் மூடச்சொன்னது.
. ஆனால் உச்சநீதிமன்றம் முதலாளிக்கு கருணை காட்டி உயர்நீதிமன்ற ஆணைக்கு, தடை கொடுத்துவிட்டது. இப்படி பணம் மூலமே அணில் அகர்வால் எல்லா இடத்திலும் வேதாந்தா என விலை பேசிவருகிறார். இந்த நிகழ்வு இன்னொரு போபால் இங்கே வரலாம் என்பதை காட்டுகிறது. இதே போல இரண்டு மாதம் முன்னால், சென்னை அருகே ஒருபோபால்
முயற்சி நடந்தது.

சென்னை அருகே திருபெரும்புதூரிலிருந்து வந்த செய்தி, அதிர்ச்சியை தந்தது. அங்கே ஒரு ஆலையில் நச்சு கசிவு வெளியாகி, நூற்று இருபது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாந்தி எடுத்தனர். மருத்துவமனையில் காதிலிருந்து ரத்தம் கசிந்ததாக கூறுகின்றனர். விபத்து ஏற்ப்பட்ட ஆலை, சீனா நாட்டுக்காரர் ஆலை. சீனாவைச்சேர்ந்த அந்த பெரிய நிறுவனம், சீன நாட்டில் பெரிய அளவில் பெயர் பெற்ற ஆலை. அது ஒரு பன்னாட்டு மூலதன ஆலை என்று பிரபலம் அடைந்த நிறுவனம். சீன மக்கள் குடியரசுக்கு எதிரான சீன நாடாக உலகம் புரிந்துள்ள தைவான் நாட்டிற்கு சொந்தமான பன்னாட்டு மூலதன ஆலை அது. தைவானை சார்ந்த அந்த ஆலையில், ஹய்பேட் என்று கூறப்படும் காதில் வைத்து பாட்டு கேட்கும் இயந்திரம், அப்போலோ போன் என்ற பெயரில் உற்பத்தியாகிறதாம்.


அங்கு எப்படி நச்சு வாயு கசிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த செய்தியை ஊடகங்களுக்கு வரவிடாமல் செய்வதில், ஆலை நிர்வாகம் அதிக கவனம் எடுத்ததாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட நூற்று இருபது தொழிலாளர் களும், அருகே உள்ள ஜெயா மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்ட தாகவும், அங்கே இருபத்தைந்து தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்ததாகவும், அதையொட்டி பூந்தமல்லி சுந்தர் மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவர்களை எடுத்து சென்றுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் ஆலை நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து செய்திகளின் தாக்கம் வெளிவந்துவிடாமல் தவிர்க்க, ஊடகங்களுக்கு முறையான செய்திகளை செல்லவிடாமல் இருந்தனர் என்ற கருத்தும் நிலவியது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் பற்றி கிடைக்கும் செய்திகள் ஆவலை அதிகப்படுத்துகின்றன. அதாவது இந்த குறிப்பிட்ட சீன நிறுவனம், ஏற்கனவே சீன நாட்டில் மிகவும் பெயர் பெற்ற கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.


உலகிலேயே அதிகமான அளவில் மின்னணு மற்றும் கணினி உறுப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை பெற்றதுதான் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம். மற்ற நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உற்பத்தியை முக்கியமாக இது செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு, மக்மினி, ஐபெட், ஐபாட், ஐபோன் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொடுக்கிறது. அமெரிக்க கணினி நிறுவனங்களான டெல்,போன்றவற்றுக்கு பல்வேறு பொருள்களை தயார் செய்து கொடுக்கும் நிறுவனம் இது சில பாகங்களை .மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும், மோட்டாரோலா, நோக்கியா ஆகியற்றுக்கு செல்லுலார் போன்களையும் தயார் செய்து கொடுக்கும் நிறுவனம். 1974 ல் பிளாஸ்டிக் பொருள்களை தயார் செய்யும் நிறுவனமாக இது தொடங்கியது.

தைவான் பங்கு சந்தையில் 1991 வரை இந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமாக இருந்தது. 1988 ல் தனது முதல் உற்பத்தி ஆலையை சீனாவில், ஷென்சென் பிராந்தியத்தில் தொடங்கியது. அதுதான் இப்போது இந்த நிறுவத்தின் மிகப்பெரிய ஆலையாக 420000 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அந்த தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் இயங்குகிறார்கள். ஆனால் அனைவரும் தொழிற்சாலையின் வளாகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். இப்போது பாஃக்ஸ்கான் ஆலை, தனது ஷென்சென் ஆலை உட்பட, மக்கள் சீன குடியரசில் மொத்தம் 800000 தொழிலாளர்களை கொண்டதான ஆலையாக இயங்கி வருகிறது. 1994 முதல், இந்த பாஃக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவிலும், ஜப்பானிலும், வளர்ச்சி மையங்களை விலைக்கு வாங்கி தொழில் புரிந்து வருகிறது.


1997 லும், 1998 லும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கூடுதலான உற்பத்தி தொழிற்சாலைகளை இவர்கள் நிறுவினார்கள். 2007 ஆம் ஆண்டில், செக் குடியரசிலும், ஹங்கேரியிலும், மெக்சிகோவிலும், பிரேசிலிலும்,இந்தியாவிலும், வியட்நாமிலும், இந்த நிறுவனத்தின் ஆலைகளும், துணை ஆலைகளும் காணப்பட்டன. சமீபத்தில் இந்த நிறுவத்தின் மீது, அதன் தொழிலாளர் விரோதப் போக்குகளை பற்றிய பொதுமக்கள் விசாரணை என்பது வெளிவந்தது. சீனக்குடியரசில் இதுதான் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்றாலும், இதன் தொழிலாளர் விரோதப்போக்கு கம்யூனிஸ்ட் சீனா என்ற அந்த நாட்டிலேயே அதிகமாக இருந்தது என்பதே இந்த ஆலை பற்றிய ஒரு சித்திரத்தை நமக்கு தந்துவிடும்.


அதுமட்டுமின்றி இந்த ஆண்டிலேயே, ஐந்து மாதங்களுக்குள் இந்த ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்கள், ஆலையின் சுவர்கள் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், அதே சமயம் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். இது உலகம் முழுவதும் பாஃக்ஸ்கான் ஆலை பற்றிய ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உடனே இந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை நூறு விழுக்காடு கூட்டி அறிவித்தது. இந்த அளவுக்கு இந்த ஆலையின் தொழிலாளர் நிலைமை இருக்கிறது என்பது இதிலிருந்தே வெளிப் படுகிறது.


இந்த பாஃக்ஸ்கான் ஆலை தனது வளாகத்திற்குள், தொழிலாளர்களை கொத்தடிமை போல வைத்திருந்ததாலேயே, அவர்கள் சுவர் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது புரியப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஆலையில்தான் இங்கே திருபெரும்புதூரில், இதே ஆலையின் கிளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லையில்லா பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கையும், அதை அம்பலப்படுத்த முயற்சித்த ஊடகங்களுக்கு எதிரான போக்கையும் வெளிப்படுத்தி இருந்தது இவர்களை அம்பலப்படுத்திய சீனா வணிக செய்திகள் என்ற இதழாளர்களுக்கு எதிராக பாஃக்ஸ்கான் நிறுவனம் வழக்கு தொடுத்து அவர்களுக்கு நாற்பது லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதிக்கச் செய்தார்கள். இதன் மூலம் ஊடகங்கள் இந்த நிறுவனம் கண்டு அஞ்சத் தொடங்கின.


சீன குடியரசில் இருக்கும் இந்த பாஃக்ஸ்கான் நிறுவனத்தில், 2007ம் ஆண்டு ஜூன் 18ம் நாள் ஹூ என்ற 19 வயது பெண் தொழிலாளி, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே கழிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் 21வயது ஆண் தொழிலாளி லியூபிங், வேலையிலிருந்து நீக்கப்பட்ட 2மணி நேரத்தில் திடீரென இறந்து போனார். 2008ம் ஆண்டு மார்ச் 16ம் நாள் 28 வயது லீ என்ற ஆண் தொழிலாளி வேலை பளுவின் காரணமாக மரணமடைந்தார். 2009ம் ஆண்டு ஜூலை 16ல் சன் டன்யங் என்ற 25 வயது ஆண் தொழிலாளி தான் தங்கியிருந்த 12 வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 2009 ஆகஸ்ட் 20ல் 23வயது சென் சின் சாங் என்ற ஆண் தொழிலாளி ஆலையின் குளத்தில் இறந்து கிடந்தார். அதன் பிறகே 2010ம் ஆண்டு 5 மாதத்திற்குள் 13 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ள ஆலை சுவற்றிலிருந்து கீழே குதித்தனர் என்ற செய்தி வெளி வந்தது.

இந்த அளவுக்கு கொடுமையான தொழிலாளர் விரோத போக்கை மேற்கொண்ட இந்த பாஃக்ஸ்கான் ஆலை, ஆஸ்திரேலிய இணையதளத்தில் இந்த உண்மைகளை வெளியிட்டதற்காக, வழக்கு போட்டது. 2010 பிப்ரவரி 17ம் நாள் சீனாவில் உள்ள இதன் ஆலையில் ஒரு வெளிநாட்டு நிருபர் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஆலைதான் திருபெரும் புதூரில் நச்சு வாயு கசிவை ஏற்படுத்தி விட்டு, இப்போது அதை மறைக்கப் பார்க்கிறது.

அந்த பாக்ஸ்கான் ஆலை அதிபர்களை நேரில்போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் நமது மாநிலத்தின் தளபதியாம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்மூலம் அதிக மூலதனத்தை இறக்க பேசிவிட்டு வந்திருக்கிறார். இவர்களையும் நாம் அடையாளம் காணவேண்டாமா?

சீன நாட்டினர் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் கொடியதொரு பாத்திரத்தை வகுத்தப் பின்பு, இப்போது தமிழ்நாட்டு தொழிலாளர் களை அழிப்பதற்காக வந்திருக்கிறார்களா என்று தமிழின உணர்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொறுத்தவரை போபால் நகரில் 26 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நிறுவனம், நச்சு வாயுவை அவிழ்த்துவிட்டு இந்திய மக்களை கொன்றது போதும். நமக்கு மீண்டும் ஒரு போபால் வேண்டாம். மேற்கண்ட விபத்தை முன்வைத்து, இங்கொரு போபால் இனியும் வேண்டாம் என்ற குரலை எழுப்ப வேண்டாமா